ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143537 topics in this forum
-
யாழ் குடாவில் அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் மீனவர்களை ஏமாற்றி பகற்கொள்ளை அடிக்க முயற்சி:- 15 ஜூலை 2011 2 கோடி ரூபாவுக்கு மேல் ஏப்பம் விட திட்டம்:-குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- யாழ் குடாவில் அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் மீனவர்களை ஏமாற்றி பகற்கொள்ளை அடிக்க முயற்சி:- யாழ் மாவட்டத்தில் புதிது புதிதாக சங்கங்கள் முளைக்கத் தொடங்கிவிட்டன. தெற்கின் குழாம் யாழ்ப்பாணத்தில் படையெடுத்துள்ள நிலையில் மீண்டும் உள்ளுராச்சித் தேர்தலில் அமைச்சர்கள் சுருட்டிக்கொள்ள முற்படுகிறார்களா என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது. கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலப் பகுதிகளில் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த சுயேட்சைக் குழு ஒன்று பொதுமக்கள் அனைவரிடமும் தமது கட்சிக்கான அங்கத்துவத்திற்காக 20 பணம் ச…
-
- 0 replies
- 247 views
-
-
டொனால் பெரேரா மற்றும் சரத்பொன்சேகா யாழில் படை அதிகாரிகளுடன் ஆலோசனை சிறீலங்கா கூட்டுப்படைத் தளபதி எயார் சீவ் மார்ஷல் டொனால் பெரேரா மற்றும் சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்ரினட் ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர் யாழ் குடாநாட்டுக்கான இரகசிய பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். நேற்று சனிக்கிழமை விமானம் மூலம் பலாலி கூட்டுப்படைத்தளம் சென்றடைந்த இவர்களை யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ வரவேற்றார். இதனைத் தொடர்ந்து யாழ் குடாநாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து படை உயர் அதிகாரிகளுடன் இவர்கள் ஆலோசனையை நடத்தியுள்ளனர். அத்துடன் யாழ் குடாநாட்டில் படையினரால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களையும் பார்வையிட்டுள்ளனர். இதேநேரம் நேற்று நாகர்கோவில் மற்றும் தென்…
-
- 1 reply
- 978 views
-
-
கிழக்கில் தமிழர் பகுதிகளில், அபிவிருத்திப் பணிகள், பின்னடைவுகளைக் கண்டுள்ளன. அங்குள்ள ஏனைய இனங்கள், தம்மிடம் உள்ள அமைச்சுப் பதவிகளைப் பயன்படுத்திக் கொண்டு, தாங்கள் சார்ந்த சமூகங்களுக்குப் பல அபிவிருத்தித் திட்டங்களைச் செய்துகொண்டு வருகின்றனர். இந்நிலையில், “ஒட்டுமொத்த கிழக்குத் தமிழ் மக்களது நலன் கருதியே, அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்டதே அன்றி, எனது குடும்பத்துக்காக அல்ல” என, தனது கட்சித் தாவல் குறித்துப் பல விளக்கங்களை, பிரதியமைச்சர் பதவியைப் பெற்றுக்கொள்ள வியாழேந்திரன் அளித்துள்ளார். வியாழேந்திரன் குறிப்பிட்டது போல, கிழக்கில், தமிழ் மக்களுக்குப் பல பிரச்சினைகள் உள்ளன. அவரது வாதம், முற்றிலும் நியாயமானவை; நிராகரிக்க முடியாதவை. அபிவிருத்திப் பணிகள் முக்…
-
- 1 reply
- 1k views
-
-
காணாமல் போன 12 தமிழக கடற்றொழிலாளர்கள் கரை திரும்பினர் ஜவெள்ளிக்கிழமைஇ 18 மே 2007இ 21:41 ஈழம்ஸ ஜபுதினம் நிருபர்ஸ தமிழகத்தின் கன்னியாகுமரியிலிருந்து காணாமல் போன 12 தமிழக கடற்றொழிலாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை கரை திரும்பிவிட்டதாக தமிழக ஊடகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 மீனவர்கள் முதலில் கரை சேர்ந்ததாகவும் 6 மீனவர்கள் கரை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் தினமலர் நாளேட்டின் கடைசி செய்திப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே 12 மீனவர்களும் கரை திரும்பிவிட்டதாக தமிழக ஊடகத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கன்னியாகுமரி மற்றும் கேரளத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போயிருந்தனர். மீனவர்கள் காண…
-
- 11 replies
- 3.3k views
-
-
சீனாவை குற்றவாளி போல நடத்துகிறது புதிய அரசாங்கம்- மகிந்த விசனம் MAR 12, 2015 | 0:22by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் புதிய அரசாங்கம் சீனா விவகாரத்தில் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்றும், சீனாவை குற்றவாளி போல நடத்துவதாகவும், குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச. ஹொங்கொங்கில் இருந்து வெளியாகும் சவுத் சைனா போஸ்ட் நாளிதழுக்கு அளித்துள்ள தனிப்பட்ட செவ்வி ஒன்றிலேயே மகிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார். “சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தேவையின்றி உள்நாட்டு அரசியலுக்குள் சீனாவை இழுத்துள்ளது. இது நியாயமற்றது. சீனா வழங்கிய உதவிகளுக்காக இவர்கள் நன்றி கூறக் கடமைப்பட்டவர்கள். ஆனால், இவர்கள் குற்றவாளியைப் போல சீனாவை நடத்துகிறார்கள்”என்றும்…
-
- 1 reply
- 454 views
-
-
ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை? Editorial / 2018 நவம்பர் 19 திங்கட்கிழமை, மு.ப. 05:15 Comments - 0 நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை ஏற்றுக்கொள்ளாமல், அரசமைப்பு மற்றும் நிலையியற்கட்டளைகளை சவாலுக்குட்படுத்தும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவருவதற்கு, ஐக்கிய தேசிய முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் மூலமாகத் தோற்கடிக்கப்பட்ட நபரை, பிரதமராக ஏற்றுக்கொள்வது அரசமைப்புக்கு முரணானது என்பதால், ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணையை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக அம்முன்னணி அறிவித்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷ, ஒரு பொறுப்புமிக்க அரசியல்வாதி என்றால், நம்பிக்கையி…
-
- 0 replies
- 486 views
-
-
வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கோப் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவர்களுக்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் ஜே.வி.பி நேற்றுமாலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றினை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களில் அங்கம் வகிக்கும் 37ஜே.வி.பி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
-
- 0 replies
- 986 views
-
-
இலங்கைத்தமிழர் சமஉரிமை அரசியல் தீர்வு சிறப்பு மாநாடு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் என். வரதராஜன், டி.கே. ரங்கராஜன் எம்.பி., உ.வாசுகி உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு; இலங்கையில் அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையிலான ஆயுத மோதல்கள் முடிவுற்று, இரண்டு ஆண்டுகளாகியும் இலங்கைத்தமிழ் மக்களுக்கு சம உரிமை, அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகள் இலங்கை அரசால் மேற்கொள்ளப்படவில்லை. இந்திய அரசும், …
-
- 15 replies
- 889 views
-
-
ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு சிக்கல்! நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அவராலேயே மீளப்பெற்றுக் கொள்ள முடியாது என தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்தநிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இந்த வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெற்றுக் கொள்ளவோ அல்லது இரத்து செய்யவோ ஜனாதிபதிக்கே சட்ட ரீதியான அதிகாரம் கிடை…
-
- 0 replies
- 307 views
-
-
கீர்த்தி தென்னகோனுக்கு எதிராக களனி பல்கலைக்கழகம் ஒழுக்காற்று விசாரணை நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான இயக்கத்தின் (கபே) நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோனுக்கு எதிராக களனி பல்கலைக்ககழகம் ஒழுக்காற்று விசாரணையை ஆரம்பித்துள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகத்தில் தென்னகோன் வகிக்கும் பதவியிலிருந்து நீக்குவதற்கும் அவரின் சிவில் சமூக செயற்பாடுகளை அச்சுறுத்தவும் இவ்விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கபே அமைப்பின் சட்ட விவகார பணிப்பாளர் ஹரிந்திர பானகல தெரிவித்துள்ளார். அண்மையில் வடக்கில் நடைபெற்ற தேர்தல்களில் ஊழல் நடந்ததாக தென்னகோன் தெரிவித்த பின்னர் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் பானகல கூறியுள்ளார். உள்ளூராட்சி தேர்தல் முடிவடைந்து …
-
- 3 replies
- 652 views
-
-
மைத்திரி இன்று சீனா பயணம்! சீனாவுக்கான நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் போது, சீன ஜனாதிபதி ஜி ஜிங் பிங் உட்பட பல சீன அரச பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்களை மேற்கொள்ளார். அத்தோடு, வர்த்தக ஒப்பந்தங்கள் சிலவும் கைச்சாத்திடப்படவுள்ளன. இதனிடையே, சீன அரசினால் இலங்கையில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் இருநாட்டின் தலைவர்களும் கூடிய கவனம் செலுத்தி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகின்றது. http://4tamilmedia.com/newses/srilanka/29834-2015-03-25-05-05-39
-
- 8 replies
- 910 views
-
-
அரசியல் குழப்பநிலைகளுக்கு மத்தியில் கூட்டமைப்பு – ஜனாதிபதி இடையே முக்கிய சந்திப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ள நிலையில், கூட்டமைப்புடனான சந்திப்பிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதியை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கூட்டமைப்புடனான சந்திப்பை தொடர்ந்து மாலை 7 மணிக்கு ஜனாதிபதி ஐக்கிய தேசிய முன்னணியினரையும் சந்திக்கவுள்ளார். சபாநயாகர் கரு ஜயசூரிய நேற்று ஜனாதிபதியை சந்தித்திருந்த நிலையில், இதன்போது ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கலந்துரையாடி உரிய தீர்வு க…
-
- 1 reply
- 421 views
-
-
சரணடைந்து காணாமற் போனவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு மனு மீதான விசாரணை மே மாதம் 12 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமற் போனவர்கள் தொடர்பில், வவுனியாமேல் நீதிமன்றத்தில் ஆட்;கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு, சம்பவம் இடம்பெற்ற பகுதிக்குரிய நீதிமன்றத்துக்கு ஆரம்ப கட்டவிசாரணைகளிற்கு கடந்த 2013 ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. கடந்த சில தவணைகளாக வழக்கில், முறைப்பாட்டாளர்களும், சாட்சியாளர்களும் தமது தரப்பு விளக்கங்களை மன்றில் முன்வைத்து வருகின்றனர். நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது, கடந்த தவணையில் சாட்சியமளித்தவரிடம் தொடர்ந்தும், அரச …
-
- 0 replies
- 500 views
-
-
அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை ஜனாதிபதி நிராகரித்தார் – ஐ.தே.க குற்றச்சாட்டு ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களால் செயல்படுத்தப்படவிருந்த அபிவிருத்தித் திட்டங்கள் அடங்கிய அமைச்சரவை ஆவணங்களை கடந்த 3 ஆண்டுகளில் ஜனாதிபதி மைத்திரி நிராகரித்தார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில்விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சிவில் ஆர்வலர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐ.தே.க.வால் வழங்கப்பட்ட பல அமைச்சரவை பாத்திரங்களில் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பிரதமரால் முன்வைக்கப்பட்ட வேலை வாய்ப்புகளை கூட ஓரிரு வருடங்களுக்கு காலதாமதம் ஏற்படுத்தியதாகவும், …
-
- 0 replies
- 500 views
-
-
06.06.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு http://www.yarl.com/videoclips/view_video....c05f3d8ab658c55
-
- 8 replies
- 1.7k views
-
-
ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலர் பான் கி மூனின் கரங்கள் நேர்மையற்றனவாக இருப்பதனால் சீனா, பர்மா, இலங்கை போன்ற நாடுகள் நன்மை அடைந்துவருகின்றன. இவ்வாறு மனித உரிமை கண்காணிப்பு செயலகம் குற்றம் சாட்டி இருந்தது. இது உண்மைதான் என காடியன் தனது ஆசிரியர் பத்தியில் குறிப்பிட்டுள்ளது. ”United Nations: weak leaders wanted” என்ற தலைப்பில் எழுதப்பட்ட பத்தியில் ஐக்கிய நாடுகள் சபையானது தனது பணிகளில் உறுதியான தீர்மானங்களையோ அன்றி அதன் சட்டப்படியான நடவடிகைகளையோ செய்வதில் இருந்து நழுவி விடுகின்றது. பான் கி மூன் இப்போ இரண்டாவது தடவையாகவும் தனது பதவியினைப்பெற்றுக்கொண்டுள்ளார். அவர் எது தேவையோ அதனைப்பெற்றுவிட்டார். ஐக்கிய நாடுகள் 10 தடவை சமாதானத்திற்கான நோபிள் பரிசைப்பெற்றுள்ளது ஆன…
-
- 2 replies
- 902 views
-
-
Published By: DIGITAL DESK 3 16 NOV, 2023 | 09:44 AM (எம்.மனோசித்ரா) கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஆனந்த் முகுந்தன் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த இந்திய பாதுகாப்பு ஆலோசகரை பாதுகாப்புச் செயலாளர் வரவேற்றதுடன், பின்னர் முக்கிய விடயங்கள் குறித்து சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். இதன்போது, கெப்டன் முகுந்தனின் புதிய நியமனம் குறித்து பாதுகாப்புச் செயலாளர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.…
-
- 0 replies
- 275 views
- 1 follower
-
-
செவ்வாய் 19-06-2007 02:35 மணி தமிழீழம் [சிறீதரன்] தனது அரசியல் எண்ணங்களுக்கு எதிரானவர்களை தண்டிப்பதில் மகிந்த சிறீலங்காவின் உயர்நீதி மன்றம் சிறீலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தனது அரசியல் எதிராளிகளை துன்புறுத்துவதில் ஈடுபடுவதாக குற்றம்சுமத்தியுள்ளது. ரிறான் அலெஸ் அவர்களது கைது நடவடிக்கைக்கு பின்னாலும் அரசியல் காரணங்கள் காணப்படுவதாக பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை ரிறான் அலெஸ் ஐ திங்கட்கிழமை பிணையில் செல்வதற்கும் அடிப்படை மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் முறைப்பாடு மேற்கொள்ளவும் சிறீலங்கா உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளமை தெரிந்ததே. ஸ்ரான்டட் பத்திரிகை குழுவின் உரிமையாளர் ராஜபக்ஸ முன்னாள் அமைச்சர்களின் நெருங்கிய நண்பன் என…
-
- 1 reply
- 1k views
-
-
30 வருட யுத்தத்தை வென்றதைவிட சர்வதேச சமூகத்துடனான யுத்தம் சவாலானது முப்பது வருடகால யுத்தத்தை வென்றதைவிட சர்வதேச சமூகத்துடனான யுத்தம் இலங்கைக்கு பெரும் சவாலானது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம நேற்று கூறினார். மில்லியன் கணக்கான மக்கள், பில்லியன் கணக்கான வளங்கள், பெரிய அரசுகள், பாரிய சர்வதேச ஊடக நிறுவனங்கள் ஆகியனவற்றை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் இது மிக கடினமானது என அவர் கூறினார். இலங்கை போன்ற சிறிய நாட்டுக்கு இது பெரும் சவால் எனக்கூறிய வெளிவிவகார செயலர் அமுனுகம, யுத்தக் குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் புகழை நிலைநிறுத்துவதற்காக இணையம், அச்சு வெளியீடுகள், கலைகள் மற்றும் ஏனைய சாதனங்களைப் பயன்படுத்தி சர்வதேச சமூகத…
-
- 0 replies
- 522 views
-
-
யாழில் கையூட்டல் பெற்ற கிராம சேவகர் இடைநீக்கம்! யாழ்.மாவட்டத்தில் கையூட்டு பெற்ற கிராம சேவகரை உடன் அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்துள்ளார். யாழ். சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் பணியாற்றும் கிராம சேவகர் ஒருவரே அவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறித்த கிராம சேவையாளர் பிரிவின் கீழ் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்த குடும்ப பெண் ஒருவருக்கு வீட்டு திட்ட பணிக்காக ஒரு இலட்ச ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது. அதில் தனக்கு 25 ஆயிரம் ரூபாய் பணத்தினை வழங்க வேண்டும் என கிராம சேவையாளர் குறித்த பெண்ணிடம் வற்புறுத்தி உள்ளார். அதனால் குறித்த பெண் 15 ஆயிரம் ரூபாயினை வழங்கியுள்ளார். இருந்த…
-
- 0 replies
- 586 views
-
-
ஐ.நாவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவர் ரொகான் பெரேரா – பான் கீ மூன் சந்திப்பு APR 24, 2015by கி.தவசீலன்in செய்திகள் நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள அம்ரித் ரொகான் பெரேரா, ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். நேற்று முன்தினம் ஐ.நா தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரொகான் பெரேரா, தனது நியமனப் பத்திரங்களை ஐ.நா பொதுச்செயலரிடம் இதன் போது கையளித்தார். இதையடுத்து, சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள் குறித்து குறுகிய நேரம் கலந்துரையாடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் தூ…
-
- 0 replies
- 610 views
-
-
வெள்ளத்தால் பாதிக்கக்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், தெற்கில் சேகரிக்கப்பட்ட உலருணவுப் பொருள்களுடன் வடக்கு நோக்கிய தொடருந்து கிளிநொச்சி தொடரந்து நிலையத்தை இன்று வந்தடைந்தது. கிளிநொச்சி தொடருந்து நிலையத்தை வந்தடைந்த உலருணவுப் பொருள்கள் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளிக்கப்பட்டது. https://newuthayan.com/story/16/நிவாரணப்-பொருள்களுடன்-கிளிநொச்சியை-வந்தடைந்து-தொடருந்து.html
-
- 0 replies
- 625 views
-
-
சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை கருத்தில் கொண்டு “லன்ச் ஷீட்” பயன்பாட்டிற்கு தடை விதிக்க மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தலைமையில் அண்மையில் கூடிய சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவில் இந்தப் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. இந்நாட்டில் லன்ச் ஷீட் பாவனையால் ஏற்படும் சுற்றுச் சூழல் கேடு குறித்தும், “phthalates” என்ற புற்று நோய் மனித உயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நீண்ட விவாதம் நடைபெற்றது. இதன்படி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை கருத்தில் கொண்டு, லன்ச் ஷீட்ட…
-
- 0 replies
- 485 views
- 1 follower
-
-
சர்வதேச பொறிமுறை ஒன்றை அமைப்பது தொடர்பாக இலங்கைக் கட்சிகளின் கருத்துக்களை வெளிநாட்டுத் தூதுவர்கள் கேட்டு வருகிறார்கள். போர்க் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான சர்வதேச பொறிமுறை ஒன்றை இலங்கைக்கு எதிராக ஏற்படுத்துவது தொடர்பாக அந்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துக்களை அறியும் முயற்சியில் கொழும்பிலுள்ள ஐரோப்பிய நாடுகளின் இராஜதந்திரிகள் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 18ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 12ம் திகதி ஆரம்பமாகும் நிலையில் மேற்குலக ராஜதந்திரிகளால் இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி போன்ற நாடுகள் இலங்கை தனது பொறுப்புக்கூறும் கடமையைத் தட்டிக்கழிக்க முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்ற…
-
- 4 replies
- 844 views
-
-
லண்டனில் மாபெரும் கண்டனப் பேரணி தொடங்கியது. லண்டனில் ஈழத் தமிழர் மீதான சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் மாபெரும் பேரணி இன்று சனிக்கிழமை முற்பகல் தொடங்கியுள்ளது. பிரித்தானியாவின் ரவல்கர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகள் திரண்டுள்ளனர். தமிழர் வாழ்வில் ஜூலை மாதத்தில் நிகழ்த்தப்பட்டுள்ள அவலங்களை நினைவு கூரும் வகையில் பேரணியில் பங்கேற்றோர் கறுப்பு உடை தரித்து பங்கேற்றுள்ளனர். நிகழ்வின் தொடக்கத்தில் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. பிரித்தானியாவில் நகராட்சி மன்ற உறுப்பினர்களாக உள்ள தயா இடைக்காடர், திருமதி சசிகலா சுரேஸ் கிருஸ்ணா உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர…
-
- 10 replies
- 2.2k views
-