Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாடுகடந்த தமிழீழ அரசினால் அண்மையில் தொடங்கப்பட்ட சிற்றலை வானொலி ஒலிபரப்பை சிறிலங்காவில் கேட்காமல் தடுக்க முடியாது என்று சிறிலங்காவின் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் அனுச பல்பிட்ட தெரிவித்துள்ளார். “நாடு கடந்த தமிழீழ அரசினால் நடத்தப்படும் சிற்றலை வானொலி ஒலிபரப்பு சமிக்ஞைகளை தடுப்பதற்கான கருவிகள் எம்மிடம் இல்லை.ஆனால் சிறிலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் அதைச் செய்ய முடியும். சிறிலங்காவில் சிற்றலை ஒலிபரப்புக்கு சிறிலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மட்டுமே அனுமதி பெற்றுள்ளது.அவர்களுக்கு மட்டும் தான் இந்த ஒலிபரப்பைத் தடுக்கும் வசதி உள்ளது“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். அதேவேளை இதுகுறித்து சிறிலங்கா ஒலிபரப்பக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹ…

  2. இறுதியாகத் தேர்தல் திணைக்களத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் குறைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு அவ் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழரசுக்கட்சி ஒப்புதல் கடிதம் கொடுக்காமையே இந் நிராகரிப்பிற்கான காரணம் என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவித்திருந்த அதேவேளை தமிழரசுக்கட்சி தனியான பாதையை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றமை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வீரகேசரியின் வாரவெளியீடு மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதிவு தொடர்பில் என்ன கருத்து நிலவுகின்றது என்பது பற்றி கேட்டிருந்தது. இதன் போது முன்வந்து கருத்தரைத்தவர்களது கருத்துக்கள் பின்வருமாறு…

  3. இருநூறு புலிகள்-தமிழர்கள்(தீவிரவாதிகள்) ஒன்று சேர்ந்தால் சிறிலங்காவில் தற்போது இருக்கும் நிலையினை தலைகீழாக மாற்றிவிடுவார்கள் என முன்னாள் சிறிலங்கா இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவத்துள்ளார். விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் கைது செய்யப்படுவது குறித்து தமிழகப் பத்திரிகை ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே சரத்பொன்சேக இவ்விடையத்தை குறிப்பிட்டுள்ளார். மீண்டும் புலிகள் உருவெடுப்பது நாட்டிற்கு கேடாய் முடியும் அதனால் தொடர்ந்து களையெடுக்கப்பட வேண்டியது அவசியம் எனக்கூறியுள்ளதன் மூலம் தமிழர்களே புறங்கையால் தள்ளிவிட்ட புணர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டு காணாமல் போகின்ற சம்பவங்கள் உண்மை என்றும்…

    • 1 reply
    • 1.5k views
  4. இலங்கை அரசு சார்பாக ஜூன் 1-ம் தேதி கொழும்பில் பாரதியார் விழா நடத்தப்படுகிறது. தேமதுரத் தமிழோசை உலகறியச் செய்வோம் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த விழாவில் பங்கேற்பதற்காக வக்கீல் காந்தி, கல்வியாளர் மேஜர் ராஜா உள்ளிட்ட தமிழ்நாட்டு பிரமுகர்கள் இலங்கை செல்ல உள்ளனர். இந்நிலையில் கொழும்பில் நடைபெறும் விழாவில் தமிழக பிரமுகர்கள் பங்கேற்பதற்கு தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளுடனான போரின்போது அப்பாவி தமிழ் மக்களைக் கொன்று குவித்த இலங்கை அரசு, தமிழ்க் கவிஞரான பாரதியாருக்கு விழா நடத்துவது உள்நோக்கம் கொண்டது எனவும் தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை செல்ல உள்ள தமிழக பிரமுகர்களின் வீடுளை முற்று…

  5. மஹிந்தவின் கருத்து கலைஞருக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சு வதைப் போல உள்ளதாம்! வெளிநாடுகளின் நெருக்குதல்களை ஏற்று இலங்கையில் இராணுவத்தை குறிப்பிட்ட இடங்களில் இருந்து வாபஸ் பெற முடியாது என்று அந்த இலங்கை ஜனாதிபதி சொல்லியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சு வதைப் போல உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி வேதனை தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கை: கேள்வி :- இலங்கைத் தமிழர்களுக்கு “தனித் தமிழ் ஈழம்” அமைந்தால்தான் விடிவு ஏற்படும் என்று நீங்கள் சொல்வதை நிரூபிப்பதைப் போல தொடர்ந்து அங்கே தமிழர்கள் சித்ரவதை செய்யப்படுவதாக இன்று கூட ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே? கருணாநிதி :- அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 200…

  6. யாழ்ப்பாணம் வலிகாமம் தென்மேற்கில் குறிப்பிட்ட சில பகுதிகளில் வீடுகளுக்குச் செல்லும் படையினர் குடும்பப் பதிவு அட்டைகளைப் பெற்று சோதித்துள்ளனர். இதனால் மக்கள் மத்தியில் அதிருப்தியும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது, வீடுகளுக்குச் செல்லும் படையினர் "ஆமி காட்" என அழைக்கப்படும் குடும்பப் பதிவு அட்டையை பார்வையிட்டு அதில் பதிவிலுள்ளவர்கள் வீட்டில் உள்ளனரா என விசாரிக்கின்றனர். அத்துடன், வீட்டிற்கு உறவினர் எவரேனும் வந்து செல்கின்றனரா? எனவும் விசாரிப்பதோடு அவ்வாறு எவரேனும் வருகை தந்திருப்பின் அவர் பற்றிய விபரங்களை விசாரிக்கின்றனர். அதேவேளை, முன்னாள் போராளிகள் குறித்த விடயங்களையும் அவர்கள் அவதானிப்பதா…

  7. மன்னாரில் அமைச்சர் றிஸாட் பதியூதீனுக்கு எதிராக இடம் பெற்ற கண்டன நிகழ்வில் கலந்து கொண்டு, மன்னார் ஆயருக்கு ஆதரவாக உரையாற்றிய மன்னார் மாவட் சிரேஸ்ட ஊடகவியலாளர் மீது, அமைச்சரின் சசோதரர் என கூறிக்கொண்டவர் கடுமையாகத் தாக்கியுள்ளார். அமைச்சர் றிஸாட் பதியூதீனின் சசோதரர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட முஜகீர் என்பவர், இன்று மாலை 5.10 மணியளவில் மன்னார் நகர் பகுதியில் வைத்தே மூத்த ஊடகவியலாளரான மக்கள் காதரை கடுமையாகத் தாக்கியுள்ளார். குறித்த ஊடகவியலாளர் மூர்வீதியில் உள்ள தனது வீட்டில் இருந்து மன்னார் பஸார் பகுதியை நோக்கி துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது, மன்னார் வலயக்கல்வி அலுவலக பிரதான வீதியில் வைத்து அவரை பின் தொடர்ந்து வந்த 59-5894 இலக்கம் கொண்ட சிகப்பு நிற ஜீப…

    • 0 replies
    • 737 views
  8. முன்னாள் போராளிகள் தொடர்பாக வலிகாமம் தென்மேற்கில் வீடு வீடாகச் சென்று விசாரனைகளை சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டுள்ள இத் தீடீர் சுற்றிவளைப்பு விசாரணையால், அப் பகுதி முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடையம் தொடர்பாக அங்கிருந்து வரும் செய்தியாளர் மேலும் தெரிவிப்பதாவது, வெளிநாடுகளில் இருந்து யார் யார் உங்கள் வீட்டிற்கு வருகின்றார்கள்? முன்னாள் போராளிகள் யாரும் இங்கு உள்ளார்களா? யுத்தகாலத்தில் வழங்கப்பட்ட “ஆமிக் காட்” வைத்துள்ளீர்களா? என்றாவாறன பல தரப்பிலான கேள்விகள் கேட்கப்பட்டு பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் ஒரு சில இளைஞர்கள் மற்றும் தடுப்பில் இருந்து …

    • 0 replies
    • 589 views
  9. அண்மையில் பல்கலைக்கழகத்தின் மாணவ சமூகத்தினர் மேற்கொண்ட தமிழ் உணர்வான சில நடவடிக்கையினை தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் சுற்றுபகுதியின் பாதுகாப்பில் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்காலத்தில் பல்கலைக்கழகத்தினை சுற்றி படையினர் காவலரண்கள் அமைத்து வீதிசோதனைகளை மேற்கொண்டார்கள் தற்போது சமாதானம் ஏற்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசு அறிவித்துள்ள நிலையில் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் யாழ் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறீலங்காப்படை அறிவித்துள்ளது. இதற்கமைய நேற்று பிற்பகல் தொடக்கம…

    • 0 replies
    • 672 views
  10. ஈழத்தமிழ் மக்கள்மீது அந்நிய சக்திகள் திணிக்கவிழையும் அரசியல்தீர்வின் சூழ்ச்சி! இலங்கைத்தீவு விடயத்தில் அமெரிக்காவின் ஈடுபாடு தொடர்பில் பல்வேறு வியாக்கியானங்கள் வழங்கப்படுகின்றன. அவை ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துகளாக இருந்தபோதிலும், நீண்டகால மூலோபாய அடிப்படையிலேயே அமெரிக்கா தனது நாட்டின் நலன்கருதி ஈழத்தமிழர்கள் விடயத்தில் செயற்படுகின்றது என்பதில் கருத்து வேறுபாடுகளில்லை. மூன்றாம் உலக நாடுகளை தமது ஒழுங்குக்குள் கொண்டு வருவதற்கு அமெரிக்கா முற்படுகின்றது. அதனடிப்படையில் முரண்டு பிடிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க லிபியா உட்பட்ட சில நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள் போலன்றி முற்றிலும் வேறுபட்ட ஒரு புதிய மூலோபாயத்தைக் கையாண்டு வருகிறது. அந்த வழ…

  11. பாரதி பெயரில் போலி நாடகம்; கொழும்புக்குச் செல்லாதீர்! வைகோ வேண்டுகோள்! பதியப்பட்ட நாள்May 28th, 2012 கொழும்பு தமிழ்ச் சங்கமும், சென்னை பாரதி சங்கமும் இணைந்து, ஜூன் 1 ஆம் தேதியன்று, கொழும்பில் பாரதி விழா நடத்துவதாகவும், தமிழகத்தில் இருந்து பேராசிரியர்களும், சொற்பொழிவாளர்களும் கலந்து கொள்ள இருப்பதாகவும் அறிகிறேன். இதனுடைய கருப்பொருள், ‘தேமதுரத் தமிழ் ஓசை, உலகெலாம் பரவச் செய்வோம்’ என்று அறிவித்து உள்ளனர். முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர், தமிழர் தாயகத்தில் சிங்களமயமாக்கலும், பௌத்த மயமாக்கலும் வேகமாக நடைபெற்று வருகின்றன. தமிழர் பகுதிகளில், சிங்கள இராணுவமும், போலீசும் குவிக்கப்பட்டு, தமிழ் ஈழமே ஒரு அடக்குமுறைச் சிறைக்கூடமாக ஆக்கப்பட்டு இருக்கின்றது. தமிழர்களின் வழிப…

  12. ஒன்றுபட்ட இலங்கை என்ற அமைப்புக்குள் தமிழர்கள் தமது உரிமைகளைப் பெறுவது சாத்தியமற்றது என்பதை தாம் சர்வதேச சமூகத்துக்கு நிரூபிக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் 14 வது தேசிய மாநாட்டில் மட்டக்களப்பில் உரையாற்றுகையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை உள்நாட்டுப் போரின் போது இலங்கை அரசாங்கத்துக்கு இராணுவ மற்றும் இராஜதந்திர ரீதியில் ஆதரவினை வழங்கிய சர்வதேச சமூகம், அப்போது இலங்கை அரசாங்கம் தமக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்துக்கு தற்போது அழுத்தங்களை கொடுக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ள சம…

    • 1 reply
    • 791 views
  13. இலங்கையின் இறுதிக் கட்டப்போர் நடந்த வடக்கு பிரதேசத்தை தமிழர்களுக்கே தனியாக உரித்துடைய இடமாக பார்க்கக்கூடாது என்று இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்த விடயத்தில் முக்கிய நபராக பலராலும் பார்க்கப்படும் கோட்டாபய ராஜபக்ஷ, இறுதிக்கட்டப் போரில் சிறிதளவு எண்ணிக்கையான ஆட்சேதங்களே ஏற்பட்டதாகவும் பிபிசிக்கு அளித்த பிரத்தியேக செவ்வியில் கூறியுள்ளார். ஆனால், இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. போருக்கு பின்னர் கடத்தப்பட்டு காணாமல்போனவர்கள் என கூறப்படுவோரின் எண்ணிக்கை குறித்தும் அவர் சந்தேகம் வெளியிட்டார். இலங்கைய…

  14. இலங்கையில் அண்மைக்காலமாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களுக்கு எதிராக அரசியல்வாதிகளினால் தெரிவிக்கப்படுகின்ற கருத்துக்களையடுத்து அவரது பாதுகாப்பு குறித்து அச்சம் எழுந்துள்ளதாகவும், எனவே அரசு அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் மன்னார் புனித செபஸ்தியார் தேவாலயத்தில் இடம்பெற்ற பிரார்த்தனை நிகழ்வில் ஏகமனதாக கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் குரலற்றவர்களின் குரலாக விளங்கும் ஆயருக்கு எதிராக வெளியிடப்படுகின்ற கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் இந்த நிகழ்வில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிகழ்வில் இந்து மதத்தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர், ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு கூடியிருந்தனர். மன்னார் ஆயருக்கு ஆதரவான சுலோகங்கள் அடங்கிய அட்டைகளை அவ…

  15. LLRC பரிந்துரைக்கு பொன்சேகா ஆதரவு: இலங்கையில் மனித உரிமை மீறல் இருப்பதாகவும் தெரிவிப்பு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் அனைவரின் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் அல்லது அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பீபீசி சிங்கள சேவைக்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் சந்தேகநபர்களாக இருந்தாலும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லாவிட்டால் அவர்களை தடுத்து வைக்க முடியாது என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவினால் மனித உரிமை மீறல்கள், மீள…

  16. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்த மீளாய்வுக்குப் பொறுப்பாக இந்தியா, பெனின், ஸ்பெயின் ஆகிய நாடுகள் நியமிக்கப்படவுள்ளன. ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் இணையத்தளம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐ.நாவில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளினதும் மனிதஉரிமைகள் நிலை குறித்து சுழற்சி முறையில் மீளாய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த மீளாய்வுக்கு ஒவ்வொரு நாட்டுக்கும், தலா மூன்று நாடுகள் பொறுப்பாக நியமிக்கப்படுவது வழக்கம். சிறிலங்கா தொடர்பான மீளாய்வு வரும் நவம்பர் 1ம் நாள் நடைபெறவுள்ள நிலையில், இதற்குப் பொறுப்பாக இந்தியா, பெனின், ஸ்பெயின் ஆகிய நாடுகளை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை ந…

  17. அந்நிய நாடுகளின் தலையீடுகளுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து மஹிந்தவின் ஆட்சி நாட்டிற்கு பெரும் சாபத்தையே பெற்றுக் கொடுத்துள்ளது. என தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமில தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார். புலிகள் இருந்த காலக் கட்டத்தை விட தமிழ் மக்கள் மீதான உரிமை மீறல்கள் தற்போது பன்மடங்கில் அதிகரித்துள்ளன. சர்வதேச தலையீடுகள் மேலோங்க அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையே காரணம். ஐ. நா. வையும் அமெரிக்காவையும் குறை கூறுவதை விடுத்து மனித உரிமைகள் தொடர்பில் பொறுப்புடமையை அரசு பாதுகாக்க வேண்டும். எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமில தேரர் மேலும் தெரிவித்திருப்பதாவது, யுத்தத்தின் பின்னரும் வடக்கு கிழக்கில் தமிழர்களினதோ தெற்கில் சிங்களவர்களினதோ பிரச்சின…

  18. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் துணைப் செயலாளர் தோழர் சி.மகேந்திரன் பிரெஞ் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலக உறவுக்கான பொறுப்பாளர் ஜாக் பாத் [Jacques Fath National Council member, executive committee and national coordination of the PCF, responsible for international relations] அவர்களை நேற்று [27- 05-2012 ஞாயிறு] மதியம் சந்தித்து உரையாடினார். பிரெஞ் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைச் செயலகத்தில் ஏறத்தாழ ஒன்றரை மணிநேரம் இடம்பெற்ற இச்சந்திப்பு உரையாடலின் போது ஈழத்தமிழர்களின் அவலம், மற்றும் அனைத்துலக அரசியல் நிலை, இந்தியாவின் சமூகப்பிரச்சனைகள், பிரெஞ் தேர்தல் என்பன முக்கியத்துவம் வகித்தன. C.Mahendran - …

  19. நாடுகடந்த தமிழீழ அரசினால் அண்மையில் தொடங்கப்பட்ட சிற்றலை வானொலி ஒலிபரப்பை சிறிலங்காவில் கேட்காமல் தடுக்க முடியாது என்று சிறிலங்காவின் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் அனுச பல்பிட்ட தெரிவித்துள்ளார். “நாடு கடந்த தமிழீழ அரசினால் நடத்தப்படும் சிற்றலை வானொலி ஒலிபரப்பு சமிக்ஞைகளை தடுப்பதற்கான கருவிகள் எம்மிடம் இல்லை. ஆனால் சிறிலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் அதைச் செய்ய முடியும். சிறிலங்காவில் சிற்றலை ஒலிபரப்புக்கு சிறிலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மட்டுமே அனுமதி பெற்றுள்ளது. அவர்களுக்கு மட்டும் தான் இந்த ஒலிபரப்பைத் தடுக்கும் வசதி உள்ளது“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். அதேவேளை…

  20. சிறிலங்காவின் கொலைக்களங்களின் பாதிப்பும், நாட்டின் இன்றைய நிலையும்‘ என்ற தலைப்பிலான விவாதம் ஒன்று பிரித்தானியாவில் புதன்கிழமை நடைபெற்றது. லண்டனில் உள்ள ஒரே ஊடகக் கழகமான ‘புரொன்ட்லைன் கிளப்‘ இந்த விவாத நிகழ்வை 16 ம் நாள் மாலை 7 மணிக்கு நடத்தியது. 80 ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் பேர் வரையிலானோர் சிறிலங்காவில் மரணமாக காரணமாக அமைந்த - 26 ஆண்டுகளாகத் தொடர்ந்த உள்நாட்டுப் போர், முடிவுக்கு வந்து 3 ஆண்டுகளாகியுள்ள நிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பான கேள்விகளையும், சிறிலங்கா தரப்பின் பதில்களையும் காணொளியில் காணலாம். ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படங்கள் இரண்டும் நீதிக்குப் புறம்பான படுகொலைகளின் முக்கியமான ஆதாரங்கள் என்றும், பொதுமக்கள் மீதான பீரங்கித் தாக்குதல்களைய…

  21. தமிழருக்கு வன்முறை அரசியல் உகந்ததல்ல! சம்பந்தனின் முழுமையான உரை இணைப்பு மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தேசிய மாநாட்டில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் சம்பந்தன் ஆற்றிய நீண்ட உரை பின்வருமாறு: எமது கட்சியின் தேசிய மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்திருக்கும் - அதன் உருவமாகவும், உயிராகவும், இயங்கு சக்தியா கவும் விளங்குகின்ற உங்கள் ஒவ்வொருவரையும், இந்த மட்டக்களப்பு மண்ணில் - நான் உவகையுடன் வரவேற்கிறேன். தமிழ் தேசிய இனத்தின் அரசியல் ஆன்மாவினது சின்னமாக விளங்குவதும், உயரிய விழுமியங்களுடன் தனக்கெனத் தனித்து வமான ஓர் அரசியற் பாரம்பரியத்தைக் கொண்டதுமான - இலங்கைத் தமிழரசுக் கட்சியினது 2012 ஆம் ஆண்டில் நிகழும் கட்சியின் 14ஆவது தேசிய ம…

    • 0 replies
    • 646 views
  22. சிறிலங்கா தனது முலாவது செயற்கைக்கோளினை 2015ம் ஆண்டளவில் விண்வெளி நோக்கி அனுப்புவதற்கு சீனா உதவவுள்ளது. இத்திட்டத்துக்காக சிறிலங்கா முதலீட்டு சபையுடன் 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உடன்பாடொன்று எட்டப்பட்டுள்ளதாக SupremeSAT நிறுவனம் தெரிவித்துள்ளது. இச் செயற்கைக்கோளை வடிவமைத்தல், உற்பத்தி செய்தல் மற்றும் அதனை விண்வெளிக்கு செலுத்துதல் போன்ற செயற்பாடுகளுக்காக SupremeSAT நிறுவனமானது சீன அரசுக்குச் சொந்தமான China Great Wall Industry Corporation - CGWIC நிறுவனத்துடன் உடன்பாடொன்றை எட்டியுள்ளது. 2015ல் சிறிலங்காவானது விண்வெளிச் சுற்றுப் பாதையில் தனது முதலாவது தொலைத் தொடர்பு செயற்கைக்கோளினை உலாவரவிடும் என SupremeSAT நம்புகின்றது. "…

  23. வரலாற்றில் ஒருமுறை கூட ஈழத்தமிழர்கள் மத்தியிலிருந்து தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்படுகிறார்களே அதை நாங்கள் கண்டிக்கிறோம் என்ற குரல் வந்ததே கிடையாது என்று நேற்று சென்னையில் நடைபெற்ற தமிழக இளைஞர் எழுச்சிப்பாசறை பொதுக்கூட்டத்தில் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். இவர் உரையின் காணொளி [media=] http://www.periyarth...ikkal-3rd-year/

  24. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வின் அவசியம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வடக்கு கிழக்கில் நடைபெற்றுவரும் இராணுவ ஆக்கிரமிப்பு நிலை விலக்கல், காணாமல் போனோர், கைதிகள் பிரச்சினைக்கு விரைந்த தீர்வு எட்டப்படல், வாழ்க்கை செலவு சுமையிலிருந்து மக்களை விடுவித்து இயல்புவாழ்வை ஏற்படுத்துதல் உட்பட பல தீர்மாஅடங்கிய தீர்மானங்கள் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் இன்று நிறைவேற்றப்பட்டன. மட்டக்களப்பு, ஊறணியிலுள்ள அமெரிக்க மிசன் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிமுதல் நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாட்டில் இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இலங்கையில் தமிழ் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகூடிய அத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.