ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளேமோர்த்தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் திரு.கி.சிவநேசன் அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது. http://www.sankathi.net/
-
- 1 reply
- 1.7k views
-
-
உயிர்நீத்த சிவநேசன் அவர்களின் வெற்றிடத்திற்கு சொலமன் எஸ். சிறில் நியமிக்கப்படவுள்ளார். க்ளைமோக் குண்டுத்தாக்கலில் உயிர்நீத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் அவர்களின் வெற்றிடத்திற்கு சொலமன் எஸ். சிறில் நியமிக்கப்படவுள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சிவநேசனுக்கு அடுத்தபடியாக அதிக விருப்பு வாக்குகளை சொலமன் எஸ்.சிறில் பெற்றுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் 31,177 விருப்பு வாக்குகளைப் பெற்ற சொலமன், மறைந்த சிவநேசனது மறைவினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை சிவநேசன் அவர்களது இறுதி கிரியைகள் நாளைய தினம் கிளிநொச்சியில் இடம் பெறவுள்ளன. இதற்காக தமிழ்…
-
- 0 replies
- 2.2k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை மறுநாள் திங்கட்கிழமை நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ் மக்களை வலியுறுத்தியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, யாராவது வாக்களிக்குமாறு நிர்பந்தம் செய்தால் புத்திசாதுர்யமாகச் செயற்பட்டு வாக்குகளை செல்லுபடியற்றதாக்குமாறும் கோரியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.5k views
-
-
மொனறாகல மாவட்டத்தின் புத்தள பகுதியில் கடந்த 5 ஆம் நாள் கடத்தப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் ஜயசுந்தர விஜயக்கோன் நேற்றிரவு விடுவிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
"தமிழீழ விடுதலைப் புலிகள் இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்களுடன் உள்ள தொடர்புகளை நிறுத்தியிருக்கின்றனர்.'' இவ்வாறு ஆஸ்திரேலியாவின் சிட்னி நட்புவாரிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சனக ஜெயசேகரவால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருக்கிறது. புலிகள் பல்வேறு இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்பாடல் வலையமைப்பை பேணிவந்துள்ளனர். 1978ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு காலப்பகுதிகளுக்குள் பாலஸ்தீன விடுதலை அமைப்பிடம் இராணுவப் பயிற்சி பெற்றிருக்கின்றனர். லெபனானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கான பயிற்சிகளைப் பெற்றுள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடற்புலிகளுக்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் நிதி போன்றவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக ஆ…
-
- 4 replies
- 2.7k views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிள்ளையான் குழுவை சர்வகட்சிக் குழுவில் இணைத்துக் கொள்வது தொடர்பான சர்ச்சை காரணமாக குழுவின் செயற்பாடுகளை ஒத்தி வைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது. பிள்ளையான் குழுவை சர்வகட்சிக் குழுவில் இணைத்துக் கொள்ளும்வரை சபை நடவடிக்கைளிலிருந்து விலகிக் கொள்ள ஜாதிக ஹெல உறுமயவும், ஐக்கிய மக்கள் முன்னணியும் முடிவு செய்திருந்தன. இந்த நிலைமையின் காரணமாக சர்வகட்சி குழுவின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகத் தெரியவருகிறது. இதனால் சர்வகட்சிகுழுவின் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரியவருகிறது. தமது கட்சியை சர்வகட்சி குழுவில் இணைத்துக் கொள்ளும்வரை சபையின் பணிகளை ஒ…
-
- 0 replies
- 991 views
-
-
இனவெறி சிங்கள அரசின் அப்பட்டமான மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விரோத செயற்பாடுகளுக்கு எதிரான அனைத்துலக சமூகத்தின் உடனடி நடவடிக்கையை வேண்டி "மாமனிதர்" கி.சிவநேசனுக்கான வீரவணக்க நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை (12.03.08) அவுஸ்திரேலியா சிட்னியில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.3k views
-
-
சரிநிகர் சஞ்சிகையின் ஆசிரியரும் சுதந்திர ஊடகவியாலாளர் இயக்கத்திற்காக பேசவல்லவருமான சிவகுமார் அவர்களை வழக்கறிஞர் ஒருவர் ஊடாக இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள , பயங்கரவாத புலன் விசாரணைக்காக ஒப்படைத்ததாக சுதந்திர ஊடக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுனந்த தேசப்பரிய அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று சிவக்குமார் அவர்கள் " பயங்கரவாத புலன் விசாரணை காவல் துறையினர் தம்மை தேடி வந்த போது தாம் இல்லாததால், தான் வரும் வரை தமது குடும்பத்தில் இருவரை அழைத்துச் சென்று கல்கிஸ்ஸை போலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருப்பதாகவும் , தன்னை விசாரணைக்கு வரும்படி அவர்கள் அழைத்திருப்பதாகவும்" கூறினார். சுனந்த தேசப்பிரிய அவர்கள் ,இன்று பிற்பகல் ,தான் வழக்கறிஞர் சுதர்சன குணவர்தன அவர்களோடு சென…
-
- 17 replies
- 2.9k views
-
-
சனிக்கிழமை அதிகாலை தொடக்கம் மன்னார் களமுனையில் படையினரால் புதிதாக கைப்பெற்றப்பட்ட பரப்பான் கண்டல் பகுதியில் புலிகளுக்கும் இராணுவத்துக்குமிடையே கடும் சண்டைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. சண்டயை அடுத்து மன்னார் - மதவாச்சி வீதி போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளது. அம்புலன்ஸ்கள் காயமடைந்த படையினரை ஏற்றிக் கொண்டு அனுராதபுரம் நோக்கி விரைவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். படையினர் தள்ளாடி மற்றும் வங்காலையில் இருந்து கடும் பல்குழல் வெடிகணை மற்றும் ஆட்லறித் தாக்குதலை நடத்தி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன..! Heavy fighting erupts in Parappaangka'ndal, Mannaar [TamilNet, Saturday, 08 March 2008, 09:11 GMT] Heavy fighting has broke out b…
-
- 5 replies
- 3k views
-
-
குமரி மீனவர்கள் கடத்தல் - இலங்கை மீண்டும் அட்டகாசம் சனிக்கிழமை, மார்ச் 8, 2008 நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 62 பேரை இலங்கை கடற்படை கடத்திச் சென்றுள்ளதால், அங்கு பதட்டம் நிலவுகிறது. ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் கிறிஸ்டியை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்ற பரபரப்பே இன்னும் விலகாத நிலையில் நேற்று குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 62 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கடத்திச் சென்று பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த தூத்தூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் கடந்த ஆண்டு நடுக் கடலில் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொன்றது யார் என்பதில் இன்னும் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இதுதவிர கடந்த ஆண்ட…
-
- 1 reply
- 1.2k views
-
-
மொனறாகலையில் புத்தள - செல்லக்கதிர்காம வீதியில் இன்று காலை படையினர் பயணித்த ஊர்தி ஓன்றை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போது மூன்று படையினர் காயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இணைத்தளம் தெரிவித்துள்ளது. காலை 9.45 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அங்கு பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு இணைத்தளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 11 replies
- 2.7k views
-
-
இலங்கை உட்பட உலக நாடுகளின் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு உதவுவதற்காக உயர்மட்ட மத்தியஸ்தர் குழுவொன்றை ஐ.நா. அமைதிருக்கிறது. இந்த மத்தியஸ்தர் குழுவில் சர்வதேசத்தில் முன்னணியிலுள்ள நிபுணர்கள் இடம் பெற்றுள்ளனர். இதனை ஐ.நாவின் அரசியல் விவகாகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் நாயகம் பி.லின் பாஸ்கோ அறிவித்திருக்கிறார். இந்த மத்தியஸ்தர் குழுவானது ஐ.நாவின் அரசியல் விவாகாரத் திணைக்களத்தின் நடவடிக்ககைளுக்கு வலுவூட்டும என்று அவர் தெரிவித்திருக்கறார். இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளுக்கு உதவியளித்தல் மூலம் மோதல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு இக்குழுவினர் அரசியல் விவகாரத்திணைக்களத்துக்கு உதவியளிப்பார்கள். யுத்த நிறுத்தம், நீதித்துறை மாற்றங்கள், அதிகாப்பகிர்வு…
-
- 2 replies
- 2.1k views
-
-
சந்திரகாந்தி நந்தகுமார் என்ற பெண் தனது கணவரான பரசுராமன் என்பவரை ஜனவரி மாதம் பணி நிமித்தம் சென்ற போதே இறுதியாக பார்த்ததாகத் தெரிவித்துள்ளார். வன்னிப் பிரதேச ஆசிரியரான பரசுராமனின் உடல் மட்டக்களப்பு வாவியொன்றிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது. எதிர்வரும் 10ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் ஆயுததாரிகளின் செயற்பாட்டின் காரணமாகவே பரசுராமன் கொல்லப்பட்டுள்ளார். கிழக்கு பகுதியை கடந்த வருடம் அரசாங்கம் மீட்டதன் பின்னர் அரசாங்கமும், அதற்கு ஆதரவான கருணா தரப்பினரும் கிழக்குப் பிராந்தியத்தை கட்டுப்படுத்தி வந்தனர். தமது பழைய சகாக்களின் கொலை அச்சுறுத்தல்கள்; காரணமாக கருணா லண்டனுக்கு சென்ற வருடம் தப்பியோடினார். இதற்கெ…
-
- 4 replies
- 2.4k views
-
-
சிறிலங்காவின் மனித உரிமைகள் ஆணக்குழுவில் வடபகுதியில் இருந்து 300 பேர் அடைக்கலம் கோரியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரும், முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியுமான தர்மசிறீ ஜெயசிங்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 831 views
-
-
கனடா ரொறன்ரோவில் நாளை "மாமனிதர்" கி.சிவநேசனுக்கு மாபெரும் வீரவணக்க நிகழ்வு நடைபெறவிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-
-
தேசிய ஊடகக் கொள்கையை உருவாக்கியுள்ளதாகவும் நாட்டில் பொறுப்புள்ள ஊடகக் கலாச்சாரத்தை ஏற்படுத்தும் நோக்குடன் இதனை உருவாக்கி உள்ளதாகவும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.2k views
-
-
க.வே.பாலகுமாரன் 'எவரேனும் சொல்க" என விடுதலைக் கவிஞன் சு.வி. கேட்டது! 'இன்னும் மீதமாய் இருக்கின்றனவா? புத்தரின் அன்பு, கருணை நற் செயல்கள் துளியேனும்?" என்பவை பற்றி. நாம் கேட்பது சிங்களத்தின் திகைப்பூட்டும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இன்னமும் கண்டிக்க யாருமுள்ளனரா? என்பது பற்றி 09.11.2000 ஆம் ஆண்டே சு.வி. எழுதிய நெஞ்சைப் பிளக்கும் உணர்வின் வரிகளோடு இக் கட்டுரையைத் தொடங்க வேண்டியுள்ளது. 'வடக்கு உனக்கு" கிழக்கு அவைக்கு பிணக்குப்படு என பிரித்தாளு பஞ்சத்து ஆண்டிகளுக்கு பொதியை அவிழ்த்து வைத்து பரிமாறு பழைய சோறு இனியென்ன? நித்திரைப் பாயை விட்டு எழும்புவதற்குள் வெட்டு கோடரியால் நெஞ்சைப் பிள ஈரக்குலையைப் பிடுங்கு இரத்தக் காட்டேறிகளிடம் போடு"...…
-
- 2 replies
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகள் ஏட்டுக்காக சிறி. இந்திரகுமார் எழுதிய - எல்லாளன் இராச்சியத்தில் பிரபாகரனின் வீரர்கள்... http://www.tamilnaatham.com/articles/2008/...mar20080307.htm
-
- 8 replies
- 1.9k views
-
-
இலங்கையில் ஊடவியலாளர்கள் கைது இலங்கை தலைநகர் கொழும்பில், பயங்கரவாத புலன் விசாரணை காவல் துறையினர் இரண்டு தமிழ் ஊடக வியலாளர்களையும், ஒரு சிங்கள ஊடகவியலாளரையும் தடுத்துவைத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து சரிநிகர் சஞ்சிகையின் ஆசிரியரும் சுதந்திர ஊடகவியாலாளர் இயக்கத்திற்காக பேசவல்லவருமான சிவகுமார் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, காவல்துறையினர் தன்னையும் விசாரணைக்கு வரும்படி அழைத்திருப்பதாகக் கூறினார். காவல்துறையின் விசாரணைக்கு செல்வதற்கு முன்னர் சிவகுமார் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் செய்தி அரங்கத்தில் கேட்கலாம். http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml
-
- 0 replies
- 715 views
-
-
போரில் கொல்லப்படும் இராணுவ வீரர்கள் குறித்த சரியான தரவுகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதில்லையென ஐ.தே.க. எம்.பி. லக்ஷ்மன் செனவிரட்ண குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது; இந்நாட்டு மக்களுக்கு உண்மையை அறிய உரிமையுண்டு. எனினும்இ போரில் கொல்லப்படுபவர்கள் பற்றிய சரியான தரவுகள் இச்சபையில் சொல்லப்படுவதில்லை. ஒவ்வொரு படைத்துறை சார்ந்த தரப்பும் ஒவ்வொரு விதமான வேறுபட்ட எண்ணிக்கையை போரில் கொல்லப்பட்ட முப்படையினரின் எண்ணிக்கையாகக் கூறுகின்றன. எனினும்இ உண்மை விபரங்கள் எம்மிடமுண்டு. கிழக்கு மாகாணத்தை புலிகளிடமிருந்து மீட்டெடுப்பதில் முக்கிய பங்காற்றிய ப…
-
- 2 replies
- 1.2k views
-
-
சிறிலங்காப் படையினரால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் படுகொலை செய்யப்பட்டமைக்கு நோர்வே கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.2k views
-
-
வன்னிப் போர்க்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வெவ்வேறு மோதல்களில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 850 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் மூன்று பெண்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இருவரைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 645 views
-
-
ராமேஸ்வரம் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 மார்ச் 2008 ராமேஸ்வரம் மீனவரை சுட்டுக்கொன்றது இலங்கை கடற்படைதான் என்று மீனவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் கிறிஸ்டி என்ற மீனவர் பலியானார். மற்றொரு மீனவர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர்களை சுட்டுக்கொன்றது இலங்கை கடற்படை அல்ல என்று இலங்கை அரசு மறுத்தது. இதுகுறித்து, சென்னையில் உள்ள தென் இந்தியாவுக்கான இலங்கை தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் விடுதலைப் புலிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் எ…
-
- 3 replies
- 1.7k views
-
-
மனித உரிமை மீறல்களில் உலகின் மிக மோசமான நாடுகளில் ஒன்றாக சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் உள்ளது என்று அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) சாடியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1k views
-