ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143269 topics in this forum
-
ஈழத்தின் புகழ்பெற்ற நாதஸ்வரக்கலைஞர் சாவகச்சேரி கே.எம். பஞ்சாபிகேசன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இன்று 06.10.2010 நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கிறது. தமது இனிய நாதஸ்வரஇசையால் ஈழத்தமிழ் மக்களுக்குப் பெருமை தேடித் தந்த இந்த ஆற்றல் மிகு கலைஞர் பெருமைப்படுத்தப்படுவதனையிட்டு நாமும் பெரு மகிழ்வடைகிறோம். அவரைப் பாராட்டி வாழ்த்துகிறோம். பட்டமளிப்புவிழா முடிவடைந்த பின்னர், இன்று மாலை இக் கலைஞரை வாழ்த்திப் பாராட்டும் நிகழ்வொன்றும் இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் கோவில் திருமண மண்டபத்தில் யாழ் தவில் நாதஸ்வரக்கலைஞர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. இந் நிகழ்வில் வயலின் வித்வான் ஆர். இராதாகிருஸ்ணனின் வயிலின் சோலா நிகழ்வொன்றும் நடைபெ…
-
- 1 reply
- 1.1k views
-
-
Oct 6, 2010 / பகுதி: செய்தி / தீவிரவாதிகளுக்கு சிறீலங்கா ஊடாக சீனா ஆயுத விநியோகம் இந்தியா உட்பட தென்ஆசியாவில் உள்ள பல நாடுகளுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டுவரும் தீவிரவாதிகளுக்கு சிறீலங்கா ஊடாக சீனா ஆயுத விநியோகங்களை வழங்கிவருவதாக த லங்காநியூஸ்வெப் இணையத்தளம் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியா உட்பட தென்ஆசியா பிராந்திய நாடுகளில் தாக்குதல்களை மேற்கொண்டுவரும் தீவிரவாதிகளுக்கு சிறீலங்கா மற்றும் பங்களாதேசம் ஆகிய நாடுகளின் ஊடகா சீனா ஆயுத விநியோகத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் பிரசன்னத்தை தகர்ப்பதற்கு சீனா – பாகிஸ்த்தான் இணைந்து வகுத்துள்ள கூட்டு முயற்சியே இது. இந்த இரு நாடுகளும் பல தீவிரவாத அமைப்புக…
-
- 1 reply
- 638 views
-
-
உலகில் அதிகளவு கைதிகள் சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாக இலங்கை திகழ்வதாக ஜனநாயகத்திற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதில் 8000 அரசியல் கைதிகள் அடங்குவதாக ஜனநாயகத்திற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர் அமைப்பின் உறுப்பினர் பேராசிரியர் குமார் டேவிட் தெரிவித்துள்ளார். சர்வதேச ஜூரிகள் பேரவையினால் இந்தப் புள்ளி விபரத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எந்தவிதமான பிடிவிராந்தோ அல்லது வேறும் சட்ட ரீதியான பின்னணியோ இன்றி ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞ…
-
- 0 replies
- 687 views
-
-
சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலகட்டத்தில் அவருக்கு விசுவாசமாக இருந்த மூத்த இராணுவ அதிகாரிகள் உளவு பார்க்கப்படுவதாக சிங்கள இணையம் பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சரத் பொன்சேகா மீது தங்களது விசுவாசத்தைக் கடுமையாக வெளிப்படுத்திய இராணுவ உயர் அதிகாரிகளைக் கண்காணிப்பதற்கு விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட உளவுப் பிரிவொன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அந்தப் பிரிவினருக்கு சந்தேகிக்கப்படும் இராணுவ அதிகாரிகளின் வீட்டில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக, வாகன சாரதிகளாகவும் வேலைகள் கொடுக்கப்பட்டு அவர்கள் திறமையாக உளவுப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகள் தங்களது …
-
- 0 replies
- 854 views
-
-
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை சென்னை: விடுதலைப் புலிகள் [^] மீதான தடையை மத்திய அரசு [^] நீக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் மத்திய தீர்ப்பாயத்திடம் நேரில் ஆஜராகி கோரிக்கை வைத்தனர். இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் கடந்த 1992ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசு பிறப்பிக்கும் 'அறிவிப்பாணை' மூலம் தடை நீடிக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் கடந்த மே மாதம் மேலும் 2 ஆண்டுகள் தடையை நீட்டிக்க சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தின்படி அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் புலிகள் இயக்கத்தின் மீதான தட…
-
- 0 replies
- 636 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது பிரதம மந்திரியாக கடந்த வார இறுதியில் தெரிவு செய்யப்பட்ட உருத்ரகுமாரனின் பாதுகாப்புத் தொடர்பாக அமெரிக்கா அக்கறை கொண்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்டகாலமாக அமெரிக்காவில் வசித்துவருபவரும், அமெரிக்கச் சட்டத்துறை வல்லுநருமான திரு. விஸ்வநாதன் உருத்ரகுமாரன் அவர்கள் ஒரு அமெரிக்க பிரஜையாவார். இந் நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள திரு. உருத்ரகுமாரன் வெளிநாடுகளிற்கு பயணம் செய்கின்ற போது அவரிற்கு ஏற்படக்கூடிய பாதுகாப்புச் சிக்கல்களையே அமெரிக்கா கருத்திலெடுத்துள்ளது. விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ சட்ட ஆலோசகராக தேசியத் தலைவர் பிரபாரகனால் நியமிக்கப்பட்டு அந்தத் பணியில் தொடர்ந்து இருந்து வ…
-
- 0 replies
- 1.2k views
-
-
பல சந்தர்ப்பங்களில் பல்வேறு வழிகளில் மக்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபட்ட குருநகரைச் சேர்ந்த 30 வயது குடும்பஸ்தரான ஞானப்பிரகாஷம் லிங்கேஸ்வரன் மீண்டும் மோசடி வழக்கில் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் செலான் வங்கியின் வவுனியா கிளையில் 26 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 2 பவுண் நகை ஆகியவற்றை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு வங்கி ஊழியர்களால் அடித்து விரட்டப்பட்டார். அத்துடன் செலான் வங்கியின் யாழ்ப்பாணக்கிளையில் 1 லட்சம் ரூபா நிலையான வைப்பு மோசடியில் வங்கியிலிருந்து அடித்து விரட்டப்பட்டிருந்தார். அத்துடன் நின்று விடாது கடந்த ஜூன் மாதம் கிளிநொச்சியில் மீளக்குடியமாந்த மக்களிடம் வங்கி அதிகாரியென கூறி போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து 20 ஆயிரத்து 800 ரூபா…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழில் புனர்வாழ்வு நடவடிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு சுற்றுலாத் துறையில் ஆர்வம் காட்டும் இலங்கை அரசு! புதன், 06 அக்டோபர் 2010 11:24 யாழ்ப்பாண மக்கள் யுத்தம் காரணமாக தமது வாழ்வு, சொத்து, வாழ்வாதாரம் என எல்லாவற்றையும் இழந்து நிற்கிறார்கள். இந் நிலையில் அந்த மக்களுக்குத் தேவையான புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் போதிய அக்கறை காட்டாது யாழ்ப்பாணத்தை தென் பகுதி சிங்கள மக்களுக்கான சுற்றுலாப் பிரதேசமாக மாற்றுவதில் இலங்கை அரசு முனைப்புடன் செயற்பட்டு வருவதாக அங்கு பணிபுரியும் அரச சார்பற்ற நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இன்று புதன்கிழமை காரைநகரின் கசூரினா கடற்கரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய சுற்றுலா கட்டிடத் தொகுதிக்கு செல்வதற்கான பாதை த…
-
- 0 replies
- 720 views
-
-
Oct 6, 2010 / பகுதி: செய்தி / கணணி தொழில்நுட்பத்தில் ஒபாமாவை உருவாக்கினாரா மகிந்தா? ஐக்கிய நாடுகள் சபையின் 65வது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் இருக்கும் புகைப்படமொன்று நேற்றைய தினம் இலங்கையின் பிரதான பத்திரிகைகள் சிலவற்றில் வெளியிடப்பட்டன. ஐக்கிய நாடுகள் மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி உள்ளிட்ட தனது பரிவாரங்களுடன் நாடு திரும்பி நான்கு நாட்களுக்கும் மேல் கடந்துள்ள நிலையில் இவ்வாறான புகைப்படம் வெளியிடப்பட்டமை ஆச்சரியத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புகைப்படத்தில் காணப்படும் சில யதார்த்தத் தன்மை மேலும் சந்தேகத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. அத்துடன், ஜனாதிபதியும், பராக் ஒபா…
-
- 0 replies
- 1.1k views
-
-
06.10.1998 மாங்குளம் நோக்கி முன்னேற முயன்ற ஜெயசிக்குறு படையினர் மீதான முறியடிப்புத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் டயஸ் உட்பட்ட மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு நாளும், 06.10.2000 அன்று ஓயாத அலைகள் - 4 நடவடிக்கையில் நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முன்னகர்வு முயற்சியில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சாந்தகுமாரி உட்பட்ட மாவீரர்களின் 10ம் ஆண்டு நினைவு நாளும், 06.10.2006 அன்று மட்டு மாவட்டம் வாகரைப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் புனிதா உட்பட்ட மாவீரர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தம்மை ஆகுதியாக்கிய இம்மாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். மா…
-
- 6 replies
- 2.1k views
-
-
புதன்கிழமை, அக்டோபர் 6, 2010 சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக 10 ஆயிரம் மகாசங்கத்தினர்கள் நாளை வியாழக்கிழமை கண்டி தலதாமாளிகை மகா மலுவையில் விசேட பிரார்த்தனை வழிப்பாட்டில் ஈடுபடவுள்ளனர். இந்த வழிபாட்டின் போது சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரும் தீர்மானமும் நிறைவேற்றப்படவுள்ளது. இத்தகவலைக் கோட்டே நாகவிகாராதிபதி மாதுளுவாவே சோபித தேரோ நேற்று நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். 30 வருடகால யுத்தத்தை வெற்றிபெறச் செய்து நாட்டை மீட்டெடுத்த இராணுவத் தளபதி இன்று சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இந்த வேதனை இலங்கையர் ஒவ்வொருவரது இதயங்களையும் பாதித்துள்ளது. உலகின் மிகச் சிறந்த தளபதி எனப்பாராட்டப்பட்ட இராணுவத் தளபதிக்கு நேர்ந்துள்ள க…
-
- 0 replies
- 663 views
-
-
புதன்கிழமை, அக்டோபர் 6, 2010 முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பிலிருந்து வற்றாப்பளை வரையான பிரதேசத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் இராணுவ குடியிருப்புகளையும், பாரிய இராணுவ முகாம் மற்றும் விமான நிலையம் ஆகியவற்றை யும் அமைக்கும் வேலையில் அரசு ஈடுபட்டிருக்கிறது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டினார். வன்னியிலிருந்து இடம் பெயர்ந்தவர்களில் இரண்டரை இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போதிலும் ஒருவருக்குக்கூட நிரந்தர வீடு கட்டிக்கொடுக்கப் படவில்லை என்றும், தகரங்களினால் அமைக்கப்பட்ட தற்காலிக குடிசைகளிலேயே அவர்கள் வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர் க…
-
- 1 reply
- 550 views
-
-
புதன்கிழமை, அக்டோபர் 6, 2010 இந்த முறை மாவீரர் தினம் தொடர்பாக தனது கையடக்கத் தொலைபேசியில் குறுந் தகவல்களை (எஸ்.எம்.எஸ்.) வேறு ஆட்களுக்கு அனுப்பியதாகக் கூறி கிளிநொச்சியில் குடும்ப மாது ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த முறை மாவீரர் தினத்தைக் கொண்டாட ஆயத்தமாகும் படிகுற்ஞ்செய்திகளை அந்த அம்மணி குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் கிளிநொச்சிப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக இவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த அம்மணி தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஈழ நாதம்
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்தியா- சீனாவின் உதவிகளின்றி விடுதலைப்புலிகளை முறியடித்திருக்க முடியாது – த ரைம்ஸ் மேற்குலகம் விடுதலைப்புலிகளை காப்பாற்ற முயன்றபோதும், இந்தியாவும், சீனாவும் வழங்கிய உதவிகளால் தான் சிறீலங்கா விடுதலைப்புலிகளை முறியடித்துள்ளதாக த ரைம்ஸ் சஞ்சிகை தனது பத்தி ஒன்றில் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: போரில் மட்டுமல்லாது, போரின் பின்னரும் சீனாவும், இந்தியாவும் இணைந்து சிறீலங்காவை காப்பாற்றியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறீலங்கா அரசுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை சீனாவும் – இந்தியாவும் இணைந்து முறியடித்திருந்ன. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் கூட சீனா, ரஸ்யாவ…
-
- 0 replies
- 837 views
-
-
ஜெனரல் சரத் பொன்சேகாவை வெலிக்கடை சிறையில் வைத்து கொலை செய்ய சதித் திட்டம்? சிங்க படைப் பிரிவை கலைப்பது குறித்து பாதுகாப்புச் செயலாளர் கவனம்? 05 October 10 10:34 am (BST) ஜெனரல் சரத் பொன்சேகாவை வெலிக்கடை சிறையில் வைத்து கொலை செய்யும் சதித் திட்டம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொலைக் குற்றச்சாட்டில் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாய்யா என்ற பாதாள உலக உறுப்பினரிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்புப் பிரிவின் உயர் அதிகாரியொருவருக்கு நெருக்கமான ரத்தரன் திலக் என அழைக்கப்படும் பிரபல கொள்ளைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நபர் ஒருவரே அந்தப் பொறுப்பை மாய்யா என்ற நபரிடம் ஒப்படைத்துள்ளார். கொழும்பிலு…
-
- 1 reply
- 855 views
-
-
வெள்ளைக்கொடி விவகார வழக்கு விசாரணை நேற்று திங்கட்கிழமை ( 04 ஐப்பசி 2010 ) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆரம்பம் வெள்ளைக்கொடி விவகார வழக்கு விசாரணை நேற்று திங்கட்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வேளையிலேயே இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை சட்டத்தரணிகள் சங்கமும் எதிரணிக் கட்சிகளும் இணைந்து நடத்தினர். ஆயிரக்கணக்கான மக்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகளுடன் சரத்பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சி பிரதித் தலைவர் கருஜயசூரிய, செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, தவிசாளர் காமினி ஜயவிக்ரம பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, சஜித் பிரேமதாஸ, தயாசிறி ஜயசேகர,கயந்த கருணாதிலக்க, ரோசி சேனாநாயக்க, சந…
-
- 2 replies
- 843 views
-
-
சரத் பொன்சேகாவுக்கு வழங்கிய தண்டனை போதாது - மேர்வின் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-10-05 07:25:51| யாழ்ப்பாணம்] முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்குப் போதியளவு தண்டனை விதிக்கப்படவில்லை எனப் பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.முன்னாள் இராணுவத் தளபதி நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியுள்ள தாகவும் வெள்ளைக்காரர்களுடன் தொடர்புகளைப் பேணியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான குறைந்தபட்ச தண்டனைகளின் மூலம் நாட்டின் ஒழுக்கம் பாதிக்கப்படக் கூடும். எனவே கடுமையான தண்டனை வழங்கி மக் களை நல்வழிப்படுத்த வேண்டும். பிரபுக்கள் கைது செய்யப்பட்டால் மட்டுமே ஊடகங்களும் பெளத்த பிக்குகளும் குரல் கொடுக்கின்றன. ஏனையவர்கள் கைது செய்யப்…
-
- 3 replies
- 711 views
-
-
:lol:13 வருடங்களுக்கு முன்னர் இறந்துபோன இங்கிலாந்து இளவரசியை வரவேற்ற இந்திய பொதுநலவாய போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கலமாடி ! சுமார் 13 வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்துச் சுரங்கப் பாதையொன்றில் கார்விபத்தில் பலியான முன்னால் இங்கிலாந்து இளவரசி டயானா அவர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுநலவாய போட்டிகளின் ஆரம்ப விழாவில் வரவேற்றார் அந்தப் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளரான சுரேஷ் கலமாடி. " இளவரசி டயானா மற்றும் இளவரசர் சாள்ஸ் ஆகியோரை நான் வருக வருகவென வரவேற்கிறேன்" என்று அவர் ஆரம்பித்ததும் மண்டபத்திலிருந்த 60,000 மக்களும் கூக்குரல் எழுப்பி கேலி செய்தனர் என்று சர்வதேச செய்திச் சேவையொன்று குறிப்பிடுகிறது. சிலவேளை இளவரசியாரின் ஆவியை அவர் அந்த மங்கலான வெளிச்சத்தில் கூரை இடுக்க…
-
- 3 replies
- 1.5k views
-
-
தமிழ் கூட்டமைப்பின் பச்சோந்தித்தனம்"............? [ ஞாயிற்றுக்கிழமை, 12 செப்ரெம்பர் 2010, 09:14.32 மு.ப | இன்போ தமிழ் ] அவசரகாலச்சட்ட நீடிப்பு விவாதம் எப்போது நடைபெறும் என்பது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முன்கூட்டியே தெரிந்திருந்தது. அதைவிட 18வது அரசியலமைப்புத் திருத்த விவாதமும் மறுநாள் நடைபெறவிருந்தது. இந்தக் கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டிலேயே இருக்கவில்லை. மிகவும் முக்கியமானதொரு வேளையில் இவர்கள் வெளிநாடுகளில் தங்கியிருந்ததை பொறுப்பற்ற தனம் என்பதைவிட வேறெப்படிக் கூற முடியும்? அவசரகாலச்சட்டத்தை எதிர்ப்பதென்பது ஒரு கொள்கை ரீதியான முடிவாக இருக்கும்போது அதைவிட்டுக் கொடுக்கும் விதத்தில் நட…
-
- 2 replies
- 793 views
-
-
http://www.yarl.com/files/101005_abdul_jabar.mp3 நன்றி: ATBC
-
- 1 reply
- 679 views
-
-
சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளரும், அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் சகோதரருமான கோத்தபாயா ராஜபக்சாவுக்கு பாதுகாப்பு வழங்கிச் சென்ற ஜீப் வண்டி தியவன்னா ஓயா ஆற்றில் பாய்ந்ததால் அதில் இருந்த 8 படையினர் காயமடைந்ததுடன், கொழும்புக்கான நீர் வினியோக குழாயும் கடும் சேதமடைந்துள்ளது. நேற்று (04) காலை 10.00 மணியளவில் இந்த சம்பவம் சிறீலங்கா நாடாளுமன்றத்திற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற பொருட்காட்சி ஒன்றில் பிரதம விருந்தினராக கோத்தபாயா கலந்துகொள்ளச் சென்ற சமயமே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரின் வாகனத்திற்கு பின்னால் பாதுகாப்பு வழங்கிச் சென்ற வாகனம் பாலத்தின் சுவரை இடித்துக் கொண்டு ஆற்றில் பாய்ந்ததுடன், கொழும்புக்கான மிகப்பெர…
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.yarl.com/files/101005_ariyanethiran.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 843 views
-
-
http://www.yarl.com/files/101005_mahendran.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 861 views
-
-
http://www.yarl.com/files/101005_kalaivanar.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 901 views
-
-
http://www.yarl.com/files/101005_jaffna_report.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 1.5k views
-