ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142586 topics in this forum
-
சரத் பொன்சேகா தாக்குதல்- டோரா தாக்குதலினால் சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு: அனுரா சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான தாக்குதல் மற்றும் கடற்படையின் டோராப் படகுகள் அழிப்பு ஆகியவற்றால் சிறிலங்கா சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் மீதான விவாதத்தின் போது அனுரா பண்டாரநாயக்க பேசியதாவது: நாட்டின் நலன் கருதி அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நெகிழ்வுப் போக்குடன் யதார்த்த ரீதியாக செயற்பட வேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் மேலதிக அதிகாரப் பகிர்வு மூலம் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாக சர்வதேச சமூகத்திடம் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நோர்வேயை நாம் …
-
- 0 replies
- 988 views
-
-
இலங்கையின் சமாதான பேச்சுவார்த்தையில் விடுதலைப்புலிகள் கலந்து கொள்வதை ஊக்கு விக்கும் வகையில் அவர்கள் மீதான தடையை ஜரோப்பிய நாடுகள் தளர்த்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் ஐரோப்பிய நாடு ஒன்றில் சமாதான பேச்சுவாhர்ததைகள் நடைபெறுமாயின் தமிழீழ விடுதலைப்புகள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல கூடிய வகையில் அந்த அமைப்பு மீதான தடையை தளர்த்த ஐரோப்பிய ஓன்றிய நாடுகள் கொள்கையளவில் இணங்கியுள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் சமாதான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை யை அந்த நாடுகள் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது சங்கதியில் இருந்து எடுத்தது. இதைப்பற்றி வேறு எங்காவது செய்தி வந்திருக்கிறதா?
-
- 4 replies
- 2.7k views
-
-
தமிழின அழிப்பு நடவடிக்கையை மீண்டும் தொடங்கியுள்ளது சிறிலங்கா அரசாங்கம்: சுரேஸ் பிரேமச்சந்திரன் இலங்கைத் தீவில் தமிழின அழித்தொழிப்பு நடவடிக்கையை சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் தொடங்கியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணல்: ஐரோப்பியத் தடையானது சிங்கள அரசாங்கத்துக்கு உதவக் கூடியது. இது தொடர்பிலான எதிர்ப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்துள்ளது. இத்தடை மூலம் சிறிலங்கா அரசாங்கத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் மேலும் பிரிக்கக் கூடியதாகத்தான் இருக்கும். சிறிலங்காவின் புவிசார் அரசியல் நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் புரிந்துகொள்…
-
- 0 replies
- 844 views
-
-
கொழும்பில் கிளைமோர்த் தாக்குதல்: பேரூந்து சாரதி காயம் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் வெலிசறயில் அமைந்துள்ள சிறிலங்கா கடற்படைத் தளத்திற்கு 50 மீற்றர் தொலைவில் கிளைமோர் குண்டொன்று வெடித்ததில், பேரூந்து சாரதியொருவர் காயமடைந்துள்ளார். கொழும்பு கட்டுநாயக்கா வீதியில் பயணித்த பேரூந்து ஒன்று, இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4:45 மணியளவில் வெலிசற கடற்படை முகாமிற்கு அருகே செல்லும்போது இந்த கிளைமோர் குண்டு வெடித்துள்ளது. கடற்படையினரின் வாகனத்தை இலக்குவைத்து இந்த கிளைமோர் வைக்கப்பட்டிருந்ததாக சிறிலங்கா இராணுவத் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ள போதிலும், தாக்குதல் நடந்த இடத்திற்கு ஊடகவியலாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. -புதினம்
-
- 2 replies
- 1.6k views
-
-
அல்லைப்பிட்டி மக்கள் ஆவேசம்: டக்ளஸ் அதிர்ச்சி யாழ். நாவாந்துறையில் அகதிகளாக அடைக்கலாமாகியுள்ள அல்லைப்பிட்டி மக்களை தங்களது வீடுகளுக்கு திரும்புமாறு துணை இராணுவக் குழுவின் தலைவரான டக்ளஸ் தேவானந்த கூறியதை அம்மக்கள் நிராகரித்துவிட்டனர். அல்லைப்பிட்டி படுகொலைக்கு டக்ளசின் ஈ.பி.டி.தான் காரணம் என்றும் பகிரங்கமாக நேரிடையாகச் சாடினர். நாவாந்துறை புனித மரியாள் தேவாலயத்தில் அல்லைப்பிட்டி மக்கள் அடைக்கலமாகியுள்ளனர். அம்மக்களை சிறிலங்கா இராணுவத்தினர் பாதுகாப்புடன் டக்ளஸ் நேற்று புதன்கிழமை சந்தித்தார். ஆனால் சிறிலங்கா கடற்படையினரும் டக்ளசின் ஈ.பி.டி.பி.யினருமே தங்களது உறவுகளை மே 13 ஆம் நாளன்று படுகொலை செய்தனர் என்று அம்மக்கள் குற்றம்சாட்டினர். கொலையாளிகள் அல்லைப்…
-
- 0 replies
- 1.2k views
-
-
அண்மைக்காலங்களாக எம் தாயகத்தில் இலங்கை அரசினாலும், அதனுடன் ஒட்டியிருக்கும் கூலிப்படைகளாலும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கொலைவெறியாட்டங்களை மூடிமறைப்பதில் இலங்கை அரசிற்கு போட்டி போட்டு "BBC தமிழோசை" செயற்பட்டு வருகிறது. இனவெறியாளர்களினாலும், கூலிப்படைகளினாலும் செய்யப்பட்ட அப்பாவித் தமிழ்மக்கள் மீதான படுகொலைகளின் செய்திகளை மறைத்தும், இனந்தெரியாதோரால் செய்யப்பட்டதாகவும் திரித்துக் கூறுவதிலும் மிகத் தீவிரமாக செயற்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது. இவ்வூடக விபச்சாரிகளின் செயற்பாடுகளின் இன்னொரு கட்டமாக புலம்பெயர்நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள், தங்கள் தாயகத்தில் அன்றாடம் நடைபெற்றுவரும் அவலங்களை உலகிற்கு எடுத்துக்கூற நடாத்திவரும் பற்பல போராட்டங்களின் செய்திகளை முற்றுமுழுத…
-
- 29 replies
- 6.3k views
-
-
இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தொடர்பான பேச்சுக்களில் பங்கேற்பதற்காக நோர்வே தலைநகர் ஓஸ்லோவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சென்றடைந்தனர். ஓஸ்லோவில் விடுதலைப் புலிகளுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் நேற்று திங்கட்கிழமை (05.06.06) நோர்வே நேரம் இரவு 10.30 மணிக்கு ஒஸ்லோ விமான நிலையத்தை வந்தடைந்தனர். பல நு}ற்றுக்கணக்கான நோர்வே வாழ் தமிழீழ மக்கள் விமான நிலையத்தில் ஒன்றுகூடி தமிழர் பிரதிநிதிகளுக்கு உற்சாக வரவேற்றபளித்தனர். ஓஸ்லோ விமான நிலையத்தில் ஒன்றுகூடிய மக்கள் தமிழீழத் தேசியக்கொடி, நோர்வே தேசியக்கொடிகளைத் தாங்கியிருந்தனர். தமிழீழ விடுதலைப்புலிகளி…
-
- 1 reply
- 1.3k views
-
-
யாழில் மீட்கப்பட்ட சடலம் அர்ச்சகருடையது: மனைவி அடையாளம் காட்டினார் யாழ். கைதடிப் பாலம் அருகே இன்று செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்ட சடலம், காணாமல் போன அர்ச்சகரின் சடலம்தான் என்று அவரது மனைவி அடையாளம் காட்டியுள்ளார். கோப்பாய்-கைதடி பகுதியில் கடந்த 26 ஆம் நாள் அர்ச்சகர் வெங்கட கிருஸ்ண சர்மா காணாமல் போனார். கோப்பாயைச் சேர்ந்த அவர் 4 குழந்தைகளின் தந்தையாவார். கைதடி பிள்ளையார் ஆலய அர்ச்சகராக இருந்து வந்தார். கடந்த மே 26 ஆம் நாள் ஆலயத்துக்குச் சென்ற அவர் வீடு திரும்பாததையடுத்து யாழ். போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரிடமும் மனித உரிமைகள் ஆணையக் குழுவினரிடமும் சர்மாவின் மனைவி முறைப்பாடு செய்தார். அர்ச்சகர் காணமல் போன பகுதி முழுமையாக சிறிலங்கா இராணுவக் கட்டு…
-
- 0 replies
- 995 views
-
-
நீர்கொழும்புச் சிறையில் தமிழ் யுவதி மரணம் அதிகாரிகள் அசமந்தம்; அதனால் பரிதாபம்! குடிவரவு, குடியகல்வு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு சிறைச்சாலை யில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இளம் தமிழ்ப் பெண் ஒருவர், ஆஸ்த்துமா நோயினால் அவ திப்பட்டு, பலபேர் பார்த்திருக்க துடிதுடித்து இறந்தார். நேற்று அதிகாலை நீர்கொழும்பு சிறைச் சாலையின் சிறைக்கூடத்திற்குள் இந்தப் பரி தாப சம்பவம் இடம் பெற்றது. வெளிநாடுகளுக்குச் செல்ல முயன்று குடிவரவு, குடியகல்வு சட்டத்தை மீறினார்க ளென்று குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப் பட்ட 35 தமிழ்ப் பெண்கள் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக் கின்றனர். இவர்களில் யாழ்ப்பாணம், உரும்பிராயைச் சேர்ந்த சுகந்தினி (வயது 26) என்ற யுவ…
-
- 3 replies
- 1.5k views
-
-
-
ஊடகங்களின் தவறான வழிநடத்தல்! இலங்கை வந்திருந்த அமெரிக்காவின் மத்திய மற்றும் மேற்காசியாவிற்கான துணைராஜாங்கச் செயலாளர் றிச்சட் பௌச்சர் சில கருத்துக்களை சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். தமிழினத்தை அச்சுறுத்தும் விதமாக பௌச்சரின் கருத்துக்கள் அமைந்திருந்தன. விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்றும், பயங்கரவாத்தை ஒழிப்பதற்கு உலகம் ஓரணியில் திரண்டு நிற்கின்றது என்றும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை பௌச்சர் எவ்வித குழப்பத்திற்கும் இடமின்றி தெளிவாக கூறியிருந்தார். பௌச்சரின் கருத்துக்கள் தமிழினத்திற்கு எதிரானதாகவும், வழமையை விட மிகவும் கடுமையானதாகவும் இருந்தன. ஆயினும் எம்மவர்களின் ஊடகங்கள் பௌச்சர் சிறிலங்கா அரசிற்கு எதிராக கூறிய சில கருத்துக்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தன. "அமெரிக்கா சிற…
-
- 2 replies
- 1.4k views
-
-
அரச புலிகளின் குழு இன்று ஒஸ்லோ பயணம் கடைசி செய்தியை சொல்லவே செல்கிறோம் என்கிறார் புலித்தேவன் சர்வதேசத்திற்கு கடைசி செய்தியை எடுத்துச் செல்வதற்காகவே தமிழீழ விடுதலைப் புலிகள் ஒஸ்லோவுக்கு செல்கின்றனர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்துடன் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியும் அப்பேச்சுக்களில் ஏற்றுக் கொண்ட உறுதிமொழிகள் எதனையும் அரசு நிறைவேற்றவில்லை. நிறைவேற்றுவதற்கான மனநிலையும் அதற்கு இல்லை. இதனை கடைசியாக சர்வதேச சமூகத்திற்கு சொல்வதற்காகவே ஒஸ்லோவுக்கு செல்கிறோம் என்றும் புலித்தேவன் மேலும் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒஸ்லோ பயணம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: …
-
- 7 replies
- 2k views
-
-
தமிழர்களின் சுயாட்சிக்கு அமெரிக்கா ஆதரவு! ஆனால் ஆயுதப் போராட்டம் தவறான வழியாம் தமிழர் தாயகத்திற்கு அமெரிக்கா தந்த முதலாவது அங்கீகாரம்! விடுதலைப் புலிகளுக்கு எதிராக அமெ ரிக்கா தடை விதித்திருக்கின்ற போதிலும், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு சுயாட்சி முறையின்கீழ் அவர்கள் வாழும் உரிமைகளை பெறுவதற்கு அமெரிக்கா மதிப்பளிப்பதோடு நின்றுவிடாமல் அங்கீகாரத்தையும் வழங்குகிறது'' என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை ராஜாங்க அமைச்சர் ரிச் சார்ட் பௌச்சர் கொழும்பில் வைத்து வலி யுறுத்திக் கூறியிருக்கிறார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அமெ ரிக்கா வரலாற்றில் முதல் முறையாக இந்தத் தடவையே தமிழர்களின் தாயகக் கோட்பாட்டைப் பகிரங்கமாக வரவேற்றும், அங்கீகரித்…
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழர் தாயக நிலப்பரப்பை மீட்க முன்னைப் போல் அங்குலம் அங்குலமாக போராடப்போவதில்லை- வடக்கு - கிழக்கில் ஒரே நேரத்தில் பெருந்தாக்குதல் நடத்தப்படும் என்று விடுதலைப் புலிகளின் கடற்படை சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் படை கட்டுமானப் பயிற்சியின் நிறைவு நிகழ்வில் கேணல் சூசை பேசியதாவது: மக்கள் படை கட்டுமானத்தின் முதலாவது பயிற்சியின் நிறைவு மூலம் ஒரு பெரியதொரு செய்தி மிக விரைவாக உலகத்துக்குச் சொல்லப் போகிறது. மக்கள் படை கட்டுமானத்தினது சூழ்நிலையையும் தற்போதைய நெருக்கடிகளையும் உணர்ந்து, "போராடினால்தான் வாழ்வு" என்ற பதத்துக்குள் பத்து நாட்களுக்கும் மேலாக மிகுந்த சிரமத்துக்கு…
-
- 1 reply
- 1.8k views
-
-
மீசாலையில் சுற்றிவளைப்பு. ஓட்டோவுக்குள் பிரசவித்த தாய். - பண்டார வன்னியன் - ஆழனெயலஇ 05 துரநெ 2006 15:53 தென்மராட்சி மீசாலைப்பகுதி இன்று காலை சிறீலங்கா இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு மிகக்கடுமையான சோதனைகள் இடம்பெற்றுள்ளன. காலை 8.00 மணிமுதல் நண்பகல்வரை இச்சோதனை நடைபெற்றது. வீடுவீடாகச் சென்ற படையினர் மாணவர்களின் அப்பியாசக்கொப்பி முதல் அனைத்துப்பொருட்களையும் சோதனையிட்டனர். கிணறுகளுள் இறங்கி தண்ணீருக்குள் கம்பிகளால் குத்திச் சோதனையிட்டனர். கிணற்றடிகளை கம்பிகளால் கிளறிப்பார்த்தனர். சேதனைகள் இடம்பெற்றபோது வீதிப்போக்குவரத்தையும் படையினர் தடைசெய்திருந்தனர். இதனால் கொடிகாமத்தில் இருந்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு ஓட்டோவில் சென்று கொண்டிருந்த கர்ப்…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையின் சமாதான பேச்சுவார்த்தையில் விடுதலைப்புலிகள் கலந்து கொள்வதை ஊக்கு விக்கும் வகையில் அவர்கள் மீதான தடையை ஜரோப்பிய நாடுகள் தளர்த்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் ஐரோப்பிய நாடு ஒன்றில் சமாதான பேச்சுவாhர்ததைகள் நடைபெறுமாயின் தமிழீழ விடுதலைப்புகள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல கூடிய வகையில் அந்த அமைப்பு மீதான தடையை தளர்த்த ஐரோப்பிய ஓன்றிய நாடுகள் கொள்கையளவில் இணங்கியுள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் சமாதான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை யை அந்த நாடுகள் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. Sankathi
-
- 3 replies
- 2.3k views
-
-
தயா இடைக்காடரின் உண்ணாவிரதத்தை தமிழர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளனவா? உண்ணாவிரதம் தொடங்கி 30 மண்த்தியாலங்கள் கடந்துவிட்டன. இன்னும் ஒருவராக ஒரு தாயாரும் உண்ணாவிரதத்தில் இறங்கியுள்ளார் நிதர்சனமும், சங்கதியும் இவற்றை வெளியிட்டுள்ளன. உதயன், புதினம், தமிழ் கனேடியன், தமிழ் நெற் ஆகியவை இதை பற்றி இன்னமும் எழுதவில்லை. இது ஏன் என்று தெரியுமா?
-
- 4 replies
- 2.5k views
-
-
அகதிகள் உயிருடன் விளையாடும் தரகர்கள் மன்னார் கடல் கடும் கொந்தளிப்பாயிருப்பதால் கடற்றொழிலாளர்களே அதில் இறங்காத நிலையில், அகதிகளின் உயிர்களுடன் பணத்தாசை பிடித்த தரகர்கள் விளையாடுவதாக மன்னாரில் அரச அதிகாரிகள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக மன்னார் மற்றும் தலை மன்னார் கடல் கடும் கொந்தளிப்பாயிருப்பதால் தொழிலுக்காக கடற்றொழிலாளர்கள் கூட கடலில் இறங்குவதில்லை. ஆனால், கடந்த இரு நாட்களாக 150க்கும் மேற்பட்ட அகதிகள் கடற் கொந்தளிப்பின் மத்தியில் தமிழகம் நோக்கிப் பயணம் செய்துள்ளதாகவும் இவர்கள் ஒழுங்காகப் போய்ச் சேர்ந்தார்களா என்பது குறித்து எதுவும் தெரியவில்லையெனவும் அதிகாரிகள் கூறுகின்றனர். திருகோணமலையிலிருந்து வந்து பேசாலை சென். மேரிஸ் பாடசாலையி…
-
- 0 replies
- 1.1k views
-
-
வன்முறையைக் கைவிட்டுப் பேச்சுக்குத் திரும்ப புலிகளுக்கு வற்புறுத்து ஆயுதக் குழுக்களின் பயங்கரவாதத்தை இலங்கை விரைந்து தடுக்க வேண்டும்! இணைத் தலைமைகள் கூட்டறிக்கை * விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாதம், வன்முறை ஆகியவற்றைக் கைவிட்டு உடன் அமைதிப் பேச்சுகளுக்கு மீளத் திரும்ப வேண்டும். * இலங்கை அரசு தனது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வன்முறை மற்றும் பயங்கரவாதச் செயல்களில் ஆயுதக் குழுக்கள் ஈடுபடுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பகிரங்கமான கூட்டறிக்கை மூலம் கோரியிருக்கின்றன இலங்கைக்கு உதவும் நாடுகளின் இணைத் தலைமைகள். கருணா மற்றும் ஈ.பி.டி.பியின் வன்முறை மூலங்களின் தாக்குதல்களைத் தடுக்க இலங்கை அரசு தவறி விட்டதாகவும் இணைத் தலைமை கள் குற்றம் சு…
-
- 6 replies
- 2.3k views
-
-
மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள சிறையிலிருந்து எட்டு கைதிகள் இன்று காலை தப்பியோடியுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கழமை காலை 7.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தப்பியோடிய கைதிகளின் விவரங்கள் முழுமையாக இதுவரை தெரியவில்லை. அவர்களில் ஏழு பேர் சிறைச்சாலை பாதுகாவலர்களை ஆயுதங்களால் மிரட்டி விட்டே தப்பிச்சென்றுள்ளனர் என்று தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை வட்டாரங்கள்இ தப்பியோடியவர்களை தேடி மட்டக்களப்பு சந்துஇ பொந்துகள் எங்கும் வலை விரித்து தேடிவருகின்றன. இவர்கள் அனைவரும் ஆயுதங்களுடன் கைதானவர்கள் என்றும் அவர்களில் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என…
-
- 2 replies
- 1.6k views
-
-
தடைகளைச் சந்திக்காத விடுதலை இயக்கங்களை வரலாற்றில் காணமுடியாது!- கனடா நக்கீரன் http://www.tamilnaatham.com/articles/2006_...an/20060604.htm
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கை வன்முறைகள் குறித்து விசாரணை நடத்த கண்காணிப்புக் குழு: சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை வன்முறைகள் குறித்து விசாரணை நடத்த கண்காணிப்புக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபையின் அவுஸ்திரேலிய இணைப்பாளர் ரொபின் கில் பற்றிக் அம்மையார் வலியுறுத்தியுள்ளார். அவுஸ்திரேலிய விக்டோரிய ஈழத்தமிழ்ச் சங்கமும் அதன் சக தமிழ் அமைப்புக்களும் இணைந்து நடத்திய கண்டனப் பொதுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை மாலை மெல்பேணில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு ரொபின் கில் பற்றிக் அம்மையார் பேசியதாவது: சிறிலங்காவில் பரவலாக நடைபெற்றும் வன்முறை, தமிழ் நாடளுமன்ற உறுப்பினர்கள் மீதான தாக்குதல்கள், அதிகரித்துள்ள காணாமல் போதல் சம்பவங்கள், தேக்கமடைந்துள்ள ப…
-
- 0 replies
- 979 views
-
-
கருணா கும்பலை தடை செய்கிறது -ஐரோப்பிய ஒன்றியம் மேலதிக விபரங்களுக்கு http://sankathi.com/content/view/3302/26/
-
- 0 replies
- 1.1k views
-
-
[/img[url=http://imageshack.us][/url)) 'விடுதலைப் புலிகளுக்கு எதிராக அமெரிக்கா தடை விதித்திருக் கின்ற போதிலும், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு சுயாட்சி முறையின்கீழ் அவர்கள் வாழும் உரிமை களை பெறுவதற்கு அமெரிக்கா மதிப்பளிப்பதோடு நின்றுவிடாமல் அங்கீகாரத்தையும் வழங்கு கிறது" என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை ராஜாங்க அமைச்சர் ரிச்சார்ட் பௌச்சர் கொழும்பில் வைத்து வலியுறுத்திக் கூறியிருக்கிறார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அமெரிக்கா வரலாற்றில் முதல் முறையாக இந்தத் தடவையே தமிழர்களின் தாயகக் கோட்பாட்டைப் பகிரங்கமாக வரவேற்றும், அங்கீகரித்தும் ரிச்சர்ட் பௌச்சர் மூலம் அமெரிக்க அரசு சொல்லவும் வைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத…
-
- 0 replies
- 1k views
-
-
கார்,பஸ், லொறி எல்லா வாகனங்களுக்கும் புகைதள்ளி வாகனத்தின் கீழ் இருக்கும்போது அது ஏன் உழவு இயந்திரத்திற்கு மாத்திரம் முன்னுக்கு நீட்டி மேல் நோக்கி வடிவமைத்துள்ளார்கள்? தயவு செய்து சொல்லுங்களேன் :roll:
-
- 2 replies
- 1.4k views
-