Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. http://www.yarl.com/articles/files/100810_parameswaran_interview.mp3 நன்றி: ATBC

  2. தமிழ் இளைஞர்களிடம் ஓர் அன்பு வேண்டுகோள் - யாழ் இளைஞர்களின் தற்போதைய நிலை பற்றி வலம்புரி பத்திரிகையின் தலையங்கம் சந்தியில் நிற்பதும், மது அருந்துவதும், கையடக்கத் தொலைபேசியும்தான் எங்கள் சீவியம் என்றால் இந்த மண்ணில் நிகழ்ந்த தியாகங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போகும். தென்பகுதி இளைஞர்களை ஒருகணம் பாருங்கள். யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத்தை ஈட்டுவதில் அவர்கள் காட்டும் அக்கறை, எத்தனை வடிவங்களில் அவர்கள் நம் மண்ணுக்கு வந்து எங்கள் நிதித் தேட்டத்தை அள்ளிச் செல்கின்றனர். அன்புசால் இளைஞர்களுக்கு! அவசரமாக இக் கடிதத்தை எழுத வேண்டிய கட்டாயம். தமிழினம் படும் துயர்பற்றி எழுதுவதாக நீங்கள் நினைக்கலாம். அதுபற்றி எல்லாம் எழுத விருப்பவில்லை. எழுதாக் குறைக்கு அழுதால் தீரு…

  3. உரிய காரணம் தெரிவித்தால் அகதி அந்தஸ்து வழங்கப்படும். ஏனையோர் நாடு கடத்தப்படுவர்: - கனேடிய அமைச்சர் திகதி:14.08.2010, எம்வி சன் சீ கப்பலில் வந்த இலங்கை அகதிகள் உரிய காரணங்களைக் கொண்டிருந்தால்அகதி அந்தஸ்து வழங்கப்படும். ஏனையோர் நாடு கடத்தப்படுவர் என கனேடிய பொதுமக்கள நலன் துறை, பாதுகாப்பு அமைச்சர் விக் டோவிக் தெரிவித்துள்ளார். சன் சீ கப்பல் மூலம் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சென்றடைந்துள்ள அகதிகளை விசாரணை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இன்னும் ஒரு வார காலத்தில் இந்தப்பணிகள் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சன் சீ கப்பல் நேற்று வெள்ளிக்கிழமை காலை 6.00 மணியளவில் பிரிட்டிஷ் கொலம்பியா கடற்படைத்தளத்திற்கு வழிநடத்திச் செல்லப்பட்ட…

  4. போர்க்காலத்தில் காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் - சிறிலங்கா அரசு முடிவு திகதி:14.08.2010, போர் நடைபெற்ற காலங்களில் காணாமல் போனவர்களை இறந்து விட்டதாக, மரணச்சான்றிதழ் வழங்கி அவர்கள் தொடர்பான கோப்புகளை மூடிவிடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சிறிலங்காவில் போர் நடைபெற்ற போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் போயிருந்தனர். அவர்களில் பலர் அரச படையினரால் கடத்தப்பட்டிருந்தனர். இவர்கள் அடையாளம் காணப்படாத இடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று உறவினர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். அதேவேளை போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது படையினரிடம் சிக்கிய அல்லது சரணடைந்த பலரும் காணாமற் போயுள்ளனர். இவ்வாறு காணாமல் …

  5. பிரான்சில் செஞ்சோலைச் சிறுவர்களின் படுகொலை நினைவு நாள்

  6. தமிழர் தாயகத்தில் 2006 ஓகஸ்ற் 14 அன்று சிறிலங்கா அரசின் வான்தாக்குதலுக்கு இலக்காகிய செஞ்சோலைப் படுகொலையின் நினைவு நாள். இச்சம்பவத்தில் 54 மாணவிகள் பலியாகியதுடன் 125 மாணவிகள் படுகாயம் அடைந்திருந்தனர். இதனை நினைவு சுமந்து வளரி வலைக்காட்சி உருவாக்கிய காணொளி விபரணம்

  7. Started by MARUTHI,

    World Humanitarian Day (19 August) http://ochaonline.un.org/whd/docs/KeyMessages/whd_2010_key_messages_en.pdf

  8. ஓவியர் புகழேந்தியின் 'போர் முகங்கள்' ஓவியக்காட்சி நெல்லையில் தொடங்கியது! வை.கோ தொடக்கி வைத்தார். http://www.sankathi.com

  9. இலங்கை அகதிகள் 490 பேருடன் கனடாவை அடைந்துள்ள 'எச். வி. சன் சீ ' கப்பலுக்குள் அந்நாட்டுக் கரையோர காவல் படையினர் பிரவேசித்துள்ளதாகத் அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கனேடிய கடற்படைக் கப்பலான எச்.எம்.சி.எஸ். வின்னிபெக், எம்.வி. சன் ஸீ கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்தியதாகவும் இறுதியில் கப்பலில் அகதிகள் இருப்பதாக சன் ஸீ கப்பல் பிரகடணப்படுத்தியதாகவும் கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு விவகார அமைச்சர் விக் டோவ்ஸ் வியாழனன்று அறிவித்தார். கனடாவின் பொருளாதார வலயத்துக்குள் சென்றுள்ள இந்தக்கப்பல் இன்று பிரிட்டிஷ் கொலம்பியாவை சென்றடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கப்பலில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவென விக்டோரியாவில் வைத்தியசாலை ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. …

    • 5 replies
    • 1.1k views
  10. வெள்ளிக்கிழமை, 13, ஆகஸ்ட் 2010 (18:2 IST) பொன்சேகா குற்றவாளி: இலங்கை ராணுவ நீதிமன்றம் இலங்கை இராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி சரத் பொன்சேகா குற்றவாளி என அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தண்டனைக் காலம் குறித்தோ, அல்லது எவ்வகையான தண்டனைகள் வழங்கப்படும் என்று, இன்னும் நீதிமன்றம் அறிவிக்காத நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை ராணுவ நீதிமன்றம் ஒருதலைபட்சமாக நடந்துள்ளதாக பொன்சேகா ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்த நிலையில், தற்போது தீர்ப்பு குறித்து அவர் அதிகரப்பூர்வமாக இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை. பொன்சேகா முதலாவது ராணுவ நீதிமன்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு வழங்கப்பட்ட பதக்கங்கள்…

  11. யாழ்ப்பாண மாவட்டம் தன்னிறைவு பெற்ற ஒரு மாவட்டமாகும். இங்கு வாழும் மக்கள் அரச துறைகளில் தொழில் பார்ப்பதை கௌரவமாகக் கருதுவார்கள். யாழ்ப்பாணத்தில் கல்யாணத்திற்கு மாப்பிளை அல்லது பொம்பிளை தேடும்போது கல்வித்துறை, வங்கித்துறை போன்றவற்றுக்கே முன்னுரிமை கொடுப்பார்கள். இது தவிர யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மக்கள் வியாபாரம், விவசாயம், மீன் பிடி போன்ற தொழில்களை ஜீவனோபாயமாகக் கொண்டுள்ளார்கள். விவசாயத்தில் தன்நிறைவு பெற்ற மாவட்டமாக திகழும் யாழ்ப்பாண மாவட்டம் மீன் பிடித்துறையிலும் சிறந்து விளங்குகிறது. தீவு, வலிகாமம், வடமராட்சி மற்றும் தென்மராட்சி ஆகிய நான்கு பிரிவுகளாக யாழ்ப்பாண மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. இங்குள்ளவர்கள் பெரும்போக காலங்களில் நெல்லையும் சிறுபோக காலங்களில் பயறு, உ…

    • 2 replies
    • 1.2k views
  12. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) மற்றும் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட ஆகியோரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. சமாதான முயற்சிகளில் இவர்கள் முக்கிய பாத்திரம் வகித்தவர்கள் என்பதால் சமாதான முயற்சிகள் குறித்த நடுநிலையான அவதானிப்பை பெற்றுக்கொள்வதற்கு இவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறினார். "இன்றைய நிலையில் ஐ.தே.கவை தாக்குவதற்கும் சமாதான முயற்சிகளை சிறுமைப்படுத்துவதற்குமே இந்த ஆணை…

    • 0 replies
    • 643 views
  13. தேடப்படுவோர் பட்டியலில் இருந்து நீக்கக்கோரி ஐகோர்ட்டில் டக்ளஸ் தேவானந்தா மனு சென்னை, ஆக.13, 2010 தேடப்படுவோர் பட்டியலில் இருந்து தன்னை நீக்கக்கோரி இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ராஜா என்ற வழக்கறிஞர் மூலம் டக்ளஸ் தேவானந்தா, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "இந்தியா-இலங்கை ஒப்பந்தப்படி என்னை விடுதலை செய்தனர். என் மீதான குற்றச்சாட்டுக்களும் விடுவிக்கப்பட்டன. எனவே தான் நான் கொழும்பு திரும்பிச் சென்றேன். தற்போது கோர்ட்டில் என் மீது நிலுவையில் உள்ள விசாரணைகளை சட்டப்படி சந்திக்க தயாராக உள்ளேன். நான் இலங்கையில் மந்திரியாக இருப்பதால் என் மீதான 'தேடப்படும் குற்றவாளி' …

  14. இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இனந்தெரியாத ஆயுததாரிகளினால் வொய்ஸ் ஒப் ஏசியா நெட்வேர்க் நிறுவனத்தின் ஊடக செய்திப்பிரிவு எரித்தழிக்கப்பட்டது. இத்தாக்குதலில் மூவர் படுகாயமடைந்ததோடு பல இலட்சம் பெறுமதியான சொத்துக்களும் எரிந்து நாசமாகின. http://www.tamil.dailymirror.lk/index.php?option=com_content&view=article&id=4864

  15. சிறிலங்காவை புறக்கணிக்க வேண்டும் என பினாங் மானில பதில் முதல் அமைச்சர் பேராசிரியர் ராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார். உலக தமிழர்கள் அனைவரும் இந்த விடயத்தில் ஒன்றுபட்டு நிற்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார் இராமசாமி. பினாங் மானிலத்தில் மலேசிய, சீன, ஆங்கிலேய ஊடகவியலாளர்களை சந்தித்த பேராசிரியர் மேற்படி கோரிக்கையினை விடுத்துள்ளார். Eelanatham.net

  16. ரஷ்ய யுத்தகப்பல் 'மொஸ்வா' இலங்கை வந்தடைந்துள்ளது வீரகேசரி இணையம் 8/13/2010 5:12:26 PM ரஷ்யாவின் யுத்தக்கப்பலான 'மொஸ்வா' நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாக கடற்படை இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 186 அடி நீளத்தை கொண்ட இந்தக்கப்பலில் 51 அதிகாரிகளும் 464 கடற்படையினரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிசெய்ல் க்ருஷ் பகுதியை சேர்ந்த இந்தக்கப்பல் இரு நாடுகளுக்கிடையில் நட்புறவை மேம்படுத்தும் முகமாக இலங்கைக்கான பயணத்தை மேற் கொண்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் அதுல செனரத் தெரிவித்துள்ளார்.

  17. நான் மீண்டும் வருவேன்: மகிந்தவினால் தூக்கியெறியப்பட்ட “அடி தடி அமைச்சர் மேர்வின் சில்வா திகதி:13.08.2010, நான் குற்றமற்றவன் என நிரூபிக்கப்பட்ட பின்னர் மீண்டும் பதவிக்கு வருவேன் என்று முன்னாள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். களனியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் நேற்று கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேர்வின் சில்வாவிற்கு ஆதரவு தெரிவித்தும் அவர் மீதான விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நேற்று களனியில் அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேர்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நான் மீண்டும் பதவிக்கு வருவேன் எனக்…

  18. Aug 13, 2010 / பகுதி: செய்தி / கட்டாந்தரையில் தாயக மக்கள் - நோர்வேயின் நாளிதழ் சிறிலங்கா தடுப்பு முகாம்களிலிருந்து சொந்த இடங்களுக்குத் திரும்பிய மக்கள் கட்டாந் தரை வாழ்க்கை நடாத்துவதாகவும், மோசமான உளவியல் தாக்கத்திற்கு உள்ளானவர்களாக இருப்பதாகவும் நோர்வேஜிய நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது. நோர்வேயின் முதன்மை நாளிதழான ஆப்தன்போஸ்தனில் திங்கட்கிழமை வெளியாகியுள்ள அக்கட்டுரையில் நேர்வோ செஞ்சிலுவைச் சங்க அதிகாரி ஒருவர் தகவல்களை வெளியிட்டுள்ளர்h. போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, முதற்தடவையாக ஒரு பன்னாட்டு உதவி நிறுவனத்திற்கு, உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை சென்று பார்வையிடுவதற்குரிய அனுமதி கிடைத்துள்ளது. அந்தக் குழுவில் இரண்டு நபர்கள் சென்றிருந்தார்கள். ‘போருக்கு பின்னரான …

  19. சிவந்தனின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் சுவிற்சர்லாந்து சூரிச்சில் இருந்து ஜெனீவா நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொள்ள தமிழின உணர்வாளர்கள் மூவர் தன்னெழுச்சியாக முன்வந்துள்ளனர். • சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், • தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், • மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாக முன்வைத்து ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி கடந்த ஜூலை மாதம் 23ஆம் நாள் முதல் லண்டனில் இருந்து பரிஸ் நகரம் ஊடாக சிவந்தன் மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றார். சிவந்தனை நடந்து சென்று வரவேற்கவும், சுவிசி…

    • 0 replies
    • 509 views
  20. தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மூன்று கோரிக்கைகளுடன் சிவந்தன் மேற்கொள்ளும் மனிதநேய நடை பயணம் இன்று 20வது நாளை தொட்டிருக்கின்றது. Dijon, Longvic, Ouges போன்ற இடங்களைக் கடந்து நடந்து சென்றுள்ள சிவந்தன், இன்று காலை முதல் Longecourt என்ற இடத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கின்றார். இன்றைய மனிதநேய நடை பயணத்தில் 6 பேர் சிவந்தனுடன் இணைந்து நடக்கின்றனர். நேற்று 11 மணித்தியாலங்களில் 42 கிலோமீற்றர்கள் நடந்த சிவந்தனுடன் 20 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இணைந்து நடந்திருந்தனர். நேற்று மழையின் மத்தியில் இந்த நடை பயணம் இடம்பெற்றதுடன், இன்று காலையும் மழை பெய்து வருகின்றது. நேற்றைய மனிதநேய நடை பயணத்தில் 12 அகவையு…

    • 1 reply
    • 702 views
  21. ஐக்கிய நாடுகள் சபை நோக்கி மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரெஞ்சு மக்களைச் சந்தித்து தமிழ் மக்களின் நிலை தொடர்பாக விளக்கம் அளித்து வருகின்றார். பரிஸ் நகரில் இருந்து 373 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சிவந்தன் ஜெனீவாவை அடைவதற்கு இன்னும் 173 கிலோமீற்றர்களே இருக்கின்றன. எதிர்வரும் 20ஆம் திகதி இறுதிநாள் கவனயீர்ப்பு எழுச்சி நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு போதிய கால அவகாசம் இருக்கும் நிலையில், பிரெஞ்சு மக்களைச் சந்தித்து விளக்கமளிக்கப்படுகின்றது. லண்டனில் இருந்து மொத்தம் 802 கிலோமீற்றர்கள் நடந்துள்ள சிவந்தனுடன், இன்று 8 பேர் வரையில் இணைந்து நடக்கின்றனர். இவர்களில் கரிகரன் பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து தொடர்ச்ச…

    • 0 replies
    • 409 views
  22. சிறீலங்கா இராணுவத்தினருக்கு மீண்டும் அமெரிக்க இராணுவ பயிற்சிகள் திகதி:12.08.2010, சிறீலங்காஇராணுவத்தினருக்கு மீண்டும் அமெரிக்கா இராணுவப் பயிற்சிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. அமெரிக்க இராணுவ அகடமிகளில் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ள சிறீலங்காபடையினருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை அண்மையில் நீக்கப்பட்டுள்ளது. வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் காரணமாக அமெரிக்கா இந்தத் தடையை விதித்துள்ளது. இலங்கைக்கு எதிராக தடை விதிப்பதற்கு உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதானிகள் முக்கிய பங்களிப்பினை வழங்கியுள்ளனர். குறித்த அரச சார்பற்ற நிறுவன தலைவர்கள் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக போலியான தகவல்களை வழங்கியுள்ளதாக திவயின ச…

    • 1 reply
    • 535 views
  23. கொழும்பு கொட்டஞ்சேனையில் அதிகாலையில் திடீர் சுற்றிவளைப்பு! கொழும்பிற்குள் புலிகள் ஊடுவியிருப்பதாக பொலிஸார் தெரிவிப்பு திகதி:13.08.2010, கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பகுதியை நேற்று அதிகாலை பொலிஸார் சுற்றி வளைத்து, தமிழ்மக்களை பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்யும்படி கேட்டுக் கொண்டனர். இது குறித்து கேள்வி எழுப்பிய சில தமிழர்களைப் பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்குக் கூட்டிச் சென்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸார் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த சுற்றிவளைப்பை மேற் கொண்டனர். தமிழர்களை மீண்டும் பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்யும்படி கேட்டனர். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. தமிழ்மக்கள் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யவேண்டும் என்ற ஷரத்து அவச…

    • 1 reply
    • 806 views
  24. பிரான்சில் நாடு கடந்த தமிழீழ அரசு தப்பிப் பிழைக்குமா? அல்லது தற்கொலை செய்து கொள்ளுமா? திகதி: 11.08.2010 ஃஃ தமிழீழம் 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' என்ற சொற்பதம் கே.பி.யால் உச்சரிக்கப்பட்டது என்பதைத் தவிர, அதனை அதீத நம்பிக்கையுடனேயே தமிழ் மக்கள் நோக்கினார்கள். அதனை வடிவமைக்கும் பொறுப்பை திரு உருத்திரகுமாரன் அவர்கள் ஏற்றுக் கொண்டதும், அதன் மூலம் தமிழீழ மக்களுக்கு விடிவு கிடைத்துவிடாதா? என்ற அங்கலாய்ப்புடன் புலம்பெயர் தமிழர்களில் பெரும்பான்மையினர் அதனை ஆதரிக்கவும் தலைப்பட்டனர். 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' என்ற புதிய கருத்துருவாக்கம் வெற்றிப் பாதையில் செல்ல வேண்டும் என்ற அவாவும் அவர்களிடம் மேலோங்கியிருந்தது. ஆனாலும், தேசியத் தலைவர் அவர்களது இருப்பை மறுதலித்து …

  25. தமிழக கியூ பிராஞ்ச் போலீஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழீழ உளவுப் பிரிவின் பொறுப்பாளரான சிரஞ்சீவி மாஸ்டர் ஜூனியர் விகடன் பத்திரிகைக்கு அளித்திருக்கும் பேட்டி இது..! கேள்வி : உங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மைதானா? பதில் : என்னைப் பற்றிய பல விவரங்களை ஏற்கெனவே நீங்கள் வெளியிட்டு விட்டீர்கள். தமிழகத்தில் தங்கியிருந்தாலும், இது காலம்வரையிலு் நான் எந்தவிதத் தவறான செயல்பாடுகளிலும் ஈடுபட்டது கிடையாது. பழைய வழக்குகளின் அடிப்படையில் போலீஸ் எங்களைக் கைது செய்திருக்கிறது. அந்த வழக்குகள் பல்வேறு காரணங்களுக்காகப் போடப்பட்டவை. கேள்வி : பிரபாகரனுக்கு எதிரான வரதராஜப்பெருமாளை கொலை செய்யவே நீங்கள் தம…

    • 21 replies
    • 3.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.