ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்பட்டு வரும் வரிச் சலுகை (ஜி.எஸ்.பி. பிளஸ்) நிறுத்தப்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு என இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி ரொய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் ஏற்றுமதித் துறைக்கு வழங்கப்பட்டு வரும் சலுகையை நீடிப்பதற்கே ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகின்றது. ஆனால், மனித உரிமை விடயத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனில் சலுகை ரத்துச் செய்யப்படும் என்ற நிபந்தனை விதிக்கப்படும் என்று அந்த இராஜதந்திர வட்டாரங்கள் ரொய்ட்டர் நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளன. ‘எதிர்மறையான சிபாரிசுடன் அந்தச் சலுகை தொடர்ந்து வழங்கப்படும் என்றே தெரிகிறது” எனப் பெயரை வெளியிட விரும்பாத அந்த இராஜதந்திர …
-
- 5 replies
- 877 views
-
-
யாழ்ப்பாண மாநகர சபைக்கான தேர்தல் நடைபெற்று இரண்டு மாத காலம் பூர்த்தியடையவுள்ள போதிலும், மாநகர சபைக்கான மேயர் இதுவரையில் பதவியேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படும் அதேவேளையில், இந்தப் பதவியேற்பு நிகழ்வு எதிர்வரும் 10 ஆம் நாள் கொழும்பில் இடம்பெறும் என இப்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றது. வவுனியா நகர சபைக்கு இதே நாளிலேயே தேர்தல் நடைபெற்ற போதிலும், வவுனியா நகர சபையின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் அனைவரும் சில வாரங்களுக்கு முன்னர் பதவியேற்றுக் கொண்டனர். யாழ். மாநகர சபை உறுப்பினர்களின் பதவிப் பிரமாணத்தில் காணப்படும் கால தாமதத்துக்கு காரணம் என்ன என சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படையான ஈ.பி.டி.பி. குழுவின் தலைவரும் சமூக சேவைகள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா…
-
- 1 reply
- 499 views
-
-
தன்னைப் பற்றி அவதூறுப் பிரசாரம் மேற்கொண்டதாகத் தெரிவித்து சிறிலங்கா தரைப்படையின் முன்னாள் மூத்த அதிகாரியான மேஜர் ஜெனரல் வசந்த பெரேரா சிறிலங்கா ரூபவாகினிக் கூட்டுத்தாபனம் மீது 75 மில்லியன் ரூபா கேட்டு உயர் நீதிமன்றத்தில் மான நட்ட வழக்குத் தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 355 views
-
-
சிறிலங்கா அரசால் தமிழீ விடுதலைப் புலிகள் இயக்கம் படைத்துறை ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட போதும் கடற்படையினரைப் பலப்படும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 416 views
-
-
ஆறு மாதம் தள்ளிப்போகிறது 9வது உலகத் தமிழ் மாநாடு செப்டம்பர் 30,2009,00:00 IST சென்னை :போதுமான கால அவகாசம் எடுத்துக் கொண்டு, ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும், வெளிநாட்டு தமிழ் ஆய்வாளர்கள் பெருமளவில் கலந்து கொள்ளவும் வசதியாக, கோவையில் நடக்கவுள்ள ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை, 2010ம் ஆண்டு ஜூன் இறுதியிலோ அல்லது ஜூலை முதல் வாரத்திலோ நடத்த, முதல்வர் கருணாநிதி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், நிதிஅமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலர் ஸ்ரீபதி, உலகத் தமிழ் ஆராய…
-
- 3 replies
- 819 views
-
-
ஈழத் தமிழர் விவகாரத்தில் துக்க வீட்டில் கையறு நிலையில் நிற்பவர்களைப் போன்று உலக நாடுகள் அமைதி காக்கின்றன என்று 'குமுதம்' வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 'குமுதம்' குழுமத்தின் 'குமுதம்' வார ஏட்டில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையைப் பொறுத்தவரை, பெரும் போராட்டத்திற்குப் பின் ஏற்படும் 'வலுக்கட்டாயமான' மௌனம் நீடிக்கிறது. துக்க வீட்டில் கையறு நிலையில் நிற்கிறவர்களைப் போல பல நாடுகள் அமைதி காக்கின்றன. தங்களுடைய வீடுகளை விட்டு அகதிகளைப் போல் ஏறத்தாழ மூன்று லட்சம் தமிழர்கள், அவர்களுக்குக் குடியுரிமை இருப்பதாகச் சொல்லப்படும் சொந்த நாட்டில் முள்வேலி போடப்பட்ட முகாம்களில் அனாதைகளைப் போல் இன்றுவரை அடைந்து கிடக்கிறார்கள். …
-
- 1 reply
- 710 views
-
-
சிறிலங்கா அரசின் காவலில் இருக்கும் விடுதலைப் புலி சந்தேக நபர்களை வழக்கமான விசாரணை முறைகளுக்கு மாறாக சிறப்பு நீதி நடவடிக்கைக்கு உட்படுத்துவதற்கு சிறிலங்காவின் நீதித்துறை முயற்சிகளை எடுத்து வருகின்றது. இதற்காக அனைத்துலக நீதி வலைப் பின்னல் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளில் அது ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 279 views
-
-
நாட்டின் முக்கிய நபர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தற்போது வழங்கப்பட்டுவரும் பெரும் எடுப்பிலான பாதுகாப்பை குறைக்கும்படியும் அதற்கு செலவிடப்படும் பணத்தை வேறு தேவைகளுக்கு செலவிடலாம் என்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 309 views
-
-
காவற்துறைக்கு யாழ்ப்பாணம் இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்ளும் நேர்முகப் பரீட்சைகள் நேற்று ஆரம்பம் காவல்துறை திணைக்களத்தினால் யாழ்ப்பாண இளைஞர், யுவதிகளை காவல்துறைக்கு இணைத்துக்கொள்ளும் நேர்முகப் பரீட்சைகள் நேற்று ஆரம்பமாகின. நேர்முகப்பரீட்சைகளில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் காவல்துறையில் இணைத்துக்கொள்ளும் இந்த நேர்முகப் பரீட்சையில் ஆயிரக் கணக்கான இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டதாக காவல்துறைமா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண இளைஞர், யுவதிகளை காவல்துறைப் பணிகளில் இணைத்துக்கொள்ளும் நேர்முகப் பரீட்சைகள் அந்த மாவட்டத்தின் ஐந்து இடங்களில்…
-
- 9 replies
- 1.4k views
-
-
36% of total exports are to EU - US$ 2.91 billion 43% of garments exports are to EU - US$ 1.50 billion Marks and Spencer, GAP, C&A, Tesco are major buyers [b]GSP+ is a reward for good human rights. Sri Lanka refused to allow EU to investigate allegations of rights abuses. Sri Lanka continues illegal detention of 300, 000 Tamils for more than 6 months now. Sri Lanka killed more than 20, 000 Tamils in April-May, and ignores calls for inquires. But, GSP+ is extended. ------------------- The European Union is likely to let Sri Lanka keep a trade concession crucial to its apparel industry, while recommending it be revoked if the country do…
-
- 2 replies
- 1.2k views
-
-
எரித்திரியா அரசுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு நோர்வே நாட்டின் அமைச்சரும் அமைதி முயற்சிகளின் முன்னாள் அனுசரணையாளருமான எரிக் சொல்ஹெய்ம் உதவி செய்தார் என்று வெளியான செய்திகளை நோர்வே தூதரகம் மறுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 311 views
-
-
எரித்திரியா அரசுடன் விடுதலைப் புலிகள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு நோர்வே நாட்டின் அமைச்சரும் அமைதி முயற்சிகளின் முன்னாள் அனுசரணையாளருமான எரிக் சொல்ஹெய்ம் உதவி செய்தார் என்று வெளியான செய்திகளை நோர்வே தூதரகம் மறுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 529 views
-
-
வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாம்களில் இடம்பெற்றுள்ள பாதுகாப்புடன் தொடர்பான சம்பவங்கள் தொடர்பாக தமது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்திருக்கும் அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையம் (UNHCR), முகாம்களில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சிறிலங்கா அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றது. வவுனியாவில் உள்ள மெனிக் பாம் முகாமில் கடந்த சனிக்கிமை இடம்பெற்ற சம்பவத்தில் இரண்டு முகாம்களுக்கு இடையில் செல்வதற்கு முற்பட்ட மக்களைத் தடுத்து நிறுத்துவதற்குப் படையினர் முற்பட்டபோது மோதல் வெடித்ததாக யு.என்.எச்.சி.ஆர். வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 0 replies
- 484 views
-
-
வடபகுதியில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் முகாம்களுக்கு செல்வதற்கு தம்மை அனுமதிக்க வேண்டும் எனக் கோரி சிறிலங்காவின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்துள்ள மனு எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 27 ஆம் நாள் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்க
-
- 0 replies
- 530 views
-
-
வவுனியா முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மூன்று லட்சம் மக்களில் குறைந்தபட்சம் 20 ஆயிரம் பேராவது அங்கிருந்து தப்பிச் சென்றிருப்பதாக கண்டி மாவட்ட காவல்துறை அத்தியட்சகர் றஞ்சித் கஸ்தூரிரட்ன தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 450 views
-
-
'சிறிலங்கன் எயர்லைன்ஸ்' நிறுவனத்தில் பணிபுரிந்த இந்தியாவைச் சேர்ந்த விமானி ஒருவர் சிறிலங்காவின் நீர்கொழும்புப் பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து மர்மமான முறையில் குரூரமாகக் கொல்லப்பட்டிருப்பது சிறிலங்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. 50 வயதான குறிப்பிட்ட விமானியின் உடல் சிதைவடைந்த நிலையில் நீர்கொழும்பிலுள்ள அவரது வீட்டிலிருந்து நேற்று செவ்வாய்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறைப் பேச்சாளர் நிமால் மெடிவக்க தெரிவித்தார். வீட்டுப் படிக்கட்டில் தொங்கிய நிலையிலேயே அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார். இந்தக் கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை எனத் தெரிவித்த காவல்துறைப் பேச்சாளர், விசாரணைகள் நடத்…
-
- 1 reply
- 869 views
-
-
நான் உங்களோடுதான் இருக்கிறேன் - பிரபாகரன் Sep 28, 2009 தினையாண் குருவிகளைப்போல் அமைதியான உழைப்பும், அக்னிக் குஞ்சுகளைப்போல் அகத்தே நெருப்பும் சுமந்து தணிந்து போகாத விடுதலை தாகத்துடன் இயங்கினீர்களென்றால் புலிகளின் படை மீண்டும் முல்லைத்தீவில் தரையிறங்கும். கி.மு. 543-ஆம் ஆண்டு இந்தியாவின் மகத நாட்டு மன்னன் காட்டு குணம் கொண்ட தன் மகன் விஜயனையும் அவனது கஜபுல தோழர்கள் எழுநூறு பேரையும் நாட்டை விட்டு விரட்டியடிக்கிறான். செல்லுமிடம் தீர்க்கமாகத் தெரியாமல் மரக்கலமேறும் விஜயனும் அவனது அடங்காப் பிடாரிகளும் இலங்கையின் இன்றைய புத்தளத்தை அடுத்த தம்பப்பண்ணை துறையில் கரை சேர்ந்ததாக மகாவம்சம் பதிவு செய்கிறது. அகதிகளாய் வந்திறங்கிய விஜயன் தமிழரெனக் கருதப்படும் அந்நிலத்து ம…
-
- 1 reply
- 2.2k views
-
-
-
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமிழீழ தனித்தேசம் அமைக்க நடைபெற்ற ஆயுதப் போராட்டம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் கடந்த நான்கு மாதங்களாக இலங்கை அரசின் தடுப்பு முகாம்களுக்குள் இருக்கும் மக்களின் அவல வாழ்விற்கு முற்றுப்புள்ளி வந்தபாடில்லை. இந்த மக்கள் இன்னுமொரு நாட்டின் போர்க் கைதிகள் போலவே தற்போதும் நடாத்தப்பட்டு வருகிறார்கள். விடுதலைப் புலிகளை களையெடுப்பதாகவும் அதனால் தான் மக்களை தடுத்து வைத்திருப்பதாகவும் அரசு கூறுகிறது. ஆனால் விடுதலைப் புலிகளின் மிக முக்கியமான புள்ளிகளான தயா மாஸ்டரையும் ஜோர்ஜ் மாஸ்ரையும் பிணையில் விடுவித்துள்ளது. புலிகளின் இந்த இரு மாஸ்டர்களும் புலிகள் இயக்கத்தில் மிக முக்கிய பதவி வகித்தவர்கள். புலிகளின் தலைவருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள். ஆன…
-
- 1 reply
- 1k views
-
-
தமக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரி அநுராதபுரம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் 42 பேர் நேற்று ஆரம்பித்த உண்ணாநிலைப் போராட்டத்தை சிறைச்சாலை அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதிகளையடுத்து இன்று மாலை தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார்கள். இதேவேளை யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 15 இளைஞர்கள் இன்று உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள். விடுதலைப்புலிகளுடனான போர் முடிவடைந்து, அந்த அமைப்பைச் சேர்ந்த பல மூத்த உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், வெறுமனே சந்தேகத்தின் அடிப்படையில் மாத்திரம் கைது செய்யப்பட்டு விசாரணைகளும் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை தொடர்ந்து அடைத்து வைத்திருக்காது விடுதலை செய்ய…
-
- 0 replies
- 491 views
-
-
வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் வைக்கப்பட்டுள்ள இரண்டரை இலட்சத்துக்கும் அதிகமான மக்களுடைய நடமாடும் சுதந்திரம் மீள வழங்கப்பட வேண்டும் என்பதுதான் தற்போதைய நிலையில் உடனடிக் கவனத்துக்குரிய விடயமாக இருக்கின்றது எனத் தெரிவித்திருக்கும் ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர், முகாம்களிலுள்ள மக்களை விடுவிக்கும் செயற்பாடுகள் மிகவும் மெதுவாக நடைபெறுவதையிட்டு தாம் தொடர்ந்தும் மிகவும் கவலையடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். சிறிலங்காவுக்கான மூன்று நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு இடம்பெயர்ந்த மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள முகாம்களையும் நேரில் சென்று பார்வையிட்ட ஐ.நா. செயலாளர் நாயகத்தின் இடம்பெயர்ந்த மக்களின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான பிரதிநிதி வோல்டர் கெலினே தனத…
-
- 0 replies
- 457 views
-
-
அக்டோபர் 2... காந்தியின் பிறந்தநாள் மட்டும் அல்ல. ’காந்திய அரசியல் இயக்கம்’ பிறக்கப் போகும் நாளும்கூட. தமிழக காங்கிரஸின் பொதுச் செயலாளர், தமிழ்நாடு மாநில திட்டக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளை எல்லாம்.... ஈழத் தமிழர் நலனுக்குக் குரல் கொடுப்பதற்காகவே துறந்த தமிழருவி மணியன், அக்டோபர் 2 முதல் ’காந்திய அரசியல் இயக்கத்தை’த் தொடங்குகிறார். ”பிளாஸ்டிக் பூக்கள் போன்ற இன்றைய கட்சிகளுக்கு மத்தியில் தும்பைப் பூ இயக்கமாக இது இருக்கும்” என முன்னோட்டம் கொடுத்தவரிடம் சில கேள்விகளை வைத்தோம். பதில்களைக் கொட்டத் தொடங்கினார் ’தமிழருவி’! காந்திய அரசியல் இயக்கம் ஆரம்பிப்பதன் நோக்கம் என்ன? இன்றைய அரசியல் முழுக்க முழுக்கப் பணம் சார்ந்த தொழிலாக மாறிவிட்டது. வா…
-
- 0 replies
- 851 views
-
-
ராஜபக்சவை பழிவாங்க 100 பிரபாகரன்கள் வருவார்கள்: சொல்வது மங்கள சமரவீர செவ்வாய்க்கிழமை 29 செப்ரெம்பர் 2009இ04:53 பி.ப ஈழம்ஸ ஜவி.குமாரசுவாமிஸ சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தற்போது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பழிவாங்குவதற்கு 100 பிரபாகரன்கள் உருவாகி வருவார்கள் என்று தெரிவித்துள்ளார் சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர. பிரபாகரன்கள் மட்டுமல்லாது சிங்களச் சமூகத்தினர் அனைவருமே அவரைப் பழிவாங்குவார்கள் எனவும் அவர் கூறினார். கொழும்பில் உள்ள விகாரமாதேவி திறந்தவெளி அரங்கில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர்இ மகிந்த ராஜபக்சவால் ஒருபோதும் தமிழர்களின் மனங்களை வெல்ல முடியாது எனத் தெரித்தார். மகிந்த ராஜபக்ச க…
-
- 0 replies
- 824 views
-
-
கடந்த செப்ரம்பர் 7-ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த விடயமானது புலம் பெயர் தேசத்துத் தமிழர்கள் இதுவரை நடாத்திவந்த தொடர் போராட்டத் தியாகம் வீணாகிப் போய்விடுமோ என்று அச்சங்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகை தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது:- தமிழீழ மக்களின் பிரதிநிதிகளாக இலங்கை நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதை நோக்கிப் பயணிக்கிறார்கள் என்று அறிய முடியாமலேயே உள்ளது. முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதிக் கணம்வரை நேர் வழியில் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தற்ப…
-
- 0 replies
- 911 views
-
-
உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த திலீபனின் நினைவு நாள் செப்டெம்பர் 26. அகிம்சைப் போர் மூலம் சுதந்திரம் பெற்று, அணுகுண்டைத் தாங்கி நிற்கும் இந்தியப் படைகளின் நடுவே, ஆயுதங்களை ஒப்படைத்து, போராட்ட வடிவத்தை மாற்றிய திலீபன் விடுத்த ஐந்து கோரிக்கைகளை, எவருமே செவிமடுக்கவில்லை. இற்றைவரை எந்தப் போராட்ட வடிவங்களையும் எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவ்வாறு ஏற்றுக் கொள்ளவார்களென்று, வாடிய கொக்குப் போல் காத்திருக்கவும் முடியாது. வன்னிப் படுகொலைகளையும், வவுனியா தடுப்பு முகாம் அவலங்களையும் மறந்து, இலங்கையின் ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வினைத் தேடுமாறு அறிவுரை வழங்கப்படுகிறது. தீர்வுகளை முன்னிலைப்படுத்தினால், அவலங்கள் மறைக்கப்படலாமென்று பிராந்திய சக்திகள் எண்ணுகின்றன. அரசாங்கத்த…
-
- 0 replies
- 507 views
-