ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
68 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம், அரியாலை கடற்பகுதியில் இன்றைய தினம் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் டிங்கி படகொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 229 கிலோ கிராம் எடையுள்ள கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக இலங்கை கடற்படையினரின் வழக்கமான ரோந்து பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி கடற்படையின் விசேட குழுவினர் இன்று அதிகாலை அரியாலை கடற்பகுதியில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் டிங்கி படகொன்றிலிருந்து 105 பொதிகளில் அடைக்கப்பட்ட சுமார் 229 கிலோ 350 கிராம் கேரள கஞ்சா அடங்கிய 07 பயணப் பைகள் மீட்கப்பட்டன. கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமத…
-
- 0 replies
- 203 views
-
-
தமிழீழ தனியரசுக்காக வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் ஆரம்பம்!!! நீதிமன்றங்கள் ஊடாக தடையுத்தரவை பெற்றது சிறிலங்கா பொலிஸ்! November 21, 2021, தமிழீழ தனியரசு அமைப்பதற்காக – தனி நாடு உருவாகுவதற்காக போராடி – சமராடி வித்தாகிப்போன மாவீரர்களை – காவிய நாயகர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. தமிழர் தேசத்தை காவல் காத்த தெய்வங்களை – மாவீரர்களை – வீரப் புதல்வர்களை நினைவு கூர்ந்து பேரெழுச்சியுடன் மாவீரர் வாரத்தை புலம்பெயர் தேசம் எங்கும் பரந்து – விரிந்து வாழும் தமிழ் மக்கள் கடைப்பிடிக்கவுள்ளனர். தாயக மண்ணில் – தேசத்தில் மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்படுவதற்கு நீதிமன்றங்கள் ஊடான தடையுத்தரவை சிறிலங்கா பொலிஸார் பெற்றுள்ளனர். தாயக…
-
- 0 replies
- 138 views
-
-
சுமந்திரன் தலைமையிலான குழு வோஷிங்டனில் முக்கிய பேச்சு November 18, 2021 அமெரிக்கா சென்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சட்ட நிபுணர்கள் குழு மற்றும் உலகத் தமிழர் பேரவை பிரதிநிதிகள் குழு ஆகியவை இரண்டும் ஒன்றிணைந்து வொஷிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கடந்த மூன்று நாள்களில் பல தரப்பினருடன் பல சுற்றுப் பேச்சுக்களில் ஈடுபட்டன எனத் தெரிவிக்கப்படுகின்றது. சுமந்திரன் தலைமையிலான குழு இன்று நியூயோர்க் செல்கின்றது. அங்கு ஐ.நா. அதிகாரிகளுடன் இன்றும் நாளையும் பல மட்ட கலந்தாய்வுகளில் அக்குழு ஈடுபடும் எனத் தெரிகின்றது. திங்களன்று பத்துத் தரப்புகளுடனும், செவ்வாயன்று பத்து தரப்புகளுடனும், நேற்று ஐந்து தரப்புகளுடனும் இக்குழு சந்திப்புக்களை நட…
-
- 7 replies
- 903 views
-
-
யாழ் நீதிமன்ற எல்லைக்குள் ஒரு வாரத்திற்கு மாவீரர் நாளை அனுஷ்டிக்கத் தடை யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு, யாழ். நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், சார்பில் இந்த மனுக்கள் வெள்ளிக்கிழமை (20) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன. முன்னர் கோப்பாயில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில் அமைந்துள்ள இராணுவத்தின் 512 பிரிகேட் தலைமையகத்துக்கு முன்பாகவும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சூழலிலும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய எல்லையிலும் மாவீரர் நாளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், அந்த மனுவில் கூற…
-
- 5 replies
- 412 views
-
-
பெற்றோல் – சமையல் எரிவாயு தாங்கிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன! பெற்றோல் மற்றும் சமையல் எரிவாயுவை உள்ளடக்கிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. இதற்கமைய 36,000 மெட்ரிக் தொன் பெற்றோல் ஏற்றிய கப்பல் மற்றும் 2,500 மெட்ரிக் தொன் தாங்கிய சமையல் எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. 40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல் நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்தது. மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1250918
-
- 2 replies
- 299 views
- 1 follower
-
-
எனக்கு நடந்த அநியாயம் யாருக்கும் நடக்கக்கூடாது: ரிஷாட் பதியுதீன் on Saturday, November 20, 2021 சிறையில் இருந்த காலங்களில் தான் அனுபவித்த துயரங்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் பகிர்ந்துகொண்டார். சிறையில் இருந்த 6 மாதங்களைப் பற்றி ஒரு பெரிய புத்தகத்தை எழுதிவிட முடியும் எனவும் தன் வாழ்நாளில் அவ்வாறானதொரு கஷ்டத்தை அனுபவித்ததில்லை எனவும் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார். தனக்கு நடந்த அநியாயத்தை இந்த அரசாங்கமோ அல்லது வேறு அரசாங்கமோ எந்தவொரு சிறுபான்மை அரசியல் பிரதிநிதிக்கும் பிற்காலத்தில் செய்துவிடக் கூடாதென்று பிரார்த்திப்பதாக அவர் கூறினார். சாதாரண சிறைக் கைதியை விடவும் ஒரு படி மேலாக நடத்தினார்கள். இன்று…
-
- 8 replies
- 545 views
-
-
கார்த்திகைத் தீபத்திருநாளில் தீபம் ஏற்றுபவர்களை விசாரிப்பது தான் அரசாங்கம் கூறுகின்ற நல்லிணக்கமா ? - சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் (நா.தனுஜா) கார்த்திகைத்தீபத்திருநாளன்று தீபங்களை ஏற்றியவர்களிடம் கடந்த வருடம் இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டனர். அதே சம்பவம் இவ்வருடமும் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. வடக்கில் வாழும் மக்களுக்கு அவர்களது அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கான சுதந்திரம் தொடர்ச்சியாக மறுக்கபபடுகின்றது என்று விசனம் வெளியிட்டுள்ள சட்டத்தரணியும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான அம்பிகா சற்குணநாதன், 'அரசாங்கம் கூறுகின்ற நல்லிணக்கம் இதுதானா?' என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். http://cdn.virakesari.lk/uploads/medium/fi…
-
- 1 reply
- 218 views
-
-
மரக்கறிகளின் விலைகள் வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு (சி.எல்.சிசில்) நாட்டின் பல பொருளாதார நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளன. போஞ்சி, தக்காளி, கறி மிளகாய் உள்ளிட்ட மரக்கறிகள் வரலாறு காணாத வகையில் தற்போது அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். மரக்கறிகளின் விலை அதிகரிப்பு டிசம்பர் 3ஆம் வாரம் வரை தொடரலாம் என ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நிலவும் பிரச்சினைகளால் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மரக்கறி விலைகள் கட்டுப்படியாகாத அளவுக்கு உயரக்கூடும் என மலையக மரக்கறி உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வரலாறு காணாத வகையில் இன்றைய நாட்களில் அதிக விலைக…
-
- 2 replies
- 384 views
-
-
கார்த்திகை வீரர்களை நினைவுகூர முடியுமெனில் ஏன் மாவீரர்களை நினைவுகூரமுடியாது ; ரவிகரன் ஜே.வி.பி, கார்த்திகை வீரர்களை நினைவுகூர முடியுமெனில், நாம் ஏன் மாவீரர்களை நினைவுக் கூரமுடியாது என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் எழுப்பியுள்ளார். மாவீரர்நாள் நினைவேந்தல் தொடர்பாக முல்லைத்தீவு ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில், முல்லைத்தீவு பொலிசாரினால் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட தடை உத்தரவு எனக்கு வழங்கப்பட்டுள்ளது நாங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை மதிக்கின்றோம் . பொலிசார் இந்த விடைய…
-
- 1 reply
- 271 views
-
-
தமிழர்களை அழித்தீர்கள் இன்று முஸ்லீம்கள் இலக்காகியுள்ளனர் அடுத்ததாக உங்கள் சொந்த இனமே பலியாகும் – நாடாளுமன்றில் கஜேந்திரகுமார் தமிழர்களை அழித்தீர்கள் இன்று முஸ்லீம்கள் இலக்காகியுள்ளனர் அடுத்ததாக உங்கள் சொந்த இனமே பலியாகும் என எச்சரித்த தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுதலைப்புலிகளை அழித்ததால் உங்களிற்கு கிடைத்தது என்னவெனவும் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த காலத்தை சிந்திக்காது போனால் இனியும் இது ஐக்கிய இலங்கையாக இருக்காது ஒற்றையாட்சி சிந்தனை தொடர்ந்தால் நாடு பூஜ்ஜியமாக மாறும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை ஒற்றையாட்சி சிங்கள பௌத்த நாடு என்ற சிந்தனையில் ஏனைய இனத்தவர்களை எதிரியாக கருதும் மனநிலையில் …
-
- 1 reply
- 328 views
-
-
ஆண்டிகள் ஒன்றுகூடி மடம் கட்டிய கதை போன்றது இம்முறை அரசாங்கத்தின் வரவு - செலவு திட்டம் - செல்வம் எம்.பி. பரிகாசம் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டமானது ஆண்டிகள் ஒன்றுகூடி மடம் கட்டிய கதை போன்றது. எனவே இந்த வரவு செலவுத்திட்டம் தொடர்பில் விவாதம் நடத்த வேண்டிய தேவையில்லை என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவற்றை கூறினார், அவர் மேலும் கூறுகையில், கஜானாவில் பணம் இல்லை என்று சொல்கின்ற அரசாங்கம், …
-
- 0 replies
- 363 views
-
-
ஜீ.எஸ்.பி. எமக்கு கிடைக்காவிட்டால் பாதிக்கப்படப்போவது புடவை கைத்தொழில் பேட்டைகளே - வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் (ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) எமதுஅரசாங்கம் பிளவுபடாத வெளிநாட்டு காெள்கையையே பின்பற்றி வருகின்றது. அதன் மூலம் குறிப்பிட்ட ஒரு முனையின்பால் முற்றாக சாய்ந்துவிடுவதென்ற அர்த்தம் இல்லை. பிளவுபடாத வெளிநாட்டு கொள்கை இந்த காலத்துக்கு பொருத்தம் இல்லை என்ற நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோன்று ஜீ.எஸ்.பி வரிச்சலுகையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கின்றோம் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2022 ஆம் வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான …
-
- 0 replies
- 285 views
-
-
நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக யாழ் மாநகர சபைக்கு செங்கோல் கையளிப்பு நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு செங்கோல் கையளிக்கப்பட்டுள்ளது.நல்லூர் கந்தசுவாமி கோவில் சிவச்சாரிகளால் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனிடம் நல்லூர் ஆலயத்தில் வைத்து சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.அண்மையில் சிவபதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக நல்லூர் ஆலயம் மற்றும் யாழ்ப்பாண பண்பாட்டினை பிரதிநிதித்துவப் படு…
-
- 0 replies
- 151 views
-
-
யாழில் “கார்த்திகை வாசம் மலர் முற்றம்” திறப்பு! November 20, 2021 வடமாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ் தேசிய பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடத்தும் கார்த்திகை வாசம் மலர் முற்றம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. மலர் செடிகள் மரக்கன்றுகள் காட்சிப்படுத்தலும் விற்பனையும் இன்று(20)முதல் எதிர்வரும் 26ம் திகதி வரை ஒவ்வொருநாளும் காலை 8.30 மணி முதல் இரவு 7மணி வரை நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெறவுள்ளது. மலர் முற்றத்தை யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் திறந்து வைத்தார். இதன் ஆரம்ப நிகழ்வில் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் வடமாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன்…
-
- 0 replies
- 358 views
-
-
‘கஞ்சா வளர்ப்போம் – கடன் தொல்லையை தீர்ப்போம்’ என அரசாங்கத்திற்கு டயானா கமகே ஆலோசனை கஞ்சா செய்கையில் ஈடுபட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “2025 ஆம் ஆண்டளவில் கஞ்சாவுக்கான உலக சந்தை மதிப்பு $8.6 பில்லியன் முதல் $10.5 பில்லியன் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் பெரும்பாலான மருந்துவ பயிர்களை முறையாக பயிரிட்டு, ஏற்றுமதி செய்து, அந்நியச் செலாவணியைப் பெற முடியும். நாம் சர்வதேச நாணய நிதியத்திற்குச்…
-
- 34 replies
- 1.7k views
- 1 follower
-
-
சிவபூமி அறக்கட்டளை நிதியத்தினால் கீரிமலையில் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது சிவபூமி அறக்கட்டளை நிதியத்தினால் கீரிமலையில் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம் இன்றைய தினம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் நல்லூர் ஆதீன குருமுதல்வர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், ஆன்மீகச்சுடர் ரிசி தொண்டுநாத சுவாமிகள், யாழ் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராசா, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா எனப்பலரும் கலந்துகொண்டனர். துர்க்கா தேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு திருமுருக…
-
- 11 replies
- 824 views
- 1 follower
-
-
எனது கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இரகசிய உடன்பாடுகள் கிடையாது – ரிசாத் 9 வருடங்கள் அவரது தலைமையிலான ஆட்சி காலத்தில், நாட்டுக்கு செய்த சேவை, மக்களுக்கு செய்த உதவி தற்பாது இரண்டு வருடங்களாக இல்லாமல் போயுள்ளமையை அனைவரும் அறிவர் என்றார். விமல் வீரவன்ச உள்ளிட்ட அரசாங்கத்துடன் முரண்பட்டுள்ளவர்கள் வீதிக்கு வந்து பேசாமல் அமைச்சரவைக்குள் பேசி மக்களுக்கு தீர்வு வழங்க வேண்டும். அதற்கு தான் மக்கள் வாக்களித்துள்ளனர். அதைவிடுத்து ஊடகங்கள் முன்பாக கூறுவதில் எவ்வித பலனுமில்லை. அரசாங்கம் தவறு செய்தால், இது தவறென சுட்டிக்காட்டும் தைரியம் இருக்க வேண்டும் என்றார். இதேவேளை,பாராளுமன்றத்தில் அரசியலமைப்பின் 20ஆம் திருத்தம் முன்வைக்கப்பட்ட போது, தான் சிறையில் இருந்ததாகவும் கட…
-
- 1 reply
- 202 views
-
-
கே .குமணன் இந்துக்களால் அனுஷ்டிக்கப்படும் கார்த்திகை தீபத் திருநாளான இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் இந்த திருநாளை தீபம் ஏற்றி கொண்டாடிய வேளை, மாவட்டத்தின் சில இடங்களில் இராணுவத்தினர் இந்த கார்த்திகை தீபத்திருநாளை குழப்பும் வகையில் செயற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்தனர். மாவீரர் நாள் எதிர்வரும் நவம்பர் 27 ஆம் நாள் நினைவேந்தப்படும் நிலையில் நேற்றைய நாளிலிருந்தே (17) முல்லைத்தீவு மாவட்டத்தின் 07 பொலிஸ் பிரிவுகளினூடாக 47 பேருக்கு எதிராக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நினைவேந்தலுக்கு எதிராக தடையுத்தரவு பெறப்பட்டு வழங்கப்பட்டிருந்தத்தது. இந்த நிலையில் செல்வம் பெருக துன்பம் அகல வாழ்வு சிறக்க வேண்ட…
-
- 2 replies
- 321 views
-
-
உலகவாழ் பக்தர்களின்... வழிபாட்டுக்காக, ‘சந்தஹிரு சே ரந்துன்’ திறந்து வைப்பு. அநுராதபுரம் “சந்தஹிரு சே ரந்துன்” தாது கோபுரத்தை, உலகெங்கிலுமுள்ள பக்தர்களின் வழிபாட்டுக்காகத் திறந்துவைக்கும் புண்ணிய நிகழ்வு, நேற்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது. தாய் நாட்டின் ஒற்றுமைக்காகப் பெரும் தியாகங்களைச் செய்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் வகையிலும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு ஆசிர்வதிப்பதற்கும், முப்பது வருடகால யுத்தத்தின் நிறைவைக் குறிக்கும் வகையிலும், ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கமைய, அன்றைய பாதுகாப்புச் செயலாளரும் தற்போதைய ஜனா…
-
- 8 replies
- 728 views
-
-
நினைவு கூரும் நிகழ்வுகளை அரசாங்கம் தொடர்ந்தும் தடுத்தி நிறுத்தினால் எமது மக்கள் மேலும் வீறு கொண்டு எழுவார்கள் – செல்வம்! போரில் உயிர்நீத்த தமது உறவினர்களை நினைவு கூரும் நிகழ்வுகளை அரசாங்கம் தொடர்ந்தும் தடுத்தி நிறுத்தினால் எமது மக்கள் மேலும் வீறு கொண்டு எழுவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த மாதம் கார்த்திகை மாதம் என்பதனால் நீதிமன்ற தடை உத்தரவுகளை வீடு வீடாக செ…
-
- 3 replies
- 267 views
-
-
சிங்கள மக்களாலேயே கோட்டாபய அரசு விரட்டப்படும் காலம் வரும்: சம்பந்தன் November 18, 2021 ஆட்சியில் அமர்த்திய சிங்கள மக்களாலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு விரட்டியடிக்கப்படும் காலம் உருவாகுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார். கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் ஆதரவாளர்கள் மட்டும் கலந்துகொள்ளவில்லை. அரசை ஆட்சிக்குக் கொண்டு வந்த சிங்கள மக்களும் பங்கேற்றுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் அரசுக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற மாபெரும் போராட்டம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொ…
-
- 13 replies
- 760 views
-
-
தடைகளை தாண்டி யாழ்.பல்கலையில் ஒளிர்ந்த தீபங்கள்! November 18, 2021 யாழ். பல்கலைக்கழகத்தில் தடைகளையும் மீறி மாணவர்களால் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது! தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை விளக்கீடான இன்று பல்வேறு தடைகளையும் தாண்டி யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் தீபம் ஏற்றப்பட்டது. இன்று மாலை 6 மணியளவில் பல்கலைக்கழகத்திற்கு கார்த்திகை விளக்கீட்டினை முன்னிட்டு தீபங்களை ஏற்ற சென்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் ஆன்மீகரீதியான செயற்பாடுகளை மேற் கொள்ளவும் தடை விதிப்பதா என மாணவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு பல்கலைக்கழகத்திற்குள்…
-
- 1 reply
- 319 views
-
-
மத்திய அரசினால் ஒப்பந்தம் வழங்கப்பட்டு செய்து முடிக்கப்பட்ட பல வேலைகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு! மத்திய அரசாங்கத்தினால் ஒப்பந்தம் வழங்கப்பட்டு செய்து முடிக்கப்பட்ட பல வேலைகளுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படாமல் உள்ளது. மேலும் மாகாணங்களுக்கு குறித்து ஒதுக்கப்பட்ட நிதி வேலைக்கான கொடுப்பனவு அதிகமான ஒப்பந்ததாரர்களுக்கு இன்னும் முழுமையாக வழங்கப்படாது உள்ளதென இலங்கை தேசிய நிர்மாண சங்கத்தின் வடமாகாண கிளையின் தலை…
-
- 0 replies
- 190 views
-
-
நவ-20 அழைப்பை மீளப்பெற வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஆயர் பேரவையுடன் P2P மக்கள் பேரெழுச்சி இயக்கத்தினர் சந்திப்பு! இதுதொடர்பில் P2P மக்கள் பேரெழுச்சி இயக்கத்தினர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, போரினால் இறந்தோர் நினைவு தொடர்பான வடக்கு கிழக்கு ஆயர்களுடனான சந்திப்பு மேற்படி விடயம் தொடர்பாக அண்மையில் வடக்கு கிழக்கு ஆயர்கள் பேரவையினால் வெளியிடப்பட்ட போரினால் இறந்தோர் நினைவு எனும் தலைப்பிலான அறிக்கை பல தரப்பினருக்கு அதிருப்தியையும், கவலையையும் தமிழ்த் தேசியத்தின் பால் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வடக்கு கிழக்கு சிவில் சமூகங்களாக இவ்விடயம் தொடர்பாக நடைபெற்ற பல்வேறுபட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில், சிவகுரு ஆதீன முதல்வரும் பொத்துவில் தொடக…
-
- 0 replies
- 220 views
-
-
மன்னார் ஆட்காட்டிவெளி. மாவீரர் துயிலும் இல்லத்தின் பொதுச் சுடர் ஏற்றும் பீடம் இடித்தழிப்பு. மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் பிரதான சுடர் ஏற்றும் பீடம் முற்றாக இடித்தழிக்கப்பட்டுள்ளது. இது அரச பயங்கரவாதத்தின் மிலேச்சத்தனமான செயல் என மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக துயிலுமில்ல ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டாளரும் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவருமாகிய வி.எஸ் சிவகரன் கருத்து வெளியிடும் போது, “துயிலுமில்ல நுழைவாயிலுக்கு அருகில் இராணுவம் உள்ள போது யார் உடைத்திருக்க முடியும் என்பது வெளிப்படையாகவே தெரிகின்றது. பல வருடங்களாக இருந்த இந்த…
-
- 0 replies
- 207 views
-