Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐ.நா நிதி திரட்டவுள்ளது! [ பிரசுரித்த திகதி : 2011-01-14 08:32:27 PM GMT ] இலங்கையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சர்வதேச நிதி வழங்குனர்களிடம் இருந்து உதவிகளை கோரவிருப்பதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள்சபையின் நிவ்யோர்க் தலைமையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, பேச்சாளர் மார்டின் நெசர்ஸ்கீ இதனை தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைகான வதிவிடப்பிரதிநிதி நீல் புஹ{னே, வெள்ளத்தின் பாதிப்புகள் குறித்து விபரங்களை சேகரித்துக் கொண்டிருப்பதாக தமக்கு தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்காக தற்போது ஐக்கிய நாடுகள் சபை நிவாரணங்களை வழங்கி வருகிறது தொட…

  2. கோப்பாய் பொலிஸாரினால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உரும்பிராய் யோகபுரம் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து மீட்க்கப்பட்ட சடலம் அந்தப் பகுதியில் கடந்த வாரம் காணாமல் போன ஜந்து பிள்ளைகளின் தந்தையினுடையது என அடையாளம் காணப்பட்டுள்தாக எமது மாவட்ட செய்தி நிரூபர் தெரிவித்துள்ளார். மேலும், யாழ் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டு இருந்த சடலத்தை நேற்று மாலை உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளார்கள். இதனை மேலும் உறுதி செய்யும் வகையில் தாயார் இன்று குறிப்பிட்ட சடலத்தை அடையாளம் காட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சடலம் மீட்க்கப்பட்ட கிணற்றில் இருந்து காணமல் போன மகாலிங்கம் அமிர்தராஜ் என்பவரின் கையடக்க தொலைபேசி மற்றும் சாரமும் நேற்றயை தினம் அடையாளம் காணப்பட…

  3. வெள்ளத்தால் பாதிப்படைந்த கிழக்கு மாகாண மக்களுக்காக யாழ்ப்பாண செயலக ஊழியர்களினால் சேகரிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களைக் கொண்ட தொகுதி ஒன்று இன்று கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண செயலக ஊழியர்களின் ஒரு நாள் வேதனமான சுமார் 16 லட்சம் ரூபா நிதியின் மூலம் பெறப்பட்ட அத்தியாவசிய பொருட்களே அரச அதிபர் இமேல்டா சுகுமாரின் மேற்பார்வையில், அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் இன்று மாலை கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஈழ நாதம்

  4. கிருஷ்ணகுமார் யார் என்று தெரியுமா? தெரியாது! சதாசிவம் கிருஷ்ணகுமார்? தெரியாது! கிட்டுவைத் தெரியுமா? ஓ தெரியுமே! யார் அவர்? கிட்டு மாமா! யாழ்ப்பாணச் சிறுவர்களுக்கு அவர் கிட்டு மாமா. நடுத்தர வயதினருக்கு அவர் கிட்டண்ணா. வயது வந்த முதியோருக்கு கிட்டர். இயக்கம் அவருக்கு வைத்த பெயர் வெங்கிட்டு. அதுவே நாளடைவில் சுருங்கி கிட்டு என ஆகியது. சுதந்திர தமிழீழத்தின் போராட்ட வரலாறு எழுதப்படும்போது தளபதி கிட்டுவுக்கு ஒரு முழு அதிகாரம் ஒதுக்கப்படும். தலைவர் பிரபாகரனுக்கு அடுத்ததாக தமிழீழ மக்களது மனம் கவர்ந்த, நெஞ்சம் நிறைந்த வீரனாக கிட்டு திகழ்கிறார். யாழ்ப்பாண இராச்சியம் நான்கு நூற்றாண்டு காலம் (கிபி 1215-1619) நிலைத்திருந்தது. இந்தக் காலத்தில் ஆரிய…

  5. இலங்கையின் வட மத்திய மாகாணத்திலுள்ள மின்னேரியா, கடுல்ல தேசிய பூங்காவின் ஆயுதக் களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்கள் இன்று அதிகாலை இனந்தெரியாத குழு ஒன்றினால் கொள்ளையிடப்பட்டுள்ளன. இதனையடுத்து அங்கு பணிபுரியும் 11 ஊழியர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. கடுல்ல தேசிய பூங்காவிற்குள் பிரவேசித்த இனந்தெரியாத ஆயுதக்குழு ஒன்றே இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் இந்தக் கொள்ளையை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பெருமளவு தன்னியக்கத் துப்பாக்கிகள், ஷொட் கன் ஒன்று, பல சுற்று துப்பாக்கி ரவைகள் மற்றும் 16,000 ரூபா பணம் என்பனவே இன்று அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தையடுத்து இ…

  6. எம்.வி.சன்.சி கப்பலில் கரும்புலி வீரர்? வெள்ளி, 14 ஜனவரி 2011 21:52 கடந்த ஒகஸ்ட் மாதம் எம்.வி.சன்.சி கப்பலில் கனடாவை வந்து அடைந்த இலங்கைத் தமிழர்கள் 492 பேரில் இருவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் ஆவர் என்று பெரிதும் சந்தேகிக்கப்படுகின்றது. கனேடிய புலனாய்வாளர்கள் இச்சந்தேகநபர்களுக்கு எதிராக அங்கு நீதிமன்றத்தில் வழக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார்கள். நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சந்தேகநபர்கள் இருவரும் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் அல்லர் என்றும் மாறாக மீனவர் என்றும் இச்சந்தேகநபர்களில் ஒருவர் இந்நீதிமன்றத்துக்கு தெரிவித்து உள்ளார். இருப்பினும் புலிகள் இயக்கத்தை ஆதரித்து வந்திருக்கின்றார் என்பதை…

    • 2 replies
    • 1.4k views
  7. தமிழனுக்கு சிங்களன் அளித்த பொங்கல் பரிசு துப்பாக்கி தோட்டா -சீமான் இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் செல்வனேந்தல் பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்கள் நேற்று கடலுக்கு ஒரு படகில் இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்கச் சென்ற பொழுது எம் இனத்தை அழித்த சிங்களனின் கடற்படை துப்பாக்கியால் சுட்டதில் பாண்டியன் (வயது 19) என்ற மீனவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.இன்னும் வாழ்வின் சுகம் அனுபவியாத தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய அந்த உயிர் இன்று நம்மிடம் இல்லை.இதற்கு யார் பொறுப்பு? இதுவரை 540 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொலை செய்யப் பட்டுள்ளனர்.ஆனால் இது போன்ற தாக்குதலைக் கண்டிக்கத் …

  8. இலங்கைக் கடல் பரப்புக்கு அருகில் மூழ்கிய பிரிட்டன் கப்பல்! வெள்ளி, 14 ஜனவரி 2011 22:10 காலநிலைக் கோளாறு காரணமாக இலங்கைக் கடல் பரப்புக்கு அருகில் பிரித்தானிய கப்பல் ஒன்று மூழ்கி உள்ளது. ஆயினும் சிப்பந்திகள் மூவர் அதிஷ்டவசமாக காப்பாற்றப்பட்டு உள்ளனர். இவர்களில் கப்பல் தலைவரான கெய்த் ஹார்டிங் (வயது-68) என்பவருக்கு கையில் காயங்கள். இவர் கென்யாவைச் சேர்ந்தவர். ஏனைய இருவரும் மாலுமிகள். ஒருவர் பிரிட்டனைச் சேர்ந்தவர். மற்றவர் பெல்ஜியத்தைச் சேர்ந்தவர். சிப்பந்திகள் மூவரும் மலேசியா ஊடாக பயணித்துக் கொண்டு இருந்த வர்த்தக கப்பல் ஒன்றின் மூலம் காப்பாற்றப்பட்டு இருக்கின்றனர். tamilcnn.com

  9. (ஈழத் தமிழர்களுக்குரிய அரசியல் தீர்வு ஏற்படவேண்டும் என்று விரும்பும் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய செய்திகள் - இணையதளத்தில் கிடைத்தது) அய்ரோப்பியக் காலனியர்கள் கால்வைத்த காலத்தில், இப்பொழுது சிறீலங்கா என்றும், அப்பொழுது சிலோன் என்றும் அழைக்கப்பட்ட இலங்கைத் தீவில், மூன்று முடியரசுகள் இருந்தன; ஒவ்வொன்றும் முழு அதிகாரம் பெற்ற தனியரசாகவும், தனித்தனி நில எல்லையைக் கொண்டதாகவும் இருந்தது. அந்த மூன்று அரசுகளையும் 1833இல் பிரிட்டிஷ் அரசு ஒரு நிருவாகத்தின் கீழ் கொண்டுவந்தது. 1948இல் விடுதலை அளித்த பொழுது, தீவு முழுமைக்குமான ஆட்சியை, பெரும்பான்மை தேசியமான சிங்களரின் கீழ் பிரிட்டன் ஒப்படைத்தது. நீதியும் தன்மதிப்பும் உடையவர்களாய், சம நிலையில் வாழ வேண்டும் என்பதற்காகத் தமிழர்க…

  10. வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு இந்திய அரசாங்கம் ஒரு தொகுதி நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைத்துள்ளது. நிவாரணப் பொருள்களைத் தாங்கிய விமானம் இன்று கொழும்பை வந்தடையும் என கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரியொருவர் தெரிவித்தார். சீனி, பால்மா, சுத்தமான குடிநீர், பாய்கள், படுக்கை விரிப்புக்கள் உள்ளிட்ட உடனடித் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான நிவாரணப் பொருட்களே இலங்கைக்கு எடுத்து வரப்படுவதாகவும், இந்நிவாரணப் பொருள்களை இன்றைய தினமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். My link

    • 3 replies
    • 906 views
  11. வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. சுமார் 1,055,185 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 பேர் காயமடைந்துள்ளதுடன், 12 பேர் காணாமல் போயுள்ளனர். 361,143 இடம்பெயர்ந்த மக்கள் தங்குவதற்காகவும் இவர்களுக்கான உலர் உணவுப் பொருள்கள் மற்றும் மருத்துவ வசதிகளை வழங்குவதற்காகவும் 594 நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டது. வெள்ளத்தினால் 2890 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 16,029 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. http://www.tamilmirror.lk/index.php/2010-07-14-09-13-23/14908----27-.html

    • 2 replies
    • 488 views
  12. எமது மக்களுக்கான விடிவு என்பதும் அதனை ஒட்டிய போராட்டம் என்பதும் பலவகைகளாக வகுக்கப்படதுண்டு, வகுக்கப்பட்டும் வருகின்றது. விடுதலைப்புலிகள் என்கின்ற அமைப்பு பலமாக ஈழதேசத்தில் இருந்தபோது சர்வதேசம் எங்கும் வாழும் மக்களிடத்தில் இருந்த ஒற்றுமையும், புலம்பெயர் போராட்டங்களும், இன்று ஏன் முடங்கிப் போய்க்கிடக்கின்றன? ஈழத்தில் ஆயுதப்போரட்டம் என்பது நாங்களாக விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல. சிங்களப் பேரினவாதத்தினால் எங்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்றே. விடுதலைக்காகப் போராடிய அமைப்பை திட்டமிட்டு பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தியமையால் தொடர்ந்து இயங்கவிடாது தடுத்தது சர்வதேச நாடுகள். சிங்கள அரசும் திட்டமிட்டே சிறுவர் படை சேர்ப்பு என்று நடக்காத ஓர் வதந்தியைப் பரப்பி எமது இனத்தினை அதன் சுதந்…

  13. யாழ். உரும்பிராய் பகுதியில் பாலடைந்த கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மாலை 6 மணியளவில் கோப்பாய்ப் பொலிஸாரால் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யாழ். நீதவான் ஆனந்தராஜா முன்னிலையில் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்கவருடைய இந்த சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனால் சில திங்களுக்கு முன்னர் குடும்ப தலைவர் ஒருவர் கடத்தப்பட்டமை தெரிந்ததே ஆகவே இவருடைய சடலமாக இருக்கலாம் என ஐயப்படுகின்றனர் மக்கள். ஈழ நாதம்

  14. ‘‘உங்களிடம் பேச வேண்டும். மாலை 6 மணிக்கு தாயகம் வந்திடுங்கள்.’’ என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவிடமிருந்து அவசர அழைப்பு! விடுதலை ராஜேந்திரன், பேராசிரியர் சரஸ்வதி, ஓவியர் புகழேந்தி, கவிஞர் காசி ஆனந்தன், வழக்கறிஞர்கள் ராதாகிருஷ்ணன், புகழேந்தி,சில பத்திரிகையாளர்கள் என எல்லோரையும் அழைத்திருக்-கிறார் வைகோ. 10-ம் தேதியன்று மாலை 6 மணிக்கு தாயகத்தில் எல்லோரையும் வரவேற்ற வைகோ, அவர்களை கூட்ட அரங்கில் அமரச் செய்தார். ‘எதற்காக அழைக்கப்பட்டிருக்கிறோம்?’ என்றே தெரியாமல் அனைவரும் மௌனமாகக் காத்திருக்க, விளக்குகள் அணைக்கப்பட்டு, அந்த அரங்கிலிருந்த தொலைக்காட்சியில் உரையாக்கம், இயக்கம், வெளியீடு வைகோ என டைட்டில் கார்டுடன்,‘ஈழத்தில் இனப் படுகொலை, இதயத்தில் ரத்தம்’ என்ற தலைப்ப…

  15. மன்னார் மாவட்டம் மடு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அருவியாறு பெருக்கெடுத்து ஊரில் புகுந்ததையடுத்து, தம்பனைக்குளம், பண்ணைவெட்டுவான் மற்றும் அதன் அயல் கிராமங்களின் தாழ்ந்த பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து பொது இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளதாக மடு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு இடம்பெயர்ந்த 241 குடும்பங்கள் கட்டையடம்பன் பாடசாலையிலும், அங்குள்ள இரண்டு கத்தோலிக்கத் தேவாலயங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு தினங்களாக இடம்பெயர்ந்துள்ள இந்த மக்கள் 900 பேருக்கு சமைத்த உணவும் வேண்டிய அடிப்படை வசதிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் மடு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார். அனுராதபுரம் மாவட்டப் பிரதேசத்தில் பெய்து வர…

  16. யாழ்ப்பாணத்தில் இம்முறை தைப்பொங்கல் வெகுவாகக் களை கட்டியுள்ளது. தைப்பொங்கலுக்கான ஏற்பாடுகளில் குடாநாட்டு மக்கள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தின் பிரதான சந்தைகளான திருநெல்வேலி, கல்வியங்காடு, மருதனார்மடம், சுன்னாகம், அச்சுவேலி, சாவகச்சேரி உள்ளிட்ட அனைத்துச் சந்தைகளிலும் மக்கள் பெருமளவில் தைப்பொங்கல் கொள்வனவில் ஈடுபட்டிருந்தனர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது” பொதுவாக தமிழ் மக்கள் அனைவரதும் நம்பிக்கை. போர் ஓய்ந்து அமைதிச் சூழ்நிலை தோன்றிய சூழ்நிலையில் பிறக்கவுள்ள புதிய தமிழர் திருநாளில் தம்முடைய துன்பங்கள் அனைத்தும் நீங்கும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் இம்முறை மேலோங்கியிருக்கிறது. THX http://www.newjaffna.com/

    • 2 replies
    • 1.2k views
  17. சுவிஸ் கைதுகளும்! உணர்த்தும் உண்மைகளும்! தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் வாழ் முக்கியஸ்தர்களும், முகவர்களும் தற்பொழுது கைது செய்யப்பட்டது, தமிழீழ எதிர்ப்பாளர்களுக்கும் இலங்கை அரசுக்கும் கரும்பாக இனிக்கும் செய்தியாகும். தமிழீழப் பகுதியான வடகிழக்கு மாகாணம் வெள்ளத்தில் முற்று முழுதாக அமிழ்ந்து போயிருப்பது அரசின் கண்ணுக்கு படாத நிலையில், சுவிஸ் கைதுகள் மட்டும் இலங்கை அரசின் கண்களுக்கு பூதாகரமாக தெரிவது ஒன்றும் புதியதல்ல. இலங்கை அரச ஊடகங்கள் இச்செய்திகளை 'தாறுமாறாக' விமர்சனப் படுத்திக் கொண்டிருப்பதும் வழமையான விடயங்களில் ஒன்று. தமிழ்மக்கள் எங்கெல்லாம் பாதிக்கப்படுகின்றார்களோ அதையிட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கும். இலங்கை அரசின் நிலைப்பாடு எப்போதும் தமிழினத்தை '…

  18. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6000 குடும்பங்களுக்கு கனடா உதவி * Friday, January 14, 2011, 7:52 இலங்கை அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனேடிய அரசு உதவி வழங்க முன்வந்துள்ளது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாங்கள் மக்களுக்கு உடனடியாக உதவவேண்டி உள்ள நிலையில் இலங்கையில் உள்ள இலங்கைக்கான கனேடிய பொருளாதார அபிவிருத்தி உதவி நிலையம் சிறப்பாக செயற்படக்கூடிய தருணம் இது என்றும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் புரூஸ் லெவி தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கை அரசும் மற்றும் ஏனைய முகவர்கள் கேட்டுக்கொண்டவை தொடர்பிலும் அதிக கவனம் கெள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் பாதிக்கப்பட்டோருக்கு இலங்கையில் உள்ள கனேடிய ப…

  19. வெள்ளிக்கிழமை, 14, ஜனவரி 2011 (17:30 IST) ராஜபக்சே ஆட்சியால் இலங்கைக்கே ஆபத்து: ரணில் அதிபர் ராஜபக்சே ஆட்சியால் நாட்டுக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜபக்சேவின் முறையற்ற ஆட்சியால் இலங்கைக்கு கடவுள் சாபமிட்டுள்ளதாகவும், இதனால் நாட்டில் பல இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டு வருவதாகவும் ரணில் தெரிவித்தார் என்று செய்தி வெளியாகியுள்ளது. இலங்கையின் அரசியல் சட்டத்தையும் புத்தமத சாசனத்தையும் மீறி ராஜபட்ச செயல்பட்டு வருவதால் நாட்டுக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் ரணில் கூறியதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. nakkheeran

  20. புனர்வாழ்வு முகாமில் நடப்பது என்ன ? பாகம் – 01 எமக்கான வாழ்வாதார போரட்டம் ஆரம்பித்த அன்றிலிருந்து இன்றுவரை சிங்கள அரசபடைகளாலும், சிங்கள இனவாதிகளாலும், மக்களினது தேசியப்பற்றை சிதைத்து அழித்து ஒழிப்பதில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறான். இதற்காக அவன் செய்த மக்கள் படுகொலைகள் என்பது எண்ணில் அடங்காதவை அவற்றின் உச்சக்கட்டம் தான் திட்டமிட்ட முள்ளிவாய்கால் இனப் படுகொலை. மாத்தளன், முள்ளிவாய்கால் பிரதேசங்கள் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பின் மக்கள் அந்த இடங்களுக்கு பாதுகாப்பு தேடி ஓடினார்கள். பெருவெள்ளமாகத் திரண்டு கொட்டும் மழையையும் பாராது கொண்டு சென்ற தரப்பாள்களையும், சிறு தடிகளையும் பயன்படுத்தி சிறு குடில் ஒன்றை அமைத்து இருந்தார்கள். எங்குமே வெள…

  21. 'பிரபாகரன் வெள்ளாளர் சாதியைச் சேர்ந்தவர்’ என்று ஒரு பிரிவினர் சொல்லிக் கொண்டிருக்க, ‘இல்லை அவர் மீனவர் சாதியைச் சேர்ந்தவர்’ என்று திருச்செந்தூரில் நடந்த கூட்டத்தில் பேசினார் தொல்.திருமாவளவன்.‘பிரபாகரனை சாதி அடையாளத்தோடு ஒரு வட்டத்தில் சிக்க வைக்கலாமா?’எனக் கொந்தளிக்கின்றன தமிழ் அமைப்புகள். திருமாவளவனுக்கு எதிராக தமிழ் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், இதுதொடர்பாக திருமாவின் விளக்கத்தைக் கேட்டோம். ‘‘2002-ம் ஆண்டு ‘மானுடத்தின் தமிழ்க்கூடல்’ எனும் மாநாட்டில் பங்கேற்பதற்கு ஈழத்திலிருந்து அழைப்பு வந்தது.எழுத்தாளர் ஜெயப்பிரகாசம், ஓவியர் மருது, இயக்குநர் புகழேந்தி ஆகியோரோடு நானும் கலந்து கொண்டேன். யாழ்ப்பாணத்தில் நடந்த அந்த மாநாட்டை முடித்துக்கொண்டு கொழும்ப…

  22. தமிழ் மக்களின் அரசியல் தலைவர்களுக்கு ஒரு பகிரங்க வேண்டுகோள்! இன்று தமிழ் மக்களைத் தலைமை தாங்கும் நீங்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் பல்வேறுபட்ட போராட்டங்களில் உங்களை இணைத்துக்கொண்டு பல அர்ப்பணிப்புக்களைச் செய்துள்ளனர். மே, 19 2009 வரையும் நீங்கள் ஒவ்வொருவரும் பல்வேறு காரணங்களினால் மாறுபட்ட கருத்துக்களுடன் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்திருந்தனர். உங்களில் பலருக்கு உங்களுடைய நிலைப்பாட்டை நியாயப்படுத்தக்கூடிய காரணங்கள் இருந்துள்ளன. ஆனால் மே 19, 2009க்குப் பின் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் உங்கள் ஒவ்வொருவருடைய ஒற்றுமையை மிகவும் வலியுறுத்தி நிற்கின்றது. நீங்கள் ஒவ்வொருவரும் எமது இனத்தின் உர…

  23. நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிஅன் சீமான் இன்று விடுத்துள்ள பொங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது காலம் காலமாகத் தொடரும் நம் தமிழர் நம்பிக்கை.ஆனால் கடந்த சில ஆண்டுகளாகத் தமிழர் தம் வாழ்வு முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்குத் துன்பமும் துயரமுமாகக் காட்சியளிக்கின்றன.பழந்தமிழர் வீரத்தை நிகழ்காலத்தில் நம் கண் முன்னே கண்ட ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இந்திய சிங்கள ஏகாதிபத்தியத்தால் கொல்லப்பட்டு,அவர்களது போராட்டம் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில்,மீதமுள்ள தமிழர்கள் முள்வேலி முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.உயிரை மட்டும் கையிலேந்தி இந்த உலகில் எங்காவது போய் பிழைத்துக் கொள்ளலாம் என்று இலங்கையில் இருந்து படகு கட்டித் தப்பி வந்த தமிழர்கள் …

    • 0 replies
    • 622 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.