Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெள்ளி, பிப்ரவரி 12, 2010 12:28 | இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? இலங்கை அரசாங்கத்தின் அதிகாரங்கள் அனைத்தும் கோட்டபாய ராஜபக்சவிடம் குவிந்துள்ளதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விட அதிகாரம் மிக்கவராக அவர் மாறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நிழல் ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச செயல்படுவதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது. ஊடகத்துறை அமைச்சினை ஜனாதிபதி பொறுப்பபேற்றதன் பின்னணியிலும் கோட்டபாய ராஜபக்ச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதியை விடவும் கூடுதலான அதிகாரங்களை கோட்பாய ராஜபக்ச கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டு கொள்கைகள் , வெளிநாடுகளுடான உறவுகள் ,ஐக்கிய நாடுகள…

  2. சர்வதேச மட்டத்தில் தமிழர்களுக்கு இளைக்கப்படும் அநீதியை முடக்குவதற்கு வழி அவர்களது சர்வதேச பலத்தை நிரூபிப்பதே ஆகும் இந்திய அதிகாரத்தின் சுற்றுவட்டாரங்களிலிருந்து புலப்படுவது யாதெனில், எத்தனை வழிகளில் தமிழ் மக்கள் தமது விடுதலை வேட்கையைப் புலப்படுத்தினாலும், இந்தியாவும் இராஜபக்சே அரசும் தாங்கள் தமக்குத் தெரிந்த “சமாதானத்” திட்டத்தின்படியே இரகசியமாக நகர்வர். தமிழர்களின் சுதந்திரத்தை எதிர்ப்பதற்கு மேல்மட்ட சர்வதேசிய அரசியல் அமைப்புகளிடையே ஓர் புரிந்துணர்வு இருப்பதாக, அறிந்த தமிழ் வட்டாரங்கள் கூறுகின்றன. மனோரீதியாக ஏற்படுத்தப்பட்ட யுத்தத்தில் எல்லோரும் எதிர்த்த போதிலும், எப்படி எமது இலக்கை எட்டுவது என்றும் மக்கள் உள்ளே அடைபட்டுக் கிடக்கும்போதும் சுதந்திரத்தைக் கோருவதில…

  3. புதன், பிப்ரவரி 10, 2010 16:23 | ஞானசீலன், யாழ்ப்பாணம் யாழ் நகரில் யாருமின்றி, தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! யாழ்ப்பாணம் மாநகர சபையை ஒரு ஜீவகாருணியம் பற்றி எதிர் கால சந்ததிக்கு கற்பித்த ஒரு ஆசிரியை ஆட்சி செய்து கொண்டும் அநாதையாக இராணுவ முகாமுக்கு அருகாமையில் ஒரு பெண் தனது நிலமை தெரியாது வீழ்ந்து கிடக்க விட்டு பார்த்திருப்பதையிட்டு யாழ் குடாநாட்டு மக்களிடையே பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. உண்மையாக ஒரு பெண் தன்னைச் சுற்றி நடப்பதை உணராது இருக்கும் நிலையிலும் கூட யாழ் குடாநாட்டு மக்கள் பார்த்தக் கொண்டும் செல்வது யாழ் குடாநாட்டு மக்களிடையே மனிதாபிமானம் செத்துவிட்டதாகவே கருத வேண்டியுள்ளது. கடந்த பல நாட்களாக இந்தப் பெண்மணி பகலில் க…

  4. மதுரை மத்திய சிறைச்சாலைக்கு அருகில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கை மீனவரான கனீசியஸ் பெர்னாண்டோவிற்கு 10 லட்சம் ரூபாயை நட்ட ஈடாக தமிழக அரசு கொடுக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தப் பணத்தை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினூடாக இறந்தவரின் மனைவிக்கு சேர்ப்பிக்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இறந்த பெர்னாண்டோ இந்தியச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சக மீனவர் ஒருவரைப் பார்வையிடச் சென்றிருந்த வேளை காவலரின் உத்தரவை மீறி உள்ளே பிரவேசிக்க முயன்ற போது சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். இந்த்ச சம்பவம் 2007ம் ஆண்டு நடைபெற்றிருந்தது. இலங்கைக் கடற்படையினால் பெருமளவு இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்ற போதிலும் அவர்களுக்கு …

  5. சிறையில் இருந்தாலும் சரத் பொன்சேக்கா நாட்டைக் காக்கத் தொடர்ந்து போராடுவார் என்கிறார் அனோமா பொன்சேக்கா Wednesday, 10 February 2010 12:57 பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடிய எனது கணவர் ஒரு பயங்கரவாதியைப் போல அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார். எனினும் ஊழலும் வன்முறையும் நிறைந்த இந்த ஆட்சியாளரிடமிருந்து மக்களை விடுவிக்கும் தனது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தும் மன நிலையிலேயே அவர் இருக்கிறார் என்று நேற்று சரத் பொன்சேக்காவை சென்று சந்தித்த அவரது மனைவி அனோமா பொன்சேக்கா தெரிவித்தார். இன்றைய தினம் சரத் பொன்சேக்காவின் கைதிற்கு எதிராக கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதற்கிடையே சரத் பொன்சேக்க…

  6. பொன்சேகாவினது கைதின் பின்னணியில், ஸ்ரீலங்காவின் முக்கிய நாலு பௌத்த பிரிவுகளின் தலைவர்கள் வரும் 18ம் திகதி கூடி, முக்கிய சில முடிவுகளை எடுக்கவுள்ளதாக அறிக்கை விட்டுள்ளனர். மகா சங்கமே ஸ்ரீலங்காவையும் பௌத்த சமயத்தையும் இக்கட்டான நிலைகளில் பாதுகாத்து வந்தது எனவும், தற்போதும் அப்படியான சூழ்நிலை உருவாகியுள்ளதாக அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளனர். சக்தி செய்திகள் 12-02-2010 அவர்களது அறிக்கை அரசியல் எங்கு போய் முடியும் என்பது போகப்போகத் தான் தெரியும்!

    • 2 replies
    • 1k views
  7. தனது அடிப்படை உரிமை மீறப்பட்டிருப்பதாக பொன்சேகா தாக்கல் செய்த மனுவை ஏற்று விசாரணை நடத்துவதென கொழும்பு உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இது குறித்து இன்று ஆராயப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய நீதிமன்றப் பதிவாளர் இந்த விசாரணை இம்மாதம் 23ம் திகதி நடைபெறும் எனவும் தெரிவித்தார். இலங்கையின் நீதி முறையின் படி இது போன்ற வழக்குகளை விவாதிப்பதா இல்லையா என்பதை முதல் நாள் அமர்வின் போது நீதிமன்றம் தீர்மானிப்பது வழக்கம். http://www.eelamweb.com/

  8. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக கட்சி பேதங்களை மறந்து வீதியில் இறங்கி போராட சகல மக்களும் முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கும் தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமில தேரர், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடு பூராவுள்ள விகாரைகளில் விசேட பூஜைகளை நடத்தி போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். பிரபாகரனால் தற்போது எமக்கு தொல்லையில்லை. ஆனால், மீண்டுமொரு புதிய பிரபாகரனுக்கு நாம் முகம்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளது. இந்த பயங்கரமான சூழ்நிலையை மாற்றியமைத்து, ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்காக இரத்தம் சிந்தவும் உயிரையே தியாகம் செய்யவும் தயங்க மாட்டோம் எனவும் கூறினார். நேற்று தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இ…

  9. பொன்சேகாவை விடுதலை செய்க ரணில் மஹிந்தவை சந்தித்து நேரில் கேட்டார் (Video attached) கொழும்பு நிருபர் வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 12, 2010 பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு ரணில் விக்கிரம சிங்க மஹிந்தவை சந்தித்து கேட்டுக்கொண்டார். இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றது. பொன்சேகாவின் கைது யாப்பிற்கு எதிரானது. முறையற்றது அவரை விடுதலை செய்யவேண்டும். அத்துடன் பொன்சேகாவை சென்று பார்வையிட தனக்கு அனுமதி தரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதாக ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் கேகலிய ரம்புக்வெல, பிரசாத் சமரசிங்க, லக்ஸ்மன் ஹுலுகல்ல ஆகியோர் பொன்சேகாவின் கைது தொடர்பில் முரணான காரணங்களை கூறியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார் ர…

    • 2 replies
    • 819 views
  10. பொதுமக்கள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளராக இருக்கும் ரியல் அட்மிரல் சரத் வீரசேகரா சில தினங்களுக்கு முன்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்காக விண்ணப்பம் செய்திருந்ததுடன் அதற்கான நேர்முகப் பரீட்சைக்கும் தோற்றியிருந்தார். பதவியிலிருக்கும் போதே அரசியலில் ஈடுபட்ட அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. சரத் பொன்சேகாவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் ஒன்றாக பதவியிலிருக்கும் போது அரசியலில் ஈடுபட்டதாகச் சொல்கின்ற இராணுவம் இவர் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கிடையே ரியல் அட்மிரல் சரத் வீரசேகரா இன்றைய தினம் பதவியிலிருந்து ஓய்வு பெறவுள…

    • 0 replies
    • 923 views
  11. வெற்றிலைக்கேணியில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க கப்பல் ஏந்திய மாதா கோவில் இராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ளதை கண்டு தான் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளதாக யாழ் ஆயர் வண. தோமஸ் சவுந்தரநாயகம் அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஆயரின் அலுவலக வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: அண்மையில் வன்னி மற்றும் வடமராட்சி ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்ட ஆயர் வடமராட்சி கிழக்கில் உள்ள வெற்றிலைக்கேணியில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க கப்பல் ஏந்திய மாதா கோவில் இராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ளதை கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளார். தேவாலயம் மிகப்பெரும் இராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ள விவகாரத்தை ஊடகங்களுக்கோ அல்லது வேறு அமைப்புக்களுக்கோ தெரிவிக்க வேண்டாம் என சிறீல…

    • 11 replies
    • 1.4k views
  12. வன்னியில் மேற்கொண்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை மார்ச்சில் இலங்கை அரசாங்கம் வன்னியில் மேற்கொண்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை எதிர் வரும் மார்ச் மாதம் முலாம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இந்த விசாரணையை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தடுக்கும் நோக்கிலேயே மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழு ஜெனீவா சென்றுளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நேரடி சாட்சியங்களின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வட்…

    • 6 replies
    • 1.3k views
  13. ஜெனரல் சரத் பொன்சேகாவின் இராணுவ ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு நோர்வேயும், அமெரிக்காவும் ஒத்துழைப்பு வழங்கியதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் ஸ்ட்ரேய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஐந்து ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்படக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது ஜெனரல் சரத் பொன்சேகாவின் பங்களிப்பு வியந்து பாராட்டத்தக்கதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவத் தளபதி பதவியை வகித்த எந்தவொரு நபரும் இந்த வெற்றியை ஈட்டியிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினைக் கவிழ்ப்பதற…

  14. சரத் பொன்சேகாவின் மீதான விசாரணையை நீதியான முறையிலும் சட்டத்திற்கு உட்பட்ட விதத்திலும் நடத்தும்படி இந்தியா கேட்டுள்ளது. எமக்கு அண்மையிலுள்ள நட்பு நாடென்ற முறையில் இலங்கையில் சட்டமும் ஜனநாயகமும் நிலைநிறுத்தப்படும் எனத் தான் நம்புவதாக இந்திய உள்துறை அமைச்சு செய்திக் குறிப்பொன்றில் தெரிவித்துள்ளது. சரத் பொன்சேகாவை விடுவிக்க வேண்டும் என பல நாடுகளும் நிறுவனங்களும் கோரி வரும் நிலையில் இந்தியா நீதியான விசாரணை என்ற வட்டத்திற்குள் தன்னை மட்டுப்படுத்திக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதிருந்து இந்தியா சரத் பொன்சேகாவிற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததான கருத்தொன்று நிலவி வந்தது சுட்டிக் காட்டத்தக்கது. http://www.eelamweb.com

  15. நேற்றைய தினம் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது ஆயுதங்களுடன் வந்து குழப்பங்களை விளைவித்த காடையர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காக பொலிசாரை கொழும்பு நீதிமன்றம் கடுமையாக எச்சரித்திருக்கிறது. தமது கடமையைச் செய்யாமல் அரசியல் வாதிகளின் தாளத்திற்கு ஆடியதாக குற்றம் சாட்டிய கொழும்பு மஜிஸ்திரேற் நீதிபதி சம்பா ஜானகி றாஜரத்ன உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யாமல் நீதிமன்றத்தை தவறான வழியில் வழிநடத்துவதாக குற்றம் சாட்டினார். நேற்றைய தினம் நீதிமன்ற வளாகத்திற்கு சேதம் விளைவித்ததாகக் கூறி சரத் பொன்சேக்காவின் ஆதரவாளர்கள் 8 பேரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போதே நீதிவான் இந்த எச்சரிக்கையை விடுத்தார். SOURCE: http://www.eelamweb.com

    • 9 replies
    • 720 views
  16. முன்னாள் இராணுவத் தளபதி கைதின் பின்னணியில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியா ஆகியவற்றின் கரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் சரத் பொன்சேகா தலைமையில் எதிர் கட்சிகள் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ள நிலையில் அதனை முறியடிப்பதற்காகவே இந்த கைது நடவடிக்கை இந்தியாவின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இலங்கையின் ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் இந்தியாவிற்கு விசுவாசமானதாக இருப்பதையே இந்திய ஆட்சியாளர்கள் விரும்புவதாகவும் எனவே அதற்கு எதிரான அரசியல் நகர்வுகளை இந்தியா முளையில் கிள்ளியெறியும் என்பதையும் இந்த நடவடிக்கை தெளிவு படுத்தியுள்ளது. நடைபெற்று முடிந்த ஜனாதிபத…

  17. எனது தாயும் தந்தையும் மக்களுக்குச் சேவை செய்வதற்காக என்னை இன்று முதல் மக்களிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் என்று மகிந்தவின் புதல்வர் தெரிவித்துள்ளார். தனது அரசியல் வாழ்க்கையை இன்று முதல் ஆரம்பிப்பதாகக் கூறிய நாமல் தங்காலை ஹனேகடுவ விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்ட பின் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்தார் நாமல் றாஜபக்ச அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து பொதுத் தேர்தலில் போட்டியிட இருப்பது தெரிந்ததே. (அப்பாவும் சித்தப்பாமாரும் பண்ணும் 'சேவையே' தாங்க முடியல... இதிலை நீயுமா.......) Source: http://www.eelamweb.com/

  18. சீனாவை அடுத்து இலங்கையிலும் இணையதளங்களுக்குத் தடை நாட்டின் பாதுகாப்பை கருதி சீன அரசு அந்நாட்டின் முக்கிய இணையதளங்களுக்கு தடை விதித்துள்ளது. கூகுள் இணையதளத்தையே நாட்டை விட்டு வெளியேற்றியது. இதையடுத்து இலங்கையும் அந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இலங்கையில் முக்கிய செய்தி இணையத் தளங்களை தடை செய்வதற்கு அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன ராணுவத்தின் கணினி நிபுணர்களைக் கொண்டு இந்தத் தடை நடவடிக்கையை மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசுக்கு எதிரான கருத்துகள் மக்களிடையே பரப்பப்படுவதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்தத் தடை நடவடிக்கை எடுக்கப்படுவதாத் தெரிகிறது. இதற்காக, சீனாவில் ஏற்கெனவே நடைமு…

  19. புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் சிறுவர் போராளிகள் அனைவரையும் பெற்றோரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தேசிய சிறு வர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித் துள்ளது. இம்மாத இறுதியளவில் அவர்களில் 273 பேரை பெற்றோர்களிடமோ பாதுகா வலர்களிடமோ ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள் ளன என அதிகார சபையின் தலைவர் ஜகத் வெல்லவத்த தெரிவித்துள்ளார். மனிதாபிமான நடவடிக்கைகள் இடம்பெற்றபோது 514 சிறுவர் போராளிகள் புனர்வாழ்விற்காக ஒப்படைக்கப்பட்டனர் என அவர் குறிப்பிட்டார். அதேவேளை 120 சிறார்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு பெற்றோரிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என ஜகத் வெல்லவத்த தெரிவித்தார். இதனடிப்படையில் தற்போது கல்வி போதிக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு வருபவர்களுள…

  20. பொன்சேகா கைது விவகாரம்: இந்தியா அறிக்கை இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதும் ரணில் விக்ரமசிங்கே உட்பட பலரும் இந்தியாவிடம் பொன்சேகாவை மீட்க உதவும்படி கோரியிருந்தனர். இதையடுத்து மத்திய வெளி உறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ ஓய்வுபெற்ற ஜெனரல் சரத் பொன்சேகா கைது பற்றி இலங்கை அரசுடன் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம். இப்பிரச்சினையில், ஜனநாயக இலங்கையில், உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று நட்பு நாடு என்ற முறையிலும், அண்டை நாடு என்ற முறையிலும் நாங்கள் நம்புகிறோம்’’என்று தெரிவித்துள்ளார். மூலம் அண்டை நாடு என்ற வகையில் நாம்(இந்தியா) 1. தமிழர்களை கொல்ல ஆயுத உதவி செய்தோம்…

  21. யாழ்பாணத்தில் புதியவர்களை வேட்பாளராக்க பொதுசன ஐக்கிய முன்னணி திட்டம் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் பொதுசன ஐக்கிய முன்னணியின் சார்பில் போட்டியிடவென யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 25க்கும் அதிகமானவர்கள் இன்று அவசர அவசரமாக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை இவர்களுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை கொழும்பில் பசில் ராஜபக்ஸ மற்றும் வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ சந்திரசிறி ஆகியோர் தலைமையில் இவர்களுடனான சந்திப்பு நடைபெறுவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் நீதித்துறை மற்றும் சட்டத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களே இவ்வாறு அவசர அவசரமாக அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஈப…

  22. ஊடகத்துறை அமைச்சு இன்று முதல் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது இதுவரைக்காலமும் அநுரபிரியதர்ஷன யாப்பாவின் கட்டுப்பட்டில் இருந்து வந்த ஊடகத்துறை அமைச்சு இன்று முதல் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் ஊடகத்துறை ஒடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகிவரும் இந்த தருணத்தில் இவ்வாறான செயற்பாடு ஊடகவியலாளர்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் முக்கிய அமைச்சுக்களான பாதுகாப்பு மற்றம் நிதியமைச்சுக்கள் ஜனாதிபதியின் வசம் இருந்து வந்த போதிலும் தற்போது ஊடகத்துறை அமைச்சும் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. globaltamilnews

  23. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சரத் பொன்சேகா முக்கிய பங்கு வகித்தார் என்பது ஒரு பொய் என்றும் எந்தவொரு இராணுவத் தளபதியை வைத்தும் தம்மால் இந்த இலக்கை அடைந்திருக்க முடியும் என்றும் கோத்தபாய றாஜபக்ச தெரிவித்துள்ளார். சிஙகப்பூர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை மேற்குலக சக்திகள் குறிப்பாக அமெரிக்காவும் நோர்வேயும் ஆதரித்தன எனக் குறிப்பிட்ட கோத்தபாய, சரத் பொன்சேகா குறித்த இராணுவ விசாரணை விரைவில் ஆரம்பிக்கும் என்றும் ஆறு மாதங்களிற்குள் விசாரணை முடிவடையும் எனத் தான் எண்ணுவதாகவும் விசாரணையின் பின் அவருக்கு ஐந்து ஆண்டுகள் வரையான சிறைத்தண்டனை கிடைக்கலாம் எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார். …

  24. மலபே பிரதேசத்தில் இரகசிய முகாமில் வைத்து பொன்சேகா மீது விசாரணை! . .சிறிலங்கா இராணுவ காவல்துறையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மலபே என்ற இடத்திலுள்ள இரகசிய முகாமில் வைத்து விசாரிக்கப்பட்டுவருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது குடும்பத்தினர் உட்பட எவரையும் அவரை பார்வையிட அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டபோது பொன்சேகா வெள்ளை சேர்ட்டும் மண்ணிற காற்சட்டையும் சப்பாத்தும் அணிந்திருந்தார் என்று அவருடன் கூட இருந்தவர்கள் தெரிவித்தனர். அலுவலகத்தின் மேல்மாடியிலிருந்து கீழ்தளம் வரை பொன்சேகா தரதரவென இழுத்துச்செல்லப்பட்டபோதும், …

    • 5 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.