ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143263 topics in this forum
-
அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முன்வரும் எந்தவொரு சிறுபான்மை அரசியல் கட்சியும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக வாயை திறக்கக் கூடாது குணதாஸ அமரசேகர 30 August 10 03:34 am (BST) தற்போது இலங்கையில் இடம்பெறுவது சிங்கள இராஜ்ஜியம் எனவும் ஆதலால் இந்தியாவின் விருப்பம் இங்கு எடுபடாது எனவும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர கூறுகின்றார். அத்துடன் சிங்கள மக்களின் ஆதரவிலேயே தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறி ஆட்சி நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முன்வரும் எந்தவொரு சிறுபான்மை அரசியல் கட்சியும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக வாயை திறக்கக் கூடாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் புதிய அரசியலமை…
-
- 3 replies
- 677 views
-
-
காஷ்மீரிலும், ஈழத்திலும், உலகெங்கிலும் நடக்கும் மக்கள் புரட்சி வெல்க! – குர்ரம் பர்வேஸ் காஷ்மீரில் ஜூன் 11 லிருந்து ஆகஸ்ட் 8 க்குள் மட்டும் 51 பொது மக்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. மக்கள் வீதியில் இறங்கி துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படையினரை நோக்கிக் கல்லெறிவது என்பது பாகிஸ்தானின் தூண்டுதலால் என்று இந்திய அரசு சொல்கின்றது. உண்மைகளை அறியும் நோக்கத்தோடு ‘காஷ்மீரில் நடப்பது என்ன?’ என்ற தலைப்பில் ஆகஸ்ட் 14 ஆம் நாள் லயோலா கல்லூரியில் பி.எட் அரங்கில் ஒரு அரங்கக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டம் மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இக்கூட்டத்தில், சிறீநகரிலிருந்து ஜம்மு காஷ்மீர் குடிமைச் சமூகங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாள்ர் த…
-
- 1 reply
- 446 views
-
-
கொழும்பில் நடக்கும் தமிழ் எழுத்தாளர் மாநாடு - சூத்திரதாரிகள் யார் கடந்த 10 வருடங்களாக அவுஸ்த்திரேலியாவில் நடைபெற்று வந் தமிழ் எழுத்தாளர் மாநாடு இம்முறை கொழும்பில் நடைபெறவிருக்கிறது. இதன் சூத்திரதாரிகள் மெல்பேன் நகரிலிருந்து வெளிவரும் "உதயம்" பத்திரிக்கை நடத்தும் மிருக வைத்தியர் நடேசன் மற்றும் அப்பத்திரிக்கையில் தொடர்ச்சியாக எழுதிவரும் முருகபூபதி ஆகியோரே என்கிற செய்தி கிடைக்கபெற்றிருக்கிறது. பலகாலமாகவே புலிகலையும், தமிழ்த் தேசியத்தையும் எதிர்ப்பதையே தனது ஒரே குறிக்கோளாக இயங்கிவரும் உதயம் பத்திரிக்கை இம்முறை ஒரு படி மேலே சென்று கொழும்பில் இந்த எழுத்தாளர் மாநாட்டை நடாத்தவிருக்கிறது. கொத்தபாய ராஜபக்ஷவின் தூண்டுதலினாலும், பசில் ராஜபக்ஷவின் உதவியின் மூலமும் முன்னெடுக்…
-
- 55 replies
- 5.7k views
-
-
சுவிற்சலாந்தின் ஜெனிவாவில் அமைந்திருக்கும் ஐ.நா முன்றலில் இருந்து பெல்ஜியத்தின் தலைநகர் புருசல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கிய புலம்பெயர் தமிழர்கள் மூவரின் பயணம் இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கின்றது. இந்நடைப் பயணிகளில் ஒருவர் வயோதிபர். வயது 62. பெயர் ஜெகன்.ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். இன்னொருவர் திருமணமான பெண். வயது 36. பெயர் தேவகி குமார். சுவிற்சலாந்தைச் சேர்ந்தவர் . முன்றாமவருக்கு வயது 46. பெயர் விநோத். பிரான்ஸைச் சேர்ந்தவர். நேற்று முன்தினம் (28.08.2010) ஜெனீவாவிலிருந்து Nyon வரை 23 கிலோ மீற்றர் தூரம் இவர்கள் நடந்தனர். நேற்று Rolle, Morges ஆகிய பிரதேசங்கள் ஊடாக 42கிலோ மீற்றர் தூரம் நடந்து Lausanne-Renens பிரதேசத்தை சென்றடைந்தனர். இன்று (30.08.201…
-
- 0 replies
- 586 views
-
-
தாய்லாந்தில் இருந்து ஈழத் தமிழர்களுடன் இன்னொரு கப்பல் கனடா நோக்கி எந்த நேரமும் புறப்படக் கூடும் என்று பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. அகதி அந்தஸ்து கோரி கனடாவுக்கு கப்பலில் பயணிக்க விரும்புகின்ற ஈழத் தமிழர்களின் இடைத் தங்கல் நாடாக தாய்லாந்து உள்ளது என்று அச்செய்திகள் கூறுகின்றன. இந்நிலையில் ஈழத் தமிழர்கள் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்கிற போர்வையில் தாய்லாந்துக்குள் பிரவேசித்து உள்ளனர் என்றும் எவரும் சந்தேகப்படாத வகையில் பாங்கொக்கின் புறநகர்ப் பகுதியில் வாடகை வீடுகளில் தங்கி இருக்கின்றனர் என்றும் அச்செய்திகள் குறிப்பிடுகின்றன. இவர்கள் சுற்றுலாப் பயணிகள் என்று சொல்லிக் கொண்டாலும் தாய்லாந்தில் உள்ள சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடச் செல்…
-
- 0 replies
- 845 views
-
-
நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு: புலிகள் ஒரு அரசியல் அமைப்பு திகதி:30.08.2010 சமீபத்தில் நியூசிலாந்தில் அரசியல் தஞ்சம்கோரி நிராகரிக்கப்பட்ட மூவரில் இருவர் நாடு கடத்தப்பட்டனர். இருப்பினும் அதில் ஒருவர் அரசின் முடிவை எதிர்த்து மேன்முறையீடு செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், துணிச்சலான தீர்ப்பை வழங்கியுள்ளது. அகதி அந்தஸ்து கோரிய நபர், புலிகளின் ஆயுதக் கப்பலை செலுத்திய மாலுமி என்றும், அவரே அதை ஒத்துக்கொள்வதாகவும் அரசு தாக்கல் செய்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதி இலங்கை அரசு இன அழிப்பில் ஈடுபடும் பட்சத்தில் தமிழர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள் என்று கூறியுள்ளார். இறைமை உள்ள இனம் என்ற அடிப்படையி…
-
- 0 replies
- 577 views
-
-
உருத்திரபுரத்தில் தறப்பாள் கூடாரத்தில் உறங்கிய சிறுவன் பாம்புக்கடிக்கு பலி முக்கிய-செய்திவன்னிஇணைய-பதிப்புவவுனியா நிருபர் திங்கட்கிழமை, ஆகஸ்ட் 30, 2010 தரப்பால் கூடாரத்துள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வேளையில் சிறுவனை பாம்பு தீண்டியுள்ளது. மறுநாள் சிசிக்கை பலனளிக்காத நிலையில் குறித்த சிறுவன் மரணமடைந்துள்ளார். உருத்திரபுரம் வடக்கைச் சேர்ந்த 10 வயதுடைய ஞானசீலன் நிலக்ஷன் ரொபேட் என்ற சிறுவனே இவ்வாறு மரணமடைந்துள்ளார். அண்மையில் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட உருத்திரபுரத்தில் சிறுவனின் குடும்பத்தினர் தரப்பாலால் கூடாரம் அமைத்து வசித்து வந்ததாகவும் அந்தக் கூடாரத்துள் உறக்கத்தில் இருந்த போதே பாம்பு கடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது சிறுவன் கடந்த 26ஆம் திகதி வி…
-
- 0 replies
- 516 views
-
-
நல்லூர் முருகன் கோவில் 14 ஆம் நாள் திருவிழா மேலதிக படங்களுக்கு: http://meenakam.com/?p=6336
-
- 0 replies
- 639 views
-
-
மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே சிறந்த அரசியல் - சஜித் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே சிறந்த அரசியலாகக் கருதப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். [More...] மக்களின் எதிர்ப்பார்ப்புக்களை நிறைவேற்ற தவறும் அரசியல்வாதிகளினால் நீண்ட காலத்திற்கு அரசியல் நடத்த முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை மிரிஸவத்த பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது மக்களின் அபிலாஷைகளை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ளாமை துரதிஸ்டவசமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நடவடிக்கைகளும் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டதாக அமைய வேண்டுமென…
-
- 0 replies
- 335 views
-
-
அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை உடனடியாக நாடு திரும்புமாறு மகிந்த உத்தரவு ஆளும் கட்சியின் உத்தியோகபூர்வ மற்றும் தனிப்பட்ட விஜயங்களை மேற்கொண்டு வெளிநாடு சென்றுள்ள அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை உடனடியாக நாடு திரும்புமாறு சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த உத்தரவிட்டுள்ளார். அரசியல் அமைப்பு திருத்தங்கள் தொடர்பான பிரேரணை விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையிலேயே இவ் அவசர அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது 3வது முறையாகவும் தாம் ஜனாதிபதியாவதற்கு ஏற்றவிதமாக அரசியலமைப்பில் மாற்றம் செய்யும் நோக்கில் ஆளும் கட்சியின் சகல உறுப்பினர்களினதும் ஆதரவினைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த உத்தரவை பிறப்ப…
-
- 0 replies
- 338 views
-
-
வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் சவூதிக்கு செல்கிறார் சவூதி அரேபியாவில் இலங்கையர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் நோக்கில் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் உள்ளிட்ட மூவர் அடங்கிய விசேட குழுவொன்று சவூதிக்கு பயணம் செய்ய உள்ளது. தொழில் நிமித்தம் சவூதி அரேபியா சென்று அங்கு தொழில் வழங்குனர்களால் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் இலங்கையர்கள், இவ்விசேட குழவினரிடம் தங்களது பிரச்சினைகளை நேரடியாக முறைப்பாடு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான பிரச்சினைகளை களைவது தொடர்பாக அந்நாட்டு உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவ…
-
- 0 replies
- 419 views
-
-
சந்தேக நபர் மர்மமான முறையில் மரணம் கொழும்பு கிரிபத்கொட காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு சந்தேக நபர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ராகம காவல் நிலையத்திலிருந்து கிரிபத்கொட காவல் நிலையத்தில ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபரான பெலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த ரொசான் ஜயசேகர என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ராமக காவல்துறையினர் குறித்த சந்தேக நபரை ஒப்படைக்கும் போது எவ்வித காயங்களும் இருக்கவில்லை எனவும், உயிரிழந்த நபர் தாக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கிரிபத்கொட காவல் நிலையத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்னரும் மர்மமான முறையில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார், பின்னர் அந்த உயிரிழப்பு மாரடைப்பால் ஏ…
-
- 0 replies
- 363 views
-
-
சிறீலங்காவில் வெளிநாட்டு இராணுவத்தினருக்கு பயிற்சியளிக்கப்பட உள்ளது – ஜகத் ஜயசூரிய சிறீலங்காவில் எதிர்வரும் 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் வெளிநாட்டு இராணுவத்தினருக்கு பயிற்சியளிக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். வெளிநாட்டு இராணுவத்தினருக்கு பயிற்சி நெறிகளை வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாகவும் முதல் கட்டமாக சார்க் பிராந்திய நாடுகளைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதுடன் பின்னர் ஏனைய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார் http://meenakam.com/?p=6363
-
- 0 replies
- 290 views
-
-
15 வயதுச் சிறுமி ஒருவரைக் கூட்டாகப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றமை தொடர்பாக இளைஞர்கள் நால்வர் மன்னார் பொலிஸ் நிலையப் பொலிஸாரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்கள். இச்சிறுமி மன்னார் அரச பேரூந்து நிலையத்தில் 4.30 மணியளவில் பஸ்ஸிற்காகக் காத்திருக்கின்றார். அப்போது இந்த இளைஞர்களில் அவரை பலவந்தமாக பேரூந்து நிலையத்தின் மலசல கூடத்துக்கு கொண்டு சென்றனர். சிறுமியின் ஆடைகளைக் களைந்தனர். கையடக்கத் தொலைபேசி மூலம் அவரின் நிர்வாணக் கோலத்தை படம் பிடித்தனர். பின் கூட்டாகக் பாலியல் வல்லுறவு முயன்றனர். இந்நிலையில் சிறுமி பெரிதாக சத்தம் போட்டு அழுதிருக்கின்றார். அச்சுற்றாடலில் கடமையில் இருந்த இராணுவ வீரர் ஒருவர் இந்த அசமாத்தம் குறித்து மன்னார் பொலிஸ் ந…
-
- 2 replies
- 1.8k views
-
-
பிரிட்டன் பிரஜைகளிடம் 50 இலட்சம் ரூபாய் கப்பம் கோரி யாழில் படுகொலை அச்சுறுத்தல்,துப்பாக்கி முனையில் பாஸ்போட் பறிமுதல்! வியாழன், 26 ஆகஸ்ட் 2010 15:50 பிரித்தானியாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் விடுமுறையை கழிக்க வந்த தமிழ் குடும்பம் ஒன்று பெரிய பிரச்சினையில் மாட்டுப்பட்டுள்ளது. இன்றைய யுத்தம் அற்ற சூழலில் யாழ்ப்பாணத்துக்கு வந்து உறவினர்களையும் கண்டு கொள்ளலாம், நல்லை முருகனையும் தரிசித்து செல்லலாம் என்று ஏராளமான எதிர்பார்ப்புக்களுடன் சுமார் 15 வருடங்களுக்குப் பின் புறப்பட்டு வந்திருந்த வடமராட்சி- மாசனையைச் சேர்ந்த பெற்றோர் மற்றும் பிள்ளைகள் மூவர் கொண்ட குடும்பம் ஒன்றே இவ்வாறு பேராபத்தில் சிக்கி உள்ளது. ஓரிரு வாரங்களுக்கு முன் கொழும்பை வந்து அடைந்த இவர்கள் யாழ…
-
- 33 replies
- 2.5k views
-
-
சிலாபத்தில் உள்ள முனீஸ்வரம் காளி அம்மன் கோவிலில் இன்று இடம்பெற இருக்கின்றது என்று கூறப்படும் மிருக பலியை தடுத்து நிறுத்த பேரணியாக புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த புத்த பிக்குகள் குழு ஒன்று பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆலயத்துக்குள் பிக்குகள் பிரவேசிக்கின்றமையைத் தடுக்கும் வகையில் கலவரம் அடக்கும் பொலிஸார் அச்சுற்றாடலில் குவிக்கப்பட்டு உள்ளார்கள். பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டமையை அடுத்து சீற்றம் அடைந்திருக்கும் இப்பிக்குகள் இவ்வேள்வியை தடுத்து நிறுத்தும் வரை அங்கிருந்து செல்லமாட்டார்கள் என்று அடம்பிடித்து வீதியில் உட்கார்ந்து இருக்கின்றார்கள். இன்று ஆடுகள் சுமார் 300 உட்பட ஏராளமான மிருகங்கள் இவ்வாலயத்தில் பலி கொடுக்கப்பட உள்ளன என்று தெரிவிக்கப்…
-
- 10 replies
- 1.3k views
-
-
அரசியல் காரணங்களின் பின்னணியில் கடந்த வருடம் மாத்திரம் இலங்கையில் 5651 பேர் வரை காணாமல் போய் உள்ளார்கள் என்று சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. காணாமல் போதல்கள் அதிகம் இடம்பெற்றிருக்கும் உலக நாடுகள் வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது என்றும் அது சுட்டிக்காட்டி உள்ளது. அக்காலப் பகுதியில் ஈராக்கில் 16409 பேர் வரை காணாமல் போயிருக்கின்றது என்றும் எனவே காணாமல் போதல்கள் மிக அதிகமாக இடம்பெற்றிருக்கும் நாடு ஈராக்தான் என்றும் மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. ஆர்ஜன்டீனாவில் 3290 பேரும், அல்ஜீரியாவில் 2912 பேரும், கௌதமாலாவில் 2899 பேரும்,பேருவில் 2371 பேரும், எல் சல்வடோரில் 2270 பேரும்,கொலம்பியாவில் 963 பேரும், சிலியில் 807 பேரும், பிலிப்பைன…
-
- 0 replies
- 471 views
-
-
உறங்காத உண்மைகள் - சேரமான் ஆக 27, 2010 Font size: Decrease font Enlarge font வன்னிப் போரின் இறுதிக் கணங்களில் நிகழ்ந்தேறிய அவலங்கள் தொடர்பான பல உண்மைகள் முள்ளிவாய்க்காலில் புதைந்து கிடக்கின்ற பொழுதும், இவற்றை அரங்கேற்றி முடித்த சிங்களத்திற்கு உடந்தையாக விளங்கிய பலரது அசிங்க முகங்கள், அண்மைக் காலங்களில் முகமூடி கழன்று முழுமையாக வெளிப்படத் தொடங்கியுள்ளன. சிங்களத்தின் எதிர்ப்புரட்சி நிகழ்ச்சித் திட்டத்தின் நடுநாயகமாக விளங்கும் கே.பி அவர்களை ஒரு சந்தர்ப்பக் கைதியாக வர்ணித்து, பொய்மை என்ற முகத்திரைக்குள் தம்மை மறைத்துக் கொள்வதற்கு கே.பியின் சகபாடிகளான வி.உருத்திரகுமாரன், வே.மனோகரன் போன்றோர் பகீரத பிரயத்தனங்களை மேற்கொள்கின்ற பொழுதும், உண்மை என்ற வெளிச்சத்தில் இருந…
-
- 17 replies
- 2.8k views
-
-
முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் – த.தே.கூ 29 August 10 01:44 am (BST) முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளின் போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் யதார்த்தபூர்மான அதிகாரப் பகிர்வு தீர்வுத்திட்டமொன்றின் மூலம் அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். அர்த்தபூர்வமான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தி வருவதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதே நிலைப்பாட்டில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…
-
- 3 replies
- 731 views
-
-
நயவஞ்சகரின் சூழ்ச்சியை முறியடித்து தமிழ் அகதிகளை ஏற்குமா கனடா? அனலை நிதிஸ் ச. குமாரன் கனடா என்ற நாடு நிலப்பரப்பினால் உலகில் இரண்டாவது பெரிய நாடாகவும், மூன்று சமுத்திரங்களை தன்னகத்தே கொண்டதாகவும் இருக்கின்றது. எந்தளவு பெரிய நாடோ அதற்கும் மேலாக மனித நேயத்தை நேசிப்பதுடன் அதனை செயலிலும் செய்யும் நாடு. மூன்று லட்சத்திற்கும் அதிகமான ஈழத்தமிழரை அரவணைத்து அவர்களை சாவின் விளிம்பில் இருந்து காப்பாற்றி பிரஷாவுரிமையும் வழங்கி, சமத்துவத்தை பேண வழிகாட்டிக் கொண்டிருக்கும் நாடு. இப்படிப்பட்ட நாடு இன்று ஒரு மாபெரும் சோதனை ஒன்றை சந்தித்திருக்கின்றது. பல மாதங்களாக கப்பலில் பிரயாணத்தை செய்து இந்த வாரம் கனேடிய எல்லையை அடையும் ஈழத் தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பிவிட வேண்டுகோள் …
-
- 2 replies
- 852 views
-
-
அரசின் திறைசேரியை நிரப்பும் கே.பி: புதிய தகவல் குமரன் பத்மநாதன் நடாத்தும் இணையத்தளமான நெரெடோவில், காசுக் கொடுக்கல் வாங்கல் பற்றிய கணக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. நிதியுதவிகள் எவ்வாறு கிடைக்கப்பெறுகின்றன என்பது குறித்தோ, அல்லது எவ்வளவு நிதி சேகரிக்கப்பட்டது என்பது குறித்தோ வெளியிடாமல், வெறுமனவே செலவீனங்கள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் அரச கட்டுப்பாட்டில் இயங்கும் வட்டக்கச்சி பாடசாலை ஒன்றிக்கு வினாத்தாள் அச்சடிக்க ரூபா 15,000 கொடுக்கப்பட்டதாகவும், முகாமில் உள்ள மாணவர்களுக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு பணீசும், தேனீரும் கொடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அரச கட்டுப்பாட்டில் உள்ள பாடசாலைக்கு அரசாங்கமே வினாத் தாள்கள் அச்சடிக்க ந…
-
- 17 replies
- 2.3k views
-
-
மலேசியாவில் இலங்கையர் மூவர் கப்பம் கோரிக் கடத்தப்பட்டு இருக்கின்றார்கள். அவர்களில் ஒருவர் கடத்தல்காரர்களால் சித்திரவதைகள் செய்யப்பட்டு உயிர் இழந்துள்ளார். ஏனைய இருவரும் பொலிஸாரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்கள். பொலிஸார் இவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தைப் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் கண்டுபிடித்தனர். அந்த இடத்தை நேற்று இரவு சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர். இருவரை மாத்திரம் உயிருடன் காப்பாற்ற முடிந்தது. இக்கடத்தல் சம்பவத்தின் சூத்திரதாரியும், சூத்திரதாரியின் சகா ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கடத்தல் சம்பவத்தின் சூத்திரதாரி ஒரு ரிசேர்வ் பொலிஸ் ஆவார். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&…
-
- 0 replies
- 949 views
-
-
புத்தர் சிலை விற்ற பௌத்த பிக்கு கைது புத்தர் சிலையை விற்பனை செய்த பௌத்த பிக்கு 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். நான்கு பேரையும் எதிர்வரும் 9ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்கள் கலேவல, ஹபரன மற்றும் தம்புள்ள ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. கலவெலா ரஜமஹா விஹாரையில் காணப்பட் பெறுமதி வாய்ந்த உலோக சிலையே பதினைந்து லட்ச ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். http://meenakam.com/?p=6263
-
- 1 reply
- 442 views
-
-
ஈழ நாதம் ஞாயிற்று கிழமை அடுத்தமாதம் 15ஆம் திகதி முதல் நடைபெறவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வார். இந்த வருடத்துக்கான கூட்டத் தொடரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றுவார் என்று நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக போர்க் குற்றங்கள் சுமத்தப்பட்ட நிலையில் ஜனாதிபதி கூட்டத்தொடரில் பங்குபற்றுவாரா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால் அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் பங்குபற்றி, இலங்கை அரசு மீது சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றுவார் என்று அரசதரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி தலைமையில் உயர்மட்டக் குழு இந்தக் கூட்டத்தொ…
-
- 0 replies
- 707 views
-
-
ஈழ நாதம் ஞாயிற்று கிழமை வடமராட்சி கிழக்கில் போர் முடிந்த பின்னரும் அங்கு மக்களை மீழ் குடியேற இராணுவம் இதுவரை அனுமதிக்கவில்லை. ஆனால் நேற்று நடந்த கூட்டத்தில் யுத்த நிலைமை காரணமாக இடம் பெயர்ந்த மக்கள் அனைவரையும் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்வதற்கு யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க அனுமதி வழங்கியுள்ளார் என்று கூறப்படுகின்றது. நேற்று மாலை பலாலி படைத் தலைமையகத்தில் யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமார் தலைமையிலான குழுவினரிடம் இதற்கான உறுதிமொழியை வழங்கினார் தளபதி ஹத்துருசிங்க. முதற்கட்டமாக அம்பன் பிரதேசத்தைச் சேர்ந்த 81 குடும்பங்கள் நாளை திங்கட்கிழமை அங்கு மீளக்குடியமர்த்தப்படவுள்ளன. ஏற்கனவே அம்பன் பிரதேசத்தில் ஒரு சிறிய பகு…
-
- 0 replies
- 609 views
-