ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143347 topics in this forum
-
விடுதலைப் புலிகள் அமைப்பினை அழித்தொழிக்கும் வகையிலான சிறிலங்காவின் இராணுவத் தீர்வுக்கு இந்தியா முழுஅளவிலான உதவி ஒத்துழைப்புக்களை வழங்கியமை அம்பலமாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.. சிறிலங்காவில் சமாதானம் தொடர்பில் இந்தியா மீதான நோர்வேயின் குற்றச்சாட்டு தொடர்பிலேயே கூட்டமைப்பின் பேச்சாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வினை இந்தியா வலியுறுத்தி வருகின்றது. இருப்பினும் இவ்விடயத்தில் இந்திய மத்திய அரசு எந்தளவு உண்மைத்தன்மையுடன் ,இதய சுத்தியுடன் செயற்பட்டு வருகின்றது என்பது தெரியாது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவத் தீர்வுக்கு இந்தியா முழுஅளவி…
-
- 3 replies
- 1.4k views
-
-
புலித் தலைவர்கள் பசில் ராஜபக்ஷவின் ஊடாக சரணடைய முயற்சித்தனர் – நோர்வே அறிக்கை தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஊடாக சரணடைய முயற்சித்தனர் என நோர்வே சமாதான முனைப்பு குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 மே மாதம் 17ம் மற்றும் 18ம் திகதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் மற்றும் சமாதான செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோர் நோர்வே, அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ஆகிய தூதரகங்களைத் தொடர்பு கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தமிழ் அரசியல்வாதி சந்திரநேரு ஆக…
-
- 3 replies
- 1.4k views
-
-
போட்டி மாவீரர் தினத்தைக் கைவிடும்படி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வேண்டுகோள்! அன்பான புலம்பெயர் தமிழ் மக்களே! நாங்கள் இப்போது எங்களது வரலாற்றுத் திருப்பு முனையின் முக்கிய பங்குதாரராக இருக்கின்றோம். விடுதலை வேண்டி நிற்கும் எங்கள் தேசம் எங்களது தொடர் போராட்டங்களை யாசித்து நிற்கின்றது. சிங்களப் படைகளால் பேச்சு, மூச்சிழந்து தவிக்கும் தமிழீழ மக்களது உணர்வுகளைப் பிரதிபலிக்கவும், அவர்களுக்காகப் பேசவும், அவர்களுக்காகப் போராடவும் வேண்டிய தருணத்தில் நாம் இருக்கின்றோம். அந்நிய மண்ணில் வாழ்ந்தாலும், எங்கள் நேசிப்பும், எங்கள் சுவாசிப்பும் தமிழீழ மண்ணை நோக்கியே இருக்கின்றது. தமிழீழ மக்களது விடுதலையே எங்களையும் அனைத்துத் தளங்களிலும், அனைத்துத் தளைகளிலிருந்து…
-
- 36 replies
- 2.7k views
-
-
ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் கொலைக்கு பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ முற்றாக பொறுப்புகூற வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க பாதுகாப்புச் செயலாளர் மேற்கொண்ட தலையீடுகளை பாராட்ட வேண்டும் என்ற போதிலும் யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் கழிந்த பின்னரும் நாட்டில் அமைதியை ஏற்படுத்த பாதுகாப்புச் செயலாளரினால் முடியாது போயுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசகர் ஒருவரினால்கூட நாட்டில் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் இல்லை என்பது பாரதூரமான விடயம் என வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார். பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் உடல…
-
- 1 reply
- 897 views
-
-
- இரு சக்கரவாகன பிரச்சார ஊர்வலம்- சென்னை முழுவதும்- வரும் சனிக்கிழமை 19-11-11, காலை 8.00 மணியிலிருந்து மாலை 8 மணி வரை. துவக்கம் : தி. நகர், செ.தெ நாயகம் பள்ளி. (குறிப்பு- பிரச்சர பனியனுடன் ஊர்வலம் ஆரம்பமாகிறது. பனியன் வேண்டுவோர் பின்வரும் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்) -- அனைவரும் வருக, பெரும் திரளாய் இந்திய அரசை பணியச் செய்வோம். ஒவ்வொரு வீடும்,... ஒவ்வொரு தமிழரும் கூடன்குளத்தில் பட்டினி கிடக்கும் நம் மக்களுக்காக சென்னை வீதிக்கு வரச் சொல்வோம். நண்பர்களையும், உறவினர்களையும் பிரச்சாரத்திற்கு அழையுங்கள் . இது நமது நிலத்தையும், நமது வருங்கால குழந்தைகளையும் காக்க நாம் நடத்தும் போராட்டம்.. இப்போராட்டம் தோல்வி கண்டால் நம் சந்ததிகள் தோற்கும், இணைவோம் . நாம் வெல்வோம் - …
-
- 0 replies
- 862 views
-
-
இறுதிப் போரின்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்று நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்தால் அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. குற்றமிழைத்த யாரையும் தான் பாதுகாக்கமாட்டார் என்றும் அதற்கான தேவை தனக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தெற்காசிய பிராந்திய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மாலைதீவு சென்றிருக்கும் ஜனாதிபதி அங்கு இந்தியத் தொலைக்காட்சியான என்.டி.ரி.விக்கு அளித்த பேட்டியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அவரது பேட்டியின் விவரம் வருமாறு: என்.டி: தற்போதைய மீனவர் பிரச்சினை குறித்து...? மஹி: மீனவர்கள் பிரச்சினை குறித்து உங்கள் பிரத…
-
- 1 reply
- 754 views
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2011, 01:26 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சும், கடற்படையும் இணைந்து ஒழுங்கு செய்துள்ள காலி கடல்சார் பாதுகாப்பு மாநாட்டைப் புறக்கணிக்க பிரித்தானியாவும், தென்னாபிரிக்காவும் கடைசிநேரத்தில் முடிவு செய்துள்ளன. அத்துடன் இந்த மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை ஒன்றை சமர்ப்பிக்கவிருந்த சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் அரசியல் விஞ்ஞானப் பிரிவின் உதவிப் பேராசிரியர் கலாநிதி லோறன்ஸ் பிரபாகர், தனது கட்டுப்பாட்டை மீறிய காரணங்களால் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்க முடியாதுள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கிடையே பிராந்திய கடல்சார் ஒத்துழைப்பு தொடர்பான இந்திய கடற்படையின் கண்ணோட்டம் தொடர்பாக இந்திய கடற்படையின் சார்ப்பில் முதன்மை…
-
- 1 reply
- 1k views
-
-
ஹெரோயின் போதைப் பொருள்களை மாணவர்களுக்கு விற்பனை செய்தார் என்ற சநதேகத்தில் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் இரண்டு மணிநேரத்தில் 45 ஆயிரம் ரூபா பணம் போதைப்பொருள் விற்பனையூடாகப் பெறப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது: ஹெரோயின் மற்றும் ஏனைய போதைப் பொருள்களைப் பயன்படுத்திய மாணவர்கள் சிலரை கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்தனர். அந்த மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அவர்களுக்கு போதைப் பொருளை விநியோகித்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அன்றைய தினம் குறித்த நபர் ஒருவர் மூலம் மட்டும் யாழ் நகரில் இரண்டு மணிநேரத்தில…
-
- 1 reply
- 1.3k views
-
-
எவரையும் பாதுகாக்கும் தேவை கிடையாது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை அடுத்த வாரமளவில் வெளியாகவிருக்கின்றது. அதில் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் பொதிந்திருக்கின்றனவா என்பது தொடர்பில் தான் அலட்டிக்கொள்ளவில்லை. எனினும் அறிக்கை வெளியாகின்ற நிலையில் எந்தவொரு நபரையும் பாதுகாக்க வேண்டிய தேவை எனக்குக் கிடையாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியொன்றிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கை கிடைத்ததும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் குறித்த அறிக்கை பகிரங்க ஆவணமாக வெளிப்படுத்த…
-
- 3 replies
- 1.4k views
-
-
காலியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு இரண்டரை மாத கால் நடைப் பயணம் – ஒரு துறவியின் அனுபவப் பகிர்வு ‘எனது துறவறத்தின் முக்கியமான நாட்களை யாழ்ப்பாணத்தில் இனிமையான அனுபவங்களுடன் கழித்திருக்கிறேன். புனிதமான இந்த மண்ணைப்போல அன்பும் பண்பாட்டுப் பாரம்பரியமும் கொண்ட தமிழ் மக்களுடன் பழகக் கிடைத்ததே எனக்கு வித்தியாசமான அனுபவம் தான்’ என்கிறார் துறவி இந்திரானந்த. தெற்கிலிருந்து வடக்கிற்கு கால்நடையாக யாத்திரை மேற்கொண்டிருந்த துறவியை யாழ்ப்பாணம் கைதடிச் சந்தியில் சந்தித்தோம். எமது செய்திப்பிரிவினருடன் அவர் பகிர்ந்து கொண்ட சில அனுபவங்கள் வியக்கத்தக்கனவாகவும் சில எதிர்வு கூறல்கள் சிந்திக்கத் தூண்டுவனவாகவும் அமைந்திருந்தன. ‘நான் காலியைச் சேர்ந்தவன். குருதுகஹதென்ன என்ற இடத்தி…
-
- 2 replies
- 990 views
-
-
இனவாதிகளினால் தமிழர்களின் அரசியல் தீர்வு இழுத்தடிக்கப்படுகிறது – யோகராஜன் தமிழர்களுடைய அரசியல் உரிமை பற்றி தெரியாத இனவாதிகளினால் இனப் பிரச்சினை தீர்வு இழுத்தடிக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் தெவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு தூதுக் குழுவினர் அண்மையில் அமெரிக்காவுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பாக அமைச்சரும் ஜாதிகஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெவித்துள்ள கருத்துக்கு கண்டனம் தெவித்தே மேற்படி கருத்தினை யோகராஜன் தெவித்துள்ளார். அவர் மேலும் கேருத்து தெரிவிக்கும் போது, அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் வெளிநாடுகளுக்குச் சென்று இனப்பிரச்சினை தொடர்பாக கருத்து சொல்வதற்கு உமை இருப்பதைப…
-
- 0 replies
- 590 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நடத்திய விசாரணைகளின் மூலம் எவரேனும் யுத்தக் குற்றச் செயல்களிலோ அல்லது மனித உரிமை மீறல்களிலோ ஈடுபட்டதாக தெரிய வந்தால் அவர்களை பாதுகாக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்வதில்லை எனவும், இந்திய மீனவர்களை இனி கைது செய்யக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்திய மீனவர் பிரச்சினை குறித்து உங்களது பிரதமரு…
-
- 0 replies
- 675 views
-
-
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் தவறில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் பேசப்படாத எந்த விடயத்தை அமெரிக்கால் சென்று பேசவில்லை எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கையில் வெளிப்படுத்திய கருத்துக்களையே அமெரிக்காவிலும் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்கு விரோதமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசியப் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நடவடிக்கையை துரோகச் செயலாக கருத முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்ட…
-
- 0 replies
- 581 views
-
-
சட்டவிரோதமாக கடல் மார்க்கம் ஊடாகப் போதைப் பொருள் கடத்தல்,கடற்கொள்ளைகளில் ஈடுபடுதல் ஆகியனவற்றைத் தடுக்கும் வகையில் இலங்கை, இந்தியா, மாலைதீவு ஆகிய மூன்று நாடுகளும் இந்து சமுத்திரத்தில் கடற்படைக் கண்காணிப்பு நடவடிக்கைகளை கூட்டிணைந்து மேற்கொள்ளவதென தீர்மானித்துள்ளன. இவ்வாறான கடல் ரீதியிலான குற்றங்களைத் தடுக்கும் வகையில் புலனாய்வுத் தகவல்களை இலங்கை, இந்திய நாடுகளுக்கு வழங்கவும் மாலைதீவு அரசு இணக்கம் தெரிவித்துள்ளன. http://www.seithy.co...&language=tamil
-
- 0 replies
- 588 views
-
-
நுவரெலியா மாவட்டத்தின் உள்ளுராட்சி மன்றங்கள் அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, மாவட்ட செயலாளர் டி.பி.ஜி குமாரசிறி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எல்லை மீர்நிர்ணய நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரத்துக்கு பின்னர், நுவரெலிய மாவட்டத்தின் உள்ளுராட்சி மன்றங்களை அதிகரிப்பது தொடர்பில் பேசப்பட்டாலும், அது அமுலாக்கப்படவில்லை. 8 லட்சம் மக்களின் தேவை, நில பரப்பு என்பவற்றை கருதி, ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் அடிப்படையில், அரச நிர்வாக அமைச்சினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டு, மீள் எல்லை நிர்ணய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நுவரெலியா மாவட்டத்தின் உள்ளுராட்சி மன்றங்கள் அதிகரிக…
-
- 0 replies
- 536 views
-
-
அரசு - தமிழ்க் கூட்டமைப்பு அடுத்த கட்டப்பேச்சு 16 இல் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயம் தொடர்பில் அரசு கூட்டமைப்புக்கு இடையிலான அடுத்த சுற்றுப் பேச்சு எதிர்வரும் 16 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அரசு தரப்பிடம் கடந்த பல சுற்றுப் பேச்சுகளின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்துள்ள கோரிக்கைகளுக்கு இணக்கம் காண்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது என அவர் கூறினார். அடுத்த சுற்றுப் பேச்சில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் இரா.சம்பந்தன், பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோ…
-
- 0 replies
- 602 views
-
-
அற்புதம்மாளுடனான இந்த நேர்காணலில், அவர்களது குடும்பம் நம்பிக்கை வைத்துச் செயற்பட்ட ஒரு கட்சியின் தலைமை அவர்களை எவ்வாறு கைவிட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் முக்கியமானது. இது ஏதோ அந்தக் கட்சியில் மட்டும் நடந்துவிடுவதில்லை. ஏறக்குறைய எல்லா அரசியற் தலைமைகளும் இவ்வாறேயுள்ளது என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டெனலாம். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு கொடுஞ்சிறையில் வாடும் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள். எப்படியேனும் தனது மகனை தூக்கு மேடையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடி வருகிறார். தனது பிள்ளை எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று உறுதியாக நம்பும் 64 வயதான இந்தத் தாய், கடந்த 20 ஆண்டுகளாக சட்ட ரீத…
-
- 0 replies
- 761 views
-
-
பாகிஸ்தான் பிரதமர் கிலானி, இலங்கை அதிபர் ராஜபக்ஷே ஆகியோரை, நேற்று பிரதமர் மன்மோகன் சிங், மாலத்தீவில் தனித்தனியாகச் சந்தித்து, இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். தெற்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான, "சார்க்' அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள, மாலத்தீவு வந்துள்ள பிரதமர் மன்மோகன்சிங், அடு அடோல் என்ற கூட்டு தீவு பகுதியில் உள்ள, "ஷாங்கிரிலா ரிசார்ட்' என்ற சொகுசு விடுதியில் தங்கியுள்ளார். சார்க் நாடுகளின் மற்ற தலைவர்களும், இதே இடத்தில் தங்கியுள்ளனர். மாலத்தீவு தலைநகர் மாலேயில் இருந்து, 700 கி.மீ., தெற்கே, இந்த குட்டித்தீவு அமைந்துள்ளது. பின்வாங்க மாட்டோம்!: இங்கு, நேற்று காலை 9.30 மணிக்கு, முதலில் பாக்., பிரதமர் கிலானியுடன் நடந்த பேச்சுவார்த்தையில்…
-
- 14 replies
- 1.5k views
-
-
இனப்படுகொலை நடந்த மண்ணில் சர்வதேச சமூக ஆர்வலர்கள் பங்குபெரும் சர்வதேச பருவநிலை மாற்றம் மற்றும் சமூக விடய மாநாடு 14 மற்றும் 15 திசம்பர், கொழும்பு INTERNATIONAL CONFERENCE ON CLIMATE CHANGE & SOCIAL ISSUES Grand Oriental Hotel 14th - 15th December, Colombo, Sri Lanka http://www.ihdt.org/Conference.html http://www.esc-toulouse.fr/m_articles.asp?id=1081 தமிழர்களே, இந்நிகழ்வில் பங்குபெரும் சமூக ஆர்வலர்களுக்கு ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தி முடிக்கப்பட்ட, இன்றும் நடந்துகொண்டிருக்கின்ற இனவெறி படுகொலை கோப்புகளை அவர்கள் பார்வைக்கு அனுப்பி அறிய வைப்போம். ஒரு பெரும் இனப்படுகொலையை…
-
- 0 replies
- 1.1k views
-
-
களுபோவில சிறுவர் வைத்தியசாலையின் தங்கிச் சிகிச்சை பெறும் நோயாளர் பிரிவுக்கு வழங்கப்பட்டிருந்த ‘க்ளோக்சிலின்’ என்ற மருந்தில் கொசு ஒன்று காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படதாகும். குறிப்பிட்ட இந்த மருந்து காயங்களுக்கு உள்ளானவர்களுக்கு வழங்கப்படுவதாகும். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த களுபோவிலை வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜயசிங்க, இந்த விடயம் தொடர்பில் இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், ஒளடத அதிகார சபை ஆகியனவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட மருந்து வகை தற்போது பாவனையிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். http://akkinikkunchu.com/new/
-
- 0 replies
- 1.6k views
-
-
நாங்கள் செய்துள்ள சாதனையை ஜெயலலிதா நேரில் வந்து பார்க்கட்டும்- ராஜபக்சே அட்டு (மாலத்தீவு): தமிழக முதல்வர் ஜெயலலிதா எப்போது வேண்டுமானாலும் இலங்கைக்கு வரலாம். அவரை நாங்கள் வரவேற்கிறோம். நாங்கள் தமிழர் பகுதிகளில் செய்துள்ள சாதனைகளுக்காக நான் பெருமைப்படுகிறேன். ஜெயலலிதாவும் இதை நேரில் வந்து பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும் என்று கூறியுள்ளார் ராஜபக்சே. மாலத்தீவில் நடைபெறும் 17வது சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த ராஜபக்சே அங்கு டைம்ஸ் நவ் டிவிக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுப்பார்கள் என்ற அச்சம் தனக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவை இலங்கைக்கு வரவேற்பதாகவும் அவர் சொல்லியுள்ளார். அந்த …
-
- 8 replies
- 2k views
-
-
இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்கு போதைப்பொருள் கடத்தும் மையமாக இலங்கை விளங்குகிறது என இலங்கையின் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை நேற்று தெரிவித்துள்ளது. போதைப்பொருட்களை கடத்துபவர்கள், கொழும்பையும் மாலைதீவு தலைநகர் மாலேயையும் இடைத்தங்கல் நிலையங்களாக பயன்படுத்துவதாக அச்சபை தனது வருடாந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அவ்வறிக்கையின்படி, கடந்த 5 வருடகாலத்தில் பெருமளவு ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. பிரவுன் சுகர் அல்லது தெற்மேற்காசிய ஹெரோயின் எனப்படும் ஒருவகை ஹெரோயின் அதிகமாக இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து கடத்திவரப்படுகிறது. இக்காலப்பகுதியில் 58 வெளிநாட்டவர்கள் போதைப் பொருட்களை கடத்திய குற்றச்சாட்டுக்காக இலங்கையில் கைது செய்…
-
- 1 reply
- 918 views
-
-
வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது விடுதலைப் புலித் தலைவர்கள் தப்பிச் செல்ல முயற்சி செய்ததாகவும், அந்த முயற்சி இறுதியில் தோல்வியடைந்த காரணத்தினாலேயே தற்பொது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தம�மீது சுமத்தப்படுவதாக ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹனே தெரிவித்துள்ளார். யுத்தத்தின்பொது புலிகள் பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டனர் என்றும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் 1.5 மில்லியன் நிலக்கண்ணி வெடிகளை புதைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புலி ஆதரவாளர்கள் சாவதேசரீதியில் தொடர்ந்தும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்த…
-
- 1 reply
- 1k views
-
-
இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் தூக்குத்தண்டனையை பிரபல சட்டத்தரணி ராம்ஜெத் மாலனி சென்னை உயர்நீதிமன்றில் வாதாடி, தள்ளிவைத்தார். இந்நிலையில், சட்டத்தரணி ராம்ஜெத்மாலனி இன்று சனிக்கிழமை 12ம் திகதி வேலூர் சிறைக்குச் சென்று தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சந்தித்துப் பேசவுள்ளார். இவருடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் உடன் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=51895&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 850 views
-
-
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்னையில் 1986 மற்றும் 87ம் ஆண்டுகளில் தங்கியிருந்தபோது, சூளைமேடு காவல் நிலையத்தில், திருநாவுக்கரசு என்பவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றமை தொடர்பான வழக்கும், 7 வயது சிறுவனை கடத்தி, பணம் கேட்ட வழக்கு உள்ளிட்ட மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றில் நடந்து வருகின்றன. இதில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கின் மனுதாரரின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், நீதிபதிகள் நாகப்பா, சுதந்திரம் ஆகியோர் கொண்ட குழுமுன், சிறப்பு கவன ஈர்ப்பை நேற்று கொண்டு வந்தார். அதில், "உயர்நீதிமன்றில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அமைச்சர் டக்…
-
- 0 replies
- 551 views
-