ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
விசுவமடு தேராவில் ஆட்லெறி தளத்தினை தர்த்த மூன்று கரும்புலிகளும் தேசியத் தலைவருடன். நன்றி ஈழநாதம்
-
- 6 replies
- 4.3k views
-
-
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் அலுவலகமொன்றின் மீது இன்று அதிகாலை ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். சொறிக் கல்முனை 6ஆம் கட்டையிலுள்ள இவ்வலுவலகம் ஏற்கனவே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவலகமாக செயல்பட்டு வந்ததாகவும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (இனத் துரோகி கருணா ) ஸ்ரீ.லங்கா சுதந்திரக் கட்சியில் அண்மையில் இணைந்து கொண்ட பின்பு அவரது அலுவகமாக செயல்பட்டதாகவும் பிரதேச வாசிகள் தெரிவித்தனர். இன்று அதிகாலை இவ்வலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது கொல்லப்பட்ட நால்வருமே அங்கு தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது. விடுதலைப் புலிகளே இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாக அக்காரியாலயத்துடன் தொடர…
-
- 1 reply
- 1.7k views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறை பகுதியில் சிறிலங்கா படையினருடன் சேர்ந்து இயங்கும் முரளிதரன் குழுவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மினி முகாம் மீது இன்று அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 707 views
-
-
புதுக்குடியிருப்பு, விசுவமடு பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கடுமையான தாக்குதலில் சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்ட அதிக உயிரிழப்புக்கள் மற்றும் படையப் பொருட்களுக்கு ஏற்பட்ட அழிவுகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.9k views
-
-
watch this video http://www.tamilkathir.com/news/1191/58//d,view_video.aspx
-
- 0 replies
- 998 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சிறிலங்கா அரசாங்கத்தினால் அசைக்கக்கூட முடியாது என்று மலேசியாவின் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் தலைவர் கர்ப்பால் சிங் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 366 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் நேற்றும் நேற்று முன்நாளும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை மற்றும் வான் தாக்குதல்களில் 57 தமிழா்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 354 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் சிறிலங்கா படையினரின் ஆட்லெறி பீரங்கி தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 54 replies
- 5.5k views
- 1 follower
-
-
தமிழ், தமிழன், தமிழ்ப் பண்பாடு என்று சொல்லி தன்னுடைய வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்ட கருணாநிதி, தன்னுடைய அறிக்கையின் மூலம் தான் ஒரு "தமிழினத் துரோகி' என்பதை நிரூபித்து விட்டார் என்று குற்றம்சாற்றியுள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா, துரோகி தூக்கி எறியப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையையே நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு, "அனைத்துக் கட்சிக் கூட்டம்'; "நாடாளுமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்களை பெறுதல்'; "ராஜினாமா கடிதங்களை கிழித்து போடுதல்'; "மனித சங்கிலி போராட்டம் என பள்ளிக் குழந்தைகள் உட்பட அனைவரையும் மழையில் நிற்க வைத்து தந்தையும், மகனும் வாகனத்தில…
-
- 0 replies
- 947 views
-
-
வீரகேசரி நாளேடு - இலங்கையில் நடக்கும் பிரச்சினை உள்நாட்டு விவகாரம். இலங்கையின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க இந்திய அரசு இராணுவ உதவிகளைச் செய்து வருகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங், கடந்த அக்டோபர் 2ஆம் திகதி தனக்கு எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இராணுவ உதவிகள் மட்டுமின்றி, பண உதவியையும் இந்திய அரசு செய்து வருகிறது என்றும் அவர் எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிடப் பட்டிருந்ததாகவும் அவர் கூறினார். சேலத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, நேற்று சேலம் வந்திருந்தார். அப்போது செய்தியா ளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவ…
-
- 3 replies
- 759 views
-
-
இந்திய நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது. தற்பொழுது ஈழப்பிரச்சினையானது இந்திய அரசியலில் பேரளவில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈழ ஆதரவை ஒடுக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாவது இந்திய அரசியலில் ஈழ மக்களது பிரச்சினை பெரிதளவு பேசப்பட்டு வருகின்றது. ஈழ மக்களுக்கு ஆதரவாக தமிழ் மக்களிடத்தில் ஈழ மக்களின் நிலையை எடுத்துச்சொல்லும் வகையில் மனித நேயமிக்க அரசியல்கட்சிகளும் , அரசியல் சாரா அமைப்புகளும் துண்டறிக்கைகளையும் , சுவரொட்டிகளையிம் , பதாகைகளையும் வைத்து மக்களிடத்தில் தமிழுணர்வை ஊட்டிவருகின்றனர். தமிழகத்தில் எழுந்துள்ள ஈழ ஆதரவானது தமிழகத்தில் மட்டுமல்லாது , இந்திய முழுமைக்க…
-
- 18 replies
- 2k views
-
-
மன்னார் பேசாலைப்பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை துணைப்படை ஆயுததாரிகள் சிலர் வீடொன்றினுள் புகுந்து பெண்களுடன் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளனர். வீட்டுப் பெண்கள் துணிச்சலுடன் அபயக்குரல் எழுப்பியதும், அயலவர் திரண்டு வீட்டுக்குள் நுழைய ஆயுததாரிகள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு பேசாலையிலுள்ள வீட்டில் தாய், தந்தை மற்றும் இரு மகன்கள் இரண்டு மகள்மார் உறக்கத்தில் இருந்தவேளை அங்கு சென்ற ஆயுதம் தரித்த சிலர் வீட்டை சோதனையிட வேண்டும் எனக்கூறி கதவைத் திறக்குமாறு கோரியுள்ளனர். வீட்டார் கதவை திறக்காததால் தொடர்ந்து ஆயுததாரிகள் மிரட்டவே வீட்டில் உள்ளவர்கள் அபயக்குரல் எழுப்ப அயலவர் திரண்டு வந்துள்ளனர். இதையடுத…
-
- 1 reply
- 683 views
-
-
உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் உண்ணாநிலைப் போராட்டம் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் உண்ணாநிலைப் போராட்டம் : தமிழக மாணவர் கூட்டமைப்பு வேண்டுகோள் கடந்த இரண்டு மாத காலமாக 2400 க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் இனவாத சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டுவிட்டார்கள். தினமும் 100க்கு மேற்பட்ட பிஞ்சு குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்படுவதை தட்டிக் கேட்க வேண்டிய இந்திய அரசும், சர்வதேசமும் கண் இருந்தும் குருடர்கள் போலவும் வாய் இருந்தும் ஊமைகளாக இருக்கின்றனர். பச்சிளம் குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டு ரத்த குவியலாகி கிடக்கிறார்கள். இளம் சிறுமிகள் கூட கற்பழித்து கொல்லப்படுகிறார்கள். அடுத்து வரும் 72 மணித்தியாலங்கள் நான்காம் ஈழப் போரில்…
-
- 2 replies
- 710 views
-
-
வன்னித் தமிழ் மக்களின் வாழ்விடங்களைப் பறித்து.. அவர்களின் உயிர் வாழ்வை நிராகரித்து நிற்கும் சிங்கள பேரினவாத தேசத்திற்கு யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கணேசின் ஏற்பாட்டின் கீழ் சிறீலங்கா படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட ஏ 9 நெடுஞ்சாலை வழியாக கருவாடு, இறால் , வெங்காயம், பீற்றூட் போன்ற பொருட்கள் சிங்கள தேசத்திற்கு புரதச் சத்தூட்டி ஆடம்பரமாக வாழ அனுப்பப்படுகின்றனவாம். ஆனால் வன்னியில் வாழும் மக்களை இதே சிங்கள தேசம் பட்டினி போட்டுக் கொல்வதை இந்த யாழ்ப்பாண அரசாங்க அதிபர் ஒரு தடவை தானும் மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் பார்த்துக் கருத்துக் கூறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாண மக்களின் தேவையையே பூர்த்தி செய்ய போதிய கடல் வாழ் புரத உணவுகள் இல்லாத நிலையில் ஒட்டுக்குழுக்கள…
-
- 18 replies
- 2.4k views
-
-
சிறீலங்காவின் உண்மை நண்பன் இந்தியா - அமைச்சர் நிமால் பாராட்டு உலகின் பல நாடுகள் இங்கு நடப்பது தெரியாது எமக்கு பல கட்டளைகள் போடுகின்றது, ஆனால் இந்தியா எமது நிலையை நன்கு புரிந்து கொண்ட நண்பனாக செயற்பட்டு வருகின்றது என சிறீலங்காவின் சுகாதார அமைச்சர் சிமால் சிறீபால டி சில்வா தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து சிறீலங்கா சென்றுள்ள இந்திய இராணுவ மருத்துவக் குழுவினரைச் சந்தித்து அவர்கள் கொண்டு சென்றுள்ள மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்ளும் நிகழ்வில் இக்கருத்தை அவர் தொவித்துள்ளார். மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில் உலக நாடுகள் பல சிறீலங்காவின் நிலையை புரிந்து கொள்ளாது எம்மை அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே, அதைக்கைவிடு, இதைக்கைவிடு என தொடர்ந…
-
- 0 replies
- 549 views
-
-
38 அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கையெழுத்திட்டு கிலாரியிடம் மனு. இலங்கை மனித உரிமை நிலை குறித்து கவலை. இலங்கை நிலைகுறித்து 38 அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். இக்கையெழுத்தடங்கிய பிரதி அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் கிலரி கிளிங்டன் மற்றும் ஜ.நா வுக்கான அமெரிக்கப் பிரதிநிதி ஆகியோருக்கு அவசரமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இக் கடிதத்தில் இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் மனிதாபிமான பிரச்சனைகள், யுத்த பிரதேசத்தில் மக்கள் சிக்குண்டு கிடப்பது, மற்றும் வவுனியாவில் இயங்கி வரும் இடைத்தங்கல் முகாம்களின் செயல்பாடுகள் என்பன சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக நடைபெறும் போரை முடிவிற்கு கொண்டுவந்து, அரசியல் தீர்வொன்றை முன…
-
- 0 replies
- 645 views
-
-
அமெரிக்க தலைநகர் வாசிங்டனில் அமெரிக்க அரசு அதிகாரிகளை சந்தித்து சிறீலங்கா விவகாரம் தொடர்பில் பேச்சுக்களில் ஈடுபட்ட இந்திய வெளிவிவகாரச் செயலர் சிவசங்கர் மேனன் சண்டைகள் முடிந்து புலிகள் பலமிழந்த பின் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கருத்துக் கூறியுள்ளார். சிறீலங்காவில் நிரந்தர அமைதி ஏற்பட யுத்தம் வெற்றிகரமாக முடிந்த பின் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்க வேண்டும் என்று மொட்டையாகக் கருத்துக் கூறியிருக்கும் மேனன்.. அது எவ்வகையான அதிகாரப்பகிர்வு எந்தளவு என்ற எதனையும் தெளிவாக வரையறுத்துக் குறிப்பிடவில்லை. சிறீலங்காவை போரின் விளைவுகளில் இருந்து மீளக்கட்டி எழுப்பும் அதேவேளை தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வளிப்பதும் அவசியம் என்று மட்டும் க…
-
- 4 replies
- 1.9k views
-
-
Brussels, March 12 (EuAsiaNews): The European Parliament (EP) adopted Thursday a resolution on the situation in Sri Lanka calling for an immediate ceasefire by the Sri Lankan army and the Liberation Tamil Tigers of Ealam (LTTE)in order to allow the civilian population to leave the combat zone. The EP condemned the LTTE’s violence and intimidation which are preventing civilians from leaving the conflict area. It voiced concern about reports of serious overcrowding and poor conditions in the refugee camps established by the Sri Lankan Government. EU parliamentarians called on both sides to respect international humanitarian law and to …
-
- 3 replies
- 1.2k views
-
-
திருவண்ணாமலை ஜீவா வேலு பள்ளியின் 7-வது ஆண்டு விழா நேற்று மாலை நடந்தது. விழாவில் பள்ளி நிர்வாக இயக்குனர் டாக்டர் எ.வ.வே. கம்பன் வரவேற்றார். முதல்வர் ஜான்சன் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் நடிகர் சத்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:- ஆள் அழகாக இருந்தால் ஆங்கிலம் தெரியும் என்று நினைப்பது தவறு. பள்ளியில் படிப்புக்கும் எனக்கும் எப்படி சம்பந்தம் இல்லையோ அதே போலத்தான் நடிப்புக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. உங்களுக்கு அறிவுரை சொல்ல எனக்கு தகுதி கிடையாது. 55 வயதான நான் கட்டை வண்டி மாதிரி. நீங்கள் ஜெட் விமானத்தை போன்றவர்கள். மாணவர்கள், இளைஞர் கள்தான் எங்களுக்கு அறிவுரை வழங்கவேண்டும…
-
- 1 reply
- 1.1k views
-
-
முல்லைத்தீவில் அண்மையில் வீசிய கடும் காற்றுடன் கூடிய மழையால் புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 50,000க்கும் அதிகமான இடம்பெயர்ந்த பொதுமக்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்து வந்த மக்களில் அநேகமானோர் புதுமாத்தளன் பகுதியில் தற்காலிக குடில்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தற்காலிக குடில்களும் புயல் காற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாதம் 9, 10ஆம் திகதிகளில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை இடம்பெயர்ந்து புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் தற்காலிக குடில்களில் வாழும் மக்களைப் பெரிதும் பாதித்திருப்பதாகவும் வேறிடம் செல்ல வழியில்லாது இவர்கள் கஷ்டப்படுவதாகவும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்…
-
- 2 replies
- 708 views
-
-
தமிழீழப்பகுதியில் சிங்களப் பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் நடாத்தப் பட்டுக் கொண்டிருக்கும் பரந்த அளவிலான, தொடர்ந்து நடாத்தப்படும் நாளாந்தக் கவனயீர்ப்பு நிகழ்வில் மார்ச் மாதத்தின் இரண்டாம் வாரம் 10 ந்திகதி செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4 .30 மணியிலிருந்து 7 .00 மணிவரை Midlefield & Finch சந்திப்பில் இடம்பெற்ற கவனயீர்ப்பின் சில காட்சிகள். மிகுந்த குளிருடன் கூடிய மழையில் நனைந்தவாறு தாயகத்தில் நாளாந்தம் சாவின் விளிம்பில் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்காக இப்பகுத…
-
- 6 replies
- 985 views
-
-
தமிழீழப்பகுதியில் சிங்களப் பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் நாளாந்தம் பரவலாக கனடாத்தமிழ் மகளிர் அமைப்பின் ஸ்காபுரோ வளாகத்தினரால் முன்னெடுக்கப்படும் நிகழ்வில் 11 ந்திகதி புதன்கிழமை மாலை 4 .30 மணியிலிருந்து 7 .00 மணிவரை Kannedy & Sheppard சந்திப்பில் நிகழ்த்தப்பட்ட கவனயீர்ப்பின் காட்சிகள் சில மேலும் தொடர்ந்தும் இடம்பெற இருக்கும் கவனயீர்ப்புகளாவன. 12 ந் திகதி வியாழக்கிழமை மாலை 4 .30 மணியிலிருந்து 7 .00 மணிவரை Kannedy & El…
-
- 0 replies
- 685 views
-
-
காசாவை விட வன்னி கொடுமைகள் மோசமானவை - ஆஸ்திரேலியா வைத்திய பேராசிரியர் வைட்ஹால் - செவ்வி 'Carnage in Vanni is worse than in Gaza' – Prof. John Whitehall
-
- 2 replies
- 964 views
-
-
புல்மோட்டையில் அமைக்கப்படுவது தற்காலிக மருத்துவமனை அல்ல; இந்திய இராணுவ முகாம் * ஜே.வி.பி. குற்றச்சாட்டு ரொஷான் நாகலிங்கம் தேசிய பிரச்சினையைத் தீர்த்து வைக்க இலங்கை இராணுவம் மட்டும் போதுமெனவும் தேவையின்றி சர்வதேச தலையீடுகளுக்கு இடமளிக்க அரசு முயற்சிக்கக் கூடாதெனவும் தெரிவித்துள்ள ஜே.வி.பி., புல்மோட்டையில் அமைக்கப்படுவது மருத்துவமனை அல்ல என்றும் இந்திய இராணுவ முகாமே நிர்மாணிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜே.வி.பி. செயலாளர் ரில்வின் சில்வா இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது; தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கை இறுதிக் கட்டத்தை …
-
- 3 replies
- 774 views
- 1 follower
-
-
இலங்கையில் நீண்டகாலமாகத் தொடர்ந்துவரும் இன மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரவேண்டுமாயின் தமிழ் சமூகத்துக்கு உண்மையாக அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என இந்தியா மீண்டுமொருமுறை வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ் சங்கரர் மேனன் இவ்வாறு கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமையிலான நிர்வாகம் பெறுப்பேற்ற பின்னர் முதற்தடவையாக அமெரிக்கா சென்றிருந்த மேனன், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனைச் சந்தித்து இலங்கையின் நிலைவரம் குறித்தும் கலந்துரையாடியிருந்தார். இலங்கையில் தொடர்ந்துவரும் மோதல்கள் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் அக்கறையாகவிருக்கும் இந்தியா, பிராந்திய நலன் குற…
-
- 2 replies
- 739 views
-