ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143620 topics in this forum
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை பதவிகளில் இருந்து அகற்றுவதற்காகக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரா.சம்பந்தன் உடல் நலக்குறைவு காரணமாக அண்மைக் காலமாக செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் நிலையிலேயே அவரை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து விலக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காணி கையகப்படுத்தும் நடவடிக்கை நேற்றுமுன்தினம் நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்துக்கு வந்திருந்த திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவ…
-
- 25 replies
- 1.8k views
- 1 follower
-
-
தனியார் மருந்தகங்களில் மருந்துகளுக்கு தட்டுப்பாடில்லையாம் ! By DIGITAL DESK 5 20 SEP, 2022 | 09:48 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) அநேகமான வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு காணப்பட்டாலும் தனியார் மருந்தகங்களில் மருந்துகளுக்கு பெரிதாக தட்டுப்பாடு நிலவுவதில்லை. பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியவசியமான மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கு விசேட தொலைபேசி வசதியும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சந்தன கங்கந்த தெரிவித்தார். புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு விதமான நோய்களுக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும், தமது சங்கத்தின் 077-1977177 அல்லது 045-22756…
-
- 2 replies
- 205 views
- 1 follower
-
-
மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் நீர்த்தாங்கி By VISHNU 20 SEP, 2022 | 09:44 PM பாறுக் ஷிஹான் யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தத்தினால் முற்றாக பாதிக்கப்பட்ட நீர்த்தாங்கியுடன் இணைந்த கட்டட சிதைவுகள் அப்பகுதி பொதுமக்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை ஐஸ் வாடி கடற்கரை பகுதியில் உள்ள நீர்தாங்கி மற்றும் கட்டட சிதைவுகள் இவ்வாறு இடிந்து விழும் நிலையில் உள்ளதாக அப்பகுதி வாழ் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் மருதமுனை நற்பிட்டிமுனை கல்முனை சாய்ந்தமருது பகுதி மீனவர்களுக்கு தேவையா…
-
- 3 replies
- 463 views
- 1 follower
-
-
எதிர்காலத்தில் ரயில் தடம் புரள்வுகள் அதிகரிக்கும் : காரணத்தை கூறுகிறது ரயில் நிலைய அதிபர் சங்கம் By T YUWARAJ 20 SEP, 2022 | 10:01 PM (எம்.மனோசித்ரா) ரயில்களை முறையாக பராமறிப்பதற்கு தேவையான உதிரிப்பாகங்களுக்கு நிலவும் கடுமையான தட்டுப்பாடு காரணமாக பெருமளவான ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இவை தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் ரயில் தடம் புரள்வுகள் அதிகரிக்கும் என்று ரயில் நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்படும் ரயில்களில…
-
- 1 reply
- 232 views
- 1 follower
-
-
போதைப்பொருள் பாவனையும் அது தொடர்பான சமுதாய சீர்கேடுகளும் இலங்கையின் ஏனைய பிரதேசங்களைப் போன்று வடமாகாணத்திலும் துரிதமாகப் பரவி வருவது அண்மைய நாட்களில் மிக வேதனையுடன் அவதானிக்கப்படுகிறது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், போதைப்பொருள் பாவனை பாடசாலைகளினுள் மாத்திரமன்றி, வைத்தியசாலைகள் வளாகங்ககளினுள்ளும் உள்நுழைய தொடங்கி உள்ளது. காலத்தில் தனிமனித ஒழுக்கத்திலும் நற்பண்புகளிலும் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு முன்னுதாரணமாய்த் திகழ்ந்த வடபிரதேசம் இன்று போ…
-
- 2 replies
- 363 views
-
-
யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் வைத்து எட்டு தமிழக மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளதுடன் , அவர்களின் படகினையும் மீட்டுள்ளனர். ஒரு படகில் 8 தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி காரைநகர் கடற்பரப்பினுள் நுழைத்து மீன் பிடியில் ஈடுபட்டிருந்த வேளை , அப்பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 08 மீனவர்களையும் அவர்களின் படகினையும் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்.மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளனர். யாழில் 8 தமிழக மீனவர்கள் கைது | Virakesari.lk
-
- 2 replies
- 532 views
-
-
By T. SARANYA 20 SEP, 2022 | 05:02 PM தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் 12 பேரை இன்று செவ்வாய்க்கிழமை காலை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர். தனுஷ்கோடி அடுத்துள்ள இரண்டாம் மணல் திட்டில் குழந்தைகளுடன் இலங்கை தமிழர்கள் உணவின்றி தவித்து வருவதாக மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பலில் இந்திய கடலோர காவல்படை வீரர்கள் விரைந்து சென்று மணல் திட்டில் தஞ்சமடைந்திரு…
-
- 0 replies
- 263 views
-
-
யுக்ரேனின் லீயம் நகரை மீண்டும் தன்வசமாக்கியுள்ளது அந்நாட்டு ராணுவம். அங்கு ரஷ்ய ராணுவம் ஆக்கிரமித்திருந்தபோது பதிவான பல வகை கொடுமைகள் குறித்த குற்றச்சாட்டுகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அதில் குறிப்பாக, இலங்கையர்கள் குழுவொன்று மாதக்கணக்கில் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த மக்களின் கதை இங்கே. நாங்கள் இங்கிருந்து உயிரோடு வெளியேறுவோம் என்றே நினைக்கவில்லை என்கிறார் திலூஜன் பத்தினஜகன். கடந்த மே மாதம் ரஷ்ய ராணுவத்திடம் சிக்கிய ஏழு பேரில் இவரும் ஒருவர். ரஷ்யா, யுக்ரேன் இடையே மோதல் தீவிரம் அடைந்தபோது, யுக்ரேனின் வடகிழக்கில் உள்ள குப்யான்ஸ்க் நகரிலிருந்து 120 கி.மீ தூரத்தில் உள்ள கார்கிவ் நகரம் பாதுகாப்பாக இருக்கலாம் என்…
-
- 35 replies
- 2.2k views
-
-
புலம்பெயர் இலங்கையர்களை... சந்தித்தார், ரணில். பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகளில் இணைந்து கொள்ளுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1300128
-
- 14 replies
- 1.3k views
-
-
சார்ள்ஸ் மன்னரை... சந்தித்தார், ஜனாதிபதி ரணில்! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கும் இடையில் சிநேகபூர்வ உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவிற்குச் சென்றிருந்தபோதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மூன்றாம் சார்லஸ் மன்னரை சந்தித்தார். இந்நிகழ்வில் சிரேஷ்ட பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார். https://athavannews.com/2022/1300120
-
- 10 replies
- 814 views
-
-
தேசியத் தலைவர்... பிரபாகரனின், வீட்டு காணியில்... சிவாஜிலிங்கம் சிரமதானம்! தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் வீடு அமைந்திருந்த காணியினை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் ஊர் மக்கள் இணைந்து சிரமதானம் மூலம் துப்பரவு பணிகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டுக் காணிக்கு வல்வெட்டித்துறை நகர சபையினால் சிவப்பு எச்சரிக்கை ஒட்டப்பட்டுள்ளது. காணியில் இருந்த வீடு முற்றாக அடித்து அழிக்கப்பட்ட நிலையில் காணி பராமரிப்பின்றி கைவிடப் பட்டுள்ளமையால் அப்பகுதியில் பற்றைகள் வளர்ந்துள்ளன. பற்றைகளினால் டெங்கு நுளம்பு…
-
- 0 replies
- 197 views
-
-
பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் சீனா செயற்படவில்லை- பாலித கோஹன By RAJEEBAN 20 SEP, 2022 | 12:37 PM பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் சீனா செயற்படவில்லை என தெரிவித்துள்ள சீனாவிற்கான இலங்கை தூதுவர் பாலித கோஹன இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் கப்பல்களை கையாள்வதற்கு விசேட கொள்கை அவசியமில்லை என தெரிவித்துள்ளார் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிநாட்டு கப்பல்களை கையாள்வதில் புதிய அணுகுமுறை ஒருங்கிணைப்பு அவசியம் என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் தெரிவித்து வரும் நிலையிலேயே சீனாவிற்கான தூதுவர் இதனை தெரிவித்துள்ளார் டெய்லி மிரரிற்கு வழங்கியுள்ள…
-
- 1 reply
- 318 views
- 1 follower
-
-
இந்தியா எங்கள் சகோதரன் சகோதரி - சீனா எங்களின் நெருங்கிய நண்பன் என மகிந்த தெரிவிப்பார் - மிலிந்த மொராகொட By RAJEEBAN 20 SEP, 2022 | 12:41 PM முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு சகோதரர்களிற்கு இடையிலான உறவை போன்றது என தெரிவிப்பார் என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார். சீனா இலங்கையின் நெருங்கிய நண்பன் ஆனால் இந்தியா எங்களின் சகோதரன் சகோதரி போன்றது என மகிந்த ராஜபக்ச தெரிவிப்பார் என இந்தியாவிற்கான தூதுவர் தெரிவித்துள்ளார். சீனா இலங்கையின் மிகமிக நெருங்கிய நண்பன் ஆனால் இந்தியா எங்கள் சகோதரன் சகோதரி என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச எப்போதும் தெரிவிப…
-
- 5 replies
- 386 views
- 1 follower
-
-
திருமணம் செய்வதாக இலங்கை பெண்களை ஏமாற்றி நிதிமோசடி செய்த நைஜீரிய ஆசாமி கைது 20 SEP, 2022 | 12:28 PM போலி அடையாளங்களை காண்பித்து இலங்கைப் பெண்களை திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்து நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் நைஜீரிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த குறித்த நைஜீரியப் பிரஜை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், குறித்த சந்தேகநபர் சமூக ஊடகங்கள் ஊடாக ஐரோப்பாவில் வசிக்கும் வைத்தியர்கள், பொறியியலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் போன்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளி…
-
- 2 replies
- 322 views
- 1 follower
-
-
மத ஸ்தலங்களுக்காக நாட்டில் பிரத்தியேகமான மின்னுற்பத்தி நிலையங்கள் இல்லை - காஞ்சன விஜேசேகர By T. SARANYA 20 SEP, 2022 | 02:14 PM (இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்) விகாரைகள் மற்றும் மத ஸ்தலங்களுக்கு மின்சாரத்தை விநியோகிக்க நாட்டில் பிரத்தியேகமான மின்னுற்பத்தி நிலையங்கள் ஏதும் கிடையாது. மத தலங்கள் தமது மாதாந்த மின்கட்டணத்தை முகாமைத்துவம் செய்துக்கொள்ள வேண்டும். மத தலங்களுக்கு மின்கட்டணத்தின் ஊடாக நிவாரணம் வழங்கும் தீர்மானத்தை எமது அமைச்சால் எடுக்க முடியாது. நிதியமைச்சு நிவாரணம் வழங்க தீர்மானித்தால் அதனை செயற்படுத்த தயார் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பிரதிசபாநாயகர் தலைமையில் …
-
- 0 replies
- 157 views
- 1 follower
-
-
தோட்டப்புறங்களில் இதுவரை 4258 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது - பிரசன்ன ரணதுங்க By T. SARANYA 20 SEP, 2022 | 02:05 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) தோட்டப்புறங்களில் வாழும் குடும்பங்களுக்கு இந்திய உதவி திட்டத்தின் கீழ் இதுவரை 4,258 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு முடிவடைந்திருக்கின்றன. இன்னும் 1,461 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன என நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (20) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ராேஹின் குமாரி விஜேரத்னவினால் கேட்கப்பட்டடிருந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர…
-
- 0 replies
- 287 views
- 1 follower
-
-
முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் கசிப்புடன் கைது By DIGITAL DESK 5 20 SEP, 2022 | 01:36 PM பொலிஸ் திணைக்களத்தின் முன்னாள் உத்தியோகஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் சேவையில் இருந்து ஓய்வுபெற்ற உத்தியோகஸ்தர் கசிப்பினை உடைமையில் வைத்திருப்பதாக யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டதுடன் , அவரிடம் இருந்து ஒரு தொகை கசிப்பும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்ட நபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/a…
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் தோட்டப்பகுதி மக்கள் - வேலுகுமார் By T. SARANYA 20 SEP, 2022 | 02:20 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) பெருந்தோட்டப் பிரதேசங்களில் நீரேந்து பகுதியில் இருந்து நீர் சுரண்டப்பட்டு நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு கொண்டு செல்லப்படுவதால் தோட்டப் பகுதி மக்களும், அங்குள்ள பாடசாலை மாணவர்களும் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சி உறுப்பினர் எம். வேலுகுமார் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (20) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இன்று…
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
திருக்கோணேஸ்வரத்தில் அத்துமீறிய செயற்பாடுகள்: ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய சம்பந்தன் வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை திருகோணேஸ்வரர் ஆலய சூழலில் இடம்பெறுகின்ற அத்துமீறிய செயற்பாடுகள் மற்றும் திருகோணமலை மாவட்ட எல்லைகளை மாற்றுவதற்கான முயற்சிகளை சுட்டிக்காட்டி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இனத்துவ நிலத் தொடர்ச்சியை துண்டிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். பல தலைமுறைகளாகவும் நூற்றாண்டுகளாகவும் தமிழர்களின் வரலாற்று ரீதியான வாழ்விடங…
-
- 1 reply
- 159 views
-
-
”சர்வதேச நாடுகள் தமிழர்களை ஏமாற்றுகின்றன” சர்வதேச நாடுகள் இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு தமிழர்களின் விடையங்களை பயன்படுத்துகின்றன என்று மிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். இதன்படி அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையை பகடக்காயாக பயன்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார். மன்னாரில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், மனித உரிமை உதவி ஆணையாளர் இலங்கை தொடர்பான பரிந்துரைகளை முன் வைத்துள்ளார். வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக தம…
-
- 0 replies
- 109 views
-
-
உணவுப் பொருட்களின், விலையேற்றம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில்... முதல் 5 இடங்களில் இலங்கை..! 2022ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள முதல் 10 நாடுகளில் முதல் ஐந்து இடங்களுக்குள் இலங்கையும் இடம்பெற்றுள்ளது 53 நாடுகளில், உணவுப் பாதுகாப்பு தொடர்பான உலக வங்கியின் அண்மைய அறிக்கையில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதேநேரம், உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில், இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது. இலங்கையில் உணவுப் பணவீக்கம் 91 சதவீதமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 செப்டெம்பர் மாதத்தில் இலங்கையில் உணவுப் பணவீக்கம் 9.9 சதவீதமாக இருந்ததுடன் கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் 90.9 சதவீதமாக பத்து மடங்கு அதிகரித்து…
-
- 0 replies
- 142 views
-
-
@பெருமாள் தியாகதீபம் திலீபனின்... நினைவேந்தலை, எழுச்சியாக... முன்னெடுக்க தீர்மானம்- வேலன் சுவாமிகள்! தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை இம்முறை எழுச்சியாக முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக வேலன் சுவாமிகள் தெரிவித்தார். தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்பாக நல்லை ஆதீனத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக இந்த நினைவேந்தலை மக்கள் எழுச்சியாக புரட்சியாக முன்னெடுக்கும் விதமாக நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தில தியாக தீபம் நினைவேந்தலினை ஒழுங்கு செய்ய 15 பேர்கொண…
-
- 0 replies
- 114 views
-
-
இலங்கை அரசாங்கம்... குற்றமிழைத்துள்ளது: ஊடகவியலாளர் படுகொலை தொடர்பான... மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு. இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டன என ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கொல்லப்பட்ட ஊடகவியலாளரின் சர்வதேச மனித உரிமைகள் பாரதூரமான மீறலுக்கு இலங்கை பொறுப்பேற்க வேண்டும் என கூறி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பாக வாழும் உரிமை கருத்துச் சுதந்திரம் மற்றும் பயனுள்ள தீர்வுக்கான உரிமை ஆகியவற்றை மீறியுள்ளதாக குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையின் மிகவும் பிரபலமான மற்றும் வெளிப்படையாகப் பேசும் ஊடகவியலாளர் ஒருவர் மீதான துணிச்சலான தாக்குதலுக்க…
-
- 0 replies
- 133 views
-
-
மாபியாக்களை... கட்டுப்படுத்துவதற்கு, எதிர்காலத்தில்... கடுமையான நடவடிக்கை – வியாழேந்திரன். மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் மாபியாக்களை கட்டுப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வர்த்தக,வாணிபத்துறை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கும் மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு வர்த்தக விவசாய கைத்தொழில் சம்மேளன அலுவலகத்தில் விவசாய துறைக்கான தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் வர்த்தக,வாணிபத்துற…
-
- 0 replies
- 164 views
-
-
வெளி நாட்டுக்கு செல்லும் பெண்களை... விபச்சாரிகளாக்கும், கடத்தல்காரர்கள் – அரசாங்கம் அதிரடி நடவடிக்கை. ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்களாக பெண்களை அழைத்துச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களைக் கண்டறிய பதினெட்டு நாடுகளுக்கு விசேட புலனாய்வுக் குழுக்களை அனுப்ப ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் உள்ள தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி புலனாய்வு சேவை, குடிவரவுத் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகார…
-
- 0 replies
- 128 views
-