Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சனி 02-02-2008 15:51 மணி தமிழீழம் [முகிலன்] பதவி பறிபோகலாம் அச்சத்துடன் நாடு திரும்பினார் ரோஹித பொகொல்லாகம சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித பொகொல்லாகம, பெரும் குழப்பத்திற்கும் மத்தியில் அவசரமாக நாடு திரும்பியுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை பாகிஸ்தானில் அமைச்சர் ரோஹித பொகொல்லாகம தங்கியிருந்த வேளையில், பதில் வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெயராஜ் பெர்னான்டோப்புள்ளேயை சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நியமித்ததோடு, அவுஸ்திரேலியா, கனடா, ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றிற்கான தூதுவர்களையும் நியமித்திருந்தார். இதனால் தனது பதவி பறிபோகக்கூடும் என அச்சமடைந்திருக்கும் அமைச்சர் ரோஹித பொகொல்லாகம, அவசரமாக நாடு திரும்பியுள்ளார். http://www.pathivu.com/index.php?…

    • 5 replies
    • 2.3k views
  2. சிறீலங்காவுக்கு தொடர்ச்சியாக யப்பான் உதவிகளை வழங்கும்: அகாசியின் உறுதிமொழி சிறீலங்காவுக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்க, யப்பானின் சிறப்பு சமாதான தூதுவர் அகாசிக்கும் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையே இணக்கம் காணப்பட்டுள்ளது. நாற்பத்தைந்து நிமிடம் அகாசிக்கும் சிறீலங்கா அதிபருக்கும் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிய வருகின்றது. சிறீலங்கா ஒரு தலைப்பட்சமாக போர்நிறுத்தத்தில் இருந்து விலகியதற்கான நியாயங்களை மகிந்த ராஜபக்ச அவர்கள், அகாசிக்கு தெளிவுபடுத்தியதாகவும் தெரிய வருகின்றது. வருகிற சனவரி 23ம் திகதி மகிந்த ராஜபக்ச அவர்கள், அனைத்துக் கட்சி குழுவின் ஒத்துழைப்புடன் அதிகாரப் பகிர்வுத் திட்டத் தீர்வை சமர்ப்பிப்பார் என அகாசி அவர்கள் மீண்டும் தனது நம்பிக்கையை வெளிய…

    • 2 replies
    • 1.3k views
  3. சிறிலங்கா இராணுவக் கட்டமைப்பில் மாற்றங்கள் சிறிலங்காவின் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா இராணுவத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: இராணுவத்தின் பிரதம அதிகாரியான சாமன் குலதுங்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஒய்வுபெறுவதனைத் தொடர்ந்து இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இராணுவத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். உயர்திகாரிகள் மட்டத்திலும் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இராணுவத்தின் பிரதி பிரதம அதிகாரியான மேஜர் ஜெனரல் நிசங்க விஜயசிங்க பிரதம அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். பிரதி பிரதம அதிகாரி பதவி நிலைக்கு தகுதியுடையவரான யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ உள்…

    • 1 reply
    • 1.2k views
  4. பேசி சிங்களப் பேரினவாதிகள் எதனையுமே தந்த வரலாறில்லை..... என்ற உண்மை தெரிந்திருந்தும் வலுவான படைக்கட்டுமானங்களை உருவாக்கி, உலகத்திலேயே தமிழ்ப்படைக்கட்டுமானத்தை வைத்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் ஏன் சமாதானப் பேச்சுவார்த்தை என்ற அரங்கில் ஏறினார்கள்? இந்தக்கேள்விக்கான பதிலோடு தமிழரின் பிரச்சனைக்கான தீர்வைக் காணவென முன்பு நடந்த பேச்சுவார்த்தைகளின் நிலமைகளையும் மீளவும் பார்ப்பது காலத்தின் கடமையும் தேவையும் என நினைக்கின்றேன். ேமலதிக விபரம் அறிய.. http://swissmurasam.info/content/view/4004/31/

    • 1 reply
    • 1.5k views
  5. கொழும்பு பகுதி வான்பரப்பில் கரணமடித்த கிபீர் விமானங்கள் மக்கள் பெரும் அச்சம் 2/1/2008 7:43:08 PM வீரகேசரி இணையம் - கொழும்பு வான்பரப்பில் கிபீர் விமானங்கள் இன்று பெரும் சத்தத்துடன் பறந்தமையினால் தலைநகர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் பெரும் அச்சமடைந்தனர்.இரத்மலானை பகுதியிலிருந்து கொழும்பு துறைமுகத்தை அணிதான வான்பரப்பிலேயே கிபீர் விமானங்கள் பறந்துள்ளன. பெரும் சத்ததுடன் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கும் 12 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இரண்டு மூன்று கிபீர் விமானங்கள் ஒரே நேரத்தில் பறந்து வானில் வட்டமிட்டுள்ளன. கொழும்பில் வழமைக்கு மாறாக கிபீர் விமானங்களின் சத்தத்தை கேட்ட மக்கள் வீட்டுகளிலிருந்து வெளியே வந்து வானத்தை பார்த்த போது வானில் தொலைத…

    • 11 replies
    • 3k views
  6. மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடாதற்கான காரணங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முதன்மைக் கட்சியான இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி விளக்கம் அளித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.2k views
  7. 80களின் தொடக்கத்தில் தேசியத் தலைவர் அவர்கள் ஒரு முறை பொதுமக்கள் பிரயாணம் செய்யும் பேருந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தார். போராட்டம் ஆரம்பமாகிய கால கட்டம் அது. "பிரபாகரன்" என்ற பெயர் அப்பொழுதுதான் மெது மெதுவாக பிரபல்யமாகிக் கொண்டிருந்தது. பிரபாகரன் என்பவர் எப்படி இருப்பார் என்பதைக் கூட சரியாக அறிந்திராத சிறிலங்காவின் காவல்துறை தேசியத் தலைவரை தேடி அலைந்து கொண்டிருந்தது. தேசியத் தலைவர் பேருந்து ஒன்றில் பயணிக்கும் விடயம் சிறிலங்கா காவல்துறைக்கு தெரிந்து விட்டது. எந்தப் பேருந்தில் பயணிக்கிறார், என்ன உடை அணிந்திருக்கிறார் என்பதை எல்லாம் சரியாகத் தெரிந்து கொண்ட காவல்துறை பேருந்தில் ஏறி தேசியத் தலைவரை தேடியது. தேசியத் தலைவரின் இருக்கைக்கு முன்னால் அவரைப் போன்ற உடையணிந்தி…

    • 8 replies
    • 4.3k views
  8. சனி 02-02-2008 15:44 மணி தமிழீழம் [மயூரன்] குண்டுப் பொதி வைத்திருந்ததாக்கூறி இளைஞன் கைது கொழும்வு வத்தளைப் பகுதியில் குண்டுப் பொதி வைத்ததிருந்தாகக் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று கொழும்பு கோட்டைக்கம் நீர்கொழும்பு ஜாஎல பகுதிக்கும் இடையில் பேரூந்தில் பயணித்த போதே பேரூந்தை வழிமறித்த படையினர் இவரைக் கைது செய்துள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  9. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பது குறித்து ஆறரைக் கோடி தமிழ்நாட்டு மக்களிடத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.6k views
  10. யுத்தத்தின் இயல்பான சுழற்சி நான்காம் ஈழப்போர் மாவிலாற்றில் தொடங்கி சம்பூர் வாகரை வவுணதீவு கொக்கட்டிச்சோலை குடும்பிமலையூடாக வன்னிக்குள் கொண்டுசெல்லப்பட்டுவிட்டது என கொழும்பின் அனைத்துவட்டாரங்களும் வெகு சில மாதங்களுக்கு முன்னர் மார்தட்டிக்கொண்டன. இதன் வழியாக வன்னிக்குள் முடக்கப்பட்டிருக்கும் புலிகளை முற்றாக அழித்தொழிப்பதற்காக நிகழ்ச்சி நிரலைக்கூட அவர்கள் வெளியிட்டும் இருந்தார்கள். இதன் உச்சமாக ஐந்து படையணிகள் (53,56,57,58,59 வது டிவிசன்கள்) வன்னிக்குள் புகுவதற்கு தயாராக இருப்பதாகவும் வெறும் 7200 ஏக்கர் நிலம்மட்டுமே புலிகளின் வசம் இருப்பதாகவும் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் சார்பில் பேசவல்லராகிய அமைச்சர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார். ஆனால், கடந்த …

  11. படை முகாம்கள் உசார் நிலையில். எதிர் வரும்இலங்கையின் சுதந்திர தின விழாவை பெருமெடுப்பில் கொண்டாட மகிந்தா திட்டமிட்டிருக்கும் நிலையில் அவர்களது சதந்திர தின விழாவிற்கு முன்னர் தென்னிலங்கையிலோ அன்றி வேறு பகுதிகளிலோ தம்மை புலிகள் தாக்க கூடும் என்ற அச்சத்தில் அணைத்து படை முகாம்களும் அதியுச்ச உசார் நிலையிலும் கொழும்பில் பலத்த பாதுகாப்புமிடப்பட்டு பல நூற்றுகணக்காண படையினரும் இராணுவத்தினரும் சுற்று காவல் நடவடிக்கைகளில் இறக்கி விடப்பட்டிருக்கின்றனர். விமான நிலையம் கடற்படை தளம் பிரதான இராணுவ முகாம்கள் என்பன அதி ஊச்ச விழிப்பு நிலையில் வைக்கப் பட்டள்ளது. சந்தேகத்திற்கு இடமானவர்களை கைது செய்யு மாறும் காவல்துறையினருக்கு உத்திரவிடப்பட்டள்ளதாக அங்க…

  12. மனோகரன் எழுதிய "சிறீலங்கா அரசின் அணுகுமுறைகளை தமிழர்கள் இராசதந்திரம் தோற்கடிக்க வேண்டும்" சிறீலங்கா அரசாங்கம் இன ஒதுக்கலைக் கை விடவேண்டும் என்று ஐ.நா வின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லுாயிஸ் ஆர்பர் தெரிவித்திருக்கிறார். அத்துடன் போர் நிறுத்தத்திலிருந்து அரசாங்கம் விலகியபின்னர் தொடரும் மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றமாகவே கருதப்படும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். லுாயிஸ் ஆர்பரின் இந்தக்கருத்துகள் முக்கியமானவை. இலங்கை தொடர்பில் அண்மையில் சர்வதேச அபிப்பிராயங்கள் படுமோசமாகவே இருக்கின்றன. அதிலும் ஐ.நா அமைப்பின் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் தொடர்ந்து சிறீலங்கா அரசாங்கத்தை விமர்சித்தும் கண்டித்தும் வருகின்றனர். அதன் உச்ச நிலையில் இப்போது லுாயிஸ் ஆர்பரின் கருத்தும…

  13. சிறிலங்காவுக்கு இந்தியா இராணுவ உதவி செய்யக்கூடாது என்று தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் மட்டும் பெறப்பட்ட ஒரு லட்சம் கையெழுத்துக்களை ஒப்படைக்கும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 861 views
  14. வத்தளையில் பொலிஸாரினால் தற்கொலை அங்கிகள் மீட்பு 2/2/2008 10:38:38 AM வீரகேசரி இணையம் - வத்தளை மாபொலவில் பொலிஸாரினால் தற்கொலை அங்கிகள் மீட்க்கப்பட்டுள்ளன. இன்று காலை வத்தளை பொலிஸாரினால் இத்தற்கொலை அங்கிகள் உட்பட 8 டெட்டனைற்றர்கள்,தன்னியற்க கருவிகள் மீட்க்கப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

  15. மன்னாரில் அரச கட்டுப்பாட்டுக்குள் வசிக்கும் பெயர் குறிப்பிடாத பெண்மணி சொல்கிறார்.. புலிகள் குண்டைக் கொடுத்து ஒரு சின்னப் பையன் மூலம் பொலீஸ் மீது ஏவச் சொல்கின்றனராம். அவன் அதைச் செய்ததும் பொலீஸ் அவனைச் சுட்டுக் கொன்று விடுகிறதாம். அரச கட்டுப்பாட்டுக்குள் வதிவது இப்போது நல்லதாம். அரச தலைவர் வல்லவராம். சமாதானம் கொண்டு வர பிரார்த்திக்கினமாம். கிளைமோர் எல்லா இடமும் கிடக்காம். அதைப் புலி வைக்குதோ ஆமி வைக்குதோ என்று சரியாத் தெரியாதாம். இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள்ள யாரோ வெள்ளை வானில் வந்து ஆட்களைப் பிடிக்கினமாம். காசு கேக்கினமாம். ஆனால் அது புலியாகவும் இருக்கலாமாம்... அரசாங்க ஆக்கலாவும் இருக்கலாமாம். இப்படி சொல்லி இருக்கிறா ஒரு அனாமதேயப் பெண…

  16. அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம் பாகிஸ்தான் பயணம் 1/30/2008 12:26:04 PM வீரகேசரி இணையம் - இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இன்று பாகிஸ்தான் பயணமாவதாக வெளி விவகார அமைச்சு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இனாமுல் ஹக்கின் அழைப்பையேற்று செல்லும் அமைச்சர் போகொல்லாகம அந்நாட்டின் ஜனாதிபதி பர்வேஸ் முஷர்ரப், பிரதமர் சொமோரோ மற்றும் வெளிவிவகார அமைச்சர் இனாமுல் ஹக் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  17. ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை, தனது கடல் எல்லைக்குள் மிதக்க விட்டுள்ள கண்ணிவெடிகளால் இந்திய மீனவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று கடலோரக் காவல் படையின் மண்டபம் மைய அதிகாரி கே.ஜனார்த்தனன் கூறியுள்ளார். கச்சத்தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடையே இலங்கை அரசு கண்ணிவெடிகளை மிதக்க விட்டுள்ளது. விடுதலைப் புலிகள் நடமாட்டத்தைக் குறைக்கவே இந்த நடவடிக்கை என்று இலங்கை கூறியுள்ளபோதிலும், தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் உலவுவதைத் தடுக்கும் நோக்கில்தான் இந்த பயங்கர செயலை செய்துள்ளது இலங்கை அரசு. இந்த நிலையில், இன்று மண்டபம் கடலோரக் காவல் படை மையத்தின் சார்பில் பத்திரிக்கையாளர்கள், ஹோவர்கிராப்ட் படகு மூலம், சர்வதேச கடல் எல்லைக்கு அருகில் உள்ள ஐந்தாம் தீவுத் திட்டுக்கு …

  18. இலங்கையின் தற்காலிக வெளிநாட்டமைச்சராக ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே நியமனம் இலங்கையின் தற்காலிக வெளிநாட்டமைச்சராக ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், பிரதான கொறடாவுமான அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருக்கிறார். வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ வியஜமொன்றினை மேற்கொண்டிருப்பதாலும், பிரதி வெளிநாட்டமைச்சர் ஹுசைன் பைலா மத்திய கிழக்கு நாடுகளுக்கான கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்டிருப்பதாலும் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தின் பின்னணியிலேயே, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம நாடு திரும்பும் வரைக்கும் பதில் வெளிநாட்டு அமை…

    • 2 replies
    • 1.4k views
  19. சிறிலங்காவிற்கு தற்போதும் இந்தியா வழங்கி வரும் இராணுவ உதவிகளை உடனே நிறுத்த வேண்டும் என்று இந்திய மத்திய கூட்டரசின் பிரதான கட்சிகளில் ஒன்றான இந்திய கொம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ராஜா வலியுறுத்தியுள்ளார். சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் கூட்டத்தில் டி.ராஜா கூறியதாவது: சிறிலங்கா அரசு நடத்தும் இராணுவத் தாக்குதல்களின் குணாம்சம் மாறியுள்ளது. ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் மீதான தாக்குதலாக- போராக மாறியுள்ளது. தமிழ் மக்களினது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக அனைத்துலக சமூகமும், ஐக்கிய நாடுகள் சபையும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளன. ராஜபக்ச அரசாங்கமானது இராணுவ ரீதியான தீர்வுக்கு முயற்சிக்கின்றது. …

    • 4 replies
    • 1.2k views
  20. தமிழர்கள் ஒன்று பட்ட மக்களாகி தங்களுக்கான ஒரே தீர்வான தமிழீழத் தனியரசை தலைவன் வழியில் புலிகள் அணியில் சென்று விரைந்து அமைத்திட வேண்டும். 30.01.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு http://www.yarl.com/videoclips/view_video....8f955d7ab048990

    • 2 replies
    • 1.4k views
  21. கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 02 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 01 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.

    • 11 replies
    • 3.1k views
  22. தென்மராட்சியில் அரசபடைக் கொலைக் கும்பலால் இரு பொதுமக்கள் சுட்டுக்கொலை தென்மராட்சியில் இரு பொதுமக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் பருத்தித்துறை - கச்சாய் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றினுள் புகுந்த சிறீலங்கா படைகளின் கொலைக் கும்பல் யுவதி ஒருவரைச் சுட்டுக்கொன்றுள்ளனர். கொல்லப்பட்டவர் 24 அகவையுடைய சிவராசா சுகி எனக் கூறப்படுகின்றது. இதேபோன்று காலை 10 மணியளவில் அல்லாரை - கச்சாய் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றினுள் புகுந்த சிறீலங்கா படைகளின் கொலைக் கும்பல் பொதுமகன் ஒருவரைச் சுட்டுக்கொன்றுள்ளனர். கொல்லப்பட்டவர் 26 அகவையுடைய உதயன் எனத் தெரிவிக்கப்படுகின்றது. http://www.pathivu.com/index.php?subaction...amp;u…

  23. கொலை செய்யபட்ட அமரர் மகேஸ்வரனின் மரணவிசாரணை இன்று மேல் நீதிமன்றில் நீதவான் திரு ரவிந்திர பிரேமரத்ன முன்னிலையில் எடுக்கபட்டது. அச் சமயம் மகேஸ்வரன் அவர்களின் உறவினர்களினால் நியமிக்கபட்ட ஜனாதிபதியின் சட்டத்தரணி அமீனின் கேட்ட கேள்வி ஒன்றுக்கு விடையளிக்கும் போது நீதவான் கொலையாளியின் இரத்த மாதிரியும் கொலை செய்ய பாவித்த துப்பாக்கியில் உள்ள இரத்தமும் மரபணுப் பரிசோதனை மூலம் ஒருவருடையதே என அடையாளம் காணப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். கொலையாளி, மகேஸ்வரனின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது அவர் அருகில் நின்ற அமரரது பாதுகாவலரின் துப்பாக்கிச் சூட்டில் கொலையாளி காயமடைந்தது யாவரும் அறிந்ததே. கண்கண்ட சாட்சிகள் எவரும் உயிரச்சுறுத்தல் ஏற்படும் என்ற காரணத்தினால் குற்றவாளியை …

  24. வடபோர் முனையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்த வந்த சிறிலங்காப் படையினரின் தாக்குதல் நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  25. சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் பாடசாலை மாணவர்களும், பொதுதுமக்களும் படுகொலை செய்யப்பட்டதனைக் கண்டித்து சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் கொடும்பாவிகளை கிளிநொச்சியில் இன்று பாடசாலை மாணர்வர்கள் எரியூட்டியுள்ளனர். மன்னார் தட்சணாமருதமடுவில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி நடத்திய கிளைமோர்த் தாக்குதலைக் கண்டித்து கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 9:00 மணிக்கு கண்டனக்கூட்டம் நடைபெற்றது. இக்கண்டனக் கூட்டத்திற்கு மாணவி தர்மினி தலைமை தாங்கினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் மாணவிகள் உரை நிகழ்த்தினர். அதனைத் தொடர்ந்து சிறிலங்கா அர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.