Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: DIGITAL DESK 3 23 NOV, 2023 | 05:16 PM சிறுவர்கள் மத்தியில் கை, கால் மற்றும் வாய் நோய் (hand, foot and mouth disease (HFMD)) பரவி வருவதாக கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலை சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நோய்க்கான அறிகுறிகள் இருந்தால், பெற்றோர்கள் தங்கள் சிறுவர்களை பாடசாலைகள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் அல்லது பொது இடங்களுக்கு அனுப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். மேலும், சிறுவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் முகக் கவசங்களை அணிவிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். தற்போதைய மழையுடனான வானிலை காரணமாக சிறுவர்கள் அழுவது அதிகரித்து வருவதாக வைத…

  2. இந்த வருடம் இராணுவத்தில் இருந்து 27,000 பேர் வெளியேறியமைக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் இன்று (23) கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இவ்வாறு தெரிவித்தார். "அரசியல்வாதிகளுக்குப் பிறகு, அதிகம் விமர்சிக்கப்படுபவர்கள் பொலிஸார். அதுபோல வரலாற்றில் அரசியல்வாதிகளால் கடுமையாக துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட நிறுவனம் என பார்த்தால் அது காவல்துறைதான். அது குறித்து நாம் கதைக்க வேண்டும்" “அக்டோபர் 13 ஆம் திகதி முதல் 40 நாட்களாக இராணுவப் படைத் தலைவர் (இரண்டாம் நிலை) பதவி வெற்றிடமாக உள்ளது. இதனால் படைகளுக்குள் சிக்கல் எழுந்துள்ளது. இது வரலாற்றில் முத…

  3. சீனா உட்பட எந்தவொரு நாட்டிலிருந்தும் எந்தவொரு ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பலையும் இலங்கை வரவேற்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய நிறுவனமான FirstPost க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். சீனாவின் யுவான் வாங் 5 மற்றும் ஷி யான் 6 ஆகிய கப்பல்கள் அண்மையில் மேற்கொண்ட துறைமுக அழைப்புகளுக்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க,அந்தக் கப்பல்கள் உளவு கப்பல்கள் என கூறுவதற்கு ஆதாரம் இல்லை என தெரிவித்துள்ளார். “உளவு கப்பல் என்றால் என்ன என்பது பெரிய கேள்விக்குறி. இவை சிவிலியன் கப்பல்கள், ஆனால் சிக்கல்கள் இருந்தால், உளவு கப்பல்கள் இருந்தால், அவற்றை உள்ளே வர அனுமதிக்கமாட்டோம். ஆனால் ஆய்வைப் பொருத்தவரை, நாங்கள் அனுமதிப்பது மட்டுமல்ல. சீன கப்பல்கள், ஆனால் ஏனைய கப்பல்கள…

  4. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்களே பொறுப்பு என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய ஊடகமான Firstpost க்கு அளித்த பிரத்தியேக பேட்டியின் போது தெரிவித்துள்ளார். . ராஜபக்சக்கள் தமது செயற்பாடுகளுக்காக மன்னிப்புக் கோர வேண்டுமா என வினவியபோது, அது அவர்களுக்கே உரியது எனவும், அவர்கள் அவ்வாறு செய்துள்ளதாக தாம் நம்புவதாகவும் தெரிவித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க “அவர்களின் காலத்தில் நெருக்கடி ஏற்பட்டது. மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியையும், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியையும் இராஜினாமா செய்தபோது, ஒட்டுமொத்த அரசியல் அமைப்பும் சரிந்தது. நாட்டை பொறுப்பேற்க வேண்டிய எதிர்க்கட்சிகள் பொறுப்பில் இருந்து நழுவின ,” என்றும் தெரிவித்துள்ளார். தான் ராஜபக்ஷக்களை பாதுகாப்பதாக விமர்…

  5. Published By: VISHNU 23 NOV, 2023 | 01:56 PM யாழ்ப்பாணத்தில் காணி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவற்குழி பகுதியில் உள்ள காணி ஒன்றினை வெளிப்படுத்தல் உறுதி மூலம் பெயர் மாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்ட குற்றத்திலையே இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சட்டத்தரணி உள்ளிட்ட சிலரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த காணியின் உரிமையாளர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் அண்மையில் தனது சொந்த ஊருக்கு திரும்பி இருந்த வேளை , தனது காணிக்கு சென்ற போதே , காணி அபகரிக்கப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமையை …

  6. கசிப்பு உற்பத்தியாளருக்கு பாதுகாப்பு கொடுத்த வட்டுக்கோட்டை பொலிஸார்! வட்டுக்கோட்டைப் பொலிஸார் கசிப்பு உற்பத்தியாளர் ஒருவருக்கும், அவரது நண்பர்கள் இருவருக்கும் பாதுகாப்பு வழங்கியுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பத்திரகாளி ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் சசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து அதிருப்தி தெரிவித்த அயல் வீட்டார் மீது குறித்த நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபர் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ள நிலையில், அன்றைய தினம் இரவு முறைப்பாடு அளித்த…

  7. இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தபோது எமது அண்டை நாடான இந்தியா தான் முதலில் உதவியது. ஆனால் நன்றி கெட்ட தனமாக இந்திய அணியின் தோல்வியை இங்கு சிலர் பட்டாசு கொளுத்தி கொண்டாடுகின்றனர் என்று கல்வி ராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு விளையாட்டுப் போட்டி ஒன்றில் வெற்றி தோல்வி என்பது சாதாரண விடயம். அந்த வகையில் கிரிக்கெட் உலகக் கின்ன போட்டியில் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து இலங்கையில் சில பகுதிகளில் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா வென்றுவிட்டது என்பதை விடவும் இந்திய அணி தோல்வி அடைந்து விட்டது என்பதையே அவர்…

  8. இலங்கையில் மிகப்பெரிய புத்தர் சிலையை அமைக்க உள்ளதாக சீனா உறுதியளித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் அரச உறுப்பினருமான சேன் யிங்க், இந்த உறுதிமொழியை பிரதமரிடம் வழங்கியுள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் அரச உறுப்பினருமான சேன் யிங்க் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போதே சேன் யிங்க் இவ்வாறு பிரதமரிடம் கூறியுள்ளார். இலங்கைக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது என்றும், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் பிரதமர், இந்த சந்திப்பில் ச…

  9. மாவீரர் வாரம் ஆரம்பம் : யாழ் பல்கலையில் மாணவர்கள் அஞ்சலி. மாவீரர் வாரம் இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதல் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. அதன்படி இன்று யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவு தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர் வாரத்தை முன்னிட்டு, பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதி மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது. இதேவேளை உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்திலும் மாவீரர் நினைவு வாரத்தின் முதல் நாள் நினைவேந்தல் இன்று இடம்பெற்றது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்கள…

  10. பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷ சகோதர்கள் காரணம் – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரே காரணம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஸ்மன், நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, பி.பி.ஜயசுந்தர, இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபை உறுப்பினர்கள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட குழுவினரால் தாக்கல் செய்யப்பட்…

  11. இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள சூழ்நிலையில், 2023 ஆம் ஆண்டு நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குடும்பம் ஒன்றிற்கு மாதாந்தம் 175, 490 ரூபாய்கள் தேவைப்படுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்ள பெரும்பாலான அரச ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்கள் ஒரு இலட்சம் ரூபா சம்பளம் பெறுவதே மிகக்குறைவு என்றும் அவர் இங்கு சுட்டிக்காட்டி உள்ளார். இவ்வாறிருக்கையில் வாழ்க்கைச் செலவும் அதிகரித்துள்ள சூழ்நிலையில், அரச ஊழியர்களின் இந்த 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பதென்பது போதாத ஒ…

  12. https://www.facebook.com/564189140/posts/pfbid03QcQFimbx3SMcaHuQPMnW1Ag7U6Me2wTC5GppZr7LVNvva3mRBemWa8J4KDeBDQYl/

  13. விடுதலைப்புலிகளின் தலைவரின் மகள் தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் வெளியிட்ட தகவல் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் மகள் துவாரகா உயிருடன் இருப்பதாக போலியான முறையில் பிரச்சாரங்கள் முன்னெடுப்பதாக தென்னிலங்கை ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் துவாரகாவின் படத்தை உருவாக்கி அதனை மாவீரர் தினத்திற்கு வெளியிட்டு அவர் உயிருடன் இருக்கின்றார் என காண்பிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சர்வதேச புலனாய்வு அமைப்புகளை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 27ம் திகதி வெளியிடுவதற்காக காணொளி ஒன்றை தயாரித்து வருகின்றனர். மாவீரர் தினம் இதற்காக விடுதலைப்புலிகளின் தலைவரின் உறவி…

  14. 22 NOV, 2023 | 01:15 PM சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிக்காக சென்ற இலங்கைப் பெண் ஒருவர், அங்கு கடுமையாக துன்புறுத்தப்பட்டு இரும்பு ஆணிகளை பலவந்தமாக விழுங்க வைத்து பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் நாடு திரும்பியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் தர்ஷனி என்ற 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாவார். இவர் துணி துவைக்கும் இயந்திர அறைக்குள் இழுத்துச் செல்லப்பட்டு அங்கு வைத்து கடுமையாக தாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதுடன், இரும்பு ஆணிகளை பலவந்தமாக விழுங்க வைக்கப்பட்டுள்ளமை அவர் சவூதி பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் விழுங்கிய ஆணிகள் தொண்டையில் ச…

  15. யாழ்.பல்கலையில் சட்டத்துறைப் போதனை தமிழிலும் வேண்டும்! ஆதவன் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வியை மும்மொழிகளிலும் கல்வி கற்கும் வாய்ப்பு வழங்கப்படுகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் சட்டத்துறையில் ஆங்கிலமொழி மூலத்தில்மட்டும் நடத்தப்பட்டுவருகின்றது. ஏன் யாழ். பல்கலையில் தமிழ்மொழி மூலத்தில் சட்டக்கற்கையை உட்புகுத்த முடியாது? என்று யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினருமான ம.இளம் பிறையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது தமிழ் மக்களினுடைய பண்பாட்டு, பாராம் பரிய விழுமியங்களைப் பாதுகாக்கின்ற பல்கலைக்கழகமாக இருக்கின்ற நிலையைச் சிதைத்து, சிங்கள மாணவர்களையும் …

  16. 22 NOV, 2023 | 03:34 PM வடக்கு - கிழக்கு மாகாணங்களில் கடற்றொழில்சார் அபிவிருத்திகளுக்காக ஜப்பான் அரசாங்கம் 03 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளதுடன் அது தொடர்பான ஒப்பந்தம் இன்று (22) நிதி அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிதேகி (Misukoshi Hiddheki) நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் கைச்சாத்திட்டனர். அண்மையில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிதேகி (Misukoshi iHiddheki) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கடற்றொழில் அமைச்சில் சந்தித்தபோது கலந்துரையாடப்பட்டமைக்கு அமைய, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் கடற்றொழில் துறையை அபிவிருத்தி செய்வதற்க…

  17. பரதநாட்டிய அவதூறு விவகாரம்; மன்னிப்புக் கோரியது உலமா சபை! ”மதம் மற்றும் கலாசார விழுமியங்கள் நிந்திக்கப்படும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய வழிகாட்டலுக்கு முரணானதும் கண்டனத்திற்குரியதுமாகும்” என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம்.அர்கம் நூராமித் தெரிவித்தார். பரதநாட்டியம் தொடர்பில் மௌலவி ஒருவர் தவறாக பேசிய விடயம் தொடர்பில் சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாடு மாளிகாவத்தை ஜம்இய்யதுல் உலமா தலைமைக் காரியாலத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்ஊடகவியலாளர் மாநாட்டில் அகில…

  18. சட்டக்கல்வி தமிழில் வேண்டும்! ”யாழ் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வி ஆங்கிலத்தில் மாத்திரம் நடைபெற்று வரும் நிலையில், தமிழ் மொழியிலும் சட்டத்துறைக் கல்வி நடைபெறவேண்டும்” என யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினருமான மா.இளம்பிறையன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வியினை மும்மொழிகளிலும் கற்கும் வாய்ப்பு வழங்கப்படுகின்றது. எனினும் யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் சட்டத்துறையில் ஆங்கிலமொழியில் மாத்திரம் சட்டக்கல்வி நடத்தப்பட்டு வருகின்றது. ஏன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மூலத்தில் சட்டக்கற்கையை உட்புகுத்த முடியாது? யாழ்ப்பாணப் பல்க…

    • 2 replies
    • 358 views
  19. முள்ளியவளையில் தனது முச்சக்கரவண்டியில் ‘மாவீரன்’ என எழுதப்பட்ட பெயர் பலகையை காட்சிப்படுத்தியிருந்தமைக்காக அதன் சாரதியான தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். ‘மாவீரன்’ என்பது தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுபடுத்தும் பெயர். ஆகவே குறித்த முச்சக்கரவண்டியின் உரிமையாளர் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணைபோகிறார். அவரைப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரணை செய்யவேண்டும், எனக் கூறியே பொலிஸார் தடுத்துவைத்திருந்தனர். பின்னர் சட்டத்தரணிகளின் விரைவு நடவடிக்கையினால் குறித்த இளைஞர் விடுவிக்கப்பட்டார். உயிர்க்கொடையாளர்கள் எம் மாவீரர்கள் குறித்த இந்த சம்பவமானது, மாவீரரை தமிழர்கள் மறந்தாலும், தமிழர்கள் மீது வன்முறைகளையும், ஒடுக்குமுறைகளையும் கட்டவ…

    • 0 replies
    • 392 views
  20. 4 வயதை பூர்த்தியடைந்த குழந்தைகளை கட்டாயம் முன்பள்ளியில் சேர்க்க வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். இன்று (22)பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பான யோசனைகள் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர், 10ஆம் ஆண்டில் பொதுத் தரப் பரீட்சை நடைபெற உள்ளதாகவும், ஒரு குழந்தை 17 வயதில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் எனவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/282024

  21. வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய இழுவை படகுகளை தடுப்பதற்கு புதிய அணுகுமுறையாக, கடும் நடவடிக்கைகளை எடுக்க மீன்வளத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை இலங்கை கடற்பரப்பில் அவர்களின் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகளை தடுக்கும் என்று தாம் நம்புவதாக, மீன்பிடி மற்றும் நீரியல் வளத் துறை பணிப்பாளர் எஸ்.ஜே.கஹவத்த தெரிவித்துள்ளார். சிறைத்தண்டனைக்கு பின் விடுவிப்பு தற்போது, கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்படும் இந்திய கடற்றொழிலாளர்கள், நீதிமன்றங்களால் இரண்டு ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர். எனினும் புதிய சட்டத்தின்படி, படகுகளின் உரிமையாளர்களுக…

  22. 21 NOV, 2023 | 05:22 PM வடமாகாணத்தில் மேற்கொள்ளக்கூடிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான கலந்துரையாடல், மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன தலைமையில், இன்று செவ்வாய்க்கிழமை (21) வட மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. சுற்றுலாதுறை உள்ளிட்ட வருமானம் ஈட்டக்கூடிய துறைகளில் காணப்படக்கூடிய சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அதிகாரிகளின் ஆலோசனைகளும், ஒத்துழைப்பும் கிடைக்கும் பட்சத்தில் முதலீட்டு ஊக்குவிப்புகளை மேற்கொள்ள முடியும் என இதன்போது வட மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள் . சுற்றுலாதுறை உள்ளிட்ட வருமானம் ஈட்டக்கூடிய…

  23. 110 மில்லியன் டொலர் ஒப்பந்தம் : இலங்கையில் கால்பதிக்கும் அமெரிக்க நிறுவனம் ! உலகின் முன்னணி பெட்ரோலிய பொருட்கள் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஆர்.எம். பாரக்ஸ் நிறுவனத்திற்கும் இலங்கை முதலீட்டு சபைக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. 110 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தின்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 150 உரிமையுடைய எரிபொருள் நிலையங்கள் மற்றும் 50 புதிய எரிபொருள் நிலையங்களை நிறுவவுள்ளது. மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுடன் நீண்ட கால ஒப்பந்தத்தின்படி ஷெல் தயாரிப்புகள் இலங்கையில் விற்பனை செய்யப்படும் கூறப்பட்டுள்ளது. மேலும் அவற்றில் சிறிய அளவிலான பல்பொருள் அங்காடிகள், வாகனங்களுக்கு சார்ஜ் செய…

  24. சர்ச்சைக்குரிய வகையில் தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்கிரமநாயக்க உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். வைத்தியர் கபில விக்கிரமநாயக்க மற்றும் ஏனைய மூவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். ஒக்டோபர் மாதம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம், தரமற்ற தடுப்பூசிகளை இறக்குமதி செய்த மருந்து நிறுவன உரிமையாளரையும், சுகாதாரத் துறையின் மேலும் இரண்டு அரச உயர் அதிகாரிகளையும் கைது செய்யுமாறு உத்தரவிட்டதை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது. சுகாதார அமைச்சின் வழங்கல் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்கிரமநாயக்க மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்க…

  25. கிளிநொச்சி மாவட்டத்தில் A9 வீதியில் உள்ள ஆபத்தான 46 மரங்கள் முழுமையாக அகற்றும் பணி இன்று ஆம்பமானது. குறித்த வீதியில் ஆபத்தானதாக 57 மரங்கள் அடையாளம் காணப்பட்டது. அதில் 46 மரங்கள் முழுமையாக அகற்றவும், 11 மரங்களின் ஆபத்தான கிளைகளை அகற்றவும் அனுமதி கோரப்பட்டது. இந்த நிலையில், அனுமதி கிடைக்கப்பெற்றதை அடுத்து அகற்றுவதற்கான கேள்வி கோரப்பட்டது. இதனை அடுத்து இன்று குறித்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தினால் முன்னெடுக்கப்படும் குறித்த நடவடிக்கைக்கு போக்குவரத்து பொலிசார், மின்சார சபையினர், வீதி அபிவிருத்தி அதிகார சபை, பிரதேச சபையினர் மற்றும் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். குறித்த மரங்களில் அதிகமான பா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.