ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143353 topics in this forum
-
மஹிந்த ராஜபக்ஷவை... உடனடியாக, கைது செய்ய வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்து உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கேட்டுக்கொண்டுள்ளது. அமைதியான போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் முதல் குற்றவாளி அவரே என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இதேவேளை ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவி விலகும் வரை எந்தவொரு கலைத்துரையாடலிலும் கலந்துகொள்ளாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1281007
-
- 0 replies
- 175 views
-
-
இலங்கையின்... தற்போதைய நிலைமை குறித்து, அமெரிக்கா கவலை! இலங்கையின் தற்போதைய நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இலங்கையின் நிலைமையை... உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றோம். அமைதியான போராட்டக்காரர்கள் மற்றும் அப்பாவி மக்கள் மீதான வன்முறைளுக்கு எதிராக ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம். பொருளாதார மற்றும் அரசியல் சவால்களுக்கு நீண்டகால தீர்வுகளைக் கண்டறிவதிலும் செயல்படுத்துவதிலும் கவனம் செலுத்துமாறு அனைத்து இலங்கையர்களையும் கேட்டுக்கொள்கிறோம்“ எனத் தெரிவிக்கப்பட்டுள…
-
- 0 replies
- 421 views
-
-
கொழும்பில்... இடம்பெற்ற மோதல்களில், இருவர் உயிரிழப்பு!, 218 பேர் வைத்தியசாலையில் அனுமதி. கொழும்பில் இடம்பெற்ற மோதல்களின் போது அலரிமாளிகையில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 218 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலை அறிவித்துள்ளது. https://athavannews.com/2022/1280970
-
- 0 replies
- 172 views
-
-
தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட... பல்வேறு தொழிற்சங்கங்கள் தீர்மானம்! தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட பல்வேறு தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. வன்முறைகளை ஊக்குவிக்கும் அரசாங்கத்திற்கு அதிருப்தியை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று(செவ்வாய்கிழமை) முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து கடமைகளிலிருந்தும் விலகுவதற்கு தமது உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக இலங்கை பொது நிர்வாக சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், அரசியல்வாதிகள் பங்கேற்கும் கூட்டங்களில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சுகாதார ஊழியர்களும் நேற்று நள்ளிரவு முதல் பணிப…
-
- 0 replies
- 574 views
-
-
மகிந்தவின் ராஜினாமாவை... கோட்டாபய ஏற்றார் – வர்த்தமானி வெளியானது! பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ ராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, ஏற்றுக்கொண்டுள்ளார். அதனையடுத்து மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1280962
-
- 0 replies
- 90 views
-
-
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில்.... அத்தியாவசிய சேவைகளை, முன்னெடுக்க முடியும்! ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பிரிவு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது. பணிக்கான அடையாள அட்டையினை பயன்படுத்தி குறித்த சேவைகளை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1280976
-
- 0 replies
- 80 views
-
-
அமைதி வழியில்... போராடிய மக்கள் மீது, வன்முறை பிரயோகிக்கப்பட்டமையை... கண்டிக்கிறேன் – அங்கஜன் ஜனநாயக மரபுகளின்படி அமைதி வழியில் போராடிய மக்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டமையை கண்டிக்கிறேன் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது உத்தியோகபூர்வ முகநூலில் பதிவிட்டுள்ளார். காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை முன்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது , வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தி , அவர்களின் கூடாரங்களை அடித்து நொறுக்கி அவற்றுக்கு தீ வைத்துள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது உத்தியோக பூர்வ முகநூலில் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் மேலும் …
-
- 13 replies
- 744 views
-
-
ஊரடங்கு உத்தரவு, நீடிக்கப் பட்டது – சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் புதன்கிழமை (11) அதிகாலை 7 மணிவரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையைக் கருதி குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, நாளை (10) அதிகாலை 7 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்குமென அரசாங்கம் அறிவித்திருந்த நிலையிலேயே, தற்போது குறித்த ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1280959
-
- 1 reply
- 407 views
-
-
அனைவரும் இணங்கினால்.... நாட்டின் பிரதமராகத் தயார் – கரு ஜயசூரிய அனைவரும் இணங்கினால்... சிறந்த செயற் திட்டத்துடன், மிகக் குறுகிய காலத்திற்கு நாட்டின் பிரதமராகத் தயார் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1280776
-
- 7 replies
- 730 views
-
-
கொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கலவரத்தின் போது பாதிரியார்கள் சிலர் தாக்கப்பட்டதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கொழும்பு காலி முகத்திடலில் அமைதியான முறையில் கடந்த ஒரு மாதமாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் சில அடாவடி கும்பல்களின் தாக்குதலால் இன்றைய தினம் யுத்தக் களமானது. பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் என தெரிவித்துக் கொண்ட கும்பல் சிலர் ஆர்ப்பாட்டக் களத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை எரித்து அடித்து உடைத்து அடாவடித் தனத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில பாதிக்கப்பட்ட 23இற்கும் அதிகமானோர் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்க…
-
- 5 replies
- 782 views
-
-
முன்னாள் பிரதமர்... மஹிந்த ராஜபக்சவை, கைது செய்யுங்கள் – சுமந்திரன். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் இன்று கொழும்புக்கு ஆதரவாளர்களை அழைத்து வந்த அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். https://athavannews.com/2022/1280936
-
- 5 replies
- 584 views
-
-
இலங்கை போராட்டத் திடலில் ராஜபக்ஷ ஆதரவாளர்கள் வன்முறை, தீ வைப்பு: கண்ணீர்ப் புகை வீச்சு 9 மே 2022, 08:05 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, காலிமுகத் திடல் போராட்டக் காரர்களின் கூடாரம் எரிப்பு. இலங்கை தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகிறவர்கள் மீது மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் என்று அறியப்படுவோர் இன்று வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டனர். கொழும்பு நகரில் முதலில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு பிறகு நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தப்பட…
-
- 4 replies
- 330 views
- 1 follower
-
-
நி்ட்டம்புவவில் ஆளும் கட்சி MP அமரகீர்த்தி அத்துக்கொரள மர்மமான முறையில் இறந்துள்ளார்.
-
- 3 replies
- 608 views
-
-
அமைதி போராட்டத்தில்... மோதல்: 130 பேர் இதுவரை வைத்தியசாலையில் அனுமதி! காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் காயமடைந்த 130 பேர் இதுவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1280931
-
- 0 replies
- 246 views
-
-
காலவரையற்ற... வேலைநிறுத்தப் போராட்டம் – 2,000 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு இன்று (09) நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக 2,000 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு https://athavannews.com/2022/1280901
-
- 0 replies
- 222 views
-
-
கோட்டா கோ கம.... கிராமம், மீள உருவாக்கப்படுகின்றது. காலிமுகத்திடலில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து தரைமட்டமாக்கப்பட்ட கோட்டா கோ கம கிராமம் மீள உருவாக்கப்படுகின்றது. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் இன்று காலை மைனா கம மற்றும் கோட்டா கமவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக கூடாரங்கள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1280912
-
- 0 replies
- 324 views
-
-
“ பிரதமர் மஹிந்தவை பாதுகாப்போம் ” : அலரி மாளிகை முன் ஆர்ப்பாட்டம் Published on 2022-05-09 10:34:57 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் இன்று காலை அலரிமாளிகையில் கூடியுள்ளனர். இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து 'பிரதமர் மஹிந்தவை பாதுகாப்போம்'என பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தற்போது அலரிமாளிகை முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். பொருளாதார பிரச்சனைக்கு பிரதமரால் மாத்திரமே தீர்வு காண முடியும் எனவும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கம் வெற்றிபெற இடமளிக்க முடியாது எனவும் பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சி …
-
- 4 replies
- 385 views
-
-
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக ஜனாதிபதி கோட்டா உறுதி ( எம்.எப்.எம்.பஸீர்) நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விஷேட குழுவுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி இதனை வெளிப்படுத்தியதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் உயர் மட்ட தகவல்கள் தெரிவித்தன. நாட்டில் நிலவும் நெருக்கடியை தீர்ப்பதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் 13 அம்ச ஆலோசனைக் கோவையை முன் வைத்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை ( 😎 அச்சங்கத்தை சந்திக்க ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட அரசாங்கத்திலிருந்து வெளியேறி சுயாதீனமாக இயங்கும் 11 கட்சிகளின் பிரதி நிதிகள் , …
-
- 3 replies
- 273 views
- 1 follower
-
-
மக்களுக்காக... எந்த தியாகத்தையும் செய்ய, நான் தயார் – பிரதமர் மஹிந்த மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய நான் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று பேசிய அவர், தான் எப்போதும் மக்களின் நலனுக்காகவே செயற்பட்டதாகவும் கூறியுள்ளார். https://athavannews.com/2022/1280748
-
- 0 replies
- 150 views
-
-
கோட்டா GO கம மீது அரச ஆதரவாளர்கள் தாக்குதல் https://www.madawalaenews.com/2022/05/live-video-go.html
-
- 1 reply
- 277 views
-
-
கோ கோட்டா கம போராட்டத்தை... அரசாங்கம் சீர்குலைத்தால், அரசாங்கத்துடன் மேற்கொள்ளும் அனைத்து கலந்துரையாடல்களிலிருந்தும்.... விலகிக்கொள்வேன் – ரணில் அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி கோ கோட்டா கம போராட்டத்தை அரசாங்கம் சீர்குலைத்தால், அரசாங்கத்துடன் மேற்கொள்ளும் அனைத்து கலந்துரையாடல்களிலிருந்தும் விலகிக்கொள்வதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவர் இந்த விடயம் குறித்து குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1280774
-
- 0 replies
- 102 views
-
-
கொழும்பில் ஊரடங்கு. கோத்தா கோ கம தாக்கி அழிப்பு. மகிந்தா ஆதரவாளர்கள், உட்புகுந்து, தாக்கி அங்கிருந்த போராளிகளை விரட்டி தாக்கி, கூடாரங்களை அழித்தனர். இதுவரை 17 பேர் வைத்தியசாலையில். இராணுவம், STF களமிறக்கப்பட்டது. ஊரடங்கும் அமுலில். அங்கு விரைந்து வந்த, சஜித்தும் தாக்குதலுக்கு உள்ளானார். இதுதான் கோத்தாவின் சிங்கள அரசு. சிறப்பு. 👍
-
- 12 replies
- 415 views
-
-
பதவி விலகுவாரா... மஹிந்த – இன்று, முக்கிய அறிவிப்பு? பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை) விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போது பிரதமரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அத்தோடு, மாற்று அரசாங்கமொன்றை உருவாக்க முடியும் என்ற உத்தரவாதத்திற்கு உட்பட்டு பதவி விலகுவதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்திருந்தார் என்றும் தகவல் வெளியாகியிருந்தன. எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு எவ்வித கோரிக்கையையும் முன்வைக்கவில்லையென பிரதமர் உறுதிப்படுத்துவதாக பிரதமரின் ஊடக செயலாளர் தெரிவித்திருந்தார…
-
- 1 reply
- 210 views
-
-
கைப்பேசியில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிப் போயிருந்த குடும்பத்தலைவர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய இளம் குடும்பத்தலைவரே இவ்வாறு உயிரை தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் கடந்த 2 வாரங்களுக்குள் இரண்டாவது நபர் கைப்பேசியில் இணையவழி போர் விளையாட்டில் ஈடுபட்டு இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. “நேற்றிரவு படம் பார்த்துவிட்டு தூக்கத்துக்குச் சென்றோம். காலையில் எழுந்து பார்த்த போது, கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். எப்போதும் பப்ஜி விளையாடுவதில் ஆர்வமாக இருப்பார். வேறு …
-
- 10 replies
- 1k views
-
-
"லிட்ரோ" நிறுவனத்தின்... அறிவித்தல் ! விநியோகிப்பதற்கு தேவையான சமையல் எரிவாயு கையிருப்பில் இல்லை என லிட்ரோ நிறுவனம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. விநியோகத்திற்கு தேவையான எரிவாயு கையிருப்பில் இல்லை என்பதுடன், அத்தியாவசிய சேவைக்காக மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . நேற்றைய தினம் விடுமுறை என்ற போதிலும் முத்துராஜவல லிட்ரோ எரிவாயு முனையத்திலிருந்து கணிசமான எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2022/1280705
-
- 0 replies
- 268 views
-