Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மொழியால் ஒன்றுபட்ட தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் அரசியல் தளத்தில் ஒன்றுபடவேண்டும் : கனேடியவாழ் இலங்கை முஸ்லிம் மக்கள் மத்தியில் சுமந்திரன் உரை (நா.தனுஜா) இலங்கையில் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கின்ற, மொழியால் ஒன்றுபட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் ஒன்றிணைந்து செயலாற்றுவதன் ஊடாக மாத்திரமே பேரினவாதத்தின் அடக்குமுறைகளை வெற்றிகொள்ளமுடியும். தமிழ்பேசுபவர்கள் வாழ்கின்ற, 'தமிழ்' என்ற மொழி அடையாளத்தைக்கொண்ட பிரதேசத்தில்தான் நாங்கள் அதிகாரப்பகிர்வைக் கேட்கின்றோம். எனவே இவ்விடயத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைவதன் ஊடாக அதிகாரங்கள் பகிரப்படுவதற்கான வாய்ப்பு பன்மடங்காக உயரும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பி…

  2. விஷ்வா மீதான தாக்குதல்; இராணுவத்தினர் மூவர் முல்லைத்தீவுப் பொலிஸாரால் கைது முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் விஸ்வசந்திரன் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகத்தில் இராணுவத்தினர் மூவர் முல்லைத்தீவு பொலிஸாரால் இன்றுகாலை (28) கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று காலை (27) முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் விஸ்வசந்திரன்மீது இராணுவத்தினரால் மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருந்தனர். இதில் காயமடைந்த ஊடகவியலாளர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார் . இன்றையதினம்(28) முல்லைத்தீவு நகரில் தாக்குதலை கண்டித்து கண்ட…

  3. ஒற்றையாட்சிக்குள் எந்தவொரு தீர்வினையும் ஏற்கத்தயாராக இல்லை : ஐ.நா.உதவிபொதுச்செயலாளரிடத்தில் கஜேந்திரகுமார் தெரிவிப்பு (ஆர்.ராம்) இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் எந்தவொரு அரசியல் தீர்வினையும் ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இல்லை என்று ஐக்கியநாடுகள் உதவி பொதுச் செயலாளரிடத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை வலுவாக்கி சிங்கள, பௌத்த நாடாக இலங்கையை பிரகடனப்படுத்துவதற்கு முயல்வதாகவும் அதனை தடுப்பதற்கு சர்வதேசத்தின் முழுமையான அழுத்தம் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐ.நா உதவி பொதுச்செயலாளர் காலித் கியாரிக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையிலான சந…

  4. முல்லைத்தீவு சூரியன் ஆற்றுப்பகுதியில் 1900 ஏக்கர் காணியை சுவீகரிக்க நடவடிக்கை (ஆர்.ராம்) முல்லைத்தீவு மாவட்டத்தின் சூரியன் ஆற்றுப்பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 1900 ஏக்கர் அளவுள்ள விவசாய காணிகளை மகாவலித் திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்காக சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1970 ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் சூரியன் ஆற்றுப்பகுதியில் தலா 10 ஏக்கர்கள் வீதம் 190 குடும்பங்களுக்கு 1900ஏக்கர்கள் விவசாயக் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு அதற்கான காணிப் பெமிற்றுக்களும் வழங்கப்பட்டுள்ளது. போரின் பின்னரான சூழலில் உருவாக்கப்பட்ட வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்டதாக ‘கலம்பவெவ என்றொரு கிராமம் உருக்கப்பட்டது. இந்தக் கிரமத்தி…

  5. மலையக மக்கள் ஒரு ” தேசிய இனம்” என்ற வகையில் அங்கீகரிக்கப்படவேண்டும்- தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைத்தலைவர் செல்வம் எம்.பி இலங்கையில் பெருந்தோட்ட மக்கள் ஒரு தேசிய இனமாக அடையாளப்படுத்தப்படவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைத்தலைவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்தக் கோரிக்கையை விடுத்தார். எனினும் பெருந்தோட்ட தேசிய இனத்தின் தொழில்சார் உாிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்தநிலையில் அவர்களுக்கான காணி பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும் என்றும் செல்வம் அடைக்கநாதன் கோரிக்கை விடுத்தார். மலையக மக்களுக்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட…

  6. வடக்கில் நடைபெற்ற வன்முறைகள் தொடர்பில் எதிரணி விமர்சனம்! மாவீரர் நாளான நேற்று வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் மேற்கொண்ட அராஜகங்களைப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வன்மையாகக் கண்டித்துள்ளது. “இது ஜனநாயக நாடு எனில் போரில் இறந்தவர்களை அமைதியான முறையில் நினைவேந்த அவர்களின் உறவுகளுக்கு உரித்துண்டு. அதை ஆயுதமுனையில் அடக்க முயல்வது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கில் ஆயுதப் படைகள் நடந்துகொண்ட விதம் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் இராணுவ ஆட்சிக்கு இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டு” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிர…

  7. மட்டக்களப்பு: ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினை கண்டித்து போராட்டம் November 28, 2021 முல்லைதீவு மற்றும் திருகோணமலை பகுதியில் இராணுவத்தினராலும் குண்டர்களினாலும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினை கண்டித்தும் ஊடகவியலாளர்களை தாக்கியவர்களை கைதுசெய்யக்கோரியும் மட்டக்களப்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,மட்டு.ஊடக அமையம்,மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தது. வடக்கு கிழக்கில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் நீதிகோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் என்னும் தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு கா…

  8. முதல் மாவீரர் சங்கர் சத்தியநாதன் இல்லத்தில் நினைவேந்தல்! தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் லெப்ரினன் சங்கருக்கு, ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. மாவீரர் லெப்ரினன் சங்கருடைய இல்லத்தில் கப்டன் பண்டிதர் அவர்களுடைய தாயர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை உப தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான க.சதீஸ் ஆகியோர் ஈகை சுடரேற்றி, அவருக்கு அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர். https://www.meenagam.com/முதல்-மாவீரர்-சங்கர்-சத்/

  9. மாவீரர்களின் கல்லறைகளைச் சிதைத்து அரச பயங்கரவாதத்தை அரசே செய்தது: கோப்பாய் தவிசாளர் நிரோஷ்! AdminNovember 28, 2021 கோப்பாய் உள்ளிட்ட மாவீரர் துயிலும் இல்லங் களை அரசு படைத்தரப்பின் ஊடாக சிதைத்தது நாட்டின் வரலாற்றில் வெட்கக்கேடான அரசபயங்கரவாதம் ஆகும் . போரில் இறந்தவர்களைக் கூட மலினப்படுத்தும் இன வாதமும் வெறித்தனமும் அரசிடம் நிலைத்திருப்பது மானிடத்தன்மை அல்ல என தவிசாளர் நிரோஷ் தெரி வித்தார் . வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக ஈகச்சுடர் ஏற்றி வைத்து உரையாற்று கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் . மேலும் , நினைவுகூர்தல் என்பது எமது உரிமையா கும் . இன்றைய நிலையில் அந்த நினைவுகூரும் உரி மையை இராணுவ பிரசன் னங்கள் , அடாவடித்தனங் கள் ஊடாகத…

  10. அதிக மழைவீழ்ச்சி காரணமாக இரணைமடுக் குளத்தின் நான்கு வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன வடக்கு மாகாணத்தில் பாரிய குளமான இரணைமடுக் குளத்தின் நான்கு வான் கதவுகள், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபால் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோரினால் திறந்து விடப்பட்டுள்ளன.இதேவேளை கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளதாவது, இரணைமடு குளத்தின் நீர்வரத்து அதிகரித்தமையினால் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டன.இரணைமடு குளத்தில் இருந்து வெளியேறுகின்ற நீரினால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தெரிவித்துள்ளார். அதிக மழைவீழ்ச்சி காரண…

  11. இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் ''மாவீரர் தினம்'' அனுசரிப்பு 53 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SANGARAN இலங்கையில் பல்வேறு தடைகளுக்கு மத்தியில், தமிழர் பிரதேசங்களில் இன்று (27) ''மாவீரர் தினம்'' அனுசரிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் நடத்தப்பட்ட ஈழப் போராட்டத்தில், முதலாவதாக உயிர்நீத்த போராளி என கூறப்படும் லெப்டினன்ட் சங்கர் (சத்தியநாதன்), 1982ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி உயிரிழந்தார். அவர் உயிர்நீத்த தினம், மாவீரர் தினமாக வருடா வருடம் நவம்பர் மாதம் 27ம் தேதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. ஈழப் போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகள் அனைவரையும், நவம்பர…

  12. பொதுவிவாதத்திற்கு சுமந்திரன் தயாரானால் பதிலளிக்க நாங்கள் தயார்-காணமலாக்கப்பட்ட உறவுகள் சங்க செயலாளர் பொதுவிவாதத்திற்கு சுமந்திரன் தயாரானால் பதிலளிக்க நாங்கள் தயார் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார். November 26, 2021 வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் இன்று ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியிருந்தனர். இந்நிலையில், “ஊடக சந்திப்பின் போது உங்களுடைய நோக்கத்திலிருந்து மாறி, தொடர்ச்சியாக நீங்கள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மீது குற்றம் சுமத்தி வருகிறீர்கள். அதற்கான காரணத்தை கூறமுடியுமா?” என ஊடகவியலாளரால் வினவப்பட்ட போது, பொதுவிவாதத்திற்கு சுமந்திரன் தயாரானால் பதிலளிக்க நாங்…

  13. திறந்து வைக்கப்பட்டது “கல்யாணி தங்க நுழைவு” இலங்கையின் முதலாவது அதி நவீன தொழிநுட்பத்தின் கூடி கேபிள்களின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய களனி பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் நேற்று(புதன்கிழமை) குறித்த பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்கு “கல்யாணி தங்க நுழைவு” (Golden Gate Kalyani) என பெயர் சூட்டப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1252081

  14. நாடாளுமன்றத்தில் மாவீரர்களிற்கு அஞ்சலி செலுத்தினார் சிறீதரன் இலங்கை நாடாளுமன்றத்தில் மாவீரா்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய அவர், மாவீரர்களை பற்றி உரையாற்றுகையில், தமிழர்கள் அத்தனை பேரினதும் ஆழ்மன உணர்வுகளோடு இரண்டறக் கலந்து போன ஈகைத்திருநாளே தமிழ்த்தேசிய மாவீரர் நாள். இந்தப் பூமிப்பந்தின் தேசமெங்கணும் பரந்து வாழும் உலகத்தமிழர்கள் அத்தனை பேரினதும் ஆழ்மன உணர்வுகளோடு இரண்டறக் கலந்துபோன ஈகைத் திருநாளே தமிழ்த்தேசிய மாவீரர் நாள். மக்களுக்கான போராட்டம் ஒன்றின் தோற்றுவாய்க்கு, மனிதாபிமான மனோநிலையும், மனிதநேய மாண்புகளுமே அடிப்படையாய்…

    • 2 replies
    • 362 views
  15. (ஆர்.யசி.,எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட தரம் குறைந்த உரத்தை திருப்பியனுப்பினாலும் அதற்கான நஷ்டஈடாக 7 டொலர் மில்லியன் வழங்கவேண்டும் என சீன தூதரகம் தெரிவித்திருக்கின்றது. அதனால் அரசாங்கம் திருப்பி அனுப்பிய கழிவுப்பொருட்கள் அடங்கிய உரத்தை மீண்டும் நாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துவருகின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கமத்தொழில் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்குவதாகவே அரசாங்கம் தெரிவித்திருந்…

  16. யாழ்ப்பாணம் தாதிய கல்லூரியில், தலைவர் பிரபாகரனுக்காக கேக் வெட்டும் ஒளிப்படம் பகிரப்பட்டமையால் சிங்கள மற்றும் தமிழ் மாணவர்களிடையே முரண்பாடு உருவாகி அடிதடி ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. லண்டனில் இலங்கைத் தூதரகம் முன்பாக முன்னர் போராட்டம் நடத்திய ஈழத்தமிழர்களை இராணுவ அதிகாரி ஒருவர் கழுத்தில் கையை வைத்து கொலை அச்சுறுத்தல் விடுக்கும் ஒளிப்படத்தை கடற்படையில் இணைந்து தாதிய பயிற்சி பெறும் மாணவர் ஒருவர் கடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமன்று தமிழ் மாணவர்களுக்கு அனுப்பினார் என்றும், பதிலுக்க தமிழ் மாணவர்கள், பிரபாகரனின் பிறந்தநாளான நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கேக் வெட்டிய ஒளிப்படத்தை அந்த மாணவருக்கு அனுப்பினர் என்றும் அதனால் நேற்று அங்கு இருதரப்புக்குமிடையே …

  17. முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாலை 06 .05 மணிக்கு சரியாக சுடர் ஏற்ற விடாது பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். வன்னிவிளான்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொலிசாரின் தடைகளுக்கு மத்தியில் இரு இடங்களில் அஞ்சலி இடம்பெற்றது. கொவிட்-19 நிலையை காரணங்காட்டி 50பேரை மாத்திரம் உள்ளே அனுமதித்துவிட்டு ஐம்பது மீற்றருக்கு அப்பால் பின்னர் வந்தவர்களை தடுத்து நிறுத்திய பொலிசார் முதலில் சென்றவர்கள் தீபமேற்றிவிட்டு வெளியேறிய பின் மீண்டும் ஐம்பது பேரை அனுப்புவதாக கூறினர். இதனையடுத்து 06.05 மணிக்கே நாங்கள் அனைவரும் ஒன்றாகவே தீபமேற்ற வேண்டும் என்று கோரியபோதும் பொலிஸார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை அச்சமயத்தில் அவ்விடத்தில் நின்…

  18. இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக்காண இந்தியாவுடன் இணைந்து ஊக்கத்தை கொடுக்குமாறு அமெரிக்காவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. வொஷிங்டனில் இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான சட்டநிபுணர்கள் தூதுக்குழு அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த தூதுக்குழுவில் மூத்த சட்ட நிபுணர்களான கே.கனக ஈ.ஈஸ்வரனும் நிர்மலா சந்திரஹாசனும் அடங்கியிருந்தனர்.அவர்கள் மூவருமே அமெரிக்க அதிகாரிகளிடம் இந்த வேண்டுகோளை விடுத்தனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அமெரிக்கா மீண்டும் இணையவிருக்கும் நிலையில், தீர்வு காணப்படாமல்…

  19. முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல் முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் மீது நான்கு இராணுவத்தினர் இணைந்து மூர்க்கத்தனமான தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். Lankasri ஊடக நிறுவனத்தின் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் மீதே மூர்க்க தனமாக இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். காயமடைந்த ஊடகவியலாளர் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் https://thinakkural.lk/article/152590

  20. வலுவான ஒற்றையாட்சி கட்டமைப்பைக் கொண்ட சிங்கள, பௌத்த அரசியலமைப்பே உருவாகும் ; அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் சித்தார்த்தன் எம்.பி தெரிவிப்பு (ஆர்.ராம்) தற்போதைய ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சிக் கட்டமைப்பை வலுவாகக் கொண்ட சிங்கள, பௌத்தத்தினை முன்னிலைப்படுத்திய அரசியலமைப்பொன்றே உருவாகும் சாத்தியம் அதிகமுள்ளதாக புளொட் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலிக்கும் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று வெள்ளிக்கிழமை உயர்ஸ்தானிகரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் ந…

  21. சுய நிர்ணய உரிமைக்குரியவர்களுக்கு சமஷ்டி முறையான ஒரு அரசியல் யாப்பை ஏற்படுத்தி சமமான முறையில் வரவேற்றால் தான் சமாதானமும் சுபீட்சமும் உதயமாகும் - சி.வி.விக்னேஸ்வரன் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டில் சமாதானமும் சுபீட்சமும் ஏற்பட வேண்டுமானால் “ஒரு நாடு ஒரு சட்டம்” என்று கூறித் திரிந்தால் அது ஏற்படாது. சுய நிர்ணய உரிமைக்குரியவர்களுக்கு சமஷ்டி முறையான ஒரு அரசியல் யாப்பை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களையும் சமமான முறையில் வரவேற்றால் தான் சமாதானமும் சுபீட்சமும் உதயமாகும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கமத்தொழில் அமைச்சு மற்றும் நீர்ப்…

  22. சுகாதார விதிமுறைகளை மீறி யாழில் போராட்டம் – வேடிக்கை பார்த்த காவல்துறையினா் November 27, 2021 கொரோனா விதிமுறைகளை மீறி, சிறுவர்கள் உள்ளிட்டவர்களை அழைத்து வந்த நபரொருவர் “புலிகள் கொலைகாரர்கள்” என யாழ்.நகர் பகுதியில் சிறிய போராட்டத்தை நடாத்தி இருந்தார். யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் சனிக்கிழமை காலை தேசிய கொடிகள் சகிதம் சுகாதார விதிமுறைகள் எவற்றையும் கடைப்பிடிக்காது , முக கவசங்கள் கூட அணியாதவாறு வந்த நபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எவ்வித சுகாதார நடைமுறைகளையும் பின் பற்றாது போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல்துறையினா் வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தனர். சிறிது நேரத்தின் பின்னர் அவ்விடத்தில் நிற்க வேண்டாம்…

  23. இராணுவக் கெடுபிடிக்கு மத்தியிலும் நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் ரவிகரன் November 27, 2021 இராணுவக் கெடுபிடிக்கு மத்தியிலும் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் (27.11) இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். அஞ்சலி செலுத்திய பின் அவர் கருத்துத் தெரிவிக்கையில், எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார். மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் கரைதுறைப்பற்று பி…

  24. அனைவரும் ஒன்று திரள்வோம் என மாவீரர் நாளில் உறுதிகொள்வோம். -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை! ‘எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறார்கள், உயர்ந்து நிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்’ – தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்- உலக வாழ்வின் சுகங்களனைத்தையும் துறந்து எமது இனத்தின் சுதந்திர வாழ்விற்காக தம்முயிர் ஈர்ந்த மாவீரர்களின் நினைவாக மலர்தூவி சுடரேற்றி நினைவேந்துவதை தடுக்கும் சிறிலங்கா அரசின் செயற்பாடானது மனித விழுமியங்களுக்கு முரணானதாகும். எங்கள் இனம் ச…

  25. 'இலங்கையில் மனித உரிமை மீறல்கள்' - பயிற்சியை நிறுத்த ஸ்காட்லாந்து போலீஸ் முடிவு 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கை காவல் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இலங்கையில் நடப்பதாகக் குற்றம் சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த கவலைகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருவதால், இலங்கை காவல்துறைக்கு அளித்து வரும் பயிற்சிகளை நிறுத்திக்கொள்ள இருப்பதாக ஸ்காட்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது. 2010ஆம் ஆண்டு முதல் இந்தப் பயிற்சி நடைபெற்று வருகிறது. இலங்கை காவல்துறைக்கு ஸ்காட்லாந்து காவல்துறை தொடர்ந்து பயிற்சியளித்து வரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.