ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143373 topics in this forum
-
யாழ். குடா நாட்டிற்கு விஜயம் செய்த பிரித்தானியா பாரளுமன்ற உறுப்பினர் நெஸ்பி பிரபு, இன்று யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமாரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் அரச அதிபரைச் சந்தித்து, யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டங்கள் பற்றி பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர் நெஸ்பி பிரபு கலந்துரையாடியுள்ளார். thx http://newjaffna.com யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டங்கள் பற்றியும் முக்கியமாக, மீள்குடியேற்றம், அபிருத்தி, சுகாதாரம், மிதிவெடியகற்றல் போன்ற விடயங்கள் பற்றி பிரித்தானிய பாராளுமன்ற கேட்டறிந்துள்ளார். மேலும், யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டங்கள் பற்றிய விபரங்களை, மாதாந்தம் பிரி…
-
- 0 replies
- 452 views
-
-
குடாநாட்டு அபிவிருத்தியில் முக்கிய கவனமெடுத்துப் பாடுபடும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் அவர்களை மிக முக்கிய நேரத்தில் யாழ் மின்சாரசபை பழிவாங்கியுள்ளது. பொதுவாகவே குடாநாட்டு மக்கள் முற்பிறவியில் மின்சாரசபைக்குச் செய்த பாவம் காரணமாக தற்போது அந்தச் சபை மக்களை பழி தீர்க்கின்றது. thx http://newjaffna.com இந் நிலையில் அது அரசாங்க அதிபரைக் காட்டிலும் கூடிய 'பவர்' தம்மிடம் இருப்பதைக் காட்டுவதற்காக கச்சேரியின் 'பவரை' கட் பண்ணியது. பிருத்தானிய பாராளுமன்ற உறுப்பினர் நேற்று செயலகத்திற்கு வந்திருந்த போது யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி பற்றி திறம்பட சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த யாழ் அரசாங்க அதிபரின் வாய்க்குள் மண் அள்ளிப் போட்டது யாழ் மின்சாரசபை. …
-
- 0 replies
- 990 views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் - சறாட்டிகுளம் கிராமத்தில், ஆண் துணையில்லாத வீடுகளில் இராணுவத்தினரின் தொல்லை அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள பிரதேச மக்கள் நேற்றிரவும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். பாண்டியன்குளம், நெட்டாங்கண்டல் பிரதேசங்களிலிருந்து 6 கிலோமீற்றர் காட்டுப் பகுதிக்கு அப்பாலுள்ள இந்தக் கிராமத்தில், சுமார் 70 குடும்பங்கள் வரை மீள்குடியேறி வாழ்ந்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் மற்றும் வெளித்தொடர்புகள் அதிகமில்லாத இந்தக் கிராமத்தில், அண்மைக்காலமாக இவ்வாறான சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுகின்றது. நேற்றிரவும் இக்கிராமத்திலுள்ள இளம் விதவைப் பெண்ணொருவரின் குடிசைக்குள் சீருடையுடன் சிப்பாயொருவர் புகுந்துள்ளார். இதனை…
-
- 1 reply
- 777 views
-
-
அமெரிக்காவில் இலங்கை ஜனாதிபதி மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு எதிராக மேன்முறையீட்டு மனுவொன்றைச் சமர்ப்பித்துள்ளதாக வாதிகளின் தரப்பு வழக்கறிஞர் புறூஸ் ஃபெய்ன் (Bruce Fein) தெரிவித்தார். அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் முன்பு வழக்கமாக இடம்பெறும் ஆரம்ப விசாரணைக்குப் பதிலாக, நீதிபதிகள் அனைவரையும் கொண்ட குழுவின் முன்பாக விசாரணை இடம்பெறவேண்டுமென கோரவுள்ளதாக பேராசிரியர் புறூஸ் ஃபெய்ன் தெரிவித்தார். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவையென்றபோதிலும், இலங்கை …
-
- 2 replies
- 787 views
-
-
சாத்தியமான தீர்வுத் திட்டத்தை ஐ.நாவிடம் சமர்ப்பிக்க வேண்டும் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-04-03 09:49:26| யாழ்ப்பாணம்] இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வுத் திட்ட வரைவு அரசிடம் மட்டுமல்ல; தமிழ்த் தரப்புகளிடமும் இல்லை என்பது ஆச்சரியமான உண்மை. காலத்திற்குக் காலம் தீர்வுத் திட்டங்கள் முன் வைக்கப்பட்ட போதிலும் அவை அரங்கேறவில்லை. 1987ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை அடிப்படை யாகக் கொண்ட தீர்வுத்திட்டம் முதல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தயாரித்த தீர்வுத்திட்டம் மற்றும் இலங்கை அரசுடன் விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை நடத்திய காலத்தில் விடுத லைப்புலிகளால் முன்மொழியப்பட்ட திட்டம் வரை…
-
- 4 replies
- 1.2k views
-
-
உருசியா: நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகள் நிறைவேற்றப்படல் வேண்டும் ஐ.நா. தீர்மானத்தில் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்திருந்த உருசியா நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகள் நிறைவேற்றப்படல் வேண்டும் எனக்கூறியுள்ளது. இவ்வாறு இலங்கைக்காகன உருசிய தூதுவர் கூறினார். இது ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இல்லை என்றாலும் ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்றி நாட்டில் சுமுகமான அரசியல் தீர்மானத்தை இனப்பிரச்சனையில் எட்டவேண்டும் எனக்கேட்டுள்ளார். Russia wants LLRC report implemented Russia, which voted against the US Resolution on ‘Accountability and Reconciliation in Sri Lanka’ at the UNHRC recently, said that the Mahinda Rajap…
-
- 6 replies
- 1k views
-
-
நேசக்கரம் மார்ச்மாதம் 2012 கணக்கறிக்கை. ஒரு மில்லியன் உதவிகள் போரால் பாதிக்கப்பட்ட தாயக மக்களுக்கு புலம்பெயர் தமிழர்களால் வழங்கப்பட்டுள்ளது. உதவிய அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள். பங்குனிமாதம் 2012 கணக்கறிக்கை. கணக்கறிக்கையினை PDF Fileவடிவில் இணைத்துள்ளோம். இணைப்பில் அழுத்தி கணக்கறிக்கையினைப் பாருங்கள்.
-
- 0 replies
- 748 views
-
-
தேசத் துரோகிகளுக்கு வழங்கும் தண்டனையினை கூட்டமைப்பினருக்கு வழங்குங்கள் என இனவாதப் பொக்குடைய அரசின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவுடன் சேர்ந்து நாட்டை காட்டிக்கொடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிராக அரசியலமைப்பின் 157வது பிரிவின் பிரகாரம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் விடயத்தில் இனியும் பொறுத்திருக்காது தேசத்துரோகிகளுக்கு வழங்கும் தண்டனையை வழங்க வேண்டும் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணை நிறைவேறுவதற்கு த.தே.கூ எமது நாட்டைக் காட்டிக் கொடுத்ததுள்ளது இது தேசத்துரோகமான செயற்பாடாகும்.. நாட்டில் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ப…
-
- 2 replies
- 784 views
-
-
இயலாமையினால் அரசாங்கம் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் முழு நிர்வாண கோலத்திலேயே உள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டுக்கும் ஆப்புவைத்துள்ள அரசு, நிவாரணங்களை நம்பியிருந்த மக்களை கஞ்சிக்கும் வழியில்லாமல் ஆக்கிவிட்டது என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. சாதாரண மக்கள் பாவிக்கும் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு கூட அரசாங்கம் மோசமான முறையில் வரி அதிகரிப்பை மேற்கொண்டுள்ளது. உண்மையான மக்கள் பிரச்சினைகளை மடி மறைத்து அரசு புதிய வகையான மாயா ஜாலங்களை காலத்துக்கு காலம் நடத்தி வருகின்றது என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. …
-
- 4 replies
- 1.1k views
-
-
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடையாது தப்பிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்யும் நோக்கில் விசேட தேடுதல் வேட்டையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரும், காவல்துறையினரும் கூட்டாக இணைந்து இந்த தேடுதல் வேட்டையை மேற்கொண்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் இந்த தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சரணடையாது தப்பிச் சென்ற விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்து, அவர்களுக்கு உரிய முறையில் புனர்வாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சுமார் 12000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்தனர் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவர்களில் 11500 பேருக்கு புனர்வாழ்வு அளிக்…
-
- 6 replies
- 997 views
-
-
April 2nd, 2012 அன்று வெளியிடப்பட்டது - 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2,3,4 ஆம் திகதிகளில் நேரடி மோதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் திணறிய இலங்கை இராணுவம் கோழைத்தனமாக நச்சு எரிகுண்டுகளை வீசியதில் வீரத்தளபதி பிரிகேடியர் தீபன் அண்ணா மற்றும் பல போராளிகள் வீரகவியமனவர்கள். 2009ம் ஆண்டு போர் உக்கிரமடைந்த நிலையில், ஏப்பிரல் மாதம் அளவில் ஆனந்தபுரத்தில் கடும் சமர் இடம்பெற்றது யாவரும் அறிந்ததே. ஆனந்தபுரத்தில் தேசிய தலைவர் தங்கும் ஒரு இரகசிய இடத்தை இலங்கைப் படையினர் சுற்றிவளைத்து பெட்டியடித்தனர். சுமார் 4,000 விசேட அதிரடிப்படையிர் களமிறக்கப்பட்டு இத் தாக்குதல் வியூகம் வகுக்கப்பட்டது. தம்மைச் சுற்றி பெட்டியடிக்கப்பட்டதை உணர்ந்த புலிகள் அதனை உடைத்து புதுமாத்தளான் பகுதிநோக்கி நகர மு…
-
- 32 replies
- 4.1k views
-
-
இலங்கையின் குற்றங்கள் குறித்த அமெரிக்க அறிக்கை அடுத்த வாரம் ; இறுதி மோதல் தொடர்பில் முக்கிய பல ஆவணங்களும் பகிரங்கமாகும் இலங்கையில் இறுதிநேர மோதலில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிடு வதற்கு அமெரிக்க வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துவருவகிறது. இன்னும் ஒருவாரத்திற்குள் இந்த அறிக்கை வெளிவரும். அறிக்கையைப் பகிரங்கப்படுத்தப்படுவதற்கு முன்னர் அமெரிக்க காங்கிரஸ் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்படுமென அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார். இந்த அறிக்கை மார்ச் மாத முற்பகுதியில் வெளியிடப்படவிருந்தது. அதே காலத்தில் ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மான…
-
- 5 replies
- 1.8k views
-
-
தோழர் சேரனுக்கு, உங்கள் கருத்துடன் முரண்பட நேர்ந்தமைக்கு வருந்துகிறேன். இன்று 0 மட்டத்தில் (ground zero) வீழ்துகிடக்கும் களத்தில் உள்ள எமது மக்களின் விடிவுக்காக புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புகள் சூரியனின்கீழ் அவசியமான சகல ஆட்டங்களையும் ஆடியே ஆகவேண்டும். அது எருமை ஆட்டம் மட்டுமல்ல அதற்க்குக்கீழேபோய் நாய் ஆட்டம் நாரி ஆட்டமாக இருப்பினும் நாம் ஆடியே ஆகவேண்டும் என்பது என்று வலியுறுத்துகிறேன். நீங்கள் எங்களுக்கு பல தெரிவுகள் இருக்கின்றது என்று கருதுகிறீர்களா? நாம் வெறென்ன செய்யலாம். செய்யவேண்டும்? நமக்கு இதைவிட வலுவான மாற்று வழிகள் இருந்தால் மட்டுமே நீங்கள் சொல்வதில் ஏதாவது உண்மை இருக்கலாம். நான் ஒரு சமூக விஞானியோ அறிஞனோ இல்லை. ஆனாலும் நாம் ஒரு இன்மாகத் தப்பிப் பிழ…
-
- 12 replies
- 2.4k views
-
-
ஜெனீவா தீர்மானம் குறித்து அரசாங்கத்துக்கு ஐ.தே.க. எச்சரிக்கை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச சமூகம் மேற்கொண்ட தந்திரரோபாயமானது உலகின் புதிய நாடான தென் சூடானை கடந்த வருடம் உருவாக்குவதற்கு மேற்கொண்ட தந்திரோபாயங்களுக்கு சமமானது என அரசாங்கத்தை பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. எச்சரித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் ஐ.தே.க. உபதலைவரான லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்றுகையில், சிறுபான்மை இனங்களின் உரிமைகளை அரசாங்கம் உறுதிப்படுத்தாவிட்டால், அது நாட்டை பிரிப்பதற்கு வழிவகுக்கும் எனக் கூறினார். பலவந்தமாக காணாமல் போகச் செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணைகளை நடத்துதல், ஜனநாயக அமைப்புகளை பலப்பட…
-
- 1 reply
- 688 views
-
-
இலங்கையின் பல பிரதேசங்களிலும் அனர்த்த காலங்களில் பல்வேறு தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த நோர்வே செஞ்சிலுவை சங்கம் கடந்த 31 ஆம் திகதியுடன் தமது பணிகளை முடித்துக்கொண்டு நாட்டிலிருந்து வெளியேறுகிறது. சுனாமி மற்றும் யுத்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார மற்றும் மீள் கட்டுமாணப் பணிகளில், நோர்வே செஞ்சிலுவைச் சங்கம் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்துள்ளது. சுனாமியால் முற்றாக அழிந்த காத்தான்குடி மாவட்ட வைத்திசாலை நோர்வே செஞ்சிலுவை சங்கத்தின் 670 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. http://www.seithy.co...&language=tamil
-
- 1 reply
- 444 views
-
-
இலங்கையில் காணாமல் போனதாக கூறப்படும் 30 பேர் பற்றிய தகவல்களை வழங்குமாறு அமெரிக்கா கோரியுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் ஊடாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சார்பில் அமெரிக்கத் தூதரகம் இந்தக் கோரிக்iயை முன்வைத்துள்ளது. குறித்த காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலங்கை அரசாங்கம், காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. காணாமல் போன 30 பேர் பற்றிய தகவல்களை அமெரிக்கத் தூதரகம் கோரியுள்ளது. குறித்த பட்டியலில் குறிப்பிடப்பட்ட நபர்கள் பற்றி முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது. காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் காவல்துறையினர் விச…
-
- 4 replies
- 787 views
-
-
அணுசக்தி பாதுகாப்பு தொடர்பில் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுவதற்கான ஆவணமொன்றை இந்தியாவிடம் கையளித்துள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல பிரதேசங்களில் அணு ஆலைகள் காணப்படுவதாகவும் இந்த அணு ஆலைகளின் மூலம் இலங்கையின் மன்னார் மற்றும் வடக்கு பகுதிக்கு பாதிப்பு ஏற்படுவதனை வரையறுக்கும் வகையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கூடன்குளம் அல்லது வேறு இந்திய அணு ஆலைகளில் விபத்து ஏற்படுமாயின் அதன் கதிர்கள் இலங்கையின் மக்கார் மற்றும் வடக்கு பகுதியை தாக்கக்கூடும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கூடன்குளம் அணுமின் நிலையம் மன்னாருக்கு…
-
- 2 replies
- 486 views
-
-
காட்டாறு போல வருகிறது பொருளாதாரப் பேரிடி [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-04-02 15:48:00| யாழ்ப்பாணம்] அத்தியாவசிய உற்பத்தி பொருட்களின் வீழ்ச்சி, ஆடம்பர பொருட்கள் அதீத நிரம்பல், மனித உழைப்பை சோம்பேறி ஆக்கும் நவீன கருவிகளின் படைப்புக்கள் என எல்லாமும் சேர்ந்து எங்கள் வாழ்வை தொலைத்து நிற்கின்றன. இதனிடையே விடுதலைப் புலிகளை தோற் கடிப்பதை மட்டும் மையமாக கொண்டு நாட்டின் முழுப் பொருளாதாரத்தையும் யுத்தத்திற்கு தாரை வார்த்துவிட்ட பெரும்கொடுமையின் விளைவை நாடு இப்போது சந்திக்க தலைப்பட்டுள்ளது. இவ் வாறாகப் பொருளாதார நெருக்கடி இந்த நாட்டு மக்களின் வயிற்றை மட்டுமல்ல, தொண்டையையும் சேர்த்து இறுக் கப் போகின்றது. இத்தகையதொரு மிக மோசமான நிலையை தென்பகுதி மக்கள் எதிர்கொள்வதும் …
-
- 5 replies
- 1.5k views
-
-
அமெரிக்கா தலைமையிலான நாடுகளால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருந்த போதும், அதனைப் பலவீனப்படுத்துவதில் இந்தியா பெரும் பங்களிப்புச் செய்தது. இதுதொடர்பாக ஜெனிவாவில் நடந்த இரகசியபேரங்கள், சந்திப்புகள், ஆலோசனைகள் தொடர்பாக ஆங்கில ஊடகங்களில் வெளியான - தமிழில் வெளிவராத - தகவல்களின் தொகுப்பு இது. தீர்மான இறுதி வரைபு வெளியாவதற்கு பல நாட்கள் முன்னதாகவே, ஜெனிவாவில் இந்திய - அமெரிக்க இராஜதந்திரிகள் இரகசியமான ஆலோசனைகளில் மூழ்கியிருந்தனர். இதன்போது “ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையத்தின் ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்“ என்ற …
-
- 12 replies
- 1.7k views
-
-
ந்தியாவில் ஆயுத பயிற்சி பெற்றுக்கொண்ட குழுவொன்று இலங்கையில் இயங்கி வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் திருகோணமலை பெரியகுளம் பிரதேசத்தில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் இந்தக் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாகவும் தென் இந்தியாவிலிருந்து வந்த ஆயுதக் குழுவொன்றே இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 17ஆம் திகதி குறித்த ஈ.பி.டி.பி உறுப்பினர் படுகொலை செய்யப்பட்டிருந்தார். சடலம் மீட்கப்பட்ட இடத்தில் “துரோகிகளுக்கு இடமில்லை, மீண்டும் வந்து விட்டோம்” என எழுதப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. படகு மூலம் தென் இந்தியாவிலிருந்து குறித்த தரப்பினர் இலங்கைக்கு சென்றுள்ளனர். இரகசியமா…
-
- 7 replies
- 1.2k views
-
-
ஜெனீவாவிலிருந்தோ அல்லது நியூயோர்க் - வாஷிங்டனிலிருந்தோ எந்த வகையான அழுத்தங்கள் இனிமேல் வந்தாலும் அதை கையாளும் ஆற்றலுடன் தனது அரசாங்கம் இருப்பதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற அரச ஊழியர்களின் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். சர்வதேச ரீதியாக நாட்டின் மதிப்பை உயர்த்துவதற்காக அரச ஊழியர்களும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களும் நல்ல நிர்வாகத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார். நாடு எதிர்நோக்கும் சவால்கள் குறித்து கூறிய அவர், இத்தகைய சவால்கள் புதிதல்ல எனவும் தெரிவித்தார். இந்நாட்டை ஓர் ஒற்றையாட்சி நாடாக்குவதற்கான அர்பணிப்பு பிரகடனப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து, பெரும் அழுத்தங்களை எதிர்கொண…
-
- 0 replies
- 393 views
-
-
எந்த அழுத்தத்தையும் எதிர்கொள்ளத் தயார்: ஜனாதிபதி ஜெனீவாவிலிருந்தோ, நியூயோர்க்கிலிருந்தோ, வாஷிங்டனிலிருந்தோ எந்த அழுத்தம் வந்தாலும் அதை கையாளும் ஆற்றலுடன் தனது அரசாங்கம் உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கூறினார். கொழும்பில் நடைபெற்ற அரச ஊழியர்களின் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். சர்வதேச ரீதியாக நாட்டின் மதிப்பை உயர்த்துவதற்காக அரச ஊழியர்களும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களும் நல்ல நிர்வாகத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார். நாடு எதிர்நோக்கும் சவால்கள் குறித்து கூறிய அவர், இத்தகைய சவால்கள் புதிதல்ல எனவும் தெரிவித்தார். இந்நாட்டை ஓர் ஒற்றையாட்சி நாடாக்குவதற்கான அர்பணிப்பு பிரகடனப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து, ப…
-
- 4 replies
- 854 views
-
-
வரலாற்றுச் சிறப்பு மிக்க மட்டுவில் பன்றித் தலைச்சி அம்மன் ஆலய பங்குனித் திங்கள் காட்சிகள் thx http://newjaffna.com
-
- 0 replies
- 439 views
-
-
உலகின் பிரபல ரைம்ஸ் சஞ்சிகையின் 2012 ஆண்டுக்குரிய, உலகின் சக்திவாய்ந்த நபர்களுக்குரிய வாக்கெடுப்பு தேர்வுப் பட்டியலில், ஐ.நா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் இம்முறை இடம்பிடித்துள்ளார். 71 அகவையுடைய தென்னாபிரிகத் தமிழரான நவி பிள்ளை அவர்களுக்கான விபரக் கொத்தில் , திறமையான சட்டவாளர் என குறிப்பிட்டுள்ள ரைமஸ் சஞ்சிகை, நீண்டகாலமாக சமூக மட்டத்தில் பல்வேறு பணிகளை ஆற்றியவர் என குறிப்பிட்டுள்ளது. சிரியா மற்றும் சிறிலங்காவில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பில் கவனத்தினை ஏற்படுத்தியவர் நவி பிள்ளை என குறிப்பிட்டுள்ள ரைம்ஸ்,1999 முதல் 2003ம் ஆண்டு வரையினாக காலப்பகுதியில், றுவாண்டா படுகொலைகளுக்கான போர் குற்றச விசாரணனையினை மேற்கொண்ட சர்வதேச குற்றவியல் நீதி…
-
- 0 replies
- 463 views
-
-
உலகின் பிரபல ரைம்ஸ் சஞ்சிகையின் 2012 ஆண்டுக்குரிய, உலகின் சக்திவாய்ந்த நபர்களுக்குரிய வாக்கெடுப்பு தேர்வுப் பட்டியலில், ஐ.நா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் இம்முறை இடம்பிடித்துள்ளார். 71 அகவையுடைய தென்னாபிரிகத் தமிழரான நவி பிள்ளை அவர்களுக்கான விபரக் கொத்தில் , திறமையான சட்டவாளர் என குறிப்பிட்டுள்ள ரைமஸ் சஞ்சிகை, நீண்டகாலமாக சமூக மட்டத்தில் பல்வேறு பணிகளை ஆற்றியவர் என குறிப்பிட்டுள்ளது. சிரியா மற்றும் சிறிலங்காவில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பில் கவனத்தினை ஏற்படுத்தியவர் நவி பிள்ளை என குறிப்பிட்டுள்ள ரைம்ஸ்,1999 முதல் 2003ம் ஆண்டு வரையினாக காலப்பகுதியில், றுவாண்டா படுகொலைகளுக்கான போர் குற்றச விசாரணனையினை மேற்கொண்ட சர்வதேச குற…
-
- 9 replies
- 1.2k views
-