ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
அநுராதபுரம் விமானப்படை முகாம் மீது நேற்று (ஒக்.22) மேற்கொள்ளப்பட்ட தரைவழித் தாக்குதலில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலி உறுப்பினர்களின் சடலங்கள் பிறந்தமேனியாக புனித அநுராதபுர நகரத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் 18 கரும்புலி உறுப்பினர்களும் 03 பெண் கரும்புலி உறுப்பினர்களும் உயிரிழந்ததுடன், இந்தச் சடலங்கள் விமானப்படை முகாமின் விமானப்படைத்தளத்திற்கு அருகில் வீழ்ந்து காணப்பட்டதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஊயிரிழந்த கரும்புலி உறுப்பினர்களின் சடலங்களை இன்று உழவு இயந்திரங்களில் ஏற்றி வைத்தியசாலையின் பிரேத அறைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இந்தநிலையில், அநுராதபுரம் நகரத்தின் மத்…
-
- 47 replies
- 11.7k views
-
-
இன்று காலை 10 மணியளவில் பெரியமடு மன்னார் பிரதேசத்தில் அநுராதபுர விமானப்படை தாக்கியளிப்பு சமரில் வீரச்சாவடைந்த 21 கரும்புலிகளின் அஞ்சலி செலுத்தும் விழா நடந்து கொண்டிருக்கும் போது சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையினரின் செல்வீச்சால் 3வர் பலியாகினர்.கொல்லப்பட்டவர்கள?ல் 8 மாத கர்பணியும் ஒருவராவார் காயமடைந்தவர்கள் முழங்காவில் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் Three civilians, including an 8-months pregnant mother, were killed and four wounded when Sri Lanka Army (SLA) fired artillery shells hit a memorial site at Periyamadu in Liberation Tigers of Tamileelam (LTTE) controlled Mannaar Thursday around 10:00 a.m. The child in the wome of the mother was also killed, initial rep…
-
- 2 replies
- 2.9k views
-
-
திஸ்ஸமகாராமவில் தாக்குதல்: 5 சிறிலங்காப் படையினர் பலி- 10 பேர் காயம் [வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2007, 05:23 PM ஈழம்] [கொழும்பு நிருபர்] அம்பாந்தோட்டை திஸ்ஸமகாராமவில் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் 5 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று வியாழக்கிழமை மாலை 4:35 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவம் தெடர்பிலான மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன www.puthinam.com
-
- 22 replies
- 5.2k views
-
-
அனுராதபுரதம் மாவட்டத்துக்கு சிறப்புத் தளபதியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் சனத் கருணாரட்ண நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
வீரகாவியமான 21 சிறப்புக் கரும்புலி மாவீரர்களுக்கு தேசியத் தலைவர் அகவணக்கம் [வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2007, 01:15 PM ஈழம்] [தாயக செய்தியாளர்] அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத் தளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட "எல்லாளன் நடவடிக்கை"யில் வீரகாவியமான 21 சிறப்புக் கரும்புலி மாவீரர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று அகவணக்கம் செலுத்தினார். வன்னியில் இன்று வியாழக்கிழமை (25.10.07) சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் 21 சிறப்புக் கரும்புலி மாவீரர்களின் திருஉருவப் படங்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தி, மலர்மாலை அணிவித்தார். http://www.puthinam.com/full.php?2e1VoW00a...d43YOA3a03oMV2e
-
- 2 replies
- 1.7k views
-
-
அனைத்துலக நெறிமுறைகளுக்கு மாறாக தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளின் உடல்களை நிர்வாணப்படுத்தி பொதுமக்கள் பார்வைக்கு வைத்த சிறிலங்காவின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து சென்னையில் எதிர்வரும் 29 ஆம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணத்தில் சிறிலங்காப் படையினர் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில் மனித உரிமைகள் ஆணையத்திடம் சரணடைந்து சிறைச்சாலைகளில் தடுக்கப்பட்டோரிடம் சிறிலங்கா படையினர் விசாரணைகள் நடத்தி வருவதாக தெரிகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
அனுராதபுரம் வான் படைத்தளத்தை கரும்புலிகள் தமது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளனர் என்றும் அங்கு அவர்கள் நடத்திய அதிரடித்தாக்குதலில் அங்கிருந்த அனைத்து வானூர்திகளும் அழிக்கப்பட்டிருந்தன என்றும் இத்தாக்குதல் குறித்து விசாரணைகள் நடத்தி வரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது: அனுராதபுரம் தளத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பாகவிருந்த வான் படையினர் தமது கடமையை சரிவரச் செய்யத் தவறியதன் விளைவாக அதிகாலை 2:20 மணியளவில் கரும்புலிகள் ஊடுருவி தமக்கு பாதுகாப்பான பகுதிகளில் நிலையெடுத்து நின்றுள்ளனர். வான் தளத்தின் வெளிப்புறக் கம்பி வேலிகளை வெட்டி அவர்கள் ஊடுருவினர். சுமார் 50 நிமிடங்கள் கழித்து 3:10 மணியளவில் கரும்புலிகளின் அணி வான்…
-
- 1 reply
- 2.2k views
-
-
வான் கலங்கள் அழிக்கப்பட்டது கவலையில்லை: அரசின் நடவடிக்கைகள் தொடரும் " மகிந்த " சிறீலங்கா வான் படைக்கு சொந்தமான வான் கலங்கள் விடுதலைப் புலிகளின் தற்கொடை அணியினால் அழிக்கப்பட்டது தனக்கு கவலையைத் தரவில்லை என, சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டது கவலையைத் தருவதாகவும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமது அரசின் நடவடிக்கைகள் தொடரும் என்றும் ராஜபக்ஷ சூழுரைத்திருக்கின்றார். சிங்கள மக்கள் மத்தியில் சரிந்து போயுள்ள தனக்கான ஆதரவை மீண்டும் நிலைநிறுத்தும் வகையிலேயே அதிபர் மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எட்டு வான் கலங்கள் மட்டுமே விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டுள்ளதாக சிறீலங…
-
- 3 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எதனை எவ்வாறு எப்போது சிந்திப்பார் என்பதை தன்னால் அறிய முடியும் என்று சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களில் ஒன்றான ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானாந்தா கூறியுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது: பிரபாகரன் எதை எவ்வாறு எப்போது சிந்திப்பார் என்பதை என்னால் அறிய முடியும். ஏனெனில், நானும் ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவன். ஆயுதப் போராட்டக்களத்தில் நின்றிருந்த போது நான் நேரடியாக புலித் தலைமையிடம் இருந்து கண்டு கொண்ட பல உண்மைகள் இருக்கின்றன. புலித்தலைமை அரசியல் பேச்சுவார்த்தைக்கு வருகின்றது என்றால் அது தங்களை யுத்தத்திற்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபடுத்துவத…
-
- 3 replies
- 2.4k views
-
-
பயங்கரவாதிகள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல: கிலாரி கிளின்ரன் [புதன்கிழமை, 24 ஒக்ரோபர் 2007, 07:25 PM ஈழம்] [செ.விசுவநாதன்] உலக ஒழுங்கில் பயங்கரவாதிகள் எனப்படுவோர் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல என்று அமெரிக்க முன்னாள் அரச தலைவர் கிளின்ரனின் துணைவியாரும் எதிர்வரும் அமெரிக்க அரச தலைவர் தேர்தல் வேட்பாளருமான கிலாரி கிளின்ரன் கூறியுள்ளார். அமெரிக்காவின் "கார்டியன் நியூஸ்" ஊடகத்துக்கு அவர் வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளதாவது: அனைத்து பயங்கரவாதிகளையும் ஒன்றாகக் கருத முடியாது. அவர்களின் நோக்கம், பயங்கரவாதிகளாகக் காட்டப்படுவதன் பின்புலம் ஆகியவறை குறித்த தெளிவுபடுத்தலை நாம் பெற்றிருக்க வேண்டும். அதாவது இலங்கையில் போராடும் தமிழ்ப் புலிகள் அல்லது ஸ்பெய்னின் பாஸ்…
-
- 1 reply
- 1.3k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....cbedc973445af2d
-
- 0 replies
- 1.4k views
-
-
அனுராதபுரம் சிறிலங்கா வான் படைத்தளம் மீது தாக்குதல் நடத்தி வீரச்சாவடைந்த கரும்புலிகளில் 20 மாவீரர்களின் வித்துடல்களை புதைத்து விட்டதாக சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 3k views
-
-
அனுராதபுரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா வான் படையின் 18 வானூர்திகள் அழிக்கப்பட்டுள்ளன. மொத்தம் ரூ 6.6 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரட்ன விவரித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.8k views
-
-
கரும்புலிகளின் உடல்களை நிர்வாணப்படுத்திய சிறிலங்காவின் வன்குரூரம்: ஐ.நா.விடம் புலிகள் முறைப்பாடு அனுராதபுரம் வான் படைத்தளத்தை தாக்கியழித்த கரும்புலிகளின் உடல்களை நிர்வாணப்படுத்திய சிறிலங்காவின் குரூரமான செயலானது போரில் உயிரிழந்தோர் தொடர்பிலான ஜெனீவா மாநாட்டு முடிவுகளுக்கு எதிரானது என்று ஐக்கிய நாடுகள் சபையிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.விபரங்களுக்கு
-
- 1 reply
- 1.5k views
-
-
அனுராதபுரம் வான்படைத் தளம் மீது கடும் தாக்குதல் [ த.இன்பன் ] - [ ஓக்ரோபர் 22, 2007 - 12:10 AM - GMT ] சிறிலங்காவின் அனுராதபுரம் வான்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதல் ஒன்றை சற்று முன்னர் ஆரம்பித்துள்ளதாக எமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் அனுராதபுரம் வான்படைத் தளத்தில் கேட்கும் கடுமையான குண்டுச்சத்தங்கள் துப்பாக்கிச் சூடுகளால் அதனை அண்டிய பகுதிகள் அதிர்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. http://www.eelatamil.net/index.php?option=...5&Itemid=67
-
- 175 replies
- 38.7k views
-
-
ஹம்பாந்தோட்டையில் இனம் தெரியாதோரால் ஐவர் சுட்டுக்கொலை ஹம்பாந்தோட்டை வீரவில விமான நிலையத்திற்கு அருகிலுள்ள காட்டுக்குள் விறகு சேகரிக்கச் சென்ற ஐந்து பேர் இனம் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். உள்ளுர் மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சிறீலங்காப் படையினரும், காவல்துறையினரும் இணைந்து நடத்திய தேடுதலின்போது, 9ஆம் கொலனியிலுள்ள ரண்மிடித்தேன பகுதியில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் உடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. நேற்றிரவு 7.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றிருந்த போதிலும், தகவலை வெளியே கசிய விடாது தடுப்பதில் சிறீலங்கா அரசும், அதிகாரிகளும் மேற்கொண்ட பகீரத முயற்சி தோல்வியில் முடிவடைந்திருக்கின்றது. கொழும்பின் பிரபல தனியார் பண்பலை வானொலியான ஹி…
-
- 0 replies
- 1.2k views
-
-
அனுராதபுரம் வான் படைத்தாக்குதலை "தாம் வன்மையாக கண்டிப்பதாக" வீ.அனந்தசங்கரி கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 12 replies
- 3.8k views
-
-
படைத்தளத்தில் புகுந்த கரும்புலிகள் விமான எதிப்பு பீரங்கிகளை கைப்பற்றி அவற்றினால் விமானங்களை அழித்தனர் அநுராதபுரம் விமானத் தளத்துக்குள் புகுந்த விடுதலைப்புலிகளின் அணிகள் அங்கிருந்த விமான எதிப்புப் பீரங்கி நிலை களைப் கைப்பற்றின. அவற்றைக் கொண் டும் விமான நிலையத்தை தாக்கியுள்ளனர். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இத் தகவலை வெளியிட்டுள்ளது. அந்த ஊடகம் தெரிவித்துள்ள மேலும் தகவல்கள் வருமாறு: அநுராதபுரத் தளம் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள்அதிகம். அவை குறித்த சரியான தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை. புலிகளின் விமானங்களைத் தாக்குவதற் காக மேல் எழுந்த பெல் 212 ரக ஹெலி மிகுந் தலையில் வீழ்ந்து நொருங்கியதாக அரசுத் தரப்புக் கூறுகின்றது. ஆனால், விடுதல…
-
- 1 reply
- 2.7k views
-
-
ராடர் மூலம் வழிப்படுத்தப்படுகின்ற ஏவுகணைகளை சுவீகரிக்க முயற்சி? தமிழர் தாயகத்தின் வடபகுதி மீது தான் மேற்கொள்ளும் பெரும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு அநுராதபுரம் விமானத் தளத்தையே தனது முக்கிய விநியோக மையமாக அரசுப் படைகள் பயன்படுத்தி வருகின்றன. முழு சிங்களப் பிரதேசத்தில் அமைந்துள்ள இத்தளத்தின் மீது ஊடுருவி இரு முனைத் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றார்கள் விடுதலைப் புலிகள். இந்த "எல்லாளன் நடவடிக்கை' மூலம் விடுதலைப் புலிகள் வெளிப்படுத்தியிருக்கும் செய்தியை தகவலை இலங்கை அரசுத் தரப்பு புரிந்து கொள்ளுமா என்பதே கேள்வி. "விமான எதிர்ப்புப் பொறிமுறையை வசமாக விரித்துவிட்டோம். இனிப் புலிகள் வான் தாக்குதல் நடத்தவே முடியாது ' என அரச உயர்மட்டம் வரை மார்தட்டிக் கூறப்பட்டது. …
-
- 3 replies
- 3.2k views
-
-
அநுராதபுர வான் படைத்தள தாக்குதலானது புலிகளின் துல்லியமும், துணிவும் நிறைந்த செயல்: பி.இராமன் [புதன்கிழமை, 24 ஒக்ரோபர் 2007, 07:18 AM ஈழம்] [காவலூர் கவிதன்] அநுராதபுர வான் படைத்தளம் மீதான தாக்குதலானது தமிழீழ விடுதலைப் புலிகளின் துல்லியமும், துணிவும் நிறைந்த செயல் என்று இந்திய இராணுவத்தின் முன்னாள் ஆலோசகர் பி.இராமன் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க... http://www.puthinam.com/full.php?2e1VoW00a...d43YOA3a03oMV2e
-
- 3 replies
- 2.3k views
-
-
புலிகளை முற்றாக தோற்கடிக்க வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் நாட்டை முற்றாக அழித்துவிடக் கூடாது - வ. திருநாவுக்கரசு * இந்தியாவை போற்றிப் புகழும் ஆட்சியாளர் `வேற்றுமையில் ஒற்றுமை' காணும் அந்நாட்டின் முன்னுதாரணத்தை பின்பற்ற மறுப்பது மட்டும் ஏன்? கிழக்கு கைப்பற்றப்பட்டது போல், வடக்கையும் கைப்பற்றுவோம். கிழக்கு மக்கள் விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது போல, வடக்கிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள், இவ்வாறாகவே அரச தரப்பு உயர் மட்டத்தினர் அண்மைக் காலமாக மார்தட்டி வந்துள்ளனர். விடுதலைப் புலிகளின் 3 ஆயுதக் கப்பல்களை தாக்கி அழித்து விட்டதாகப் பறைசாற்றி திருகோணமலை கடற்படைத்தளத்தில் கொண்டாட்டம் நடத்தப்பட்ட …
-
- 1 reply
- 1.9k views
-
-
புனித நகருக்கு விழுந்த பூஜை அடி சிங்களத்தில் : விமல் தீரசேகர தமிழில் : அஜீவன் விமான படைத் தளத்தை தாக்க வந்தவர்கள் படகுகளில் வந்திருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. அனுராதபுரத்தை புனித நகர் என அழைத்தாலும் , அதை விட அந்த நகரை இராணுவ நகர் என்று அழைப்பதே சாலச் சிறந்ததாகும். வட கிழக்கு யுத்த தேவைகள் அனைத்தையும் செய்வதில் அனுராதபுரத்தின் இராணுவ நிலையே முதன்மை வகித்து வந்தது. இப்படியான ஒரு பகுதியில் உள்ள விமான தளத்தின் மீது எல்.டீ.டீ. போராளிகள் ஊடருவி தொடுத்த தாக்குதல் மற்றும் விமான தாக்குதல் ஆகியன ராஜபக்ஸ அரசின் யுத்த அட்டவனை குறித்தும் பாதுகாப்பு நிலமை தொடர்பு குறித்தும் கேள்விகளை எம் மனதில் எழுப்பவே செய்கிறது? இது குறித்து பேசுவதோ அல்…
-
- 17 replies
- 6.5k views
-
-
சிறிலங்கா வான் படையினரால் வான் படைத்தளங்களைப் பாதுகாக்க இயலாமையால் அப்பொறுப்பு சிறிலங்காவின் தரைப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
டக்ளஸை நோக்கிப் புத்தகங்களை வீசி எறிந்தார் சிவாஜிலிங்கம் எம்.பி. நாடாளுமன்றில் நேற்றுத் தன்னைப் பேசவிடாமல் தொடர்ந்தும் இடையூறு செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நோக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் புத்தகங்களையும் பைல்களையும் அள்ளிவீசினார். அதேநேரம் டக்ளஸூக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. சிவாஜி லிங்கம் பேசி முடிக்கும் வரைக்கும் இந்த வாக்குவாதம் தொடர்ந்தது. நாடாளுமன்றில் நேற்று உள்ளூராட் சித் தேர்தல் திருத்தச்சட்டமூலம் மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் மா…
-
- 3 replies
- 2.8k views
-