ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143342 topics in this forum
-
யுத்தத்தின் போதும் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போதும் அதனை தடுத்து நிறுத்த முயற்சிக்காத நோர்வே இன்று அனைத்தும் முடிந்த பின்னர் பாவ மன்னிப்பு கோருவது எவ்விதத்தில் நியாயமாகும் என்று இடதுசாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை, கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். அரசாங்கத்தின் மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கையில்லாததன் காரணமாகவே பொதுநலவாய விளையாட்டுப் போட்டி கைநழுவிப் போனதென்றும் அவர் தெரிவித்தார். தமிழ் மக்களின் அழிவிற்கும் யுத்தத்திற்கும் இந்தியாவே காரணம் என நோர்வே எக்சொல்ஹெய்ம் சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. இதனை அனைவரும் அறிவார்கள். அன்று யுத்தம் நடந்த போது தமிழ் மக்கள் கொல்லப்படும் போது நோர்வேயோ, அமெரிக்காவோ யுத்தத…
-
- 1 reply
- 862 views
-
-
இத்தாலியில் முதன்முதலாக அதிக மதிப்பெண்களைப் பெற்று மருத்துவப் பட்டம் பெற்றுச் சாதனை புரிந்துள்ளார் ஈழத்துத் தமிழ்ப் பெண் ஒருவர். யாழ்.தீவகப் பகுதியான ஊர்காவற்றுறை, நாரந்தனையைச் சேர்ந்த ஞானசீலன் பிரியா (வயது-25) என்பவரே இச் சாதனையைப் புரிந்துள்ளார். பலேர்மோ மாநகரத்தின் மருத்துவத்துறையின் ஓர் பிரிவான Tecniche di Radiologia Medica per immagini e Radioterapia வில் அதிக புள்ளியான 110/110 lode பெற்று மருத்துவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை தான் இத்தாலியில் தமிழ் மாணவர்களுக்கு நடனம், தமிழ் மொழிப் பாடம் மற்றும் ஆங்கிலப் பாடங்களைக் கற்பித்து வருவதுடன், தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கும் மாணவர்களுக்கும் தன்னாலான சேவைகளை ஆற்றவுள்ளதாகவும் எமது செய்திச் சேவைக்கு ஞானசீ…
-
- 26 replies
- 2.1k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நால்வர் அமெரிக்க, கனேடிய, பிரித்தானிய நாடுகளுக்கான பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளனர். இலங்கைக்குத் துரோகம் செய்துவிட்டுத் திரும்பும் அவர்களை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்யவேண்டும் என்ற கோசங்கள் சிங்களத் தேசியவாதிகளிடம் இருந்து எழுந்திருந்தன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்தப் பயணம் சிங்களத் தேசியவாத சக்திகளிடம் கடும் விசனத்தைத் தோற்றுவித்துள்ள நிலையில்,இந்தப் பயணம் எதிர்பார்த்த இலக்குகளை அடைந்ததா? வெற்றிகரமானதாக அமைந்ததா? என்ற கேள்வி தமிழ் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணங்களில் இந்தப் பயணத்திற்கு முன்னரே ஏற்படுத்தப்பட்டுவிட்ட மிகப்பெரிய விம்பம். முதலாவது திட்டமிடப்பட்ட சந்திப்புகள் சில நடக்காமல் போனது…
-
- 0 replies
- 593 views
-
-
பாதுகாப்பு அச்சுறுத்தல், இரகசியத்தன்மை ஆகிய அடிப்படைக் காரணங்களைக் கருத்திற்கொண்டே கணிசமானளவு மக்கள் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கூறவில்லை. அந்த ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த விதவைப் பெண்ணுக்கு சி.ஐ.டி. அழைப்பாணை விடுத்துள்ளதன் மூலம் இந்த விடயம் உலகுக்கு அம்பலமாகியுள்ளது. இதனை ஒருபோதும் ஏற்கமுடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள நிலையில், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதானது பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது என்றும் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த கல்…
-
- 0 replies
- 482 views
-
-
ஆணைக்குழுவில் சாட்சியமளித்தவர் சி.ஐ.டி. விசாரணைக்கு அழைப்பு இலங்கையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்திருந்த 45 வயதான விதவைப் பெணணான இரத்தினம் பூங்கோதை என்பவர் தற்போது குற்றப் புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 27 ம் திகதி கல்முனையில் நடைபெற்ற ஆணைக்குழுவின் அமர்வில் 4 பிள்ளைகளின் தாயான இரத்தினம் பூங்கோதை சாட்சியம் அளித்திருந்தார். 2007க்குப் பின்னர் - அதாவது தற்போதை அரசாங்கத்தின் பதவிக் காலத்தின்போது, சட்டவிரோதமான முறையில் தான் கடத்தப்பட்டு ஆயுதக் குழுவொன்றினால் தடுத்து வைக்கப்பட்டதாகவும், அதேபோல பொலிசாரால் அழைத்துச் செல்லப்பட்ட 3 பிள்ளைகளின் தாயான தனது சகோதரி…
-
- 2 replies
- 792 views
-
-
அமெரிக்க உயர் பாதுகாப்பு அதிகாரி இலங்கை விஜயம் 14 நவம்பர் 2011 அமெரிக்காவின் பிரதி பாதுகாப்புச் செயலாளர் இலங்கைக்க விஜயம் செய்துள்ளார். சர்வதேச கடல் பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் விசேட உரையாற்றும் நோக்கில் தென் மற்றம் தென்கிழக்காசிய நாடுகளுக்கான அமெரிக்க பிரதிப் பாதுகாப்புச் செயலாளர் ரொபர்ட் செச்சர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். காலி களங்கரை விளக்கு ஹோட்டலில இரண்டு நாள் இந்த சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மாநாட்டில் உள்நாட்டு வெளிநாட்டு பாதுகாப்பு முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ள உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்து சமுத்திர பாதுகாப்பு கூட்டுறவு மற்றும் பாதுகாப்பு தந்திரோபாயங்கள் என்ற தலைப்பில் அமெரிக்க அதிகாரி உரையாற்…
-
- 0 replies
- 878 views
-
-
பல்கலைக்கழகளில் காவற்றுறை காவலரண்கள் பல்கலைக்கழக வளாகங்களில் காவற்றுறை காவலரண்களை அமைக்க அரசு தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழகளில் மாணவர்களுக்கு இடையில் ஏற்படக் கூடிய மோதல் நிலைமைகளை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறு காவலரணங்கள் அமைக்கப்படவுள்ளதாக சிறிலங்கா உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக காவற்றுறை என்ற பெயரில் இயங்கவுள்ள காவலரண்களில் ஆண் பெண் காவற்றுறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், வெளிநாட்டு பல்கலைக்கழங்களிலும் இப்படியான காவற்துறை காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, பல்கலைக்கழகங்களின் பாதுகாப்புப் பொறுப்பை தனியார் பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்கியமைக்…
-
- 0 replies
- 771 views
-
-
இலங்கைக்கான ஒன்லைன் வீசா கட்டணங்களில் திருத்தம் 14 நவம்பர் 2011 எதிர்வரும் 2012ம் ஆண்டு முதல் இந்த கட்டணத் திருத்தம் அமுல் படுத்தப்பட உள்ளது. இணையம் ஊடாக வீசா பெற்றுக் கொள்ளும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கான கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. ஒன் லைன் வீசா கோரி விண்ணப்பிக்கும் நபர்களுக்கான வீசா கட்டணங்களை மீள் பரிசீலனை செய்யுமாறு இந்தியா கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் பிரவேசிப்பதற்காக அறவீடு செய்யப்படும் வீசா கட்டணங்களை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை அறிவித்துள்ளது. சார்க் பிராந்திய வலய நாடுகளைச் சேர்ந்த நாட்டுப் பிரஜைகளுக்கு 10 அமெரிக்க டொலர்களும், ஏனைய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு 20 அமெரிக்க டொலர்களும் அறவீடு செய்யப்பட …
-
- 0 replies
- 594 views
-
-
நீர்கொழும்பில் இலங்கையின் முதலாவது அதி சொகுசு பஸ் நிலையம் வீரகேசரி இணையம் / ஜீவா சதாசிவம் 11/14/2011 11:16:35 AM பொருளாதார அபிவிருத்தி அமைச்சினதும், நீர்கொழும்பு மாநகர சபையின் நிதி ஒதுக்கீட்டிலும் 220 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு புதிய பஸ் நிலைய மூன்று மாடிக் கட்டிடத் தொகுதி அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதி சொகுசுடன் கூடிய சகல வசதிகளையும் உள்ளடக்கியதாக திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த பஸ் நிலையப் பகுதி 60 ஆயிரம் சதுர அடி கொண்டதாகும். 78 கடைகளும் , உணவகம் திரைப்படமாளிகை காத்திருப்பு அறை, ஓய்வு அறை ஆகியவற்றை உள்ளடக்கியதாக இது அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 35 ஆயிரம் பயணிகள் இந்த பஸ் நிலையத்தைப் பயன்படுத்தக்கூடியதாக அமையப்ப…
-
- 0 replies
- 831 views
-
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சத்தியாக்கிரகம் வீரகேசரி இணையம் / கபில 11/14/2011 11:44:53 AM கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை சுதந்திர சங்கத்தினர் சற்று முன் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார். கட்டுநாயக்கவில் பயணிகள் வந்திறங்கும் முன்றலிலே இந்த சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சுமார் நான்கு வருட காலமாக சம்பள உயர்வு உட்பட ஏனைய சலுகைகள் தொடர்பில் கவனத்திற்கொள்ளப்படாதுள்ளமையினாலேயே சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சத்தியாக்கிரகத்தில் சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். http://www.virakesari…
-
- 0 replies
- 740 views
-
-
நேற்றிரவு பொலிஸாரின் யாழ்ப்பானத்தில் முற்றுக்கு உள்ளான சுமங்கலி என்ற விபசார விடுதியின் உரிமையாளர் பிரபல தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் பொலிஸார் நேற்றிரவு (13) நடத்திய சுற்றி வளைப்பின் போது முற்றுகைக்கு உள்ளான விபசார விடுதி ஒன்றிலிருந்த 13 பேர் கைது செய்யப்பட்டமை தெரிந்ததே..யாழ் நகரப் பகுதியிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் விபசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்தே இந்த விடுதி முற்றுகையிடப்பட்டது.. இந்த முற்றுகையின் போது விபசாரத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் ஐந்து பெண்களையும் அவர்களுடன் எட்டு ஆண்களையும் யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறிப்பிட்ட இந்த விடுதி நீண்ட காலமாக விபச்சார …
-
- 1 reply
- 1.6k views
-
-
19 நாடுகள் பங்குபற்றும் ‘சர்வதேச கடல் பாதுகாப்பு மாநாடு 2011′ காலியில் ஆரம்பம்! Published on November 14, 2011-12:33 pm இலங்கை கடற்படை ஒழுங்கு செய்துள்ள 0சர்வதேச கடல் பாதுகாப்பு மாநாடான ‘கோல் டயலொக் 2011′ இன்று திங்கட்கிழமை காலி, லைட்ஹவுஸ் ஹோட்டலில் ஆரம்பமாகியது. சுமார் 19 நாடுகளின் கடற்படை உயரதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பின் உயரதிகாரிகள் இதில் பங்குபற்றுகின்றனர். கடல் விடயங்களில் நிபுணத்துவம் பெற்ற பல புலமையாளர்கள், கடல் பாதுகாப்பு, இந்திய சமூத்திர பிராந்தி நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள், போன்ற தலைப்புகளில் இந்த மாநாடு நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் முதலாம் நாளான இன்றைய தின நிகழ்வுகள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜ…
-
- 0 replies
- 527 views
-
-
இலங்கையில் கடந்த இரு தசாப்தகாலமாக நடைபெற்றுவந்த உள்நாட்டுப்போரில் வெற்றிகொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு இப்போது சமாதானத்தை வெல்ல வேண்டிய அவசியம் இருப்பதாக வலியுறுத்தியிருக்கிறார் நோர்வே சுற்றாடல் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கை அமைதி முயற்சிகளுக்கான முன்னாள் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம். இலங்கை அமைதி முயற்சிகள் குறித்துச் செய்யப்பட்ட மீளாய்வு அறிக்கை நேற்று ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது. நோராட் அமைப்பு இந்த அறிக்கை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. மைக்கல்ஸன் கல்வி நிறுவகத்தின் தலைவர் குன்னர் சேர்போ மற்றும் ஆபிரிக்கக் கற்கைகளுக்கான லண்டன் பாடசாலையின் தலைவர் ஜோன் தன் குட்ஹேன்ட் ஆகியோரால் நீண்ட ஆராய்வுகளுக்குப் பின்னர் இந்த அறிக்கை தயாரிக்க…
-
- 5 replies
- 1.2k views
-
-
'இப்பொழுது ஊரில் பெடியளே இல்லை..' இவர் ஒரு இளைஞர். யாழ்ப்பாணக் குடாநாட்டின் கீழ்ப் பகுதியில் உள்ள சிறிய கிராமமொன்றைச் சேர்ந்தவர். ஆனால், வன்னியில் இறுதிப் போர் நடந்தபோது, அந்தப் போரிலே சிக்கியிருந்தவர். போரின் காரணமாகத் தன்னுடைய கல்வியைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டவர்களில் ஒருவர். இவரைப்போல இருக்கும் ஏராளம் இளைஞர்களின் பிரச்சினைகளை இவர் இங்கே பேசுகிறார். மேலும் இந்தப் போர் தொடர்பான அபிப்பிராயங்களையும் போர் தின்ற ஊரிலே வாழும் இவர், போர்ப் பசியிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களின் கதைகளைச் சொல்லும் ஒரு சாட்சி. முக்கியமாக தன் சக வயதினரை தன்னுடைய நண்பர்களை இழந்த நிலையில் இளம்பிராயத்தின் நெருக்கடிகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டியுள்ளது எனச் சொல்கிறார். யா…
-
- 3 replies
- 1.8k views
-
-
எழுத்தாளர் சவுக்கு சனிக்கிழமை, 12 நவம்பர் 2011 16:52 WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens: JUSTICE, social, economic and political;LIBERTY of thought, expression, belief, faith and worship; EQUALITY of status and of opportunity; and to promote among them all FRATERNITY assuring the dignity of the individual and the unity and integrity of the Nation; இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை இறையாண்மை கொண்ட சமதர்ம, சமய சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசாக அமைப்பது என்ற உறுதி ஏற்றுள்ளோம். இதன் மூலம், இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக…
-
- 1 reply
- 1.1k views
-
-
உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்கள் எழுதி மூன்று நூல்கள் நேற்று சென்னையில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இதன்போது உரைநிகழ்த்திய கவிஞர் காசியானந்தன் அவர்கள் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களின் புதுக்கவிதையான சிந்தல்,பொழிச்சல், நறுக்கு என்ற மூன்று நூல்கள் சென்னையில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இதில் உலகதமிழர் இயக்க தலைவர் பழநொடுமாறன், ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ, நடிகர் மணிவண்ணன் உள்ளிட்ட படைப்பாளிகள் தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள். இதில் உணர்ச்சி கவிஞர்க் காசியானந்தன் அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது, உலகில் மிகப்பெரிய கொடுமைகள் நடந்தன வியட்னாமில் மக்கள் அழிக்கப்பட்ட நேரத்தில் இந்தியாவில் புது…
-
- 22 replies
- 4.3k views
-
-
குடா நாட்டில் பொலிஸ் நிலையங்களுக்கு புகார் கொடுக்கவரும் பெண்களிடம் பொலிசார் தொலைபேசி இலக்கங்களை கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இது தொடர்பில் முறைப்பாடுகளும் செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யவரும் பெண்களிடம் தொலைபேசி இலக்கம் கேட்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று பொலிஸ் அதிகாரிகளுக்கு கூறப்பட்டுள்ளதாம். . யாழ். மாவட்ட பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரி.இந்திரன், யாழ். மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கான செயலமர்வில் நேற்று மேற்கண்ட அறிவுறுத்தலை விடுத்தார். சட்ட உதவி மன்றமும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையமும் இணைந்து யாழ். பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் செயலமர்வு ஒன்றை நடத்தியது. யாழ். மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் ப…
-
- 1 reply
- 1.6k views
-
-
இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டு வந்ததாக நோர்வே அறிவித்துள்ளது. இலங்கை சமாதான முனைப்புக்கள் தொடர்பில் நோர்வே இன்று விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் சமாதான முனைப்புக்கள் எதனால் தோல்வியடைந்த என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட வேண்டுமென இந்தியா பெரிதும் விரும்பியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்தின் மீது அனுதாபம் கொண்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நோர்வே மத்தியஸ்தத்தினால் ஆரம்பிக்கப்பட்ட சமாதான முனைப்புக்கள் தோல்வியில் முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்…
-
- 87 replies
- 6.5k views
-
-
2000 மில்லியன் ரூபா செல்வழித்தும் 2018 பொது நலவாய விளையாட்டுப்போட்டியினை நடத்தும் போட்டியில் சிறிலங்கா தோற்றுள்ளது. அம்பாந்தோட்டை 2018 திட்டத்தினை நாமல் இராஜபக்ஷவே பொறுப்பாக இருந்து செயற்படுத்தியுள்ளார். . இந்த திட்டத்திற்காக 2000 மில்லியன் ரூபா செலவழிக்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்பில் பங்குபற்றும் நாடுகளின் பிரஹ்டி நிதிகளுக்கு மேற்கிந்தியதீவில் பல்வேறு விருந்துகள், பரிசுப்பொருட்கள், பெண்கள் ஆகியவற்றை கொடுத்து நாமல் இராஜபக்ஷ குஷிப்படுத்தியதாகவும் ஆனாலும் எல்லா நாடுகளும் நன்றாக அனுபவித்துவிட்டு வாக்கினை மட்டும் அவுஸ்ரேலியாவிற்கு போட்டுவிட்டனர் என குறைப்பட்டுள்ளார் சிறிலங்கா அணியில் சென்ற ஒருவர். . நாமல் இராஜபக்ஷவுடன் 200 பேர் மேற்கிந்திய தீவிற்கு சென்றுள்ளனர். இதி…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஈழத் தமிழர்களின் போராட்டம் நியாயம் மிகுந்தது., அதை ஏகாதிபத்திய அரசுகள் வேண்டுமென்றே வீழ்த்தின என்று குறிப்பிட்ட லத்தீன் அமெரிக்க எழுத்தாளரும் களப்பணியாளருமான தேழர் ரான் ரைடனவர் அதற்கு சோசலீச நாடுகளும் துணை போனது மிகவும் துயரமானது என்று குறிப்பிட்டார். The The Tamil Nation in Srilanka என்ற அவரது நூல் வெளியிட்டில் பேசிய பொழுது தோழர் ரான் ரைடனவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஈழத் தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தில் போர்க்குற்றவாளியாக உள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்தராஜபக்சவுக்கு ஆதரவாக கியூபா எடுத்த நிலைப்பாடு தனக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்ததாகவும் தோழர் ரான் ரைடனவர் தெரிவித்தார்;. புலிகள் பயங்கரவாத இயக்கம் கிடையாது என்று குறிப்பிட்ட ரான் ரைடனவர் அவர்கள் கையாண்ட முறைகளில் சில முறைகள் …
-
- 2 replies
- 1.3k views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பினை அழித்தொழிக்கும் வகையிலான சிறிலங்காவின் இராணுவத் தீர்வுக்கு இந்தியா முழுஅளவிலான உதவி ஒத்துழைப்புக்களை வழங்கியமை அம்பலமாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.. சிறிலங்காவில் சமாதானம் தொடர்பில் இந்தியா மீதான நோர்வேயின் குற்றச்சாட்டு தொடர்பிலேயே கூட்டமைப்பின் பேச்சாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வினை இந்தியா வலியுறுத்தி வருகின்றது. இருப்பினும் இவ்விடயத்தில் இந்திய மத்திய அரசு எந்தளவு உண்மைத்தன்மையுடன் ,இதய சுத்தியுடன் செயற்பட்டு வருகின்றது என்பது தெரியாது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவத் தீர்வுக்கு இந்தியா முழுஅளவி…
-
- 3 replies
- 1.4k views
-
-
புலித் தலைவர்கள் பசில் ராஜபக்ஷவின் ஊடாக சரணடைய முயற்சித்தனர் – நோர்வே அறிக்கை தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஊடாக சரணடைய முயற்சித்தனர் என நோர்வே சமாதான முனைப்பு குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 மே மாதம் 17ம் மற்றும் 18ம் திகதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் மற்றும் சமாதான செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோர் நோர்வே, அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ஆகிய தூதரகங்களைத் தொடர்பு கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தமிழ் அரசியல்வாதி சந்திரநேரு ஆக…
-
- 3 replies
- 1.4k views
-
-
போட்டி மாவீரர் தினத்தைக் கைவிடும்படி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வேண்டுகோள்! அன்பான புலம்பெயர் தமிழ் மக்களே! நாங்கள் இப்போது எங்களது வரலாற்றுத் திருப்பு முனையின் முக்கிய பங்குதாரராக இருக்கின்றோம். விடுதலை வேண்டி நிற்கும் எங்கள் தேசம் எங்களது தொடர் போராட்டங்களை யாசித்து நிற்கின்றது. சிங்களப் படைகளால் பேச்சு, மூச்சிழந்து தவிக்கும் தமிழீழ மக்களது உணர்வுகளைப் பிரதிபலிக்கவும், அவர்களுக்காகப் பேசவும், அவர்களுக்காகப் போராடவும் வேண்டிய தருணத்தில் நாம் இருக்கின்றோம். அந்நிய மண்ணில் வாழ்ந்தாலும், எங்கள் நேசிப்பும், எங்கள் சுவாசிப்பும் தமிழீழ மண்ணை நோக்கியே இருக்கின்றது. தமிழீழ மக்களது விடுதலையே எங்களையும் அனைத்துத் தளங்களிலும், அனைத்துத் தளைகளிலிருந்து…
-
- 36 replies
- 2.7k views
-
-
ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் கொலைக்கு பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ முற்றாக பொறுப்புகூற வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க பாதுகாப்புச் செயலாளர் மேற்கொண்ட தலையீடுகளை பாராட்ட வேண்டும் என்ற போதிலும் யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் கழிந்த பின்னரும் நாட்டில் அமைதியை ஏற்படுத்த பாதுகாப்புச் செயலாளரினால் முடியாது போயுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசகர் ஒருவரினால்கூட நாட்டில் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் இல்லை என்பது பாரதூரமான விடயம் என வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார். பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் உடல…
-
- 1 reply
- 896 views
-
-
- இரு சக்கரவாகன பிரச்சார ஊர்வலம்- சென்னை முழுவதும்- வரும் சனிக்கிழமை 19-11-11, காலை 8.00 மணியிலிருந்து மாலை 8 மணி வரை. துவக்கம் : தி. நகர், செ.தெ நாயகம் பள்ளி. (குறிப்பு- பிரச்சர பனியனுடன் ஊர்வலம் ஆரம்பமாகிறது. பனியன் வேண்டுவோர் பின்வரும் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்) -- அனைவரும் வருக, பெரும் திரளாய் இந்திய அரசை பணியச் செய்வோம். ஒவ்வொரு வீடும்,... ஒவ்வொரு தமிழரும் கூடன்குளத்தில் பட்டினி கிடக்கும் நம் மக்களுக்காக சென்னை வீதிக்கு வரச் சொல்வோம். நண்பர்களையும், உறவினர்களையும் பிரச்சாரத்திற்கு அழையுங்கள் . இது நமது நிலத்தையும், நமது வருங்கால குழந்தைகளையும் காக்க நாம் நடத்தும் போராட்டம்.. இப்போராட்டம் தோல்வி கண்டால் நம் சந்ததிகள் தோற்கும், இணைவோம் . நாம் வெல்வோம் - …
-
- 0 replies
- 861 views
-