Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளை ஐக்கிய அமெரிக்கா வன்மையாக கண்டிப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் மீது நடத்தப்பட்ட தாக்குதலையிட்டு ஐக்கிய அமெரிக்கா ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளது. ஊடகவியலாளர்களின் மௌனமான குரல்களுக்கு எதிரான வன்முறை பிரயோகமானது குரல்களை மௌனிக்க செய்வதுடன் கருத்து வெளியிடும் சுதந்திரத்தை பலவீனப்படுத்துவதுடன் நல்லிணக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைகின்றது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பா…

    • 0 replies
    • 548 views
  2. முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் மற்றும் புதுமாத்தளன் உள்ளிட்ட பிரதேசத்தை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்க அரசாங்க தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை வவுனியா மாவட்டத்தின் சில பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். . இதன் அடிப்படையில், குறித்த பிரதேசங்களை சொந்த இடங்களாக கொண்ட பொது மக்களை, மாற்று பிரதேசங்களில் குடியேற்ற வற்புறுத்தப்படுவதாக சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் முல்லை அரசாங்க அதிபர் தனக்கு இது பற்றி எதுவும் தெரியாது என கூறியுள்ளார். . ஆனால் முள்ளீவாய்கால் மற்றும் புதுமாத்தளன் பிர…

    • 0 replies
    • 1.1k views
  3. ஓட்டமாவடியில் மீட்கப்பட்ட சடலம் இலங்கையில் கடந்த வருட முற்பகுதியில் மர்மமான முறையில் காணாமல் போன புத்தளம் சமூக நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான பட்டானி ராசிக் என்பவரது சடலம் என நம்பப்படும் சடலமொன்று மட்டக்களப்பு ஓட்டமாவடி காவத்தைமுனையில் பொலிசாரால் இன்று வியாழக்கிழமை தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. 55 வயதான இவர், கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 11 ம் திகதி தொழில் நிமித்தம் புத்தளத்திலிருந்து பொலன்னறுவைக்கு சென்றிருந்ததாகவும், அதன் பின்னர் அவரைப் பற்றிய தகவல்கள் இல்லை என்றும் உறவினர்களினால் பொலிசில் புகார் செய்யப்பட்டிருந்தது. மர்மமான முறையில் இவர் காணாமல் போன சம்பவம் புத்தளம் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இவரை கண்டு பிடித்து தருமாற…

    • 2 replies
    • 908 views
  4. சண்டேலீடரின் இயக்குனருக்கு மகிந்த அச்சுறுத்தல்! - எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு கண்டனம்!! கொழும்பில் இருந்து வெளியாகும் சண்டே லீடர் பத்திரிகையின் இயக்குனர் லால் விக்ரமதுங்கவை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தியமையை பிரான்ஸைத் தளமாகக் கொண்டியங்கும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது. சிறிலங்கா ஜனாதிபதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினரான அவரது மகன் நாமல் ராஜபக்சவுக்கும் அவர்கள் விரும்பியபடி பயன்படுத்தும் வகையில் சீனா பணம் வழங்குவதாக சண்டே லீடர் பத்திரிகையின் கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனாலேயே அந்நிறுவனத்தின் இயக்குனர் லால் விக்ரமதுங்கவை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொலைபேசியில் தொ…

    • 0 replies
    • 759 views
  5. தமிழ் மக்களின் நெடுந்துயரை முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் புனித ரம்ழான் நோன்பு காலத்தில் யாழ்ப்பாணத்து முஸ்லிம் சகோதரர்களுக்கு இக்கடிதத்தை எழுத வேண்டிய தேவையேற்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ், முஸ்லிம் மக்கள் சிறுபான்மை இனங்கள் என்ற வகுதிக்குள் அடக்கப்பட்டிருந்தாலும் சிறுபான்மை மக்கள் உரிமையோடு வாழவேண்டும் என்பதற்காகப் போராடியவர்கள் தமிழர்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. இதற்காக தமிழ் மக்கள் இழந்தவை ஏராளம் என்பதை முஸ்லிம் சகோதரர்கள் ஒருபோதும் மறுக்கமாட்டார்கள் என்று நம்புகின்றோம். தமிழ் மக்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக உரிமைப்போராட்டம் நடத்திக்கொண்டிருந்தமையால் முஸ்லிம் மக்கள் பேரினவாதத்தால் நசுக்கப்படாமல் தப்பித்துக்கொள்ள முடிந்தது என்ற உண்மையையும் மு…

    • 0 replies
    • 542 views
  6. புதன்கிழமை, 03 ஓகஸ்ட் 2011, 00:14 GMT சிறிலங்கா அரசாங்கத் தொலைக்காட்சி ஊடகவியலாளர் மூலமே சனல்-4 தொலைக்காட்சிக்கு போர்க்குற்றக் காணொலிகள் கிடைத்துள்ளன. ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா வெளியிட்டுள்ள தகவலில் இருந்து இது உறுதியாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 2009 மே 17ம் நாள், போர் முடிவுக்கு வருவதற்கு நான்கு நாட்கள் முன்னதாக, விடுதலைப் புலிகளால் மனிதக்கேடயங்களாக வைக்கப்பட்டிருந்த இலட்சக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டது குறித்த காணொலியை ரூபவாகினி மற்றும் ஐரிஎன், சுவர்ணவாகினி ஆகியவற்றில் ஒளிபரப்புமாறு உத்தரவிட்டதாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கூறியுள்ளார். உள்ளூர் அலைவரிசைகளில் ஒளிபர…

  7. வீரகேசரி இணையம் 8/3/2011 12:18:56 PM யாழ்ப்பாணம் மாநகரசபையினால் யாழ்ப்பாண இராச்சியத்தின் இறுதி மன்னனான சங்கிலிய மன்னனின் புனருத்தாரனம் செய்யப்பட்ட சிலை திறப்பு விழா இன்று காலை 7.15 மணியளவில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட பாரம்பரிய கைத்தொழில்; மற்றும் சிறுகைத் தொழில்கள் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா சங்கிலியனின் சிலையைத் திறந்து வைத்ததுடன் நினைவுக் கல்லையும் திறந்து வைத்தார். பிரதம விருந்தினர் உட்பட ஏனைய பிரமுகர்களும் பருத்தித்துறை வீதியில் உள்ள குமார வீதிச்சந்தியில் இருந்து மேளவாத்தியத்துடன் ஊர்வலமாக விழா மண்டபத்திற்;கு அழைத்து வரப்பட்டார்கள். தொடர்ந்து சமய…

    • 3 replies
    • 1.3k views
  8. ஐயோ இந்தத் தீபக்காரரின் தொல்லை தாங்க முடியலைடா! இன்று மாலை தீபம் தொ(ல்)லைகாட்சியில் யாழ்ப்பாணச் சாதிமுறைமை தொடர்பாக நிர்மலா, கொண்ஸ்ரைன்,பரிஸ்ரர் ஜோசப் ஆகியோர் உரையாடலில் ஈடுபட்டனர். தமிழ்த்தேசியமானது தன்னை அர்ப்பணித்து ஒரு இனத்துவ அடையாளத்தோடு விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்குமிவ் வேளையில் மேலும் பிரிவினைகளைத் தூண்டும் விதமான தலைப்புகளுடனான விவாதங்கள் தேவையா? தமிழத்தேசியமானது அனைத்தையும் கடந்து அண்மையில் வாக்குச் சீட்டுக்கள் மூலம் செய்தியைச் சொல்லிவிட்டு அமைதியாக இருக்குமிவ் வேளையில் இது தேவையா? தமிழ்மொழி பேசுகின்றவர் என்ற வகையிலே திரு அணஸ் அவர்களே உங்களது நோக்கம் என்ன?

    • 8 replies
    • 2.4k views
  9. புதன்கிழமை, 03 ஓகஸ்ட் 2011, 00:09 GMT சன் சீ‘ கப்பல் மூலம் கடந்த ஆண்டு கனடாவைச் சென்றடைந்த மற்றொரு தமிழரையும் நாடுகடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சிறிலங்காவில் போர்க்குற்றம் புரிந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதாலேயே அவரை கனடாவை விட்டு வெளியேற்றுமாறு பணிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினராக இருந்த இவர், தற்போது மல்பே றிட்ஜ் ஆண்கள் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். குறிப்பிட்ட தமிழர் விடுதலைப் புலிகள அமைப்பில் இருந்தபோது போர்க்குற்றங்களை புரியுமாறு ஏனைய உறுப்பினர்களுக்கு ஆலோசனை கூறியதாகவும், இதனால் அவரை கனடாவை விட்டு வெளியேற்றுமாறும் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சபை வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட முடிவில் கூறியுள்ளது. போ…

  10. வவுனியா மாவட்டத்தில் 600 சிறார் போராளிகள் வரை காணாமல் போயுள்ளனர். இவர்கள் இறுதிப்போரில் வவுனியா முகாம்களுக்குள் வந்துள்ளதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். ஆனால் பின்னர் காணாமல் போயுள்ளனர். . பெற்றோர்கள் தமது பிள்ளைகளை கண்டுபிடித்து தருமாறு தினமும் வவுனியா கச்சேரி, மனித உரிமை ஆணைக்குழு, யுனிசெவ் போன்ற அமைப்புக்களின் காரியாலயங்களுக்கு செல்கின்றவர். . காணாமல் போனவர்களில் சிலர் போரில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அதே வேளை முகாமில் வைத்து கடத்தப்ப்பட்டவர்கள் தொடர்பில் தாம் விசாரித்து வருவதாக யுனிசெவ் வவுனியா அலுவலகத்தில் பணியாற்றும் சஜித் தோமஸ் என்பவர் கூறியுள்ளார். முகாம்களில் சிறார் போராளிகளின் காணாமல் போதல்களிற்கு அரசாங்கத்தின் பின் புலம் இருப்பதாகவும் யுனிசெவ் கூறுகின்…

  11. இலங்கைப் பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறிய சர்வதேச சமுகம், சர்வதேச விசாரணைக்காவது நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரப்பட்டுள்ளது. இனப்படுகொலை, பெருமளவு கொலைகள் போன்றன தொடர்பாக சர்வதேச சமுகம் இலங்கையில் இருந்து உண்மையான நடவடிக்கை எடுக்க ஆரம்பிக்கவேண்டுமென Sri Lanka Campaign for Peace and Justice அமைப்பின் தலைவர் எட்வேட் மோர்ரைமர் (Edward Mortimer) தெரிவித்தார். சர்வதேச ரீதியில் காலம்காலமாகப் புரியப்படும் இனப்படுகொலைகளின் போது, அத்தகைய அட்டூழியங்கள் மறுபடியும் இடம்பெற அனுமதிக்கப்படப்போவதில்லையென்று சர்வதேச சமுகம் கூறுவது வழக்கமாகியுள்ளதெனவும், ஆனால், அத்தகைய அட்டூழியங்கள் மீண்டும் மீண்டும் இடம்பெறுவதாகவும் அவர் பத்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு சர்வத…

  12. http://www.yarl.com/files/110802_yarl_reporter.mp3

    • 4 replies
    • 1.4k views
  13. தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படத்தை எடுக்கும் போது முஸ்லிம்கள் பர்தா மற்றும் தொப்பி அணியக் கூடாது என பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தின் மூலம் முஸ்லிம் மக்களின் அடையாளம் பாரதூரமான முறையில் மீறப்பட்டிருப்பதாக மேல் மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். குறித்த சுற்று நிருபம் சகல பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதன்மூலம் முஸ்லிம் மக்களின் அடையாளத்தை அரசாங்கம் பாரதூரமான முறையில் புறந்தள்ளியுள்ளது. முஸ்லிம் மக்களின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காகவும். அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளுக்கு எதிராகவும் ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுக்கும் எனவும் இந்த நடவடிக்கையில் அனைத்து முஸ்லி…

  14. ஈழத்தமிழர்கள் மீதான படுகொலை: மக்களவையில் விவாதிக்க கோரிக்கை விடுத்தது தி.மு.க! இலங்கையில் நடைபெற்ற போரில் அப்பாவித் தமிழர்கள் 40,000 பேர் சிறிலங்கா படைத்தரப்பினரால் கொல்லப்பட்டமை குறித்து விதி எண் 193 கீழ் மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி மக்களவைத் தலைவர் மீரா குமாரிடம் தி.மு.க நாடாளுமன்றத் தலைவர் டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், கச்சதீவுப் பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்தும் மக்களவையில் விவாதிக்க வேண்டும் என் தி.மு.க.வின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங், மக்களவைத் தலைவர் மீரா குமார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரா…

    • 6 replies
    • 896 views
  15. சானல் 4வுக்கு இலங்கை அரசின் பதில் வீடியோ சானல் 4 தொலைக்காட்சியில் கடந்த காலங்களில் வெளியான விவரணப் படங்களில் இலங்கைப் படையினர் பெருமளவு போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. இப்போது ‘லைஸ் அக்ரீட் அப்ஒன்’ என்ற தலைப்பில், அதாவது, சனல் 4 இல் வெளியான விவரணப்படத்தை பொய்களாலானது என்று பிரசாரம் செய்யும் பாணியில் ஆங்கில மொழியிலான விவரணப் படமொன்று தற்போது இலங்கை அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. சானல் 4 இல், இலங்கை அரசாங்கமும் படையினரும் புரிந்துள்ளதாக கூறப்பட்ட பல குற்றச்செயல்களை மறுக்கும் இந்த படம், வீடியோ காட்சிகள் போலியாக தொகுக்கப்பட்டு, உண்மையானவையாக காட்டப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது. தற்போது, இலங்கை அரசின் பொறுப்பில் ம…

  16. ஜனாதிபதி இந்த மாதம் சீனாவுக்கு விஜயம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த மாதம் சீனாவுக்கு மற்றொரு விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் உத்தேச விஜயத்தை வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால், அதற்கான திகதிகள் இன்னரும் உறுதிப்படுத்தப்படவில்லையெனத் தெரிவித்துள்ளனர். சீனாவுக்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டு ஒரு வருடத்துக்கும் குறைவான காலத்திற்குள் மீண்டும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். கடந்த நவம்பரில் சங்காயில் இடம்பெற்ற எக்ஸ்போ 2010 கண்காட்சியின் விசேட அதிதியாக ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார். இலங்கையில் அதிகளவு முதலீடு செய்யும் நாடாக சீனா உள்ளது. அத்துடன், பல்வேறு முக்கியமான அபிவிருத்தித் திட்டங்களில் சீனா ஈடுபட்டுள்ள…

  17. அரசாங்கம் நேற்று ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. போர் தொடர்பான தனது வெள்ளை அறிக்கை என கூருகின்றது. இந்த அறிக்கை மூலம் அரசாங்கம் தனது குற்றங்களை மூடி மறைக்க முற்படுகின்றது. . கடந்த இருவருடமாக பூச்சிய இழப்பு நடவடிக்கை என கூறி வந்த அரசாங்கம் இப்போது முதற்தடவையாக பொதுமக்கள் கொல்லப்பட்டதனை ஏற்றுக்கொண்டது. ஆனாலும் கொல்லப்பட்டமைக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. . போரில் கனரக ஆயுதங்கள் பாவிக்கப்பட்டமைக்கான ஆதாரங்கள், தொண்டு நிறுவனங்கள், வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்களிற்கான ஆதாரங்க இருக்கின்றன. ஆனால் அதற்கான பதில் அரசின் அறிக்கையில் இல்லை. . விடுதலைப்புலிகளின் குற்றங்களை முழுமையாக கூறும் அரசாங்கம் தான் வன்னியில் என்ன செய்தார்கள், பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு…

  18. http://www.yarl.com/files/110802_sistergeraldine.mp3

  19. 'சனல் - 4க்கு எதிராக சாட்சியமளிக்க 11,664 முன்னாள் போராளிகளும் தயார்' இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள சனல் - 4 தொலைக்காட்சிக்கு எதிராக சாட்சியமளித்து, இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றுவதற்கு அரசாங்கத்தின் மீது முழுமையான நம்பிக்கை கொண்டுள்ள முன்னாள் போராளிகள் 11ஆயிரத்து 664பேரும் தயாராக உள்ளனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை சமூகத்தில் மீள்குடியேற்றவும் ஒன்றிணைக்கவுமான சமய சமூகத் தலைவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வொன்று புனர்வாழ்வு ஆணையாளர் தலைமையதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் திருகோணமலையில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரைய…

  20. http://www.yarl.com/files/110802_colombo_reporter_0.mp3

    • 0 replies
    • 980 views
  21. No one contacted me; Gota Monday, 01 August 2011 11:28 Defence Ministry Secretary Gotabaya Rajapaksa releasing the report titled “Humanitarian Operation Factual Analysis July 2006 – May 2009,” said a short while ago that nobody contacted him for a surrender during the war. “The false claims and allegations made by the Tamil Diaspora together with the LTTE international network will be laid to rest with the launching of the report,” Mr. Rajapaksa said. Meanwhile, speaking at the event External Affairs Minister G. L. Peries appeals to the international community to do justice to Sri Lanka and to listen to its voice. http://www.dailymirror.lk/top-story/12…

  22. சிரேஸ்ட ஊடகவியலாளர் குகநாதன் மீதான தாக்குதலைக் கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்! - அரசுக்கு எதிராக கோசம்!! உதயன் பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் மீதான தாக்குதலைக் கண்டித்து கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இன்று (02.08.11) ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட பலர் கலந்து கொண்டு சிரேஸ்ட ஊடகவியலாளர் குகநாதன் மீதான தாக்குதலைக் கண்டித்து கோசங்களை எழுப்பியுள்ளனர். ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறையை மேற்கொள்ளாதே -தகவல் சுதந்திரத்தை தடுக்காதே - ஊடகப் படுகொலையை நிறுத்து - எழுது எழுது அநியாயங்கள், சமூக விரோதங்களை எழுது - பத்திரிகை ஆசிரியர்கள் மீதான அடக்குமுறையை உடன் நிறுத்து…

    • 4 replies
    • 698 views
  23. இலங்கை தமிழர்க்கு ஓய்வூதியம் தமிழகத்தின் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 வீதம் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். . இதன் மூலம் 5500 இலங்கைத் தமிழர் குடும்பங்கள் பயன்பெறும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: முதலமைச்சர் ஜெயலலிதா இலங்கைத் தமிழர்கள் நலனில் எப்போதும் மிகுந்த அக்கறைக் கொண்டுள்ளார். எனவே தான், இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில்,அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து…

    • 1 reply
    • 451 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.