ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142976 topics in this forum
-
இலங்கை விவகாரங்களில் அமெரிக்கா தலையிட உரிமையில்லை – அரசாங்கம் இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா தலையிட உரிமையில்லை என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா தலையிட உரிமையில்லை. அமெரிக்காவின் தெற்கு மத்திய விவகாரங்களுக்கான அமெரிகாவின் இராஜங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளாக் இலங்கை விவகாரங்களில் தலையிடுவதாக சிறீலங்கா அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. நன்றி - பதிவு இணையம்
-
- 4 replies
- 733 views
-
-
உண்மையிலேயே உடைகின்றதா தமிழரின் தேசியத் தலைமை? [ செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் ஆளும் கட்சியான ஐ. ம. சு. முன்னணியில் இணைந்து போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த காலங்களில் அரசாங்கத்துடன் இணைந்து இவர்கள் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இவர்களுக்கு ஆசன ஒதுக்கீட்டை வழங்க கூட்டமைப்பின் தலைமை மறுத்துவிட்டதை அடுத்தே ஆளும் கட்சியில் இணைந்து தோ்தலில் போட்டியிட இவர்கள் தீர்மானித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி, வன்னி மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின…
-
- 17 replies
- 2.6k views
-
-
உலகத்தமிழர் பேரவை மாநாட்டில் கலந்துகொண்ட டேவிட் மிலிபான்டுக்கு சிறீலங்கா அரசாங்கம் கண்டனம் பிரித்தானியாவில் இன்று நடைபெற்ற உலகத்தமிழர் பேரவையின் முதலாவது மாநாட்டில் கலந்துகொண்ட பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்டுக்கு சிறீலங்கா அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. டேவிட் மிலிபான்ட்ட நிகழ்வில் கலந்துகொண்டமைக்கு சிறீலங்கா வெளியுறவு அமைச்சர் ரோகித போகல்லாக தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். உலகத்தமிழர் பேரவையின் முதலாவது மாநாடு பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தினுள் பேராசிரியர் கலாநிதி இமானுவல் அடிகளார் தலைமையில் இன்று நடைபெற்று வருகின்றது. நன்றி - பதிவு இணையம்
-
- 2 replies
- 966 views
-
-
இந்திய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற் படுகின்றது என்ற சிறிகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோரின் குற்றச்சாட்டு ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சொந்த மான நிகழ்ச்சி நிரல் ஒன்று உள்ளது. அதன்படி நாங்கள் ஒன்றிணைந்து செயற்படுகி றோம். நாமும் இந்திய அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படுவதற்கு தயாராகவுள்ளோம். ஆனால் தமிழ் மக்களுடைய பிரச்சினை முடிபுக்கு கொண்டு வருவதற்குரிய திட்டங்களுடன் செயற்படவேண்டும். நாம் இந்தியாவுக்கு சென்று புலிகளுக் கும் அரசுப் படைகளுக்குமிடையில் இடம் பெற்ற யுத்தத்தில் அகப்பட்டு அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த மக்களை காப்…
-
- 2 replies
- 805 views
-
-
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தேர்தலில் களமிறங்காமல் சுயேட்சையாக போட்டி? அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பெயரில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலமையிலான குழவினர் தேர்தலில் போட்டியிடுவதில் சட்டப்பிரச்சனை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அதன் தலைவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதனால் தலமைப் பதவியைக் காரணம் காட்டி நீதிமன்றம் செல்வது அல்லது தேர்தல் ஆணையகத்தில் முறையிடுவதானால் சிக்கல்கள் உருவாகும் என்பதனால் சுயெட்சையாக தேர்தலில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. யாழ் பல்கலைக் கழகத்தின் ஒரு பகுதியினரையும் மற்றும் முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து தற்போது பட்ட…
-
- 0 replies
- 821 views
-
-
அண்மையில் இலங்கை சனாதிபதி மகிந்தவை சந்தித்து திரும்பிய பத்திரிகை உரிமையாளரான செல்வதுரையின் 'உதயன்' செய்தி நிறுவனம் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக கனடாவின், ரொரண்டோ பிரதேசத்தின் முக்கிய பத்திரிகையான The star இன் இணையச் செய்தி தெரிவித்துள்ளது. இப் பத்திரிகையின் ஆசிரியர் 'லோகன் லொகேந்திரலிங்கம்' தனக்கு பல அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகள் நேற்று வந்ததாக தெரிவித்துள்ளார் மேலும்....... The front window of Uthayan newspaper’s office looked like a “vehicle drove right through it” when Kula Sellathurai arrived at the scene. Overnight, Sellathurai said, the newspaper’s editor received a threatening call and hours later its office on Progress Rd., near Markham Rd. an…
-
- 92 replies
- 11.4k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு வயதில் முதிர்ச்சி வந்த போதிலும் அரசியலில் முதிர்ச்சி வரவில்லை என பிள்ளையான் தெரிவித்திருக்கிறார். பொதுத் தேர்தலுக்காக வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு யாழ்ப்பாணம் வந்திருந்த பிள்ளையான் நிருபர்களிடம் பேசும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் இணைந்து போட்டியிடுவது குறித்து தாம் சம்பந்தனுடனும் பேசியதாகவும் எனினும் தமக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் கொள்கை ரீதியாக மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசம் இருந்ததாகவும் பிள்ளையான் குறிப்பிட்டார். அரசுடன் சேர்ந்து தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கப் போவதாகவும் பிள்ளையான் தெரிவித்தார் SOURCE : http://www.eelamweb.com/
-
- 5 replies
- 1.2k views
-
-
கருணாவை வழியனுப்பி வைக்கும் ராஐபக்ச அரசு கேணல் கருணா என அழைக்கப்பட்ட முரளிதரனின் முறைகேடான வாழ்க்கை முறையால் அவரின் அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிட்டதாக டெய்லி மிரர் பத்திரிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ’The Decline and Fall of Colonel Karuna’ எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள அதன் ஆசிரியர் தலையங்கத்தில் கருணாவின் அரசியல் அதன் இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்டதாக எழுதப்பட்டுள்ளது. இவ் ஆசிரியர் தலையங்கத்தின் முழுவிபரம் வருமாறு: கருணா தனது சொந்த மாவட்டத் தேர்தலிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளதுடன் தேசியப் பட்டியலின் ஊடாக தன்னை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யும்படி அரசாங்கத்தைக் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தேர்தலில் போட்டிய…
-
- 9 replies
- 2.3k views
-
-
சிறீலங்கா பொருட்களை புறக்கணியுங்கள்: மூன்றாவது காணொளி சிறீலங்கா பொருட்களை புறக்கணிக்கும் போராட்டத்தை மேற்கொண்டு வரும் புலம்பெயர் தமிழ் அமைப்பு “உள்ளாடைகளுக்கு சிந்தப்பட்ட குருதி” என்ற தனது காணொளி வெளியீட்டின் மூன்றாவது பகுதியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்கா பொருட்களை வெளிநாடுகளில் புறக்கணிக்கும் போராட்டங்களை மேற்கொண்டுவரும் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் வெசிங்டனை தளமாக கொண்ட பிரிவு “உள்ளாடடைகளுக்கு சிந்தப்பட்ட குருதி” என்ற தனது காணொளி வெளியீட்டின் மூன்றாவது பகுதியை வெளியிட்டுள்ளது. ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசின் ஆதரவுடன் மேற்கொள்ளப்டும் வன்முறைகள் குறித்து அனைத்துலக மக்களுக்கு விளக்கமளிப்பதற்காக இந்த…
-
- 2 replies
- 929 views
-
-
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியில் போட் டியிடவுள்ள முன்னாள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளு மன்ற உறுப்பினர் தங்கேஸ்வரியும் மற்றும் ஐந்து வேட்பாளர்களும் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினர் சிவநாதன் கிஷோரும் நேற்று ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இதேவேளை இவர்கள் நேற்று முன் தினம் ஐ.ம.சு.கூட்டமைப்பின் சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர் என் பது குறிப்பிடத்தக்கது. நன்றி தமிழ்மிரர்
-
- 6 replies
- 801 views
-
-
இலங்கை அரசு அடிப்படை மனித உரிமைகளை மீறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது:- இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் பேர்னாட் சவேஜ். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் அடிப்படை மனித உரிமைகளை புறந்தள்ளுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் பேர்னாட் சவேஜ் கொழும்பு வார ஏடு ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் (21.02.2010) தெரிவித்துள்ளார். அதன் தமிழ் வடிவம் வருமாறு: கேள்வி: ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நீக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. எனவே தற்போதைய நிலையில் இருந்து இருதரப்பும் மேற்கொண்டு செல்ல வேண்டிய திசை என்ன? பதில்: இதற்கான திட்டம் 18 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. அது பல விடயங்களை கொ…
-
- 0 replies
- 590 views
-
-
முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் இன்றய தினம் (24-02-2010) மாலை 7.30 மணியளவில் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் வீதி அருகில் தனது நண்பர்கள் ஐந்து பேருடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுது திடீரென அங்விடத்திற்கு சென்ற சிறீலங்கா இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டு அவர்களது அடையாள அட்டைகள் பெறப்பட்டு சுமார் ஒன்றரை மணி நேரம் வரை அவ்விடத்திலேயே நிற்க வைக்கப்பட்டிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். நன்றி சங்கதி
-
- 1 reply
- 952 views
-
-
'தமிழ் மக்களுக்கான போதிய சுயாட்சியே த.தே.கூவின் கொள்கை' இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் தமது தாயக பிரதேசங்களில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் போதிய சுயாட்சி பெற்று வாழ வேண்டும் என்பதே தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையாக இருக்கும் என்று அதன் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ததேகூ தனது கொள்கைகளை கைவிட்டு விட்டது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே சம்பந்தர் இதனை தெரிவித்தார். அத்துடன் தாம் இந்தியாவுடன் மிகவும் நட்பு ரீதியாக செயற்பட விரும்புகின்ற போதிலும், இந்தியாவின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாக தாம் செயற்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களையும் அவர் மறுத்துள்ளார். இவை க…
-
- 3 replies
- 694 views
-
-
பெப்ருவரி மாதம் 20 ம் திகதி கனடாவிலுள்ள ஸ்காபுரோ நகரில் 'மே 18 இயக்கம்' ஒழுங்கு செய்த கூட்டத்தில் ரகுமான் ஜான் அவர்கள் ஆற்றிய உரை இங்கு இடம் பெறுகிறது. அன்பார்ந்த தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். இலங்கையில் தேர்தல் காய்ச்சல் தீவிரமாக வீசிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் நாம் சந்திக்கின்றோம். இந்த காலகட்டத்தில் நடைபெறும் இந்த தேர்தல்களுக்கும். தமிழ் மக்களது தேசிய பிரச்சனைக்கான தீர்வுக்கும் உள்ள உறவு குறித்து நாம் கேள்வி எழுப்புவது நியாயமானதே. அதுவே எனது இன்றைய உரையின் தலைப்புமாகும். ஒரு இருண்ட காலத்திலிருந்து வெளியே வந்துகொண்டிருக்கும் நாம் நிறைய விடயங்களை மனம் திறந்து பேசியாக வேண்டியுள்ளது. அந்த நோக்கில் நான் உரையாற்றுவது என்பதைவிட ஒரு விரிவான உரையாடலின் தொடக…
-
- 0 replies
- 455 views
-
-
3ம்இணைப்பு ‐ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய காங்கிரஸ் கட்சியின் கைப்பொம்மைகளாக செயற்படுகிறது ‐ ஸ்ரீகாந்தா ‐ சிவாஜிலிங்கத்தின் குரல் இணைக்கப்பட்டுள்ளது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொடுரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையே பொறுப்பென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றுள்ள எம்.பி. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். எதிர் வரும் பொதுத்தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்று புதிய கட்சியொன்றை உருவாக்கிய நிகழ்வின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது தமிழ்த் தேசியக் …
-
- 1 reply
- 527 views
-
-
Relations between Britain and Sri Lanka are likely to hit a new low after David Miliband addresses a meeting of Tamil activists from around the world at the Houses of Parliament today. The Foreign Secretary is due to make the opening speech at the inaugural meeting of the Global Tamil Forum, which campaigns for selfdetermination for Sri Lanka’s ethnic Tamils and to bring to justice perpetrators of alleged war crimes during the island’s 26-year civil war. William Hague, the Shadow Foreign Secretary, is to make the closing address to the meeting, which will be attended by several other MPs in an unprecedented display of cross-party support for Sri Lanka’s Tamils a…
-
- 0 replies
- 750 views
-
-
சரத் பொன்சேகாவினை விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு சிறீலங்காபடையின் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருக்கும் சரத் பொன்சேகாவினை விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சரத்பொன்சேகாவின் துணைவியார் சரத்பொன்சேகாவினை விடுதலைசெய்யுமாறு மனுத்தாக்கல் செய்யதிருந்தார். அடிப்படை உரிமை மீறல் மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சரத்பொன்சேகாவினை விடுதலை செய்ய உயர்நீதிமன்றத்தினால் மறுக்கப்பட்டுள்ளதுடன் துணைவியார் குடும்ப உறுப்பினர்கள் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. eelaman.com
-
- 1 reply
- 532 views
-
-
இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய அன்றி எமது நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே செயற்பட்டு வருகிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார். இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் தமது தாயக பிரதேசங்களில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் போதிய சுயாட்சி பெற்று வாழ வேண்டும் என்பதே தமது கொள்கை எனத் தெரிவித்த சம்பந்தன் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தியே தாம் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்தியாவை தமது நட்பு நாடாகக் கருதுவதாகவும் எனினும் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின் படி நடக்க வேண்டிய தேவை தமக்கு இல்லையென்றும் குறிப்பிட்ட சம்பந்தன் தமது கட்சியின் கொள்கைக்கு மாறாக ஜனாதிபதித் தேர்தலில் செயற்பட்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்ப…
-
- 2 replies
- 393 views
-
-
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 23.02.2010 ஊடகவியலாளர் கனகரவியின் செய்திக் கருத்தாய்வு http://www.yarl.com/articles/node/1014
-
- 0 replies
- 704 views
-
-
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 23.02.2010 அன்றைய செய்தியலைகள் நிகழ்வில் தமிழகத்தில் இருந்து அருள் எழிலன் நளினியின் விடுதலைக்குத் தடையாக உள்ள விடயங்கள் பற்றி செய்தி வழங்குகின்றார். http://www.yarl.com/articles/node/1013
-
- 0 replies
- 500 views
-
-
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 23.02.2010 அன்று ஒலிபரப்பாகிய நிகழ்ச்சியில் M.K.சிவாஜிலிங்கம் http://www.yarl.com/articles/node/1012
-
- 0 replies
- 518 views
-
-
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 23.02.2010 அன்று ஒலிபரப்பாகிய நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் http://www.yarl.com/articles/node/1011
-
- 0 replies
- 531 views
-
-
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 23.02.2010 அன்று ஒலிபரப்பாகிய கொழும்புச் செய்தியாளரின் செய்தித் தொகுப்பு. http://www.yarl.com/articles/node/1010
-
- 0 replies
- 449 views
-
-
ரம்பாவை மணப்பவர் விடுதலைப் புலிகள் ஆதரவாளரா? நடிகை ரம்பாவை மணக்கும் கனடா தமிழ் தொழிலதிபர் இந்திரன் விடுதலைப் புலி ஆதரவாளர் என்று வெளியான செய்திகளை மறுத்துள்ளனர் ரம்பாவும் அவரது அண்ணன் வாசுவும். இந்தத் திருமணத்தை விரும்பாத சிலர் செய்யும் சதி இது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ரம்பா. ரஜினி, கமல் என அனைவருடனும் ஜோடி போட்டவர். ரம்பாவுக்கும் கனடா தொழில் அதிபர் இந்திரனுக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயமானது. இந்திரன் மேஜிக்வுட்ஸ் என்ற பெயரில் இன்டீரியர் டிசைனிங் கம்பெனி நடத்துகிறார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழர். இந்த நிறுவனம் ரம்பாவை சில மாதங்களுக்கு முன் விளம்பர தூதுவராக நியமித்தது. அப்போது இந்திரனுக்கும் ரம்பாவுக்க…
-
- 15 replies
- 3.9k views
-
-
விடுதலைப் புலிகளின் பெயரைப் பாவித்து கொழும்பு நகரில் குண்டுத் தாக்குதல்களை நடத்த அரசாங்கம் திட்டமிட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டிருக்கிறது. கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்றிற்கு பேட்டியளித்துள்ள பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா புலிகளின் தற்கொலைத் தாக்குதலாளிகள் கொழும்பிற்குள் ஊடுருவியிருப்பதாக புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்திருப்பதாகவும் எனினும் அவர்கள் தற்போது தங்கியிருக்கும் இடம் குறித்த விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார். அவர்கள் எந்த நேரத்தில் தாக்குதல் நடத்துவார்கள் என்பதை ஊகிக்க முடியாது என்றும் எனவே அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் ரத்னசிறி விக்கிரமநாயக்கா தெரிவித்துள்ளார். ரத்னசிறியின் இந்தக் கருத்…
-
- 2 replies
- 900 views
-