ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143607 topics in this forum
-
ஐ.நா. மனித உரிமைகள் தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகினாலும் அந்த தீர்மானம் தகுதி இழக்காது -இரா.சம்பந்தன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகினாலும் அந்த தீர்மானம் தகுதி இழக்காது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.யுத்தம் நடந்தபோது ஆட்சியிலிருந்தவர்கள், 2019இல் மீண்டும் ஆட்சிக்குத் திரும்பி இன்று தீர்மானத்தில் இருந்து விலகுவதாகக் கூறியுள்ளனர். 2015ஆம் ஆண்டு தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியது. நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இருந்து விலகுவது அவர்களது விருப்பம். ஆனால், நிறைவேற்ற…
-
- 2 replies
- 419 views
-
-
யாழில் நேற்று இருவர் சுட்டுக்கொலை [புதன்கிழமை, 23 யூலை 2008, 07:58 மு.ப ஈழம்] [க.நித்தியா] யாழ். மாவட்டத்தில் உள்ள நெல்லியடியிலும், உரும்பிராயிலும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். வடமராட்சி நெல்லியடிப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை அடையாளம் தெரியாதோரால் மின்கல கடை உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நெல்லியடி-கொடிகாமம் வீதியில், கோவில் சந்தைக்கும் அரசடிச் சந்திக்கும் இடையில் உள்ள மின்கல கடை உரிமையாளரே சுட்டுக்கொல்லப்பட்டார். சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்த ஞானேந்திரன் பார்த்தீபன் (வயது 34) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவர் ஆவார். நேற்று முற்பகல் 9:00 மணியளவில் தனது வர்த்தக நிலையைத்தை திறந்த…
-
- 0 replies
- 618 views
-
-
தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. முன்னறிவித்தல்கள் ஏதுமின்றி இரகசியமாக, திடீரென நேற்று யாழ்ப்பாணம் வந்தார் சந்திரிகா குமாரதுங்க. கிழக்கு அரியாலை மற்றும் அச்சுவேலிப் பகுதிகளுக்குச் சென்ற அவர் போரால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துப் பேசினார். “தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு பற்றி நான் பல காலங்களாகப் பேசி வருகின்றேன். இன்றும் அதனைத்தான் கூறுகின்றேன். தமிழ் மக்களுக்கு அவர்களின் உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அதற்கான அரசமைப்பு ஒன்றை வரைந்து நான் அதனை நாட்டுக்கு முன்வைத்தேன். அது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அதில் தமிழ் மக்களுக்கு நிறைய அதிகாரங்கள் வழங்கப்பட்டன. தனிந…
-
- 10 replies
- 963 views
-
-
யாழ். வடமராட்சிக் கிழக்கு பகுதி தேசிய பூங்கா எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்படவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடமராட்சிக் கிழக்கு போக்கறுப்பு, சுண்டிக்குளம், கட்டைக்காடு, முள்ளியான், நிச்சியவெட்டை ஆகிய பிரதேசங்களை வனஜீவராசிகள் திணைக்களம் தேசிய பூங்காவாக பிரகடனப்படுத்தியுள்ளது. ஆனால், இப்பகுதிகளில் மக்களின் காணிகள், விவசாய நிலங்கள், மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பிரதேசங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதால் இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் பிரதேச செயலர் எஸ்.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பி…
-
- 0 replies
- 448 views
-
-
வீரகேசரி இணையம் 7/28/2008 11:54:30 AM - திருகோணமலை மாவட்டத்தில் மீன் பிடிப்பதில் விதிக்கப்பட்டுள்ள தடைகள் அகற்றப்பட வேண்டுமென அம்மாவட்ட மீனவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனைச் சந்தித்து முறைப்பாடு செய்துள்ளனர் என பிபிசி தமிழ் சேவை தெரிவித்துள்ளது. மீன்பிடிக்க விதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாட்டின் விளைவாக தாங்கள் பெரும் சிரமங்களை அனுபவித்துவருவதாக இந்தப் பிரதேச மீனவர்கள் கவலை தெரிவித்துவருகின்றனர். தங்கள் நாளாந்த வாழ்க்கையினைக்கூட நடத்த முடியாது துன்பம் அடைவதாகவும் இவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக தற்போது விதிக்கப்பட்ட மீன்பிடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுதாங்கள் சுதந்திரமாக மீன் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் இ…
-
- 3 replies
- 942 views
-
-
[size=4]கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் மீண்டும் தாக்கியுள்ளனர். தமிழகத்தில் சிங்கள யாத்ரீகர்கள் தாக்கப்பட்டதைச் சொல்லிச் சொல்லி தங்களை சிங்களக் கடற்படையினர் அடித்ததாக கூறியுள்ளனர் மீ்னவர்கள்.[/size] [size=4]சமீபத்தில் புனிதப் பயணமாக தமிழகத்திற்கு வந்த சிங்கள யாத்ரீகர்கள், பூண்டி, வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் தாக்குதலுக்குள்ளானார்கள். இதையடுத்து சிறப்பு விமானத்தின் மூலம் அவர்கள் பத்திரமாக இலங்கைக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.[/size] [size=4]இந்த நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கியுள்ளனர். தமிழகத்திற்கு வந்த சிங்களர்களை தாக்குவீர்களா என்ற…
-
- 3 replies
- 1k views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு தமிழ்த் தலைமைகள் கோருவது முறையற்றது - விஜயதாச ராஜபக்ஷ 10 AUG, 2025 | 12:45 PM (இராஜதுரை ஹஷான்) பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்துச்செய்ய வேண்டும் என்று தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்ச்சியாக வலியுறுத்துவது முறையற்றது. பூகோள பயங்கரவாதத்தை கருத்திற் கொண்டு தேசிய பாதுகாப்பினை முன்னிலைப்படுத்தியதாக இவ்விடயத்தில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததா…
-
- 0 replies
- 163 views
-
-
இந்தியப் பிரதமருக்கு கொழும்பில் ஏற்பட்ட "அதிர்ச்சி" சம்பவம் [ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2008, 05:22 பி.ப ஈழம்] [பூ.சிவமலர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்கு சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அங்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தெரியவருவதாவது:- சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்புக்கு சென்றிருந்தார். கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை சென்றடைந்த அவர், சிறப்பு உலங்குவானூர்தி மூலம் அங்கிருந்து கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து உச்ச பாதுகாப்பு கொண்ட வாகன அணி மூலம் சிறிலங்கா…
-
- 9 replies
- 2.4k views
-
-
நாட்டின் அதி உச்ச பீடமான நீதிமன்ற கட்டமைப்பின் மீது முஸ்லிம் அமைச்சர் ஒருவர் தாக்குதல் நடத்தியதன் மூலம் அவர்களின் மரபணுவில் உள்ள குணங்களை காட்டுகிறது - தமிழில் குளோபல் தமிழ் செய்திகள் இனத்துவத்தை அடிப்படையாக கொண்டு முஸ்லிம் அடிப்படைவாதிகள் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுத்து விடுத்து வரும் கோரிக்கைகள் முழு நாட்டுக்கும் பாதிப்பாக அமைந்துள்ளது. நீதித்துறை போன்ற அரசின் முக்கிய பொறுப்பு வாய்ந்த அமைச்சு பதவியை சிங்கள கழுதைகள் அப்படியான தலைவருக்கு வழங்கியதன் மூலம் மதத்திற்கு மேல் உச்சமாக இருக்க வேண்டிய சட்டத்தை வேறு இனத்தவரிடம் ஒப்படைத்துள்ளனர். இப்படியான சூழலை அடிப்படையாக கொண்டு ஒற்றையாட்சி நாட்டுக்குள் அமுலில் இருக்க வேண்டிய ஒரு சட்டம் என்ற கோட்டுபாடு கீழ் மட்டத்தில…
-
- 0 replies
- 556 views
-
-
Published By: VISHNU 21 AUG, 2025 | 08:08 PM மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கான முறையான வழிமுறையை தயாரிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலக அதிகாரிகளுக்கு இடையே வியாழக்கிழமை (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் சேவைகளை மேலும் விரிவுபடுத்துதல் மற்றும் முறையாக வழங்குதல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்துடன் இணைந்து திட்டங்களை செயல்படுத்துதல் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ உதவிகளை அதிகரிப்பது, அவர்களை வலுவூட்டுவதற்குத் தேவையான உபகர…
-
- 0 replies
- 148 views
- 1 follower
-
-
[size=4]கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பதற்காக ஜனாதிபதி முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றுள்ள அதேவேளை 52 முஸ்லிம்களை படுகொலை செய்த முன்னாள் முதல்வர் பிள்ளையானை தனது ஆலோசகராகவும் நியமித்துள்ளார்.[/size] [size=4]அப்படியானால் அவர் பயங்கரவாதம் சம்மந்தமான ஆலோசகரா? என ஐக்கிய தேசியக் கட்சியின எம்.பி.யான தயாசிறி ஜயசேகர இன்று சபையில் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் இன்றைய அமர்வின் போது இடம்பெற்ற ரணவிரு சேவா அதிகார சபை திருத்தச் சட்டம் மீதான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.[/size] http://www.virakesari.lk/article/local.php?vid=703
-
- 0 replies
- 412 views
-
-
03 Sep, 2025 | 05:05 PM யாழ். புதிய செம்மணி வீதிச் சந்தியிலிருந்து கொக்குவில் சந்தி வரையான ஆடியபாதம் வீதியூடாக டிப்பர் வாகனங்கள் காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை பயணிப்பதற்கு முற்றாக தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏனைய பாரவூர்திகள் காலை 7 மணி தொடக்கம் 9 மணி வரை மற்றும் நண்பகல் 12 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணி வரை குறித்த வீதியூடாக பயணிப்பதற்கு தடை விதித்து பொதுப் போக்குவரத்தினை இலகுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்பள்ளி சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், உத்தியோகத்தர்கள் பணிக்குச் செல்லும் நேரங்கள் மற்றும் அண்மையில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு பொதுப்போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்குடன் இவ்வ…
-
- 2 replies
- 234 views
-
-
ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவரின் மேதினச் செய்தி உலக தொழிலாளர் தினமான மே தினத்துக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை அனுப்பிவைத்துள்ளனர். அர்ப்பணிப்பதே குறிக்கோள்: ஜனாதிபதி '2015இல், நாம் அடைந்த புதிய ஜனநாயக சுதந்திரப் பிரவேசத்தினூடே, புதிய பொருளாதார, அரசியல் அவகாசத்துக்குள் காலடி வைத்துள்ள தற்போதைய சூழலில் மலர்ந்துள்ள இந்த மே தினத்தில், ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தினரின் அபிலாஷைகளைப் பெற்றுக்கொண்ட வெற்றியினை யதார்த்த மாக்குவதற்கு அர்ப்பணிப்பதனை, எமது மே தினத்தின் குறிக்கோளாகக் கொள்வோம்' என ஜனாதிபதி மைத்திரிபால சிறி…
-
- 0 replies
- 314 views
-
-
உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கம் ஸ்ரீலங்காவிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பவர்களை இனம் கண்டு அவர்களுக்கு அனைத்து மருத்துவ தேவைகளையும் மருத்துவர்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், அவர்களின் அர்ப்பணிப்பும், கடுமையான உழைப்பும் மனிதாபிமான செயல்பாடுகள் தொடர்பிலும், கொழும்பு அங்கொட IDH வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் பேசிய அவர், “நாங்கள் மக்களுக்காக வீடுகளுக்கு செல்லாமல் வைத்தியசாலையிலேயே தங்கியிருந்து சேவை செய்கின்றோம். முழுமையான வைத்தியசாலை ஊழியர்களும் கொரோனா தொற்று உறுதியாகிய நோயாளிகளுடனேயே உள்ளோம். வைத்தியர்கள், தாத…
-
- 13 replies
- 804 views
-
-
வடமராட்சி பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் கும்பல்களால் மீனவர்களின் வாடிகளுக்கு தீ வைப்பு சனி, 13 செப்டம்பர் 2025 09:08 AM யாழ்ப்பாணம் , வடமராட்சி பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் கும்பல்களால் மீனவர்களின் வாடிகள் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டு , தீ வைக்கப்பட்டுள்ளதுடன் , மீனவர்கள் மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இரு மீனவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடமராட்சி கற்கோவளம் சந்தைக்கு அண்மித்த பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது. இவ்வாறு மணல் அகழப்படும் இடங்களில் ஏற்படும் பாரிய குழிகளில் மழை நீர் தேங்குவதன் ஊடாக பல்வேறு அசௌகரியங்களுக்கு அப்பகுதி மக்கள் ம…
-
- 0 replies
- 203 views
-
-
காலி துறைமுகத்தை அண்மித்தான காலி கடற்பரப்பில் ஆயுதக் களஞ்சியம் ஒன்றினை தனியார் நிறுவனம் ஒன்று நிறுவ உள்ளது. இதற்கான அனுமதியைப் பாதுகாப்பு அமைச்சிடம் கோரியுள்ளது. சிறிலங்காவின் தென் கடலின் ஊடாகச் செல்லும் வர்த்தக கப்பல்களுக்குப் பாதுகாப்பை வழங்கும் பொருட்டே இந்த ஆயுதக் களஞ்சியம் அமைக்கப்படவுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. Avern Guard Off shore Services (Pvt.) Ltd என்ற தனியார் நிறுவனமே இந்த ஆயுதக் களஞ்சியத்தை நிறுவ உள்ளது. தென்னாசியப் பிராந்தியக் கடற்பரப்பின் ஊடாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்கள் சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்படுவதனைத் தடுக்கும் வகையிலேயே இந்த ஆயுதக் களஞ்சியசாலை அமைக்கப்படவுள்ளது. இதே போன்று மேலும் 35 வெளிநாட்டு நிறுவனங்கள் காலி கடல் பிராந்…
-
- 1 reply
- 450 views
-
-
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பின் ஆனந்தபுரம், இரணைப்பாலை கிராமங்கள் உவர் அடைந்து வருவதன் காரணமாக இக்கிராமங்களிலுள்ள குடிநீர்க் கிணறுகள் உவர் நீராக மாறி வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இக்கிராமத்தில் வாழ்கின்ற குடும்பங்கள் குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளன. மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய கிராமங்களுக்கும் ஆனந்தபுரம், இரணைப்பாலை ஆகிய கிராமங்களுக்கும் இடையில் காணப்படுகின்ற சதுப்புநில உவராறு மழைக்காலங்களில் பெருக்கெடுத்து பரவுவதன் காரணமாகவே ஆனந்தபுரம், இரணைப்பாலை ஆகிய கிராமங்கள் உவர் அடைந்து வருகின்றன. உவர் பரம்பலைத் தடுப்பதற்கு அணைகள் அமைக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள கிராமங்களின் அபிவிருத்திச் சங்கங்கள் புதுக்குடியிருப்ப…
-
- 1 reply
- 342 views
-
-
ஜனாதிபதியின் 16 முக்கிய தீா்மானங்கள்..! அச்சத்தால் முடங்கியிருக்கும் மக்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியளிக்குமாம்.! இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகாித்துக ் கொண்டிருக்கும் நிலையில் முடக்கப்பட்டிருக்கும் நாட்டுக்கு மக்களுக்கு தேவையான வாழ்வாதார உதவிகள், மக்களுடைய வங்கி கடன்கள் மீளளித்தல் உள்ளிட்ட மக்களின் பிரச்சினைகள் பலவற்றுக்கு தீா்வை வழங்க உத்தரவிட்டுள்ளாா். இன்று மாா்ச் மாதம் தொடக்கம் இந்த உத்தரவுகள் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த தீா்மானங்கள் மத்திய வங்கி ஆளுநா், அமைச்சுக்களின் செயலாளா்கள், மாகாசபை பிரதம செயலாளா்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், வாி நிறுவன தலைவா்களுக்கு உத்தரவுகளாக அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது. அந்த தீா்மானங்களாவன, …
-
- 0 replies
- 514 views
-
-
24 Sep, 2025 | 05:16 PM (எம்.மனோசித்ரா) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தங்காலையிலுள்ள கால்டன் இல்லத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்றுள்ளது. இதன் போது உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கிடையில் இரு தரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் மற்றும் இலங்கையில் அரசியல் முன்னேற்றங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. கொழும்பு – விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, தங்காலை கால்டன் இல்லத்தில் தற்போது வசித்து வருகின்றார். மஹிந்த கொழும்பிலிருந்து வெளியேற முன்னர் சீன தூதுவரை …
-
- 0 replies
- 147 views
-
-
'தொல் தமிழர் முருகனிலிருந்து - நல்லூர்க் கந்தன் வரை" -.சபேசன் (அவுஸ்திரேலியா)- ஈழச் சைவத் தமிழ் மக்களிடையே மிகப் பிரபல்யமான, புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றான - நல்லூர்க் கந்தசுவாமிக் கோவில் தேர்த் திருவிழா ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது. நல்லூர்க் கந்தசுவாமிக் கோவில் கொடியேற்ற நாளில் இருந்து இறுதி நாள் உற்சவமான, பூங்காவனத் திருநாள் வரை, உலவுகின்ற அந்த உற்சாகமான, குதூகலப் பக்தி கலந்த நாட்கள், எம்மவர் மனதில் என்றென்றும் நினைவில் நின்று நிழலாடுகின்ற விடயமாகும். ஆனால் அன்று மயிலேறி, மூன்று உலகமும் வலம் வந்ததாகச் சொல்லப்பட்ட முருகன், பின்னர் சிங்கள இராணுவ அடக்குமுறையின் கீழ் - ஊரடங்குச் சட்டத்தின் கீழ் - அமலாக்கப்பட்ட…
-
- 0 replies
- 5.8k views
-
-
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் வடமாகாணத்தில் 2000 மில்லியன் ரூபா செலவில் பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை அமைக்க நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டது. வவுனியா மாவட்டத்திற்கு என கூறப்பட்டு நிறைவேற்றப்பட்ட இத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வவுனியா மாவட்டத்தில் 5 ஏக்கர் நிலம் கோரப்பட்டது. அதனை ஓமந்தைப் பகுதியில் அமைப்பதன் மூலம் அது உபநகரமாக எழுச்சி பெறுவதுடன் வவுனியாவின் நீண்டகால அபிவிருத்திக்கும் உந்து சக்தியாக அமையும் என வவுனியா மாவட்டத்தைப் பிரதிசித்துவப்படுத்தும் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் வலியுறுத்தி ஓமந்தைப் பகுதியைத் தெரிவு செய்தனர். ஆனால் மத்திய கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் நகரில் இருந்து 2 3 கிலோமீற்ற…
-
- 0 replies
- 335 views
-
-
’நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக உள்ளோம்’ - சி.வி.கே.சிவஞானம் அரசியலமைப்பில் இருக்கும் 13 ஆவது திருத்தத்தை அமுல் செய்ய வேண்டும் என்று கேட்பதிலே சைக்கிள் கட்சியைத் தவிர நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாகத்தானே இருக்கின்றோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று ஊடக சந்திப்பை நடத்திய போதே சி.வி.கே.சிவஞானம் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழத் தமிழர் விடயத்தில் சர்வதேசம் அதீத அக்கறை எடுக்க வேண்டும் என்று சொன்னாலும் அதில் மிக முக்கியமான பணி இந்தியாவுக்கு உண்டு. இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஊடாக அந்தப் பொறுப்புக் கூட இந்தியாவுக்கு இருக்கின்றது. ஆனால், பொதுவாகவே இந்தியத் தரப்பு ஒரு விடயத்தைத் தி…
-
- 3 replies
- 245 views
- 1 follower
-
-
நாட்டுப் பிரஜைகள் ஒவ்வொருவரையும் தலா ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபா கடனாளியாக்கியுள்ள அரசாங்கம், வரலாற்றிலேயே 30 வீத பண வீக்கத்தை ஏற்படுத்தி பொருளாதாரத்தை நெருக்கடிக்குள் தள்ளி விட்டுள்ளது. சர்வதேச நாடுகள் நிதி உதவிகள் வழங்காமையினால் வர்த்தகப் பிணை முறிகளுக்கு கடனை வாங்கி நாட்டைப் பாதாளத்தில் அரசாங்கம் தள்ளி விட்டுள்ளது என்று ஐ.தே.க. குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக இக்குற்றச்சாட்டை சுமத்தினார். இங்கு அவர் மேலும் கூறியதாவது, தேசிய வங்கிகளிலும் சர்வதேச வங்கிகளிலும் 230 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் வர்த்த…
-
- 6 replies
- 1.3k views
-
-
[size=4]நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மீண்டும் இருதரப்புப் பேச்சுக்களை இலங்கை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.[/size] [size=4]சமநேரத்தில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறுவது என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டுடன் இந்தப் பேச்சுக்களை இலங்கை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது.இதுதொடர்பாக அண்மையில் புதுடெல்லி சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் விரிவாக ஆராய்ந்துள்ளார்.[/size] [size=4]நேற்று புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ள இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து…
-
- 10 replies
- 652 views
- 1 follower
-
-
மஹிந்தவிற்கு தொடர்ந்தும் இராணுவப் பாதுகாப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு தொடர்ந்தும் இராணுவப் பாதுகாப்பினை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மஹிந்தவிற்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பினை முற்று முழுதாக நீக்கும் நோக்கில் எஞ்சியிருந்த 53 படையினரை நீக்க முன்னர் தீர்மானிக்கப்பட்ட போதிலும், நேற்றைய தினம் இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது. மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பினை நீக்க வேண்டாம் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததனைத் தொடர்ந்து இவ்வாறு, இராணுவப் பாதுகாப்பினை வாபஸ் பெற்றுக்கொள்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம் காலை 7.30 மணிக்கு இராணுவ தலைமையகத்திற்கு சமூகமளிக்குமாறு மஹிந்தவின் இராணுவ பாதுகாப்பு உத…
-
- 0 replies
- 386 views
-