ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143313 topics in this forum
-
Published By: VISHNU 08 OCT, 2023 | 03:45 PM மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சல் தரைப் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்ட காணிகளை சட்ட விரோதமாக ஆக்கிரமித்தவர்களை வெளியேற்றுமாறு கோரி பண்ணையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை (08) மட்டக்களப்பு கொம்மாதுறையில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கலடி மத்திய கல்லூரிக்கு விஷேட நிகழ்விற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தாங்கள் மயிலத்தமடு மாதவனைப் பகுதியில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நேரில் முறைப்பாடு செய்வதற்காக பண்ணையாளர்கள் எடுத்த முயற்சிக்கு பொலிஸார் தடை ஏற்படுத்தியதால் பண்ணையாளர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டது. ஆர்ப்…
-
- 0 replies
- 233 views
- 1 follower
-
-
08 OCT, 2023 | 07:17 PM பெண் கிராம அலுவலரிடம் இருந்து பெருந் தொகைப் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் உரும்பிராய்ப் பகுதியில் நேற்று சனிக்கிழமை (07) காலை இடம்பெற்றுள்ளது. உரும்பிராயிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் உள்ள உரும்பிராய் சந்தி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பெண் கிராம அலுவலர் அணிந்திருந்த கைப்பையை, மோட்டார்சைக்கிளில் வேகமாகப் பயணித்த இரண்டு இளைஞர்கள் அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பில் கிராம அலுவலரால் கோப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . கைப்பைக்குள் அலைபேசி மற்றும் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பணம் என்பன இருந்தன என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப…
-
- 0 replies
- 267 views
- 1 follower
-
-
எதிர்காலத்தில் அரச சேவையின் மிகவும் அத்தியாவசியமான பகுதிகளைத் தவிர அரச துறையில் எந்தவொரு வேலைக்கும் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அரச சேவையானது அரசாங்கத்திற்கு தாங்க முடியாத பிரச்சினையாக மாறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். “15 இலட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். நாட்டின் மக்கள் தொகை 21 மில்லியன். மக்கள் தொகையில் சராசரியாக 12 பேருக்கு ஒரு அரசு ஊழியர் உள்ளனர். இது உலகின் மிக உயர்ந்த அரசு ஊழியர்களின் விகிதங்களில் ஒன்றாகும். எனவே இது பெரிய சுமை இனி அதை செய்ய முடியாது என்றார். https://thinakkural.lk/article/276119
-
- 0 replies
- 330 views
- 1 follower
-
-
08 OCT, 2023 | 11:05 AM (லியோ நிரோஷ தர்ஷன்) மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சீனாவுக்கு செல்கின்றது. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உள்ளிட்ட சீன அரசின் முக்கியஸ்தர்களுடன் பெய்ஜிங்கில் பரந்துப்பட்ட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட உள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு பல்வேறு எதிர்பார்ப்புகளுடனேயே சீனா செல்கின்றது. அந்த வகையில் கடன் மறுசீரமைப்பு மற்றும் கடன் தவணைகள் உள்ளிட்ட தடைப்பட்ட திட்டங்களுக்கு நிதி பெறுதல் மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புகள் என்று பரந்துப்பட்ட இலக்குகளை உள்ளடக்கியதாகவே இந்த வி…
-
- 0 replies
- 188 views
- 1 follower
-
-
08 OCT, 2023 | 10:23 AM (லியோ நிரோஷ தர்ஷன்) தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க அமெரிக்க பாதுகாப்பு உயரதிகாரிகளை சந்தித்து இருதரப்பு பாதுகாப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடியுள்ளார். எனினும் அந்த கலந்துரையாடல்களின் உள்ளடக்கத்தின் இரகசியத்தன்மை பாதுகாக்க இருதரப்பும் தீர்மானித்துள்ளது. கடந்த செப்டெம்பர் 22 ஆம் திகதி அமெரிக்கா சென்றிருந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க, 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை அங்கு தங்கியிருந்ததுடன் அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த விஜயம் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தல…
-
- 2 replies
- 370 views
- 1 follower
-
-
கொழும்பில் உள்ள ஏழு முக்கிய இடங்களில் குண்டுத் தாக்குதல் நடத்த ஐ.எஸ் ஐ எஸ் அமைப்பு திட்டமிட்டிருப்பதாக தென்னிலங்கை ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று (05) கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்கவிடம் இது தொடர்பான தகவல்களை தெரிவித்துள்ளதாகவும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொழும்பில் நாடாளுமன்றம், துறைமுகநகரம், கங்காராமய உள்ளிட்ட ஏழு இடங்களை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதலை நடத்தும் திட்டம் தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளின் திட்டம் தீவிரவாத செயல்களுக்காக தற்போது சிறையில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளால் இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது …
-
- 3 replies
- 607 views
- 1 follower
-
-
”முல்லைத்தீவு மாவட்டம் தென்னிலங்கை இனவாதிகள், தேரர்களால் குறிவைக்கப்படுகிறது” முல்லைத்தீவு மாவட்டம் தென்னிலங்கை இனவாதிகள், மற்றும் தேரர்களால் குறிவைக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” குருந்தூர் மலை தொடர்பான தீர்ப்பை மாற்ற வேண்டும் என்று அழுத்தங்கள் , உயிர் அச்சுறுத்தல் பிரயோகிக்கப்பட்டுள்ளதால் நீதிபதி அவர்கள் நாட்டைவிட்டு சென்றிருக்கின்றார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணிப் பகிஷ்கரிப்பத…
-
- 3 replies
- 631 views
-
-
முல்லைத்தீவு நீதிபதியாக இருந்த சரவணராஜா தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் ஊடகமொன்றுக்கு தெரிவித்த காணொளி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்த நிலையில் அது தொடர்பாக அவரே தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தி குறிப்பில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தி குறிப்பில் - “நீதிபதி சரவணராஜாவிற்கு மொழிப்பிரச்சனை இருந்திருக்கும்” கூறுகின்றார் சி.வி.விக்னேஸ்வரன் மேற்படி தலையங்கத்துடன் வெளியாகியிருக்கும் காணொளி எம் மக்களிடையே என் மீது ஒரு தவறான கருத்தை ஏற்படுத்தியிருப்பதை நான் அவதானிக்கின்றேன். சட்டத்துறை தலைமையதிபதி நீதிபதி சரவணராஜாவை அழைத்து அவரின் தீர்ப்பை மாற்றும்படி கோரியதாக வந்த…
-
- 2 replies
- 472 views
- 1 follower
-
-
07 OCT, 2023 | 06:21 PM யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு அண்மையில் மின்சார கம்பி அறுந்து விழுந்து, மின்சாரம் தாக்கியதில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் இன்று சனிக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் வீதி அகலிப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் வீதியோரத்தில் நின்ற பனைமரம் ஒன்று வெட்டப்பட்டது. இவ்வாறு வெட்டப்பட்ட பனைமரமானது மின்சார கம்பி மீது விழுந்தது. பனை விழுந்ததால் மின்சார கம்பி அறுந்து வீதியில் நின்ற பெண்ணொருவரின் மோட்டார் சைக்கிள் மீது முட்டியது. இந…
-
- 0 replies
- 256 views
- 1 follower
-
-
இவ் காணொளியை பார்க்க வயது கட்டுப்பாடு உள்ளதால், யூரியூப் உள்ளே சென்றே பார்க்க முடியும். பார்த்து பலருக்கு பகிர்ந்து தமிழ் தேசியப் போர்வையில், மோசடி செய்யும் கும்பலை தோற்கடிப்போம். யுத்த களத்தில் இறுதி வரைக்கும் நின்று போராடிய தலைவர் மற்றும் அவர் குடும்பத்தினரின் தியாகங்களை கொச்சை படுத்தும் கும்பலை தோலுரிப்போம்.
-
- 28 replies
- 4k views
-
-
WhatsUp செய்தி. அனுப்பியவர்கள் தனிப்பட்ட வகையில் தெரியும் என்பதால் பகிர்கிறேன். முடிந்தால் விரைவாக பகிருங்கள்: இன்று அனுராதபுரம் வைத்தியசாலையில் இடம்பெற்ற கூட்டமென்றில் , அந்த வைத்திய சாலையில் உள்ள Endoskopie இயந்திரம் பழுது அடைந்து விட்டதால் , முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் புலம்பெயர் தமிழர்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட மெசினை , முல்லைத்தீவிலிருந்து , அனுராதபுரம் எடுக்க தீர்மானிக்கப்பட்டதாக அறியப்பட்டது . அப்போது ஒரு தமிழ் வைத்தியநிபுணர் அதற்க்கு ஆட்சேபம் தெரிவித்தார் . அது அரசால் வழங்கப்பட்டது இல்லை . புலம்பெயர் தமிழர்களால் வழங்கப்பட்டது என ! அதற்க்கு ஒரு சிங்கள வைத்திய நிபுணர் … வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டால் அதற்க்கு தமிழர்கள் உரிமை கொண…
-
- 3 replies
- 444 views
-
-
Published By: DIGITAL DESK 3 07 OCT, 2023 | 12:55 PM யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, மாங்கொல்லை பகுதியில் இராணுவத்தினர் வெளியேறிய பிரதேசங்களில் உள்ள தமது காணிகளை அறிக்கைப்படுத்தும் நடவடிக்கைகளில் காணி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 33 வருடங்களுக்கு மேலாக மாங்கொல்லை பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அந்நிலையில் கடந்த ஜூன் மாத கால பகுதியில் அப்பகுதியில் இருந்த நிலைகொண்டு இருந்த இராணுவத்தினர், அங்கிருந்து வெளியேறினார். இராணுவத்தினர் வெளியேறிய போதிலும் அப்பகுதி இராணுவத்தினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படாததால், மக்கள் மீள் குடியேற முடியாத நிலைமை காணப்பட்டது. …
-
- 0 replies
- 269 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 07 OCT, 2023 | 03:05 PM இலங்கையில் முதல் முதலாக ஐ வடிவிலான யானை பாதுகாப்பு வேலி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியில் பாடசாலை ஒன்றிற்கு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பல்கலைக்கழகத்தின் உயிர்த்துறை திணைக்களத்தின் தலைவரும் விரிவுரையாளருமான கலாநிதி விஜயமோகனின் எண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட யானை பாதுகாப்பு வேலி (தொங்குவேலி) இலங்கையில் முதல் முறையாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் அ.த.க.பாடசாலையினை யானையில் இருந்து பாதுகாப்பதற்காக அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு வெள்ளிக்கிழமை (06) நடைபெற்றுள்ளது. வவுனியா பல்கலைக்கழகத்தின் ஏற…
-
- 0 replies
- 297 views
- 1 follower
-
-
பாடசாலைக்கு ஒழுங்கான வரவில்லை என மாணவியை கண்டித்த ஆசிரியர் மீது மாணவியின் தந்தை உள்ளிட்ட இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (03) தாக்குதல் நடாத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பாடசாலைக்கு ஒழுங்கான வரவில்லை எனும் காரணத்தால் பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள் மாணவியை கண்டித்ததால் , அந்த பாடசாலை நிர்வாகத்துடன் முரண்பட்டு , அந்த பாடசாலையில் இருந்து விலகி, பருத்தித்துறை பகுதியில் உள்ள பிறிதொரு பாடசாலையில் இணைந்து கற்றல் நடவடிக்கையை ஆரம்பித்தார். புதிதாக சேர்ந்த பாடசாலைக்கும் மாணவி ஒழுங்காக சமூகமளிக்கவில்லை. அதனால் பாடசாலை ஆசிரியர் ஒருவர் மாணவியை கண்டித்துள்ளார். இந்நிலையில், பாடசாலைக்கு சென்ற மாணவியின் த…
-
- 17 replies
- 1k views
- 2 followers
-
-
பிரபல ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த கைது ! பிரபல ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த கைது செய்யப்பட்டுள்ளார். கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மதம் மற்றும் தேசிய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2023/1352730
-
- 1 reply
- 371 views
-
-
‘நாய்’ என திட்டிய எதிர்க்கட்சி உறுப்பினர் : சபையில் சீறிய டயானா கமகே நாடாளுமன்ற சிறப்புரிமையை எழுப்பி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று நாடாளுமன்றத்தில் கடும் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார். பெண்களுக்கு மதிப்பளிக்க வேண்டியது நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரின் பொறுப்பு எனவும் டயானா கமகே குறிப்பிட்டுள்ளார். அத்துடன், சபையில் பெண்கள் மீதான துஸ்பிரயோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல் என்றும் கூறியுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் குறித்து தான் கேள்வி எழுப்பிய போது, ரஞ்சித் மத்தும பண்டார தன்னை ‘நாய்’ என திட்டியதாகவும் அது குறித்து சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இச்சம…
-
- 5 replies
- 667 views
-
-
“சர்வதேச விசாரணை வேண்டாம் ஜனாதிபதியின் கருத்தே எனது கருத்து” – மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விசாரணை வேண்டாம் என்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்துடன் தானும் உடன்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற மத வழிபாட்டை அடுத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை தமக்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் எண்ணம் இல்லை என்றும் புதிய தலைமைத்துவத்தின் கீழ் கட்சி முன்னோக்கி செல்ல வேண்டும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1352302
-
- 24 replies
- 1.6k views
-
-
06 OCT, 2023 | 02:47 PM மக்கள் எதிர்பார்க்கும் தலைவருக்கு தமது அணி தலைமைத்துவத்தை வழங்க எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு மயூராபதி ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை (06) இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு தொடர்ந்தும் பதில் வழங்கிய அவர், 'நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் வகையிலான தலைவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்துக்கு தெரிவு செய்யப்படுவார். எமது அணியில் இளைஞர் அணியினர் பலரும் உள்ளனர்…
-
- 2 replies
- 539 views
- 1 follower
-
-
பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போராட்டம்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை பாராளுமன்றத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்ட மயிலத்தமடு மேய்ச்சல் தரை காணிகளை மக்களிடம் கையளிக்குமாறும், மகாவலி என்ற பெயரில் காணி அபகரிப்புகளை நிறுத்துமாறும் வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சபைக்கு நடுவில் சபாபீடத்திற்கு முன்னால் வந்து இவர்கள் பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். http://www.samakalam.com/பாராளுமன்றத்தில்-தமிழ்த/
-
- 3 replies
- 687 views
- 1 follower
-
-
மலேசியப் படுகொலை – கைதான இலங்கையர்களின் விளக்க மறியல் நீடிப்பு! adminOctober 1, 2023 மலேசியாவில் மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களை மேலும் விளக்கமறியலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மலேசியாவில் வீடொன்றில் படுகொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையர்களின் சடலங்கள் கடந்த மாதம் 22 ஆம் திகதி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன. கொலைச் சம்பவம் தொடர்பாக சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட வீட்டின் உரிமையாளரான தம்பதியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொல்லப்பட்ட மூவரில் தம்பதியரின் மகனும் அடங்குவதாகத் தெரிவிக்க…
-
- 2 replies
- 379 views
- 1 follower
-
-
Published By: VISHNU 06 OCT, 2023 | 12:58 PM (எம்.மனோசித்ரா) முறிந்து விழும் அபாய நிலையிலுள்ள வீதியோர மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் பணிப்புரை விடுத்துள்ளார். இராஜாங்க அமைச்சர் பிரெமித்த பண்டார தென்னகோன், அனர்த்த முகாமைத்துவ நிலையம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், சுற்றாடல் அதிகாரசபை வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு, வீதியோரங்களில் விழும் அபாயத்தில் உள்ள பெரிய மரங்களை உடனடியாக ஆய்வு செய்து பொது மக்களுக்கு அசச்சுறுத்தலாக உள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளார். …
-
- 1 reply
- 441 views
- 1 follower
-
-
06 OCT, 2023 | 11:42 AM பூநகரி பகுதியிலுள்ள பஸ் நிறுத்தும் இடம் ஒன்றில் நின்றிருந்த பெண் ஒருவரை காரில் வந்த மூவர் கடத்திச் சென்று அவரிடமிருந்த தங்க நகைகளைக்க கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண்ணிடமிருந்து 7,45,000 ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த பெண்ணை கடத்திச் சென்று அவரது தங்க நகைகளைக் கொள்ளையிட்ட மூவர் குறித்த இதுவரை தகவல் இல்லை டினவும் அந்தப் பொலிஸ் அதிகாரி கூறினார். https://www.virakesari.lk/article/166231
-
- 0 replies
- 460 views
- 1 follower
-
-
Published By: VISHNU 05 OCT, 2023 | 03:49 PM கிண்ணியா குரங்கு பாஞ்சான் பிரதேசத்தில் இராணுவ முகாம் இருந்த முஸ்லீம்களுக்கு சொந்தமான காணிக்குள் 03, 04 ஆம் திகதிகளில் பௌத்த மதகுரு ஒருவரின் தலைமையில் ஐவர் கொண்ட குழு தொடர்ச்சியாக வந்து சென்றுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்தனர். இவர்கள் மீது சந்தேகம் கொண்ட விவசாயிகளும் சமூக நிறுவனங்களும் குடியிருப்பாளர்களும் கிண்ணியா நகர சபை முன்னால் உறுப்பினர் எம்.எம்.மஹ்தியின் கவனத்திற்கு இதனை கொண்டு வந்தனர். இது தொடர்பில் குறித்த இடத்துக்கு சென்று இவ்வாறு தெரிவித்தார். இக்குழுவினர் புதையல் அகழ்வதற்காகவா அல்லது ஏதேனும் அடையாளங்களை புதைப்பதற்காகவா…
-
- 1 reply
- 276 views
- 1 follower
-
-
யுத்தத்தை தொடர்ந்து வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட 400க்கும் அதிகமான பௌத்த தொல்பொருள் சின்னங்களுள் அதிகளவானவை தற்போது அழிக்கப்பட்டுள்ளாதாக நாடாளுமன்ற உறுப்பினரும் கடும்போக்குவாத சிங்கள அரசியல்வாதியுமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் நேற்றைய தினம் கோப் எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான தெரிவு குழுவிடம் சமர்ப்பித்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சரத் வீரசேகர கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கிலுள்ள சிங்கள தொல்பெருள் சின்னங்கள் தொடர்ந்தும் அழிக்கப்பட்டு வருகின்றன. தொல்பொருள் திணைக்களத்தின் சட்டங்களை வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்…
-
- 4 replies
- 751 views
-
-
2030 ஆம் ஆண்டளவில் இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களை பாதியாக குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறியப்படுகிறது. இராணுவத்தின் இணைந்துள்ளவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் இராணுவத்தினரின் எண்ணிக்கையை சுமார் 100,000 ஆக குறைக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இராணுவத்தை மீளாய்வு செய்வதற்கு ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில் குழுவொன்றையும் ஜனாதிபதி நியமித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை சுமார் ஒரு இலட்சமாக குறைத்து இராணுவத்தை தொழில்நுட்பமயபடுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அ…
-
- 8 replies
- 820 views
- 1 follower
-