Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசாங்கம் மருத்துவ சங்கத்தின் அறிவுரையை உதாசீனம் செய்வது ஆபத்தானது எனவே மருத்துவ சங்கத்தின் ஆலோசனைக்கு மதிப்பளிக்குமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தெடர்பில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்ககப்பட்டுள்ளதாவது, தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழ்நிலை இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை. உலகளாவிய ரீதியில் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இலங்கையிலும் கொரோனா நோய்த் தொற்றாளர்கள் இனம்காணப்பட்ட வண்ணம் உள்ளனர். இன்னும் பலர் பரிசோதனை செய்யப்படாத நிலையில் மறைந்தும் உள்ளதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனை முழுவதுமாக ஆராய்ந்து உணர்த்தும் கடமை முழுக்க முழுக்க மருத்து…

    • 1 reply
    • 325 views
  2. 26 Nov, 2025 | 03:51 PM யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடற்போக்குவாரத்து பாதிக்கப்பட்டுள்ளமையால் நெடுந்தீவு மக்களை மிக அவதானமாக இருக்குமாறு நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது. சீரற்ற காலநிலையால் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து கடல் வழியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக நோயளர்களை இடமாற்றீடு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. எனவே நெடுந்தீவு மக்கள் அனைவரையும் விபத்துக்கள், பாம்பு கடி உள்ளிட்ட தவிர்க்க கூடிய நோய் நிலைகளை குறைத்து வீடுகளில் அவதானமாக இருக்குமாறு நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேவேளை கடற் போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில் நெடுந்தீவு வைத்திய அதிகாரியினால் நோயாளிகளை யாழ்ப்பாணத்திற்கு மே…

  3. வடக்கில் உள்ள மேலதிகமான இராணுவ முகாம்களை அகற்றுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. எனினும் வடக்கில் இருந்து இராணுவத்தினரை முற்றாக வெளியேற்ற வேண்டும் என்ற யோசனைக்கு தமது கட்சி இணங்காது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார். வடக்கில் மக்களின் சொத்துக்களை இராணுவம் தொடர்ந்தும் பயன்படுத்தி வருவதாகவும் அது அவசிமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் இராணுவம் தொடர்ந்தும் விடுதிகளையும் வேறு வர்த்தகங்களிலும் ஈடுபட்டு வருகிறது. தேசிய பாதுகாப்புக்கு தேவையான முகாம்களை மாத்திரம் வைத்து கொண்டு ஏனைய காணிகளை பொதுமக்களிடம் மீள கையளிக்க வேண்டும் எனவும் அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார். http://ww…

    • 0 replies
    • 306 views
  4. யாழ்ப்பாணம் மாநகரப் பகுதியில் உள்ள வீடொன்றில் கலாசார சீரழிவு இடம்பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று இரவு பொலிஸாரால் குறித்தவீடு சுற்றிவளைக்கப்பட்டு வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் பொலிஸாரால் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் மனோகரா தியேட்டருக்கு அண்மையாக உள்ள வீடொன்றிலேயே அண்மைக்காலமாக கலாசார சீரழிவு இடம்பெற்று வந்த நிலையில் அயலவர்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டை இன்று இரவு 7.45 மணியளவில் சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவரையும் விசாரணைக்கு உள்படுத்தினர். அத்துடன் அங்கு விடுதி நடத்தி வந்தவரிடமும் பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர். இதன்போது அங்கிர…

    • 44 replies
    • 4.1k views
  5. அனர்த்தங்களில் சிக்கி புதையுண்ட 8 சடலங்கள் துபாய் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்பு 07 Dec, 2025 | 06:44 PM நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் மண்ணுள் புதையுண்ட சடலங்களை கண்டுபிடிப்பதற்காக ஜக்கிய அரபு எமிரேட்டிஸ் இயங்கும் துபாய் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் இதுவரை ரஜத்தனவில்லவில் 8 சடலங்களை தமது மோப்ப நாய்கள் ஊடாக கண்டுபிடித்துள்ளனர். இந்த அணியினர் தமது வாகனங்கள், அம்புலன்ஸ் மற்றும் மோப்ப நாய்கள், வல்லங்கள் சகிதம் இலங்கை வந்தடைந்து, அனர்த்தத்தில் காணாமல் போனோர்களது சடலங்களை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக நாட்டு மக்கள் அவர்களது உன்னத சேவையை ஆதரவளித்து, சமூக ஊடகங்களில் நன்றி தெரிவித்து வருகின்றனர். இவர்களது சகல மொழிபெயர்ப்பு, கொழும்பில் உள்ள தூதரக அ…

  6. வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அடிப்படை தேவைகளுக்கு மேலாக பாதுகாப்பே அவசியம் - ஐ.சி.ஆர்.சி. இலங்கையின் வடக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உணவு, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை மனிதாபிமானத் தேவைகளுக்கு மேலாக பாதுகாப்பே அவசரமான அவசிய தேவையாக உள்ளதாகச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ. சி. ஆர்.சி.) தெரிவித்துள்ளது. பருவ மழைக் காலம் நெருங்கி வருவதால், ஏற்படக் கூடிய மலேரியா மற்றும் நீரால் பரவும் நோய்கள் தொடர்பான சுகாதார நிலைமைகள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் ஐ. சி. ஆர். சி மேலும் கூறியுள்ளது. இலங்கையில் தனது செயற்பாடுகள் தொடர்பான கண்காணிப்பு அறிக்கையை ஐ. சி. ஆர். சி.யின் தலைமையகம் இன்று வெளியிட்டு…

  7. [size=4]By V.Priyatharshan 2012-11-06 14:10:47[/size] [size=4]இலங்கைக்கும் தென் கொரியாவின் தலைநகர் சியோலுக்குமிடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற தென் கொரியாவின் தேசிய தின நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கொழும்பிற்கும் தென் கொரியத் தலைநகர் சியோலுக்குமிடையிலான நேரடி விமான சேவையை அடுத்த மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்படும். கடந்த 28வருடங்களுக்கு முன் கொழும்பிற்கும் சியோலிற்கும் இடையிலான நேரடி விமான சேவை இடம்பெற்றது. எனினும் சில காரணங்களினால் 1984ஆம் ஆண்டுடன் இந்த விமான சேவை இடைநிறுத்தப்பட்டது. …

  8. மயானத்தில் தீவைத்து தற்கொலை; இளம் குடும்பஸ்தரின் விபரீத முடிவு! மட்டக்களப்பு – கல்குடா பொலிஸ் பிரிவின் பேத்தாழையில் மயானத்தில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்று (01) இடம்பெற்றுள்ளது. பேத்தாழையயைச் சேர்ந்த ச.புஸ்பகுமார் வயது (-22) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர். கடந்த திங்கள் கிழமையன்று சமூர்த்தி பணத்தினை பெற்று மனைவியிடம் வழங்கிவிட்டு தானும் அதில் ஒரு தொகையினை எடுத்துக்கொண்டு வேலைக்கு சென்றுவருவதாக கூறி வீட்டை விட்டு வெளியேறி சென்றதாக இறந்தவரின் மனைவி தெரிவித்தார். குறித்த நபர் குடும்பத்தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறுவதாகவும் பின்னர் மனைவியின் பொலிஸ் முறைப்பாட்டின்…

  9. 18 Dec, 2025 | 02:29 PM கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று (18) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவதுருகொட முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகளுக்கு சட்ட மாஅதிபரால் வழங்கப்பட்டன. அதில் முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதிபதி, இவ்வழக்கை மீண்டும் பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு உத்தரவிட்டார். ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதாகக் கூறி, இந்தியாவின் க்ரி…

  10. http://img264.imageshack.us/my.php?image=vannimakkalpl1.jpg நன்றி : தினக்குரல்

  11. மகிந்த சிந்தனை : சில குறிப்புகள் - யமுனா ராஜேந்திரன் 11 நவம்பர் 2012 பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரும் இன்னாள் ‘மல்ட்டி மில்லியருமான’ டோனி பிளேரை கால்சராய் அணிந்த மார்கரட் தாட்சர் எனச் சொல்வது உண்டு. தொழிற்கட்சியை ‘அரைவாசி கன்ர்வேடிவ்’ கட்சியாக மாற்றியதால்தான் டோனி பிளேரை அவ்வாறு குறிப்பிடுகிறார்கள். அது எப்படி? தொழிற்கட்சியில் தொழற்சங்க இயக்கத்தின் செல்வாக்கை அவர் இல்லாது செய்தார். கன்சர்வேடிவ் கட்சியின் நிறவாத இனவாத குடியேற்றக் கொள்கையினை அவர் ஏற்றார். கன்சர்வேடிவ் கட்சியினை விடவும் மோசமான ஏகாதிபத்திய வெளிநாட்டுக் கொள்கையை அவர் ஏற்றார். தொழிற்கட்சியை அரைவாசி கன்சர்வேடிவ் கட்சி ஆக்கியதின் மூலம் கன்சர்வேடிவ் கட்சியினை அவர் கலகலக்க வைத்தார். பழமைவாதிகளின் ஆ…

  12. கிளிநொச்சி – சுண்டிக்குளம் பிரதேசத்திலுள்ள காணி ஒன்றில் பெருமளவு ஆயுதங்கள் காணப்படுவதாக வெளியான தகவலை அடுத்து பொலிஸாரும், இராணுவத்தினரும் அங்கு குவிக்கப்பட்டு தேடுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இரகசிய பொலிஸாரிடம் இருந்து நேற்று இரவு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து 10 இராணுவச் சிப்பாய்கள், 40 பொலிஸார் உட்பட இரகசிய பொலிஸ் அதிகாரிகள் சிலரும் இன்றுகாலை அங்கு குவிக்கப்பட்டனர். மக்கள் பயன்பாடு அற்ற அந்தக் காணியில் பெருமளவு ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த காணியைச் சுற்றி பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று மாலை வேளையில் குறித்த காணியில் சந்தேகத்திற்கிடமான பகுதிகளில் இயந்திரம் மூலம் தோண…

    • 2 replies
    • 456 views
  13. சொத்து சேர்த்தது எப்படி? 6 அமைச்சர்களிடம் அதிரடி விசாரணை! ⚖️ adminDecember 28, 2025 தற்போதைய அரசாங்கத்தின் 5 அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ஒரு பிரதி அமைச்சர் உட்பட 6 பேருக்கு எதிராக, அறிவிக்கப்படாத சொத்துக்கள் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 🔍 விசாரணைக்குள்ளாகும் அமைச்சர்கள்: பிமல் ரத்நாயக்க வசந்த சமரசிங்க குமார ஜெயக்கொடி சுனில் ஹந்துன்னெத்தி நளிந்த ஜெயதிஸ்ஸ சுனில் வட்டகல (பிரதி அமைச்சர்) ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் அதிகாரத்தின் தலைவர் ஜமுனி கமந்த துஷார செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக வாக்குமூலங்களை வழங்குவ…

  14. சிறீலங்கா இனவெறி அரசால் நயவஞ்சக செயலால் வீரச்சாவை தழுவிக்கொண்ட கேணல் பரிதி அவர்களின் வீரவணக்க நிகழ்வு மிக உணர்வுபூர்வமாக கனடா வாழ் ஈழத்தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டது . ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் அகவணக்கம் செலுத்தப்பட்டது , அதை தொடர்ந்து கனேடிய தமிழர் தேசிய அவை சார்பாக திரு தேவா ,கலைபண்பாட்டுக்கழகம் சார்பாக திரு சிவமோகன் , பெண்கள் அமைப்பு சார்பாக திருமதி நந்தினி விஜையபவன் ,இளையோர் அமைப்பு சார்பாக செல்வன் பிரியன் , மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு திருச்செல்வம் , அரசியல் ஆய்வாளர் திரு நேரு அனைவரும் கேணல் பரிதி அவர்களின் வீரச்சாவுக்கு தலைவணங்கி அஞ்சலி செலுத்திய மறுகணம் நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்ன என்பதை கருத்தில் வைத்து எத்தடை வரினும் எமது விடுதலை போராட்டத்தை…

  15. வவுனியா செல்வபுரத்தில் 6 பேர் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 15 ஆம் திகதி வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி செல்வபுரம் பகுதியில் உள்ள காட்டிற்குள் வைத்தே இந்த அறுவரும் கைது செய்ப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த காட்டிற்குள் புராதன காலத்து பொருட்கள் இருப்பதாகவும் அதனை தோண்டும் நடவடிக்கையில் குறித்த அறுவரும் இருந்துள்ளனர். இதன் போது குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் அவர்களைக் கைது செய்துள்ளனர். இதில் 3 பேர் வவுனியாவைச் சேர்ந்தவர்களும், மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவரும், பதுளையைச் சேர்ந்த ஒருவரும் காதிர்காமத்தைச் சேர்ந்த ஒருவமே கைது செய்யப்பட்டுள…

  16. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மோதல் ; மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவத்தில் பத்து மாணவர்களும் ஒரு ஊழியருமே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேராதனைப் பல்கலைக்கழக பகுதியில் பதற்றநிலை நிலவுவதாகவும் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/8645

  17. தமிழக கல்லூரி மாணவர்களிடையே பிரபாகரன் ஒரு மாவீரனே: குமுதம் ரிப்போர்ட்டர் கருத்துக்கணிப்பு [புதன்கிழமை, 12 நவம்பர் 2008, 08:36 பி.ப ஈழம்] [ப.தயாளினி] தமிழக கல்லூரி மாணவர்களிடையே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு மாவீரனாகவே பார்க்கப்படுகின்றார் என்பது உண்மை என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் குமுதம் ரிப்போர்ட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் குமுதம் குழுமத்தின் வெளியிடான குமுதம் ரிப்போர்டரில் வெளிவந்த கருத்துக்கணிப்பு விவரம்: 1. விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவது சரியா? தவறா? சரி - 53.1% (1000 பேர்) தவறு - 46.9% (833 பேர்) 2. ராஜீவ் காந்தி கொலையை மன்னிக்கலாமா? கூடாதா? மன்னிக்கலாம் - 35.46%…

    • 15 replies
    • 2.3k views
  18. மருத்துவபீட மாணவர் போராட்டம் உறுதிமொழியால் கைவிடப்பட்டது கைது செய்யப்பட்ட மருத்துவபீட மாணவர் இன்று விடுவிக்கப்படவுள்ளதாகவும், அதனால் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டாம் எனவும் மருத்துவ பீட பீடாதிபதி உறுதியளித்ததைத் தொடர்ந்து மருத்துவ பீட மாணவர்களின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த முதலாம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த மாணவர்களை விடுவிக்குமாறு கோரி யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் நேற்றுக் காலை கவனவீர்ப்புப் போராட்ட மொன்றை மருத்துவபீட வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த நேரத்தில் சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவ பீட பீடாதிபதி வைத்தியர் பாலகுமார், கைது செய்யப்பட்ட ம…

    • 2 replies
    • 459 views
  19. கே.கே.எஸ் இல் மீள்குடியேற்றம் வீடுகளுக்கு அடிக்கல் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ள மக்களுக்கு வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த அடிக்கல் இன்று திங்கட்கிழமை யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவினால் நாட்டப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் காணிகள் அற்ற மக்கள் காங்கேசன் துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் மீள்குடியேற்றப்பட்டனர். இவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட மக்களில் முதற்கட்டமாக 100 பேருக்கு வீடுகள் நிர்மாணித்துக் கொடுக…

  20. மூளையில் இரத்தக்கசிவு - வீடு திரும்பி 5 நாட்களின் பின் உயிரிழந்த 5 வயதுச் சிறுவன் மட்டக்களப்பில் விபத்து இடம்பெற்று 5 நாட்களின் பின்னர், 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு – கல்லடியில் கடந்த மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில், கல்லடியை சேர்ந்த ஒருவரும் அவரின் மகனும் காயமடைந்துள்ளனர். இவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு மறுதினமே வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, சிறுவன் மீண்டும் சுகயீனமுற்ற நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், CT Scan எடுப்பதற்காக அம்பாறை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு சிறுவன் உயிரிழந்துள…

  21. மலேசியஅரசு எங்களுக்காக வழங்கிய 1,000,000.00 அமெரிக்க டாலரை தமிழர் பேரவை மலேசியாஅமைப்பு என்ன செய்தது: அனந்தி சசிதரன்:- இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் உலகின் பல்வேறு நாடுகளிலும் பல அமைப்புக்கள் பெருந்தொகை நிதியைத் திரட்டி வந்துள்ளன. அவ்வகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு மலேசியாவில்இ தமிழர் பேரவை மலேசியா என்ற அமைப்பு பெருந்தொகைப் பணத்தை (1,000,000.00) மலேசிய அரசிடமிருந்து பெற்றிருக்கிறது. இந்த பணத்தொகையானது உண்மையில் எமது மக்களைச் சென்றடையுமானால் நிச்சயம் இன்று இங்குள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு கையேந்தும் நிலையோஇ வறுமையின் உச்சத்தில் தற்கொலைகளுக்கு தூண்டப்படும் துர்ப்பாக்கிய நிலையோ ஏற்பட்டிருக்குமா …

  22. ஹசன் அலி, பைசல் காசிம் ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றம்: - [Friday, 2012-12-21 08:55:34] நிந்தவூர் பிரதேச சபையின் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மூவரின் பகிஷ்கரிப்புக்கு மத்தியில் எதிர்க்கட்சி உறுப்பினரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேவேளை நிந்தவூர் பிரதேச சபையின் நேற்றைய அமர்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிந்தவூரைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான ஹசன் அலி மற்றும் பைசால் காசிம் ஆகிய இருவருக்கும் எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டிலுள்ள நிந்தவூர் பிரதேச சபையின் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நேற்று வியாழக்கிழமை அத…

  23. போரா அல்லது போர் நிறுத்தமா? கலாநிதி குமார் ரூபசிங்க வன்னிக் களமுனையில் இரு தரப்பினருக்கும் இடையிலான போர் இரக்கமற்ற வகையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அத்துடன் பரஸ்பரம் இரு தரப்பிலும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. அண்மைக் காலமாக இடம்பெற்ற மோதல்கள் அனைத்தும் பலத்த மழைக்கு மத்தியிலேயே இடம்பெற்று வருகின்றன. அரசாங்கம் கிளிநொச்சியில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு விருப்பம் கொண்டுள்ளது. அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் படையினரால் கைப்பற்றப்பட்டு விட்டது என்ற செய்தியினையும் உலகத்துக்கு அறிவிக்க அரசாங்கம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. இதேவேளை, கிளிநொச்சி பிரதேசமானது ஒருபோதும் தங்களிடமிருந்து வீழ்ந்து விடாது என தமிழீழ விடுதல…

    • 0 replies
    • 1.7k views
  24. மன்னார்- கட்டுக்கரை நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன், வடக்கு மீன்பிடி அமைச்சால் அமைத்துக்கொடுக்கப்பட்ட நன்னீர் மீன் சந்தையை வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாணப் பணிப்பாளர் ஜெ.ஜெ.சி.பெலிசியன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பார்வையிட்டனர். அவர்கள் அங்கு விற்பனை செய்யப்பட்ட மீன்கள் மற்றும் நன்னீர் இறால் போன்றவற்றை பார்வையிட்டதோடு அங்குள்ள மீனவர்களுடனும் கலந்துரையாடினர். அக் கலந்துரையாடலில் குறித்த நன்னீர் இறால் தற்போது மிகுந்த தரமான வருமானத்தை தமக்கு தருவதாகவும், இவ்வகை இறால்கள் சாதாரணமாக இரண்டு இறால்கள் ஒரு கிலோ எடை வரும். ஆகவே இவற்றை…

  25. மட்டக்களப்பில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நேயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வி. குணராஜசேகரம் அறிவித்துள்ளார். அந்த வகையில், ஜுன் 12 ஆம் திகதி தொடக்கம் ஜுன் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 20 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வைத்தியர் குறிப்பிட்டுள்ளார். டெங்குத் தொற்றுக்கு ஆளாகிய அனைவரும் சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர். இறப்புக்கள் எதுவும் சம்பவிக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.