ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
நாங்கள் பெரும்பான்மை இனத்தவரோடு, கட்சியால், மொழியால், கலைகளால் வேறுபட்டவர்கள். இதனால் தான் எமக்கு அதிகாரப்பகிர்வு தேவைப்படுகின்றது. எம்மை நாமே ஆழ்வதற்கான சந்தர்ப்பம் தரப்படவேண்டுமென வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். கரவெட்டி வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் உள்ளூராட்சி வாரவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும் சபைத் தலைவர் பொ.வியாகேசுவின் தலைமையில இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், எமது மக்கள் நலன்சார்ந்து பலவற்றை நாம் நாம் அரசிடம் கேட்கின்றோம். ஆனால் நாம் கேட்பவற்றை வழங்கக் கூடாது என்ற மன நிலையில் பெரும்ப…
-
- 1 reply
- 416 views
-
-
மத்தள விமான நிலைய விவகாரம் : இந்திய கூட்டு முயற்சி யோசனை திட்டத்தில் இலங்கை அதிருப்தி லியோ நிரோஷ தர்ஷன் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவிற்கு இணையாக மத்தள விமான நிலையத்தில் வலுவாக கால் பதித்திட வேண்டும் என்ற எதிர்பார்ப் புடன் இந்தியா முன்வைத்த கூட்டு முயற்சி அபிவிருத்தித்திட்டம் தொடர் பான இந்திய யோசனைத் திட்டத் தில் தேசிய அரசாங்கம் அதிருப்தியு டன் உள்ளது. இந்நிலையில் இந் திய யோசனைத் திட்டத்தில் திருத்தங்க ளைக் கொண்டு வர இலங்கை தீர்மா னித்துள்ளது. இதனடிப்படையில் 40 ஆண்டுகால குத்தகைக் காலம் மற்றும் 70 வீத பங்கிற்கான இந்தியாவின் கோரிக்கையை 40 வீதத்திற்கு குறைத்தல் உள்ளிட்ட வர்த்தக நட…
-
- 2 replies
- 389 views
-
-
(எம்.மனோசித்ரா) 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கையிடம் கோராமல் ஏன் இந்தியாவிடம் கோரியிருக்கின்றோம் என்று பலர் கேள்வியெழுப்பியுள்ளனர். இலங்கை அரசாங்கம் தமிழ் தேசிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்தியா முன்வந்து உதவிக்கரம் நீட்டிய போது, அந்த உதவியை உத்தியோகபூர்வமாக ஏற்றிருக்கிறது. அதன் காரணமாகவே 1987 இல் ஜூலை மாதம் 29 ஆம் திகதி இலங்கை - இந்திய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அது இன்றும் அமுலில் காணப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். ஏவ்வறாயினும் ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தம் புகுத்தப்பட்ட காரணத்தினால் அது ஒரு அர்த்தமுள்ள அதிகார பகிர்வாக கருத முடியாமலிருக்கிறது. அதனை தாண்டி…
-
- 0 replies
- 224 views
-
-
யுத்தம் முடிவடைந்து விட்டதாக சந்தோஷத்தில் ஆழ்ந்த சிங்கள தேசம் இன்று பல முட்டுக்கட்டைகளோடு ஜனாதிபதித் தேர்தல் ஒன்றினை சந்திக்க நேர்ந்திருக்கின்றது. நாட்டு மக்களும் ஆளுந் தரப்பினரும் பொதுத் தேர்தல் ஒன்றினையே எதிர்பார்த்திருந்தனர். ஜனாதிபதிக்கு இன்னும் இரு வருட கால அவகாசம் இருந்தது. இதற்கிடையில் திடீரென தற்போதைய ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடத்துவதற்குத் தீர்மானித்தார். இந்தத் தேர்தல் குறித்து இராஜதந்திர ரீதியில் ஆராய வேண்டிய கட்டாயத்துக்கு தமிழ்த் தலைமைகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். பொதுத்தேர்தல் ஒன்று முன்பதாக நடந்திருந்தால் தமது கட்சி வெற்றி பெற்றிருக்கும் என மஹிந்த ராஜபக்ஷ நன்கு அறிந்திருந்தார். என…
-
- 0 replies
- 494 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத முகவராக செயற்பட்ட நபர் ஒருவரை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக ஆயுதங்களை கடத்த முயற்சித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 51 வயதான பால்ராஜ் நாயுடு என்பவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார். 2010ம் ஆண்டில் பால்ராஜிற்கு அமெரிக்க நீதிமன்றம் தண்டனை விதித்திருந்தது. பால்ராஜிற்கு அமெரிக்க நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் வரையில் தண்டனை விதித்திருந்தது. வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்;டின் அடிப்படையில் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, மேரிலாண்ட்டைச் சேர்ந்த நபர் ஒருவரிடமிருந்து புலிகளுக்காக பால்ராஜ் 900,000 டொலர் பெறுமதியான…
-
- 2 replies
- 725 views
-
-
மகிந்தவுக்கு சிங்கள கிராமப்புறங்களில் ஆதரவுகள் உள்ள போதும் தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதில் அவர் தோல்வியடைந் துள்ளார். விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பொன்சேகா பெற்றுள்ளார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியாகும். மகிந்தவைவிட மோசமானவராக பொன்சேகா இருக்க முடியாது என பலர் உறுதிபட தெரிவித்து வருகின்றனர் என பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த ரைம்ஸ் நாளேடு தனது நேற்றைய பத்தியில் பத்தியில் தெரிவித்துள்ளது. அதன் தமிழ் வடிவம் வருமாறு, நேற்று முன்தினம் (22) அதிகாலை விடியும் போது கொழும்பில் உள்ள டிரான் அலஸ் (49) இன் இல்லத்தின் முன்பாக சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது.இலங்கையின் வரலாற்றில் மி…
-
- 0 replies
- 628 views
-
-
சாவகச்சேரி தனங்கிளப்பு பிரதேசத்தில் யு32 வீதிக்கு அருகிலுள்ள வயலிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று மாலை 5 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. கோவிலாக்கண்டி மேற்கு, தச்சன்தோப்பைச் சேர்ந்த சோமசுந்தரம் குணரத்தினம் (வயது 48) என்பவரே இவ்வாறு வயலிலுள்ள நீரில் தலை மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதவான் செ.கணபதிப்பிள்ளை விசாரணைகளை மேற்கொண்டார். விசாரணையை அடுத்து பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக்காலமாக வடக்கில் தொடரும் மர்மமான மரணங்கள் குறித்து பலத்த சந்தேகங்கள் எழுகின்ற நிலையில் இதுவும் கொலைய…
-
- 0 replies
- 241 views
-
-
‘7 இலட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன’ “நீதியமைச்சின் புள்ளிவிவரத் தகவல்களின் பிரகாரம், 7 இலட்சத்து 95 ஆயிரம் வழக்குகள், தீர்த்துவைக்கப்படாமல், இலங்கையில் உள்ளன” என்று, கொழும்பு பல்கலை க்கழகத்தின் சட்ட பீட சிரேஷ்ட விரிவுரையா ளர் பேராசிரியர் பிரதீபா மஹாநாம தெரிவித்தார். எனினும், தற்போதைய அரசியல் மேடைகளில், விசேட நீதிமன்றம் நிறுவப்பட்டு, கடந்த ஆட்சியின் போது, அரச வளங்களை கொள்ளையடித்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும் என்ற கருத்துகள் மேலோங்கியுள்ளன. கொழும்பு மேல் நீதிமன்றங்கள் ஒவ்வொன்றில் மட்டும், தீர்த்துவைக்கப்படாமல், ஆகக்குறைந்தது 10 வழக்குகள் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அவ்வாறான வழக்குகள் சாதாரண வழக்குகளாகும். …
-
- 0 replies
- 320 views
-
-
Published by T. Saranya on 2022-02-08 16:09:17 கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் -------தீவு, களுதாவளை, களுவாஞ்சிகுடி, ஒந்தாச்சிமடம்உள்ளிட்ட கடற்கரை ஓரங்களில் பல வெளிநாடுகளின் பெயர் பொறிக்கப்பட்ட கழிவுகள் கரை ஒதுங்குவதாக பொதுமக்களும், மீனவர்களும் தெரிவிக்கின்றனர். காலணிகள் வெற்றுப் போத்தல்கள், குளிர்பான போத்தல்கள், மூங்கில்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கடலலையில் அள்ளுண்டு கரையொதுங்குகின்றன. இதனால் சூழலுக்குப் பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும், கடற்கரையை இரசிக்க வருபர்களுக்கும் இக்கழிவுகள் பெரும் தடையாகக் காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கரையொதுங்கும் சில வெற்றுப்போத்தல்களில் மியன்மார் என ஆங்கில மொழியில் எழுதப்பட…
-
- 0 replies
- 180 views
-
-
தென் ஆபிரிக்க விடுதலை போராட்டத்தின் செயற்பாட்டாளர் இலங்கை விஜயம் தென் ஆபிரிக்க விடுதலைப் போராட்டத் தின் செயற்பாட்டாளர், வணபிதா, மைக் கல் லெப்ஸ்லி இலங்கையில் மலையக மக்களுடன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காக அட்டன் பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். நாளை மறுதின--ம் சனிக்கிழமை காலை 10.00 மணிமுதல் பகல் 1.00 மணிவரை 88/2 டன்பார் வீதி, அட்டனில் அமைந்துள்ள CWF மண்டபத்தில் இந் நிகழ்வு இடம்பெறவுள்ளது. மைக்கல் லெப்ஸ்லி நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர். தனது இறைபணியின் மேலதிக கற்கைக்காக தென்னாபிரிக்கா நாட்டுக்கு அனுப்பப்பட்டார். அக் காலத்தில் தென்னாபிரிக்காவில் நிறபேத கொடூரத்…
-
- 0 replies
- 407 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய 1285.50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சபையில் தெரிவித்தார். அத்துடன் இப்போதுள்ள நிலையில் 92 ரக பெட்ரோல் பத்து நாட்களுக்கும், 95 ரக பெட்ரோல் நாற்பது நாட்களுக்கும், டீசல் எட்டு நாட்களுக்கும், சூப்பர் டீசல் எட்டு நாட்களுக்குமே கைவசம் உள்ளது. எனினும் எதிர்காலத்தில் எரிபொருள் கிடைக்கும். மேலும் ஆறு நாட்களுக்கு தேவையான டீசல் இப்போதும் இறக்குமதி செய்யப்படுகின்றது. அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய 1285.50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றது. எனினும் அடுத்த ஆறுமாத காலத்திற்கான த…
-
- 0 replies
- 242 views
-
-
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 16.02.2010 அன்று ஒலிபரப்பாகிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல்.திருமாவளவன் அவர்களின் செவ்வி http://www.yarl.com/articles/node/1008
-
- 0 replies
- 486 views
-
-
கெஹலியவுக்குப் பிணை (புத்திமால் ருபேரு) நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல ஊடகத்துறை அமைச்சராக இருந்தபோது, தனது தனிப்பட்ட தொலைபேசிக்கான மாதாந்த கட்டணத்தை அரச பணத்தில் செலுத்தி, 8 கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பினை ஏற்படுத்தியதாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டில், அவரையும் அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜயம்பதி பண்டாரவையும் பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (11) அனுமதியளித்தது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான் லால் ரணசிங்க, இவர்கள் இருவரையும் தலா 5 இலட்சம் சரீரப் பிணையில் விடுதலை செய்வதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். கெஹலிய ரம்புக்வெல்ல ஊடகத்துறை அமைச்சராக இருந்தபோது அவரது மாதாந்த தனிப்பட்ட தொலைபேச…
-
- 0 replies
- 264 views
-
-
புலிகளின் ஊடுருவல் இல்லாத தமிழ் கூட்டமைப்பை உருவாக்க இந்தியா வியூகம்: தலையாட்டுகிறாரா சம்பந்தர்? . .விடுதலைப்புலிகளோ அந்த அமைப்புக்கு தீவிரமாக ஆதரவளிக்கும் சக்திகளோ பங்காளிகளாக இல்லாத தமிழ் தேசிய கூட்டமைப்பினை சிறிலங்காவின் அரசியலில் உருவாக்கி அந்த கட்சியின் ஊடாக தமிழர் விவகாரத்தில் - விட்டுப்போன - தனது ஆதிக்கத்தை உள்நுழைப்பதற்கு இந்தியாவின் மத்திய அரசு காய்நகர்த்திவருகின்றது என்று கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறிலங்காவில் போருக்கு பின்னரான அரசியல் நிலைவரங்களை ஆழமாக கண்காணித்துவரும் இந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது:- சிறிலங்கா விவகாரத்தில் தனது ஆதிகத்தை நுழைப்பதற்கு தமிழர் விவகாரம் ஒன்றே தற்போதைக்கு இந்தியாவுக்கு மீதமாக…
-
- 1 reply
- 740 views
-
-
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 02.03.2010 அன்று ஒலிபரப்பாகிய யாழ்ப்பாணச் செய்தியாளரின் கருத்தாய்வு http://www.yarl.com/articles/files/100302_jaffna_reporter.mp3
-
- 0 replies
- 648 views
-
-
புதிய அரசமைப்பின் இடைக்கால அறிக்கையை அங்கீகரிக்கவேண்டாம் சபைக்கு வரமுன்னரே சன்னதம் கொள்கிறது விமல் அணி அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டவரைவைக் கைவிடுமாறும், வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை அங்கீகரிக்க வேண்டாம் எனக் கோரியும் விமல்வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி அரச தலைவர் மைத்திரிபாலவுக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளது. பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து சகல ஆள்களையும் பாதுகாக்கும் பன்னாட்டுச் சமவாயச் சட்டவரைவானது படையினரைப் பலிக்கடாவாக்கும் நோக்கிலேயே கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. அ…
-
- 0 replies
- 275 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்காப் படையினருக்கும் இடையில் நடைபெற்ற போரின் சாட்சியங்கள் குறித்து CNN தொலைக்காட்சி அரை மணித்தியால ஆவணப் படமொன்றை தனது ஒளிபரப்புச் சேவையில் காண்பிக்கவுள்ளது. இத்தொலைக்காட்சியின் தயாரிப்பாளரான Sara Sidnerஆல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் எதிர்வரும் 13ஆம் திகதி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு ஒளிபரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மறு ஒளிபரப்பு எதிர்வரும் 14ஆம் திகதி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேவைக்கேற்ப நேர மாற்றம் இடம் பெறலாம் எனவும் CNN அறிவித்துள்ளது.. இலங்கையின் 30 வருட உள்நாட்டுப் போரால் மிகவும் பாதிப்புக்குள்ளான மக்களின் குரலாக இந்த ஆவணப்ப…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஜெனிவா மாநாட்டில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு அமோக ஆதரவைத் திரட்டும் பணியில் ஈடுபட்டு வரும் பிரிட்டன், வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் காணி சுவீகரிப்புக்கு எதிராக சர்வதேச மாநாடு ஒன்றையும் லண்டனில் நடத்தவுள்ளது. பிரிட்டன் சர்வகட்சி நாடாளுமன்றக் குழுவும் பிரிட்டன் தமிழர் பேரவையும் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. எதிர்வரும் வெள்ளிக்கிழமையும் மறுநாள் சனிக்கிழமையும் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளுமாறு சர்வதேச நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூவர் அடங்கிய குழு இன்று லண்டன் ச…
-
- 2 replies
- 434 views
-
-
இந்திய உயர் தூதுவராலயம் கொழும்பு ஊடக அறிக்கை இலங்கை அரசு - தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பேச்சுவார்த்தைகளை இந்தியா வரவேற்கிறது ! 1. இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர், நா.உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவை இன்று சந்தித்தார். 2. இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான மார்ச் 25 சந்திப்புக் குறித்து, த.தே.கூட்டமைப்புப் பிரதிநிதிகள் அமைச்சர் ஜெய்சங்கருக்குப் பேச்சுவார்த்தை குறித்த இறுதி நிலைமைகள் பற்றி விளக்கினர். அரசியல் கைதிகளின் விடுதலை, காணிப் பாவனை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துதல், புலம்பெயர்ந்தோர் முதலீடு உள்ளிட்ட விடயங்க…
-
- 2 replies
- 322 views
-
-
வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு றிசாட் பதியுதீனால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா வீரபுரம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் அரசாங்கத்தை அண்டிப் பிழைக்கும் இந்த அராஜக அமைச்சரின் செயல் குறித்து மக்கள் ஆத்திரமடைந்துள்ளதாக வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் குறித்த பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்டிருந்த தேர்தல் சுவரொட்டிகளுக்கு மேல் றிசாத் பதியுதீனின் சுவரொட்டிகளை ஒட்டியிருக்கின்றனர். அப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இந்தச் செயலுக்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு நின்ற பதி…
-
- 10 replies
- 1.4k views
-
-
பேரறிவாளன் - சாந்தன் - முருகன் தூக்கில் இருந்து மீள்வார்களா? உச்ச நீதிமன்றம் கூறியது என்ன? டில்லி வழக்கறிஞர் பிரபு இராமசுப்ரமணியம் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மூன்று தமிழர் தூக்கு தண்டனையை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இன்றைய விசாரணைக்குப் பின்னர் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. ராஜிவ் வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று தமிழருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் ஜனாதிபதிக்கு கருணை மனுவை அனுப்பி இருந்தனர். ஆனால் இந்த கருணை மனு 11 ஆண்டு கால தாமதத்துக்குப் பின்னர் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து மூவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தி…
-
- 0 replies
- 564 views
-
-
நாடாளுமன்றுக்கு, ஜனாதிபதி இரகசியமாக வரவில்லை – அவர் பதவி விலக மாட்டார்: காஞ்சன இந்த வீர வசனத்தை முடிந்தால் எரிபொருள் வரிசையில் நிற்பவர்களிடம் கூறுங்கள் - எதிர்க்கட்சி! நாடாளுமன்றுக்கு ஜனாதிபதி இரகசியமாக வந்துவிட்டுச் செல்லவில்லை என்றும் மாறாக எதிர்க்கட்சிகளே ஜனாதிபதி வருவதை முன்னிட்டு ஒழிந்தார்கள் என்றும் இராஜாங்க அமைச்சரான காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அத்தோடு, அரசமைப்புக்கு இணங்க ஜனாதிபதி விலக மாட்டார் என்றும் அவர் எதற்காக பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கேள்வியெழுப்பினார். மேலும், ஜனாதிபதியும் பிரதமரும் எதிர்க்கட்சிகளுக்கு சந்தர்…
-
- 3 replies
- 187 views
-
-
இலங்கைக்கு 16 விமானங்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை இலங்கை விமானப்படைக்கு 16 புதிய விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய வகையில், குறித்த விமானங்கள் கொள்வனவு செய்யப்படும் என விமானப்படைப் பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் போர் விமானங்களும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இலங்கைக்கு-16-விமானங்களைக்-கொள்வனவு-செய்ய-நடவடிக்கை/150-205136
-
- 1 reply
- 228 views
-
-
பெருந் தோட்டங்களின்... பல்வேறு பகுதிகளிலும், போராட்டங்கள் முன்னெடுப்பு! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், பொருட்களின் தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் இன்று (புதன்கிழமை) பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சாலை மறியல் போராட்டம், ஒப்பாரி போராட்டம், பறை அடித்து முறையிடும் போராட்டம் என பல வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்து, தமது எதிர்ப்பை மக்கள் வெளிப்படுத்தினர். தமது கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால், போராட்டம் தீவிரம் அடையும் என எச்சரிக்கையும் விடுத்தனர். சில தோட்டங்களில் தொழிலாளர்கள் இன்று வேலைக்கு செல்லாமல், தமது எதிர்ப்பை வெளியிட்டனர். மேலும் சில இடங்களில் 12 மணிக்க…
-
- 0 replies
- 132 views
-
-
பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பபட்டதை கண்டித்தும், நாம் தமிழர் இயக்க முத்துக்குமரன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் புதுக்கோட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தற்கு வந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் எதுக்கென்றால் எங்களின் தமிழ் தேசிய தலைவர் பிரபாகரனின் அம்மாவும், எங்களின் தாயாருமான பார்வதி அம்மாள் அவர்களை இந்த அரசுகள் திருப்பி அனுப்பப்பட்டதை கண்டித்தும், எங்கள் இயக்கத் தோழர் முத்துக்குமரன் மீது 3 வருடத்திற்கு முன் முடிந்து போன வழக்கை மீண்டும் தூசி தட்டி எடுத்து கைது செய்ததை கண்டித்தும் நடத்தப்படுகிறது. மே 18ஆம் தேதி நாம் தமிழர் மாநாடு நடத்தப்பட உள்ளது. அந்த மாநாட்டை முடக…
-
- 0 replies
- 1.1k views
-