Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு தமிழ் மொழி மூல கல்வெட்டு இடமாற்றம் February 10, 2022 ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு தமிழ் மொழி மூல கல்வெட்டு இடித்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது, வவுனியா பல்கலைக்கழகத்திற்கு நாளைய தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பயணம் மேற்கொண்டு அங்குராப்பணம் செய்து வைக்கவுள்ளார். அதன் போது பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள சுற்றுவட்ட பாதையின் நடுவில் முக்கோண வடிவில் தூண் ஒன்று கட்டப்பட்டு அதன் முகப்பு பக்கத்தில் தமிழ் மொழியும் மற்றைய பக்கங்களில் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளிலான நினைவு கல் வெட்டு பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. நாளைய தினம் ஜனாதிபதி குறித்த கல் வெட்டினை திரைநீக்கம் செய்…

  2. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) யுத்த காலகட்டத்தில் பலர் காணாமல் போனதற்கு ஈ.பி.டி.பி.யும் காரணமாகும், இது குறித்த விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டால் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தூக்கில் தொங்க வேண்டி வரும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி. யான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். இதன்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஈ.பி.டி.பி. எம்.பி. குல சிங்கம் திலீபன் , முடிந்தால் டக்ளஸ் தேவானந்தாவின் பெயரைக் கூறி வழக்குத் தொடர்ந்து அவருக்கு தண்டனை பெற்றுக்கொடுங்கள் என சபையில் சவால் விடுத்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை 10 ஆம் திகதி இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய ஈ…

    • 2 replies
    • 287 views
  3. கறுப்புச்சந்தையில் டொலரை பெற்று ஆயதக்கொள்வனவு – நிதியமைச்சரின் கூற்று குறித்து வெளிநாட்டு தூதரகங்கள் அதிருப்தி ஜெனீவா அமர்வில் ஆராயப்படாலம் – சர்வதேச நிதியமைப்புகளின் உதவியை பெறும் இலங்கையின் முயற்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் கறுப்புசந்தையில் பெற்ற டொலரை பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளமை குறித்து இலங்கையில் உள்ள பல வெளிநாட்டு தூதரகங்களும் சர்வதேச அமைப்புகளும் கரிசனை வெளியிட்டுள்ளன இலங்கை அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் அது சர்வதேச மோதல்கள் குறித்த வழக்காறுகளை மீறு…

    • 11 replies
    • 714 views
  4. பிரதமரின் தலைமையில் “நாவலர் ஆண்டு” பிரகடனம் December 17, 2021 சைவத் தமிழ் உலகிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022ஆம் ஆண்டை “நாவலர் ஆண்டு” என இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் பிரகடனம் செய்வதற்கான தீர்மானத்தை அங்கீகரிக்கும் நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் தலைமையில் இன்று (17) அலரி மாளிகையில் நடைபெற்றது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரகடனத்திற்கான அங்கீகாரத்தையும் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கும் வகையில் பிரதமரினால் அங்கீகாரக் கடிதம் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.அ. உமாமகேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது. …

    • 191 replies
    • 13.5k views
  5. (எம்.மனோசித்ரா) இலங்கை அரசாங்கம் இதுவரையில் எவ்வித நிதி உதவியையும் கோரவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கையிலிருந்து நிதி உதவிக்கான எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை. எனினும் தாம் இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடற் பிரிவின் பணிப்பாளர் ஜெரி ரைஸ் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்திகளை தாம் தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கையிலுள்ள சர்வதேச நாணய நிதிய குழுவின் நான்காவது ஆலோசனை பிரிவு மாத்திரமே தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் ஜெரி ரைஸ் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த ஆலோசனைகள் தொடர்பில்…

  6. இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்கு மத்தியில் கடன் மறுசீரமைப்பு அல்லது சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச முதலீட்டாளர்களை மேற்கோள்காட்டி Financial Times வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2019ம் பாரிய வரிக் குறைப்பு செய்யப்பட்டதுடன், கோவிட் தொற்று காரணமாக சுற்றுலா துறை பெரும் பாதிப்பை எதிர்நோக்கியது. வட்டி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக இந்த ஆண்டு சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த வேண்டும். ஆனால் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 3 பில்லியனுக்கு குறைவான அமெரிக்க டொலர்களே இருக்கிறது. இந்நிலையில், இலங்கை பெரும்பாலும் வங்குரோத்து நிலையை அடைய…

  7. தமிழ் மக்களுடன் பேசி பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்களாகவே முஸ்லிம் தலைவர்கள் இருக்கிறார்கள் – மௌலவி முபாரக் அப்துல் மஜீத்! சாணக்கியன், சுமந்திரன் போன்றவர்கள் தங்களுடைய இனத்தவர்கள் செய்யும் காரியங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மௌனம் காப்பது சிறந்ததல்ல என ஐக்கிய காங்கிரசின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். கல்முனையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “முஸ்லிங்களுக்கு ஆதரவானவர்கள் போன்று காட்டிக்கொள்ளும் சாணக்கியன், சுமந்திரன் போன்றவர்கள் தங்களுடைய இனத்தவர்கள் செய்யும் காரியங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மௌனம் காப்பது சி…

    • 10 replies
    • 836 views
  8. தமிழ் இனத்துக்காக போராடியவர்களை சிறையில் நிம்மதியாகவாவது உறங்க விடுங்கள் – சாணக்கியன் இனத்துக்காக போராடிய தமிழ் அரசியல் கைதிகளை சிறையில் நிம்மதியாகவாவது உறங்க விடுங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேட்டுக் கொண்டார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக மேலும் உரையாற்ற அவர், “இன்று கொலை செய்து, கற்பழித்து, களவெடுத்த குற்றத்தில் சிறைத்தண்டனைப் பெறும் கைதிகளுக்காக சபையில், இன்று பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தங்களுடைய இனத்தின் விடுதலைக்காக போராடி, தன்னுடைய இனத்தின் அரசியல் உரிமைக்காகப் போராடி, 20 – 30 வருடங்களாக சிறை…

    • 1 reply
    • 228 views
  9. உலக அமைதி மாநாட்டில் மைத்திரிபால சிறப்புரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியா சென்றுள்ளார். உலக அமைதி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் சியோல் சென்றுள்ளார். மாநாட்டில் அவர் சிறப்புரை ஆற்ற உள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக அமைதி மாநாட்டில் மைத்திரிபால சிறப்புரை (adaderana.lk)

    • 5 replies
    • 365 views
  10. Published on 2022-02-10 21:20:13 (இராஜதுரை ஹஷான்) கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 2 ஆயிரம் கொள்கைகளை விடுப்பதற்கு 30 மில்லியன் தொடக்கம் 35 மில்லியன் வரையில் அமெரிக்க டொலர்களை மத்திய வங்கி வழங்க வேண்டும். எதிர்வரும் வாரமளவில் அக்கொள்கலன்களை விடுவிக்க முடியும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, டொலர் நெருக்கடி காரணமாக கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் தொடர்பிலான தகவல்கள் உள்ளடங்கிய அறிக்கையை வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் சமர்ப்பித்துள்ளோம். க…

  11. Published by J Anojan on 2022-02-10 13:13:11 (நா.தனுஜா) பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, அஹ்னாப் ஜஸீம் மற்றும் ஏனைய சிலர் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டமையை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன வரவேற்றுள்ளன. அதேவேளை, பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் குறித்து தொடர்ந்தும் கரிசனையை வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளன. உரியவாறு வரைவிலக்கணப்படுத்தப்படாத குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின்பேரில் நபர்களைக் கைதுசெய்வதற்கும் அவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தாமல் 18 மாதங்கள்வரை தன்னிச்சையாகத் த…

  12. Published by T Yuwaraj on 2022-02-10 16:14:40 தலைமன்னார் பியர் இறங்குதுறையில் இன்றைய தினம் வியாழக்கிழமை (10) பகல் இந்திய மீனவர்களின் படகுகள் ஏல விற்பனை செய்ய அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஏல விற்பனையில் கலந்து கொண்டு படகுகளை கொள்வனவு செய்ய மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளடங்களாக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 30 இற்கும் மேற்பட்ட கொள்வனவாளர்கள் தலைமன்னார் பியர் இறங்கு துறை பகுதிக்கு சென்றிருந்தனர். எனினும் அறிவிக்கப்பட்டது போன்று ஏல விற்பனை இடம் பெறவில்லை என கொள்வனவாளர்கள் தெரிவித்தனர். இன்று (10) வியாழக்கிழமை காலை முதல் மதியம் வரை ஏல விற்பனைக்காக காத்திருந்த போது…

  13. கிளிநொச்சி வைத்தியர் பிரியாந்தினியின் அதிரடி நடவடிக்கையால் கதி கலங்கிய மாபியாக்கள் கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கண் வைத்தியநிபுணரின் மருத்துவ அறிக்கை , கிளிநொச்சி தர்மபுரம் இல.1 ஆரம்ப பாடசாலையில் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்தவுடன், அதில் சந்தேமடைந்து அந்த மாணவர்களின் கணிசமான பெற்றோர்களிடம் தொடர்பு கொண்டு பேசினேன். அவர்களின் கருத்து எனது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது. இதனை தொடர்ந்து கண்டாவளை வைத்திய அதிகாரியை தொடர்பு கொண்டேன் அவர் அப்போது தனது பணியின் பயிற்சி ஒன்றுக்காக விடுமுறையில் இருந்தார். இருப்பினும் அவருக்கு இது தொடர்பில் தெரியவில்லை என்பதோடு அவரது அலுவலகத்தில் இது தொடர்பில் அனுமதி பெறவோ அல்லது அறி…

  14. Published by J Anojan on 2022-02-10 17:43:18 (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) எமது மீனவர்களின் அழிவுக்கு கடற்படையும் அரசாங்கமுமே முழுமையாக பொறுப்பு கூற வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் இன்று தெரிவித்தார். வடக்கு மாகாண மீனவர்கள் தமது நாளாந்த வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எமது கடற்பரப்பிற்கு அப்பால் உள்ள மக்கள் எமது எல்லைக்குள் வருவதுடன் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். அதுமட்டுமல்லாது எமது வடக்கு மாகாண மீனவர்களின் மீன்படி வளங்களையும் சேதப்படுத்தும் நிலைமை காணப்படுகின்றது. வட மாகாணத்தை பொறுத்தவரை 50 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடி துறையுடன் நேரடியான…

  15. பயங்கரவாத தடைச் சட்டத்தின் திருத்தச் சட்டமூலத்திற்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கவில்லை – கூட்டமைப்பு பயங்கரவாத தடைச் சட்டத்தின் திருத்தச் சட்டமூலத்திற்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) வெளிவிவகார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடை சட்ட திருத்த சட்டமூல விவாதத்தில் அரசாங்கத் தரப்பின் உறுப்பினர்கள் மிகக்குறைவான எண்ணிக்கையில் கலந்து கொண்டுள்ளனர் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். …

  16. மாகாணசபை தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கான யோசனையை முன்வைக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானம்! மாகாணசபை தேர்தல் சட்டத்தை திருத்தி, பழைய விகிதாசார முறையில் மாகாணசபை தேர்தலை நடத்தும்படியான யோசனையை அரசுக்கு முன் வைக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று (வியாழக்கிழமை) கூடிய தேர்தல் முறை சீர்திருத்த குழுவில் இந்த விடயம் குறித்து தீர்மானிக்கப்பட்டதாக கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். அத்தோடு, உள்ளூராட்சி தேர்தல் முறையிலும் சில சீர்திருத்தங்களை செயற்படுத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அதன்படி எதிர்வரும் 22ம் த…

  17. reelancer / 2022 பெப்ரவரி 09 , பி.ப. 12:51 - 0 - 109 FacebookTwitterWhatsApp எம்.றொசாந்த் அரைக் காற்சட்டையுடன் யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் வந்த மாணவனை கண்டித்த சிரேஷ்ட மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த வாரம் யாழ்.பல்கலைக்கழகத்தினுள் கனிஷ்ட மாணவன் ஒருவர், பல்கலைக்கழக மாணவன் அல்லாத தன்னுடைய நண்பர் ஒருவருடன் அரைக் காற்சட்டை அணிந்து பல்கலைக்கழக வளாகத்தினுள் வந்துள்ளார். அதனை அவதானித்த மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்கள் …

  18. குற்றவியல் சட்டத்தில் திருத்தம் குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு வசதியாக குற்றவியல் சட்டத்தில் முன் விசாரணை முறையை ( Justice Ministry is planning to introduce a pre-trial method which would limit delays in law) அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி சபையில் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று (09) நீதித் துறையுடன் தொடர்புபட்ட குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். நீதி அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் சட்ட சுயாதீனத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் சட்டம் தொடர்பில் மக்களுக்குள்ள ந…

  19. இலங்கையை... பாதுகாப்பான, திருமண சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கு திட்டம்! இலங்கையை பாதுகாப்பான திருமண சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நிகழ்வு மேலாண்மை, ஆடை வடிவமைப்பு மற்றும் பிற துணைத் துறைகளையும் மேம்படுத்த உதவும் என அந்த சபையின் தலைவர் கிமர்லி பெர்னாண்டோ தெரிவித்தார். இலங்கை சுற்றுலாத்துறையானது ‘திருமண சுற்றுலா’விற்கும் புதிய உத்வேகத்தை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். நிகழ்வு முகாமைத்துவ நிறுவனங்கள், திருமணத்தை திட்டமிடுபவர்கள், புகைப்படக் கலைஞர்கள், …

  20. தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை இல்லாது செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுப்பு – சித்தார்த்தன் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை இல்லாது செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.அரசு தொல்பொருள் திணைக்களம் மற்றும் வேறு பல திணைக்களகங்கள் ஊடாகவும் தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதில் தீவிரம் காட்டிவருகின்றது.குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தனது வேலைத்திட்டத்தை தீவிரமாக செயற்படுத்தி வருகின்றது. இன்று தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் இக்கட்டான காலகட்டத்தில் இலங்கையரசு தமிழ் மக்களின் இருப்பை இல்லாது செய்வதற்கு முயற்சி எடுப்பதுடன் தங்களுக்கான சர்வதேச ஆதரவை ப…

  21. ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு விடுத்துள்ள அறிவித்தல்! பங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிணை வழங்கி, விடுதலை செய்வதற்கான நடைமுறை சாத்தியமான நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம்இலங்கையை வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கையின் கூட்டு ஆணைக்குழுவின் 24 ஆவது கூட்டம் பெல்ஜியத்தின் பிரசல்ஸில் நடைபெற்றது. நேற்று நிறைவுபெற்ற கூட்டு ஆணைக்குழு கூட்டத்தின் பின்னர் விடுக்கப்பட்ட இணைந்த அறிக்கையில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வ…

  22. வட்டுவாகல் காணி சுவீகரிப்பு பிரச்சனை – ஜூலையில் மீண்டும் விசாரணை! February 9, 2022 கடந்த 2018ஆம் ஆண்டு, முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில், மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியை சுவீகரிக்க சென்ற நில அளவைத்திணைக்கள உத்தியோகத்தர்களை தடுத்து, அவர்களது வாகனத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழங்கு விசாரணை நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக இந்த வழங்கு தொடரப்பட்டுள்ளது. …

  23. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் இலங்கை – இந்திய உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அடுத்தடுத்து பல விஜயங்கள் இடம்பெற்று வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய வாய்ப்புவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்தும் இந்தியாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த விஜயங்கள் பார்க்கப்படுகின்றன. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர…

  24. கச்சதீவுக்கு இந்திய பக்தர்களை அனுமதிப்பது தொடர்பான கோரிக்கைகளை உரிய தரப்புகளுக்கு அனுப்பியிருக்கின்றோம் – மகேசன் கச்சதீவு திருவிழாவுக்கு இந்திய பக்தர்கள் செல்வது தொடர்பான கோரிக்கைகளை நாங்கள் உரிய தரப்புகளுக்கு அனுப்பியிருக்கின்றோம். அங்கிருந்து அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இந்தியாவிலிருந்தும் பக்தர்கள் பங்கேற்க முடியும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். கச்சதீவு திருவிழா தொடர்பில் ஊடகவியாளர் கேள்வி எழுப்பிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் 12ஆம் திகதிகளில் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் நடைபெறவுள்ளது. இதன் ஆரம்பக்கட்ட கூட்டத்திலேயே சுகாதார நிலைமை…

    • 2 replies
    • 321 views
  25. Published by T Yuwaraj on 2022-02-09 21:33:24 (நா.தனுஜா) இலங்கையில் மீட்கப்படாத இந்திய மீன்பிடிப்படகுகளை அப்புறப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராய்வதற்கான தமிழகத்திலிருந்து குழுவொன்று இலங்கைக்கு வருகைதரவிருப்பதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்திருக்கின்றது. இலங்கையில் ஏலமிடப்பட்ட இந்திய மீன்பிடிப்படகுகள் தொடர்பில் வீரகேசரியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: அண்மையில் இலங்கையில் ஏலமிடப்பட்ட இந்திய மீன்பிடிப்படகுகள் தொ…

    • 3 replies
    • 344 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.