Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 3, 2010 ஈழ நாதம் ஆசிரியர் பத்தி மெனிக் முகாமில் இன்னமும் 27 ஆயிரம் பேர்தான் உள்ளனர் அவர்களையும் நாம் விரைவில் விட்டுவிடுவோம் என சிறிலங்கா அரசு சந்திக்கு சந்தி நின்று பிரச்சாரம் செய்கின்றது என்றே கூறலாம். இதில் சர்வதேச ஊடகங்கள் சிலவும் கூடவே நிறுவனங்களும் சிங்கள அரசின் இந்த பிரச்சாரத்தை அப்படியே விழுங்கி விடுவது வினோதம் அல்லது நிலவரம் தெரியாமை என்றும் கூறலாம். உண்மையில் சர்வதேச அழுத்தத்தை குறைப்பதற்கு மஹிந்த அரசால் மேற்கொள்ளப்பட்ட தந்திரோபாயங்களில் இதுவும் ஒன்று எனவும் கூறலாம். சர்வதேச அழுத்தத்தை குறைத்தல் மீழ் குடியமர்வு என்ற பெயரில் நிதி வளங்களைப்பெறுதல் போன்றவற்றிற்காகவே மீழ் குடியமர்வு என்ற பெரும் திட்டத்தினை மஹிந்த குடும்பம் நட…

    • 0 replies
    • 721 views
  2. இலங்கைக்கு செல்லும் ஜேர்மனியர்களுக்கு கட்டுப்பாட்டில் தளர்வு _ வீரகேசரி இணையம் 10/3/2010 9:17:27 AM Share _Follow Virakesari on Twitter இலங்கைக்கு செல்லும் ஜேர்மனியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப் பாட்டினை மேலும் தளர்த்த உள்ளதாக ஜேமன் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையில் தற்பொழுது நிலவும் அமைதியான சூழ் நிலையை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஜேமன் தூதுவர் ஜென்ஸ் புலோட்னர் தெரிவித்துள்ளார். இந்த தளர்வு இம்மாதம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை வடகிழக்கு மாகாணங்களில் மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கை அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக ஜேர்மனிய அரசங்கம் 15 மில்லியன் அமெரிக…

  3. கிழக்கிலங்கையை முற்றாக தம்வசப்படுத்தியது இலங்கை இராணுவம் திகதி:03.10.2010 சிறிலங்காவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு இராணுவ டிவிசன் மற்றும் ஒரு சிறப்பு அதிரடிப்படை முகாமை நிறுவுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சிறிலங்காவின் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்சவின் வழிகாட்டலுக்கு அமைய வரையப்பட்டுள்ள புதிய தேசிய பாதுகாப்பு ஒழுங்குமுறையின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இது பற்றிய தகவல்களை சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய அனுராதபுரவில் நேற்று நடைபெற்ற இராணுவ நிகழ்வு ஒன்றில் வெளியிட்டார். “ பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்சவினால் வழிகாட்டலில் வரையப்பட்டுள்ள புதிய தேசிய பாதுகாப்பு ஒழுங்குமுறைக்கு …

  4. லலிதாவைப் போன்ற முன்னாள் பெண் போராளிகள் படும் இன்னல்களைச் பெருமளவில் சொல்லிக் கொண்டே போகலாம் ‐ தமிழில் ஜீரிஎன் அப்போது லலிதாவுக்கு 23 வயதாக இருந்தது. கிழக்கு மாகாணத்தில் மிக உள்புறமாக அமைந்துள்ள பெரிய புல்லுமலை அவருடைய கிராமம். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் வசித்த ஒவ்வொரு குடும்பத்தினரும் வீட்டுக்கொருவரை கடந்த 3 தசாப்தங்களாக தமிழீழத்தைப் பிரித்தெடுப்பதற்காக அவர்கள் நடாத்தி வரும் போராட்டத்துக்கு ஒரு பிள்ளையைக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்தது. அவ்வடிப்படையில் தனது இளைய சகோதரியை இயக்கத்தில் இணைத்துக் கொள்வதைத் தவிரிப்பதற்காக லலிதா அதில் இணைய வேண்டியவளானாள். போராட்டத்தில் இணைந்து 9 வருடங்கள் பெண்புலிகள் குழுவொன்றுக்குத் தலைமையேற்ற…

  5. 02.10.1995 அன்று முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேகப் பீரங்கிக் கலத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் இளநிலா 15ம் ஆண்டு நினைவு வணக்க நாளும், ஓயாத அலைகள் 4 நடவடிக்கையில் 02.10.2000 அன்று எழுதுமட்டுவாழ் பகுதியில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் தில்லையழகன்(தில்லை) உட்பட்ட மாவீரர்களின் 10ம் ஆண்டு நினைவு வணக்க நாளும் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம்மாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள் படங்களைப் பெரிதாய்ப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்.

  6. இலங்கை இராணுவம் ஒரு போராளியை சித்திரவதை செய்து கொலை செய்யும் அதிர்ச்சியூட்டும் காணொளி இலங்கையைத் தளமாகக் கொண்டு இயங்கும் War Without Witness என்கிற அமைப்பு கடந்த வருடம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது இலங்கை அரசினால் மனிதப் பேரழிவுகளும், யுத்தக் குற்றங்களும் நடத்தப்பட்டன என்று தீவிரமாகப் பிரசாரம் செய்து செய்து வருகின்றது. மனிதப் பேரழிவுகள் மற்றும் யுத்தக் குற்றங்கள் ஆகியவற்றுக்கான ஆதாரங்கள் என்று அவ்வப்போது புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கின்றது. அரச படையினரால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டார் என்பதற்கான ஆதாரம் என்று சுமார் நான்கு மாதங்களுக்கு முன் புகைப்படங்கள் சிலவற்றை வெளிப…

  7. Oct 2, 2010 / பகுதி: செய்தி / ஸ்ரீலங்கா அரசு குறித்து டேவிட் மிலிபான்ட் கடும் கண்டனம் ஸ்ரீலங்கா அரசு குறித்து முன் நாள் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மிலிபான்ட் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை பிரித்தானிய தொழில்கட்சியின் வருடாந்த மாநாடு நடைபெற்றது. இம் மாநாட்டில் முன் நாள் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சருமான டேவிட் மிலிபாண்டும் உரையாற்றியிருந்தார். பிரித்தானியாவின் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பாக உரையாற்றிய அவர் ஸ்ரீலங்கா அரசாங்கம் பல மனித உரிமை மீறல்களைப் புரிந்துள்ளதாகவும், அங்கு வாழும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு பிரித்தானியா தொடர்ந்தும் உதவிபுரியும் எனவும் குறிப்பிட்டார். பர்மா நாட்டைப் போல் ஸ்ரீலங்காவிலும் மனித உரிம…

  8. சனிக்கிழமை , அக்டோபர் 2, 2010 எம்.வி.சன்.சி கப்பலில் கனடாவை சென்றடைந்திருக்கும் 492 இலங்கையர்களில் தம்பதி ஒன்றுக்கு அங்கு பிறந்த பெண் குழந்தைக்கு தமிழ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இக்குழந்தை கடந்த 23 ஆம் திகதி பிறந்தது. எம்.வி.சன்.சி தமிழ் பயணிகள் குழுவின் மத்தியில் முதன்முதல் கனேடிய பிரஜாவுரிமை இக்குழந்தைக்கே கிடைக்கப் பெறுகின்றது. கனேடிய சட்டத்தின் பிரகாரம் அங்கு பிறக்குகின்ற குழந்தைகள் அந்நாட்டுப் பிரஜைகள் ஆவர். Eelanatham.net

  9. புதன்கிழமை, செப்டம்பர் 29, 2010 CTYO விடுதலைப் புலிகளிற்கு எதிராக கனடாவில் போதிய நடவடிக்கைகள் இல்லையென்றும் அங்கே புலிகளின் நடவடிக்கை அதிகரித்துவருவதாகவும் பீரிஸ் குறியுள்ளார். ஆகையால் ஏனைய நாடுகள் போன்று தற்போது கனடாவிலும் புலிகள் மீதான நடவடிக்கைகளை எடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இலங்கையின் தேசிய பாதுகாப்பினை அச்சுறுத்தும் வகையில் சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்களை நிறுத்த இலங்கை அரசு கனேடிய அரசின் ஒத்தழைப்பையும் வேண்டியுள்ளது. இலங்கையில் தோற்கடிக்கப்பட்ட தீவிரவாதம், தற்போது தமது நடவடிக்கைகளை கனடா உட்பட சில நாடுகளில் இருந்து மேற்கொள்ள முயல்வதாக வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜி.எல் பீரிஸ் கனேடிய அமைச்சர் லோரன்ஸ் கனோனிற்கு தெரிவித்துள்ளார…

    • 11 replies
    • 1.2k views
  10. சனிக்கிழமை , அக்டோபர் 2, 2010 முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்கள் முழுவதும் புலிகளே என கோத்தபாய கூறிவருகின்ற வேளை.. அங்கு கொல்லப்பட்டவர்களில் 1400 பேர் பொதுமக்கள் என ரொகான் குணரட்ன கூறியுள்ளார். பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளுக்கு எதிரான நிபுணர் என கூறும் ரொஹான் மேலும் கூறுகையில் இலங்கை அரசாங்கம் மீது போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேசம் அழுத்தத்தை பிரயோகித்து வருகின்றது. இதனை அரசாங்கம் எதிர்கொள்ளவேண்டும் ஆனால் அரசிடம் இதனை எதிர்க்க திட்டம் ஒன்றும் இல்லை. இதற்கென ஓர் வெள்ளை அறிக்கையினை அரசாங்கம் தயாரிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக எதனையும் புறக்கணிக்க முடியாது. முள்ளிவாய்க்காலில் ஆக கூடியது 1400 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் ஐக்கிய நாடுகள் 7000 பொதுமக்கள்…

    • 0 replies
    • 736 views
  11. சனிக்கிழமை , அக்டோபர் 2, 2010 இன்று சனிக்கிழமை காலை 8.00 மணியளவில் தமிழ் குழுக்களின் கூட்டதொடர் கிளிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியின் தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது. ஈ.பி.டி.பி.சார்பில் டக்ளஸ் தேவானந்தா, ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் வரதராஜபெருமாள்,பிள்ளையான் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த பூ.பிரசாந்தன், தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு செயலாளர் கே.சிவாஜிலிங்கம், புளோட் சார்பில் உதயன் உட்பட குழுவின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனராம். போரில் இறந்தவர்களுக்கும் காணாமல் போனவர்களுக்கும் இறப்பு பத்திரம் எடுத்துக்கொடுக்கப்படவேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டதாக கூறப்படுகின்றது. Eelanatham.net

    • 0 replies
    • 766 views
  12. புலிகள் இயக்கம் மூலம் தற்கொலைத் தாக்குதல்களை ஆசியாவில் அறிமுகம் செய்தது இந்தியாவே! ஐ.நா சபையில் பாக். குற்றச்சாட்டு! வெள்ளி, 01 அக்டோபர் 2010 19:09 . . தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடாக தற்கொலைக் குண்டு தாக்குதல் கலாசாரத்தை இந்தியாவே தென்னாசியாவில் அறிமுகம் செய்து வைத்தது என்று பாகிஸ்தான் ஐ.நா சபையில் இன்று குற்றஞ்சாட்டி உள்ளது. ஐ.நாவுக்கான பாகிஸ்தானின் பிரதித் தூதுவர் Amjad Hussain Sial அமெரிக்காவின் தலைநகர் நியூயோர்க்கில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நாவின் 65 ஆவது பொதுக் கூட்டத் தொடரில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். ஐ.நாவின் 192 அங்கத்துவ நாடுகளின் முன்னிலையில் அவர் அங்கு தொடர்ந்து …

    • 0 replies
    • 827 views
  13. இல்லாததொரு இயக்கத்தை எதற்காக இந்தியா தடை செய்ய வேண்டும்! அனலை நிதிஸ் ச. குமாரன் கடந்த 1992-ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை இந்திய நடுவண் அரசு நீடிப்புச் செய்து வருகின்றது. கடந்த வருடம் மே மாதத்துடன் விடுதலைப் புலிகளை அதன் தலைவர் பிரபாகரனுடன் அழித்துவிட்டதாகவும், சில ஆயிரம் புலிகளை கைது செய்து புனர்வாழ்வு அளிப்பதாகவும் கூறும் சிறிலங்காவின் கூற்றை ஏற்று அரசியல் காய்நகர்த்தும் இந்திய அரசோ, இல்லாததொரு இயக்கத்திற்கு தடையை நீடிக்கும் செயலானது இந்தியாவின் நயவஞ்சகப் போக்கையே காட்டுகின்றது. புலிகள் இந்தியாவுக்கு எந்தவொரு கெடுதலையும் செய்ய மாட்டார்கள் தெரிந்தோ என்னவோ, அவர்கள் மீது தொடர்ந்து தடையை…

    • 0 replies
    • 687 views
  14. நாடுகடந்த அரசின் இரண்டாவது நாடாளுமன்ற அமர்வு இன்று பாரிஸ் லண்டன் நியுயோர்க் ஆகிய நகரங்களில் வீடியோ கொன்பிரன்ஸ் இணைப்பின் உதவியோடு நடைபெறற்றது. இன்றைய நிகழ்வுகளில் பாரிசில் கலந்து கொண்ட சில உறுப்பினர்களை வெளியில் இருந்து சிலர் வழிநடத்தியதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. நாடுகடந்த தமிழீழ அரசுக்கு தேர்தல் நடத்தக் கூடிய சூழ்நிலை இல்லாத இடங்களுக்கு 20 பிரநிதிகளை நியமிப்பது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த நியமனத்தை மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கக் கூடாது சிலர் வாதிட்டனர். ஒருவர் தெரிவின் மூலமோ அல்லது நியமனத்தின் மூலமோ நடா…

    • 5 replies
    • 1.4k views
  15. சனிக்கிழமை , அக்டோபர் 2, 2010 chinese intelligence சீனாவின் உளவு அமைப்பான என்.ஐ. சீ ( சீன தேசிய புலனாய்வு அமைப்பு) கொழும்பு வந்தடைந்துள்ளது. கரடியனாறு வெடிப்பு சம்பவம் பற்றி நாடளாவிய ரீதியில் விசாரணைகளை செய்வதற்கும் கூடவே இலங்கையில் உள்ள ஏனைய சீன நிறுவனங்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆராயவும் இந்த புலனாய்வு குழு வந்துள்ளதாக சீன ஊடகம் கூறியுள்ளது. இந்தியா இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஐய்யம் தெரிவித்துள்ளமையினை இந்த ஊடகமான சிங்குவா மேற்கோள்காட்டியுள்ளது. Eelanatham.net

  16. வன்னியில் இறுதிக்கட்ட கொடூர யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்டதும், இலங்கை பாரத நாட்டின் ஆதரவுடன் மக்களின் இழப்புக்களை மூடி மறைத்தமையும் தமிழர்கள் மனவேதனையுடன் நினைவு கூர வேண்டிய ஒன்று. அதிலும் இலங்கை இராணுவம் பொஸ்பரஸ் குண்டுகளை வீசி மூர்க்கமாக வன்னியில் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தபோது, இலங்கை அரசு கனரக ஆயுதங்களைப் பாவிப்பதை நிறுத்திவிட்டதாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்ததும், தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக உண்ணாவிரதம், டெல்லிக்கு பஸ் பயணம் என நாடகமாடியதும், இதனைவிட உலகத் தமிழரின் தலைவர் என தனக்குத்தானே குறிப்பிட்டுக்கொள்வதும் தமிழ் மக்கள் நொந்துகொள்ள வேண்டிய ஒன்று. தற்போது பிரச்சினை வேறு விதமாகத் திரும்பியுள்ளது. வன்னி இறுதி…

  17. சனிக்கிழமை , அக்டோபர் 2, 2010 மஹிந்தரை கொலை செய்ய திட்டம் தீட்டி செயற்பட்டதாக மூன்று தமிழ் இளைஞர்கள் மீது பயங்கரவாத தடுப்பு பிரிவு குற்றம் சாட்டியது. இவர்களை அடைத்து சித்திரவதையும் செய்தனர். இந்த விடயம் தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் வழக்குதாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இன்மையால் இந்த மூவரையும் விடுதலை செய்தது. சிவராசா சுபகிருஸ்ணன், நடரராசசிங்கம் சுபாஸ், லின்டன் வரதராஜா ஆகியோரே விடுதலை செய்யபப்ட்டவராவர். நீதிபதி ரஸ்மி சிங்கப்புலி இவர்கள் விடுதலை பற்றி கூறுகையில். பொலிசாரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லையென கூறினார். Eelanatham.net

    • 0 replies
    • 573 views
  18. சனிக்கிழமை , அக்டோபர் 2, 2010 mahintha and sarath தன்னிடம் மன்னிப்பு கேட்டால் பொன்சேகாவின் சிறைத்தண்டனையினை குறைப்பது பற்றி பரிசீலிக்கலாம் என்று மஹிந்த நேற்றுக்கூறினார். மூன்றாம் தரப்பினரின் அழுத்தங்களின் ஊடாகவோ அல்லது போராட்டங்களின் மூலமோ சரத் பொன்சேகாவுக்கு விடுதலைப் பெற்றுக்கொடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் சரத்பொன்சேகா மன்னிப்பு கேட்கமுடியாது என கூறியுள்ளார். தான் நிரபராதி என்றும் கூடவே தான் ஒரு இராணுவ தளபதி என்பதனை மஹிந்த மறக்க கூடாது எனவும் மஹிந்த கூறியுள்ளார். இது இவ்வாறு இருக்க சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரமாட்டார் என ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் கூறினார். சர…

    • 0 replies
    • 698 views
  19. வெள்ளிக்கிழமை, அக்டோபர் 1, 2010 solheim mahi நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி தொடர்பான அமைச்சரும் முன்னாள் சமாதானத் தூதருமான எரிக் சொல்ஹெய்ம் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் நலன்புரி நிலைய மக்கள் தொடர்பில் நோர்வே அமைச்சர் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன், எரிக் சொல்ஹெய்ம் நியூயோர்க்கில் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தரப்பு உறவுகள் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்தும் இலங்கைச் சந்திப்பின் போது எரிக…

  20. கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்குமிடைலான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் சொந்த நிறுவனம் எனக் கூறப்படும் மிஹின் எயார் நிறுவனத்தின் சேவை ஆரம்பமாகியுள்ள நிலையில் அதன் விமான சேவை மற்றும் அலுவலகங்களில் பணியாற்றிவரும் உள்ளுர் தமிழிச்சிகளையும் சிங்கள பாரம்பரிய உடை அணிய வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இவ்வாறான சிங்கள பாரம்பரிய உடைகளை விமான சேவையின் போதோ அல்லது நிறுவனத்திலோ அணியத் தவறும் தமிழிச்சிகளை வேலையிலிருந்து நிறுத்துமாறு நிறுவனத்தின் உயர்மட்டம் உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. யாழ்பபாணத்திற்கான பொருளாதாரச் சந்தை தற்போது பகிரங்கமாக திறந்து விடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு தரப்புகளும் முதலீட்டுக்களையும் தொழில் முயற்சிகள…

  21. கிளிநொச்சி பரந்தன் பிரதேசத்தில் சொந்தகாணிகளை இழந்தநிலையில் 360 குடும்பங்கள் வாழ்ந்துவருவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். ஸ்ரீலங்காப்படையினரின் போர் நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் கிளிநொச்சியின் பரந்தன் பிரதேசத்தில் எதுவித அடிப்படை வசதிகளும் இன்றி மீள்குடியேற்றப்பட்டுள்ளார்கள். இவ்வாறு மீள்குடியேறிய மக்களில் 360 குடும்பங்கள் சொந்தக்காணிகள் இல்லாதநிலையில் பொதுக்காணிகள் கட்டடங்களில் வாழ்ந்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட மக்களின் காணிகளில் ஸ்ரீலங்காப்படையினர் நிலைகொண்டுள்ளதால் தாங்கள் தங்களது சொந்த வாழ்விடங்களில் வாழமுடியாமல் இருப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.http://www.tharavu.com/2010/10/360.html

    • 0 replies
    • 637 views
  22. கிளிநொச்சி பாலியல் வற்புணர்ச்சி சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் பிணை மறுப்பு சம்பவதினத்தன்று இரவு நான் எனது 40 வயது மகளுடனும் பிள்ளைகளுடனும் குறிப்பிட்ட அயல்வீட்டுப் பெண்ணின் வீட்டில் அவருடைய பிள்ளைகள் மற்றும் தம்பியாருடன் தங்கினோம். தம்பியார் வீட்டின் முகப்பிலும் வீட்டுக்காரப் பெண்மணி வீட்டின் உள்ளே இரு பிள்ளைகளுடனும் உறங்கினார். அன்று நள்ளிரவு வேளையில் 4 பேர் எம்மை தட்டி எழுப்பினர். வந்தோர்களில் ஒருவர் வீட்டின் உள்ளே சென்று வீட்டுக்காரப் பெண்மணியைத் தொந்தரவு செய்தார். பின்னர் மூவராக சேர்ந்து வீட்டுக்காரப் பெண்மணியை வெளியே இழுத்துக் கொண்டு சென்றனர். அவ்வேளையில் அவரது குழந்தைகள் (ஒருவர் 10 வயது மற்றையவர் 04 வயது) தமது தாயை விட்டு விடும்படி கதறி அழுதனர். இருப்பினும்…

  23. http://www.youtube.com/watch?v=XS_sEbZnV6s&feature=player_embedded இலங்கையைத் தளமாகக் கொண்டு இயங்கும் War Without Witness என்கிற கடந்த வருடம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது இலங்கை அரசினால் மனிதப் பேரழிவுகளும், யுத்தக் குற்றங்களும் நடத்தப்பட்டன என்று தீவிரமாகப் பிரசாரம் செய்து செய்து வருகின்றது. மனிதப் பேரழிவுகள் மற்றும் யுத்தக் குற்றங்கள் ஆகியவற்றுக்கான ஆதாரங்கள் என்று அவ்வப்போது புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கின்றது. அரச படையினரால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டார் என்பதற்கான ஆதாரம் என்று சுமார் நான்கு மாதங்களுக்கு முன் புகைப்படங்கள் சிலவற்றை வெளிப்படுத்தி இருந்தது. தற்ப…

  24. மீளக் குடியேறிய குடும்பங்களிடையே மிக மோசமாக ஏற்பட்டுள்ள மன அழுத்தம் குடும்ப வன்முறையாக பரிணாமம்‐ வன்னிப்பகுதியில் மீளக் குடியேறிய குடும்பங்களிடையே மிக மோசமாக ஏற்பட்டுள்ள மன அழுத்தம் தொடர்ச்சியாக குடும்ப வன்முறையாக பரிணாமம் அடைந்திருப்பதாக மனநல மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இன்று காலை முள்ளியவளைப்பகுதியில் குடும்பத் தலைவரது கோரத் தாக்குதலில் சிக்கி அவரது மனைவி மற்றும் மாமியார் ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர். பின்னர் அவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றையவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இன்றிரவு வரை அவரது நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாகவே வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன. தாக்குதலை நடத்திய குட…

  25. பொன்சேகாவுக்கு இரண்டரை வருட சிறை! ஜனாதிபதி மஹிந்தர் தீர்மானம் வியாழன், 30 செப்டம்பர் 2010 05:22 மின்னஞ்சல் அச்சிடுக PDF இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தால் குற்றவாளியாக காணப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை இரண்டரை வருடங்கள் சிறையில் அடைக்கின்றமைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அனுமதி வழங்கி உள்ளார். ஜனாதிபதியால்அமைக்கப்பட்டிருந்த இராணுவ நீதிமன்றத்தின் விசாரணையாளர்கள் குழு ஆயுதக் கொள்வனவில் மோசடி செய்தமை மூலம் இராணுவ சட்டங்களை மீறி நடந்தார் என்கிற வழக்கில் கடந்த 17 ஆம் திகதி பொன்சேகாவைக் குற்றவாளியாக கண்டு மூன்று வருட சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. முப்படைகளின் தளபதி என்கிற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இத்தீர்ப்பை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.