Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ‘பீரிஸ்’சை பலிக்­க­டா­வாக்­கிய மஹிந்த மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான கூட்டு எதி­ரணி, ஸ்ரீ லங்கா பொது­ஜன முன்­னணி என்ற போர்­வையில் தீவிர அர­சி­யலில் இறங்­கு­வ­தற்­கான அறி­கு­றிகள் தென்­ப­டு­கின்­றன. மஹிந்த ராஜபக் ஷ ஆட்சி அதி­கா­ரத்தை இழந்து கிட்­டத்­தட்ட இரண்டு ஆண்­டுகள் ஆகப்­போ­கின்ற நிலை­யி­லேயே, புதிய கட்சி ஒன்றின் ஊடாக ஆட்­சியைப் பிடிப்­ப­தற்­கான முயற்­சி­களில் அவர் இறங்­க­வுள்­ள­தாகத் தெரி­கி­றது. அதற்­கான முதல் ஏற்­பா­டா­கவே, முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸ் தலை­மையில் உரு­வாக்­கப்­பட்­டுள்ள ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணி­யாகும். இது ஒன்றும் புதிய கட்சி அல்ல. ஏற்­க­னவே, விமல் கீன­ககே தலை­மையில் உ…

  2. ‘புகையிலைக்குத் தடை என்றால் மாற்றுப் பயிர்ச் செய்கை என்ன?’ “புகையிலைச் செய்கை தடை செய்யப்படுகின்ற நிலையில், புகையிலைச் செய்கையில் தற்போது ஈடுபட்டு வருகின்ற மக்களுக்கு மாற்றுப் பயிர்ச் செய்கைகள் என்ற வகையில் என்னென்ன பயிர்ச் செய்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இல்லையேல் அறிமுகப்படுத்தப்படவுள்ளன” என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில், நிலையியற் கட்டளையின் கீழ், நேற்று (04) அறிக்கையொன்றை விடுத்து கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், யாழ்ப்பாணத்தில் சுமார் 400 ஆண்டு…

  3. -என்.ராஜ் யாழ்ப்பாணம் - தீவகப் பகுதியில், புகையிலை செய்கைக்குப் பதிலாக விவசாயத் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்று பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டிவருவதாக, வடக்கு மாகாண விவசாய பணிப்பாளர் எஸ். சிவகுமார் தெரிவித்தார். யாழ்ப்பாணம் தீவகத்தில் தற்போதைய விவசாய நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு, இன்று (16) கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், புகையிலைச் செய்கையில் இருந்து விடுபட வேண்டும் என்பது மக்களுடைய விருப்பமெனவும் இதற்கமைய, மாற்று பயிர்ச்செய்கைகளில் மக்கள் ஈடுபட வேண்டும் என்ற நோக்கிலேயே, நாங்கள் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறினார். இதற்கமைய, மிளகாய்…

  4. ‘புதிய அரசமைப்பில் நாட்டைப் பிளவுபடுத்தும் அதிகாரங்கள் இருக்கின்றன’ - மகிந்த Editorial / 2019 ஜனவரி 15 செவ்வாய்க்கிழமை, மு.ப. 05:23 Comments - 0 தற்போதைய சூழலில், புதிய அரசமைப்பொன்று தேவையில்லையெனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, அதனை நிறைவேற்ற, தாங்கள் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் நாட்டுக்கு இப்போது அது அவசியமில்லை என்றும், அதில் காணப்படும் அதிகாரங்கள், நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில் தான் இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார். “புதிய அரசமைப்பில், வடக்கு - கிழக்கு இணைப்பு இல்லை, பௌத்தத்துக்கான முன்னுரிமை தொடர்ந்து பேணப்படும், ஒற்றையாட்சியைப் பாதுகாப்போம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்ற போதிலும், தமிழ்த் …

  5. ‘புதிய அரசமைப்புக்கு பின்லாந்தின் அனுபவங்களையும் பெற முடியும்’ “எமது புதிய அரசமைப்புக்கு பின்லாந்தின் அரசமைப்புத் திருத்தம் தொடர்பான அனுபவங்களையும் எமக்குப் பெற்றுக் கொள்ள முடியும்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பின்லாந்தின் பிரதமர் யுஹா சிபிலாவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். “பின்லாந்து சுதந்திரம் பெற்று 100 வருடங்கள் பூர்த்தியடையும் சந்தர்ப்பத்தில், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பின்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டமை இரு நாடுகளுக்குமிடயிலான நட்புறவை வளர்க்கும், பலப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நடவடிக்கையாகும்” என பின்லாந்து பிரதமர் யுஹா சிபிலா தெரிவித்தார்…

    • 4 replies
    • 511 views
  6. ‘புதிய அரசமைப்பை வௌ்ளைவான் கடத்திவிட்டது’ மகேஸ்வரி விஜயனந்தன் “தேசிய பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காகத் தயாரிக்கப்படவிருந்த புதிய அரசமைப்பை, வௌ்ளைவான் கடத்திச்சென்றுவிட்டது என்பதைப் பயமின்றி பொறுப்புடன் தெரிவிக்கின்றேன்” எனத் தெரிவித்த தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், அரசமைப்பின் 21ஆவது திருத்தத்தை தானே கொண்டுவரப்போவதாகத் தெரிவித்தார். “புதிய அரசமைப்பு ஊடாக தேசிய பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்போம் எனக் வாக்குறுதியளித்து தான் எமது நல்லாட்சி ஆட்சியமைத்தது” என்றும் அவர் நினைவூட்டினார். தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் ம…

  7. ‘புதிய அரசியல் சீர்திருத்தத்தின் ஊடாக நல்லதொரு தீர்வை வழங்குவோம்’ “இந்த நாட்டில் இடம்பெற்ற இனப்பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வை வழங்க முடியும். எனவே தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை” என, தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்துக்கான செயலகத்தின் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். “தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே, புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், முஸ்லிம் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன” எனவும் அவர் தெரிவித்தார். அம்பாறை, திருக்கோவில…

  8. -எஸ்.நிதர்ஷன் புதிய கூட்டணியானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் “பி“ அணி என்றுத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கூட்டமைப்புக்கும் இந்தக் கூட்டணிக்கும் கொள்கையில் வித்தியாசமில்லையென்றும் கூறினார். யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில், நேற்று முன்தினம் (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், இன்றைக்கு, வடக்கு. கிழக்கில். இரண்டாம் பெரும் கட்சியாக தாங்கள் இருப்பதாகவும் தங்களுடைய வளர்ச்சியைத் தடுப்பதற்காக, கொள்கை ரீதியாக எந்தவிதமான வித்தியாசமும் இல்லாமல் இன்னுமொரு மாற்று அமைப்பு என்று கூறிக் கொண்டு, ஒரு சிலர் செயற்படுவதாகவும் சாடினார். இவர்கள், வ…

  9. “அரசாங்கத்தால், வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள ‘வலுக்கட்டாயமாகக் காணாமல் போக்கப்படுதலிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாயம் எனும் சட்டமூலம்’ நாட்டுக்குப் பாதகமான மிகவும் பயங்கரமானதாகும்” என்று, முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கெப்பட்டியாகொட சிரிவிமல தேரரிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னரே ஜி.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். “இந்தச் சட்டமூலத்தின் ஊடாக, இராணுவ வீரர் அல்லது அரசியல்வாதி, வெளிநாட்டு நீதிமன்றம் அல்லது வெளிநாட்டு அரசாங்கம் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனத்தால் குற்றஞ்சாட்டப்பட்டு, அதனை விசாரணைக்கு உட்படுத்துவதற்காக, அந்த நாட்டிடம், அந்நபரை ஒப்படைத்தல் அல்லது சர்வதேச நீதிமன்ற…

    • 0 replies
    • 179 views
  10. ‘புனுகுப் பூனை’க்குப் பொருத்தமான பதவி – பொன்சேகாவைக் கிண்டலடிக்கும் நாமல் அமைச்சரவை மாற்றத்தின் போது, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு மாத்திரமே விஞ்ஞான முறையின் அடிப்படையில் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். “சரத் பொன்சேகாவை புனுகுப் பூனை என்று அழைப்பதுண்டு. அவருக்கு அமைச்சரவை மாற்றத்தின் மூலம், வன வாழ் உயிரினங்கள் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. இது அவருக்குப் பொருத்தமான அமைச்சுத் தான். ஆனால் விஜித் விஜிதமுனி சொய்சாவுக்கு கடற்றொழில் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கும் கடலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது” என்றும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார். அதேவேளை, தமக்கு வழங்கப்பட்டு…

  11. முஸ்லிம்களுடனான உறவுக்கு நீண்ட வரலாறு உள்ளதெனத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல, புர்காவை தடைசெய்வதற்கு அவசரப்படவில்லை, அத்துடன் திறந்தவெளி கலந்துரையாடலுக்குப் பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் என்றார். அரசாங்கத் தகவல்கள் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். “நீண்ட வரலாற்றை கொண்ட உறவு இருந்தாலும் கலாசார மாற்றம் ஏற்பட்டது. இங்குமட்டுமல்ல, உலகளாவிய ரீதியில் அந்த கலாசார மாற்றம் தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளைவிப்பதாய் அமைந்திருந்தது. இங்கு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின்னர் இவ்வாறான கலந்துரையாடல்கள் …

  12. ‘புலதிசி’ என்ற பெயரில், சொகுசு ரயில் சேவை ஆரம்பம்! ‘புலதிசி’ எனும் பெயரில் சொகுசு ரயில் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கோட்டையிலிருந்து பொலன்னறுவைக்கு நேற்று(புதன்கிழமை) முதல் இந்த ரயில் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் இந்த பயணத்தில் இணைந்துகொண்டதோடு, அவர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து மருதானை ரயில் நிலையம் வரை பயணித்தார். தினமும் பிற்பகல் 3.00 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் புகையிரதம் இரவு 7.45 மணிக்கு பொலன்னறுவையை சென்றடையும். மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு பொலன்னறுவையிலிருந்து மீண்டும் புறப்படும் ரயில் மு.ப. 9.06 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும். …

  13. புலம்பெயர் தேசங்களில் இயங்கிவரும் தமிழ்த் தேசிய அமைப்புக்களை உடைப்பதற்கு தேவையான காத்திரமான நடவடிக்கைகளை எடுக்குமாறு கே.பி, டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ச கட்டளை பிறப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து தகவல் வெளியிட்டிருக்கும் சிறீலங்கா கார்டியன் எனப்படும் சிங்கள இணைய ஊடகம், வண.பிதா இம்மானுவேல் அடிகளாரின் தலைமையிலான உலகத் தமிழர் பேரவையின் செயற்பாடுகளைக் குழப்பும் வகையில் அவ்வமைப்புக்குள் ஊடுருவல்களை மேற்கொள்ளுமாறு டக்ளஸ் தேவானந்தாவிற்கு ராஜபக்ச கட்டளையிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இவ் ஊடுருவல்களில் ஈடுபடும் உளவாளிகளுக்கு தேவையான பயண ஒழுங்குகளை கோத்தபாய ராஜபக்ச செய்து தருவார் என்றும், டக்ளஸிடம் ராஜபக்ச தெரிவித்திருப்பதாக சி…

  14. -க. அகரன் வவுனியா - பன்றிக்கெய்தகுளம் பகுதியில் முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தால் நாட்டப்பட்ட பயன் தரும் பல தேக்கம் மரங்கள் வன இலகா திணைக்களத்தினரால் கனரக வாகனங்கள் எடுத்துவரப்பட்டு தறிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுவதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நேற்று பன்றிக்கெய்தகுளம், ஆறுமுகத்தான்புதுக்குளம் கிராம அலுவலகர் பிரிவிலுள்ள மரையடித்தகுளம் இந்தியன் வீட்டுத்திட்டம் பகுதியிலுள்ள இரண்டு ஏக்கர் பாரிய தேக்கம் காட்டுக்குள் சென்ற வன இலகா திணைக்கள உத்தியோகத்தர்கள் பாரிய தேக்கம் மரங்களைத் தறித்து வருகின்றனர். பன்றிக்கெய்தகுளம் பகுதியில் 20 முதல் 30 வருடங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டப்பட்டு பொருண்மிய …

    • 0 replies
    • 657 views
  15. ‘புலிகளின் சட்டக் கல்லூரிக்கு வரவில்லை’ - எஸ்.நிதர்ஷன் “தமிழீழ விடுதலை புலிகளால், கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட சட்டக் கல்லூரிக்கு நான் வந்திருக்கவில்லை” என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில், புலிகளால் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட தமிழீழ சட்டக் கல்லூரிக்கு, விக்னேஸ்வரன் சென்றதாக, இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் சில புகைப்படங்கள், செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், யாழுக்கான விஜயமொன்றை மேற்கொண்ட, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெலி வைட்னிங்கை, தனது வாசஸ்தலத்தில், நேற்று முன்தினம் சந்தித்துக் கலந்…

  16. சென்னை/டெல்லி: இலங்கை ராணுவத்துக்கு கடற்படை, விமானப்படை மற்றும் தொழில் நுட்ப உதவிகளை முழு அளவில் வழங்கிவருவதன் மூலம் இந்திய அரசு தனது குடிமக்களையே அவமானப்படுத்தி வருகிறது, என்று இந்தியத் தலைவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 2005-ம் ஆண்டுக்குப் பிந்தைய, விடுதலைப் புலிகளுக்கு எதிரான அனைத்து ராணுவ நடவடிக்கைகளிலும் இலங்கை அரசுக்கு பூரண ராணுவ உதவிகளை வழங்கி வருவது இந்தியாதான் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து நீடித்து வருகிறது. இலங்கை அரசு பாகிஸ்தான் சீனா மற்றும் இந்தியாவிடமிருந்து சம அளவில் ஆயுதங்களை வாங்கி வருவதை பகிரங்கப்படுபத்தியுள்ளது. கடந்த பிப்ரவரியில்... கூடவே, இந்திய அரசு ராணுவ தொழில்நுட்பங்கள், பொறியாளர்கள், கடற்படையினர் மற்றும் விமானப் படையினரையும் …

    • 2 replies
    • 2.8k views
  17. இறுதி யுத்தக்காலப் பகுதியில், தமிழீழ விடுதலை புலிகள் எவரும் தங்களிடம் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் கீழ், 2019.04.04 அன்று அனுப்பிவைக்கப்பட்ட விண்ணபத்துக்கு, 2019 ஜூன் 25ஆம் திகதி குறித்து அனுப்பிவைக்கப்பட்டுள்ள பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அதிகாரியான பிரிகேடியர் ஏ.எம்.எஸ். பீ அத்தபத்து என்பவரினால் கையொப்பமிடப்பட்டு அந்தக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தமிழ்மிரரின் சார்பில், இலங்கை இராணுவத்துக்கு அனுப்பட்டிருந்த விண்ணப்பத்துக்கு, மூன்று மாதங்களுக்குப் பின்னர் சிங்கள மொழியில் கிடைக்கப்பெற்றுள்ள பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இறுதி யுத்தக்காலத்தில் தமிழீழ வி…

  18. ‘புலிகள் மௌனித்த பிற்பாடே த.தே.கூ அரசியலை முன்னெடுத்தது’ Editorial / 2019 ஓகஸ்ட் 12 திங்கட்கிழமை, பி.ப. 04:25 Comments - 0 க.விஜயரெத்தினம், வடிவேல் சக்திவேல், எஸ்.சபேசன் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டும்தான் தமிழ் மக்களுக்காகப் போராடியதாகத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், 2009ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் மௌனித்த பிற்பாடுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுநேர அரசியல் பணியை, ஜனநாயக ரீதியாக முன்னெடுத்ததாகத் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்களைத் தெளிவூட்டும் கூட்டம், அவரது தலைமையில், களுவாஞ்சிகுடியில் இன்று (12) நடைபெற்ற போதே, அவர் இவ…

  19. ‘புலிக்கதை கூறி ‘நரி’ ஆதாயம் தேட முயற்சி’ நரியொன்று, புலிக்கதையை கூறி, அரசியல் ஆதாயம் தேடிக்கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மறைத்து ஆயிரம் பொய்களைக் கூறினாலும், உண்மைகள் ஒருபோதும் வரலாற்றை மாற்றி எழுதப்போவதில்லை என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எமக்கு உண்டு என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. அக்கட்சி, ஊடகங்களுக்கு நேற்று (04) விடுத்திருந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புலிகள் தமது பயிற்சி முகாமாகப் பாவித்தார்கள் என்பதால் தாமும் அதை இராணுவ முகாமாகப் பாவிக்கின்றோம்…

  20.  ‘புலிக்கொடியுடன் பரிகசித்தனர்’ அழகன் கனகராஜ் “மாவீரர் தினத்தன்று, ஆயிரக்கணக்கான இளைஞர்கள், புலிக்கொடிகளுடன் மோட்டார் சைக்கிள்களில், இராணுவ முகாம்களுக்கு முன்பாக வந்து, இராணுவத்தை நோக்கி பரிகசித்தனர்” என்று, ஒன்றிணைந்த எதிரணி, நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை குற்றஞ்சாட்டியது. தேசிய கலந்துரையாடல்கள், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம், அனர்த்த முகாமைத்துவ அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவ்வணியின் உறுப்பினரான விமலவீர திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். எனினும், இந்தக் கருத்தை கடுமையாக எதிர்த்த, தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் ம…

  21. ‘பூமியதிர்வில் மூழ்க வேண்டும்’ “மக்களின் பணத்தை நாசமாக்கின், நாடாளுமன்றத்துக்கு, யாராவது மேலேவந்து குண்டுவீசாவிடின், பூமியதிர்ச்சி ஏற்பட்டு, நாடாளுமன்றமே மூழ்க வேண்டும்” என்று, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். புத்தளத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “இந்த அரசாங்கத்துக்கு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. அவ்வாறு பெரும்பான்மை இல்லாத அரசாங்கம், நாடாளுமன்றத்தின் விருப்பமின்றிச் செயற்படுவதற்கு, மக்கள் வாக்களிக்கவில்லை” என்றும் அவர் குறி…

  22. ‘பெப்.4க்கு முன்னர் வரைவு வெளிவரும்’ - எம்.சுமந்திரன் Editorial / 2018 டிசெம்பர் 29 சனிக்கிழமை, பி.ப. 01:13 Comments - 0 -டி.விஜிதா அரசமைப்பு மீறப்படும் போது, பாதிக்கப்படுவது தமிழ் மக்கள் என்ற ரீதியில், அரசியலமைப்பு மீறப்படும் போது, தடுத்து நிறுத்துவதற்கான உரிமை தமிழ் மக்களுக்கே உரியதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார். எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னதாக ஐக்கிய தேசிய கட்சியும், ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்த ஒரு வரைவு வெளிவருமெனவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று (29) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். …

  23. ‘பெரும்பான்மை கட்சிகளுக்கு வாக்குகளை அளிப்பதால் பிரயோசனம் இல்லை’ -ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ் “ஐக்கிய தேசியக் கட்சிக்கோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ தமிழ் மக்கள் அளிக்கும் வாக்குகள் வேறு சமூகத்தவர்களுக்குப் போய்ச் சேர்வதால் அவை பிரயோசனமற்றவையாகின்றன” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். ஏறாவூர் ஐயன்கேணி தமிழ் வித்தியாலயத்தில், பாடசாலை அதிபர் எம். மனோகரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழா நிகழ்வுகளில், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், …

  24. ‘பெரும்பான்மை தலைவர்களை இசையச் செய்வது முயல்கொம்பானது’ “புதிய அரசமைப்பு விடயத்தில் பெரும்பான்மை இனத் தலைவர்களை இசையச் செய்வதென்பது, முயல்கொம்பான விடயமாகும்” என, இலங்கைத் தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பு, வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையில் நேற்று (03) நடைபெற்ற கலைவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “இந்த நாட்டிலே தற்போது புரட்டப்பட்டிருக்கின்ற புதிய பக்கங்கள், எமது கனவை நனவாக்குகின்ற செயற்பாட்டைச் செய்து கொண்டிருக்கின்றன. ஒரு ஜனநாயக நாட்டின் நடவடிக்கைகளின் முற்றுப்புள்ள…

  25.  ‘பேய் பிடித்த முதலமைச்சர்’ கவிதா சுப்ரமணியம் “நாட்டிலுள்ள தமிழ் மற்றும் சிங்கள சமுதாயத்துக்கு இடையில், இனவாதத்தையும் விரோதத்தையும் தூண்டிவிடும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு, இனவாதம் எனும் பேய் பிடித்துள்ளது” என்று, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில், நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது, தொடர்ந்துரைத்த அவர், “நாட்டுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள, சி.வி.யின் இனவாத மற்றும் மதவாதக் கருத்துக்களுக்காக, வடக்கிலுள்ள தமிழ் மக்கள், அவருக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும். அவ்வாறு செய்தால் மாத்திரமே, அவர்களால் முன்னேற முட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.