ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுவரும் படுகொலைகள் ஜனநாயக செயற்பாட்டுக்கு பெரும் தடை என்கிறது - EPDP: http://www.globaltamilnews.net/tamil_news....=2975&cat=1 கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுவரும் படுகொலைகள் ஜனநாயக செயற்பாட்டுக்கு பெரும் தடையாகும் என ஈ.பி.டி.பி. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் அதிகரித்து வரும் படுகொலைகள் ஜனநாயகச் செயற்பாட்டுக்கு பெரும் தடையாகும். நடைபெறும் படுகொலைகளைச் செய்திகளாக அறிந்து அதிர்ச்சியும் கவலையும் அடைவதாகவும் தமது கடுமையான கண்டனங்களையும் தெரிவித்துக் கொளவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகளின் பிடியிலிருந்து கிழக்கு விடுவிக்கப்பட்ட போது மக்கள் விடுதலை பெற்ற உணர்வோடும் எதிர்கால நம்பிக்கைகளோ…
-
- 1 reply
- 690 views
-
-
போகம்பரை சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து Published on December 21, 2012-9:22 am · போகம்பரை சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை போதைப்பொருள் கடத்தல் கொலை போன்ற பாரிய குற்றங்களை புரிந்த சிங்கள கைதிகளுடன் ஒன்றாக அடைத்து வைத்திருப்பதால் தமிழ் கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாiலை அமைச்சருக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அறிவித்துள்ளார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் சிலர் விரைவில் விடுதலையாகலாம் என்ற எதிர்பார்ப்பில் அரசாங்கம் சுமத்திய குற்றச்சாட்டுகளை வலிந்து ஏற்றுக்கொண்டு குற்றங்களுக்கான தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இவர்களுடன் சிங்களவர்களும் ஒரே கூண்டில் அடைக்கப்பட்டுள்ளதா…
-
- 0 replies
- 468 views
-
-
டிசம்பர் 10ந்திகதி சர்வதேச மனிதஉரிமைகள் தினம். உலகிற் பெருகிவரும் போர் சூழலில், அது ஒரு அடையாளப்படுத்தப்பட்ட தினம் என்றளவில் மட்டுமே அதன் அர்த்தப்பாடு முடிந்து போய்விடுகிறது போல் தெரிகிறது. சிங்கள பெளத்தப் பேரினவாதத்தின் மனித உரிமை மீறல்கள் பலவும் நீரூபிக்கப்பட்ட நிலையிலும் நீர்ந்துபோய்விட்ட நிலையில், பாவப்பட்ட மக்களுக்கு இத்தகைய அமைப்புக்கள் மீதான நம்பிக்கையும் அற்றுப் போய்விடுகின்றது. மனித உரிமைகள் கடனுக்கும் இல்லை மனித உரிமைகள் கடனுக்கும் இல்லை மனித உரிமங்களின் அத்தியாயங்கள் கிழிசல்களாக தெருவோரங்களில் சிவப்புகளில் நனைந்தும் கறுப்புக்களாய் உறைந்தும் சிவப்புகளில் நனைந்தும் கறுப்புக்களாய் உறைந்தும் அவயவங்கள் து…
-
- 7 replies
- 1.4k views
-
-
கிறிஸ்மஸ் தினமான இன்று இலங்கையின் பலபாகங்களிலும் 12 மணித்தியாலங்களில் 382 விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொழும்பில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் அமிலா விஜேசிங்க மெண்டிஸ் என்ற ஊடகவியலாளர் உயிரிழந்துள்ளார். அவர் பயணம் செய்த வாகனம், மதில் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் இவர் உயிரிழந்துள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். கிறிஸ்மஸ் விருந்து ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. http://www.thinakkathir.com/?p=45836
-
- 0 replies
- 986 views
-
-
திருடப்பட்டன வெள்ளை வான் கடத்தல் ஆவணங்கள் . வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் இருந்து திருடப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டு ள்ளது. மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், இடம்பெற்ற வெள்ளைவான் கடத்தல்கள் குறித்து சாட்சியமளித்திருந்த லெப்.கொமாண்டர் கே.சி.வெலகெதரவுடன் தொடர்புடைய ஆவணங்களே காணாமற்போயுள்ளன. திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த இந்த ஆவணங்கள் மார்ச் 29ஆம் நாள் திருடப்பட்டுள்ளன. ஆட்கடத்தல்கள், கடத்தல்கள், ஆயுதக்கடத்தல்களுக்கும் அரசியல்வாதிகள் மற்றும் கடற்படை அ…
-
- 1 reply
- 394 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் நேரில் ஆராய்வதற்காக துணைவேந்தர் உள்ளிட்ட குழுவினரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்புக்கு அழைத்துள்ளார். இந்த சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 16ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து பல்கலைக்ழகத்தின் சில பீடங்கள் தற்போது வரை இயங்காதிருக்கின்றன. குறிப்பாக விஞ்ஞானப்பீடம் இதுவரை மீள ஆரம்பிக்காது கடந்த 17 நாட்களாக மூடப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு மூடப்பட்டிருக்கும் பீடங்களை மீள ஆரம்பிக்கும் நோக்கில் மேற்கொள்ளவேண்டிய வழிகள் தொடர்பில் ஆராய்வதற்கே ஜனாதிபதியிடமிருந்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பிற்காக வடமாகாண ஆளுந…
-
- 0 replies
- 255 views
-
-
சாக்கடை அரசியலை சுத்தப்படுத்துவதற்காக இளைஞர்கள் களத்தில் இறங்கவேண்டும் – ஜீவன் by : Vithushagan மலையகத்தில் குறைகூறும் அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டும். சாக்கடை அரசியலை சுத்தப்படுத்துவதற்காக இளைஞர்கள் களத்தில் இறங்கவேண்டும் – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். பூண்டுலோயா பேர்லேன்ட்ஸ் தோட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, ” கடந்த நான்கு வருடங்களாக ஆயிரம் ரூபா பற்றி மட்டுமே கதைத்தார்கள். இவ்வாறு கதைத்து ஏனைய பிரச்சினைகளை ம…
-
- 0 replies
- 262 views
-
-
20-12-2008 சனிக்கிழமை மாலை 6-00 மணிக்கு திருப்பூரில் ஈழத்தமிழர் பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. 'உணர்ச்சிக்கவிஞர்' காசிஆனந்தன், பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், துரைசாமி, ஆகியோர் பேசினார்கள்.'உணர்ச்சிக்கவிஞர்' காசிஆனந்தன், ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் குறித்தும்,தீர்வு குறித்தும் விளக்கமாக பேசினார். முக்கியமான கடைத்தெருவானஅரிசிக்கடை வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கூட்டத்திற்கு கடைசி நேரத்தில் காவல் துறை தடை விதித்தது. உடனே கூட்ட அமைப்பளர்கள் அரங்கம் ஏற்பாடு செய்துகூட்டத்தை நடத்தினார்கள். மக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். http://www.tamilseythi.com/tamilnaadu/thir...2008-12-21.html
-
- 0 replies
- 836 views
-
-
ஹனுமான் பாலம் அமைத்தால் இந்தியாவின் 30 ஆவது மாநிலமாக இலங்கை மாறிவிடும் என்று எச்சரித்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில. தூய்மையான ஹெல உறுமயவின் கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் போதே எமது நாடு இந்தியாவின் கீழ் செயற்பட வேண்டிய நிலையை தோன்றிவிட்டது. எமது நாட்டின் சுயாதீன தன்மையும் இல்லாது போய்விட்டது. எனவே தற்போது ஹனுமான் பாலம் அமைத்தால் இந்தியாவின் 30 ஆவது மாநிலமாக இலங்கை மாறிவிடும் அச்சுறுத்தலான நிலைமை தோன்றியுள்ளது. இவ்வாறு எமது நாட்டின் தேசிய பாதுகாப்பின் மீது கை வைக்காமலும் இந்தியாவினால் எமது நாட்டின் மீது முன்னெடுக்கபடும் ஆக்கிரமிப்புக்…
-
- 3 replies
- 505 views
-
-
இந்திய விமானப்படை அதிகாரிகள் குடாநாட்டுக்கு இரகசிய பயணம் திகதி: 26.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] இந்தியாவின் விமானப்படை அதிகாரிகள் இருவர் நேற்றைய தினம் யாழ். குடாநாட்டிற்கு இரகசிய பயணமொன்றை மேற்கொண்டு பலாலி விமான நிலையத்தில் படைத்துறை அதிகாரிகளுடன் இரகசிய சந்திப்பொன்றை நடாத்தினர். இதன்பின்னர் வரணி படைத்தளத்திற்குச் சென்று படை உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு கொழும்பு சென்றுள்ளனர். http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51
-
- 2 replies
- 2.5k views
-
-
By M.D.Lucias 2013-01-07 14:40:10 பிரதேச சபை உறுப்பினர்கள் பலர் உட்பட நானும் கொலை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றேன் என களனி பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன ரனவீர தெரிவித்துள்ளார். இது குறித்து தாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிவித்துள்ளதாகவும் அதற்கு ஜனாதிபதி, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் களனி பிரதேச சபை உறுப்பினரான ஹசித்த மடவலவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்பு பட்ட சந்தேக நபரை கண்டறிவதோடு இது போன்ற செயல்கள் இனி நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார். அரசியல் நோக்கத்திற்காக கொலை செய்யப்பட்ட ஹசித்த மடவல கொலை சம்பம் முதலும் இறுதியுமானதாக இருக்கவேண…
-
- 0 replies
- 422 views
-
-
விடுதலைப் புலிகளின் 200 தலைவர்கள் போரின் முடிவில் படையினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல் போயுள்ளதாக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரியான யாஸ்மீன் சூகா இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அருட்தந்தை பிரான்ஸிஸ் தமக்கு தகவல்களை வழங்கியதாக சூகா அறிக்கையில் தெரிவித்துள்ளார். எனினும், விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் 200 பேர் காணாமல்போயுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கை உண்மைக்கு புறம்பானது என இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புலிகளின் 200 தலைவர்கள் காணாமல் போயிருந்தால் யார் போர் செய்தார்கள் என சிரேஸ்ட அதிகாரியொருவர் சிங்கள ஊடகமொன்றிடம் கேள்வி எழுப்பியுள்ளார். …
-
- 0 replies
- 261 views
-
-
யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2013 இன்று ஆரம்பம் யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2013 இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகின்றது. நான்காவது தடவையாக நடைபெறும் இந்த கண்காட்சி இன்று 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத்தை ஒரு அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, இலங்கை வர்த்தக சங்கங்களின் சம்மேளனம், யாழ் வர்த்தக சம்மேளனம், யாழ் மாநகர சபை இலங்கை மகாநாடுகள் பணியகம் மற்றும் யாழ் இந்திய துணை உயர் ஸ்தானிகராலயம் ஆகியன இணைந்து இந்த கண்காட்சியினை ஏற்பாடு செய்…
-
- 2 replies
- 509 views
-
-
யாழ். மாவட்டத்தின் சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறியின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடம் நீடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 379 views
-
-
தந்தை செல்வா மற்றும் அமரர் இராசாமணிக்கம் போன்ற தலைவர்களினால் அன்று முன்வைக்கப்ட்ட கொள்கை வெறுமனே இந்த நாட்டில் மட்டுமல்லாமல் இந்த கொள்கை நியாயமான கொள்கை சர்வதேச சமூகத்தினால் நீதியான நியாயமான தீர்வு என ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும் பட்டிருப்புத் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் சி.மு.இராசமாணிக்கத்தின் நூறாவது ஜனன தின நிகழ்வு களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மணிமண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து இங்கு உரையாற்றுகையில்: "60 வருடஙக்ளுக…
-
- 0 replies
- 340 views
-
-
2009ஆம் ஆண்டு யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு பொய் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் விடயத்தை உறுதிப்படுத்துவதற்கான போதுமான சாட்சிகளைத் தேடுவதற்கு இதுவரை முடியாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுவரை முன்னாள் போராளிக்ள 105பேர் மர்மமான முறையில் இறந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால், விஷ ஊசி ஏற்றப்பட்டுத்தான் இறந்தார்கள் என்பது தொடர்பாக இ…
-
- 31 replies
- 2.9k views
-
-
| வெள்ளிக்கிழமை, 25, ஜனவரி 2013 (23:45 IST) இலங்கை தூதரகம் முன்பு முற்றுகை போராட்டம் பழ.நெடுமாறன் அறிவிப்பு இலங்கையில் நடைபெறும் கொடுஞ்செயல்களை தடுத்து நிறுத்த இந்திய அரசு இலங்கையை வலியுறுத்த வேண்டும். இலங்கையில் தொடர்ந்து நடைபெற்று வரும் போர்க்குற்றங்கள்–இனப்படுகொலையை கண்டித்து, போர்க்குற்றங்கள்–இ ப்படுகொலைக்கு எதிரான இளைஞர் அமைப்பு சார்பில் இந்த மாதம் 30–ந்தேதி (புதன்கிழமை) சென்னையில் உள்ள இல ங்கை தூதரகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று போர்க்குற்றம்–இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பின் சார்பில், சென்னையில் இன்று நடைபெற்ற பத்திரிகை யாளர் சந்திப்பில், தமிழ் ஈழ பாதுகாப்பு இயக்க தலைவர் பழ.நெடுமாறன் கூறினார். http://www.nakkheeran.in/Users/frmNews.a…
-
- 42 replies
- 2.4k views
-
-
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததும், இயற்கைத் துறைமுகத்தைக் கொண்டதுமான தமிழர் தாயகப் பிரதேசமான திருகோணமலை துறைமுக நகரத்தை அபிவிருத்தி செய்வதற்காக வடக்கிற்கான அதிவேக நெடுஞ்சாலையை திருகோணமலை வரை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இந்த நெடுஞ்சாலையானது தம்புள்ள, ஹபரண ஊடாகவும், மத்திய அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து, கிளையாக, இந்த வடக்கு அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது. இந்த நெடுஞ்சாலையானது ஹபரணை வரை சீன அரசாங்கத்தினால் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனை, திருகோணமலை வரை விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://thuliyam.com/?p=40885
-
- 0 replies
- 562 views
-
-
தலைவர் பிரபாகரனும் நடேசனும் உரையாற்றும் காணொளி எதுவும் வெளியாகவில்லை: புலிகளின் வட்டாரங்கள் மறுப்பு ஜஞாயிற்றுக்கிழமைஇ 18 சனவரி 2009இ 10:45 பி.ப ஈழம்ஸ ஜதாயக செய்தியாளர்ஸ சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் "டெய்லி மிரர்" ஆங்கில நாளேட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனும்இ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனும் உரையாற்றும் காணொளி பதிவினை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டிருப்பதாக ஒரு செய்தியை நேற்று வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் வட்டாரங்களை "புதினம்" தொடர்பு கொண்டு கேட்ட போதுஇ அப்படி ஒரு காணொளிப் பதிவு வெளியிடப்படவில்லை என்று அவர்கள் மறுத்துள்ளனர். "டெய்லி மிரர்" நாளேட்டில் நேற்று சனிக்கிழமை வெளியாகியிரு…
-
- 0 replies
- 1.9k views
-
-
யாழில் 15 வயது சிறுமி கடத்தப்பட்டார் யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமி இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களே குறித்த சிறுமியை இன்று செவ்வாய்க்கிழமை மாலை கடத்தியுள்ளனர். செம்மணி பகுதியில் வைத்தே குறித்த சிறுமி கடத்தப்பட்டுள்ளார். அருள்நேசன் ஆருனியா என்ற சிறுமியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/57946--15-.html அடிகாயங்களுடன் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு; கோப்பாயில் சம்பவம்…
-
- 1 reply
- 492 views
-
-
தீயணைப்பு வாகனம் இல்லாத கிளிநொச்சியும் மக்களின் பேரவலங்களும் - கண்திறக்குமா மாகாண சபை? கிளிநொச்சி பொதுச் சந்தை வியாபாரிகள் நிர்க்கதியான நிலையில் பல்வேறு உதவிகளையும் எதிர்பார்க்கின்றனர்:- நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஏற்பட்ட பாரிய தீ காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் முற்றாக எரிந்து கருகி சாம்பல் மேடாக காட்சியளிக்கின்றன. புடவை, அழகுசாதனம் காலணிகன் கடைகளில் 60 க்கு மேற்பட்ட கடைகளும், அனைத்து பழக்கடைகளும் முற்றாக எரிந்து அழிந்துள்ளது. ஒரு கடையில் ஏற்பட்ட தீ படிப்படியாக அனைத்து கடைகளுக்கம் பரவி கொளுந்துவிட்டு தங்கள் கண் முன்னே எரிந்துகொண்டிருப்பதனை அவதானித்த உடை உரிமையாளர்கள் செய்வதறியாது கதறி அழுத காட்ச…
-
- 0 replies
- 201 views
-
-
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் ஆரம்பமாகியது இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று சனிக்கிழமை வவுனியா- குருமன்காடு ஹோட்டல் பிறின்ஸஸ் ரோஸ் விடுதியில், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியது.இதேவேளை தேசியப்பட்டியல் நியமனத்தில் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கட்சியின் தலைவருக்கு அறிவிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்தமை தொடர்பாக அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமான குறித்த கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கட்சியின் செயலாளர் துரைராசசிங்கம், சுமந்திரன், …
-
- 12 replies
- 989 views
-
-
இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரிலிருந்து ஈழப்போர் வரை... 01. முன்முகம் தெப்பக்குள வாயிலும் பின்புறம் வைகைக் கரை மேலும் தெரிகிற தியாகராசர் கல்லூரி அது. தெப்பக்குளத்துக்கு முகம் காட்டியவாறு வகுப்பறைகளும் வைகைக் கரைக்கு மீது முதுகு காட்டியாவாறு விடுதிகளும் அதன் தனி அடையாளம். விடுதியிலிருந்த நண்பர் ஐ.ஜெயராமனின் அறையில் 1965 ஜனவரி 25 இந்தி ஆதிக்க எதிர்ப்பு ஊர்வலத்துக்கான அனைத்துக் கல்லூரி மாணவர்களின் ஆலோசிப்பு நடந்தது. அனைத்துக் கல்லூரிகளும் அவரவர் இடத்திலிருந்து புறப்பட்டு மதுரையின் மையத்தில் திலகர் திடலுக்கு வந்து சேருவது, பிறகு எல்லோரும் இணைந்து மாசி வீதிகள் வழியாய் மீண்டும் திலகர் திடலுக்கு வந்து சேரத் திட்டம். திலகர் திடல் அப்போது ஞாயிற்றுக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
பத்திரிகை விநியோதத்தர் மீதான தாக்குதலுக்கு யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி ஹத்துருசிங்கவே முழுப் பெறுப்பையும் ஏற்க வேண்டும் என யாழ் மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்தார். யாழிலிருந்து வெளியாகும் தினக்குரல் பத்திரிகையின் விநியோக பணியாளர் இன்றைய தினம் இனம் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டு யாழ் போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை இன்று காலை நேரில் சந்தித்து நலம் விசாரித்த போதே சரவணபவன் இதனை தெரிவித்தார் அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை அடக்குவதற்காக கங்கணங் கட்டிக் கொண்டு செயற்படுகிறது இதற்கு எத்தனையோ வழிகளை பின்பற்றி விட்டு தற்போது ஊழியர்களை தாக்க தொடங்கிவிட்டது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து கருத்து தெர…
-
- 9 replies
- 570 views
-
-
இலங்கைத் தீவில் மேலாதிக்கம் செலுத்திய சிங்கள மன்னர்களான துட்டகைமுனு-கஜபாகு காலம் இப்போது மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் திரும்பி விட்டது என்று சிறிலங்காவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1k views
-