Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ரவுடிகளை, நாகரீகம் தெரியா மனிதர்களை தேர்தலில் போட்டியிட வைத்தால் மக்கள் எப்படி வாக்களிப்பார்கள் - டக்ளசை கேட்ட பட்டதாரி தண்ணியடித்துவிட்டு வீதிகளில் கிடக்கும் ரவுடிகளை, நாகரீகம் தெரியாத மனிதர்களை தேர்தலில் போட்டியிட வைத்தால் மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்.” என்று பட்டதாரியொருவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேரில் கேட்டுள்ளார். வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்றையதினம் பெருமாள் கோவிலுக்கருகில் கூடிய பட்டதாரிகள் தமது நியமனம் தொடர்பில் அமைச்சரிடமும், ஆளுநரிடமும் மகஜர் ஒன்றை கையளிப்பதென தீர்மானித்திருந்தனர். இந்நிலையில் அங்கிருந்து ஊர்வலமாக மேற்படி அமைச்சரின் அலுவலகத்திற்குச் சென்…

  2. இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல் விவகாரங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றினூடாக சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று வலியுறுத்தியுள்ளது என பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பிரித்தானிய தமிழர் பேரவையுடன் இணைந்து பிரித்தானியாவின் தமிழர்களுக்கான சர்வகட்சி நாடாளுமன்ற குழுவினால் பிரித்தானிய மக்கள் பிரதிநிதிகள் சபையில் கடந்த செவ்வாய்க்கிழமை கண்காட்சியொன்று ந…

  3. பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப்புலிகள் போல நடந்துகொள்கின்றனர். இவ்வாறு இந்த நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ஷ கூறி வருகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகள் போல நடந்து கொள்கின்றனர் என்று ஜனாதிபதி கூறுவதானது ஒரு திட்டமிட்ட ஒழுங்கில் இரு இன மக்களை ஏமாற்றும் செயல் என்று உணர முடியும். விடுதலைப்புலிகள் தங்கள் அமைப்பை நடத்திய முறை, இலங்கை அரசுடன் வெளிநாடுகளில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது சமபல பராக்கிரமத்துடன் அவர்கள் முன்வைத்த கோரிக் கைகள் தொடர்பில் மக்கள் தெளிவான தகவலைப் பெற்றுள்ளனர். சிலவேளைகளில் அரசின் பார்வையில் விடு தலைப்புலிகள் இறுக்கமான போக்கை கொண் டிருந்ததாகத் தென்பட்டிருக்கலாம். ஆனால், தமிழ்த் தேசிய …

  4. மியான்மரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்வாரா மகிந்த ராஜபக்ச? [ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 01:58 GMT ] [ நித்தியபாரதி ] மியான்மார் மீது அமெரிக்காவாலும், மேற்குலக நாடுகளாலும் போடப்பட்டிருந்த பொருளாதாரத் தடையை, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி சீனா தனது நலனை மேம்படுத்துகின்றதே தவிர, இந்நாடுகளால் போடப்பட்ட பொருளாதாரத் தடையை நீக்குவதில் அது ஒருபோதும் உதவப்போவதில்லை என்பதை மியான்மாரின் ஜெனரல் நன்கு உணர்ந்து கொண்டார். இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் Ceylon today நாளேட்டில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள பத்தியில் கூறியுள்ளார். இந்தப் பத்தியை ‘புதினப்பலகை‘க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி‘. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச…

  5. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம், மனித உரிமை மீறல் விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு, சர்வதேச குற்றவியல் நீதி மன்றம் ஆகியவற்றினூடாக சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தி இருக்கிறார்கள். பிரித்தானிய தமிழர் பேரவையுடன் இணைந்து பிரித்தானியாவின் தமிழர்களுக்கான சர்வ கட்சி பாராளுமன்ற குழு(APPGT) பிரித்தானிய மக்கள் பிரதிநிதிகள் சபையில் செவ்வாய்க்கிழமை 31.01.2012 மதியம் 12:00 மணியில் இருந்து மாலை 6:00 வரை நடத்திய கண்காட்சியை பார்வையிட்ட பின்னரே அவர்கள் இதனை வலியுறுத்தியுள்ளனர். நிழல் வெளிநாட்டமைச்சர் டக்லஸ் அலெக்ஸாண்டர்(Douglas Alexzander) தென்கிழக்காசிய, தெற்காசிய, மற்ற…

  6. சென்னை, நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் பன்னாட்டு தோல் பொருள் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் இலங்கை நிறுவனம் கலந்துகொள்வதைக் கண்டித்தும், அங்கு ஏற்றப்பட்டுள்ள இலங்கைக் கொடியை அகற்றக்கோரியும், இன்று (2-2-2012) காலை 10 மதியளவில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வன்னிஅரசு தலைமையில் நடைபெ...ற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் உஞ்சை அரசன், பாலசிங்கம், து.கா. பகலவன், புதியவன் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சிறுத்தைகள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு ‘அனுமதியோம்! அனுமதியோம்! இலங்கை நிறுவனத்தை அனுமதியோம்! இனவெறி சிங்களக் கொடி தமிழகத்தில் பறக்க அனுமதியோம்! அனுமதியோம்! ஈழத் தமிழரைக் கொன்று குவித்த இனவெறி இலங்கை நிறுவனத்தை தமிழகத்திற்குள் அன…

  7. அடுத்து வரும் மூன்றாவது வாரத்தில் ஆரம்பமாகப்போகும் ஜெனிவா ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையின் மாநாடு சிங்கள ஆட்சியாளர்களுக்குப் பெரும் சவாலாகவே இருக்கப் போகின்றது. முள்ளிவாய்க்கால் பேரழிவின் மூன்றாவது ஆண்டை எட்டியிருக்கும் நிலையில் கூடவிருக்கும் இந்த மாநாட்டில் சிறிலங்காவை நோக்கிப் பல குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படலாம் என்றே நம்பப்படுகின்றது. இறுதி யுத்த காலத்தில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் குறித்த பொறுப்புக் கூறும் கடப்பாட்டையும், ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வையும் முன்வைத்து சிறிலங்கா ஆட்சியாளர்கள்மீது அழுத்தங்களைப் பிரயோகித்துவரும் அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் இந்த மாநாட்டிலும் மென்மையான போக்குக்களைக் கடைப்பிடிப்…

  8. நேரிடும் - விமல் 13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டத்தைஅரசாங்கம் வழங்கினால் ஆளும் கட்சியிலிருந்து வெளியேற நேரிடும் என ஜே.என்.பி கட்சியின்தலைவரும், வீடமைப்பு அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் இறுதித் தீர்மானத்திற்கு அமைய எதிர்காலஅரசியல் நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது கோரிக்கைகளை நாடு கடந்ததமிழீழ இராச்சியத்தின் பிரதமர் ருத்ரகுமாரினிடம் முன்வைக்க வேண்டுமென அவர்சுட்டிக்காட்டியுள்ளார். காவல்துறை அதிகாரங்களை பகிரக் கூடாது என்பதே தமது கட்சியின்நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltam...IN/article.aspx

  9. இலங்கைக்கு எதிராக செயற்பட இந்தியாவின் ஆதரவைப் பெற முயற்சிக்கும் மேற்குலகம்! ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ள மேற்குலக நாடுகள் அதற்கு இந்தியாவின் ஆதரவைப் பெறும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனிவாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள கூட்டத்தொடரில், அமெரிக்காவின் ஆதரவுடன் கொண்டு வரப்படவுள்ள இந்தத் தீர்மானம் தொடர்பாக, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு கடந்த வெள்ளியன்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் அதிகாரபூர்வமாக தெரியப்படுத்தியிருந்தார். மேலும், இந்தத் தீர்மானத்துக்கு இந்தியாவும் ஆதரவு வழங்குவதாகவும் உயர்மட்ட இராஜதந்திர …

    • 3 replies
    • 763 views
  10. சூசை என்றழைக்கப்படுபவரான தில்லையம்பலம் சிவநேசன் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி மற்றும் கடற்புலிகள் பிரிவின் விசேட தளபதி ஆகிய பதவிகளை வகித்து வந்தார். வடமராட்சியில் உள்ள பொலிகண்டி என்கிற பிரதேசத்தை தன் சொந்த இடமாகக் கொண்டிருந்த இவர்,யுத்தத்தின் இறுதிவரை போரிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் என்கிற இடத்தில் 2009 மே 17 � 18 ல் மரணமடைந்தார். சூசை 1963 ஒக்டோபர் 16ல் பிறந்தவர், இவர் வட இந்தியாவில் பயிற்சி பெற்ற புலிகளின் முதல் தொகுதி ஆட்சேர்ப்பாளர்களில் ஒருவர். கடந்த நூற்றாண்டின் எண்பதுகளில் வடமராட்சி பிரதேசத்தின் எல்.ரீ.ரீ.ஈ யின் தலைவராக கிட்டு என்றழைக்கப்படும் சதாசிவம் கிருஷ்ணகுமாரின் கீழ் பணியாற்றி வந்தார். சூசை 1991…

  11. தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாகவே அழித்துவிட்டோமென பெருமிதம் கொள்ளுகின்ற ஜனாதிபதி மகிந்த, புலிகளை மறப்பதற்கும் மனம் இல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு புலிகளைவிட கடும்போக்காக நடந்துகொள்கிறார்கள் என அடிக்கடி கூறிக் கொள்கிறார் என பா.உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். மட் அமிர்தகழி மெதடிஸ்த முன்பள்ளியின் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் மேலுள்ளவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மரண தண்டனையும் பெற்றுள்ளார்கள் எனவே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கூறுகின்ற ஆயுள் தண்டனையைக் கண்டு நாங்கள் ஒரு போதும் அஞ்சப்போவதில்லை. ஜோசப் பரராசசிங்கம…

  12. குடாநாட்டில் சிவில் சழூகத்தை சந்தித்த இரு அமெரிக்க உயர் அதிகாரிகள் இலங்கை மீதான யுத்த குற்றச்சாட்டுகளை இலங்கைக்கு எதிராக எடுக்கப்போவதில்லை என்று கூறி இருக்கின்றார்கள்.............. சோ இனி அமெரிக்கா வரும் அது வரும் இது வரும் என்று சொன்னாக்கள் றூட்ட மாத்திங்கப்பா............. இனி இலங்கை தமிழரை பொறுத்த வரை இணக்க அரசியல் தான் ஒரே வழி............................... USA pressurises civil society to accept genocide and to live with it [TamilNet, Monday, 30 January 2012, 11:37 GMT] Two officials from the US State Department who met civil society of Jaffna last week categorically told them that the US would not take up war crimes/ human rights issues agai…

  13. 13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான தீர்வு திட்டம்வழங்கப்பட்டால் ஆளும் கட்சியிலிருந்து விலக நேரிடும் - விமல் 13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டத்தைஅரசாங்கம் வழங்கினால் ஆளும் கட்சியிலிருந்து வெளியேற நேரிடும் என ஜே.என்.பி கட்சியின்தலைவரும், வீடமைப்பு அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் இறுதித் தீர்மானத்திற்கு அமைய எதிர்காலஅரசியல் நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது கோரிக்கைகளை நாடு கடந்ததமிழீழ இராச்சியத்தின் பிரதமர் ருத்ரகுமாரினிடம் முன்வைக்க வேண்டுமென அவர்சுட்டிக்காட்டியுள்ளார். காவல்துறை அதிகாரங்களை பகிரக் கூடாது என்பதே தமது கட்சி…

  14. யாழில், பாரிய குண்டிலிருந்து உயிர் தப்பிய ஊழியர்கள்... வலி. வடக்கு காங்கேசன்துறையில் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களால் பாரிய குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. இலங்கையின் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்காக நேற்று புதன்கிழமை மேடை அமைப்பதற்கு மண்வெட்டிய போது நிலத்தின் கீழ் புதையுண்ட நிலையிலேயே இந்தக் குண்டு மீட்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பலாலியிலுள்ள இராணுவ படைத் தலைமையகத்திற்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரின் பொறியியல் பிரிவினர் உடனடியாகக் குறிப்பி;ட்ட இடத்திற்கு விரைந்து குண்டை வெடிக்காத நிலையில் மிகவும் அவதானமாக மீட்டுள்ளனர். பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியம் உயர் பாதுகாப்பு வலயத்தி…

  15. உங்களிடம் யாழ்ப்பாணத்தில் கேட்கப்பட்டதுஒரு கேள்வியல்ல உங்கள் யாழ்ப்பாணத்து கணக்கு வாத்தியார்தானையா எங்களுக்கும் கணக்கு வாத்தியார்…. யாழ். பல்கலைக்கழகத்தில் பேசிய அப்துல்கலாம் அங்கிருந்த மாணவர்களைப் பார்த்து, தன்னிடம் ஐந்து கேள்விகளை கேட்கும்படி கூறியிருந்தார். ஆனால் ஒரேயொரு கேள்வி மட்டும் அவரிடம் கேட்கப்பட்டது. அந்த ஒரு கேள்வி அப்துல்கலாம் உருவாக்கிய அணு குண்டைவிட அதிக சக்தியுள்ளதாக தெரிகிறது. அதேபோல கேட்கப்படாத மற்றைய நான்கு கேள்விகளும் வடக்கில் வீசும் வசந்தத்தை செருப்பால் அடித்துள்ளது. ஐயா இத்தனை ஆண்டுகளாக நீங்கள் ஏன் இங்கு வரவில்லை..? இதுதான் அந்த மாணவனின் கேள்வி. கலாம் சொன்ன பதில்: எல்லாவற்றையும் அவதானித்துக் கொண்டிருக்கிறேன். புயலைக் கடந்தால் …

  16. தர விரும்பாததைப் பற்றி பேசி காலத்தை ஓட்டுகிறது அரசாங்கம்!-மனோ கணேசன். 13 ஆம் திருத்தத்தின் கீழ் இருப்பதைக்கூட தராமல் கடும் போக்கில் இருக்கின்ற இந்த அரசாங்கம், தான் ஒரு போதும் தர விரும்பாத 13 ஆம் திருத்தத்திற்கு அப்பால் என்ற விவாதத்தை ஆரம்பித்து வைத்து காலத்தை ஓட்டுகிறது. கிருஷ்ணாவுடன் தான் 13 ஆம் திருத்தத்திற்கு அப்பால் என்பதற்கு உடன் படவில்லை என்று ஜனாதிபதி இன்று சொல்கிறார். அப்படியானால் இந்திய வெளிவிவகார அமைச்சர் நாடு திரும்பும் முன் சொல்லிச் சென்றது பொய்யா? இன்று மீண்டும் சர்வ கட்சிக் கதையை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்துள்ளார். அப்படியானால் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே திரும்பிப் போக வேண்டுமா? இந்தப் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த அட…

  17. வடமாகாணத்தில் 58 பாடசாலைகளில் தலா ஒரு ஆசிரியரே உள்ளனர். இலங்கையில் ஒரேயொரு ஆசிரியரை மாத்திரம் கொண்டியங்கும் 92 பாடசாலைகள் உள்ளதாகவும் இரு ஆசிரியர்களை மாத்திரம் கொண்டுள்ள 168 பாடசாலைகள் உள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வடமாகாணத்தில் 58 பாடசாலைகளில் தலா ஒரு ஆசிரியரே உள்ளனர். மேல் மாகாணத்தில் இத்தகைய 3 பாடசாலைகள் உள்ளன. மத்திய மாகாணத்தில் 9 பாடசாலைகளிலும் கிழக்கு மாகாணத்தில் 9 பாடசாலைகளிலும் சப்ரகமுவ மாகாணத்தில் 5 பாடசாலைகளிலும் வடமத்திய மாகாணத்தில் 3 பாடசாலைகளிலும் ஊவா மாகாணத்தில் இரு பாடசாலைகளிலும் தென் மாகாணத்தில் ஒரு பாடசாலையிலும் தலா ஒரு ஆசிரியர் மாத்திரம் உள்ளனர். வட மாகாணத்தில் 48 பாடசாலைகளில் தலா இரு ஆசிரியர்கள் மாத்திரம் உள்ளனர். மத்தி…

    • 0 replies
    • 533 views
  18. தேயிலை மாநாடும் தேயிலைத் தொழிலாளர்களும் கொழும்பில் பெப்ரவரி 1 முதல் 3ம் திகதி வரை நடைபெற்றுக்கொண்டிருக்கும் சர்வதேச தேயிலை மாநாட்டில் 25 நாடுகளைச் சேர்ந்த சுமார் 170 பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். ‘உலகிலேயே தலைசிறந்த தேயிலை இலங்கையில் தான் கிடைக்கிறது’ என்பதை நிருபிப்பது தான் இந்த சர்வதேச மாநாட்டின் முக்கிய நோக்கம் என்று கொழும்பு சர்வதேச தேயிலை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் மைக்கல் ஜேடி சொய்சா பிபிசியிடம் கூறினார். பல ரகங்களில் பல சுவைகளில் கிடைக்கும் இலங்கைத் தேயிலைக்கு சர்வதேச சந்தையில் இருக்கும் கிராக்கியை இன்னும் அதிகரிப்பதற்கு இந்த சர்வதேச மாநாடு உதவும் என்று மாநாட்டின் ஏற்பாட்டாளர் மைக்கல் ஜேடி சொய்சா மேலும் தெரிவித்தார். கடந்த ஆண்டு தேய…

  19. மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் கூட்டமைப்பு: அடுத்த மாதம் ஜெனீவா பயணம் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரனிடன் வினவியபோது, மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார். ஆனால் இன்னும் கட்சி கூடி தீர்மானம் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 27ம் திகதி தொடக்கம் மார்ச் 23ம் திகதிவரை ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது. இக்கூட்டத் தொடரில் ப…

  20. அநுராதபுரத்தில் இம் முறை இடம்பெறவுள்ள இலங்கையின் 64வது சுதந்திர கொண்டாட்டத்திற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அநுராதபுரத்திலுள்ள ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி மாவத்தையில் நாளை மறுதினம் 4ம் திகதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் சுதந்திர தினத்திற்கான பிரதான வைபவம் இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு கோலாகல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் புராதன நகரங்களில் ஒன்றான அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள சுதந்திரதின பிரதான நிகழ்வை நேரில் கண்டுகளிக்கவென ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வருகை தரலாமென எதிர்பார்க்கப்படுவதால் பொது மக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு பொலிஸாருடன் முப்ப…

  21. 'ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் படைச்சிப்பாய்க்கும், பெண் போராளிக்கும் திருமணம்! - நல்லிணக்கத்தை ஏற்படுத்த இந்த ஏற்பாடாம்!!' சிறிலங்கா ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் 25வது கஜபா படைப்பிரிவில் பணியாற்றி வரும் படைச்சிப்பாய் ஒருவருக்கும், விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளி ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. கல்கமுவவைச் சேர்ந்த சிறிலங்கா படைச்சிப்பாயான 20 வயதுடைய ஈ.எம்.டி.சந்துருவன் மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளியான 18 வயதுடைய சந்திரசேகரன் சர்மிளா ஆகிய இருவருக்குமே இவ்வாறு கிளிநொச்சியில் நேற்று முன்தினம் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பினதிடம் சரணடைந்…

  22. சிறிலங்காவில் பறவைக்காய்ச்சல் ஆபத்து – பிங்கிரிய பண்ணையில் இருந்த 6000 கோழிகள் அழிப்பு [ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 16:56 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்காவின் தென்பகுதியில் பறவைக்காய்ச்சல் நோயைப் பரப்பலாம் என்ற அச்சத்தில் பண்ணை ஒன்றில் இருந்த 6000 கோழிகள் இன்று அழிக்கப்பட்டுள்ளன. பிங்கிரியவில் உள்ள இந்தப் பண்ணையில் இருந்த கோழிகளுக்கு H5N2 வைரஸ் தொற்றியிருந்தது பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து இன்று அங்கு சென்ற 30 சுகாதார அதிகாரிகள் அங்கிருந்த 6000 கோழிகளையும் அழித்தனர். எனினும் இவை பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் H5N1 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகவில்லை என்று மிருக உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர் த…

  23. 05.02.12 ஹாட் டாபிக் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான தா.பாண்டியன், ஈழத்தமிழர்கள் விஷயமாக பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தபோது, அந்தப் பேச்சுவார்த்தை குறித்து வெளியே சொல்லக்கூடாது என பிரதமர் அலுவலகத்திலேயே சிறை வைக்கப்பட்டதாக ஒரு தகவல் இப்போது வெளிவந்திருக்கிறது! தா.பாண்டியனுக்கு அப்படி என்னதான் பிரதமர் அலுவலகத்தில் நடந்தது என விவரமறிந்த வட்டாரத்தில் விசாரித்தோம்... “இலங்கைப் போர் உச்சத்தில் இருந்த 2009-ம் ஆண்டு மே மாதம், மத்திய அரசை அதில் தலையிட வலியுறுத்தி டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக அனைத்துக் கட்சிக் குழு டெல்லியில் பிரதமரைச் சந்தித்தது. பெயரளவில் அது அனைத்துக் க…

    • 3 replies
    • 1.7k views
  24. ஒரு போதும் தர விரும்பாததை பற்றி பேசி காலத்தை ஓட்டுகிறது அரசாங்கம் - மனோ 13ஆவது திருத்தத்தின் கீழ் இருப்பதைக்கூட தராமல் கடும் போக்கில் இருக்கின்ற இந்த அரசாங்கம், தான் ஒரு போதும் தர விரும்பாத 13ஆம் திருத்தத்திற்கு அப்பால் என்ற விவாதத்தை ஆரம்பித்து வைத்து காலத்தை ஓட்டுகிறதுஎன்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கிருஷ்ணாவுடன் தான் 13ஆம் திருத்ததிற்கு அப்பால் என்பதற்கு உடன்படவில்லை என்று ஜனாதிபதி இன்று சொல்கிறார். அப்படியானால் இந்திய வெளிவிவகார அமைச்சர் நாடு திரும்பும் முன் சொல்லி சென்றது பொய்யா? இன்று மீண்டும் சர்வ கட்சி கதையை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்துள்ளார். அப்படியானால் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே திரும்பிப் போக வேண்டு…

    • 0 replies
    • 641 views
  25. இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்துவதற்காக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச புதுடெல்லி சென்றுள்ளார். இந்தியா � சிறிலங்கா இடையில் ஆண்டுதோறும் நடைபெறும் பாதுகாப்பு கலந்துரையாடல் புதுடெல்லியில் இன்று ஆரம்பமாகிறது. இதில் கடலோரப் பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் இந்த சமுத்திரத்தில் அனைத்துலக ஒத்தழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. இந்தப் பேச்சுக்களில் பங்கேற்க சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான குழுவொன்று புதுடெல்லி சென்றுள்ளது. இவர்கள் இந்தியப் பாதுகாப்புச் செயலர் சசிகாந்த் சர்மா தலைமையிலான குழுவினருடன் பேச்சுக்களை நடத்தவுள்ளனர். சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.