ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
விடுதலை புலிகள் அமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் கட்டளை தளபதி ராம் விடுதலை! Posted on July 21, 2022 by தென்னவள் 29 0 விடுதலை புலிகள் அமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் கட்டளை தளபதி 6 வருட சிறை தண்டனைக்கு பின்னர் நேற்று(20) விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்றையதினம் 6 வருட சிறை தண்டனை நிறைவு பெற்ற நிலையில் மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்டிருந்த முன்னாள் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி…
-
- 3 replies
- 957 views
-
-
ஐ.நா. அமைதிப்படை... நாட்டுக்குள், நுழையும் ஆபத்து- விமல் எச்சரிக்கை! நாட்டில் எதிர்க்காலத்தில் வன்முறைகள் வெடிக்குமானால், ஐ.நா.வின் அமைதிப்படை இலங்கைக்குள் வருகைத் தரும் ஆபத்து உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ஸ எச்சரிக்கை விடுத்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தேர்தலில் தோல்;வியுற்று ஒன்றரை வருடங்கள் கழித்து நாடாளுமன்றுக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க, இன்று தாமரை மொட்டுக் கட்சியினரின் ஆதரவுடன் ஜனாதிபதியாகியுள்ளார். அதாவது தேர்தலில் வெற்றிபெற்ற ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷவை வெளியேற்றி, தேர்தலில் தோல்வியடைந்த ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கி…
-
- 28 replies
- 1.4k views
-
-
சம்பந்தனுக்கு பகிரங்க அழைப்பை விடுத்த ஜனாதிபதி ஜூலை 22, 2022 புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளைக் கொஞ்சம் பொறுத்துப் பார்த்து அதன் அடிப்படையில் முடிவுகளை எடுத்து எங்களால் இயன்றதைச் செய்வோம்." என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார். தன்னுடன் இணைந்து செயற்படத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு அவர் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, "புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்…
-
- 3 replies
- 507 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏகமனதாக எடுத்த தீர்மானம் சரியானது என்பது இப்போதாவது புரிகிறதா? ஜூலை 22, 2022 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏகமனதாக எடுத்த தீர்மானம் சரியானது என்பது இப்போதாவது புரிகிறதா என எம்.ஏ சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோட்டா கோ கம போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்களான ரந்திமல் கமகே, லஹிரு, அனுரங்க உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு கைது செய்யப்பட்ட எட்டிற்கும் மேற்பட்டவர்கள் மருதானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு தடுத்து வைக…
-
- 9 replies
- 569 views
- 1 follower
-
-
நூருல் ஹுதா உமர் புதிய அமைச்சரவையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம் ஏ.ஹிஸ்புல்லா அவர்கள் உள்வாங்கப்பட்டு பலம்பொருந்திய அமைச்சுப்பதவி வழங்கப்பட வேண்டும் என அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா மத்தியகுழு அறிக்கையொன்றினூடாக புதிய ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை கேட்டுக்கொண்டுள்ளது. அவர்களது அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில் நாட்டில் உள்ள நெருக்கடிகளை தீர்ப்பதற்கு அரபு நாடுகளில் இருந்து இலங்கைக்கு பல கோடி ரூபாய் உதவி திட்டங்களை பெற்றுக் கொள்வதற்கு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநராகவும், அமைச்சராகவும் இருந்த நீண்டகால அரசியல் வரலாற்றை கொண்ட கலாநிதி எம்.எல்.ஏம் ஏ.ஹிஸ்புல்லா அவர்களை மீண்டும் தேசியப்பட்ட…
-
- 8 replies
- 617 views
-
-
உகண்டாவில்... எமது பிள்ளைகள் இருக்கின்றார்களா? வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கேள்வி. உகண்டாவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தினரின் 11 தொழிற்சாலைகளிலும் எமது பிள்ளைகள் இருக்கின்றார்களா? என்பதை உலகவாழ் உறவுகள் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சஙக தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , 13 வருடங்களாக எமது உறவுகளை தேடிக்கொண்டிருக்கின்றோம். எமது பிள்ளைகளிற்கு என்ன நடந்தது என்பதை சொல்லாத இந்த அரசினை நாங்கள்நம்பமாட்டோம். இந்த ஆட்சி மாற்றம் எங்களிற்கு பெரிதாக ஒன்றும் ச…
-
- 0 replies
- 359 views
-
-
சஜித் பிரேமதாஸ விடுத்துள்ள அறிவிப்பு! ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கத்தின் வழமையான மிருகத்தனம் மற்றும் உத்தியோகபூர்வ வன்முறையைப் பயன்படுத்தி, தற்போதைய "ராஜபக்ஸ நிழல் அரசாங்கம்" இன்று காலை காலிமுகத்திடல் அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக கோழைத்தனமான மற்றும் வன்முறைத் தாக்குதலை நடத்தியுள்ளது. அதனைப் செய்தியிட வந்த பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் அங்கவீனமான போர்வீரர்களும் அந்த மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு முகங்கொடுக்க நேரிட்டதோடு இந்த தாக்குதல் உண்மையான அர்த்தத்திலயே கொடூரமான உத்தியோகபூர்வ வன்முறையாகும். புதிய ஜனாதிபதி பதிவிக்கு வந்து ஒரு நாள் கழிவதற்குள் இந்த மனிதாபிமானமற்ற தாக…
-
- 1 reply
- 430 views
-
-
கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் 14 நாள் தங்குவதற்கு அனுமதி பட மூலாதாரம்,GETTY IMAGES கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 14 நாள்கள் தங்குவதற்கான அனுமதியை வழங்கியிருப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்திருப்பதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியின்படி, போராட்டக்காரர்களின் ஆவேசத்தைத் தொடர்ந்து சிங்கப்பூருக்குச் சென்று அங்கிருந்து தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்த ராஜபக்ஷ, தங்களிடம் தஞ்சம் கேட்கவில்லை என்றும் அவருக்கு தஞ்சம் அளிக்கப்படவில்லை என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் கடந்த வாரம் விளக்கம் அளித்தது. இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவின் பயணம் தொடர்பான…
-
- 0 replies
- 262 views
- 1 follower
-
-
சிலரின் தன்னிச்சையான செயற்பாடு விபரீதத்தை ஏற்படுத்தி உள்ளது July 21, 2022 எழுபது ஆண்டு கால அனுபவத்தை கொண்டு இருக்கின்ற ஒரு கட்சியாக நாம் இருக்கும் போது, தந்திரோபாயமற்ற பொறுப்பற்ற தன்னிச்சையான செயற்பாடுகள் விபரீதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கவலையுடன் தெரிவித்தார். சமகால நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற கூட்டம் இடம்பெற்ற போது அங்கு சென்ற டலஸ் அழகப்பெரும மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோருடன் எழுத்து மூலம் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறத…
-
- 6 replies
- 410 views
-
-
பிரதமராக பதவியேற்றார்... தினேஸ் குணவர்த்தன ! இலங்கையின் 27 ஆவது பிரதமராக தினேஸ் குணவர்த்தன, இன்று சுபநேரத்தில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார். புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், இந்த நிகழ்வு இடம்பெற்றது. பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆளும் தரப்பின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். 1883 ஆம் ஆண்டு முதல் முதலாக நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்ட தினேஸ் குணவர்த்தன, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புக்களில் பதவி வகித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1291999
-
- 8 replies
- 368 views
-
-
ஜனாதிபதி தலைமையில்... இன்று பதவியேற்கின்றது, புதிய அமைச்சரவை! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று(வெள்ளிக்கிழமை) நியமிக்கப்படவுள்ளது. அலரிமாளிகையில் இன்று காலை குறித்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் 20 முதல் 25 வரையான அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தொழில்சார் நிபுணர்களுக்கும் அமைச்சரவையில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் பதவிக்கு தினேஷ் குணவர்தனவின் பெயரை ஸ்ரீல…
-
- 2 replies
- 333 views
-
-
பொதுத் தேர்தலொன்றுக்கு... செல்லும் வரை, போராட்டங்கள் தொடரும்- ஜே.வி.பி. ராஜபக்ஷக்களின் வேலைத்திட்டத்தைக் கையில் எடுத்தே போராட்டக்காரர்களை, இராணுவ பலம் கொண்டு புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடக்க முற்படுகிறார் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். மேலும், மக்களால் நிராகரிக்கப்பட்ட நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து பொதுத் தேர்தலொன்றுக்கு செல்லும்வரை மக்கள் போராட்டம் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக பதவியேற்ற நேரத்திலிருந்தே போராட்டக்காரர்களை க…
-
- 0 replies
- 328 views
-
-
பணவீக்கம் பாரிய அதிகரிப்பு நாட்டின் மொத்த பணவீக்கம் கடந்த ஜூன் மாதத்தில் 45.3 இலிருந்து 58.9 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய நுகர்வோர் குறிகாட்டி தெரிவித்துள்ளது. பணவீக்கத்தில் இந்த அதிகரிப்பு உணவு மற்றும் உணவு அல்லாத வகைகளில் மாதாந்த அதிகரிப்புகளால் ஏற்பட்டுள்ளது. அதன்படி உணவுப் பணவீக்கம் ஜூன் 2022 இல் 58 வீதத்தில் இருந்து 75.8 ஆக அதிகரித்துள்ளது அதே நேரத்தில் உணவு அல்லாத பணவீக்கம் 2022 ஜூன் மாதத்தில் 43.6 ஆக அதிகரித்துள்ளது. (a https://www.tamilmirror.lk/செய்திகள்/பணவீக்கம்-பாரிய-அதிகரிப்பு/175-300897
-
- 0 replies
- 171 views
-
-
கோட்டா கோ கம மீது தாக்குதல் – இலங்கையின் “கறுப்பு தினம்”! July 22, 2022 காலிமுகத்திடல் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தவர்கள் மீது படையினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை தாம் வன்மையாக கண்டிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. படையினர் நேற்று இரவு காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட களத்தை ஆக்கிரமத்தமை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்க்பட்டுள்ளது. மேலும், இன்றைய தினம் இலங்கைக்கு கறுப்பு தினமாகும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி பதவியேற்று முதல் நாளிலேயே சிவில் மக்களை அடக்குவதற்காக ஆயுதப்படையை பயன்படுத்துவது நாட்டின்…
-
- 0 replies
- 81 views
-
-
புதிய ஜனாதிபதி தன்னை நிரூபிக்க அவகாசம் கொடுங்கள் தனது அபிமானிகளுக்கு, ரணில் விக்கிரமசிங்கே இலங்கை இழந்த மற்றும் கண்டுபிடித்த ஜனாதிபதி. மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஒருமுறை விக்ரமசிங்கவை இலங்கை தேர்வு செய்யத்தவறிய சிறந்த ஜனாதிபதி என்று வர்ணித்தார். ஜனாதிபதி வேட்பாளராக தனது முந்தைய இரண்டு போட்டிகளில், வெற்றி அவருடையது, ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களிலும் விக்கிரமசிங்க தனது சொந்த தவறு இல்லாமல் தோல்வியடைந்தார். 1999 இல், கருத்துக் கணிப்புகள் ஜனாதிபதித் தேர்தலில் விக்கிரமசிங்கவின் வெற்றியை முன்னறிவித்தன. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் அவரது போட்டியாளரும் அப்போதைய ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்கவை டிசம்பர் 18 அன்று, தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு மு…
-
- 1 reply
- 306 views
-
-
இலங்கையில் போராட்டம் போதும்... முடித்துக்கொள்ள வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ 33 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PMD இலங்கை ஜனாதிபதி தேர்வு நாடாளுமன்றத்தில் நடந்து முடிந்து ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து வெளியே வந்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் பத்திரிகையாளர்கள் உரையாடினர். அப்போது அவர் கூறியது என்ன? நேற்று இலங்கை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு முடிந்து ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்திலிருந்து வெளியே வந்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அங்கிருந்த செய்தியாளர்கள் சில கேள்விகள…
-
- 3 replies
- 312 views
- 1 follower
-
-
புதிய ஜனாதிபதியாக... இன்று பதவியேற்கின்றார், ரணில் விக்கிரமசிங்க புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம்(வியாழக்கிழமை) நாடாளுமன்ற வளாகத்தில் பதவியேற்கவுள்ளார். இதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்படலாம் என தெரியவருகின்றது. ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க கடமையேற்ற பின்னர், தினேஷ் குணவர்தன பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்காக நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இரகசிய வாக்கெட…
-
- 18 replies
- 978 views
-
-
புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற... எதிர் பார்த்துள்ளதாக, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு! புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சவாலான காலங்களில், பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், ஜனநாயகம் மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநிறுத்துவதற்கும், அனைத்து இலங்கையர்களுக்கும் நிலையான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு அனைத்து தரப்பினரும் தங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்குவது கட்டாயமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1291879
-
- 5 replies
- 308 views
-
-
‘கோ-ஹோம்-ரணில்’ போராட்டக்காரர்களுக்கு... புதிய இடத்தினை, ஒதுக்கி கொடுப்பதாக... ஜனாதிபதி தெரிவிப்பு. போராட்டக்காரர்கள் தமது ‘கோ-ஹோம்-ரணில்’ போராட்டத்தை, தடையின்றி நடத்துவதற்காக கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவினை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தினை தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அரசாங்கத்தையும், நாடாளுமன்றத்தையும், நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட துறைசார் குழுக்களை அமைத்து நடத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/12…
-
- 1 reply
- 223 views
-
-
( எம்.எப்.எம்.பஸீர்) ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலக வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் இடையே, ஊடக நடவடிக்கைகளுக்காக சென்ற சிரச, சக்தி டீ.வி. ஊடகவியலாளர்கள் நால்வர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (சம்பவம் நடக்கும் போது பிரதமராக இருந்தார்) வீட்டின் முன்பாக வைத்து தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டிருந்த பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொமேஷ் லியனகே மீள சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளார். பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் இதனை வெளிப்படுத்தின. ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போது கடந்த 9 ஆம் திகதி ஊடகவியலாளர்கள் 6 பேர் அவரது வீட்டின் முன்பாக ஊடக நடவடிக்கைகளிடையே தாக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து பொலிஸ்…
-
- 0 replies
- 334 views
-
-
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க: "போராட்டத்தில் ஜனநாயக விரோதமாக ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை" ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,ANANDA KUMAR படக்குறிப்பு, கங்காராமை விஹாரையில் ரணில். போராட்டத்தில் ஜனநாயக விரோதமாக செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். கொழும்பு - கங்காராமை விஹாரைக்கு நேற்றிரவு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக, வீடுகளை தீக்கிரையாக்கி, ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் ஆகியவற்றை …
-
- 5 replies
- 734 views
- 1 follower
-
-
வசந்த முதலிகே, ஜினரதன தேரர்... உள்ளிட்ட இருவருக்கு, எதிராக பிடியாணை. அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் ரத்கரவ்வே ஜினரதன தேரர் ஆகியோருக்கு எதிராக கோட்டை நீதிவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு சட்டவிரோதமான முறையில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கில் மாவட்ட நீதிமன்றில் குறித்த இருவரும் முன்னிலையாக தவறியதால் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை குறித்த இருவரும் முன்னின்று வழி நடத்தியவர்கள்…
-
- 0 replies
- 244 views
-
-
ரணிலின், வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு... வஜிர அபேவர்தன நியமனம்? ரணில் விக்கிரமசிங்கவினால் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்தன நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவி வெற்றிடமானது. இந்த ஆசனத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன நியமிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. எனினும் அந்த தகவல்களை ருவான் விஜேவர்தன நிராகரித்திருந்தார். இந்தநிலையிலேயே வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்தன நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. http…
-
- 0 replies
- 154 views
-
-
வெற்றி பெற்றார் ரணில் விக்கிரமசிங்க Digital News Team 2022-07-20T12:41:23 இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமாவையடுத்து கடந்த 14ஆம் திகதி முதல் வெற்றிடமாகிய ஜனாதிபதி பதவிக்காக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர். 1981ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் கட்டளைச் சட்டத்திற்கு அமைய, பாராளுமன்றத்தில் இன்று இதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது . இதில் 223 எம் .பிக்கள் வாக்களித்தனர். 2 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சமூகமளிக்கவில்ல…
-
- 26 replies
- 1.5k views
- 1 follower
-
-
இலங்கை ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவின் தெரிவில், தமிழ் எம்.பிக்களின் பங்களிப்பு என்ன? 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக, வரலாற்றில் முதல் தடவை நாடாளுமன்ற வாக்கெடுப்பின் ஊடாக, ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவு செய்யப்பட்டார். இலங்கை பிரஜைகளின் வாக்குகளினாலேயே, ஜனாதிபதி ஒருவரின் தெரிவு இடம்பெறுவது அரசியலமைப்பில் கூறப்பட்ட போதிலும், ஜனாதிபதி ஒருவரின் பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர், அந்தப் பதவி வெற்றிடமாகும் பட்சத்தில், ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பொறுப்பு நாடாளுமன்றம் வசமாகும். இதன்படி, இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட, இரண்டு ஜனாதிபதிகள் அவ்வாறு நாடாளுமன்ற வாக்கு…
-
- 0 replies
- 231 views
- 1 follower
-