ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூலம் அடுத்தவாரம் பாராளுமன்றத்துக்கு சமர்பிப்பிக்க அமைச்சுசார் ஆலோசனைக் குழு அனுமதி (எம்.ஆர்.எம்.வசீம்) பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் கூடிய வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் முதலாவது வாசிப்புக்காக கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் ச…
-
- 0 replies
- 150 views
-
-
உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் வாசஸ்தலத்தை அமைச்சர் வாசு மீள ஒப்படைப்பு (எம்.ஆர்.எம்.வசீம்) நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது கடமை நேர உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் உத்தியோகபூர்வ இல்லம் ஆகியவற்றை நீர்வழங்கல் அமைச்சின் செயலாளரிடம் பிரயந்த பீ. விக்ரமவிடம் நேற்று மீள ஒப்படைத்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் வினவியபோது, நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையில் அரசாங்கதுடன் இருக்கும் கட்சிகள் இணைந்து முழு நாட்டையும் ஒரே வழியின் கீழ் கொண்டுவரும் வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்து அரசாங்கத்துக்கு ஒப்படைத்திருக்கின்றோம். என்றாலும் அரசாங்கம் அதுதொடர்பில் கண்டுகொள்ளாமல் செயற்பட்டு வருகின்றது. அரசாங்கத்தின் பிழையான தீர்மானங்கள…
-
- 0 replies
- 199 views
-
-
ஜனாதிபதியுடனான... கூட்டமைப்பின், கலந்துரையாடல் இரத்து ? உறுதிப் படுத்துவதில் சிக்கல் ! ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்போகும் விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தற்போது கலந்துரையாடி வருகின்றனர். குறித்த கலந்துரையாடல் கொழும்பில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றுவருகின்றது. இருப்பினும் ஒருசில காரணங்களினால் ஜனாதிபதியுடனான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் உண்மைத்தன்மை குறித்து கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கு ஆதவன் செய்திப்பிரிவு தொடர்புகளை மேற்கொண்டது. இருப்பினும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டமைப்பின் பங்காளி கட்சியினர் தொலைபேச…
-
- 2 replies
- 231 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு... மரணச் சான்றிதழுடன் 100,000 ரூபாய் இழப்பீடு: ராஜபக்ஷ அரசாங்கம் அறிவிப்பு! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மரணச் சான்றிதழ், 100,000 ரூபாய் இழப்பீடு மற்றும் காணி வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஐ.நா. கூட்டத்தொடரின் பின்னர் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமக்கு உண்மையும் நீதியும் மட்டுமே வேண்டும் என்றும் இழப்பீடும் தேவையில்லை என்றும் தெரிவித்தே அவர்கள் தொடர்ந்தும் பல வருடங்களாக போராடி வருகின்றனர். https://athavannews.com/2022/1271959
-
- 14 replies
- 684 views
-
-
ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்த.... #GoHomeGota ஹாஷ்டாக், அதனை தகர்க்க... #WeAreWithGota ஐ பகிரும் ஆதரவாளர்கள் ! #GoHomeGota2022 மற்றும் #GoHomeGota என்ற ஹாஷ்டாக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இலங்கையில் டுவிட்டரில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்ததுள்ளது. இதனை அடுத்து #WeAreWithGota என்ற எதிர் டுவிட்டர் ஹாஷ்டாக்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்தும் சிலர் பகிர்ந்துவருகின்றனர். நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், பல அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதியின் முக்கிய ஆதரவாளர்கள் இதனை பயன்படுத்தி ஆதரவு தெரிவித்து வருகின்றனர். எவ்வாறாயினும் #GoHomeGota2022 மற்றும் #GoHomeGota என்ற ஹாஷ்டாக்கள் தொடர்ந்தும் இலங்கையில…
-
- 0 replies
- 313 views
-
-
பசிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரப்போவதில்லை – எதிர்க்கட்சி ராஜபக்ஷ மட்டுமல்ல முழு அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளதாக தாம் நம்புவதால், நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட மாட்டாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. பசில் ராஜபக்சவை தனிமைப்படுத்தி அரசாங்கத்தின் சொந்த பிரச்சினைகளை தீர்க்க நாங்கள் விரும்பவில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று தெரிவித்திருந்தனர். பொருளாதார வீழ்ச்சிக்கு நிதி அமைச்சரின் நடத்தையே காரணம் என்றும் அவரை மட்டுமன்றி முழு அரசாங்கத்தையும் நாட்டுக்கு அனுப்புவதே தமது நோக்கம் என்றும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரி…
-
- 2 replies
- 237 views
-
-
இன்று, கொழும்பில்... மாபெரும் போராட்டத்தை, நடத்தவுள்ளது ஐக்கிய மக்கள் சக்தி ! ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாபெரும் போராட்டத்தை நடத்தவுள்ளது. கொழும்பின் இரண்டு இடங்களில் இருந்து ஒரே நேரத்தில் பேரணி புறப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அதன்படி இந்தப் பேரணி இன்று பிற்பகல் 1:00 மணிக்கு மாளிகாவத்தை பொலிஸ் நிலையம் மற்றும் கொழும்பு பொது நூலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகவுள்ளது. இந்த பேரணியில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலுமிருந்து ஏராளமானோர் இன்று கொழும்பு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2022/1271918
-
- 0 replies
- 139 views
-
-
தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும் எண்ணமில்லை – ரணில் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் யோசனையை நிராகரித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும் எண்ணமில்லை என்றும் தெரிவித்தார். தற்போதைய பொருளாதாரச் சூழலைத் தீர்ப்பதில் அரசியல் கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் ஒரு பில்லியன் கடனை திரும்பச் செலுத்த வேண்டிய நிலையில் தற்போது 600 மில்லியன் மட்டுமே கையிருப்பு உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையின் மொத்தக் கடன் 19 ஆயிரம் பில்லியன் என்றும் இந்தக் கடன்களைத் தீர்க்க வெளிநாட்டு நாணயத்தை நாம் கடனாகப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என கூறினா…
-
- 2 replies
- 255 views
-
-
இலங்கையில் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை – புதிய விலை விபரம் இதோ! வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகரித்துள்ளது. இன்றைய விலை நிலவரத்தின் படி 24 கரட் தங்கப் பவுணின் விலை 155,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. அத்துடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 143,500 ரூபாயாக உயர்வடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1271928
-
- 1 reply
- 191 views
-
-
புகையிரத கட்டணமும் அதிகரிப்பு – போக்குவரத்து அமைச்சர் எதிர்வரும் காலங்களில் புகையிரத கட்டணத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். பேருந்து கட்டண அதிகரிப்புக்கு நிகராக புகையிரத கட்டணத்தை அதிகரிக்குமாறு புகையிரத திணைக்களம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தது. இதேவேளை இன்று முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 17 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1271944
-
- 0 replies
- 501 views
-
-
(எம்.மனோசித்ரா) இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமையைக் கருத்திற் கொண்டு , இங்கிலாந்து சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இலங்கைக்கான பயண ஆலோசனையில் அந்நாடு சில திருத்தங்களை செய்துள்ளது. அதற்கமைய இறக்குமதிக்கு செலுத்துவதற்கு கடும் டொலர் தட்டுப்பாடு காரணமாக, மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறையுடன் இலங்கையில் எச்சரிக்கை அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. அத்தியாவசிய பொருள் விற்பனை நிலையங்கள் , சமையல் எரிவாயு மற்றும் மருந்தக வளாகங்களில் பொருட் கொள்வனவிற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அது மாத்திரமின்றி உள்ளுராட்சி அதிகாரிகளின் தீர்மானங்களுக்கமைய அடிக்கடி மின் துண்டிப்பும் ஏ…
-
- 1 reply
- 260 views
-
-
எதிர்வரும் புதன்கிழமை, நாட்டு மக்களுக்கு... உரையாற்றுகின்றார், ஜனாதிபதி கோட்டா! எதிர்வரும் புதன்கிழமை (16) நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றுவார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் தட்டுப்பாடு என மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் அதற்கான தீர்வு குறித்து நாட்டு மக்களிடத்தில் அவர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1271876
-
- 2 replies
- 305 views
-
-
காத்தான்குடியில்... கையடக்க தொலைபேசி நிலையம் ஒன்றை, கொள்ளையிட்ட பெண் ஒருவர் உட்பட... 4 பேர் கைது! காத்தான்குடியில் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை கொள்ளையிட்ட அக்கரைப்பற்று இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 4 பேரை நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததுடன் 8 இலச்சம் ரூபா பெறுமதியான 23 கையடக்க தொலைபேசிகளை மிட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். கடந்த முதலாம் திகதி காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள கையடக்க தொலைபேசி நிலையம் பூட்டியிருந்த நிலையில் உடைத்து அங்கிருந்த சுமர் 24 இலச்சம் ரூபா பெறுமதியான 75 கையடக்க தொலைபேசிகள் கொள்ளையடிக்கப்பட்டது இது தொடர்பாக பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பொற…
-
- 0 replies
- 219 views
-
-
நாட்டைக் சிறப்பாக வைத்திருக்கும் சக்தி... மஹிந்த குடும்பத்திற்கு, மாத்திரமே உள்ளது – ப.சந்திரகுமார் நாட்டைக் கொண்டு நடத்தக்கூடிய சக்தி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்திற்கு மாத்திரமே உள்ளது என பொதுஜன பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்தார். பொதுஜன பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தொகுதிக்கான இளைஞர் மாநாடு பெரியபோரதீவிலுள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு தலைமையுரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இலங்கை மக்கள் எதுவித வேறுபாடுகளுமின்றி எமது அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை வழங்கி வருகின்றது. கிழக்கு மா…
-
- 4 replies
- 619 views
-
-
சிங்கள, முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை உணரத் தொடங்கி விட்டார்கள் : கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை உணரத் தொடங்கி விட்டார்கள். இதனால் நாம் எமது பிரச்சனைகளையும், பாதிப்புக்களையும், கோரிக்கைகளையும் சிங்கள, முஸ்லிம் மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் தெரியப்படுத்தி இந்த சந்தர்ப்பத்தை சரியாக கையாள வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். வவுனியா, தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று (13) மாலை இடம்பெற்ற 13 வது திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும…
-
- 0 replies
- 423 views
-
-
மாகாண சபைகள், உள்ளூராட்சிமன்ற தேர்தல்களை புதிய அரசியமைப்பில் உட்சேர்தல் வேண்டும் - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி தேர்தல்,பொத்தேர்தல் மற்றும்மக்கள் தீர்ப்பு ஆகியவை குறித்து அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதை போன்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற தேர்தல்களும் புதிய அரசியலமைப்பில் உட்சேர்த்தல் வேண்டும் எனவும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பதவி காலத்தில் முதல் இரண்டு வருட காலங்களில் ஏதேனும் நோய் அல்லது வேறு விசேட நியாயமான காரணமின்றி அந்தக் காலப்பகுதியில் நடாத்தப்பட்ட மொத்த பாராளுமன்ற கூட்டங்களின் எண்ணிக்கையில் குறைந்தது மூன்றில் ஒன்றுக்காவது வருகை தராவிட்டால் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்தல் புதிய அரசியலமைப்பில் உர…
-
- 0 replies
- 274 views
-
-
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின 2021ம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தில் பரீட்சை பெறுபேற்றை பெற்றுக்கொள்ளலாம். இதேவேளை, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான தமிழ், மற்றும் சிங்கள மொழிமூல மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு தமிழ் மொழிமூலம் 149, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு 148 எனவும் தமிழ் மொழி மூல வெட்டுப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது. முல்…
-
- 0 replies
- 291 views
-
-
வடக்கு மாகணத்தில் இந்திய முதலீடுகளை செய்வதற்கு தயார் – இலங்கைக்கான இந்தியத் தூதுவர் இந்திய அரசாங்கத்தினால் கட்டி முடிக்கப்பட்டுள்ள கலாச்சார மண்டபம் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது என இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்.அத்துடன் வடக்கு மாகணத்தில் இந்திய முதலீடுகளை செய்வதற்கு திட்டங்களை வகுத்து வருவதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே மேலும் தெரிவித்தார். இலங்கையில் மீனவர்களுக்கு உதவிகளை செய்யும் முகமாக இந்திய முதலீடுகளையும் இங்கு கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் கூறினார்.இதன் மூலம் மீனவக் குடும்பங்கள் வாழ்வாதாரம் மற்றும் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் இதற்கு அனைவரது ஒத்துழைப்பு தேவை…
-
- 0 replies
- 197 views
-
-
எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்றுவதே எனது இலக்கு – அகில இலங்கையில் முதல் இடம் பிடித்த யாழ் மாணவன் எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாக புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் முதலிடத்தை பிடித்த தமிழ்செல்வன் கஜலக்சன் தெரிவித்துள்ளார். மேலும் அம்மா, அப்பா மற்றும் பாடசாலை ஆசிரியர்களின் ஊக்கமே தனது வெற்றிக்கு காரணம் என்று மேலும் தெரிவித்துள்ளார்.இதேவேளை புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகிய நிலையில் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த தமிழ்செல்வன் க…
-
- 5 replies
- 404 views
- 1 follower
-
-
118 நீதிபதிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்! March 13, 2022 நாடளாவிய ரீதியில் 118 நீதிபதிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் சன்ஜீவ சோமரத்தினவினால் உரிய வகையில் இடமாற்ற கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் திகதியில் இருந்து இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வடக்கு கிழக்கில் உள்ள நீதவான் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. மல்லாகம் நீதிமன்றில் கடமையாற்றும் ஏ.ஜீ. அலெக்ஸ்ராஜா பருத்தித்துறை மாவட்ட நீதிவான் …
-
- 0 replies
- 142 views
-
-
சம்பூரில், இந்தியா உதவியுடன் 100 மெகாவாட் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க ஒப்பந்தம்! March 13, 2022 இலங்கையில் 100 மெகாவாட் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்காக இந்தியாவின் தேசிய அனல் மின் கழகம் மற்றும் இலங்கை மின்சார சபை ஒப்பந்தம் செய்துள்ளன. இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போரில், கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளிடம் இருந்து இலங்கை ராணுவம் கைப்பற்றிய முதல் இடம் சம்பூர். 2006-ம் ஆண்டு சம்பூர் பகுதியை கைப்பற்றிய பிறகு அந்த இடம் ராணுவத்தால் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது. இலங்கையில் அதிகரித்து வரும் மின் தேவையை சமாளிக்கும் வகை யில், திருகோணமலை மாவட்டம், சம்பூர்பகுதியில் புதிய…
-
- 0 replies
- 128 views
-
-
இறக்குமதியை கட்டுப்படுத்தும் இலங்கை அரசு: “ஆடைகள், பழங்கள்: அத்தியாவசியமற்ற பொருட்கள்” என நடவடிக்கை யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக, இலங்கையிலிருந்து 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் 367 பொருட்களுக்கு இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. 1969ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடுகள்) சட்டத்தின் படி, நிதியமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் 367 பொருட்களுக்கு இவ்வாறு இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 10ஆம் தேதி அமலுக்க…
-
- 1 reply
- 319 views
- 1 follower
-
-
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாராண சூழ்நிலையின் காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மகனிடம், உங்கள் “அப்பாவை அமெரிக்காவிற்கே கூட்டி செல்லுங்கள்” என திரைப்பட கலைஞர் விஸ்வ லங்கா காணொளி மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், "ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மகன் பார்க்கவேண்டும் என்று நான் இந்த காணொளியைப் பதிவேற்றுகிறேன்! உங்களை எப்படி அழைப்பதென்று தெரியவில்லை நான் நண்பர் என்றே அழைக்கிறேன். நண்பரே, இலங்கை மக்கள் எங்களுக்காக, நீங்கள் இந்த தருணத்தில் செய்யக்கூடிய மிகப்பெரிய உதவி ஒன்று தான். அது உங்கள் தந்தையை மீண்டும் அமெரிக்காவுக்கே மீள அழைத்துக்கொள்ளுங்கள். இந்த தருணத்தில் நாம் ஒரு நாடாக, ஒரு இனமாக விழக்கூடிய மட்டத்திற்கு விழ…
-
- 9 replies
- 700 views
-
-
பொருளாதார ரீதியில் இலங்கை தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இலங்கைக்கு இந்தியா பொருளாதார ரீதியில் உதவும் நிலையில், தமது நாட்டின் நலன்சார் விடயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவின் அண்மைக் கால செயற்பாடுகள் இதனை காட்டுகின்றன. இதற்கிடையில் பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான இந்தியாவின் கரிசனை இந்த மாத இறுதியில் வெளிச்சத்துக்கு வருகிறது. பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பாக இந்தியாவின் கரிசனை இலங்கையினால் கவனிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்தும் கூறப்பட்டு வந்தது. இந்தநிலையில் ஏற்கனவே திட்டமிட்டபடி, பிம்ஸ்டாக் என்ற பல்துறை, தொழில்நுட்ப ம…
-
- 9 replies
- 726 views
-
-
இலங்கையில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு எரிபொருள் விலையை உயர்த்துவதற்காக கடந்த சில வாரங்களாக எரிபொருட்களை மறைத்து வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 20,000 மெற்றிக் டன் பெற்றோல், 7,000 மெற்றிக் டன் சுப்பர் டீசல், 6,000 மெற்றிக் டன் சுப்பர் பெற்றோலைக் கிடங்குகளில் மறைத்து வைத்து, விலை அதிகரித்ததாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பெற்றோலிய ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். ஒரு கறுப்புச் சந்தை வியாபாரி கூட இவ்வாறான சட்டவிரோத கொடுக்கல் வாங்கலில் ஈடுபடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் செலுத்தப்பட்ட 55,000 மெற்றிக் டன் எரிபொருள் இறக்கப்படாமல் கப்பலில…
-
- 0 replies
- 342 views
-