ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
12வருடம் குழந்தைகளைப் பிரிந்து சிறையில் வாடும் இந்துமத குருவான தாயும் தந்தையும் கண்ணீர் குரல் 12வருடம் குழந்தைகளைப் பிரிந்து சிறையில் வாடும் இந்துமத குருவான தாயும் தந்தையும் கண்ணீர் குரல் கடந்த 12வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரகுபதி சர்மாவும்(புதியமகசீன்சிறை) அவரது மனைவியும்(வெலிக்கடை பெண்கள் பிரிவு) சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இவ்விருவரும் 09.02.2000ம் ஆண்டு திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா அவர்கள் மீதான குண்டுத்தாக்குதலின் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டனர். 4ம்,6ம் மாடிகள் என இலங்கையின் கொடும் சித்திரவதை கூடங்கள் யாவிலும் வைத்து மிகவும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். இவர்களுக்கு 3பிள்ளைகள். மூத்தமகன் இந்தியாவில் திர…
-
- 4 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட சுஸ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு இன்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசியுள்ளது. இன்று காலை நடந்த இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவில் தமிழர்களின் நிலை குறித்து தாம் கண்டவற்றை இந்தியப் பிரதமரிடம், அவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர். அதேவேளை, இந்தப் பயணம் தொடர்பாக சுஸ்மா சுவராஜ் குழுவிடம் இருந்து இந்திய மத்திய அரசு அறிக்கை ஒன்றைக் கோரியுள்ளதாகவும் தெரியவருகிறது. இன்று புதுடெல்லியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, “சிறிலங்காவில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த இந்தியாவின் கரிசனைகளை இந்தக் குழுவின் பயணத்…
-
- 3 replies
- 1.2k views
-
-
அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதான வீதியில் அமைந்துள்ள தாண்டியடிப் பிரதேசத்திலிருந்து மேற்குப் புறமாக நாங்கள் பயணித்துக் கொண்டிருந்தோம். மனதுக்குள் ஓர் இனம் புரியாத உணர்வு. ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகவும், புலிகளின் மிகப் பெரும் முகாம் அமைந்திருந்ததாகவும் பேசப்பட்ட கஞ்சிகுடியாறு பிரதேசம் நோக்கிய பயணமாக அது இருந்தது! தாண்டியடி பிரதான வீதியிலிருந்து கஞ்சிகுடியாறுக்கு சுமார் 11 கிலோமீற்றர் செல்ல வேண்டியிருந்தது. மோட்டார் சைக்கிளில்தான் சென்றோம். நாங்கள் பயணித்த பாதை புதிதாக இருந்தது. அது யுத்தத்துக்குப் பின்னர் அமைக்கப்பட்ட வீதி என்றும், அதற்கு முன்னர் இந்தப் பகுதி எப்படியிருந்தது எனவும், எங்களுடன் பயணித்துக் கொண்டிருந்த தாண்டியடியைச் சேர்…
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ். நகரிலுள்ள இராணுவ பாதுகாப்புச் சோதனைச் சாவடியொன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு இராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளனர். இந்த இரு இராணுவ வீரர்களும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு இராணுவ வீரர் மீது மற்றுமொரு இராணுவ வீரர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட இராணுவ வீரர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனிப்பட்ட பிரச்சினையே இதற்கான காரணமென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஆர்.வணிகசூரிய --தமிழ்மிரருக்கு தெரிவித்தார். சுமித், எதிரிசிங்க என்ற இராணுவ வீரர்களே துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் ஆவர். இச்சம்பவம் தொடர்பில…
-
- 3 replies
- 827 views
-
-
ஆட்சியில் இருந்த போது கருணாநிதி சொல்லாத தமிழீழக் கோசத்தை ஆட்சி இழந்த பிறகு வெற்று முழக்கங்களாக சொல்லி பயன் இல்லை என்று தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் கட்சியின் நிர்வாகிகள் தெரிவுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தி.மு.க. தலைவர் கருணாநிதி டெசோ அமைப்பு உருவாக்கி உள்ளார். ஆட்சியில் இருந்த போது சொல்லாத கோஷங்களை ஆட்சி இழந்த பிறகு வெற்று முழக்கங்களாக சொல்லி பயன் இல்லை. கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்காரர்களின் கோரிக்கை நியாயமானது. புதுக்கோட்டை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடவில்லை. பாராளுமன்ற தேர்தலில் எதிரிகளை பொறுத்து எங்கள் கட்சி நிலைப்பாடு அமையும். என்று சீமான் கூறினார். http…
-
- 0 replies
- 860 views
-
-
யுத்தம் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும் கிழக்கு மாகாணத்தில் தேவையில்லாமல் பலர் கைது செய்யப்பட்டு வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்திருந்த குற்றச்சாட்டை அரசு தரப்பு மறுத்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக திருகோணமலையில் வி.புலிகளுடன் தொடர்புகளை பேணியவர்கள் எனும் பெயரில் கைது செய்யப்படுகின்ரனர். இராணுவமும் தீவிர வேட்டைகளை ஆரம்பித்துள்ளது. இவ்வாறான கைது நடவடிக்கைகள் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் வரும் தேடுதல் வேட்டைகள் தொடர்பில் இரா.சம்பந்தனின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என ஜனாதிபதியின் ஊடக பணிப்பாளர் பந்துல ஜயவர்த்தன தெரிவித்துள…
-
- 0 replies
- 646 views
-
-
முள்ளிவாய்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை 'சமூக சிற்பிகள்' அமைப்பினர் [The Social Architects -TSA]* சாட்சியமான மக்களிடம் கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர். March 12 முதல் March 19 வரையில் வெளியான அக்கதைகளின் முக்கியத்துவம் கருதி 'புதினப்பலகை' மொழிமாற்றம் செய்து இங்கே வெளியிடுகின்றது. 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. [தனது அறுபதாவது வயதில் உள்ள ஆனந்தராஜா, 25 வயதுடைய சிந்துவின் தந்தையாவார். தமிழீழ விடுதலைப் புலிகளின் நீதிமன்றில் எழுதுவினைஞராகப் பணியாற்றிய ஆனந்தராஜாவும், அவரது மகளும், முன்னாள் புலி உறுப்பினருமான சிந்துவும் தமது போர்கால அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள…
-
- 2 replies
- 521 views
-
-
மஹாபொல புலமைப் பரிசில் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக செயற்பாடுகளை குழப்பினால் அல்லது வகுப்புகளுக்குச் செல்லாமல் இருப்பார்களாயின் அவர்களுக்கு வழங்கப்பட்ட புலமைப் பரிசில் இரத்துச்செய்யப்படும் என உயர்கல்வி அமைச்சு நேற்று தெரிவித்தது. இது மஹாபொல நம்பிக்கை நிதியத்தின் கொள்கையில் கூறப்பட்டுள்ள நிபந்தனையாகும். ஆனால் இது இவ்வளவு காலமும் அமுலாக்கப்படவில்லை என உயர் கல்வி அமைச்சு கூறியது. மாணவர்களின் வன்முறைகள் அதிகரித்து வருவதிலும் பல்கலைக்கழக விவகாரங்களில் மாணவர்கள் தலையிடுவதாலும் மஹாபொல நம்பிக்கை நிதிய கொள்கையில் கூறப்பட்டள்ள நிபந்தனைகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்துவது அவசியம் என பல்கலைக்கழகங்கள் கருதுகின்றன என அமைச்சு அதிகாரி ஒருவர் கூற…
-
- 0 replies
- 672 views
-
-
தெரிவுக்குழுவில் இடம்பெறுவதற்கான நிலைப்பாட்டினை கூட்டமைப்பு எடுக்கலாம் என்று எதிர்பார்க்கும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதை அவதானிக்க முடிகின்றது. இந் நிலைப்பாட்டிற்கு அமெரிக்காவும், இந்தியாவும் தான் காரணம் என்று தமிழ் மக்கள் மத்தியில் புலுடா விடுவதற்கான முயற்சியினை கூட்டமைப்பு எடுத்திருப்பதனையும் இதற்கு உதயன் பத்திரிகையினைத் துணைக்கு அழைத்திருப்பதனையும் இன்றைய உதயன் செய்தி ஊடாக அவதானிக்க முடிகிறது.இதுவரையில் நடைபெற்ற பேச்சுக்களில் எதுவித ஆரோக்கியமான முடிவுகளும் எட்டப்படவில்லை, பேச்சுக்குப் போகமுன்னர் கூட்டமைப்பிடம் அரச தரப்பு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அவை நிறைவேற்றப்பட்டாலேயே தெரிவுக்குழுவில் பங்கேற்பது தொடர்பில் பரீசீலிக்கப்படும் என்ற…
-
- 4 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவின் தமிழ் பேசும் மக்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரின் போது கணவன்மாரை இழந்த 90,000 வரையான பெண்கள் வாழ்வதாக மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக விவகாரம் தொடர்பாக, பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாயப் பணியகத்தால் வெளியிடப்பட்ட இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் காணாமற் போதல்கள் மற்றும் கடத்தல் சம்பவங்கள் என்பன 2011 இறுதியில் அதிகரித்துக் காணப்பட்டதாக பிரித்தானிய வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹேக் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட 2011 நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார். கடந்த டிசம்பரில், சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த அரசியற் செயற்பாட்டாளர்கள் இருவர் காணாமற் போயுள்ளனர். அத்துடன் 2010 இல் …
-
- 0 replies
- 550 views
-
-
கோதாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கமைய மேர்வின் சில்வாவின் நெருங்கிய சகாவான அமல் ரொட்ரிகோ என்ற நபர் கடத்திச் செல்லப்பட்டு பெறப்பட்ட வாக்குமூலத்தைப் பார்த்து மகிந்த ராஜபக்ஷ ஆத்திரமடைந்துள்ளார். இந்த ஒளிப்பதிவு வாக்குமூலம் மகிந்த ராஜபக்ஷவை அவமானப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரியொருவர் எமது தெரிவித்தார். அமல் என்ற நபரின் கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அமைச்சர் மேர்வின் சில்வாவின் செயலாளர்களில் ஒருவரான அமல் ரொட்ரிகோ, வெள்ளை வேனில் கடத்தப்பட்டதை அடுத்து மகிந்தரிடம் ஓடிச் சென்ற மேர்வின் சில்வா தமது சகாவை மீட்டுத் தருமாறு கோரியுள்ளார். இதனையடுத்து பாதுகாப்புச் செயலாளரை தொலைபேசியில் தொடர்புகொண்ட …
-
- 9 replies
- 1.6k views
- 1 follower
-
-
கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் இணக்கப்பாட்டினை தெரிவுக்குழுவில் சமர்ப்பித்து அதன் மூலம் தீர்வுகாணப்படுமாயின் தெரிவுக்குழுவில் பங்கேற்கலாம் என கூட்டமைப்பு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இன்னிலையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்க முன்வந்தால் தெரிவுக்குழுவில் தமது கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆசனங்களில் 2 ஆசனங்களை கூட்டமைப்பினருக்கு விட்டுக்கொடுக்க ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க தயாராகவுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெரிவுக்குழுவில் தமிழர்களின் பங்களிப்பையும், தமிழர்களின் பிரதிநிதித்துவத்தையும் வலுப்படுத்துவதற்காகவே ரணில் விக்ரமசிங்க இந்த விட்டுக்கொடுப்பை மேற்கொள்ள முன்வந்துள்ளதாகவும்…
-
- 6 replies
- 946 views
-
-
தென்மராட்சியின் கோவிலாக்கண்டி- தச்சந்தோப்பு பகுதியினில் நேற்றிரவு வீடொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் சென்றவர்களென கூறப்படும் இருவரே துப்பாக்கி சூட்டினை நடத்தியுள்ளனர். எனினும் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்பட்டிராத நிலையில் ஆயுததாரிகள் அங்கிருந்து தப்பித்துள்ளனர். மிக அண்மைக் காலங்களினில் மக்கள் மீளக்குடியமர்ந்த பகுதிகளுள் கோவிலாக்கண்டி தச்சந்தோப்பு பகுதியும் ஒன்றாகும். துப்பாக்கிதாரர்கள் வீட்டின் ஜன்னல் ஊடாக துப்பாக்கியை நுழைத்து துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர். எனினும் அவ்வேளை குறித்த அறையினுள் எவரும் இருந்திராமையால் உயிரிழப்புக்களோ காயங்களோ ஏற்பட்டிருக்கவில்…
-
- 1 reply
- 765 views
-
-
இலங்கையில் தமிழீழம் தனித்ததொரு நாடாக அமைய மத்திய அரசு ஆதரவு தர வேண்டும் என்று திடீரென்று இன உணர்வு பீறிட்டுக் கிளம்பப் பெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்! குதிரை ஓடிவிட்ட பிறகு லாயத்தைப் பூட்டுவதற்குப் பூட்டைத் தேடுகிறார் கருணாநிதி! மூன்றாண்டுகளுக்கு முன்வரை போராடுவதற்கு ஒரு வலுவான போராளிகள் கூட்டம் இருந்தது. அப்போது பேசியிருக்க வேண்டும் இதை! அப்போது சகோதர யுத்தம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர்; தமிழீழம் சாத்தியமில்லை என்று பேசிக் கொண்டிருந்தவர்; இப்போது "ஈழம் எங்கள் தாகம்' என்று புறப்பட்டு விட்டார்! அதை ஐ.நா.வுக்குக் கொண்டு செல்ல மத்திய அரசுக்கு விண்ணப்பம் போடுகிறார் கருணாநிதி! ஈழத்தை இந்த அளவுக்குச் சின்னாபின்னப்படுத்தியதே தானும் மத்திய அர…
-
- 0 replies
- 572 views
-
-
Bearing Witness to the challenges of Post-Conflict Peace. Panel Discussion. In May of 2009 the almost 26 year long Sri Lankan Civil War came to a bloody end when government forces routed the Tamil Tigers in the country's North and East. In the process civilian safe zones were indiscriminately shelled, with more than 20,000 non combatants losing their lives. Since then repressive security measures continue and serious human rights abuses persist. Sri Lanka's prime minister maintains that there were 'zero casualties.' While the recent US-led UN resolution calling on Sri Lanka to investigate crimes against humanity is an important first step, much remains to be d…
-
- 0 replies
- 674 views
-
-
காலவரையறையின்றி தமது தந்தையை பிரிந்து நிற்கும் 5 வயதான இலங்கை தமிழ் சிறுவன் ஒருவன் குறித்து அவுஸ்திரேலிய செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவில் நடைமுறையில் உள்ள ஏஎஸ்ஐஓ உளவு நிறுவன பாதுகாப்பு நடைமுறையின்படி, கடந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் சார்த்தி என்ற இந்த சிறுவன் தமது தந்தையிடம் இருந்து பிரிக்கப்பட்டுள்ளதாக செய்தித்தாள்கள் குறிப்பிட்டுள்ளன. இலங்கையில் இருந்து அகதிகளாக சிறுவனும் அவருடைய பெற்றோரும் அவுஸ்திரேலியாவுக்கு சென்றனர். அவர்களுக்கு கடந்த வருடம் பெப்ரவரி மாதம் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்தநிலையில், சிறுவனும் அவரின் தாயாரும் தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டனர். எனினும் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்பு என்ற சந்தேக…
-
- 0 replies
- 709 views
-
-
இரண்டு நாடுகளில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் அரசியலில் ஈடுபடுவது தடைசெய்யப்பட உள்ளது. இதற்காக குடிவரவு குடியல்வு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் இலங்கைக்கு செல்ல விசா அனுமதி தேவையில்லை என்ற போதிலும் இலங்கையில் அரசியலில் ஈடுபட முடியாதவாறு சட்டத்தில் திருத்தங்களை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதனடிப்படையில் பிரதேச சபை, மாகாண சபை, நாடாளுமன்றம் ஆகியவற்றிக்கான தேர்தலில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் போட்டியிட முடியாது என்பதுடன், ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் அரசாங்கத்தில் உள்ள அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தப…
-
- 4 replies
- 1.6k views
-
-
வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களிடம், அவர்கள் புலி இயக்கத்தில் இருக்கும் போது கொல்லப்பட்ட சிறுவர்களினதும், காயமுற்று அங்கவீனமுற்ற சிறுவர்களினது எண்ணிக்கையை தெரிவிக்குமாறு, சர்வதேச சமூகத்தினர் வினவ வேண்டும் என கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். காணாமல் போன 13 சிறுவர்கள் தொடர்பாக எவ்வித தகவலும் இல்லை என குற்றஞ்சாட்டி வெளியிடப்பட்ட, பிரட்டன் மனித உரிமை அறிக்கைக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அகதிகளாக இடம்பெயர்ந்து பின்னர் வெளிநாடுகளுக்கு சென்று தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்கள் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது போர்க்களம் தொடர்பான பதிவுகளை வைத்திருக்கின்றனர். அவர்களிடமே இதை கேட்டறிந்து கொள்ளமு…
-
- 3 replies
- 888 views
-
-
சிறிலங்காவில் போருக்குப் பிந்திய தமிழர்களின் நிலை குறித்து நேரில் கண்டறிவதற்காகச் சென்றிருந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவுடன் இன்று நடைபெறவிருந்த சந்திப்பை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் நாளைக்கு பிற்போட்டுள்ளார். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையிலான 12 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்றைய சந்திப்பில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் காரணம் குறிப்பிடப்படாமல், இந்தச் சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது. நாளை காலை நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பின்போது, சிறிலங்காவில் தமிழர்களின் நிலை தொடர்பாக, அங்கு சென்று திரும்பிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியப் பிரதமரிடம் எடுத்துக் கூறுவர் என்றும் புதுடெல…
-
- 1 reply
- 661 views
-
-
அரியாலை கிழக்கில் இராணுவப் பிரசன்னம் குறைக்கப் பட்டாலும் அவர்கள் அமைத்த சிறிய புத்த விகாரை மாத்திரம் நிலைத்து நிற்கிறது. மண்ணும் கற்களும் வைத்துக் கட்டப்பட்ட இந்தக் கோவிலை யாழ்நகரில் வதியும் பிக்குகள் மேற்ப்பார்வை இடுகின்றனர். இந்த இடத்தில் இருந்து வெளியேறிய போது எக்காரணம் கொண்டும் இந்த விகாரையை எவரும் சேதப் படுத்தக் கூடாதென்று பொது மக்களுக்கு இராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது இராணுவத்தினரின் வழமையான செயற்பாடு. முகாம் சூழலில் ஒரு விகாரையை அமைப்பார்கள் அல்லது ஒரு புத்தர் சிலையை நிறுத்துவார்கள். அவை அமைக்கப்பட்ட நிலம் யாருக்குச் சொந்தம் என்பது பற்றி இராணுவத்தினர் கவலைப்படுவதில்லை. இராணுவம் பிற இடத்திற்கு நகர்ந்தாலும் முன்பு அமைக்கப்பட்ட விகாரையும் …
-
- 0 replies
- 560 views
-
-
பிரித்தானியாவில் உள்ள பிரபல பௌத்த பிக்குகளில் ஒருவரான பகலகம சோமரட்ண பிக்கு பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஐஸில்வேர்த் கிரவுண் நீதிமன்ற ஊடக அதிகாரி தெரிவித்துள்ளார். அவருக்கான தண்டனை ஜூன் முதலாம் திகதியில் வழங்கப்படும். ஒரு பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு மற்றும் 6 தகாத நடத்தை குற்றச்சாட்டு ஆகியற்றில் அவர் குற்றங்காணப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டுக்களை பிக்கு மறுத்திருந்தார். 1970 கள் மற்றும் 80 களில் பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 65 வயதான இவர், குறைடனில் உள்ள தேம்ஸ் பௌத்த விகாரையின் தலைமை பிக்குவாவார். http://www.saritham.com/?p=58663
-
- 1 reply
- 484 views
-
-
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட இலக்கிய வரலாற்றில் காட்டூன் ஓவியக் கலையில் பிரித்துப்பார்க்க முடியாத ஒருவராகி விளங்கி மறைந்த ஓவியர் பயஸ் வரைந்த ஓவியங்களின் தொகுப்பு “பயஸ் காலக்கிறுக்கல்கள்” நூல் வெளியீட்டு விழாவும் ஊடக சுதந்திரநிகழ்வும் யாழ்ப்பாணத்தில் சிறப்புற நடைபெற்றுள்ளன. யாழ். திருமறைக்கலாமன்ற மண்டபத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்விற்கான ஏற்பாட்டினை நிமலராஜன் ஞாபகார்த்த அமைப்பு மேற்கொண்டிருந்தது. அமைப்பின் தலைவர் ஆர்.தயாபரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ‘பயஸ் காலக்கிறுக்கல்கள்’ நூலினை ஓவியர் பயஸ்ராஜாவின் துணைவியார் திருமதி காயத்திரி பயஸ்ராஜா, மகன் ஜதிவர்மன் ஆகியோர் வெளியிட்டு வைத்தனர். வெளியீட்டு உரையினை யாழ். தினக்குரல் பத்திரிகையின் உதவி ஆசிரியரும், யாழ…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ். அரியாலை மாம்பழச் சந்தியிலுள்ள கடைத் தொகுதியிலிருந்து நான்கு கடைகள் கொள்ளையரினால் இன்று வியாழக்கிழமை அதிகாலை உடைக்கப்பட்டு பெறுமதிமிக்க பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர் இச்சம்பவம் தொடர்பாக கைரேகை பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கொள்ளையர்கள் திட்டமிட்டு இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர். இந்த 4 கடைகளில் இருந்து பொறுமதியான இலத்திரணியல் சாதனங்கள் திருடப்பட்டுள்ளதாகவும் சுமார் 15 இலச்சம் ரூபாய் பொறுமதியான கடையிலுள்ள சாமான்கள் திருடப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக யாழ். பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். கைதடியில் துப்பாக்கி முனையில் கொள்ளை இதேவேளை, யாழ்ப்பாணம் கைதடிப்…
-
- 0 replies
- 542 views
-
-
சிறிலங்கா அரசாங்கம் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு சீனாவிடம் மீண்டும் 1.5 பில்லியன் டொலரை கடனாகப் பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன http://www.puthinapp...?20120503106125
-
- 1 reply
- 630 views
-
-
கடத்தப்பட்டு காணாமற்போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட விவகாரம் குறித்து அமெரிக்கா கூடிய கவனம் செலுத்தி சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த தமது பார்வையின் ஒரு பகுதியாக எக்னெலிகொட விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஊடகத்துறையினர் மீது மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தல்கள், தாக்குதல்கள் குறித்தும் அமெரிக்கா முதன்மைப்படுத்தவுள்ளது. உலக ஊடக சுதந்திர நாள் இன்று கொண்டாடப்படும் நிலையிலேயே சிறிலங்காவில் ஊடகத்துறை எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து அமெரிக…
-
- 0 replies
- 744 views
-