Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. http://naathamnews.com/?p=4327 அமெரிக்காவினால் ஐ.நா மனித உரிமைச் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேணைக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்ற குரல், தமிழகமெங்கும் ஒங்கி ஒலித்து வந்த நிலையில், தற்போது இந்திய மைய அரசியல் வட்டத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்திய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மட்டுமல்ல, இந்திய மைய ஊடகங்களிலும் சிறிலங்கா விவகாரம் முக்கிய விவகாரமாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சியான NDTVயில்ஐ.நா மனித உரிமைச் சபையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதனை மையமாக கொண்டு காரசாரமான விவாதமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. இந்தியப் பிரதமர் அலுவலகத்தினைச் சேர்ந்த துணை அமைச்சர் நாராயணசாமி, ஜனதாக்கட்சி தலைவர் தலைவர் சுப்பிரமணியம்சுவாமி, இந்திய கொம்யூனிஸற் கட…

    • 2 replies
    • 1k views
  2. இலங்கைக்கெதிரான தீர்மானம் தோற்கடிக்கப்பட வேண்டும் - சுப்ரமணியஸ்வாமி, பார்த்தசாரதி இந்தியத் தேசியத் தொலைக்காட்சியான என்.டி.டி.வி யில் நடந்த விவாதமொன்றில் பங்குபற்றிய சுப்ரமணியஸ்வாமி, பார்த்தாசாரதி என்கிற பிராமண நாய்கள் இலங்கையில் போர்க்குற்றம் நடக்கவேயில்லை, புலிகள்தான் மக்களைக் கொன்றார்கள். பபிரஆகரனின் மகனைக் கூட மனிதக் கேட்யமாகப் புலிகள் பாவித்தனர், அதனால்த்தான் அவர் புலிகளின் துப்பாக்கிச் சூட்டில் இறந்திருக்கிறார். இந்த ஒளிப்படம் எல்லாம் இங்கிலாந்தின் ஏதோ ஒரு நிறுவனத்தால் எடுக்கப்பட்ட சோடிக்கப்பட்ட படம். ஆயிரக்கணக்கில் கொல்லப்படவேயில்லை. இலங்கை தமிழரைக் காக்கவே போர் நடத்தியது, அதில் யாரும் கொல்லப்படவில்லை. உண்மையில் சொல்லப்போனால் இந்தியாவின் போரை இலங்கை நடத்தியதால்…

    • 1 reply
    • 1.3k views
  3. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் குரலை சர்வதேசத்தில் நசுக்க வேண்டும் என்று கோரி தென்னிலங்கை அரசியல்வாதிகள் பலரும் போதி பூசை வழிபாடுகளை ஒழுங்கு பண்ணி நடத்தி வருகின்றார்கள். கண்டியில் உள்ள விகாரைகளிலும் இவ்வழிபாடுகளில் சில இடம்பெற்று இருக்கின்றன. அமெரிக்க கொடி, புலிச் சின்னம் ஆகியவற்றுடன் பன்னர்களை வெளியிட்டு வீதிகளில் தொங்க விட்டு இருக்கின்றனர் பல அரசியல்வாதிகள். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த டிலும் அமுனுகம எம்.பியால் ஒழுங்கு பண்ணப்பட்ட போதி வழிபாடு குறித்த பன்னர் ஒன்று பேராதனையில் உள்ள வீதி ஒன்றில் தொங்குவதை படத்தில் காண்கின்றீர்கள். http://www.manithan.com/view-2012031116806.html

    • 1 reply
    • 979 views
  4. http://naathamnews.com/?p=4321 சிறிலங்காவின் போர் குற்றங்களின் சாட்சியாக விளங்கியவரும், சிரியாவில் படுகொலை செய்யப்பட்டவருமான, ஊடகப்போராளி மரி கொல்வின் அவர்களின் இறுதிவணக்க நிகழ்வில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தினார். இது தொடர்பில் நா.த.அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.. http://youtu.be/PuaORvTTYqo ஊடகர் மரி கொல்வின்னின் இறுதிவணக்க நிகழ்வு, நேற்று திங்கட்கிழமை (12-03-2012) அமெரிக்காவின் நியூ யோர்கில் இடம்பெற்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கலந்து அம்மையாருக்கு மரியாதை செலுத்தினார். மரி கொல்வின் …

  5. இலங்கையில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக கருணாநிதிக்கு மன்மோகன் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கையில் இறுதிகட்ட யுத்தத்தின் போது மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பாக இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக் குழு விசாரணை நடத்தி பரிந்துரைகளை வழங்கியுள்ளது. நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இலங்கையில் தமிழர்கள் சுயமரியாதையுடன் சமத்துவடன் வாழ வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான ப…

    • 3 replies
    • 624 views
  6. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இருப்பிடம் குறித்து விசாரித்துத் தெரிந்து கொண்ட பின்னரே அவரது மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் கொடூரமாகக் கொலை செய்துள்ளது. இந்தத் தகவலை இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த ஒரு உயர் அதிகாரியே தெரிவித்துள்ளதாக சேனல் 4 நிறுவனத்தின் கேலம் மெக்காரே தெரிவித்துள்ளார். இலங்கையின் போர்க்களம் என்ற பெயரிலான ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டு இலங்கையின் இனவெறிப் படுகொலையின் பயங்கர முகத்தை உலக சமுதாயத்திற்கு அம்பலப்படுத்தியவர். தற்போது 2வது ஆவணப்படமும் தயாராகியுள்ளது. இதில் பிரபாகரனின் இளைய மகனான 12 வயதான பாலச்சந்திரனை கொடூரமாகக் கொலை செய்த காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோ நாளை வெளியாகிறது. இந்த நிலையில் கொலை செய்வற்கு முன்பு பாலச்சந்த…

    • 2 replies
    • 1.6k views
  7. சிறீலங்கா படையினரினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் திட்டமிட்ட முறையில் மறைக்கப்பட்டும் சாட்சியங்கள் அழிக்கப்பட்டும் வரும் நிலையில் சனல்4 ஊடகங்கள் அதனை ஆதாரபூர்வமாக வெளியுலகுக் காட்சிப்படுத்தி அதிர்ச்சியளித்தது. 'சிறீலங்காவின் கொலைக்களம்' எனும் ஆவணப்படத்தில் பல போர்க்குற்ற குற்ற ஆதாரங்களை வெளிப்படுத்தி சிறீலங்கா அரசிற்கு மேற்குலக நாடுகளினால் பெரும் அழுத்தத்தினை கொடுக்க உதவியாக அமைந்தது. இதனை தொடர்ந்து கொலைக்களத்தின் தொடர்ச்சியாக 'தண்டிக்கப்படாத போர்க்குற்றம்' என்ற இரண்டாவது ஆவணப்படத்தினை வெளியிட தீர்மானித்துள்ளது சனல்4 தொலைக்காட்சி. இக்காணொளியில் என்னென்ன விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதை அதன் தயாரிப்பாளர் Callum Macrae, ‘தி இன்டிபென்டென்ட்' நாளேட்டு…

  8. தேசிய பாதுகாப்பு தொடர்பான குறுஞ்செய்திகளுக்கு முன் அனுமதி பெற வேண்டும் தொலைபேசி குறுஞ்செய்தி ஊடக தேசிய பாதுகாப்பு, பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸார் தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் அனுமதி பெறப்பட வேண்டும் என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்துள்ளார். இவ்விதி உடனடியாக அமுலுக்கு வருவதாக ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதமொன்றில் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு, பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸார் தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும் என உங்களுக்கு அறிவிக்குமாறு நான் பணிக்கப்பட்டுள்ளேன் அக்கடிதத்தில் …

  9. இலங்கையின் கொலைக்களங்கள்’ என்ற தலைப்பில் சனல் 4 புதிய நாடாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரனின் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இக்குரூரச்சம்பவமான படுகொலையை இலங்கை இராணுவமா செய்தது? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. இந்து ஆங்கில நாளிதழ். இந்தப்புதிய நாடா, இதில் இடம்பெறும் இக்கோரப் படுகொலை ஆகியவை குறித்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சாளரும், சர்வதேச ஊடக ஆலோசகருமான பந்துல ஜயசேகரவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர் தாம் புதிய நாடாவைப் பார்க்கவில்லை எனப் பதிலளித்துள்ளார் என்றும் மேற்படி நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக இந்து இதழில் வெளியான செய்தி வருமாறு: 2009 மே 18 ஆம் திகதி இடம்பெற்ற இரத்தக்…

    • 1 reply
    • 930 views
  10. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரனின் மார்பில் படையினர் ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இது தொடர்பான ஆணித்தரமான ஆதாரம் தற்போது வெளியாகவுள்ள நிலையில் அப்படியெல்லாம் கொல்லவில்லை என்று இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் காரியவசம் கூறியுள்ளார். ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் வரலாறு காணாத கொடூரக் கொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் அந்த நாட்டின் இனவெறி இராணுவம் அரங்கேற்றியது. இது தொடர்பான ஆதாரங்கள் பல வெளியாகி விட்டன. இந்த நிலையில் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை கொடூரமாக கொலை செய்தது தொடர்பான ஆதாரத்தை சனல் 4 டிவி நிறுவனம் நாளை வெளியிடவுள்ளது. அதில் பாலச்சந்திரனை மிக நெருக்கத…

  11. நேற்று மாலை சனல் 4 தொலைக்காட்சியின் 'இலங்கையின் கொலைக்களம்' ஆவணப்படத்தின் தொடர்ச்சியாகத் 'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' என்ற ஆவணத் திரைப்படம் மண்டபம் நிறைந்த பார்வையாளரோடு சர்வதேச மனித உரிமைகள் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்டது. இலங்கையின் கொலைக்களம்' திரைப்படத்தின் பயங்கரத்தை இவ்வுலகு கண்டதன் பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்றாவது நீதி கிடைக்குமா என்ற கேள்வி மட்டுமே மனதைக் குடைந்தது. 'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' இந்தப் பயங்கரங்களுக்குக் காரணமானவர்களை அடையாளங் காணவும் ஏன் இலங்கையில் போர்க் குற்றங்கள் தண்டிக்கப்படாத நிலை தொடர்கிறது என்பதற்கான விடைகாணவும் முயன்றுள்ளது. நான்கு கற்கைகளை அராய்வதன் மூலம் இவ் ஆவணத் திரைப்படமானது இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ரா…

  12. ஜெனிவா பிரேரணை நிறைவேறினால் தூதரகங்களின் முன் முற்றுகைப் போர் இலங்கைக்கு எதிரான ஜெனிவா பிரேரணை நிறைவேற்றப்பட்டால் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளுக்கு எதிராக கடும் முற்றுகைப் போராட்டங்கள் உள்நாட்டிலுள்ள அந்த நாடுகளின் தூதரகங்கள் முன்னால் மேற்கொள்ளப்படும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்நாட்டு விசாரணை பொறிமுறையினை கண்காணிக்க சர்வதேச குழுவினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று ஜாதிக ஹெல உறுமய அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி மற்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்பன வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் பொதுச் செயலாளருமான வசந்த பண்டார கூறுக…

    • 0 replies
    • 539 views
  13. கொழும்பு வருகிறார் அமெ. இராஜதந்திரி; ஜனாதிபதி மற்றும் தமிழ்க் கூட்டமைப்பினரைச் சந்திப்பார் இலங்கைக்கு எதிரான பிரேரணையொன்றை நிறைவேற்றுவதில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் ஜெனிவா அமர்வில் அமெரிக்காவின் கை ஓங்கியிருக்கும் நிலையில், அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட இராஜதந்திரியான அட்டுல் கெஷாப் அவசர பயணமொன்றை மேற்கொண்டு நாளை இலங்கை வருகிறார். அமெரிக்க வெளிவிவகார அமைச்சில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் விவகாரங்களைக் கையாள்வதற்கான அமைச்சின் பணிப்பாளராகக் கடமையாற்றும் கெஷாப், ஜெனிவாவில் தற்போது நடை பெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர் வில் கலந்துகொண்டு அமெரிக்கா சார்பில் முக்கியமான பல விடயங்களையு…

    • 0 replies
    • 498 views
  14. தமிழ் சமூகம் தொடர்பில் தமிழ் சீ.என்.என் மற்றும் நியூயப்ஃனா இணைய ஊடகங்கள் தவறான விம்பங்களை வெளிப்படுத்துகின்றன - சுதந்திர ஊடக்குரல் அமைப்பு யாழ்ப்பாணத் தமிழ் சமூகம் தொடர்பில் தழிம் சீ.என்.என் மற்றும் நியூயப்ஃனா போன்ற இணைய ஊடகங்கள் தவறான விம்பங்களை வெளிப்படுத்துகின்றன: இவை தமது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஊடகவியலாளர்களின் அமைப்பான சுதந்திர ஊடகக் குரல் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்த அறிக்கையின் முழு விவரம் வருமாறு : புலம்பெயர் நாடுகளிலிருந்து தமிழர்களால் இயக்கப்படும் சில தமிழ் இணையத்தளங்களில் தமிழ் சமூகம் தொடர்பாகவும், தமிழர் கலாசாரம், வாழ்வியல், விழுமியங்கள் தொடர்பாகவும் அண்மைக்காலமாக வெளியிடப்பட்டுவரு…

  15. இறுதிக்கட்ட போரின் போது சிறீலங்கா படையினரினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்ற நடவடிக்கைகளை தடுக்கு சர்வதேச நாடுகள் காத்திரமான முயற்சிகளை எடுக்கவில்லை சனல்4 தொலைக்காட்சியின் ஊடகவிலாளர் கல்லம் மக்ரே தெரிவித்துள்ளார். பிபிசி சிங்களசேவைக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிறீலங்காவின் போர்க்குற்றம் தொடர்பில் விக்கிலீக்ஸ் இணையத்தில் வெளியான பல தகவல்கள் இதனை உறுதி செய்துள்ளன. சர்வதேச சட்டங்களுக்கு அமைய பாதிக்கப்படும் பொதுமக்களை பாதுகாக்கும் மேற்குலக நாடுகளுக்கு உண்டு. அந்தக் கடமை நிறைவேற்றப்படவில்லை. அதில் அனைத்துலக சமூகம் தவறிழைத்து விட்டது. சிறிலங்காவில் போர்க்குற்றங்கள் இடம்பெறுவதைத் சர்வதேசம் தடுக்கத் தவறியதற்கு இரண்டு பிரதான…

    • 1 reply
    • 1.4k views
  16. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நேரில் கண்ட சாட்சிகள் எதுவும் கிடையாது என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியா தெரிவித்துள்ளார். குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் இராணுவ நீதிமன்றமொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் வலுவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சில தப்பினர் இலங்கை அரசாங்கத்திற்கும் படையினருக்கும் எதிராக போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டமையை தாங்கிக் கொள்ள முடியாத தரப்பினர் இவ்வாறு குற்றம் சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் படையினர் ஆற்றிய அளப்பரிய சேவை தொட…

  17. அமெரிக்காவின் அடுத்த இலக்கு இந்தியா: சம்பிக்க ரணவக்க காஷ்மீர் விவகாரத்தைக் கொண்ட இந்தியாவானது அமெரிக்காவின் அடுத்த இலக்காக இருக்கலாம் எனவே ஜெனீவாவில் அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா எதிர்க்கும் என மின்சக்தி வலுசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க நேற்று கூறினார். ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தீர்மானம் சமர்ப்பிக்கப்படும்போது இந்தியா புத்திசாலித்தமான தீர்மாமொன்றை மேற்கொண்டு சீனா, ரஷ்யா ஆகியனவற்றுடன் இணைந்திருக்கும் என தான் நம்புவதாக அவர் தெரிவித்தார். இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது செல்வாக்கை நிலைநாட்டும் நோக்கத்தின் ஒரு முயற்சியாகவே இத்தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்துள்ளதாக மேற்குலக சதிகள்; அவற்றை நாடு எதிர்கொள்வது எப்படி…

  18. புலம்பெயர் தமிழர்களை சிலர் இலங்கைக்கு எதிரானவர்கள் என குற்றம் சுமத்தினாலும் அவர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்யவும் தயாராக இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை வழங்கி, புலம்பெயர் தமிழர்களை வெற்றிக் கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பு என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் பல அரசியல் கட்சிகளை இரண்டாக உடைத்துள்ளதுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் உடைக்க முயற்சித்து வருகிறது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அதேவேளை விடுதலைப்புலிகள் பௌத்த ஆலயங்கள் மீது நடத்திய தாக்குதல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெட்கமடைவதாகவும் சம்பந்தன் கூறியுள்ளார். http://www.saritham.com/?p=53667

  19. டெல்லி: ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் தமிழக எம்;பிக்கள் முழக்கமிட்டனர். இதனால் ராஜ்யசபா முடக்கப்பட்டது. இருப்பினும் லோக்சபா தொடர்ந்து செயல்பட்டது. மக்களவை இன்றுகாலை கூடியதும் தமிழக எம்;பிக்கள் இது தொடர்பாக முழக்கங்களை எழுப்பினர். அப்போது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி எழுந்து பதிலளித்தார். ஆனால் அதை தமிழக எம்.பிக்கள் ஏற்காமல் தொடர்ந்து கோஷமிட்டனர். இருப்பினும் அதை லோக்சபா சபாநாயகர் பொருட்படுத்தவில்லை. தன் பாட்டுக்கு தனது வேலையை அவர் தொடர்ந்தார். மாநிலங்களவை முடக்கம் மாநிலங்களவையில் இந்த…

    • 0 replies
    • 567 views
  20. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அரசாங்கத்தினால் அதன் பங்காளி கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புறக்கணிப்படுவதாக இவ்விரு கட்சிகளின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்றில் அதிருப்தி வெளியிட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளரான சுசில் பிரமேஜயந்தவிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று திங்கட்கிழமை மாலை பெற்றோலிய வளத்துறை அமைச்சில் இடம்பெற்றுள்ளது. இதன்போதே இந்த அதிருப்தியினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரமேஜயந்தவிடம் வெளியிட்டுள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களினால் முன்வைக்கப்படும…

  21. அமெரிக்கா விரித்துள்ள வலை அச்சத்தில் இலங்கைத் தரப்பு ஆக்கம்: இதயச்சந்திரன் எது நடக்குமென்று நினைத்தோமே அது நடந்துவிட்டது. ஏற்கனவே ஊடகங்களில் கசிந்த அமெரிக்காவின் பிரேரணை, பல திருத்தங்களுடன் கடந்த புதனன்று ஐ.நா. சபை, மனித உரிமை சபையின் 19 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் சொல்லப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் அப்பிரேரணையின் மையப்பொருள். பலரும் எதிர்பார்த்தது போன்று ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை செயற்படுத்துமாறு இப்பிரேரணை கோரவில்லை. ஆகவே, இப்பிரேரணை அரசைப் பொறுத்தவரை சற்று ஆறுதலான விடயமே. ஆனாலும் பரிந்துரைகளை நிறைவேற்றுங்களென்ற, ஆலோசனைபோல் இது அமைந்…

    • 0 replies
    • 1.1k views
  22. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றிக் கொள்வதற்கு அமெரிக்கா தீவிரமாக செயற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில், இலங்கைக்கு ஆதரவான பிரேரணையொன்றை சீனா முன் வைத்து அதை நிறைவேற்றுவதற்காக அவசர மந்திராலோசனைகளை நடத்திவருகிறது என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெனிவாவில் தமக்கு இக்கட்டானதொரு நிலைமை வரப்போகின்றது என்பதை உள்ளூர அறிந்து வைத்துள்ள இலங்கை அரசு, சீனாவிடம் மண்டியிட்டு விடுத்த அவசர வேண்டு கோளையடுத்தே இவ்வாறு இலங்கைக்கு ஆதரவான பிரேரணை ஒன்றை சீனா தாக்கல் செய்வதற்கு ஆலோசித்து வருகின்றது எனவும் அந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது. இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள பிரேரணை எதிர்வரும் 2…

  23. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வுகளில் இன்று, இலங்கைக்கு எதிரான பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு எதிர்வரும் 22 அல்லது 23ம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்தப் பிரேரணை தோற்கடிக்கும் முயற்சிகளில் இலங்கை இராஜதந்திரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். மேலும், இலங்கைக்கெதிரான பிரேரணை விவாதத்திற்கு 47 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவொன்று இந்த சவாலை முறியடிக்கும் முயற்சிகளில் ஈடுபட உள்ளதாக சிங்கள பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 22 நாடுகள் இலங்கைக்கு எதிரான பிரே…

  24. அரசாங்கத்தினால் முஸ்லிம் காங்கிரஸ் புறக்கணிக்கப்படுவதாக முறைப்பாடு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அரசாங்கத்தினால் அதன் பங்காளி கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புறக்கணிப்படுவதாக இவ்விரு கட்சிகளின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்றில் அதிருப்தி வெளியிட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளரான சுசில் பிரமேஜயந்தவிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று திங்கட்கிழமை மாலை பெற்றோலிய வளத்துறை அமைச்சில் இடம்பெற்றுள்ளது. இதன்போதே இந்த அதிருப்தியினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் பெற்றோலிய வளத்துறை அமைச்ச…

  25. சிறீலங்கா இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என நாம் எமது அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயத்தை கற்றுக்கொண்ட பாடங்களுக்கான ஆணைக்குழுவானது புலிகளின் எறிகணையில் அல்லது துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டதாக பதிலளித்துள்ளதாக ஐ.நா அறிக்கையை தயாரித்த தருஸ்மன் குற்றஞ் சாட்டியுள்ளார். இது தொடர்பில் தருஸ்மன் மேலும் தெரிவித்திருப்பதாவது, இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட யுத்த கால மீறல்கள் தொடர்பான உண்மைகளை நாம் கண்டறிந்து அறிக்கையாக தயாரித்தோம். எமது விசாரணையின் முடிவில், இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் பங்கு கொண்ட இரு தரப்புக்களும் சட்ட விதிமுறைகளை திட்டமிட்ட வகையில் மீறி நடந்து கொண்டதற்கான நம்பகமான ஆதாரங்களையும், சாட்சியங்களையும் நாம் கண்டுகொண்டோம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.