ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142846 topics in this forum
-
வடக்கில் பொலிஸாரின் டிப்பர்களில் மணல் கடத்தல்? வட மாகாணத்தில் இடம்பெற்று வரும் சில சட்ட விரோத மணல் கடத்தல் சம்பவங்களில் பொலிஸாருக்குச் சொந்தமான டிப்பர் வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு மாகாணத்தில் மணல் விநியோகத்தை சீராக்குவது, சுண்ணாம்புக்கல் அகழ்வு மற்றும் விநியோகத்தை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் ம.கபிலன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மா…
-
- 0 replies
- 128 views
-
-
யாழ் கடலில்.... ஆயிரக் கணக்கில் கரை ஒதுங்கிய, "பென்குயின்" பறவைகள். இன்று காலை .... யாழ். பண்ணைக் கடல், அல்லைப்பிட்டி பகுதிகளில்..... பெருமளவில் வித்தியாசமான பறவைகள் நடமாடித் திரிந்ததை அப் பகுதியில் வசிக்கும் பலர் கண்டு அதிசயித்துப் போனார்கள். இப்படியான பறவைகள் யாழ்கடலில்..... முன்பு தென்பட்டதில்லை என்று அங்கு பல காலமாக கடற் தொழில் செய்து அனுபவப் பட்டவரான முதியவர் ஒருவர் தெரிவித்தார். இது என்ன பறவையாக இருக்கும் என்பதை அறிவதற்காக யாழ். பல்கலைக் கழக பேராசிரியர் ஒருவரை அணுகிய போது... இது, "பென்குயின்" என்றும், குளிர் நாட்டில் வசிக்கும் பறவை, இவை அண்டார்டிகா போன்ற குளிர்ப் பகுதிகளில் மட்டும் வாழ்பவை... இங்கு எப்படி வந்தது என்று ஆச்சரியப்பட்டார். பென்குயின…
-
- 24 replies
- 4.2k views
- 1 follower
-
-
இரண்டு வார கால அவகாசத்தை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளோம். முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு உடனடி தீவைப்பெற்றுக்கொடுக்காவிடின் மார்ச் மாதம் 16 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் அதிபர் , ஆசிரியர்கள் தொடர் வேலை நிறுதத்த போரட்டத்தில் ஈடுப்படுவதாக தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த தேசிய கல்வி சேவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரியந்த பத்லேரிய , மேலும் கூறுகையில், ஆசிரியர் - அதிபர் சேவையை வரையறுக்கப்பட்ட சேவையாக கடந்த அரசாங்கம் அறிவித்தது. இந்நிலையில்,அந்த நடவடிக்கைளை முன்னெடுக்கும் வரையிலான இடைக்கால கொடுப்பணவை வழங்குமாறு கோரிக்கையொன்றினை அரசாங…
-
- 0 replies
- 506 views
-
-
குழந்தைகளை கொல்லும் இஸ்ரேலிய படையினர் இலங்கைக்கு வருவதற்கு இலவச வீசாவா? கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் Published By: RAJEEBAN 28 JUL, 2025 | 10:57 AM இஸ்ரேலிய படையினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு அவர்களிற்கு இலவச வீசாவை வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்துவருவதாக தெரிவித்துள்ள சுதந்திர பாலஸ்தீன இயக்கம் இதற்கு எதிராக இன்று வெளிவிவகார அமைச்சின் முன்னால் மாலை நான்கு மணிக்கு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடவுள்ளது. இது குறித்து சுதந்திர பாலஸ்தீன இயக்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது காசாவில் அப்பாவி சிறுவர்கள் மீது குண்டுவீசி ,சுட்டுக்கொலை செய்த இஸ்ரேலிய இராணுவீரர்களிற்கு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு இலவசவீசாவை வழங்கும் திட்டமொன்றை முன்னெடுப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்த…
-
- 0 replies
- 99 views
-
-
[size=4]நடைபெற்ற கிழக்குமாகாண சபைத்தேர்தலில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட்களில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோகவெற்றியீட்டியுள்ளதாக தற்பொதைய தகவல்கள் தெரிவித்துள்ளன.[/size] [size=4]மட்டக்களப்பு மாவட்டம்:[/size] [size=4]கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றிபெற்றுள்ளது. அக்கட்சி 104,682 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 64,190 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 23,083 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.[/size] [size=4]ஐக்கிய தேசியக் கட்சி 2,434 வாக்குகளைப் பெற்றபோதிலும் ஆசனம் எதனையும்…
-
- 0 replies
- 438 views
-
-
மன்மத வருடம் எங்களை விட்டுப் போக துர்முகி வருடம் இன்று ஆரம்பமாகின்றது! மன்மத வருடம் எங்களை விட்டுப் போக துர்முகி வருடம் இன்று மாலை ஆரம்பமாகின்றது. வருடங்கள் வந்து போனாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தாமதங்களே மிஞ்சி நிற்கின்றன என வடமாகாண முதலமைச்சர் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட எம்முடைய மக்களில் பலர் சொந்த வீடுகளுக்கும் காணிகளுக்கும் செல்லமுடியாது வேறு இடங்களில் பல சிரமங்களின் மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள். சிறையிலடைபட்ட எமது இளைஞர்கள் சிலரைத் தவிர மற்றையோர் இன்னமும் விடுபட்டபாடில்லை. போரின்போது தமது உற்றார் உறவினர்களை…
-
- 0 replies
- 392 views
-
-
சார்க் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் சிறிலங்கா மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களைக் கொண்ட நாடாகும் என்று ஆசிய மனித உரிமை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 695 views
-
-
கொக்குத்தொடுவாயில் மீண்டும் நிலப்பறிப்பு; புதிய சிங்கள குடியேற்றங்கள் ஆரம்பம். தமிழீழம் | ADMIN | SEPTEMBER 14, 2012 AT 12:28 முல்லைத்தீவு மாவட்ட கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கொக்குத்தொடுவாய் கிராம அலுவலர் பிரிவிலுள்ள முந்திரிகைக்குளம், ௭ரிஞ்சகாடு உட்பட நான்கு தமிழ்க் கிராமங்களில் 500 ஏக்கர் காணிகள் சிங்கள குடியேற்றத்திற்காக அபகரிக்கப்படவுள்ளது. குறித்த காணிகள் தமிழ் மக்களுக்குச் செந்தமான உறுதிக்காணிகளாகும் இந்தக் காணிகள் கடந்த சில வாரங்களாக அளவீடு செய்யப்பட்டு 200 க்கும் மேற்பட்ட தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சாலை வசதிகளும் செய்யப்பட்டு மின்கம்பங்கள் நாட்டப்பட்டு வருகின்றன. அதே நேரம் நீண்ட காலமாக இப்பகுதியில் குடியிருந்து போரினால் …
-
- 0 replies
- 409 views
-
-
சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு வழக்கு விசாரணை: பொ.ஐங்கரநேசன் நீதிமன்றில் ஆஜர் சுன்னாகத்தில் நிலத்தடி நீர் மாசடைந்தமை தொடர்பான வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்றைய தினம் வட மாகாண விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசனும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார். வழக்கு தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனை நீதிமன்றில் ஆஜராகுமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனடிப்படையில் இன்றைய தினம் அவர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார். இன்றைய தினம் உடுவில், தெல்லிப்பளை, வலிகாமம் பொது சுகாதார உத்தியோகத்தர்களது அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 444 views
-
-
‘ஐ.தே.க இரண்டாகப் பிளவுபட்டுள்ளது’ ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிரச்சினைகள் காணப்படுவதை பலரும் அறிந்துள்ளனர். கட்சி ஆதரவாளர்களில் 95 சதவீதமானோர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்குச் செல்லுமாறு கூறுகின்றனர். அவர் ஓய்வு பெறவேண்டிய காலம் வந்துவிட்டது. 25 வருட காலம் கட்சித் தலைவராக இருந்து அவர் முதுமையடைந்துள்ளார். எனத் தெரிவித்த பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா, சஜித் பிரேமதாஸவுக்கு கட்சித் தலைமையை வழங்குமாறு கட்சி ஆதரவாளர்கள் கூறுகின்றனர் என்றார். திவுலபிட்டிய- மருதகஹமுல்ல பிரதேசத்தில், மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், இன்னும் ஐந்து வருடங்களின் பின்னர் தான் அரசியலில் …
-
- 1 reply
- 325 views
-
-
ரோம் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட வேண்டுமென வலியுறுத்தல் 03 September 2025 எதிர்வரும் 08 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கையின் மனித உரிமைகளின் நிலைமை தொடர்பான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இராணுவம் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொள்ள, இலங்கை அரசாங்கம் தவறிவிட்டதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, உண்மை மற்றும் நீதியை எடுத்துக்காட்டுவதற்கு புதிய அரசாங்கத்திற்கு சிறந்த வாய்ப்பொன்று கிட்டியுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிடைத்துள்ள மக்கள் ஆணையின் பிரகாரம், புதிய அரசா…
-
- 0 replies
- 83 views
-
-
கிளிநொச்சி விரைவில் வீழும் - மகிந்த சூளுரை வியாழன், 14 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] கிளிநொச்சியை வெகு விரைவில் மீட்டுவிடுவோம் என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சூழுரைத்துள்ளார். நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கு நோக்கிய யுத்தத்தில் புதிய போரியல் தந்திரரோபாயங்களைப் பயன்படுத்துவதால் எமது படையினர் முன்னேறிவருகின்றனர். வெகு விரைவில் கிளிநொச்சி நகரம் எமது படையினரின் வசம் வீழும். வராற்றப் புகழ்மிக்க எமது படைவீரர்கள் யுத்தகளத்தில் முன்னேறிவருவின்றனர். இவர்களுக்கு நாங்கள் எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார். மகிந்த ராஜபக்ச சகோதரர் கோத்தபாய ராஜபக்ச நேற்று முன்தினம் கிள…
-
- 11 replies
- 3.4k views
-
-
வீட்டில் இருந்த 12 ஆயிரம் ரூபா பணத்தை எடுத்துக் கொண்டு திருகோணமலை செல்லும் பஸ்ஸில் பயணிக்க முயன்ற 10, 11 வயதை உடைய சிறுவர்கள் மூவர் அங்கிருந்தவர்களால் பிடிக்கப்பட்டு யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் முற்றவெளியில் உள்ள யாழ்.தனியார் பஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. பெற்றோருக்குத் தெரியாமலே இந்தச் சிறுவர்கள் மூவரும் இந்தச் செயலில் ஈடுபட்டதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது: வண்ணார்பண்ணையைச் சேர்ந்த இந்த மூன்று சிறுவர்களும் அந்தப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயில்கின்றனர். இவர்களில் இருவர் சகோதரர்கள், மற்றவர் அயல் வீட்டைச் சேர்ந்தவர். …
-
- 0 replies
- 667 views
-
-
சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை? : ஆதரவளிக்க முடியாத நிலைப்பாட்டில் கட்சிகள் (ஆர்.யசி) எதிர்க் கட்சி தலைவர் சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டுவருவது தொடர்பில் எந்தவித முன்னறிவித்தலும் இல்லை. சம்பந்தனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டுவந்தாலும் ஆதரிப்பது தொடர்பில் கட்சிக்குள் எந்தவித தீர்மானமும் இதுவரையில் எடுக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய பிரதான கட்சிகள் தெரிவித்தன. பாராளுமன்றத்தில் தனிக் கட்சியாக அங்கீகாரம் பெறாத நபர்களின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளவில்லை எனவும் கட்சிகள் தெரிவித்தன. எதிர்க் கட்சி…
-
- 3 replies
- 462 views
-
-
நாட்டுக்கு வருகைதரும் விமானங்கள் இன்று நள்ளிரவு முதல் இரண்டு வாரங்களுக்கு இடை நிறுத்தம் கொரோனா என்னும் கொவிட் 19 வைரஸ் நாட்டுக்குள் பரவுவதை தடுப்பதற்காக இலங்கைக்கு விமானங்கள் வருவதை இரண்டு வாரங்களுக்கு நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த தீர்மானம் இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொரோனா தடுப்பு செயலணியுடன் நேற்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களை தரையிறக்குவது இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இ…
-
- 1 reply
- 326 views
-
-
Published By: Vishnu 12 Sep, 2025 | 06:25 PM (எம்.மனோசித்ரா) இந்திய அரசின் மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு முன்னணி நிறுவனமான, மத்திய கடலோரப் பொறியியல் மற்றும் மீன்வள நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குழுவினர், கடந்த 8 முதல் 12 வரை இலங்கைக்கு விஜயம் செய்தனர். இந்த விஜயம், வடக்கு மாகாணத்தில் முன்மொழியப்பட்ட பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி குறித்து முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்தியதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. இந்த குழுவினர், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மற்றும் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரைச் சந்தித்து, அமைச்சின் அதிகாரிகளுடனும் கலந்…
-
- 0 replies
- 225 views
- 1 follower
-
-
திருகோணமலையில் விறகு வெட்டச் சென்றுகொண்டிருந்த இரண்டு முஸ்லிம்கள் இருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 687 views
-
-
வவுனியாவில் இருமுனை முன்நகர்வு முறியடிப்பு: 7 படையினர் பலி; 17 பேர் படுகாயம் [வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2008, 08:50 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டை மற்றும் குஞ்சுக்குளம் பகுதிகள் ஊடாக சிறிலங்காப் படையினர் இரு முனைகளில் மேற்கொண்ட முன்நகர்வினை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் ஏழு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாலமோட்டை மற்றும் குஞ்சுக்குளம் பகுதிகள் ஊடாக இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2:00 மணி தொடக்கம் சிறிலங்காப் படையினர் தமது பின்தளங்களில் இருந்து செறிவான எறிகணை மற்றும் வெடிகணைச் சூட்டாதரவுடன் முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கு எதிரான விடுதலைப் புலிகளின் தீவிர …
-
- 1 reply
- 1.1k views
-
-
இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில், இங்கிலாந்தை வென்ற சந்தோசத்தில் நாட்டு மக்கள் திளைத்திருந்த ஆரவாரத்தை பயன்படுத்துக்கொண்டு இந்த அரசாங்கம், இரவோடு இரவாக டீசல் விலையை உயர்த்தி விட்டது. இனி, அடுத்து நாம் இந்தியாவை வென்றால், பெட்ரோல் விலையையும், உலக கிண்ணத்தை வென்றால், மண்ணெண்ணெய், பால்மா, காஸ், சீனி விலைகளையும் இந்த அரசாங்கம் உயர்த்தலாம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். டீசல் விலையுயர்வு தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, கிரிக்கட் போட்டியில் பெற்ற வெற்றி ஆரவாரத்தில் மக்கள் மூழ்கி இருக்கும் போது இந்த அரசாங்கம் சந்தடி சாக்கில் இந்த விலையுயர்வுகளை செய்கிறது. இது தேரோட்டங்களின் போது சங்கிலி அறுப்பதை போன்ற திருட்டு செயலாகும். கொழும்…
-
- 1 reply
- 755 views
-
-
மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் - சந்திரிக்கா மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற கால மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நடைபெற்று வரும் விசேட கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும் சமாதானத்தை வென்றெடுக்க கடந்த அரசாங்…
-
- 0 replies
- 265 views
-
-
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்த நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, குற்றவாளிக்கு 32 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பினை நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் வியாழக்கிழமை (2) அளித்தார். 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரையான காலப் பகுதியிலும் 2022 பெப்ரவரி மாதத்திலும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கு தொடர்பில் சட்ட மா அதிபரினால் ஐந்து குற்றச்சாட்டுகள் அடங்கிய கு…
-
- 0 replies
- 109 views
-
-
'எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடல் அன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறேன்' என வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக, நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் ரவிகரன், இன்று காலை இதனைக் கூறினார். http://www.tamilmirror.lk/172498/%E0%AE%A8%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9E-%E0%AE%9A%E0%AE%B2-#sth…
-
- 0 replies
- 352 views
-
-
(எம்.மனோசித்ரா) உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலுக்கு அமைய கொரோனா வைரஸ் பரவலில் இலங்கை 3A என்ற கட்டத்திலுள்ளது. இந்நிலையில் தற்போது முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் இரு வாரங்களில் அதாவது இம் மாத நடுப்பகுதிக்குள் அபாயகரமான அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்ல நேரிடும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. இவ்வாறு அபாய கட்டத்திற்கு செல்லாமலிப்பதற்கு 3 காரணிகளை அரசாங்கத்திடம் முன்மொழிந்திருக்கும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் , கொரோனா பரவலைக் குறைக்கும் வழிமுறையாக மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுமெனின் அதனை 80 - 90 வீதமாகப் பேணுதல் அத்தியாவசியமாகும். எனினும் மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அடிக்கட…
-
- 3 replies
- 531 views
-
-
4 Oct, 2025 | 01:04 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் எனக்கு சொந்தமானது என சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும். அந்த கட்டிடம் குறித்து நேற்று திங்கட்கிழமை (13) தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் குறிப்பிடும் போது அதில் எனது பெயரை மீண்டும் பயன்படுத்தியுள்ளனர். அந்த கட்டிடம் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித…
-
- 0 replies
- 175 views
-
-
சிறுவர் காப்பகத்திற்கு போதிய அனுபவம் இல்லை : ஏற்றுக்கொண்டுள்ளார் அமைச்சர் இங்கே மார்ட்டே டோர்கெல்சன். நோர்வேயிலுள்ள சிறுவர் காப்பகத்தில் சில தவறுகள் இடம்பெற்றுள்ளன அத்துடன் வெளிநாடுகளைச் சேர்ந்த பிள்ளைகளைப் பராமரிப்பது தொடர்பில் தமது நாட்டு சிறுவர் காப்பகத்திற்கு போதிய அனுபவம் இல்லாதிருப்பதாக நோர்வே சிறுவர் நல விவகார அமைச்சர் (Inge Marte Torkelsen) இங்கே மார்ட்டே டோர்கெல்சன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவிலிருந்து வெளிவருகின்ற அப்டன் போஸ்ட் (Aften Post) என்ற பத்திரிகை நேற்று 10ஆம் திகதி புதன்கிழமை வெளியிட்டுள்ளது. நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கிவருகின்ற சிறுவர் காப்பக விவகாரம் இலங்கை ஊடகங்களின் வாயிலாக சர்வதேச மட்டத்திற்கு வந்துள…
-
- 2 replies
- 561 views
-