ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142830 topics in this forum
-
“இராணுவ முகாமை அகற்றாதே ! ” – யாழில் போராட்டம் adminAugust 14, 2023 காவல்துறையினா் மீது நம்பிக்கை இல்லாததால் , தமது பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கற்கோவளம் பகுதியில் அமைந்துள்ள 4 வது சிங்க றெஜிமென்ட படையணி இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை காலை அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினா் மீது நம்பிக்கை இல்லை. காவல்துறையினா் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதில்லை இராணுவத்தின் மீதே எங்களுக்கு நம்பிக்கை. தனியார் காணியில் உள்ள இராணுவ முகாமை மாற்றுவதாக இருந்தால், அரச காணியில் இராணுவ முகாமை அமையுங்கள்…
-
- 10 replies
- 1.3k views
-
-
16 AUG, 2023 | 10:09 AM யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கையடக்கத் தொலைபேசியை வழங்கிய சம்பவத்தில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) உத்தியோகத்தர் காவல்கோபுர கடமையில் இருக்கும் போது கைதியான கமல் பிரியதர்ஷன என்பவரிடம் கையடக்கத் தொலைபேசி வழங்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இக்கைதி களுத்துறை சிறைச்சாலையில் நன்னடத்தை இல்லாத காரணத்தினால் நன்னடத்தைக்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டவர். ஒரு கிராம் மற்றும் 04 மில்லிகிராம் ஹெரோயின் வழக்கில் 14வருட தண்டனை கைதியாவர். சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, சிறைச்சாலை அத்தியட்சகர் கே…
-
- 0 replies
- 527 views
- 1 follower
-
-
Published By: VISHNU 15 AUG, 2023 | 08:50 PM (எம்.மனோசித்ரா) 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும் மற்றும் பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டத்தின் 11(இ) பிரிவின் ஏற்பாட்டுக்கமைய குறித்த அலுவலகத்தின் தத்துவங்கள், கடமைகள் மற்றும் பணிகளைப் புரிதல் மற்றும் நிறைவேற்றுதல் தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய கொள்கைகளை உள்ளடக்கக்கூடியவையான விதிகளையும் வழிகாட்டு நெறிகளையும் வழங்குதல் வேண்டும். அதற்கமைய, சட்டமா அதிபரால் வழங்கப்பட்டுள்ள அவதானிப்புக்கள் மற்றும் சிபாரிசுகளைக் கருத்தில் கொண்டு குறித்த வழிகாட்டுநெறி தயாரிக்கப்பட்டுள்ளதுடன், நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் …
-
- 0 replies
- 238 views
- 1 follower
-
-
Published By: VISHNU 15 AUG, 2023 | 08:46 PM பலரும் பேசிக் கொண்டிருக்கும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இன்றும் நாளையும் ஒரே நிலைப்பாட்டையே நாம் கொண்டுள்ளோம் என்றும், ஒன்றித்த நாட்டுக்குள் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரப் பரவலாக்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், ஒரு நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேண தேசிய ஒற்றுமை மிகவும் அவசியம் என்றும், நாட்டின் அனைத்து பிரஜைகளும் சமமாக கருதப்பட்டு ஒவ்வொரு சமூகத்திற்கும் சுயமரியாதையுடன் வாழும் உரிமை வழங்கப்பட வேண்டுமெனவும், இன்று இவை அச்சுறுத்தலுக்குள்ளாகி இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மகா சங்க…
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதி நெடுஞ்சாலையில் தொடர்ந்து இடம்பெற்று வரும் வீதி விபத்துக்களைத் தடுக்கும் நோக்கோடு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சரும் மண்முனைப்பற்று பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனின் ஆலோசனைக்கு அமைய மண்முனைபற்று பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்யானந்தி தலைமையில் இன்று இக் கலந்துரையாடல் நடைபெற்றது. ஆரையம்பதி வைத்தியசாலை தொடக்கம் பொதுச் சந்தை வரையிலான சுமார் 150 தொடக்கம் 200 மீற்றர் இடைவெளியில் கடந்த ஒரு வருடத்திற்குள் 25 இற்கும் மேற்பட்ட விதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இதில் பாதையை கடக்க முற்பட்ட 06 பேர் மரணமடைந்தனர். குறித்த பாதை …
-
- 4 replies
- 766 views
- 1 follower
-
-
Published By: VISHNU 15 AUG, 2023 | 04:47 PM மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் பிரதேசத்தில் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (15) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த யானை 35 வயதுடையது எனவும், இதனை வைத்திய பரிசோதனைக்கு பின்னர் இறந்தமைக்கான காரணம் தெரியவரும் எனவும், அதன் பின்னர் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அதனை அகற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். https://www.virakesari.lk/article/162440
-
- 3 replies
- 430 views
- 1 follower
-
-
15 AUG, 2023 | 10:28 AM கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிற்கும் இடையிலான கலந்துரையாடல் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் திங்கட்கிழமை (14) இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான சாலை வரைபடத்தைத் திட்டமிடுதல், இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் அரசு அலுவலகங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் மதத் தலங்களுக்கு இலவச சோலார் பேனல்களை நிறுவுவதற்கு காஞ்சன விஜயசேகர இணக்கம் தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மின்சார சபையின் தலைவர்,பிரதம செயல…
-
- 3 replies
- 333 views
- 1 follower
-
-
13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்டால் தேசிய நல்லிணக்கமும் இல்லாமல் போகும் – கம்மன்பில 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் தற்போதுள்ள தேசிய நல்லிணக்கமும் இல்லாமல் போகும் என நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். 13 ஆவது திருத்தம் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்றும் அதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் என என்றும் குறிப்பிட்டார். தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் பொலிஸ் அதிகாரம் மற்றும் காணி அதிகாரம் ஆகியவற்றை மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என உதய க…
-
- 7 replies
- 902 views
- 1 follower
-
-
நாட்டிலுள்ள பாரம்பரிய அல்லது ஆயுர்வேத வைத்தியர்களின் பதிவு இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. மாத்தளை மாவட்டத்தில் இருந்து ஆயுர்வேத மருத்துவ சபையின் பதிவு நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். மாவட்ட மட்டத்தில் ஆயுர்வேத வைத்திய சபையின் சேவைகளை வழங்கும் நோக்கில் மாத்தளை தன்னா ஆயுர்வேத வைத்தியசாலையில் இரண்டு நாட்கள் இந்த வேலைத்திட்டம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது ஆயுர்வேத வைத்தியர்கள் புதிய பதிவு, பதிவு புதுப்பித்தல் மற்றும் தொடர்புடைய கடிதங்களை வழங்குதல், அடையாள அட்டை தொடர்பான விண்ணப்பங்கள், பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத வைத்தியர்களுக்கான வாகன முத்திரைகள், சான்றளிக்கப்பட்ட பிரதிகள், கட…
-
- 1 reply
- 173 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 15 AUG, 2023 | 03:37 PM கட்டுநாயக்க பொலிஸ் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 18 போலி 5,000 ரூபா நாணயத்தாள்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய பெண்ணும் மற்றையவர் நிகவெரட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய இளைஞரும் ஆவார். இந்த இளைஞர் கட்டுநாயக்கா, கோவின்ன பிரதேசத்தில் கையடக்கத் தொலைபேசி திருத்தும் நிலையம் ஒன்றை நடத்தி வருவதுடன் இருவரும் அதே பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தற்காலிகமாக தங்கியுள்ளனர். …
-
- 0 replies
- 308 views
- 1 follower
-
-
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி செயற்பாடுகள் இடைநிறுத்தம்-காஞ்சன விஜயசேகர! நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி கட்டமைப்பை 100 நாட்களுக்கு செயலிழக்கச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்காகவே இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார் இதன்படி எதிர்வரும் மூன்றாம் திகதி முதல் 100 நாட்களுக்கு இந்த கட்டமைப்பு செயலிழக்க செய்யப்படவுள்ளது. மேலும் குறித்த காலப்பகுதியில் நாட்டில் மின்சார தடையை ஏற்படுத்தாது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1331886
-
- 4 replies
- 367 views
- 1 follower
-
-
6 மணி நேரம் முன் தென்மேற்கு பருவமழையில் எல் நினோவின் தாக்கம் காரணமாக, செப்டெம்பர் இறுதி வரை இலங்கையில் வரட்சியான காலநிலை நீடிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மே முதல் செப்டெம்பர் வரை, போதுமான மழையை வழங்கத் தவறிவிட்டது. இது சில மாவட்டங்களில் நீடித்த வரட்சிக்கு பங்களித்துள்ளது. எவ்வாறாயினும், நவம்பரில் எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவமழை, தற்போதைய வானிலை முறைகளால் பாதிக்கப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீர்மட்டம் குறைந்துள்ளதாக அறிவிப்பு வடகிழக்கு பருவமழை பயிர்களுக்கு, குறிப்பாக நெல் போன்ற பிரதான பயிர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. …
-
- 0 replies
- 134 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 15 AUG, 2023 | 11:51 AM அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை இம்மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, இம்மாதம் 28 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகும். இரண்டாம் கட்ட பாடசாலை தவணை ஆகஸ்ட் 28 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/162394
-
- 1 reply
- 545 views
- 1 follower
-
-
15 AUG, 2023 | 11:32 AM (எஸ். ரொஷாந்தினி) நாட்டில் வெளிப்படையான பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அதிகரித்துள்ள போதிலும், 62 சதவீதமான குடும்பங்கள், முன்னைய சேமிப்பை பயன்படுத்துதல், கடன் வாங்குதல் மற்றும் கடனில் உணவை கொள்வனவு செய்தல் போன்ற உத்திகளைக் கடைப்பிடிப்பதாக யுனிசெப் அமைப்பு தனது அண்மைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கடந்த வருடம் மே மாதத்தில் 48 சதவீதமான குடும்பங்கள் இவ்வாறான உத்திகளைப் பயன்படுத்திய நிலையில் தற்போது இந்த வீதம் 62 ஆக உயர்வடைந்துள்ளதாக அவ்வமைப்பு அறிக்கை ஊடாக சுட்டிக்காட்டியுள்ளது. இவற்றில் 26 வீதமான குடும்பங்கள் உற்பத்திகளை மேற்கொள்ள கூடிய (வருமானத்தை தரக்கூடிய) சொத்துக்களை …
-
- 1 reply
- 142 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 15 AUG, 2023 | 10:06 AM சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (14) இரவு கொழும்பில் இருந்து புறப்பட்டு சீனாவை சென்றடைந்தார். சீன வர்த்தக அமைச்சு மற்றும் யுவான் மாகாண அரசு இணைந்து நடத்தும் 7வது சீன - தெற்காசிய எக்ஸ்போ கண்காட்சி மற்றும் 27வது சீனா குன்மிங் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கண்காட்சி ஆகியவற்றில் அவர் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். சீனாவின் குன்மிங்கில் ஆகஸ்ட் 16 முதல் 20 வரை இந்த எக்ஸ்போ கண்காட்சி நடைபெறவுள்ளது. எக்ஸ்போ ஏற்பாட்டாளர்களின் கருத்துப்படி, இந்த மாபெரும் வர்த்தக கண்காட்சியில் 60 நாடுகள்…
-
- 1 reply
- 486 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 15 AUG, 2023 | 10:43 AM (எம்.மனோசித்ரா) இந்தோ-பசிபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு நேற்று திங்கட்கிழமை (14) கொழும்பில் ஆரம்பமானது. அமெரிக்க இந்தோ - பசிபிக் கட்டளை, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர கடற்படை இணைந்து கொழும்பு - ஷங்ரிலா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாடு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற இதன் ஆரம்ப நிகழ்வில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங், காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன, பாதுகாப்புப் படைகளின் பிரதானி, ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் சிறப்பு விரு…
-
- 0 replies
- 113 views
- 1 follower
-
-
Published By: VISHNU 11 AUG, 2023 | 05:05 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இராவணன் மன்னன் இயக்கர் குலத்தை சேர்ந்த சிங்களவர். இராணவன் தமிழர் என்று குறிப்பிட்டுக் கொண்டு இனவாதத்தை தூண்டிவிட முயற்சிக்கிறார்கள். தமிழ் பூர்வீகம் என்பது பொய் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இலங்கையில் சின்னங்கள் காணப்படுகின்ற போது இராணவனை தமிழர் என்று குறிப்பிடுவதையிட்டு வெட்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்ற இராணவன் மன்னன் தொடர்பாக முறைசார்ந்த ஆய்வொன்றை மேற்கொள்ளல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்ப…
-
- 32 replies
- 2.9k views
- 1 follower
-
-
நூருல் ஹுதா உமர் நாவலடி காணி விவகாரத்தில் இடம்பெற்றுள்ள இனவாத செயற்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். சட்டரீதியாக நீதிமன்றத்தினால் பிரிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கை 13ம் திருத்த சட்டமூலத்தின் பிரகாரம் மீளவும் இணைத்து பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை தமிழ் தரப்பு கோரிவரும் இந்நிலையில் பிரிந்த வடக்கு கிழக்கிலையே சாணக்கியன் எம்.பி போன்றவர்களின் அடாவடித்தனம் இவ்வாறு இருக்கிறது என்றால் இணைந்த வடகிழக்கில் முஸ்லிங்களின் வாழ்வியல் நிலை என்ன ? என்று கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஐ. ஹலீலுர் ரஹ்மான் கேள்வியெழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் முகத்திரை கிழிந்து …
-
- 5 replies
- 732 views
-
-
போதைக்கு அடிமையானவர்களை மீட்க வடக்கில் விசேட சிகிச்சை நிலையம் adminAugust 13, 2023 வடக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிகிச்சை நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ் பண்ணையில் அமைந்துள்ள மாகாண சுகாதார திணைக்களத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்ததாவது.. கடந்த ஒரு வருடமாக வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் பாவனையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவ்வாறு போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் வைத்தியசாலைக்கு வரும் போது அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இருப்பி…
-
- 1 reply
- 301 views
-
-
Published By: DIGITAL DESK 3 14 AUG, 2023 | 02:26 PM பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் கொழும்பில் பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான, ஆற்றல்மிக்க, முற்போக்கான, சகிப்புத்தன்மை மற்றும் ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் பாகிஸ்தானின் சுதந்திரத்தின் 76வது ஆண்டு விழாவை கொண்டாடியது. இலங்கையில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) உமர் பாரூக் பர்கி அவர்கள் பாகிஸ்தான் தேசிய கீதம் இசைக்கப்படும் வேளையில் பாகிஸ்தானின் தேசியக் கொடியை ஏற்றி இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனை தொடர்ந்து பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் விசேட செய்திகள…
-
- 0 replies
- 165 views
- 1 follower
-
-
மன்னார் மருத மடு திருத்தல பக்தர்களுக்கு அவசர கோரிக்கை மன்னார், மருத மடு திருத்தலத்தில் தங்கியுள்ள உள்ள பக்தர்களுக்கு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி. வினோதன் அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். மடு மாதா திருத்தலச் சூழலில் பெருமளவில் பக்தர்கள் தங்கியுள்ள சூழ்நிலையில் இடையிடையே மழை பெய்து வருகிறது. இதனால் தமது வாழ்விடங்களில் வசிக்க முடியாது பல்வேறுபட்ட விஷ ஜந்துக்கள் வெளியேறி வரும் நிலையில் அவற்றால் பக்தர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. எனவே ஆலயச் சூழலில் தங்கியுள்ள பக்தர்கள் இது தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு அன்புடன் வ…
-
- 1 reply
- 540 views
-
-
Published By: DIGITAL DESK 3 14 AUG, 2023 | 09:27 AM யாழ்ப்பாணம் - கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்க பகுதியில் சனிக்கிழமை (12) நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் விஷேட குற்றதடுப்பு பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் மேனன் தலைமையிலான காவல்துறை குழுவினரால் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. கோப்பாய் மற்றும் சிந்தங்கேணி பிரதேசங்களைச் சேர்ந்த 4 ஆண்களும் 2 பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட நபர் கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி (9வயது) ஒ…
-
- 0 replies
- 201 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 14 AUG, 2023 | 11:25 AM அரசமைப்பு ஊடாக ஈழத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம் பெறுகின்றனவா என முன்னாள் இராணுவ பிரதானி லெப் ஜெனரல் ஜகத்டயஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 13வது திருத்தத்திற்கு எதிரான நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தவேளை இதனைத் தெரிவித்துள்ள அவர், 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது வடக்கு கிழக்கில் தனிநாடு உருவாவதற்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்திருக்கின்றீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார். விக்கிரமசிங்க ராஜபக்ச அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நாடு பிளவுபடுவதற்கு வழிவகுக்கும் என்பதால் அதனை அவசரமாக எதிர்க்கவேண்டிய தேவை உள்ளதாக தான் உணர்ந்ததாக ஜகத் டயஸ் குறிப்பிட்டுள்ள…
-
- 0 replies
- 220 views
- 1 follower
-
-
14 AUG, 2023 | 04:49 AM (எம்.ஆர்.எம்.வசீம்) கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை 10ஆம் தரத்தில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி இருக்கிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தற்போது அது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ள இருக்கும் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையி்ல், நிகழ்காலத்துக்கு ஏற்றவகையில் கல்வித்துறையைில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கிறோம். தற்போது இருக்கும் கல்வி நடவ…
-
- 0 replies
- 112 views
- 1 follower
-
-
13 AUG, 2023 | 02:50 PM வடக்கு மாகாணத்தில் கடந்த சில மாதங்களாக ஒரு சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், வட பகுதியில் இருக்கின்ற வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு காணப்படுகிறது. இருப்பினும் 90 விகிதத்துக்கு மேலான மருந்துகள் அதாவது முக்கியமான நோய்களுக்குறிய மருந்துகள் இருக்கின்றன. திடீரென ஒரு சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுகின்ற போது நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றார…
-
- 0 replies
- 356 views
- 1 follower
-