ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143477 topics in this forum
-
நாட்டிலுள்ள சகல மக்களும் அபிவிருத்தியின் பயனை அடைய வேண்டும் - இனம், மதம் என்ற வித்தியாசம் இல்லை! - தேசத்துக்கு மகுடம் நிகழ்வில் தமிழில் பேசிய ஜனாதிபதி [saturday, 2014-02-22 08:52:09] பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்காமல் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நாம் பல சவால்களை சந்தித்துள்ளோம். எதிர்காலத்திலும் சவால்களைச் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் தெரிவித்தார். குளியாப்பிட்டியில் நேற்று 8வது தேசத்துக்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சியை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது. ஆசியாவில் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பும் போது, …
-
- 3 replies
- 351 views
-
-
இலங்கைப் படைகளுடனான பயிற்சி தொடரும்- அமெரிக்கா Share அமெரிக்க– இலங்கைப் படைகளுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சி போன்ற வாய்ப்புகள் இன்னும் அதிகரிக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. திருகோணமலையில் கடந்த 2ஆம் திகதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்த, அமெரிக்க – இலங்கைக் கடற்படைகளுக்கு இடையிலான முதலாவது ஐந்து நாள் கூட்டுப் பயிற்சி தொடர்பாக அமெரிக்கத் தூதரகத்தி னால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இலங்கைக்கான அமெரிக்கத் துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன், இலங்கை அரசு நல்லிணக்கம், நீதி மற்றும் மனித உரிமைகள் போன்ற…
-
- 5 replies
- 327 views
-
-
இலங்கைக்கு... அவசர உதவிகளை, வழங்கத் தயார் – உலக வங்கி இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. வொஷிங்டனில் நிதியமைச்சர் அலி சப்ரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உலக வங்கியின் துணைத் தலைவர் Hartwig Schafer இதனைத் தெரிவித்தார். இந்த விடயம் குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சியை ஆதரிப்பதற்கும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்குமான நடவடிக்கைகள் குறித்து இதன்போது விவாதித்ததாக அவர் கூறினார். ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீதான நெருக்கடியின் தாக்கம் குறித்து உலக வங்கி ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அவர் தெரிவி…
-
- 2 replies
- 413 views
-
-
மாவிலாறு விவகாரத்தை தீர்த்து வைப்பதில் இலங்கை அரசு ஆர்வமோ அக்கறையோ கொண்டிருக்கவில்லை. இதுவே பிரச்சினை முற்றுவதற்கு காரணம் என்று போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் யஹன் றிசன் குறிப்பிட்டுள்ளமைக்கு நன்றி சொல்வதாகத் தெரிவித்துள்ள திருமதி அனந்தி சசிதரன் இதன்மூலம் தனது கணவர் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுக்கள் அம்பலப்படுத்தப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: விடுதலைப்புலிகள் மாவிலாறை பூட்டியமையே மீண்டும் போர் ஆரம்பமாக காரணமாக இருந்ததாக பரப்புரை செய்யப்பட்டு வருகின்றது. இந்த விவகாரங்களில் தொடர்புபட்டவராக எனது கணவரும் அப்போதைய திருமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்ப…
-
- 2 replies
- 925 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (11-10-2017)
-
- 0 replies
- 243 views
-
-
செட்டிகுளம் நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்கள் எதிர்வரும் ஆறு மாதகாலத்திற்குள் மீள்குடியேற்றப்படுவார்கள் என பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். இன்று வவுனியா செட்டிகுளம் நிவாரணக் கிராமங்களுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையிலேயே, அவர் இதனைக் கூறினார். இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். http://www.tamil.dailymirror.lk/செய்திகள்/2124
-
- 19 replies
- 1.5k views
-
-
புதுக்குடியிருப்பு காணி விடுவிப்பு : முல்லைத்தீவு அரசாங்க அதிபரே பொறுப்புக் கூற வேண்டும்;சிவமோகன் எம் பி. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு நகர மத்தியில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலருமே பொறுப்புக்கூறவேண்டியவர்களாக இருக்கின்றார்கள் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவப்பிரகாசம் சிவமோகன் தெரிவித்துள்ளார். இராணுவ வசமுள்ள புதுக்குடியிருப்பு மக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பில் குறித்த காணி உரிமையாளர்களுடனான சந்திப்பின் போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உ…
-
- 0 replies
- 261 views
-
-
மக்களுக்காக ஒருமித்த கருத்துக்கு வருமாறு அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு! இந்த தொழிலாளர் தினத்தில், அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொண்டுள்ள சவாலை வெற்றிகொள்ள மக்களுக்காக ஒருமித்த கருத்துக்கு வருமாறு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் நான் மீண்டும் ஒருமுறை அழைக்கிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மே தின வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவரின் மேதின வாழ்த்து செய்தி வருமாறு, உலகவாழ் உழைக்கும் சமூகம் மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ளும் நேரத்தில், இவ்வருட சர்வதேச தொழிலாளர் தினம் நினைவுகூறப்படுகின்றது. …
-
- 1 reply
- 146 views
-
-
தமிழ் மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் தோற்கடிப்பட்டு ஓராண்டு கடந்துள்ளது. இந்த ஓராண்டு காலத்தில் தமிழர் தாயகம் பல்வேறு வகைகளிலும் ஆக்கிரமிக்கப்பட்டு மிக வேகமாக சிங்கள மயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இறுதி யுத்த காலத்தில் சுமார் நாற்பதினாயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அப்பட்டமான போர்க் குற்றங்கள் சிங்களத்தினால் அரங்கேற்றப்பட்டன. போர் முடிந்த பின்னரும் சிங்கள தேசத்தின் போர்க் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. சிங்கத்தின் குகைக்குள் சிக்குண்ட மானைப் போல சின்னா பின்னப்படுத்தப்பட்ட ஈழத் தமிழ் மக்களின் அவலங்களை சனல் 4 உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் படம் போட்டுக் கா…
-
- 4 replies
- 792 views
-
-
படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனின் 17ம் ஆண்டு நினைவு தினம் இன்று யாழில் படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனின் 17ம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (19) அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று மாலை 4 மணியளவில் யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதிக்கு அருகில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக கட்டப்பட்ட நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. போர் சூழலில் யாழில் இருந்து , துணிவாக ஊடகப்பணி யாற்றியவர் மயில்வாகனம் நிமலராஜன். பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை , வீரகேசரி , ராவய போன்றஊடகங்களில் பணியாற்றி இருந்தார். அந்நிலையில் கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி யாழ்.மா…
-
- 0 replies
- 487 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் காலை 9.45 அளவில் ஆரம்பமாகி உள்ளன. இன்றைய நாள் நிகழ்வுகள் பிரதிநிதிகளிடையேயான கருத்துப் பகிர்வாக நடைபெற இருப்பதாகத் தெரிய வருகிறது. நிறைவேற்றுக் குழு. அரசியலமைப்புக் குழு. சட்டவாக்கற் குழு என்பவற்றை உருவாக்கிக் கொள்வதும் தாயகத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அவசர, குறுங்கால திட்டங்களைத் தீர்மானித்தலும் இன்றைய நாள் நிகழ்வுகளின் முக்கிய பணியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. திட்டமிடலுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் ஆராயப்படுவதால் இன்றைய நாள் நிகழ்வுகள் மூடிய நிகழ்வாகவே நடத்தப்படுவதாகத் தெரிய வருகிறது. source: http://www.eelamweb.com
-
- 0 replies
- 768 views
-
-
கிழக்கில் முதலமைச்சர் பதவியைத் தராது போனால், ஆதரவை விலக்குவோம்! – ஹக்கீம் எச்சரிக்கை. [sunday, 2014-03-16 07:58:45] ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக கிழக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படாவிட்டால், கிழக்கு மாகாணசபைக்கான ஆதரவு வாபஸ் பெறப்படும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எச்சரித்துள்ளார். கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் பதவியை தலா இரண்டரை ஆண்டுகளுக்கு பகிர்ந்து கொள்வதென ஆளும்கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணங்கியிருந்தன.இதன்படி முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு அரசாங்கத் தரப்பைச் சேர்ந்த ஒருவரும், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஒருவரும் முதலமைச்சராக பதவி வகிப்பார்கள் என …
-
- 0 replies
- 304 views
-
-
சட்டவாட்சியை பாதுகாக்கும் அனைத்து நிறுவனங்களும்... மோதல் சூழ்நிலைகளில், ஒத்துழைப்பு வழங்கவில்லை என குற்றச்சாட்டு! சட்டவாட்சியை பாதுகாக்கும் அனைத்து நிறுவனங்களும் மோதல் சூழ்நிலைகளில் ஒத்துழைப்பு வழங்கவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்ற மோதல் நிலைமைகளில் புலனாய்வுத்துறையினரின் குறைபாடுகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டவாட்சியை பாதுகாக்கும் அனைத்து நிறுவனங்களும் மோதல் சூழ்நிலைகளில் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று(புதன்கிழமை) ஆணைக்குழுவில் ஆஜரான பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆக…
-
- 0 replies
- 123 views
-
-
மன்னிப்புச்சபை போன்ற குழுக்களுக்கு எந்த தார்மீக அதிகாரமும் இல்லை: ஜீ.எல்.பீரிஸ் திகதி: 28.05.2010 // தமிழீழம் சர்வதேச நெருக்கடிக்குழு, சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற குழுக்கள் “சர்வதேச சமூகத்தில்” உள்ளடக்கப்பட்டவையல்ல எனவும், அதனால் என்ன செய்ய வேண்டும்? என்று எமக்குக் கூறுவதற்கான தார்மீக உரிமையை அவை கொண்டிருக்கவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். வாஷிங்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பீரிஸ் அங்கு ஒபாமா நிர்வாக சிரேஷ்ட அதிகாரிகள், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுடன் சந்திப்புகளை மேற்கொண்டுள்ளார். சர்வதேச நெருக்கடிக்குழு, மன்னிப்பு சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற குழுக்கள் புலிகளுக்கு எதிரான ய…
-
- 0 replies
- 480 views
-
-
ரஞ்சித் சியம்பலபிட்டியவின்... இராஜினாமா, ஏற்றுக் கொள்ளப்பட்டது – சபாநாயகர் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலபிட்டியவின் இராஜினாமாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரமபமாகிய நிலையிலேயே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்தார். https://athavannews.com/2022/1282226
-
- 0 replies
- 131 views
-
-
இந்தியாவின் நிலைப்பாடு என்ன ? தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில் தமிழக ஊடகங்களின் ஐ.நா மனித உரிமைச்சபை விவகாரம்! [Thursday, 2014-03-27 20:06:17] இந்திய நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தயில், தமிழக ஊடகங்களில் சிறிலங்காவினை மையப்படுத்தி ஐ.நா மனித உரிமைச்சபை விவகாரம் சூடுபிடித்துள்ளது. அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா தொடர்பிலான தீர்மானத்துக்கு இந்தியா வாக்களிக்குமா என்ற கேள்வி தமிழக ஊடகங்களில் கேள்வியாக்கப்பட்டிருந்த நிலையில் , வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாமை ஊடகங்களில் வாதப்பொருளாகியுள்ளது. தமிழக மக்களிடத்திலும் ஈழத் தமிழர் தொடர்பிலான பரிதவிப்புக்கு தமிழக ஊடகங்கள் ஆற்றி வருகின்ற பங்கிற்கு நன்றி தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊ…
-
- 0 replies
- 587 views
-
-
கல்முனை மாநகர சபையில் எவ்வித மாற்றமும் இல்லை : அமைச்சர் பைஸர் முஸ்தபா திட்டவட்டம் (எம்.சி.நஜிமுதீன்) ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வழங்கப்பட்டிருந்த வாக்குறுதிக்கமைவாக சாய்ந்தமருது பிரதேச சபையை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம். அதனை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் தயாராக இருந்தோம். எனினும் கல்முனை மாநர சபையை நான்கு உள்ளூராட்சி மன்றங்களாக பிரிக்குமாறு தற்போது அப்பிரதேச மக்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அப்பிரதேசத்திலுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் அபிப்பிராயம் பெறாது அதனை நிறைவேற்ற முடியாது. ஆகவே தற்போதைக்கு கல்முனை மாநகர சபையில் எவ்வித மாற்…
-
- 0 replies
- 231 views
-
-
மேலும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்... அரசாங்கத்திற்கு தாவல்? சுதந்திரக் கட்சியின் மேலும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவன்ன, ஜகத் புஷ்பகுமார மற்றும் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் தான் புதிய அரசாங்கத்தில் இணைந்துகொள்ளப்போவதில்லை என முன்னாள் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார். தமது கட்சியைச் சேர்ந்த ஐவர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தனக்குத் தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எஞ்சிய 4 பேரில் மூவருக்கு இராஜாங்க அமைச்சர் பதவிகள் கிடைக்க வாய்ப்ப…
-
- 0 replies
- 180 views
-
-
2013 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு முடிவுகள் சற்று முன்னர் வெளியானது. இந்நிலையில், பரீட்சை பெறுபேறுகளை http://www.doenets.lk/exam/ என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/articles/2014/04/03/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81
-
- 10 replies
- 3.5k views
-
-
வடக்கு அதிகாரி வெளிநாடு செல்ல ஆளுனர் அனுமதி வழங்க வேண்டும் – யாழ்.மேல் நீதிமன்றம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரியதாசன் ஜேகூ வெளிநாட்டுக்குச் சென்று கல்வியைத் தொடர வடக்கு மாகாண ஆளுநர் அனுமதி வழங்கவேண்டும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கட்டளையிட்டுள்ளார். உதவிச் செயலாளர் தாக்கல் செய்த உறுதிகேள் எழுத்தாணை மனு மீதே இந்தக் கட்டளையை மேல் நீதிமன்றம் வழங்கியது. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரியதாசன் ஜேகூ, புலமைப் பரிசில்பெற்று அவுஸ்திரேலியாவுக்கு மேற்கல்வி கற்கச் சென்றிருந்தார். அவர் கடமையிலிருக்கும் போது வெளிநாடு செல்வதற்கான அனுமதிகேட்டு மாகாண ஆளூனருக்கு மாக…
-
- 3 replies
- 592 views
-
-
இன்றைய குரலுக்குரியவனுக்கு அம்மாவும் அப்பாவும் யுத்தத்தில் இறந்து போனார்கள். 10 வயதிலிருந்து இவன் வாழ்ந்தது தனிமைதான். கடந்தவருடம் வள்ளிபுனம் என்ற பகுதியில் விழுந்த எறிகணையொன்று இவனது வலது கையையும் இருந்த இடம் தெரியாமல் சிதைத்துப்போனது.இன்று இந்த 25வயது இளைஞன் தனது வலது கையை தோள்பட்டையுடன் இழந்துபோன நிலையில் வாழ்கிறான்.. அன்றாட தனது தேவைகளைப் பூர்த்தி செய்யவோ அல்லது தனக்கான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளவோ எதுவித வசதிகளுமற்று வாழும் இவனது கதைகள் சோகம் நிறைந்தது. ஆயினும் வாழ வேண்டுமென்ற கனவோடு தனக்காய் ஒரு தொழிலைத் தேடுகிறான். ஒற்றையுடன் இருக்கும் இவனை எந்த நிறுவனங்களும் ஏற்றுக்கொள்ளாத நிலமையிலும் தினம் தினம் வேலைதேடி அலைகிறான் இவன். அண்மையில் இவன் ஒரு கடையில் வ…
-
- 0 replies
- 673 views
-
-
மின்சாரத் திருத்தச் சட்டமூலம்... பெரும்பான்மை வாக்குகளால், நிறைவேற்றம்! மின்சாரத் திருத்தச் சட்டமூலம் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி, மின்சாரத் திருத்தச் சட்டமூலம் 84 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலத்தை சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1286329
-
- 0 replies
- 240 views
-
-
புதிய தேசியக் கொடி பற்றி கலந்துரையாட நல்ல வாய்ப்பு! வடமாகாணக் கல்வி அமைச்சர் இலங்கையின் தேசியக் கொடியை ஏற்ற மறுத்தார் என்ற விடயம் இப்போது பூதாகாரமாக்கப்பட்டு வருகின்றது. தமிழர்களின் இனவாதம் என்று இதனை வர்ணித்திருக்கிறது ஜே.வி.பி. அதேபோன்று மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது ஒரு மிகப் பெரியவிடயம் என்பதாகத் தூக்கிப் பிடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். “வடக்கிலும் இனவாத மனோநிலை உருவாகியுள்ளது. வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் தேசியக் கொடியை ஏற்ற மறுத்திருக்கின்றார். இது தொடர்பில் தமிழ்த் தேசி…
-
- 0 replies
- 295 views
-
-
வல்வெட்டித்துறையில் “பிரபாகரனின்“ பிறந்தநாள் நள்ளிரவில் கொண்டாட்டம்!! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாள் இன்று அதிகாலை 12 மணிக்கு குடாநாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் வெடிகொழுத்தி, கேக்வெட்டிக் கொண்டாடப்பட்டது. வல்வெட்டித்துறையில் பிரபாகரன் பிறந்த வீட்டின் முன்பாகவும் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது. http://newuthayan.com/story/50577.html
-
- 2 replies
- 741 views
-
-
விக்னேஸ்வரனின் விக்கினம் மாவீரர்கள் நாள் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. மாவீரர் நாளை அரசியல் ஆக்காதீர்கள் என்று ஓங்கி ஒலித்த குரல் அரசியல்வாதிகளால் உய்த்துணரப்பட்டு ஒழுகப்பட்டமை இந்த மாவீரர் தினத்தின் சிறப்பு. இருந்தாலும் மாவீரர் தினத்தின் பின்னால் மாவீரர் தினத்தை வைத்து அரசியல் நடத்துவதைப் பார்க்க முடிகின்றது. அதில் முதன்மையானவராக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இருக்கிறார். அவர் நேற்றுமுன்தினம் ஊடகங்களுக்கு ஓர் அறிக்கை விடுத்திருந் தார். அதில் மாவீரர் தினம…
-
- 1 reply
- 514 views
-