ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
தமிழகத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு, மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், ‘’காங்கிரஸ் கட்சியின் தமிழர் விரோதப் போக்கை மக்களிடம் கொண்டு சேர்த்து, அக்கட்சியின் முகத்திரையை கிழித்ததில் நாம் தமிழர் கட்சிக்கும், உங்களுக்கும் உள்ள பங்கை யாரும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது. ஈழத் தமிழர்களுக்கு எதிராக போர் புரிந்த ராஜபக்சே மற்றும் ராணுவ அதிகாரிகள் போர்க்குற்றவாளிகளே என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அத்தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு தாங்களும் நாம் தமிழர் கட்சியும் முயற்சி எடுப…
-
- 0 replies
- 665 views
-
-
வியாழக்கிழமை, 26 மே 2011 11:29 | இந்தியாவை நம்ப வேண்டாம்: கூட்டமைப்புக்கு சிவாஜி ஆலோசனை அரசுடனான பேச்சுவார்த்தைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நம்பிக்கையில்லையேல் அதிலிருந்து உடனடியாக வெளிவரவேண்டும் என தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான தீர்வு திட்ட அறிக்கையை உடனடியாக அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். தொடர்ந்து காலத்தை கடந்து அரசுடன் பேச்சுவார்த்தைகளை நீடிப்பதானது ஐ.நா அறிக்கையிலிருந்து இலங்கை அரசை காப்பாற்றுவதற்கான ஒரு வழியாகிவிடும் என்றார். இதேவேளை, இந்திய அரசின் பேச்சினைக் கேட்டு தீர்வுத் திட்டத்தை சமர்பிக்காமல் இருக்கக்கூடாது. சோனியா காந்தி அ…
-
- 0 replies
- 826 views
-
-
சனநாயக முறைப்படி தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் - அப்துல் கலாம். தமிழர்களின் பிரச்சினைகளிற்கு சனநாயக முறைப்படி தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என இந்திய முன்நாள் சனாதிபதியும் தமிழருமான அப்துல்கலாம் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார். முன்நாள் இந்திய சனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் அவர்கள் ஆனந்தவிகடன் வார இதழில் வாசகர்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்துவருகின்றார். அந்தவகையில் இந்தவாரம் வெளியாகியிருக்கும் பகுதியில் வாசகர் ஒருவரால் கேட்டப்பட்ட கேள்விக்கே மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். கேள்வி: "கச்சதீவை நம்மால் மீட்கவே முடியாதா?" அப்துல்கலாம் அவர்களின் பதில் : "இலங்கையும் இந்தியாவும் கலாச்சாரத்தால் இனத்தால் மொழியால் பல நூறு ஆண்டுகளாக ஒரு…
-
- 0 replies
- 778 views
-
-
போரின் போது வன்னியில் கொல்லப்பட்ட மக்களது எலும்புக்கூடுகளை அகழ்ந்து எரித்தழிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுவருவதாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் தீவிரம் பெற்ற 2009 ஜனவரி தொடக்கம் மே வரையான காலப்பகுதிகளில் புதுமாத்தளன், மாத்தளன், இடைக்காடு, அம்பலவன் பொற்கணை, வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், பனையடி, முள்ளிவாய்க்கால் மேற்கு, கிழக்கு ஆகிய பகுதிகளில் மக்கள் செறிந்துவாழ்திருந்தனர். அந்தப் பகுதிகளில் வீழ்ந்த எறிகணைகள் ஒவ்வொன்றிற்கும் குறைந்தது பத்து உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருந்தன. இவ்வாறு கொல்லப்பட்ட மக்களின் சடலங்கள் அந்த அந்த இடங்களிலேயே புதைக்கப்பட்டன. களப்புவெளி, கடற்கரைப்பிரதேசங்கள், மக்கள் வாழிடங்கள் என வேறுபா…
-
- 0 replies
- 821 views
-
-
Thursday, May 26, 2011, 10:22சிறீலங்கா59 views2 comments 70,000 மக்களைக் கொண்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் 70,000 படையினர் நிறுத்தப்பட்டுள்ளார்கள். போர் முடிவுற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரும் தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க அரசு எந்தளவு தூரம் திறனற்றுப் போயுள்ளது என்பதை இது உணர்த்துவதாக உள்ளது என சுதந்திர ஊடகவியலாளரும், சுதந்திய ஊடக அமைப்பின் முக்கியஸ்த்தருமான சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இத்தகைய அரசியல் நிலைப்பாடுகளின் மத்தி யில் தமிழ் மக்களுக்கு உண்மையான அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படக்கூடும் என்பதை எண்ணிப் பார்ப்பது கடினம். போர் மனோபாவத்தால் கட்டி எழுப்பப்பட்டுள்ள இலங்கையின் அரசியல் மனோ பாவமானது எப்போதுமே தமிழ் மக்களை அடி மைப்படுத்தி வைத்துக்கொள்…
-
- 1 reply
- 938 views
-
-
இலங்கையின் புலனாய்வாளர்களால் கண்காணிக்கப்படுகிறார் பாடகர் எஸ்.பி! வியாழன், 26 மே 2011 13:39 இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரால் கண்காணிக்கப்படுவோர் பட்டியலில் தென்னிந்தியாவின் பிரபல பாடகர்களில் ஒருவரான எஸ்.பி பாலசுப்பிரமணியமும் இருந்து வருகின்றார் என்று தெரிகின்றது. இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ' எல்லாளன் ' திரைப்படத்துக்காக பாடி இருக்கின்றார். கரும்புலிகளால் அனுராதபுரம் விமானத் தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை சித்திரிக்கும் முழு நீள திரைப்படம் ' எல்லாளன் '. படத்தின் எழுத்தோட்டத்தில் பாடியவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் என்று இவரின் பெயரும் குறிப்பிடப்பட்டு உள்ளது. படத்தில் கவிஞர் புதுவை இரத்தினத்தின் பாடல் வரிகளும், இவரின் குரலும் த…
-
- 1 reply
- 1.7k views
-
-
இந்தியா சிறிலங்காவைத் தண்டிக்கவும் தயங்காது! எச்சரிக்கிறார் றொகான் வியாழன், 26 மே 2011 13:08 இந்தியாவின் பூகோள மூலோபாய விருப்பங்களுக்கு முரணாக சிறிலங்கா செயற்படுமானால், இந்தியா மீண்டும் ஒரு குழப்பநிலையை உருவாக்கும். சிறிலங்காவை மீண்டும் ஒருமுறை தண்டிக்கவும் அது தயங்காது என்று எச்சரித்துள்ளார் சிங்கப்பூர் நயங்யாங் பல்கலைக்கழக பேராசிரியர் றொகான் குணரட்ண. கொழும்பில் சிறிலங்கா வர்த்தக சம்மேளனத்தில் Shippers’ Academy நடத்திய கருத்தரங்கில் உரையாற்றிய போதே இவர் இவ்வாறு எச்சரித்துள்ளார். “2009இல் முடிவடைந்த 30 ஆண்டுகாலப் போரின் தொடக்கத்தில் தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கு இந்தியா ஆதரவு கொடுத்தது. இது ஒரு தவறு. அது மீண்டும் இடம்பெற அனுமதிக்கக் கூடாது. அப்படி …
-
- 2 replies
- 1.5k views
-
-
சகல மட்டங்களிலும் இராணுவ மயம் – பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களுக்கும் இராணுவ பயிற்சி! Published on May 26, 2011-8:46 am · No Comments சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் பொது நிர்வாக மட்டங்களில் இராணுவ ஆட்சியே இருக்கின்ற நிலையில் முழுநாட்டின் நிர்வாகத்தையும் இராணுவ மயப்படுத்தவதற்கும், சகல மட்ட நிர்வாகங்களையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராசபக்ச நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் ஒரு அங்கமாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவப்பயிற்சியை ஆரம்பித்துள்ள சிறிலங்கா அரசாங்கம் அடுத்த கட்டமாக பாடசாலை அதிபர்களுக்கு இராணுவ பயிற்சியை வழங்க உள்ளது. பாடசாலை அதிபர்களுக்கும் எதிர்வரும் நாட்களில் இராணுவப் பயிற்சியினை வழங்க…
-
- 2 replies
- 1.5k views
-
-
இனிய உறவுகளே யாழ் ஊர்ப்புதினத்திலே இறுதி சில நாட்களாக ஒரு சில கட்டுரைகளை நோக்குவோமாயின் சில கேள்விகள் உங்கள் மனதையும் குடைந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.அதாவது [பரபரப்பும், விறுவிறுப்பும்....] [......போராளியின் உள்ளக்குமுறல்........][கே பியை விசாரிக்க நீதிபதிகள்.........] இவை எல்லாம் நெதெர்லாந்தை[கொலண்ட்] மையப்படுத்தியும், அங்கே நடை பெற்ற மனித நேயப்பணியாளர்களின் கைது விசாரணயை முக்கியப்படுத்தியதாகவே அமைந்திருந்தது.உண்மையில் தமிழீழ விடுதலைப்புலி அமைப்பை ஐரோப்பாவில் தடை செய்த பின் ஏனய நாடுகளைப்போல் நெதெர்லாந்திலும் ஒரு வருடத்திற்குமுன் கைது, விசாரணை என்று ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்களின் பின் அனைவரையும் விடுதலை செய்தனர் இருவரைத்தவிர. இவ்விருவரையும் கூட மிக விரைவில் விடுதலை…
-
- 7 replies
- 1.7k views
- 1 follower
-
-
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக 136 மில்லியன் யூரோக்களை ஐரோப்பிய வங்கி ஒன்றில் வைப்பிலிட்டிருந்த புலிகளின் ஐரோப்பிய தலைவர் எனக் கூறப்படும் எஸ்.ராமச்சந்திரன் என்பவரை நெதர்லாந்து காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட போது கிடைத்த கணனி மென்பொருள் ஒன்றின் மூலம் இந்த தகவலை நெதர்லாந்து காவற்துறையினர் கண்டறிந்துள்ளனர். இவரை தவிர மேலும் 38 பேர் கைதுசெய்யப்பட்;டுள்ளனர். புலிகளின் நெதர்லாந்து கிளையின் தலைவர் எனக் கூறப்படும் ஸ்ரீஞானம் என்பவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். நோர்வேயில் உள்ள புலிகளின் தலைவர் நெடியவன் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து, ராமச்சந்திரன் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. நெதர்லாந்தில் விடுதலைப் ப…
-
- 1 reply
- 809 views
-
-
நன்றி நக்கீரன்.. மேலும் படங்கள் இங்கு: http://www.nakkheeran.in/Users/frmGalleryList.aspx?GV=706&GSS=8
-
- 15 replies
- 2.9k views
- 1 follower
-
-
அரசு பேச்சை முறிக்கும் என தெரிந்து கொண்டு எதற்காக பேசுகிறீர்கள்- கூட்டமைப்பிடம் சிறிகாந்தா கேள்வி Thursday, May 26, 2011, 10:11சிறீலங்கா, தமிழீழம்33 viewsAdd a comment இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படுமாயின் பேச்சுவார்த்தையிலிருந்து உடனடியாகவே விலகிக் கொள்ளவேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள பேச்சுவார்த்தைச் சூழலில் இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு தீர்வுத் திட்டத்தை உடனடியாக முன்வைத்து பேச்சுவார்த்தையில் உடனடியாக ஈடுபடவேண்டுமெனவும் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலே இதனைத் தெரிவித்தார் ஸ்ரீகாந்தா. இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவரும…
-
- 0 replies
- 789 views
-
-
தழிழர்களால் ஆளப்படுகின்ற சுயாட்சியே தமிழ் மக்களுக்கான தீர்வாகும்: சிறிகாந்தா ஐக்கிய இலங்கையில் தமிழர் மரபுவழிப் பிரதேசங்களுக்குள் அம்மக்களால் ஆளப்படுகின்ற சுயாட்சிதான் தழிழ் மக்களுக்கான தீர்வாக இருக்கின்றது. இதனால் தமிழர்களது கோரிக்கைகள் அடங்கிய பிரேரனைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பித்து அது குறித்த பேச்சுவார்த்தைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட வேண்டும் என தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவரும் சட்டத்தரணியுமான எஸ்.சிறிகாந்தா தெரிவித்தார். இன்று புதன்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது, இந்திய அரசாங்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு …
-
- 4 replies
- 942 views
- 1 follower
-
-
மீண்டெழுந்த தமிழ் உணர்வில் சிதறுண்ட இந்திய காங்கிரஸ்! நான் முதன்முதலில் அவரை சந்தித்தப்போது அவர் வெகு சாதாரணமான இருந்தார். ஒரு கிராமத்து எளிய மனிதனுக்குரிய சொற் பிரயோகங்கள். வார்த்தைக்கு வார்த்தை ‘ அண்ணன்’, ’ மூத்தவர் ’என்றெல்லாம் தேசியத்தலைவரை அழைத்துக் கொண்டிருந்த தன்மை.எளிய உடை. அனைவரையும் கவரக் கூடிய புன்னகை.வயதானவர்கள் தன்னைக் காண வரும் போது எழுந்து நின்று வணங்கும் பணிவு. நான் அவரைக் காணும் போது கையில் சேகுவேரா புத்தகமான ’கனவிலிருந்து போராட்டத்திற்கு’ என்ற புத்தகத்தினை அவர் வைத்திருந்தார். உண்மையில் உணர்வோடிய ஒரு கனவிற்கு உயிர்க் கொடுக்க அவர் அப்போது தயாராகிக் கொண்டிருந்தார் என எனக்கு அப்போது தெரியவில்லை. மறுமுறை நான் அவரைப் பார்த்த இடம் ஒரு சிறை . சிறை ஒரு மன…
-
- 1 reply
- 937 views
-
-
போர்க்குற்றங்களுடன் தொடர்பற்றவர் என்பதை உறுதிசெய்யும் உடன்பாட்டில் கைச்சாத்திட்டுள்ள சவேந்திர சில்வா! வியாழன், 26 மே 2011 07:30 போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டுடையவரும், இலங்கைக்கான ஐ.நாவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மனித உரிமைமீறல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்பற்றவர் என்பதை உறுதி செய்யும் உடன்பாட்டில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைளுக்கான திணைக்கள அதிகாரிகளை மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா இந்தவாரம் சந்தித்துப் பேசியபோதே இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளார். இச்சந்திப்பின்போது, ஐ.நா. அமைதிப்படைக்கு அனுப்படும் படையினர் மனிதஉரிமைமீறல் குற்றச்சாட்டுகளுடன் தொ…
-
- 0 replies
- 733 views
-
-
யுத்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் ஐ.தே.க பங்கேற்பு! வியாழன், 26 மே 2011 11:15 காலி முகத்திடலில் நடைபெறவுள்ள யுத்த வெற்றி கொண்டாட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியும் பங்குபற்றவுள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தவெற்றியின் இரண்டாவது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜோன் அமரதுங்க கலந்துகொள்ளவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த வருடம் இடம்பெற்ற யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை வெற்றிகொண்ட சரத்பொன்சேகாவை அழைக்காததன் காரணமாக ஐக்கிய தேசிய கட்சி புறக்கணித்திருந்தது. எனினும் கடந்த வருடம் இடம்பெற்ற யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தி…
-
- 0 replies
- 762 views
-
-
ராஜிவ் காந்தியைக் கொன்றவர் ரோ அதிகாரிகளிடம் பயிற்சி பெற்ற பெண் புலியாம்! வியாழன், 26 மே 2011 03:54 இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தியை மனித வெடிகுண்டாக சென்று படுகொலை செய்து இருந்த தேன்மொழி இராஜரட்ணம் அல்லது தனு இந்தியாவின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளிடம் ஆயுத பயிற்சி பெற்ற விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களில் ஒருவர் என்று பயங்கரவாத விவகாரங்கள் தொடர்பான உலக நிபுணர்களில் ஒருவரான ரொஹான் குணரட்ண தெரிவித்து உள்ளார். சீனாவுடனான இலங்கையின் நெருக்கமான உறவு இந்தியாவின் கோபத்தை மீண்டும் கிளறி விடும் என்று விளங்கப்படுத்தி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே இவர் இவ்வாறு கூறி உள்ளார். இவர் பேட்டியில் முக்கியமாக தெரிவித்து இருந்தவை வருமாறு: …
-
- 0 replies
- 1.5k views
-
-
தென்னிலங்கையிலிருந்து வந்த அதிகாரிகள் இலஞ்சம் கேட்டனர் – யாழ் வியாபாரிகள் முறைப்பாடு! Published on May 26, 2011-7:33 am · No Comments கொழும்பிலிருந்து வந்து யாழ். மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனைகளை மேற்கொண்ட விலைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தம்மிடம் லட்சம் கோரியதாக யாழ் வர்த்தகர்கள் அரச அதிபர் இமெல்டா சுகுமாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். யாழ். மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் நேற்று முன்தினம் விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகளினால் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வடமராட்சியின் நெல்லியடிப் பிரதேசத்தில் சோதனை மேற்கொண்ட விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சிலர் பிடிபட்ட வர்த்தகர்களிடம் தமது கைத்தொலைபேசி இலக்கங்களைக் கொடுத்துள்ளனர். தம்முடன் அந்த இலக்க…
-
- 0 replies
- 600 views
-
-
வடமராட்சிகிழக்கில் சிங்கள மீனவர்களின் வரவு அதிகரிப்பு! Published on May 26, 2011-7:54 am · No Comments வடமராட்சி கிழக்கு பகுதியில் சிங்கள மீனவர்களின் வரவு அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தடைசெய்யப்பட்ட வலைகளை பாவிப்பதால் வடமராட்சி கிழக்கில் உள்ளுர் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கங்களின் சமாசத்தலைவர் தவரட்னம் தெரிவித்துள்ளார். வடமராட்சி கிழக்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மீனவர்கள் சாதாரண வலைகளையே பயன்படுத்துவதாகவும், அவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் குறிப்பிட்ட சில மணிநேரங்கள் மட்டுமே மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் தென்னிலங்கையிருந்து வந்துள்ள சிங்கள மீனவர…
-
- 0 replies
- 404 views
-
-
http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=22328:2011-05-23-17-39-39&catid=125:2010-05-07-12-27-03&Itemid=675 வறுமையாலும் மன அழுத்தத்தாலும் இன்று யாழ். மாவட்டத்தில் பெண்கள் தற்கொலை செய்கின்ற நிலைமை அதிகரித்தே வருகின்றன. இவ்வாறானதொரு சம்பவம் நேற்று முன்தினமும் யாழ் புன்னாலைக்கட்டுவான் ஈவினையில் நடந்துள்ளது. இச்சம்பவத்தில் முன்னாள் பெண் போராளியான லாவண்யா என்ற 21 வயதுடைய யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளாள். யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அந்த மக்களின் இயல்பு வாழ்க்கை மீளத் திரும்ப இதுவரை அரசாங்கத்தால் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் நடந்தபாடில்லை. சொந்தங்களை இழந்து…
-
- 2 replies
- 638 views
-
-
பயங்கரவாதத்தைத் தோற்கடித்த இலங்கையின் அனுபவங்கள் செயலமர்வில் கதாநாயகனாக இராணுவ உயர்மட்டம் போட்டாபோட்டி [ வியாழக்கிழமை, 26 மே 2011, 05:41.57 AM GMT ] 'பயங்கரவாதத்தைத் தோற்கடித்த இலங்கையின் அனுபவங்கள்" செயலமர்வில் தங்களைத் தாங்களே கதாநாயகனாக்கிக் கொள்ள முன்னாள் இராணுவ உயரதிகாரிகள் மத்தியில் கடும் போட்டியொன்று நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரஸ்தாப கருத்தரங்கின் போது அவரவருக்கு வழங்கப்பட்டுள்ள உரையின் மூலமாக தங்களைத் தாங்களே புகழ்ந்துரைத்துக் கொள்ளும் கைங்கரியத்தை முன்னாள் இராணுவ அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக இராணுவத் தலைமையக வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது. விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது முக்கிய படையணிகளை வழிநடாத்திய ஜகத் டயஸ், பிரசன்ன சில்வா,…
-
- 0 replies
- 374 views
-
-
போர் வெற்றி தொடர்பான தேசிய நிகழ்வு நாளை காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளது [ வியாழக்கிழமை, 26 மே 2011, 03:16.30 AM GMT ] தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி தொடர்பான தேசிய நிகழ்வு நாளை காலி முகத் திடலில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளார். முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படை உட்பட படைத் தரப்பைச் சேர்ந்த 8277 பேர், போர் வெற்றி தொடர்பான தேசிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர். கிழக்கு, யாழ்ப்பாணம் மற்றும் வன்னி என மூன்று பிரிவுகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு விசேட மரியாதை அணி வகுப்புக்கள் நடத்தப்படவுள்ளன. source:tamilwin.
-
- 0 replies
- 318 views
-
-
வெள்ளைக்கொடியுடன் சரணடைய வருகின்றவர்களைப் படுகொலை செய்யுமாறு கோத்தாபய உத்தரவிட்டிருந்ததாக கேள்விப்பட்டிருந்தேன்: சரத் பொன்சேகா [ வியாழக்கிழமை, 26 மே 2011, 01:21.33 AM GMT ] வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களைப் படுகொலை செய்துவிடுமாறு கோத்தாபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தததை தான் கேள்விப்பட்டிருந்ததாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணையில் நேற்று சாட்சியமளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களைப் படுகொலை செய்து விடுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உத்தரவி…
-
- 0 replies
- 438 views
-
-
தமிழ்ச்செல்வனின் மனைவி, பிள்ளைகள் விடுதலை இலங்கை பாதுகாப்பு படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந் தமீழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரேகாவும் அவரின் இரு பிள்ளைகளும் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சு.ப.தமிழ்ச்செல்வன் 02.11.2007 ஆம் திகதி இலங்கை விமானப்படையின் குண்டுத்தாக்குதலில் பலியானார். அவரின் மனைவியும் பிள்ளைகளும் யுத்ததத்தின் இறுதிக்கட்டத்தில் வவுனியா அகதிகள் முகாமுக்கு இடம்பெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/21925-2011-05-25-09-01-04.html
-
- 2 replies
- 1.5k views
- 1 follower
-
-
'புலிகளை அழிக்கவே கருணாநிதியுடன் கூட்டு வைத்தார் சோனியா' சோனியா காந்திக்கு விடுதலைப் புலிகளை அழிக்க கருணாநிதியின் ஆதரவு தேவைப்பட்டதால் அவருடன் கூட்டணி வைத்தார். தற்போது தேர்தலில் திமுக தோற்று விட்டதாஸ் அதிமுகவுடன் கூட்டணி வைக்க நினைக்கிறார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். மதிமுகவின் 18வது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு ஆலங்குளத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட வைகோ பேசியதாவது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் என்ற முறையில் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தனது கட்சியைச் சேர்ந்த 58 வேட்பாளர்களையும், கூட்டணி கட்சியினரையும் தேர்தலில் தோற்கடித்து வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு …
-
- 0 replies
- 1.2k views
-