ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143373 topics in this forum
-
பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அரச, தனியார் நிறுவனங்கள் 6300 கோடி ரூபா பாக்கி அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 21 நிறுவனங்களிடமிருந்து பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 6300 கோடி ரூபாவை இன்னும் வசூலிக்க வேண்டியுள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டது. ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இத்தகவலை தெரிவித்தார். ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் மாத்திரம் 1200 கோடி ரூபா செலுத்த வேண்டியிருப்பதாக அமைச்சர் கூறினார். இலங்கை மின்சார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, ஸ்ரீலங்கா ரயில்வே, இலங்கை போக்குவரத்துச் சபை, இலங்கை இராணுவம், கடற்படை, பொலிஸ் திணைக்களங்களிடமிருந்து…
-
- 1 reply
- 514 views
-
-
ஏப்ரல் 2ஆம் நாள் திங்கட்கிழமை ஒட்டாவா கனடிய பாராளுமன்ற முன்றலில் நன்றி தெரிவிக்குமுகமாக திரண்ட கனடிய தமிழர்களை நாடி ஆளும் கன்சவேட்டிவ் மற்றும் புதிய சனநாயகக்கட்சி, லிபரல் ஆகிய எதிர்கட்சிகளைச் சேர்ந்த 33 பாராளுமன்ற உறுப்பினர்கள் வரலாறாகத் திரண்டனர். சிறீலங்கா குறித்த விடயத்தில் கடந்த ஒரு வருடமாக கனடிய தேசமே அனைத்து நாடுகளுக்கும் முன்னுதாரணமாக கடும்போக்கை கடைப்பிடித்து வரும் நிலையில் அதற்கு தமது நன்றியறிதலை தெரிவிக்கும் முகமாக ரொரன்ரோ, மொன்றியல், ஒட்டாவா இருந்து திரண்ட நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்கள் மாபெரும் ஒன்றுகூடல் ஒன்றை கனடிய பாராளுமன்ற முன்றலில் நடாத்தினர். தமிழர்களின் நன்றியறிதலை ஏற்று அவர்கள் முன் வரிசையாக நீண்ட நேரமாக உரையாற்றிய அனைத்துப் பாராள…
-
- 83 replies
- 4.2k views
-
-
துருக்கி, நைஜீரியா, அஸர்பைஜான், சீஷெல்ஸ், மொரிஷியஸில் தூதரகங்களை திறக்க இலங்கை தீர்மானம் துருக்கி, நைஜீரியா, அஸர்பைஜான், சீஷெல்ஸ், மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் தூதரகங்களை அமைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. ஜெனீவா தீர்மானத்திற்குப் பின்னர் ஐரோப்பிய நாடுகளிலுள்ள சில தூதரகங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியான செய்திகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரீஸ் கூறுகையில், அப்படி செய்து விவேகமற்றது என்றார். எனினும் புதிய உலக போக்கிற்கமைய, தூதரகங்களை மீளமைக்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார். 'எமக்கு நிதி கட்டுப்பாடுகள் உள்ளன. உலகில் 193 நாடுகள் உள்ளன. எனினும் 46 நாடுகளில் மாத்திரமே எமக்கு தூதரகங்கள் உள்ளன. எமது தேவைக்கிணங்க நாம் இவ…
-
- 1 reply
- 561 views
-
-
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவின் (CIA) இலங்கைக்கான உளவாளி என எல்லே தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் பௌத்தாலோக மாவத்த நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் சிலரிடம் அவர் இதனைக் கூறியுள்ளார். சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் சர்வதேசத்திற்குத் தேவையான வகையில், வேலைத் திட்டமொன்றை அமுல்படுத்தி, கூட்டமைப்பிற்கு இருந்த தேசப்பற்று ஆதரவை ஜீ.எல்.பீரிஸ் பலவீனப்படுத்தியிருந்தார். இதனையடுத்து ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் விடுதலைப் புலிகளுடன் சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, தேசப்பற்று சக்தியைக் காட்டிக் கொடுத்ததாகவும் தேரர் இதன்போது நினைவுபடுத்தியுள்ளார். 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித்…
-
- 3 replies
- 1.2k views
-
-
மகிந்த ராஜபக்ஷவின் இனக்கொலையை சரியெண்டு வாதிடும் சோ என்கிற பார்ப்பணன் !!!!! அண்மையில் தமிழ்நாட்டில் இந்தப் பாம்பு கலந்துகொண்ட நிகழ்வொன்றில் அவன் கக்கிய விசமும் அதற்கு பார்வையாளர்களிடமிருந்து கிடைக்கும் கரகொலி ஆதரவையும் பாருங்கள். பார்க்கவே இதயம் கொதிக்கும் அளவிற்கு அவன் பேசுகிற பேச்சு...... யாம் பெற்ற இன்பம் பெற இவ் வைய்யகம் .............
-
- 6 replies
- 2k views
-
-
யாழ்ப்பாணத்திற்கு ரயில் வருமா? வராதா ? என்ற கேள்விக்கு நீங்கள் கூறும் பதில் என்ன?????? நேற்று மாலை கோண்டாவில் புகையிரதப் பகுதியில் வந்திறங்கிய தண்டவாளங்கள் இவை. நீண்டகாலமாக ரயிலையும் தண்டவாளங்களையும் காணத இளம் பராயத்தினர் இவற்றை வேடிக்கை பார்த்து நின்றனர். thx http://newjaffna.com/
-
- 3 replies
- 1.3k views
- 1 follower
-
-
ஜெனோசைட் புரபசர், கூடி வரும் ஒன்பது கோடி தமிழ் எருமைகளை பார்த்து சிறி லங்கா சிங்கங்களே பின்வாங்கும் போது குறுக்கால எதுக்கு நீங்கள்? படுத்து கிடந்தது மிதி வாங்கவா?
-
- 1 reply
- 846 views
-
-
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க்படும் என ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கையின் சில விடயங்கள் தமது கட்சிக்கும், தமது நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆணைக்குழுவின் முன்னிலையில் அமைச்சர் சாட்சியமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சி தொடர்பில் சில பிழையான கருத்துக்கள் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஈ.பி.டி.பி. கட்சியை ஒர் துணை இராணுவக் குழுவாக அறிவித்தல் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தொடர்பில் ப…
-
- 0 replies
- 684 views
-
-
சர்வதேச சட்டங்களிலிருந்து தப்பிச் செல்ல முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கையை நிராகரிக்கும் தரப்பினர், ஏகாதிபத்தியத்தை விரும்புவோராக கருதப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். 1989-1990களில் இலங்கை மனித உரிமை விவகாரத்தை தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், தற்போதைய சிரேஸ்ட அமைச்சர் வாசுவதேவ நாணயக்காரவுமே மனித உரிமைப் பேரவைக்கு எடுத்துச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் தாமும் இந்த நடவடிக்கைகளுக…
-
- 0 replies
- 565 views
-
-
தேர்தலுக்காக மட்டும் அரசியல் நாடகம் நடத்தி வருகிறது த.தே.கூ: டக்ளஸ் 'அரசாங்கத்திற்கு ஒரு கருத்தும், அதற்கு மாறாக தமிழ் மக்களுக்கு இன்னொரு கருத்தும் கூறி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இரட்டைவேட அரசியல் நாடகத்தையே நாம் வெறுக்கின்றோம்' என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணை தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் ஆற்றிய உரையின் முழு விபரம் பின்வருமாறு, 'இங்கு நான் கூறும் கருத்துக்கள் அழகிய எங்கள் இலங்கைத்தீவின் எதிர்கால சுபீட்சத்திற்கான…
-
- 1 reply
- 327 views
-
-
இலங்கைக்கு 427 மில்லியன் டொலர் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் பாரிய வர்த்தக பற்றாக்குறை காரணமாக வெறிச்சோடிவரும் அரசாங்க கஜானாவுக்கு முண்டுகொடுக்கும் நோக்கத்தில் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 427 மில்லியன் டொலர் கடனை அங்கீகரித்துள்ளது. இலங்கையின் பொருளாதார மீட்சி 2011 இலும் தொடர்ந்ததாயினும் இலகுவாக கிடைத்த கடன்களும் நிலையான நாணய மாற்றுவீதமும் வர்த்தக மீதி பற்றாக்குறை தொடர்ந்து காணப்பட வழிவகுத்தது என வொஷிங்டனை தளமாகக் கொண்ட சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. கடந்த வருடத்திற்கான வர்த்தக மீதி 10 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜந்திலொரு பங்காகும். இது குறைந்துவந்து நாட்டின் வெளிநாட்டு ஒதுக்கங்கள் மீ…
-
- 2 replies
- 665 views
-
-
அமெ. பொருளாதாரத் தடையால் தேயிலை ஏற்றுமதியில் பாதிப்பா?; ஆராய்கிறது இலங்கை அரசு ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் நாட்டின் தேயிலைக் கைத்தொழிலுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களை இயன்றளவு குறைக்கும் வழிவகைகளை இலங்கையில் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். இலங்கையின் தேயிலையின் இரண்டாவது பெரிய கொள்வனவாளராக உள்ள ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளால் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏதும் இல்லை என கூறப்படுகின்றபோதும் பெயர் குறிப்பிட விரும்பாத இலங்கைத் தேயிலை சபையின் உயர் அதிகாரி ஒருவர், இலங்க…
-
- 0 replies
- 700 views
-
-
இரண்டரை லட்சரூபா உதவி வழங்கிய உறவுகளுக்கு நன்றிகள் 50வருட சிறைத்தண்டனை பெற்ற நல்லரட்ணம் சிங்கராசாவின் குடும்பத்தினருக்கான வாழ்வாதார உதவியினை நேசக்கரம் புலம்பெயர் உறவுகளிடமிருந்து பெற்று வழங்கியுள்ளது. இரண்டரை லட்சரூபா பண உதவியினை வழங்கிய உறவுகளுக்கு சிங்கராசாவும் அவரது குடும்பத்தினரும் தமது நன்றிகளைத் தெரிவிக்கின்றனர். சிங்கராசாவின் குடும்பபாரத்தைச் சுமக்கிற அவரது மருகமன் காங்கேசராசா எழுதிய கடிதம்:- நன்றிக்கடிதம் படம் :- தொடர்புபட்ட செய்தியிணைப்பு :- http://www.yarl.com/...showtopic=98743 http://tamilnews24.com/nesakkaram/ta/?p=1339
-
- 1 reply
- 734 views
-
-
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவதன் மூலமே தமிழ் மக்களுக்கு நன்மை ஏற்படும். அத்தோடு சிறந்த நிருவாக கட்டமைப்பையும் ஏற்படுத்த முடியும் - இவ்வாறு வடக்கு, கிழக்கு மாகாண ஜீவோதய நலன்புரி நிறுவனத் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார். வடக்கு, கிழக்கு ஜீவோதய நலன்புரி நிறுவனத்தின் பிரமுகர்கள் கௌரவிப்பு நிகழ்வு கல்முனை சனச மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- இணைந்த வடக்கு, கிழக்கை பிரித்தன் மூலம் தமிழ் மக்கள் எந்தப் பயனையும் அடையாது துன்பங்களிலேயே அமிழ்ந்துள்ளனர். வடக்கு, கிழைக்கை பிரித்த பின்னர் பேரினவாதிகளினதும் இனவாதிகளினதும் அத்து மீறல்களும் அடாவடித்தனங்களும் எமது …
-
- 1 reply
- 644 views
-
-
கொழும்பு கிறான்ட்பாசில், தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் வெள்ளை வானில் சென்றவர்களால் கடத்தப்பட்டார் கொழும்பு கிரான்பாஸ் பிரதேசத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் வெள்ளை வானில் சென்றவர்களால் கடத்தப்பட்டதாக உறவினர்கள் காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளார்கள். இன்று காலை எட்டு மணியளவில் தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்து சென்றுவிட்டு வீடு திரும்பிய 45 வயதுடைய பாலகிருஸ்ணன் ஆனந்தன் என்பவர், வெள்ளை வானில் காத்திருந்த குழுவினரால், கடத்திச் செல்லப்பட்டாரென நேரில் கண்டவர்கள் தெரிவித்தார்கள். அவரது வீடுக்கு அருகில் இடம்பெற்ற சம்பவத்தை நேரில் கண்ட உறவினர்கள் சிலர் வெள்ளை வான் குழுவினரை பிடிக்க முற்பட்டபோதும் வான் தப்பி சென்றதென அவர்கள் காவல்துறையிடம் முறையிட்டார்கள். விசாரணைகள் இ…
-
- 0 replies
- 553 views
-
-
http://naathamnews.com/?p=4828 சீனாவினைச் சுற்றிவளைக்கும் நோக்கம் கொண்ட அமெரிக்காவின் ஆசிய-பசுபிக் பிராந்திய பாதுகாப்பு பொறிமுறையின் ஒர் அங்கமாக ஒஸ்திரேலியாவின் வடபகுதி துறைமுகமான டார்வினை அமெரிக்காவின் ஒரு தொகுதி கடற்படையினர் சென்றடைந்துள்ளனர். ஒஸ்திரேலியாவுக்கு அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா கடந்த ஆண்டு மேற்கொண்ட பயணத்தின்போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் வழியே தற்போது அமெரிக்கப் படைகள் ஒஸ்றேலியாவில் கால்பதித்துள்ளனர். 2500 வான்-கடல் சிறப்பு அதிரடிப்படையினர் ஒஸ்றேலியாவில் முகமாமிடவுள்ள நிலையில் இதன் முதற்கட்டமாக 200 போ இன்று ஒஸ்றேலியாவினைச் சென்றடைந்துள்ளனர். ஒஸ்திரேலியாவுக்கான அமெரிக்கத் தூதர் ஜெப்ரி ப்ளீச், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும…
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி ? தமிழ்நாட்டில் மூன்று ரகசிய முகாம்களில் விசேட ஆயுதப் பயிற்சி பெற்ற சுமார் 150 பயங்கரவாதிகள் இலங்கைக்குள் மீனவர்கள் என்ற போர்வையில் ஊடுருவியிருப்பதாகவும், இவர்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பதுங்கியிருப்பதாகவும் , நாட்டை சீர்குலைக்க இவர்கள் திட்டமிட்டிருப்பதாகவும், இலங்கையின் ஆங்கில நாளேடான “ஐலண்ட்” வெளியிட்டிருக்கும் செய்தி ஒன்று கூறுகிறது. இலங்கையின் உளவுத்துறையை மேற்கோள் காட்டும் இந்த பத்திரிகைச் செய்தி, தற்போது நடந்து கொண்டிருக்கும் நல்லிணக்க வழிமுறையைக் குலைப்பதே இந்தப் பயங்கரவாதிகளின் நோக்கம் என்றும், சமீபத்தில் திருகோணமலையில் வெட்டிக்கொல்லப்பட்ட ஈழ மக்கள் ஜனநாயக்கட்சியின் உறுப்பினர் கொலையின் பின்ன…
-
- 0 replies
- 644 views
-
-
http://naathamnews.com/?p=4820 (செய்தி ஆய்வு) 2009ம் ஆண்டு மே17ல், தமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த தமிழீழ விடுதலைப் புலிகள், ஈழவிடுதலைப் போராட்டம் இனி சனநாயக வழிமுறைப் பொறிமுறையூடாக முன்னெடுக்கப்படுமென தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆயுதபயிற்சி பெற்ற விடுதலைப் புலிகள், மீண்டும் சிறிலங்காவில் களமிறங்கியுள்ளனர் என சிங்கள தேசத்தினால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள செய்தி, இந்திய-சிறிலங்கா முறுகல் நிலையை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் நாட்டின் மூன்று முகாம்களில் பயிற்ச்சியளிக்கப்பட்ட 150 வரையிலான போராளிகளை, இந்தியா சிறிலங்காவில் களமிறக்கியுள்ளதாக, சிங்கள தரப்பினால் தீவீரமாக பரப்பபட்ட செய்தியானது, தென்னிலங்கை ஊடகங்களையும் தாண்டி,…
-
- 1 reply
- 893 views
-
-
By naatham On 4 Apr, 2012 At 09:22 AM | Categorized As முதன்மைச்செய்திகள் | With 0 Comments http://naathamnews.com/?p=4814 இலங்கைத்தீவினை நோக்கி சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்க சிறிலங்கா அரசாங்கம் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் தமிழின அழிப்பை மூடிமறைத்தவாறு சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்க சிறிலங்கா முயலுகின்றதென குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. The Sri Lanka Campaign for Peace and Justice எனும் அமைப்பின் பிரதிநிதி Edward Mortimer அவர்கள் Finacial Timesஊடகத்தில் வரைந்துள்ள கட்டுரையில் இக்குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். போரினால் அழிந்த அழகி என தலைப்பிட்டு தனது பதிவினைச் செய்துள்ள அவர்கள் , ஒத்துழையாதவர்களையும், ஊடகவியலாரையும் துன்ப…
-
- 0 replies
- 514 views
-
-
கொலைவெறி சோனியாவைத் தேவதையாக்கும் சதி. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிங்களப் படைகளுக்கு மிடையில் போர் நடக்கும் போது சில சமயங்களில் சிங்களப்படையினரின் கை ஓங்கும். அத் தருணத்தில் விடுதலைப் புலிகள் பின் வாங்கிக் கொண்டே சிங்களப் படையினர் மீது தாக்குதல்கள் நடாத்துவர். அத்தாக்குதல்கள் சிங்களப் படையினருக்கு பலத்த ஆளணி இழப்புக்களை ஏற்படுத்துவதே முக்கிய நோக்கம் கொண்டதாக இருக்கும். அந்த ஆளணி இழப்புக்கள் ஒரு கட்டத்தில் படைச் சம நிலையை புலிகளுக்குச் சாதக மாக்கும். பின்னர் விடுதலைப் புலிகள் ஊடறுப்புத் தாக்குதல்கள், பக்காவாட்டுத்தாக்குதல்கள் பின்னால் இருந்து தாக்குதல்கள் போன்ற பல உத்திகளை கையாண்டு ஏற்கனவே இழந்த நிலப்பரப்பிலும் அதிக நிலப்பரப்பையும் சி…
-
- 3 replies
- 996 views
-
-
காணாமல்போனோருக்கு மரணசான்றிதழ் வழங்கும் அரசின் திட்டம் வடக்கில் புறக்கணிப்பு காணாமல்போனோர்களை இறந்தவர்கள் என்று கருதி அவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கும் அரசின் திட்டத்தை வடக்கு மக்கள் புறக்கணித்துள்ளனர். வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களோ, எண்ணிக்கையோ உத்தியோகபூர்வமாக வெளியிடப்படாத நிலையில், அவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்க அரசு முடிவெடுத்திருந்தது. இந்நிலையில் காணாமல் போன தமது பிள்ளைகளை மரணித்தவர்கள் எனக் கூறி மரணச்சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கு வடக்கில் வாழும் தமிழ் மக்கள் முன்வரவில்லை. காணமல்போன தமது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தலைவர்கள் திரும்புவரென்ற நம்பிக்கையுடன் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அதேவேளை, தமது உறவுகள் …
-
- 0 replies
- 308 views
-
-
புலிகளின் ஊடுருவல் செய்தி ஊடகப் பயங்கரவாதம் பாரீர் தமிழ் நாட்டில் பயிற்சி பெற்ற சுமார் 150 விடுதலைப் புலி உறுப்பினர்கள் இலங்கைக்குள் ஊடுருவி விட்டதாக தென் பகுதி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு எறியில் இரண்டு மாங்காய்கள் என்ற பழமொழி உண்டல்லவா? அது போல ஒரு செய்தியில் இரு இலக்கை அடைதல் என்ற வகையில் தென்பகுதி ஊடகம் ஒன்று, தமிழ் நாட்டில் பயி ற்சிபெற்ற 150 விடுதலைப் புலி உறுப்பினர்கள் இலங்கைக்குள் நுழைந்து விட்டதாகச் செய்தி பரப்பியுள்ளது. இலங் கைக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் அரசு பகீரத முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், விடுதலைப் புலிகள் இலங்கைக்குள் ஊடுருவி இருப்பதான செய்தி, வடக்குக் கிழக்கி லிருந்து இராணுவக் குறைப…
-
- 0 replies
- 483 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் அமுல்படுத்தப்படும் : சஜின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக அமைச்சர்கள் முரண்பாடான கருத்துகளை தெரிவிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தும் நிலையில், இந்த ஆணைக்குழுவின் சிபாரிசுகள் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நேற்று உறுதியளித்தது. இவ்வாணைக்குழுவின் சிபாரிகள் அமுல்படுத்தப்பட மாட்டாது என அரசாங்கம் ஒருபோதும் கூறவில்லை என வெளிவிவகார அமைச்சை கண்காணிப்பதற்குப் பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன கூறினார். ஜெனீவாவில் அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிரான பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்த சஜின் வாஸ் குணவர்தன, இச்சிபாரிசுகளை அமுல்படுத்துவதன் முன்னேற்றத்தை …
-
- 2 replies
- 597 views
-
-
தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு மூன்று முகாம்களில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு பயிற்சி பெற்ற 150 புலிகள் சிறிலங்கா திரும்பியுள்ளதாகவும், சிறிலங்கா அரசபுலனாய்வுச் சேவையை மேற்கோள்காட்டி சிறிலங்கா ஊடகம் வெளியிட்ட செய்தி இந்தியாவுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனிவா தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்ததை மனதில் கொண்டே, இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் நம்புகின்றன. இந்தக் குற்றச்சாட்டு இந்திய அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதேவேளை, தமிழ்நாட்டு அரசியல்கட்சிகளுக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்தி ஆதாரமற்றது என்றும் முற்றிலும் தவறா…
-
- 8 replies
- 1.7k views
-
-
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரொபட் ஓ பிளேக்குக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் உள்ளடக்கங்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி.யான அனுர குமார திசாநாயக்க நேற்று சபையில் அரசாங்கத்தை வலியுறுத்தினார். ஜெனீவாவில் பிரேரணை நிறைவேறியிருப்பதன் மூலம் குறைந்த பட்சம் பொருளாதாரத் தடையைக் கூட விதிக்க முடியாதென அமைச்சர் பேராசியர் பீரீஸ் கூறியிருக்கின்றார். இதன் மூலம் இதுவரை காலமும் அமைச்சர்களால் கூறப்பட்டு வந்த சர்வதேச யுத்த நீதிமன்றம், மற்றும் மின்சாரக் கதிரை ஆகிய அனைத்துக் கதைகளும் பொய்த்து விட்டதாகவும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஜெனீவா பிரே…
-
- 0 replies
- 564 views
-