ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
சந்திரிகா அரசாங்கத்தில் ஊடகங்களிற்கு நான் பல தகவல்களை வழங்கினேன்- பிரதமர் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக பதவி வகித்தவேளை பல தகவல்களை தான் ஊடகங்களிற்கு வழங்கியதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நான் அரசாங்க கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது முன்னாள் ஜனாதிபதி என்னை நிருபர் என அழைப்பார் என பிரதமர்தெரிவித்துள்ளார். நான் தெரிவிக்கும் செய்திகள் ஆளும் கட்சிக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் செம்மைப்படுத்திய பின்னர் அவற்றை வழங்கினேன் எனவும் பிரதமர்தெரிவித்துள்ளார். ஊடகங்க…
-
- 0 replies
- 231 views
-
-
பாட்டலிக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை வாசிப்பு போலியான சாட்சிகளை உருவாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று வாசிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அவரது சாரதியாக பணியாற்றிய திலும் துசித்த குமார மற்றும் வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல ஆகியோருக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாட்டலிக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை வாசிப்பு (adaderana.lk)
-
- 0 replies
- 249 views
-
-
யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலையின் அதிபர் தாக்கியதில் மாணவர் ஒருவரின் காதின் செவிப்பறை பாதிப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றின் அதிபர் தாக்கியதில் க.பொ.த. சாதாரண தரத்தில் பயிலும் மாணவர் ஒருவரின் ஒரு பக்கக் காதின் செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மாகாண கல்வி அமைச்சின் அறிவுறுத்தலில் ஒழுக்காற்று விசாரணையும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அதிபரின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், காதில் ஏற்பட்ட வலி காரணமாக மாணவன், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு மருத்துவ சோதனையில் மாணவனின் ஒரு காதின் செவிப்பறை …
-
- 8 replies
- 588 views
- 1 follower
-
-
(எம்.நியூட்டன்) யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்கங்களின் சம்மேளன பிரதி நிதிகளுக்கு யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவருக்குமிடையிலான சந்திப்பு யாழ். இந்திய துணைத்தூதுவராலயத்தில் நேற்று நடைபெற்றது. இந்த சந்திப்பிலேயே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சம்மேளனத் தலைவர் அன்ன ராசா, யாழ். மாவட்ட மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினால் பாதிக்கப்படுகின்றார்கள். அத்துமீறிய சட்டவிரோத இந்திய மீனவர்களின் பாதிப்பு எங்களுடைய மீனவ பரம்பலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதோடு மீனவ சமூகத்தில், மீனவர்கள் கூலி தொழிலுக்கு செல்ல வேண்டிய துர்ப்பா…
-
- 0 replies
- 236 views
-
-
தேர்தல் ஆணைக்குழுவினால், தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினா் மனோகணேசன் தொிவித்துள்ளாா்..”டோர்ச் லைட்” என்ற மின்சூள் சின்னம் கூட்டணியின் அதிகாரபூர்வ சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான கடிதத்தை தேர்தல் ஆணைக்குழு ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா, தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளர் சந்திரா சாப்டருக்கு அனுப்பி வைத்துள்ளார் எனவும் அவா் தொபிவித்துள்ளாா். இதுபற்றி கூட்டணி தலைவர் மனோ மனோகணேசன் ஊடகங்களுக்கு கூறியுள்ளதாவது, 2015 வருடம் ஜூன் 3ம் திகதி கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில், ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சி தலை…
-
- 2 replies
- 351 views
-
-
(நா.தனுஜா) புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரோன் திரிபு ஏனைய திரிபுகளை விடவும் வீரியம் கூடியதாக இருக்குமாயின், இலங்கையின் தற்போதைய நிலைவரம் எதிர்வருங்காலத்தில் மிகமோசமடையக்கூடும். ஆகவே மிகமோசமான நிலையைக் கையாள்வதற்கு இப்போதிருந்து தயாராகவேண்டும். அதன் ஓரங்கமாக வெளிநாடுகளிலிருந்து வருகைதருபவர்களுக்கான பயணக்கட்டுப்பாடுகளை விதித்தல் தொடர்பில் உடனடியாக அவதானம் செலுத்தப்படவேண்டும் என்று சுகாதாரக்கொள்கைகளுக்கான நிலையத்தின் தலைவர் வைத்தியநிபுணர் ரவீந்திர ரன்னன் எலிய சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனா 19 வைரஸின் ஒமிக்ரோன் திரிபு நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதுடன் அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் கையாள்வதற்குத் தயாராக வேண்டியதன் அவசியம் குறித்து தனது உத்தியோகபூர்வ டுவி…
-
- 2 replies
- 347 views
-
-
இலங்கையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களால் உயிர்களுக்கு ஏற்படும் பேராபத்து ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 28 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,KRISHANTHAN படக்குறிப்பு, ஹட்டன் - கேஸ் சிலிண்டர் வெடித்த இடங்களில் ஒன்று இலங்கையில் கடந்த சில வாரங்களாகவே, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் சமையல் எரிவாயு அடுப்புக்கள் வெடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன. வீடுகள், உணவகங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறு சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்புக்கள் வெடிக்கும் சம்பவங்கள் பதிவாகி வருவதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறு …
-
- 2 replies
- 635 views
- 1 follower
-
-
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜூநாத் சிங் ஆகியோருக்கான சந்திப்பு நேற்றைய தினம் இந்திய பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து அச்சந்திப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு தரப்பின் உயர்மட்ட ஒத்துழைப்பை மீளாய்வு செய்வது தொடர்பில் உயர்ஸ்தானிகரும், பாதுகாப்பு அமைச்சரும் கருத்துக்களை பரிமாற்றிக் கொண்டார்கள். இலங்கை கடற்பரப்பில் நியூடய்மன் மற்றும் எக்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்துக்குள்ளானபோது தீ பரவலை கட்டுப்படுத்துவதற்கும், சமுத்திர பா…
-
- 0 replies
- 318 views
-
-
நாடு திரும்புகிறது சுமந்திரன் தலைமையிலான குழு : சம்பந்தனுக்கு முதல் விளக்கம் , 18 இல் மத்திய குழு கூட்டம் (ஆர்.ராம்) அமெரிக்கா, கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகளில் அனைத்துச் சந்திப்புக்களையும் நிறைவுசெய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான குழுவினர் அடுத்தவார முற்பகுதியில் நாடு திரும்பவுள்ளனர். இவ்வாறு நாடு திரும்பும் குழுவினர் முதலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்து தாம் சந்தித்த தரப்பினருடனான கருத்துப்பரிமாற்றங்கள் சம்பந்தமாக பூரணமான விளக்கங்களை வழங்கவுள்ளனர். இந்த விளக்கங்களை வழங்கும் சந்திப்பில் சுமந்திரனுடன் பயணங்களில் பங…
-
- 15 replies
- 1.1k views
-
-
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கம் சுவீகரிக்கும் செயற்பாட்டை கைவிட வேண்டும் - வினோ நோகராதலிங்கம் ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் மன்னார் ,வவுனியா,முல்லைத்தீவு,கிளிநொச்சி வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கம் சுவீகரிக்கின்ற செயற்பாட்டை உடனடியாக கைவிட வேண்டுமென சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சுகாதார அமைச்சு மற்றும் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாத…
-
- 0 replies
- 273 views
-
-
முள்ளிவாய்க்காலில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உண்மைகள் திரிபுபடுத்தப்பட்டுள்ளது என்கின்றது இராணுவம் அண்மையில் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உண்மைகள் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இராணுவத் தலைமையகம், ஊடகவியலாளர் மீது படையினர் தாக்குதல் நடத்தவில்லை எனவும் கூறியுள்ளது.இலங்கை இராணுவத் தலைமையகம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ வீரர்களுடன் பேசியவாறு பின்னோக்கிச் சென்றவேளை, ஊடகவியலாளர் தனது மோட்டார் சைக்கிளின் மீது மோதி, கம்பி வேலி பொருத்தப்பட்டிருந்த இடத்தில் விழுந்தார் என இராணுவம் கூறியுள்ளது.இதனை அடுத்து அங்குவ…
-
- 0 replies
- 175 views
-
-
காணி உரிமையாளர்கள் – ஆளுநர் சந்திப்பு திடீர் இரத்து December 1, 2021 வடக்கு மாகாண ஆளுநருடன் மாதகல் காணி உரிமையாளர்கள் சந்திப்பதற்கு இன்று ஏற்பாடுகள் இடம்பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்ட போதும் திடீரென அந்த சந்திப்பை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலகத்தால் காணி உரிமையாளர்களுக்கு இன்று மதியம் 2 மணிக்கு வடமாகாண ஆளுநர் காணி உரிமையாளர்களை சந்திக்கவிருப்பதாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென அந்த சந்திப்பை ரத்து செய்யப்பட்டதாகவும் நாளை காலை 8 மணிக்கு அந்த சந்திப்பு நடைபெறும் எனவும் ஒரு சில காணி உரிமையாளர்களுக்கு பிரதேச செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நி…
-
- 0 replies
- 178 views
-
-
‘நிலத்தை பறிப்பதும் எம் உயிரைப் பறிப்பதும் ஒன்றே’ – வடக்கு ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம் December 1, 2021 காணி அளவீட்டு பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக நடந்து கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என வடக்கு ஆளுநர் கூறியதாக வெளியான செய்தியை அடுத்து வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்றைய தினம் புதன்கிழமை காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலத்தை பறிப்பதும் எம் உயிரைப் பறிப்பதும் ஒன்றே, எமது நிலம் எமக்கு வேண்டும்,காணிகளை சுவீகரிக்கதே, ஆளுநரே காணி அபகரிப்புக்கு உடந…
-
- 0 replies
- 163 views
-
-
அம்மணமாய் பாடசாலைக்கு செல்லும் அவல நிலையை எடுத்துச் சொல்லுங்கள். வடமாகாண ஆளுனரே! அரசாங்க அதிபரே! மனித உரிமை ஆர்வலர்களே! தொண்டு நிறுவனங்களே! இது உங்களின் கவனத்திற்கு! பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் #இடுப்பளவு #வெள்ளநீரில் #உடைகள் #ஏதுமின்றி #நடந்து #வந்து #கரையை சேர்ந்து, A9 வீதியோரத்தில் நின்று பாடசாலைக்கு தயாராகிச் செல்கின்றனர். தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொடிகாமம் J/327 கிராமசேவையாளர் பிரிவு கிராமம் தொடரும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. பல வருடங்களாக நாம் யாரை எல்லாமே கேட்டு விட்டோம் இன்னும் ஒன்றுமில்லை. கிராம மீள் எழுச்சி என்கிறார்கள், நகர அழகுபடுத்தல் என்கிறார்கள் ஆனால் நாங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. எந்த அரசியல்வாதிகள…
-
- 3 replies
- 584 views
-
-
புத்தூர் பிரதேச சபை உறுப்பினர் , தனங்களப்பில் சடலமாக மீட்பு! December 1, 2021 யாழ்ப்பாணம் வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர், சாவகச்சேரி தனங்களப்பு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமைசடலமாக மீட்கப்பட்டுள்ளார். புத்தூர் வடக்கு , ஆவரங்கால் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் சிவபாலன் என்பவரே அவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ஆவரங்கால் பகுதியை சேர்ந்த குறித்த நபர் , தனங்களப்பு பகுதியில் தென்னம் தோட்டம் ஒன்றினை பராமரித்து வருவதுடன் தோட்டத்துடன் இணைந்த வீட்டில் வசித்தும் வந்துள்ளார். அந்நிலையில் கடந்த சில தினங்களாக அவரின் நடமாட்டத்தை அயலவர்…
-
- 0 replies
- 234 views
-
-
யாழில்... கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல்- ஒருவர் கைது யாழ்ப்பாணம்- கோட்டைக்கு அண்மையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையத்திற்கு அண்மையிலுள்ள குறித்த தேவாலயத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதையடுத்து, அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணை நடத்தியதோடு குறித்த தாக்குதலை நடாத்திய கொட்டடி பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளார்கள். கைது செய்யப்பட்டவர் மது போதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த தாக்குதலின் பிண்ணனி தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2021/1252881
-
- 3 replies
- 518 views
-
-
இலங்கை அரசை நம்பி ஒப்படைத்த உறவுகளுக்கு நீதி வேண்டும்-யோ.கனகறஞ்சினி Posted on November 30, 2021 by நிலையவள் 24 0 இராணுவத்தினரையும், இலங்கை அரசையும் நம்பி ஒப்படைத்த உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற நீதியை கேட்டு தான் போராடி கொண்டிருக்கின்றோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி யோகராசா கனகறஞ்சினி தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தினால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக ஒதுக்கப்பட்ட 300 மில்லியன் ரூபாவினை அரசாங்கம் எதற்கு பயன்படுத்த போகின்றது என்பதனை அரசாங்கம் தான் அதனை ஏற்று கொள்ள வேண்டும்.வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு இழப்பீட்டிற்காகவோ அல்லது வாழ்வாதாரத்தை கொடுப்பத…
-
- 1 reply
- 209 views
-
-
மேற்குலக நாடுகளின் கடன் பொறியில் இருந்து இலங்கையை காப்பாற்றினோம்-சீனா துாதரகம் November 30, 2021 மேற்குலக நாடுகளின் கடன் பொறியில் இருந்து இலங்கையை சீனா காப்பாற்றியதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இலங்கை இதுவரை பெற்றுக்கொண்டுள்ள சர்வதேச கடன்களில் சீனாவிடம் 10 வீதமான கடனையே பெற்றுள்ளது. அது 3 ஆயிரத்து 388.2 மில்லியன் டொலர்கள் என இலங்கை மத்திய வங்கியை மேற்கோள்காட்டி சீனத் தூதரகம் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு விட தயாராகிய நேரத்தில் சீனா உதவுவதற்காக முன்வந்து, இலங்கையை கடன் பொறியில் இருந்து காப்பாற்றியது எனவும் சீனத் த…
-
- 2 replies
- 401 views
- 1 follower
-
-
வவுனியாவில் இளவயதினருக்கு எயிட்ஸ் நோய்- மருத்துவர் சந்திரகுமார் November 30, 2021 வவுனியாவில் கடந்த சில ஆண்டுகளில் 29பேர் எயிட்ஸ் நோயாளிகளாக இனம்காணப்பட்டுள்ளதுடன் இளவயதினரே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி கு.சந்திரகுமார் தெரிவித்தார். எயிட்ஸ் நோய் தொடர்பாக இன்று ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவித்த அவர், ‘உலக எயிட்ஸ் தினம் மார்கழி மாதம் 1 ம் திகதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கபட்டு வருகின்றது. இம்முறை சமத்துவமின்மையை ஒழிப்போம், எயிட்ஸ்சை ஒழிப்போம், பெருந்தொற்றை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் உலக எயிட்ஸ் தினம் அனுஸ்டிக்கபட இருக்கின்றது. …
-
- 1 reply
- 481 views
-
-
யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீட கட்டட தொகுதியின் கட்ட நிர்மாணப்பணிகள் ஆரம்பம் (எம்.மனோசித்ரா) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழிநுட்பம் மற்றும் உயிர்த்தொகுதித் தொழிநுட்ப பீடத்திற்குத் தேவையான கட்டிடங்களுக்கான கிளிநொச்சி கட்டிட நிர்மாண ஒப்பந்தம் - 2 ஆம் கட்டத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழிநுட்பம் மற்றும் உயிர்த்தொகுதித் தொழிநுட்ப பீடத்திற்குத் தேவையான கட்டிடங்களுக்கான கிளிநொச்சி கட்டிட நிர்மாணக் கருத்திட்டம், உலக வங்கியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்வதற்காக 2019 ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அ…
-
- 0 replies
- 278 views
-
-
யாழ்.கரையோரங்களில் சடலங்கள் தொடர்ந்து கரையொதுங்குகின்றன யாழ்.மருதங்கேணி கடற்பகுதியில் சடலம் ஒன்று, இன்று (செவ்வாய்க்கிழமை) கரையொதுங்கியுள்ளது. அதாவது, நான்கு நாட்களில் நான்காவதாக இந்த சடலம் கரையொதுங்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை வல்வெட்டித்துறை,மணற்காடு கரையோரத்தில் இரு சடலங்களும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவு கடற்பரப்பில் ஒரு சடலமும் கரையொதுங்கியுள்ள நிலையில், இன்றையதினம் மருதங்கேணி கடற்பகுதியிலும் ஒரு சடலம் கரையொதுங்கி உள்ளது. கரையொதுங்கிய நான்கு சடலங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியாத நிலையில், சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளன. குறித்த சம்பவங்க…
-
- 0 replies
- 282 views
-
-
மன்சு லலித் வர்ணகுமார பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து நிலவிய வெற்றிடத்திற்கு வாத்துவகே மன்சு லலித் வர்ணகுமார நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான வர்த்தமானி அறிவிப்பு இன்று (30) வௌியிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்சு லலித் வர்ணகுமார பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் (adaderana.lk)
-
- 0 replies
- 374 views
-
-
வரலாற்றின் முதல் தடவையாக யாழ் மாநகரசபையில் செங்கோல் வரலாற்றின் முதல் தடவையாக யாழ் மாநகரசபை அமர்வு செங்கோலுடன் மாநகர முதல்வர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது மாநகர முதல்வர் வி. மணிவண்ணனின் வேண்டுகோளுக்கு அமைய அண்மையில் குகபதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானம் யாழ்.மாநகர சபைக்கு செங்கோல் ஒன்றினை வழங்கியது. நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 11ஆவது நிர்வாக அதிகாரி குமரேஷ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட செங்கோலுடன் வரலாற்றில் முதல் தடவையாக இன்றைய மாநகர அமர்வு மாநகர முதல்வர் தலைமையில் நடைபெற்றது. …
-
- 0 replies
- 358 views
-
-
கனிய மண் அகழ்விலிருந்து எமது கிராமத்தை காப்பாற்றுங்கள் – புடவைக்கட்டு கிராம மக்கள் கோரிக்கை Posted on November 29, 2021 by தென்னவள் 29 0 திருகோணமலை புடவைக்கட்டு கிராமத்தை கனிய மண் அகழ்வில் இருந்து பாதுகாக்க உதவுங்கள் என குச்சவெளி பிரதேச பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புடவைக்கட்டு கிராமம் 1950 ஆம் ஆண்டு முன்னோர்களால் குடியேறி உருவாக்கப்பட்ட 72 ஆவது வருட வரலாற்றைக்கொண்ட ஒரு பழமை வாய்ந்த கிராமமாகும். இங்கு தற்போது முஸ்லிம்கள், இந்துக்கள், சிங்களவர்கள் என 450 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் மீன்பிடித் தொழிலையே தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டு கடற்கரையோரங்களில் மணை…
-
- 0 replies
- 317 views
-
-
விலையை நிலைப்படுத்துவதற்கு மியன்மாரில் இருந்து அரிசி இறக்குமதி Posted on November 30, 2021 by தென்னவள் 21 0 சந்தையில் அரிசி விலையை நிலைப்படுத்துவதற்காக அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பற்றாக்குறையின்றி போதுமானளவு அரிசியை நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கும், பாதுகாப்பான கொள்ளளவைப் பேணுவதற்கும் இயலுமான வகையில் 100,000 மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு 2021 செப்ரெம்பர் மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அரசாங்கத்திடமிருந்து அரசாங்கத்திற்கு எனும் அடிப்படையின் கீழ் இலங்கை அரசாங்கம் மற்றும் மியன்மார் அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப…
-
- 0 replies
- 289 views
-