ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
சம்பந்தன் ‐ அரியநேந்திரன் ‐ தோதமஸ் ஆகியோரை போட்டுத் தள்ள வேண்டும் ‐ மேயர் சிவகீதாவை பதவியில் இருந்து தூக்கி மட்டக்களப்பில் இருந்து துரத்த வேண்டும் ‐ கருணா தலமையிலான கூட்டத்தில் இனிய பாரதி சிபாரிசு‐ மட்டக்களப்பில் ஜனாதிபதி தோலியடைந்ததற்கான காரணம் என்பது குறித்து நேற்றைய தினம் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபைக்கு அருகிலுள்ள றெஸ்ற்கவுஸில் நடைபெற்ற இந்தக் கூட்டம் இரு பகுதியாக இடம்பெற்றதாக அமைச்சர் முரளீதரன் (கருணா) ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி ஆகியோருக்கு நெருக்கமான ஒருவர் GTNறிகுத் தெரிவித்தார். நண்பகல் வேளை இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் அமீர்அலி, அமைச்சர் வினாயகமூர்த்தி முரளீதரன் என்ற கருணா முதலமைச்சர் சிவனேசதுரை சந்த…
-
- 3 replies
- 1.9k views
-
-
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது முறையாக அதிபராகி இருக்கும் அவர், கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழர் உரிமைக்கான திட்டத்தை விரைவில் அறிவிப்பேன். இலங்கையை அடிப்படையாக கொண்ட அரசியல் தீர்வாக, அந்த திட்டம் இருக்கும். இலங்கை பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு, தமிழர் தலைவர்களுடன் அது குறித்து ஆலோசனை நடத்துவேன். இலங்கைக்கும் அதன் அரசியல் சட்டத்துக்கும் எப்போதுமே உதவிகரமாக இந்தியா இருந்து வருகிறது. எனவே, தமிழர் உரிமை திட்டத்துக்கும் ஆதரவு அளிக்கும். இந்தியா முன்வைத்த 13 வது சட்டத் திருத்தம் என்றால் என்ன? அது, அரசியல் சட்ட விதிகளில் இருக்கிறது. தற்போது, அதை விட அதிகமாக பெற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அதே நேரத்தில், …
-
- 7 replies
- 2k views
-
-
மெராக் துறைமுகத்தில் அல்லல்படும் தமிழர்கள் REFUGEES BROADCASTING THEIR CONCERNS WORLDWIDE – 254 ASYLUM SEEKERS IN MERAK, INDONESIA 24 hrs with the refugees in Merak, Indonesia. Live streaming directly from the boat. Support them by registering you email ID and chatting with them. They need your feedback and support. We refugees need your support. We have left our families, homes, and lands. We do not have a government to protect us. We only have the support and protection of the people. Please stand with Us, as we want to only abolish Human Right Abuses, UN Refugee Convention Violations and Child Right’s abuses. RISE…
-
- 0 replies
- 849 views
-
-
அவுஸ்திரேலிய கிறிஸ்துமஸ் தீவில் குடிவரவு சிறைகளில் தடுத்து வைக்கப்படுள்ள தமிழ் அகதிகள் உண்ணாவிரத போராட்டத்தினை இன்று மாலை ஆரம்பிதிருக்கிறார்கள். சுமார் 200 இக்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் அகதிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 6 மாதத்துக்கும் மேலாக அவர்களின் விசா அனுமதிகளில் தாமதம் ஏற்படுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். விசா வழங்கும் நடைமுறைகளில் அவுஸ்திரேலிய அரசின் அண்மைக்கால கடும்போக்கு அவர்களை பெரும் மன உளச்சலுக்கு தள்ளியுள்ளது. கிறிஸ்துமஸ் தீவின் குடிவரவு சிறைகளில் சுமார் 1500 இக்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும்,அவர்களில் சுமார் 700 தமிழ் அகதிகளும் அடங்குவார்கள் என தெரிவிக்கப்…
-
- 0 replies
- 364 views
-
-
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தமிழ் மக்களின் அபிலாஷையும் அவர்களின் அரசியலும் எவ்வாறு அமையப்போகின்றது என்பது தொடர்பில் கேள்வியெழுந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது; தேர்தலுக்கு பின்னரான சூழ்நிலையில் தமிழர் அபிலாஷைகள் தொடர்பான கேள்விகள் எம்முன் எழுந்துள்ளன. வடக்கு, கிழக்கு இணைந்த சுயாட்சி அபிலாஷை சுதந்திரத்துக்கு முன்னரிருந்தே இருந்த வருகின்றது. சம உரிமையுள்ள இதற்கப்பால் உள்ள அபிலாஷை இத்தேர்தலின் பின்னர் எந்தளவு சாத்தியம் என்பதே கேள்வியாகவுள்ளது. ஜெனரல் சரத்பொன்சேகா வெற்றியடைந்தாலும் தமிழர்கள் தமது அபிலாஷைகளை நிறைவேற்றியிருக்க முடியுமோ என்ற சந்தேகம் உள்ள போதும் இந்த நி…
-
- 7 replies
- 1.3k views
-
-
தேர்தல் முடிவுகள் விட்டுச் சென்றுள்ள உண்மைகள் இலங்கை அரசியலில் தமிழ்பேசும் மக்கள் தான் இலங்கையின் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் இயங்கு சக்தி என்று நிலவிய மாயை உடைத்தெறியப்பட்டிருக்கின்றது. இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான, மிகவும் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்கப்பட்ட தேர்தல் இன்று (27-01-2010) கணிப்புக்களை தவிடுபொடியாக்கி நிறைவினை நோக்கி வந்துள்ளது. தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸ்ஸநாயகத்தினால் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கையின் படி ஜனாதிபதி மகிந்த இராஜபக்ச 6.01 மில்லியன் வாக்குகளைப் பெற்று முன்னிலையில் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தன்னோடு போட்டி இட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சே…
-
- 2 replies
- 1.6k views
-
-
என்னைக் கொலை செய்து விடும்படி ராணுவத்தினருக்கு ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். எனவே எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று அதிபர் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். அதிபர் தேர்தலில் தோல்விமுகத்தில் இருக்கும் பொன்சேகா கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தனது பாதுகாவலர்களுடன் தங்கியுள்ளார். ஹோட்டலை ராணுவத்தினர் முற்றுகையிட்டுள்ளனர். தேர்தல் தோல்வியால் பொன்சேகா தப்பிப் போய் விடாமல் தடுப்பதற்காகவும், முடிவு வெளியானவுடன் அவரைக் கைது செய்யும் திட்டத்துடனும் ராணுவத்தை ராஜபக்சே குவித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக பொன்சேகா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அதிபர் தேர்…
-
- 26 replies
- 3.2k views
-
-
தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க துப்பாக்கி முனையில் வைத்தே முடிவுகள் அறிவிப்பு? திகதி: 28.01.2010 // தமிழீழம் சிறீலங்காவில் வாக்குகள் எண்ணும் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது படையினரால் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதாக சிறீலங்காவில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த தகவல்கள் குருஞ்செய்திகள் (SMS) மூலமும் அனுப்பப்பட்டுவருவதாக சிறீலங்காவின் ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. எனினும் இந்த செய்தியில் எந்தவித உண்மைத்தன்மையும் இல்லையென மறுத்துள்ள சிறீலங்கா, இது எதிர்க்கட்சிகளின் சதிவேலையென தெரிவித்துள்ளது. sankathi.com
-
- 3 replies
- 2k views
-
-
தற்போதுள்ள இலங்கை பாராளுமன்றம் தனது ஆறு வருட ஆயுள்காலத்தை வரும் ஏப்பிரல் மாதம் 2ம் திகதியுடன் நிறைவு செய்வதால் புதிய பாராளுமன்றத்துக்கான தேர்தல் ஒன்று விரைவில் வரவுள்ளது. வரும் மார்ச் மாதம் மூன்றாம் அல்லது நான்காம் வாரங்களில் புதிய பராளுமன்ற தேர்தல் வரலாமென கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன. தற்போதுள்ள பாராளுமன்றத்தை கலைத்து புதிய பாராளுமன்றத்துக்கான மக்கள் ஆணையை கோருமாறு ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்குள் வெளியிடலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
-
- 0 replies
- 870 views
-
-
கோமாளிகளிடம் தனது பாதுகாப்புக்கு உதவி தேடும் சரத் பொன்சேகா. இந்தியத் தமிழரை கோமாளிகள் என்று வருணித்த சரத் இன்று இந்தியாவிடம் பாதுகாப்புக் கோரினாலும் இலங்கையில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களைத்தான் இனி சார்ந்து நிற்கும் இக்கட்டான காலகட்டத்தில், இலங்கை ஆட்சியில் உள்ளவர்களுக்கு இந்தியா பாதப+சை செய்யும் நிலைதான் இன்று உள்ளது. ஏனெனில் தமிழர்களைத் தூண்டிவிட்டு குழப்பம் ஏற்படுத்தி இலங்கையில் அமைதியைக்குழப்பி தனது பாதுகாப்பை நிலைநாட்ட நினைத்த இந்தியா, அது இயலாமையாகப் போகவே போராட்டத்தை நசுக்கி இலங்கை அரசுடன் சேர்ந்து கொண்டது. இவ்வளவு தமிழர்களின் உயிரையும் பலியெடுத்தது இந்தியா தான். இது இந்தியர் இலங்கைமீது தலையிட்டதுக்கு எதிராக சிங்களவனின் வீவேகம் இன்று இந்தியாவை அவர் காலடியில்…
-
- 2 replies
- 1.7k views
-
-
மேற்குலக அரச தந்திரிகளும் ஊடகவியலாளர்களும் இலங்கைத் தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது என்றும் தமிழர் வாக்குகளே தீர்மானிக்கும் காரணிகளாக அமையும் என்றும் எதிர்வு கூறினர் . முடிவுகள் அவர்களின் எதிர்வு கூறல்களுக்கு நேர்மாறாக அமைந்தன. அவர்கள் இலங்கையின் அரசியல் போக்கையும் அதன் பரிமாணங்களையும் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று தேர்தல் முடிவுகள் காட்டி நிற்கின்றன. தேர்தலில் முடிவுகளில் இருந்து நாம் அறிந்து கொள்பவை: இலங்கை முழுக்க வாழும் தமிழர்கள் போர்தொடர்பாக ராஜபக்சவின் மீதுள்ள ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தனிச் சிங்களப் பகுதிகளில் ராஜபக்ச பொன்சேக்கா எடுத்த வாக்குகளிலும் பார்க்க இரு மடங்கு வாக்குக்கள் எடுத்துள்ளார். மொனராகலவில் ராஜபக்ச முப்பத்து நாலாயிரம்…
-
- 11 replies
- 3.4k views
-
-
முற்றுகையில் இருந்து வெளியேறினார் பொன்சேகா: வெளிநாடுகள் தலையிட்டன? [ புதன்கிழமை, 27 சனவரி 2010, 19:59 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்கா அரச படைகளால் முற்றுகை இடப்பட்டிருந்த கொழும்பு தங்கும் விடுதியில் இருந்து வெற்றி பெறாத எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா இன்று வெளியேறி விட்டதாக சர்வதேச ஊடகங்களின் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். கறுப்பு நிற BMW வண்டியில் அவர் தனது மெய்க் காப்பாளர் வாகன அணியுடன் - தான் தங்கியிருந்த சினமன் லேக்சைட் விடுதியை [Cinnamon Lakeside Hotel] விட்டு வெளியேறிச் சென்றதாகத் தெரிகின்றது. விடுதி வாசலில் சிறிது நேரம் தடுக்கப்பட் போதும் - பின்னர் அவரது வாகனத் தொடரணி செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். வ…
-
- 3 replies
- 1.6k views
-
-
சிங்களச் சிறீலங்காவிற்கான ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்து சர்ச்சைகள் தீரமுன்னரே குறித்த தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மகிந்தவிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய முதல் உலகத்தலைவர் என்ற பெருமையை இந்திய வல்லாதிக்கத்தின் பிரதமரும் சோனியா காந்தியின் எடுபிடியுமான மன்மோகன் சிங் பெறுகிறார். Indian Prime Minister Manmohan Singh congratulated Mr Rajapaksa, saying he was confident "Sri Lanka will find lasting peace, where all communities can live with dignity and in harmony." - bbc.co.uk http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8482963.stm
-
- 6 replies
- 1k views
-
-
ட்டக்களப்பு மாநகர சபை மேயர் திருமதி சிவகீத்தா பிரபாகரனின் உத்தியோகபூர்வ இல்லத்தின் மீது நேற்று சிலர் கைக்குண்டுத் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இக் குண்டு வீச்சு சம்பவத்தினால் மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் கதவு மற்றும் முன்பகுதி என்பன சேதமடைந்துள்ளன. இதே போன்று மேயருக்கு சொந்தமான வீடு மற்றும் அவன் கணவனின் வர்த்தக நிலையம் என்பனவும் நேற்று உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன. இச் சம்பவங்கள் இடம்பெற்ற போது மேயர் சிவகீத்தாவோ அல்லது அவன் குடும்பமோ அங்கு தங்கி இருக்கவில்லையென தெவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.மட்டக்களப்பு மாநகர சபை மேயர் திருமதி சிவகீத்தா ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்து பிரசார நடவ டிக்க…
-
- 5 replies
- 1.4k views
-
-
இலங்கையின் 6ஆவது ஜனாதிபதியாக மஙிந்தராஜபக்ஸ தெரிவு:உத்தியோகபூர்வ அறிவிப்பு ஆறாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தெரியும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் என்ற ரீதியில் தாம் அடைந்த வெற்றி, மக்களின் வெற்றியாகக் கருதப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். மக்களினால் தமக்கு வழங்கப்பட்ட இந்த ஆணையை முழுமையாக ஏற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். மாபெரும் வெற்றியாக இதனை கருத வேண்டும் எனவும், மக்களின் தெரிவு இந்த வாக்கெடுப்பில் வெளிப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனநயாக முறைமை தொடர்பில் மக்கள் நன்கு அறிந்துள்ளதாகவும், அதன் வெளிப்பாடே இந்தத் தேர்தல் வெற்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டை கட்டிய…
-
- 9 replies
- 1.5k views
-
-
ஒருகணம் உங்கள் வாசல்களின் திசைதிரும்பி தலைசாய்த்து வணங்குகின்றோம் திகதி: 27.01.2010 // தமிழீழம் வேர்களுக்கு விழுதொன்றின் உள்ளம் நெகிழ்ந்த மடல்! அன்புறவுகளே! ஒருகணம் உங்கள் வாசல்களின் திசைதிரும்பி தலைசாய்த்து வணங்குகின்றோம். தமிழீழம். தமிழீழம். தமிழீழமே. அந்த ஒற்றைவார்த்தைக்காக உடமையிழந்து, உதிரம் சொரிந்து, உடலை அழித்து, உள்ளம் நசிந்து, உயிரைப்பிரிந்து போராடியவர்கள் நீங்கள். அந்த உன்னத இலட்சிய வேட்கையை அடிநாதமாகக் கொண்டு வாழ்பவர்களும் நீங்களே! நாங்கள் எத்தனை தடவை வீதிகளில் இறங்கி அடி வாங்கினாலும், உங்கள் தியாகத்திற்கு அது ஈடாகிவிடாது. அந்நிய ஆக்கிரமிப்பிற்குள் அஞ்சாது நீங்கள் வாழும் வாழ்வு தன்னிகரற்றது. சனநாயக நாடொன்றில் எங்களுக்கு சகல உரிமைகளும் உண…
-
- 6 replies
- 1.5k views
-
-
நடமாடும் சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில் கொழும்பு சினமன் லேக் ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேக்காவின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர விடுதியான சினமன் லேக் ஹோட்டலை இன்று அதிகாலை சுற்றிவளைத்த இராணுவத்தினர் அவரை அப்பகுதியிலிருந்து வெளியில் செல்ல முடியாத வகையில் தடுத்து வைத்திருந்தனர். இந்த நிலையில் குறித்த றோட்டலுக்குள் நுழைந்த படையினர் ஜெனரல் சரத்பொன்சேக்காவிற்கு பாதுகாப்பு அளித்து வந்த அவரது மெய்ப்பாதுகாவலர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இராணுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும்…
-
- 3 replies
- 1.4k views
-
-
தேர்தலில் சிறுபான்மை மக்கள் சொந்தத் தலைமைகளை நிராகரித்துள்ளனர் - என்.சரவணன் 6வது ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான 5வது ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகளின் படி மகிந்த ராஜபக்ஷ வென்றுள்ளார். தெர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் வழங்கும் செய்தி என்பதன் சாராம்ச விளக்கமே இது. யாழ் மாவட்டத்தில் 26.66 சதவீத மக்களே வாக்களித்துள்ளனர். அதிலும் அளிக்கப்பட்ட வாக்குகளில் 3,65 வீத வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அளிக்கப்பட்ட வாக்குகளில் 64 சதவீதம் சரத் பொன்சேகாவுக்கே அளிக்கப்பட்டுள்ளன. யாழ் மாவட்டத்தின் 11 தொகுதிகளில் ஒரு தெரகுதியில் அதாவது ஊர்காவற்துறை தொகுதியில் மாத்திரமே மகிந்த வென்றுள்ளார் அதுவும் 635 வாக்குகள் மட்டுமே மேலதிகமாக பெற்றுள்ளார். வன்னி மாவட்டத்தில் அ…
-
- 0 replies
- 956 views
-
-
யாழ்.குடாநாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம் பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தனும் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவும் இச்சம்பவங்களால் யாழ்.மாவட்ட வாக்களிப்பு பாதிக்கப்பட்டால் அங்குள்ள வாக்காளர்கள் தமது வாக்குரிமையை சுதந்திரமான முறையில் பயன்படுத்துவதற்கு தேவையான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எனவும் வலியுறுத்தியுள்ளார். இரா.சம்பந்தனும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவும் தேர்தல் ஆணையாளருக்கு பக்ஸ் மூலம் முறையிட்டுள்ளனர். மூன்று சம்பவங்கள் குறித்து அவர்கள் முறையிட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற கு…
-
- 7 replies
- 1.5k views
-
-
கம்பளையில் குண்டுவீச்சு பலர்பலி... கம்பளையில் குண்டுவீச்சு பலர்பலி புத்தபிக்குகள் இருவர் உட்பட நால்வர் பலி மேலதிக செய்திகள் விரைவில்.... http://www.thinamurasam.com/index.php?option=com_content&view=article&id=248:2010-01-27-07-46-01&catid=34:ceylonnews&Itemid=71
-
- 12 replies
- 1.8k views
-
-
யாழ்.குடாநாட்டில் நேற்று அதிகாலை இடம்பெற்ற சம்பவங்களுக்கு இராணுவத்திலுள்ள ஒரு சில தீயசக்திகளின் செயற்பாடே காரணமென எதிரணி வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா நேற்று செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளார்.கொழும்பிலுள்ள அவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார். பெருமளவு மக்கள் வாக்களிக்க முன்வந்தமைக்கு காரணம் ஆட்சி மாற்றமொன்றை விரும்பியதேயாகும் என்று ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்ததுடன், யாழ்ப்பாணத்தில் குண்டுத்தாக்குதல் அதிகாலை இடம்பெற்றதால் 9 மணிக்கு பின்னரே மக்கள் வாக்களிக்கச் சென்றதாகக் கூறினார். செய்தியாளர் மாநாட்டில் ஜெனரல் மேலும் தெரிவித்ததாவது;வாக்களிப்பு நேற்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமானதையடுத்து பெ…
-
- 4 replies
- 908 views
-
-
சரத்பொன்சேகா ரிரான்ஸ் ஏசியா விடுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்? திகதி: 27.01.2010 // தமிழீழம் முன்னாள் இராணுவத்தளபதியும் சனாதிபதி வேட்பாளருமாகிய சரத்பொன்சேகா தங்கியிருந்த ரிரான்ஸ் ஏசியா விடுதியில் அவரை தடுத்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பில் உள்ள உயர்பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள ரிரான்ஸ் ஏசியா விடுதியைச் சுற்றி சுமார் 200 சிறீலங்காப்படையினர் நிறுத்திவைக்கபட்டுள்ளனர் என ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல ரூபாவாகினிக் கூட்டுத்தாபனமும் அரசகட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ரூபாவாகினிக் கூட்டுத்தாபனத்தையும் சுற்றி மகிந்தவுக்கு ஆதரவான படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இருப்பினும் இச் செய்தியை சுயாதீனமாக ஊர்…
-
- 22 replies
- 2.2k views
-
-
ரிரான்ஸ் ஏசியா ஹோட்டலின் உள்ளே எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா , ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவின் தேசிய அமைப்பாளர் டிரான் அலஸ் ஆகியோர் ஹோட்டலுக்குள் இருந்து தமது தோல்வியை மறைப்பதற்காக சூழ்ச்சி ஒன்றில் ஈடுபட்டமையை அடுத்தே இந்த சுற்றிவளைப்பு இடம்பெறுவதாக அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது. தற்போது கிடைக்கப்பெறும் தகவலின்படி சுமார் 200 இலங்கை இராணுவத்தினர் ரிரான்ஸ் ஏசியா ஹோட்டலை முற்றுகையிட்டுள்ளதாகவும், அங்கிருந்து எவரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் அறியப்படுகிறது. சரத்பென்சேகாவின் பாதுகாப்புப் படைப் பிரினரு…
-
- 8 replies
- 2.1k views
-
-
சக்தி மற்றும் சிரச தொலைக்காட்சி ஒலிபரப்பு நிறுவனங்கள் அமைந்திருக்கும் தெபான பன்னியப்பிட்டிய பகுதியை படையினர் சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நடவடிக்கை எதற்காக எடுக்கப்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு சக்தி மற்றும் சிரச தொலைக்காட்சிகளே அதிக முக்கியத்துவம் வழங்கி வந்தன. அத்துடன் குறித்த ஊடகங்களே சுயாதீனமாக இயங்கிவருகின்றன. இதன் காரணமாக அந்த ஊடகத்தின் செயற்பாடுகளை தடுக்கும் வகையில், படையினர் இந்த சுற்றிவளைப்பை நடத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அதேநேரம் பாதுகாப்பு கருதி கொழும்பு ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ள பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா இன்று நடத்திய செய்த…
-
- 0 replies
- 1.5k views
-
-
வன்முறைத் தேர்தல் பூர்த்தி இன்று காலை இந்தப் பத்தி வாசிக்கப்படும்போது, இலங்கையின் அடுத்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி யாகப் பதவியில் இருக்கப் போகின்றவர் யார் என்பது பெரும் பாலும் ஓரளவுக்கு முடிவாகியிருக்கும். யார் வென்றாலும், யார் தோற்றாலும், இத் தேர்தலில் இரண்டு பிரதான வேட்பாளர்களுமே சளைக்காமல் ஏட் டிக்குப் போட்டியாகக் களத்தில் மோதினர் என்ற பதிவை மட்டும் அவர்கள் விட்டுச் செல்வர் என்பது உறுதி. இந்தத் தேர்தலில் பிரசார காலத்தில் இடம்பெற்ற மிக மோசமான வன்முறைகளைப் போலவே வாக்களிப்பு சமயத்திலும் பரவலாக வன்முறைகள், குளறுபடிகள், அடாவடித்தனங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற தகவல், இத் தேர்தல் ஆரம்பம் முதல் இறுதி வரை வன் முறைக் களத்திலேயே அரங்கேறி முடிந்திருக்கின்றது என்பத…
-
- 1 reply
- 1k views
-