ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
எம்.வி.சன்.சி தமிழர்களுக்கு நீதி கோரி வழக்கு! வியாழன், 24 பெப்ரவரி 2011 16:44 எம்.வி.சன் சி கப்பலில் வந்த இலங்கைத் தமிழர்களை தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்க கனேடிய அரசு சட்டத்தை துஷ்பிரயோகம் செய்கின்றது என்று குற்றம் சாட்டி வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. இத்தமிழர்களில் சிலரின் விடுதலைக்கான உத்தரவை நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்து உள்ளது. ஆனால் இவ்வுத்தரவுகளை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி அரச தரப்பு சட்டத்தரணிகள் திரும்ப திரும்ப நீதிமன்றத்துக்கு மனுக்களை தாக்கல் செய்து கொண்டு இருக்கின்றார்கள். தமிழர்களை தொடர்ந்து தடுத்து வைக்க அரச சட்டத்தரணிகளால் கையாளப்படுகின்ற இவ்வுத்தி நீதிமன்ற செயல்பாடு மீதான துஸ்பிரயோக நடவடிக்கை என்று நீதிபதி ஒருவர் கடுமையாக கண…
-
- 0 replies
- 424 views
-
-
புலிகளின் அரசியல் பொறுப்பாளராக இருந்த தமிழ்ச்செலவன் படுகொலைக்கு பின்னால்! வெள்ளி, 25 பெப்ரவரி 2011 07:14 "தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் அனுராதபுரம் விமானப்படைத் தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு வஞ்சம் தீர்க்கும் வகையில் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்து வந்த எஸ்.பி தமிழ்ச்செல்வன் மீது அரச படையினர் தாக்குதல் நடத்தி இருக்கவில்லை. அனுராதபுரம் தாக்குதல் நடத்தப்படுவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே புலிகள் இயக்க தலைவர்களை படையினர் வலை வீசி தேடி வந்தனர், படையினரால் தேடப்பட்டோர் பட்டியலில் தமிழ்ச்செல்வனும் மிக முக்கியமான ஒருவராக இருந்தார்." இவ்வாறு தெரிவித்து உள்ளார் விமானப் படைத் தளபதி மார்ஷல் டபிள்யூ. டி.ஆர். எம்.ஜே.குணதிலக. இவர் விரைவில்…
-
- 0 replies
- 896 views
-
-
தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற அடிப்படையில் ஒரு நாட்டுக்குள் இரண்டு தேசங்கள் என்ற இலக்கு நோக்கி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுதியுடன் செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று (23.02.11) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இது குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கடந்த 20ஆம் திகதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வருடாந்த பொதுக் கூட்டம் நடாத்தப்பட்டு அதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குரிய மத்திய குழு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பின்வரும் விடயங்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் இந்த ஊடகவியலாளர் மகாநாட்டில் …
-
- 1 reply
- 967 views
-
-
ஜே.வி.பி உறுப்பினர் மீது பீரங்கி தாக்குதல் நடத்த மகிந்தா திட்டம்? * Thursday, February 24, 2011, 12:09 கெப்பிட்டிக்கெல்லாவை பகுதியில் உள்ள ஜே.வி.பி உறுப்பினர் ஒருவரின் வீட்டின் மீது பீரங்கி தாக்குதலை நடத்த சிறீலங்கா அரசு திட்டமிட்டுவருவதாக கொழும்பு தகவல்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: நேற்று முன்தினம் (22) காலை 10.00 மணியளவில் கெப்பிட்டிக்கொல்லாவை பகுதியில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் ஜே.வி.பி உறுப்பினர் சஞ்ஜீவா பத்மசிறியின் வீட்டுக்கு சென்ற சிறீலங்கா இராணுவத்தின் பீரங்கிப் படையினர் அவரின் வீட்டு அமைவிடத்தை அளவெடுத்துச் சென்றுள்ளனர். ஆட்டிலெறி பீரங்கி தாக்குதலுக்கு நிலையெடுக்கும் குறிகாட்டிகளின் உதவியுட…
-
- 1 reply
- 1.1k views
-
-
பார்வதி அம்மாளின் சாம்பல்மீது தாக்குதல் - GTNசெய்தியாளர் 23 பெப்ரவரி 2011 சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று நாய்களின் பிணங்களும் அந்தச் சாம்பலில் போடப்பட்டுள்ளன. நேற்றைய தினம் மாலை தகனம் செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தாயார் பார்வதி அம்மாளின் சாம்பல்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்தோடு சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று நாய்களின் பிணங்களும் அந்தச் சாம்பலில் போடப்பட்டுள்ளன. இந்தத் தகவலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது: நேற்றைய தினம் மாலை 5மணிக்கு திருமதி பார்வதி அம்மாளின் திருவுடல் தகனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த இடத்தில் இரவு பத்துமணிவரை எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. …
-
- 19 replies
- 2k views
-
-
பார்வதியம்மாளின் தகன மேடை சிதைக்கப்பட்ட சம்பவத்துக்கு அனைத்துலக ஊடகங்கள் முக்கியத்துவம் [Thursday, 2011-02-24 15:07:23] விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் தாயார் வே.பார்வதியம்மாளின் உடல் எரியூட்டப்பட்ட இடத்தில் இருந்த சாம்பலைக் கிளறி எறிந்து நாய்களைச் சுட்டுப் போட்ட அநாகரிகமான செயல் அனைத்துலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியில் நேற்றுமுன்தினம் பார்வதியம்மாளின் உடல் வல்வெட்டித்துறை ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. உடல் தகனம் முடிந்து உறவினர்கள் வீடு திரும்பிய பின்னர் நள்ளிரவில் இனந்தெரியாத நபர்கள் அந்த இடத்தை அநாகரீகமான முறையில் கேவலப்படுத்தியிருந்தனர். சாம்பல் மேடு கிளறி எறியப்பட்டிருந்ததுடன் அதன் …
-
- 1 reply
- 1.2k views
-
-
வியாழக்கிழமை, பெப்ரவரி 24, 2011 இதன்படி இன்றிலிருந்து சர்வதேச செஞ்சிலுவை சங்க யாழ். கிளை மூடப்பட்டு அதன் நடவடிக்கைகள் கொழும்பு பிரதான காரியாலயத்தின் ஊடாக செயற்படுத்தப்படுமென அந்த சங்கம் அறிவித்துள்ளது. யாழ். ஜெயப்பூரில் அமைக்கப்பட்டிருந்த செஞ்சிலுவை காரியாலயத்தின் ஊடாக யுத்த காலத்தின் போது பொது மக்களுக்கு பல சேவைகள் வழங்கப்பட்டன. சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் யாழ். கிளை சுமார் 20 வருடங்களாக செயற்பாட்டில் இருந்து வந்துள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%B…
-
- 11 replies
- 1.2k views
-
-
யாழ். குடா மாதகல் கடற்பரப்பில் மீண்டும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசம் காணப்படுவதாக மாதகல் மீனவர்களும் மாதகல் கடற்றொழில் சங்கத் தலைவர் இராஜசிங்கமும் இன்று தெரிவித்துள்ளனர். இன்று காலை இந்திய மீனவர்களுடைய 6இற்கு மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் அத்துமீறிப் பிரவேசித்து தமது 8 லட்சத்திற்கு மேல் பெறுமதியான வலைகளை அறுத்தெறிந்ததாக கடற்றொழில் வடமாகாண சமாசத் தலைவர் எஸ்.தவரட்ணம் குற்றம் சாட்டியுள்ளார். இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து அவரிடம் தெடர்பு கொண்டு கேட்டபோது அவர் மேலும் தெரிவித்ததாவது- இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டும் காணாததுபோல் இருந்துவிட முடியாது. இந்தநிலை தொடருமானால் வடமாகாண கடற்தொழிலாளர்கள் அகிம்சை வழிகளை தெரிவு செய்யாமல் வன்முறையில் இ…
-
- 0 replies
- 502 views
-
-
தமிழர்கள் கௌரவமாக நடத்தப்படுவார்கள்! இந்தியாவுக்கு இலங்கை வாக்குறுதி வியாழன், 24 பெப்ரவரி 2011 18:12 தமிழர்கள் கௌரவமாக நடத்தப்படுவார்கள் என்று இலங்கை அரசு வாக்குறுதி தந்து உள்ளது என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் டில்லி நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். இவர் இலங்கைத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் கடலில் எதிர்கொள்கின்ற பிரச்சினை ஆகியன சம்பந்தமாக நீண்ட உரை ஒன்றை ஆற்றியபோது இவ்வாறு கூறினார். இவர் இங்கு மேலும் பேசுகையில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்க வேண்டும் என்று கேட்டு இருக்கின்றோம், இலங்கைச் சமூகத்தில் கௌரவ இடம் கொடுத்து தமிழர்கள் நடத்தப்படுவார்கள் என்று எனக்கு வாக்குறுதி தரப்பட்டு உள்ளது, எல்லை தாண்டி வரும் மீனவர்களை க…
-
- 4 replies
- 821 views
-
-
... ஏமாறுபவர்கள் இருக்கும் மட்டும், ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே தான் இருப்பர்!!!!! ..... அலிபாபாவை சந்திக்க புலத்தில் இருந்து சென்ற திருடர் கூட்டத்தின் செலவுகளை, அங்குள்ள மக்களுக்கு செலவழித்திருக்கலாம்????? .... .... ம்ம்ம்ம் ஓசியில் எப்படி எல்லாம் அனுபவிக்கலாம் ... என்ற இணைப்பும் வெகுவிரைவில் ... யூரியூப்பிலாம்!!!!!!
-
- 0 replies
- 918 views
-
-
யாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் 19 பிரதேச சபைகளுக்குத் தேர்தல் நடத்த தடை ... வியாழக்கிழமை, 24 பிப்ரவரி 2011 14:39 யாழ்,கிளிநொச்சி மாவட்டங்களில் 19 பிரதேச சபைகளுக்கான உள்ளுராட்சித் தேர்தலை கைவிடுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுக்கள் 18 இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த 19 பிரதேச சபைகளுக்கென தமது கட்சி தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக மேன்முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுவில் தமது கட்சியின் பெயரை தமிழிழ் மொழிப்பெ…
-
- 0 replies
- 342 views
-
-
சிவில் சமூகத்தில் ஏன் இராணுவத்தினரது அதிகரித்த பிரசன்னங்கள், இராணுவத்தினர் ஏன் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் இவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியாவுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர். யாழ்.மாவட்டத்துக்கு நேற்று விஜயம் செய்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ்.மாவட்ட செயலகத்தில் அரச அதிபருடன் கலந்துரையாடினர். அந்தச் சந்தர்ப்பத்திலேயே இந்தக் கேள்விகள் எழுந்தன. தற்போதைய யாழ்.மாவட்டத்தின் நிலைமை தொடர்பாக ஆராய்வதற்காகவே மேற்படி 14 பேர்கொண்ட குழுவினர் நேற்று இங்கு வருகைதந்தனர். அரச அதிபருடன் குழுவினர் கலந்துரையாடிய வேளையில் யாழ்.மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும், மேற்கொள்ளப்பட்ட அபிவிர…
-
- 1 reply
- 837 views
-
-
வியாழக்கிழமை, பெப்ரவரி 24, 2011 கடந்த வாரம் வடமராட்சி கடலிலும் பின்னர் மாதகல் கடற்பரப்பிலும் மீன்பிடிக்க வந்த ரோலர் படகுகள் திமுக அமைச்சர் பாலுவிற்கும் மற்றும் இன்னொரு திமுக முக்கிய புள்ளிக்கும் சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரோலரில் வந்த மீனவர்கள் தாம் செய்தவை ஓர் நாடகம் என தெரிந்தும் கூலி அதிகமாக தருவதாக கூறியே வடமராட்சிக்கு அருகே வந்து மீன்பிடித்ததாக கூறியுள்ளனர். கூடவே தாம் சொன்னபடி யாழ்குடாவிற்குள் சென்று மீன்பிடிக்காவிட்டால் சம்பலம் தரப்படமாட்டாது என்றும் மிரட்டியதாக மீனவர்கள் கூறியுள்ளனர். இதனை மாதகல் பங்குதந்தை இன்று காலை தொலைபேசி வழியாகவும் உறுதி செய்துள்ளார். http://www.eelanatham.net/story/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E…
-
- 2 replies
- 1.1k views
-
-
இனிஇ இல்லை அண்ணையின் அன்னை! கனடாவிலிருந்து பொன்.சிவகுமாரன் பார்வதி... பார்வதிப் பிள்ளை... பார்வதி அம்மா... அண்ணையின் அம்மா... அன்னை... இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார். இவரது பிள்ளைகளில் ஒருவரானஇ தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் என்ற அறிமுகமே உலகம் முழுக்க இந்த வயதான பெண்ணை அடையாளம் காட்டுகிறது! 2009-ம் ஆண்டு வைகாசி மாதம் 16-ம் நாள் வட்டுவாகல் பாலத்தை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் கடந்தார்கள். மெனிக்பாம் முகாமில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற எம் மக்களைப் பார்த்துஇ 'பிரபாகரனின் தந்தை நான்’ என்று வெண்கலக் குரலில் வேலுப்பிள்ளை சொன்னார். 'நான்தான் அவர் அன்னை’ என்று மெல்லிய குரலால் …
-
- 0 replies
- 1.3k views
-
-
வியாழக்கிழமை, 24, பிப்ரவரி 2011 (16:55 IST) இலங்கைத் தூதரக அலுவலகத்தை மூடும் போராட்டம்: பழ.நெடுமாறன் அறிவிப்பு விடுதலைப் புலிகளின் தாயார் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் அஸ்தியை இழிவுபடுத்தியதைக் கண்டித்து இலங்கைத் துணைத் தூதரக அலுவலகத்தை மூடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பார்வதி அம்மையாரின் உடல் தகனக்கிரியை நடைபெற்ற இடத்தில் சிங்கள இராணுவம் புகுந்து சிதையை அலங்கோலப்படுத்தியும், மூன்று நாய்களை சுட்டுக்கொன்று வந்து அந்த சிதையில் வைத்தும் இழிவான செயலில் ஈடுபட்டுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பகைவர்களாயினும் இறந்…
-
- 0 replies
- 653 views
-
-
யாழில் மீண்டும் இராணுவக் கெடுபிடிகள் அதிகரிப்பு வியாழக்கிழமை, 24 பிப்ரவரி 2011 06:23 யாழ்.குடாநாடு முழுவதும் இராணுவத்தின் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சோதனைக் கேடுபிடிகள் குடும்பப்பதிவு விபரம் திரட்டல் வீதிரோந்து நடவடிக்கைகள் இரவு நேரத்தில் வீடுகளுக்கு சென்று சோதனைகளில் இராணுவத்தினர் ஈடுபட்ட வருகின்றனர். அத்தேடு வலிவடக்குப்பகுதிகளில் 100 மீற்றருக்கு இடையிடையே இராணுவச் சோதனை சாவடிகளை அமைத்து உடற்பரிசோதனைகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். வடலியடைப்பு பகுதிகளில் காலையில் வாகனங்களில் வேலைக்கு செல்பவர்கள் வீதிகளில் இறக்கி பல மணித்தியாலயங்கள் உடற் சோதனைகளுக்கு பின்பே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். வீதிகள் எங்கும் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளதோட…
-
- 0 replies
- 651 views
-
-
Feb 24, 2011 / பகுதி: செய்தி / சுவிற்சர்லாந்தின் 98 விகித விழுக்காடு தமிழீழ மக்கள் போராட்டத்திற்கு விருமபியே நிதிப்பங்களிப்புச் செய்தனர். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு சுவிற்சர்லாந்தில் வாழும் தொண்ணூற்றியெட்டு (98) விழுக்காடு தமழீழ மக்கள் தாமாக விரும்பித்தான் நிதிப்பங்களிப்புச் செய்தனர்ரென சுவிற்சர்லாந்தின் நொசத்தல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் அவரின் பதினைந்தாண்டு கால ஆய்வின் பின்னர் வெளியிட்ட நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார். சுவிற்சர்லாந்தின் தலைநகர் “பேர்னில்” தானைத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதிப்பிள்ளை அவர்களின் நினைவஞ்சலி நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது இந்த நிகழ்வில் இரங்கலுரையாற்றிய இந்து மதகுரு த. சசிக்குமார் மேற்கண்டவாறு தெரிவி…
-
- 0 replies
- 533 views
-
-
யாழ். வல்வெட்டித்துறையில் இருந்து புறப்பட்டு வந்த பஸ் மீது அனுராதபுரத்தில் கல்லெறி! வியாழன், 24 பெப்ரவரி 2011 18:09 யாழ்.வல்வெட்டித்துறையில் இருந்து புறப்பட்டு கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பயணிகள் பஸ் வண்டி ஒன்று அனுராதபுரம் பிரதேசத்தில் நேற்று நள்ளிரவு கல்வீச்சு தாக்குதலுக்கு உள்ளானது. இத்தாக்குதலில் பஸ் வண்டியின் முன் பக்க கண்ணாடி உடைந்து விட்டது. ஆயினும் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. சாரதி வேகமாக பஸ்ஸை செலுத்திக் கொண்டார். பஸ் கொழும்பை காலையில் வந்தடைந்தது. tamilcnn
-
- 0 replies
- 642 views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தாயார் திருமதி பார்வதி அம்மா இன்று காலை 6.30 மணிக்கு வல்வெட்டித்துறை மருத்துவமனையில் இயற்கையெய்தியுள்ளார். திருமதி பார்வதி அம்மா அவர்களிற்கு எமது கண்ணீர் வணக்கங்கள்.
-
- 82 replies
- 7.1k views
-
-
தமிழகக் கட்சி அரசியலுக்கப்பால் ஈழவிடுதலை குறித்து இனியாவது தமிழகம் சிந்திக்குமா? சிந்திக்குமானால் மட்டுமே இதுவரை சிந்திய இரத்தத்திற்கும், ஈகத்திற்கும், அழிவுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதோடு, இனியும் தமிழினம் உலகிலே இனத்தவ ரீதியான அழிவைச் சந்திகாது தடுக்க முடியும். அதனை மிக அழகாக ஒரு இராஜதந்திரிக்குரிய மொழியில் திரு சத்தியாராஜ் அவர்கள் கூறியிருக்கிறார். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33586 நன்றி - தமிழ்நெற்
-
- 0 replies
- 751 views
-
-
வியாழக்கிழமை, பெப்ரவரி 24, 2011 இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் தாம் பெரிதாக கருத்துக்களை முன்வைக்க முயற்சிக்கவில்லை என ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் ஜின் லெம்பர்ட் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு வடக்கு பகுதிக்கு விஜயம் செய்தனர் நேற்று வவுனியாவிற்கு சென்றுள்ளனர்.. நேற்று வவுனியாவிற்கு விஜயம் செய்த இவர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனைத் தெரிவித்துள்ளனர். http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%…
-
- 1 reply
- 1.3k views
-
-
பருத்தித்துறை மற்றும் மாதகல் பகுதியில் அண்மையில் 136 மீனவர்கள் கைது செய்யப்பட்ட விடயத்தின் பின்னணியில் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியும் இந்திய மத்திய அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சியுமான தி.மு.க. பின்னணியில் இருப்பதாக மாதகலைச் சேர்ந்த பங்குத் தந்தை ஒருவர் கூறியுள்ளார்.மீனவ சமூகத்துடன் மிக நெருக்கமாகப் பணியாற்றி வரும் வண.பிதா ஆனந்தகுமாரே இந்த விடயம் குறித்து எக்ஸ் பிரஸ் செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார். உதாரணமாக கடந்த திங்கட்கிழமை 50 றோலர்கள் மாதகல் கடல் பகுதியில் காணப்பட்டன என்று குறிப்பிட்டுள்ள அந்த மத குரு தமிழக மீனவர்களை கடத்தி வந்த விடயத்தில் யாழ்ப்பாண மீனவர்கள் சட்டத்தை தமது கரங்களில் எடுத்துக்கொண்டுள்ளனர் என்பதை தான் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று குறிப்பிட்டிருக்கிறார்…
-
- 1 reply
- 851 views
-
-
தமிழ் சினிமா தயாரிப்பதில் ராஜபட்ச ஆர்வம்? First Published : 17 Feb 2011 05:58:10 PM IST கொழும்பு, பிப்.17: இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்ச தமிழ் சினிமா தயாரிக்க முதலீடு செய்வதில் ஆர்வமாக இருப்பதாகவும், அதற்காக இந்திய இசை அமைப்பாளர் ஒருவரிடம் ஆலோசனை நடத்தியதாகவும் அந்நாட்டின் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறுதிக் கட்டப் போருக்குப் பின் இலங்கையில் தமிழர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போலக் காட்டுவதே படத்தின் குறிக்கோளாக இருக்கும் என்று நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. படத்தை தயாரிக்க கோடிக்கணக்கில் பணத்தை செலவழிக்க ராஜபட்ச தயாராக இருப்பதாகவும், இதற்காக இந்திய இசையமைப்பாளருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அவர் சம்…
-
- 10 replies
- 1.4k views
-
-
தேசத்தின் பேரன்னைக்கு தாயகத்தில் இறுதி நிகழ்வுகள் நடைபெற்ற அதேவேளை பிரித்தானியத் தமிழர்களாலும் நேற்று இறுதிவணக்கம் செலுத்தப்பட்டது. லண்டன் ஈலிங் ரவுண் ஹோல் "பிறின்ஸ் மண்டபத்தில்" நேற்று (22-02-2011) மாலை 6 மணிக்கு இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதன்மைச் சுடர்ரேற்றலுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் முதன்மைச் சுடரை மாவீரர் குடும்பத்தை சேர்ந்த திருமதி. சண்முகசுந்தரம் ( லெப்.கேணல் பாமா மற்றும் லெப். வெங்கடேஸ் ஆகிய மாவீரர்களின் தாயார்) அவர்கள் ஏற்றிவைத்தார். முதன்மை சுடரேற்றலைத் தொடர்ந்து இதுவரை காலமும் போரினால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்காகவும், தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அடு…
-
- 0 replies
- 456 views
-
-
வியாழக்கிழமை, பெப்ரவரி 24, 2011 யாழ்ப்பாணம் தீவகப் பகுதியிலுள்ள ஊர்காவற்துறையில் இராணுவக் காவலரணுக்கு அண்மையிலுள்ள பாலடைந்த கிணற்றிலிருந்து பெண் ஓருவரின் உருக்குழைந்து சிதைந்த சடலத்தை இன்று காலை அப்பகுதி இராணுவத்தினர் மீட்டுள்ளனர். சடலம் துர்நாற்றம் வீசியதினால் அப்பகுதி மக்கள் இராணுவத்தினருக்கு தெரிவித்த தகவலின் அடிப்படையியே இச் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக யாழ். ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொதி ஒன்றினால் சுற்றப்பட்டநிலையில் யாழ். ஊர்காவற்துறை அரச வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. இச்சடலத்தில் வெட்டுக்காயங்களும் காணப்படுவதாக யாழ். ஊர்காவற்துறை வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். http://www.eelanatham.net/story/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D…
-
- 0 replies
- 645 views
-