ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142912 topics in this forum
-
-
- 27 replies
- 3.6k views
-
-
புதுக்குடியிருப்பில் நேற்று நடந்த சண்டை தொடர்பாக அமெரிக்க தூதருக்கு விளக்கமளித்த பொன்சேகா புதுக்குடியிருப்பு வடக்கு, கிழக்கில் நடந்த தாக்குதல்களின் பலாபலன்களைக் கூறினார். அப்போது விடுதலைப்புலிகளின் பல இடை நிலைத்தலைவர்கள் கொல்லப்பட்டதாக மட்டும் குறிப்பிட்டுள்ள சரத் பொன்சேகா இராணுவமும் இந்திய மற்றும் சிங்களவர்களின் ஊடகங்களும் குறிப்பிட்டத்து போல சிரேஷ்ட தலைவர்கள் கொல்லப்பட்டத்தை சுட்டிக்காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Army Chief briefs US envoy on devolopments. US AMBASSADOR for Sri Lanka Mr. Robert O’Blake Monday (6) morning met Commander of the Army Lt. Gen. Sarath Fonseka at the Army Headquarters and received an update on the status quo, related to the …
-
- 6 replies
- 3.2k views
-
-
தமிழினம் என்றுமே கண்டிராத மிகப்பெரும் பேரவலம் சிங்களப் பேரினவாதத்தினால் ஏற்படுத்தப்பட்டுவரும் நிலையில் கனடாவில் தமிழ் தேசியத்தின் பெயரில் இயங்கும் ரி.வி.ஐ தொலைக்காட்சி மற்றும் சி.எம்.ஆர் வானொலி என்பன மிகப்பிரமாண்டமானஅளவில் ஆண்டுதோறும் நடாத்திவரும் கொண்டாட்டம் நிகழ்வை இந்த ஆண்டும் நடத்தவுள்ளனர். இப்படியான நிகழ்வுகளின்போது வருவாயாகக் கிடைக்கும் பெருந்தொகைப் பணத்தை அமுக்கும் நபர்கள் பிற இனத்தவருக்கு விழிப்புணர்வை ஊட்டுதல் என்றபெயரில் இந்த ஆண்டும் பிரமாண்டமான களியாட்ட நிகழ்வை முன்னெடுக்கவுள்ளனர். எனவே தமிழ் மக்களும் தமிழ் வணிகர்களும் குறித்த நிகழ்வைப் புறக்கணிக்க வேண்டும்.
-
- 2 replies
- 1.8k views
-
-
படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடரின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவிற்கு ஐ.நாவின் கல்வி மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ 2009ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகைச் சுதந்திர விருதை வழங்கியுள்ளது. யுனெஸ்கோவின் பணிப்பாளர் கொய்சிரோ மற்சூறா இவ்விருதுக்கு லசந்த விக்ரமதுங்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். போருக்கு எதிராகச் செயற்பட்டு வந்த லசந்த பரஸ்பர புரிந்துணர்வு, இணக்கப்பாடு, கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகிய முக்கிய பண்புகளை தனது ஊடகவியலில் கடைப்பிடித்ததற்காக இவ்விருது அவருக்குப் பொருத்தமானது என்றும் கொய்சிரோ மற்சூறா தெரிவித்துள்ளார். அவர் தனக்கு ஆபத்துள்ளதை உணர்ந்தும் தனது மரணம் வரை உண்மையைப் பேசியதால் இவ்விருதுக்கான தேர்வாளர்களால் இவரது பெயர் ஏகமனதாக ஏற்கப்ப…
-
- 0 replies
- 545 views
-
-
யாழுக்கு பொருட்களை எடுத்து செல்ல பாரஊர்திக்கு 1லட்சத்தி 57அயிரம் ரூபா. யாழ்குடா நாட்டுக்கு A-09 பாதையாலட பொருட்களை எடுத்து செல்ல 157000ரூபா பார ஊர்திக்கட்டணமாக செலுத்த வெண்டியுள்ளதாக வர்தகர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது சிறீலங்கா அரசு கொழும்பில் இருந்து பொருட்களைகொண்டு செல்ல அரச மொத்த வியாபார நிலையமான ச.தோ.ச வின் வாகனங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவற்றுக்கு அனியாயமாக பல கட்டணங்கள் வெலுத்துவதாகவும் 136000ரூபா வாகனக் கூலியாகவும் இறக்கி ஏற்றும் கூலி 10000ரூபா என்றும் பின்னர் நாவற்குழி களங்சியத்தில் இருந்து யாழி் வர்த்தக நிலையங்களுக் கொண்டு செல்ல மீண்டும் 100000ரூபாவும் இறக்க 1000ரூயாவும் என மொத்தம் 157000இற்கு மேல் செலவாவதாகவும் இதனால்…
-
- 0 replies
- 633 views
-
-
லண்டனில் பிரித்தானிய பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு இரவு பகல் என்று பாராமல் தமிழ் மக்கள் தமிழீழத் தேசியக் கொடியுடன் நடத்தும் முற்றுகைப் போராட்டம் பற்றிய காணொளிகளோடு பிபிசி செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டு வருகிறது. இதுவரை தமிழர்கள் லண்டனில் நடத்திய போராட்டங்கள் எதனையும் பிபிசி வெளியிட முன் வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் லண்டன் தேம்ஸ் நதிக்குள் பாய்ந்து தன்னை மாய்த்துக் கொள்ள முயன்ற போது உயிர்காப்புப் படகுகள் அவரைக் காத்து வைத்தியசாலையில் சேர்த்துள்ளன. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக வெஸ்மினிஸ்டர் பாலத்தினூடு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதோடு மக்கள் அதிகம் போக்குவரத்துச் செய்யும் வெஸ்மினிஸ்டர் நிலக்கீழ் தொடரூந்து நிலையமும் மூடப்பட்டு…
-
- 0 replies
- 3.2k views
-
-
தமிழ் மக்கள் இன்று அரசியல் தீர்வில் நம்பிக்கை இழந்து விட்டார்கள் எனத் தெரிவித்துள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், இந்த அரசாங்கத்திடம் இருந்து இன நெருக்கடியைத் தீர்த்து வைக்கக்கூடிய அரசியல் தீர்வினை எதிர்பார்க்கவும் முடியாது எனத் தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 456 views
-
-
சிறிலங்காவின் கம்பஹா மாவட்டத்தில் உள்ள மாரவில பகுதி வீடொன்றில் இருந்து வானூர்தியின் சில பாகங்கள் மீட்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 866 views
-
-
(3ம் இணைப்பு, ஆடியோ செய்தி )சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்துமாறு கோரியும் உடனடி போர் நிறுத்தம் ஒன்றிற்கு வலியுறுத்தியும், தற்பொழுது பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு, மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலண்டன் நேரம் 3 மணியளவில் ஆரம்பித்த இப்போராட்டம் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. வன்னியில் உடனடி யுத்த நிறுத்தம் ஒன்று ஏற்படும் வரை தொடர்ந்து இப்பாராளுமன்ற கட்டிடத்தின் முன் பாதைகளில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக, கலந்து கொண்டுள்ள பொது மக்கள் கூறியுள்ளனர். எனினும் பிரித்தானிய காவற்துறையினரால் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 6 மணி வரையே இவ்வார்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளத…
-
- 4 replies
- 1.4k views
-
-
வணக்கம், கடந்த சில நாட்களாக தாயத்தில் தளபதிகள் பலர் வீரமரணம் அடைந்து விட்டார்கள். பெரிய தலைகள் எல்லாம் போயிட்டிது என்று கூறி சிறீ லங்கா பயங்கரவாத அரசினால் வலிமையான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தாயக போராட்டத்தில் தளபதிகளின் இழப்பு என்பது தமிழருக்கு புதுமையான அல்லது முதலாவது அனுபவம் அல்ல. 1987ம் ஆண்டு இந்திய சிறீ லங்கா கூட்டு அரசாங்கங்களின் சதியில் ஒரே நேரத்தில் பல தளபதிகளை தமிழினம் இழந்து இருந்தது. ஆனாலும்.. அவர்கள் இல்லாத நிலையில் தாயக போராட்டம் பெருவிருட்சமாக வளர்ந்து உள்ளது. ஒரு தளபதி இல்லாமல் போகும் நேரத்தில் பல தளபதிகள் ஏற்கனவே உருவாகி இருப்பார்கள். இதுதான் யதார்த்தம். இனியும்கூட இதேவிடயம்தான் தொடரப்போகின்றது. ஆயுதம் ஏந்தி போராடுவதை அங…
-
- 18 replies
- 3.1k views
-
-
நோர்வே வாழ் தமிழ் மக்களினால் இன்று ஒஸ்லோவில் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சிறீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள இனப்படுகொலையினை உடனே நிறுத்தக் கோரியும், போர் நிறுத்தம் உடனே செய்யவேண்டும் எனக்கோரியும், தமிழீழத்தினை அங்கிகரிக்க கோரியும் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றக் கொண்டிருப்பதாக எமது தமிழ்செய்தி நிருபர் தெரிவித்தார். வீதியால் சென்றுகொண்டிருந்த வாகனங்களை நிறுத்தி வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பல இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். ஆர்ப்பாட்ட இடத்திற்கு பல நோர்வே ஊடகங்கள் சென்று செய்திகளை திரட்டிச் செல்வதாக எமது நிருபர் தெரிவித்தார். தற்பொழுது நோர்வே பாராளுமன்றம் நோக்கி ஆர்ப்பாட்டம் சென்றுகொண்டிருப்பதாக தெரி…
-
- 6 replies
- 1.4k views
-
-
விடுதலைப்புலிகளை புதுக்குடியிருப்பில் சுற்றி வளைத்திருப்பதாகவும் அவர்களை சரணடையுமாறும் சிறிலாங்கா இராணுவம் கூறியிருந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால்; தற்பொழுது கிடைத்த தகவல் ஒன்றின்படி சுற்றிவளைப்பிற்குள் இருந்த புலிகள் கடுமையான எதிர்ச்சண்டை பிடித்துக் கொண்டிருந்தமையால் இராணுவத்திற்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டது. அவ்வேளையில் தான் இராணுவம் ஒலிபெருக்கி மூலம் சரணடையுமாறு கேட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின் எரி நச்சுக்குண்டை ஏவியிருக்கின்றார்கள். அதனால் அங்கு நின்ற போராளிகள் அவ் எரி நச்சுக்குண்டு பட்டு எரிந்த நிலையில் கீழே வீழ்ந்ததாகவும். பின் இராணுவம் முன்னேறிச்சென்று இவ்வீரர்களின் உடலங்களைக்க் கைப்பற்றியதாகவும் அறியமுடிகின்றது. இவ் எரி நச்சுவாயுவை…
-
- 8 replies
- 2.8k views
-
-
http://www.swissmurasam.net/ பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் தாக்குதல் நடத்த மேற்கொள்ளும் முனைப்பிற்கு எதிராக சுவிசின் சூரிச் மாநகரின் பிரதான தொடரூந்து நிலயத்திலும் மற்றும் பேர்ணில் உள்ள சுவிஸ் பாராளமன்றத்திற்கு முன்பாகவும் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் ஒன்று கூடி தங்கள் எதிர்பை காட்டியவண்ணம் உள்ளார்கள் சூரிச் மாநகரின் பிரதான தொடரூந்து நிலையத்தில் 800ற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றுகூடி Tram ன் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளதாகவும் மக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாகவும் அங்கிருந்து முரசத்தின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். மேலும் பேர்ண் பாராளமன்றத்திற்கு முன்பாக நடந்துகொண்டிருக்கும் கண்டன ஆர்பாட்டத்தில் 400 ற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டிர…
-
- 0 replies
- 744 views
-
-
யாழ்குடாநாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் வன்னியில் தனது குடும்பத்தவர்கள் இறந்த செய்து கேட்டு மனவிரக்தியுற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொண்டவர் யாழ். திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயத்தில் பணிபுரியும் 38 வயதுடைய சரோஜாதேவி இராசகுமாரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஐந்து வயதுக் குழந்தை ஒன்றின் தாயாரான இவரது கணவர் இராசகுமாரன் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளராவார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பிரதேசத்தைச் சொந்த இடமாகக் கொண்ட இவர் யாழ்ப்பாணத்தில் ஆசிரியையாகக் கடமையாற்றி வந்தார். வன்னியில் இடம் பெற்று வரும் பேரவலத்தில் இவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்ட தகவல் இவருக்குக் கிட்டியிருந்ததாகவும், இதனையடுத்து நேற…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழீழ எழுச்சிப் பாடகர் சாந்தன் அவர்களின் கருத்துப்பகிர்வினை கேட்க இதனை அழுத்தவும். 05-04-2009 நன்றி புலிகளின் குரல் ..............
-
- 1 reply
- 1.1k views
-
-
வவுனியாவில் இடம்பெயர்ந்து வந்துள்ள மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிலை பொருத்தமானதாக இல்லை எனத் தெரிவித்திருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியான வோல்டர் ஹெலன், இந்த விடயங்கள் குறித்து அரசாங்கத்துடன் தாம் பேச்சுக்களை நடத்திக்கொண்டிருப்பதாகவும், இது தொடர்பாக புதிய பரிந்துரைகளை செய்யவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 690 views
-
-
மிகவும் ஆபத்தான நிலையில் இப்பொழுது வன்னி மக்கள் இருக்கின்றார்கள். "பாதுகாப்பு வலயம்" என்ற பெயரில் ஒரு மரணப் பொறிக்குள் இரண்டரை இலட்சத்திற்கும் மேலான அப்பாவி மக்கள் சிக்கியிருக்கின்றார்கள். புதுக்குடியிருப்பு முழுவதும் தம்வசம் வந்துவிட்டதாகவும் பாதுகாப்பு வலயம் மட்டுமே இன்னும் எஞ்சியுள்ளதாகவும் சிங்கள இராணுவம் அறிவித்துள்ளதன் பின்னணியில், அவ்வப்பாவி மக்களையும் பொருட்படுத்தாமல் பாதுகாப்பு வலயம் மீது பெருமெடுப்பிலான தாக்குதலை நடத்துவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகின்றது. அப்பாதுகாப்பு வலயத்தினை ஐந்து முனைகளில் சிங்கள இராணுவம் சுற்றிவளைத்து ஒரே சமயத்தில் தாக்குதல் நடத்தவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் அனைவரும் தற்பொழுது இருக்கும் …
-
- 0 replies
- 796 views
-
-
இன்று இப்பொழுது வன்னியில் அகோர எறிகணை வீச்சுக்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்திய நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றியீட்ட வேண்டுமென்பதற்காக நடிப்புக்காக போரை நிறுத்தச் சொல்லி வெளியிலே சொல்லிவிட்டு உள்ளே போரை நடத்து என சோனியா மகிந்தாவிற்கு சொல்லிவிட்டு வேசம் போட்டு கொண்டிருக்கிறார். வருடப் பிறப்புக்கு முன்பாக தமிழீழ விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களையும் அழித்தே தீருவேன் எனச் சூளுரைத்தபடி மகிந்தா போரை முடுக்கி விட்டுள்ளான். நாசீசவாதி கிட்லருக்கு ஒப்பாக இனச் சுத்திகரிப்பை மகிந்தா மெற்கொண்டுள்ளது.தொடர்ச்சியா
-
- 0 replies
- 1.1k views
-
-
வன்னியில் உள்ள அனைத்து மக்களையும் படுகொலை செய்ய சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தற்பொழுது வந்த செய்திகள் தெரிவிக்கின்றன! வன்னியில் உள்ள அனைத்து மக்களையும் படுகொலை செய்ய சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தற்பொழுது வந்த செய்திகள் தெரிவிக்கின்றன; விடுதலைப் புலிகள் பாதுகாப்பு வலையத்தில் உள்ளதாகக் கூறி இந்தியா மற்றும், உலக நாடுகளின் ஆதரவுகளோடு பெரும் இனப்படுகொலையை சிறீலங்கா அரசாங்கம் வன்னியில் மேற்கொள்ள உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வருகின்ற நாட்களில் படுகொலை செய்யப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகின்றது.இந்த இனப்படுகொலையினை புலம் பெயர் தமிழ் மக்களினால் தடுக்க முடியும். புலத்தில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் வீதிகளுக்கு இறங்கி தங்…
-
- 0 replies
- 1.3k views
-
-
Defence.lk இல் போட்ட படங்களில் சில: http://www.defence.lk/img/20090405_07c.jpg http://www.defence.lk/img/20090405_04_pp1.jpg குறிப்பாக முதலாவது படத்தில் உள்ளவரின் கைகளைப் பாருங்கள். எனக்கென்னமோ இது சாதாரண ஆயுதங்களால் வந்திருக்கமுடியாது போல் தோன்றுகின்றது. ஆகவே சிங்களம் பெரு வெற்றி கொண்டாடிக்கொண்டிருக்கும் நேற்றைய களமுனையில் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டிருக்கலாம் போலுள்ளது...?
-
- 10 replies
- 3.4k views
-
-
தடுமாறும் சமர்க்களம் - வெல்லப்படாத போர் - நி.பாலதரணி - போர் நிறுத்த ஒப்பந்தங்கள் கொடிய போரின் மற்றுமொரு முகம். இராஜதந்திர முயற்சியின் பிறப்பு. அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள், சில விட்டுக்கொடுப்புக்கள், ஆசைகளை காட்டுதல், எதிர்பார்ப்புக்களை மெருகேற்றுதல், போன்றவற்றை நாசுக்கான முறையில் நகர்த்துதல் இராஜதந்தரத்தின் இன்னொரு பக்கம். இவற்றினூடாக விருப்பப்படாத விடயங்களைக் கூட தமது நலன்களுக்கு ஏற்ப இணங்க வைத்துக்கொள்ளுதல் குறிப்பிடத்தக்க அம்சம். இது உலக வரலாற்றில் நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. இவையனைத்தினதும் பின்ணனியில் பலமே மூலதனமாக உள்ளது. பலத்தில் உயர்ந்தவனே இராஜதந்திர களத்திலும் உயர்வான். பலம் என்பது தனித்து அரசியல், பொருளாதார மற…
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கை அரசாங்கம், யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஐக்கிய இராச்சிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் [ திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2009, 04:35.01 AM GMT +05:30 ] தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமை வழங்கியுள்ள போர் நிறுத்ததிற்கான வாய்ப்பை, இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஐக்கிய இராச்சிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கையில் நிலவுகின்ற இனப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்து தீர்ப்பதற்கு, இது ஒரு சிறந்த வாய்ப்பு என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கை அரசாங்கத்தினால், பாதுகாப்பு வலயங்களில் பொது மக்கள் கொல்லப்படுவதும், கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதும் கண்டனத்திற்குறியது என அவர்கள் தெரிவித்துள்ளனர்…
-
- 0 replies
- 944 views
-
-
சமாதானத்தை நோக்கி ஓபாராவைச் சந்திக்க அமெரிக்க எல்லையைக் கடந்த தமிழ் இளையோர் [ திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2009, 11:55.10 AM GMT +05:30 ] அமெரிக்க சிக்காக்கோ மாநகரில் உள்ள ஹார்போ கலையகம் நோக்கித் தங்கள் அறுபது நாட்கள் நடைப்பயணத்தைத் தொடங்கிய மாணவர்கள் வின்சர் டெற்ரோய்ட் எல்லையினைக் கடந்து அமெரிக்காவினுள் கடந்த வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 3, பிற்பகல் 1 மணிக்கு சென்றுள்ளனர். இலங்கைத் தீவிலே சிறீலங்கா அரசினால் முன்னெடுக்கப்படும் மனித அவலத்தை ஒபரா வின்ப்ரேயின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி அந் நிகழ்ச்சியில் வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மாணவர்கள் சிலர் இந் நடைப்பயணத்தினை கடந்த மாதம் 4ம் திகதி ஆரம்பித்திருந்தனர். “ஒபரா வின்ப்ரேயின் நிகழ்ச்சியில் நான் நிச்சயம…
-
- 0 replies
- 622 views
-
-
-
தமிழீழ மக்களைக் பதவிக்காக பலிகொடுத்த கருணாநிதியை ஆதரிக்காதீர் on 06-04-2009 08:06 தமிழீழ மக்களைக் பதவிக்காக பலிகொடுத்த கருணாநிதியை ஆதரிக்காதீர்-வீரமணிக்கு கனடா நக்கீரன் அறிவுரை : தமிழக அரசியலில் யாருமே யோக்கியவான்கள் இல்லை. நீங்கள் கூட ஜெயலலிதாவின் சேலைத் தலைப்பில் தொங்கிக் கொண்டு கலைஞர் கருணாநிதியைச் சாடியவர்தான் 'சமூக நீதி காத்த வீராங்கனை" என்று பட்டம் கொடுத்து துதிபாடியதை மறந்து விட்டீர்களா? 'மருந்து, உணவுப் பொருட்களை கப்பல் மூலமாக அனுப்பி மத்திய அரசு மூலமாக செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாக இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறதே இதை இல்லை என்று மறுக்க முடியுமா?" என்று கேட்கிறீர்கள். நல்ல கேள்வி. தமிழ்மக்களைக் குண்டு போட்ட…
-
- 0 replies
- 738 views
-