ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143607 topics in this forum
-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் போராட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவில் இன்று (30) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது . கொவிட் - 19 சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது . கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 1757 ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் இடம்பெறும் கொட்டகைக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கே எங்கே உறவுகள்…
-
- 0 replies
- 186 views
-
-
சிறப்பான போக்குவரத்து சேவை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ் மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து சேவை கிடைக்கும் வகையில் அரச மற்றும் தனியார் போக்குவத்து சேவை விரைவில் ஒழுங்குபடுத்தப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையத்தினை பயன்படுத்துவது தொடர்பான இழுபறி நிலைக்கு விரைவில் இறுதித் தீர்வு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் தனியார் போக்குவரத்து துறையினருக்கும் இடையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான கலந்துரையாடல் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர், மக்களுக்கு பாதிப்புக்…
-
- 0 replies
- 286 views
-
-
கூட்டமைப்புக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு! தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. நாளைய தினம்(வெள்ளிக்கிழமை) கொழும்பில் குறித்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரா.சம்பந்தன் தலைமையிலான குறித்த குழுவில் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கூட்டமைப்பின் சார்பிலும், ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் பங்கேற்கவுள்ளனர். இச்சந்திப்பில் மனோ கணேசனும் பங்கேற்பாரென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இலங்கை, இந்திய ஒப்பந்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும், இனப்பிரச்சினைக்கு தீர்வு …
-
- 0 replies
- 286 views
-
-
”இராணுவ ஆட்சிக்கான ஆயுதமாக ஞானசார தேரர் பயன்படுத்தப்படுகின்றார்”: சிறீதரன் எம்.பி! சிறையில் இருந்த ஞானசார தேரரை கொண்டு வந்து நாட்டில் இராணுவ ஆட்சியை கொண்டு வருவதற்கான ஆயுதமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்துகின்றார் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன்போது அவர் கூறியுள்ளதாவது, இராணுவ தளபதிகளை அமைச்சின் செயலாளர்களாக அவர் நியமித்துள்ளார். கிட்டத்தட்ட 14 அமைச்சின் செயலாளர்கள் இராணுவ தளபதிகள். அத்துடன் ஆளுநர், திணைக்கள தலைவர்களும் அவ்வாறே நியமிக்கப்பட்டுள்ளனர்…
-
- 0 replies
- 190 views
-
-
இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணய செலவாணி கையிருப்பு இன்று 3.1 பில்லியன் அமெரிக்க டொலரை அடைந்தது நாட்டின் மொத்த வெளிநாட்டு நாணய செலவாணி கையிருப்பு இன்று 3.1 பில்லியன் அமெரிக்க டொலரை அடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் உத்தியோக பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் தனது பதிவில்,ஏற்கனவே தாம் அறிவித்தப்படி அதிகாரபூர்வமாக இந்த கையிருப்பை அடைய முடிந்திருத்திருக்கின்றது.அதேநேரம் இந்த தொகையை 2021ஆம் ஆண்டு முடியும் வரையில் தங்கவைத்துக்கொள்ள முடியும் என தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் கடந்த காலங்களில் தொடர்ந்தும் நிலவி வந்த டொலர் ப…
-
- 12 replies
- 699 views
-
-
நாட்டில் டொலர் பிரச்சினை மிகவும் மோசமாக மாறியுள்ளது. அதன் சுமையை மக்கள் சுமக்க முடியாத நிலைக்கு வந்துள்ளனர் எனத் தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விசேடமாக வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதுடன், வேலைவாய்ப்பு திண்டாட்டம் அதிகரித்துள்ளது என்றார். விவசாயிகள் செய்தவறியாது தவிக்கின்றனர். எனவே இந்தப் பிரச்சினைக்கு உடனடியான தீர்வு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்கு உலக நாடுகள் அனைத்தும் முகம் கொடுத்திருந்தாலும் 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் பல நாடுகள் பொருளாதார முன்னேற்றத்தை காட்டியுள்ளதால், நாமும் இந்த பிரச்சனையை தீர்க்கவேண்டும் என வலியுறுத்தினார். எனவே, அரசாங்கத்துக்கு கடமையொன்று உள்ளது உடனடியாக சர்வதேச நாணய நிதியத…
-
- 2 replies
- 419 views
-
-
2022 ஜனவரி மாதம் டுபாய் புறப்படுவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட திட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) நடைபெறும் எக்ஸ்போ கண்காட்சியில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் இதற்காக ஜனவரி 2 ஆம் திகதி டுபாய் புறப்படுவதற்கு பிரதமர் திட்டமிட்டிருந்தார். எனினும் இலங்கையில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட காரணங்களால் பிரதமர் தனது டுபாய் பயணத்தை இரத்து செய்துள்ளதாக பிரதமரின் தலைமை அதிகாரி யோஷித ராஜபக்ஷ உறுதிபடுத்தியுள்ளார். பிரதமரின் டுபாய் விஜயம் இரத்து | Virakesari.lk
-
- 1 reply
- 405 views
-
-
பங்களாதேஷ் வங்கியிடம் இருந்து இலங்கை பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பு பங்களாதேஷ் வங்கியிடம் இருந்து இலங்கை பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.கடனை திருப்பிச் செலுத்தும் மூன்று மாத கால அவகாசம் முடிவடைந்த நிலையில் இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கால அவகாசம் நீடிக்கப்பட்டது என பங்களாதேஷ் வங்கி அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, பங்களாதேஷூக்கு கடன் தொகைக்கு வட்டியாக 2 சதவீதத்தை இலங்கை அரசாங்கம் செலுத்தவேண்டும்.ஆறு மாதங்களுக்குப் பின்னரும் தவணை நிதி செலுத்தப்படாமல் இருந்தால், 2.5…
-
- 13 replies
- 724 views
- 1 follower
-
-
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக சமூக வலைத்தளங்களிலுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை – கிங்ஸ்லி ரத்நாயக்க Digital News Team 2021-07-28 ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் உள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் சமூக ஊடக பதிவுகளைக் கண்காணிக்கும் factcrescendo இணையத்தளம், இந்தச் செய்திகள் முற்றிலும் தவறானவை எனத் தெரிவித்துள்ளது. இந்தப் பதிவுகள் அனைத்தும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்கவும் உறுதிப்படுத்தியுள்ளார். எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதியால் எடுக்கப்படும் …
-
- 2 replies
- 320 views
-
-
பிபிலையிலிருந்து செங்கலடி வரையிலான வீதி பொதுமக்களின் பாவனைக்கு! சவூதி அரேபிய நிதி உதவியின் கீழ் 7200 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட பேராதனை – பதுளை – செங்கலடி (A005) வீதியின் பிபிலையிலிருந்து செங்கலடி வரையிலான 86.7 கிலோமீற்றர் பகுதி பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது. மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் பேராதனை – பதுளை – செங்கலடி (A005) வீதி 275 கிலோமீற்றர் நீளமானது. பிபில முதல் செங்கலடி வரையிலான 86.7 கிலோமீற்றர் நீளமான வீதி ஆளும் தரப்பு பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழ்மை) விரிவுபடுத்தப்பட்டு பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படுகிறது . பிபிலையிலிருந்து செங்கலடி வரையிலான அபிவிருத…
-
- 3 replies
- 385 views
-
-
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இம்முறை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண ஆதரவுடன் “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” ஆக நடைபெறவுள்ளது. யாழ். பட்டத் திருவிழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும், இடையிலான சந்திப்பு நேற்று (28) கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” இனை கோலாகலமாக நடத்துவதற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் முழு ஆதரவை வழங்குவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார். ஆண்டுதோறும் தைப்பொங்கல் தினத்தில் யாழ். வல்வெட்டித்துறை கடற்கரையில் பட்டத் திருவிழா நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக…
-
- 0 replies
- 647 views
-
-
மக்கள் தயார் என்றால், IMFடம் கையேந்த அரசாங்கமும் தயார்! December 29, 2021 சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கும் யோசனைகளின் அழுத்தங்களை மக்கள் தாங்கிக் கொள்ள தயாராக இருப்பார்களாக இருந்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல அரசாங்கம் தயாராக இருப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்ற நாட்டையே தாம் 2014ஆம் ஆண்டு ஒப்படைத்ததாகவும், அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய செய்தது என்கிறார். சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்ல வேண்டும் என்கிறார்கள். கடந்த அரசாங்கமும் அங்கு சென்று கடனைப் ப…
-
- 1 reply
- 321 views
-
-
சீனாவுடன் மேற்கொண்ட நாணய மாற்று ஒப்பந்தமே அந்நிய செலாவணி கையிருப்பு உயர்வுக்கு காரணம் – தகவல் வெளியானது சீனாவுடனான நாணய பரிமாற்ற ஒப்பந்தம் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை சுமார் 3.1 பில்லியன் டொலர்களாக உயர்த்த உதவியுள்ளது என சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சீன மக்கள் வங்கியுடன் 1.5 பில்லியன் டொலர் நாணய பரிமாற்றம் இறுதி செய்யப்பட்ட பின்னர் கையிருப்பு அதிகரிக்கப்பட்டது என ஏஜென்சியை மேற்கோளிட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் நாணய பரிமாற்றம் யுவானில் இடம்பெற்றதாகவும் தேவைப்பட்டால் அதை டொலர்களாக மாற்றலாம் என்றும் அறிக்கையிட்டுள்ளது. …
-
- 0 replies
- 338 views
-
-
தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகனுக்கு விளக்கமறியல் நீடிப்பு! பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகனை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி இன்று (புதன்கிழமை) காணொளி மூலம் குறித்த உத்தரவையிட்டுள்ளார். இணையத்தளங்களில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களைப் பதிவு ஏற்றியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கடந்த மே மாதம் 3ம் திகதி தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக…
-
- 0 replies
- 241 views
-
-
எடை குறைந்த குழந்தைகள் பட்டியலில் இலங்கை 67வது இடம் தெற்காசியாவில் அதிக எடை குறைந்த குழந்தைகள் பட்டியலில் இந்தியாவுடன் இலங்கையும் உள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. 119 நாடுகளில் இந்தியா 103வது இடத்திலும், இலங்கை 67வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த அளவுகோல்களின் அடிப்படையில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் 15 சதவீதமான குழந்தைகள் குறைந்த எடையுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மற்றும் இந்தியாவுடன் முறையே இந்தோனேசியா, நேபாளம் மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளும் இப்பட்டியலில் இணைந்துள்ளன. ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் ஐந்து வயதுக்குட்பட்ட அதிக எண்ணி…
-
- 0 replies
- 271 views
-
-
அடுத்த வாரம் இலங்கை வரும் சீன வெளிவிவகார அமைச்சர் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். ஜனவரி 7 மற்றும் 9 ஆம் திகதிகளுக்கு இடையில் அவரது இரு நாள் விஜயம் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடுமையான டொலர் தட்டுப்பாடு, வெளிநாட்டு முதலீடு இல்லாமை சர்வதேச நிதி வீழ்ச்சி மற்றும் சர்ச்சைக்குரிய சீன உரக் கப்பல் சிக்கல் போன்றவற்றினால் நாடு நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள நிலையில் வாங் யியின் விஜயம் அமையவுள்ளது. இந்த விஜயதின் போது சீனாவிற்கு இலங்கையின் புவிசார் அரசியல் முக்கியத்துவம் கருதி, வாங் யீ பல முதலீட்டு திட்டங்களை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ச…
-
- 0 replies
- 424 views
-
-
பருத்தித்துறை துறைமுக அபிவிருத்திக்கான உரிமையை பெறுவதில் போட்டி December 29, 2021 பருத்தித்துறை மீன்பிடித்துறைமுக அபிவிருத்திக்கான உரிமையை பெறுவதில் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த இரு நாடுகளும் கடற்றொழில் அமைச்சிடம் தமது விருப்பங்களை தெரிவித்துள்ளன.இதேசமயம், கிளிநொச்சி - பூநகரி, கௌதாரிமுனையில் கடலட்டை பண்ணை வளர்ப்பில் சீனா ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், அங்கு மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வளத் திட்டம் ஒன்றை செயற்படுத்த இந்தியா முயன்று வருகின்றது.இதற்காக இந்தியாவுக்கு காணி வழங்கப்பட்டதா என்பது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ,கிளிநொச்சியில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய வேளை, அவ்வாறு காணி வழங்கப்படவில்லை …
-
- 0 replies
- 417 views
-
-
பிரபாகரனை விட ராஜபக்ஷக்களே நாட்டுக்கு தீங்கிழைத்துள்ளனர் - சம்பிக்க ரணவக்க சாடல் December 29, 2021 விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை விட ராஜபக்ஷக்களும் அவர்களது சகாக்களும் நாட்டுக்கு தீங்கிழைத்துள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், துறைசார் நிபுணர்களையும், திறமையானவர்களையும் அமைச்சுக்களின் செயலாளர்களாகவும், அரச நிறுவனங்களின் தலைவர்களாகவும் நியமிக்க முடியாத நிலையில் ஜனாதிபதி உள்ளார். திறமையானவர்களுக்கு முன்னுரிமை என ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்…
-
- 0 replies
- 194 views
-
-
20வது திருத்த சட்டத்தின் மூலம் ராஜபக்ஷ குடும்பத்திற்கே நன்மை – இராதாகிருஸ்ண் 20வது திருத்த சட்டத்தின் மூலம் ராஜபக்ச குடும்பத்திற்கே பல நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றது ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ண் தெரிவித்தார். நுவரெலியா – இராகலை சென்.லெனாட்ஸ் ஆலய மண்டபத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் கருத்து தெரிவிக்கின்ற பொழுதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ” நல்லாட்சி அரசாங்கம் 19 வது திருத்த சட்டத்தை கொண்டு வந்து நாடாளுமன்றத்துக்கு அதிகாரத்தை வழங்கியது. ஆனால் …
-
- 0 replies
- 180 views
-
-
யாழ்ப்பாணம் – வேலணை பிரதேச சபை விசேட அமர்வில் அமைதியின்மை! ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வசமுள்ள, வேலணை பிரதேச சபை விசேட அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) தவிசாளர் நவசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தலமையில் இடம்பெற்றிருந்தது. பிரதேச சபைக்கு சொந்தமான வேலணை வங்களாவடி கடைத்தொகுதியின் வேலைகளை முன்னெடுப்பதற்கு சபையின் நிலையான வைப்பில் இருக்கும் நிதியினை மீளப்பெறுவதற்கு சபை உறுப்பினர்களிடம் அனுமதியினை பெற்றுக்கொள்ளுவதற்காகவே இன்றைய விடேச கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. இதன்போது சபையின் தற்போதய ஆட்சியாளர்களின் அசமந்த போக்கு காரணமாகவே வேலைகள் இதுவரை நிறைவடையவில்லை என உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். தொடர்ந்து உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளை எற்றுக்கொ…
-
- 0 replies
- 213 views
-
-
(எம்.நியூட்டன்) யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் வி.மணிவண்ணனுக்கு எதிராக யாழ் மாநகர சபை முன்றலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகர சபை உறுப்பினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ் மாநகர சபை அமர்வு இன்று (28) இடம்பெற்ற போது முதல்வரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து மாநகர முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, முதல்வரின் அராஜகம் ஒழிக, சபையின் மாண்பை காப்பாற்று, வர்த்தகர்களின் வயிற்றில் அடிக்காதே போன்ற கோஷங்கள் மாநகர சபை உறுப்பினர்களால் எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது. யாழ்.மாநகர முதல்வருக்கு எதி…
-
- 4 replies
- 602 views
- 1 follower
-
-
20 வருடத்தில் கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் இல்லாத நிலை ஏற்படலாம்; சாணக்கியன் எச்சரிக்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு தமிழ் மக்களுடன் இணைந்துவாழ விரும்பம் இல்லையென்றால் இன்னும் 20வருடத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களே இல்லாதநிலையேற்படும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். வடகிழக்கில் நாங்கள் நிரந்தரமான தீர்வொன்றை அடைவதாகயிருந்தால் முஸ்லிம் மக்கள் இல்லாமல் எந்த தீர்வினையும் அடையமுடியாது எனவும் அவர் தெரிவித்தார். நத்தார் திருப்பலி பூஜையின்போது ஆயுதக்குழுவினால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான மாமனிதர் அமரர் ஜோசப்பரராஜ…
-
- 5 replies
- 544 views
-
-
யாழ்.மாவட்டத்தில் இந்து விக்கிரகங்கள் திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன – நல்லை ஆதீன முதல்வர் யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்து விக்கிரகங்கள் திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்துஆலயங்களில் விக்கிரகங்கள் திருடப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் கோரியுள்ளேன்.அத்துடன் எதிர்வரும் தைப்பொங்கல் உற்சவத்தினை இந்து மக்கள் அனைவரும் சுதந்திரமாக கொண்டாடு வதற்குரிய நடவடிக்கையை முன்னெடுக்கு மாறும் கிராமங்களில் ஆலய வழிபாட்டுக்கு இராணுவத்தினரால் இடையூறு ஏற்படாதவாறு செயற்படவேண்டும் என நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்திற்கு புதிதாக நியமி…
-
- 1 reply
- 273 views
-
-
மட்டக்களப்பு மண் மாபியாக்களின் கூடாரமாக மாறிவிட இடமளிக்கக்கூடாது – வியாழேந்திரன் எமது மண் வளத்தை சூறையாடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது மட்டக்களப்பு மாவட்டம் மண் மாபியாக்களின் கூடாரமாக மாறிவிட இடமளிக்கக்கூடாது. சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடவடிக்கையை தடுத்து நிறுத்தாவிட்டால் எமது மாவட்டத்தின் பல பிரதேசங்கள் அத்திப்பட்டி போல் அழிந்து போகும் நிலை காணப்படுகின்றது. என இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் பங்குடாவெளி தளவாய் பிரதேசத்தில் (ஞாயிற்றுக்கிழமை) நீர் விநியோகத் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின…
-
- 1 reply
- 298 views
-
-
எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு டொலர் இன்மை – 2022ஆம் ஆண்டில் பாரிய மின் தட்டுப்பாடு! நாட்டிலுள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு டொலரைப் பெற்றுக்கொள்ள முடியாவிட்டால், 2022ஆம் ஆண்டில் பாரிய மின் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை எச்சரித்துள்ளது. ஜனவரி 24ஆம் திகதி வரை எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், மின்சார சபைக்கு பிரச்சினை இல்லை என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளரான எம்.ஆர். ரணதுங்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நிதியை இலங்கை மின்சார சபை பெற முடியாவிட்டால், மின் உற்பத்தியில் பாரிய பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் தெரிவித்த…
-
- 2 replies
- 280 views
-