ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீட கட்டட தொகுதியின் கட்ட நிர்மாணப்பணிகள் ஆரம்பம் (எம்.மனோசித்ரா) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழிநுட்பம் மற்றும் உயிர்த்தொகுதித் தொழிநுட்ப பீடத்திற்குத் தேவையான கட்டிடங்களுக்கான கிளிநொச்சி கட்டிட நிர்மாண ஒப்பந்தம் - 2 ஆம் கட்டத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழிநுட்பம் மற்றும் உயிர்த்தொகுதித் தொழிநுட்ப பீடத்திற்குத் தேவையான கட்டிடங்களுக்கான கிளிநொச்சி கட்டிட நிர்மாணக் கருத்திட்டம், உலக வங்கியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்வதற்காக 2019 ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அ…
-
- 0 replies
- 286 views
-
-
வவுனியாவில் இளவயதினருக்கு எயிட்ஸ் நோய்- மருத்துவர் சந்திரகுமார் November 30, 2021 வவுனியாவில் கடந்த சில ஆண்டுகளில் 29பேர் எயிட்ஸ் நோயாளிகளாக இனம்காணப்பட்டுள்ளதுடன் இளவயதினரே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி கு.சந்திரகுமார் தெரிவித்தார். எயிட்ஸ் நோய் தொடர்பாக இன்று ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவித்த அவர், ‘உலக எயிட்ஸ் தினம் மார்கழி மாதம் 1 ம் திகதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கபட்டு வருகின்றது. இம்முறை சமத்துவமின்மையை ஒழிப்போம், எயிட்ஸ்சை ஒழிப்போம், பெருந்தொற்றை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் உலக எயிட்ஸ் தினம் அனுஸ்டிக்கபட இருக்கின்றது. …
-
- 1 reply
- 484 views
-
-
மேற்குலக நாடுகளின் கடன் பொறியில் இருந்து இலங்கையை காப்பாற்றினோம்-சீனா துாதரகம் November 30, 2021 மேற்குலக நாடுகளின் கடன் பொறியில் இருந்து இலங்கையை சீனா காப்பாற்றியதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இலங்கை இதுவரை பெற்றுக்கொண்டுள்ள சர்வதேச கடன்களில் சீனாவிடம் 10 வீதமான கடனையே பெற்றுள்ளது. அது 3 ஆயிரத்து 388.2 மில்லியன் டொலர்கள் என இலங்கை மத்திய வங்கியை மேற்கோள்காட்டி சீனத் தூதரகம் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு விட தயாராகிய நேரத்தில் சீனா உதவுவதற்காக முன்வந்து, இலங்கையை கடன் பொறியில் இருந்து காப்பாற்றியது எனவும் சீனத் த…
-
- 2 replies
- 409 views
- 1 follower
-
-
யாழ்.கரையோரங்களில் சடலங்கள் தொடர்ந்து கரையொதுங்குகின்றன யாழ்.மருதங்கேணி கடற்பகுதியில் சடலம் ஒன்று, இன்று (செவ்வாய்க்கிழமை) கரையொதுங்கியுள்ளது. அதாவது, நான்கு நாட்களில் நான்காவதாக இந்த சடலம் கரையொதுங்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை வல்வெட்டித்துறை,மணற்காடு கரையோரத்தில் இரு சடலங்களும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவு கடற்பரப்பில் ஒரு சடலமும் கரையொதுங்கியுள்ள நிலையில், இன்றையதினம் மருதங்கேணி கடற்பகுதியிலும் ஒரு சடலம் கரையொதுங்கி உள்ளது. கரையொதுங்கிய நான்கு சடலங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியாத நிலையில், சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளன. குறித்த சம்பவங்க…
-
- 0 replies
- 287 views
-
-
மன்சு லலித் வர்ணகுமார பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து நிலவிய வெற்றிடத்திற்கு வாத்துவகே மன்சு லலித் வர்ணகுமார நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான வர்த்தமானி அறிவிப்பு இன்று (30) வௌியிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்சு லலித் வர்ணகுமார பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் (adaderana.lk)
-
- 0 replies
- 376 views
-
-
வரலாற்றின் முதல் தடவையாக யாழ் மாநகரசபையில் செங்கோல் வரலாற்றின் முதல் தடவையாக யாழ் மாநகரசபை அமர்வு செங்கோலுடன் மாநகர முதல்வர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது மாநகர முதல்வர் வி. மணிவண்ணனின் வேண்டுகோளுக்கு அமைய அண்மையில் குகபதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானம் யாழ்.மாநகர சபைக்கு செங்கோல் ஒன்றினை வழங்கியது. நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 11ஆவது நிர்வாக அதிகாரி குமரேஷ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட செங்கோலுடன் வரலாற்றில் முதல் தடவையாக இன்றைய மாநகர அமர்வு மாநகர முதல்வர் தலைமையில் நடைபெற்றது. …
-
- 0 replies
- 364 views
-
-
இலங்கையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களால் உயிர்களுக்கு ஏற்படும் பேராபத்து ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 28 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,KRISHANTHAN படக்குறிப்பு, ஹட்டன் - கேஸ் சிலிண்டர் வெடித்த இடங்களில் ஒன்று இலங்கையில் கடந்த சில வாரங்களாகவே, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் சமையல் எரிவாயு அடுப்புக்கள் வெடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன. வீடுகள், உணவகங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறு சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்புக்கள் வெடிக்கும் சம்பவங்கள் பதிவாகி வருவதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறு …
-
- 2 replies
- 638 views
- 1 follower
-
-
கனிய மண் அகழ்விலிருந்து எமது கிராமத்தை காப்பாற்றுங்கள் – புடவைக்கட்டு கிராம மக்கள் கோரிக்கை Posted on November 29, 2021 by தென்னவள் 29 0 திருகோணமலை புடவைக்கட்டு கிராமத்தை கனிய மண் அகழ்வில் இருந்து பாதுகாக்க உதவுங்கள் என குச்சவெளி பிரதேச பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புடவைக்கட்டு கிராமம் 1950 ஆம் ஆண்டு முன்னோர்களால் குடியேறி உருவாக்கப்பட்ட 72 ஆவது வருட வரலாற்றைக்கொண்ட ஒரு பழமை வாய்ந்த கிராமமாகும். இங்கு தற்போது முஸ்லிம்கள், இந்துக்கள், சிங்களவர்கள் என 450 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் மீன்பிடித் தொழிலையே தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டு கடற்கரையோரங்களில் மணை…
-
- 0 replies
- 321 views
-
-
விலையை நிலைப்படுத்துவதற்கு மியன்மாரில் இருந்து அரிசி இறக்குமதி Posted on November 30, 2021 by தென்னவள் 21 0 சந்தையில் அரிசி விலையை நிலைப்படுத்துவதற்காக அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பற்றாக்குறையின்றி போதுமானளவு அரிசியை நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கும், பாதுகாப்பான கொள்ளளவைப் பேணுவதற்கும் இயலுமான வகையில் 100,000 மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு 2021 செப்ரெம்பர் மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அரசாங்கத்திடமிருந்து அரசாங்கத்திற்கு எனும் அடிப்படையின் கீழ் இலங்கை அரசாங்கம் மற்றும் மியன்மார் அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப…
-
- 0 replies
- 295 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் யாழில் போராட்டம்! வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. வலிந்து காணாமல்போனோருக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே நீதியைத் தா போன்ற பல்வேறு கோஷங்கள் இதன்போது எழுப்பப்பட்டன. ஒவ்வொரு மாதமும் 30ஆம் திகதி வலிந்து காணாமல் போனோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/…
-
- 0 replies
- 314 views
-
-
யாழ். மாநகரசபை முதல்வரை சந்தித்தார் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் இலங்கை நாட்டுக்கான ஜேர்மன் தூதுவர்Holger seubrt க்கும் யாழ். மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று (திங்கட்கிழமை) யாழ். மாநகரசபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில், தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையாகவுள்ள சமஷ்டி அடிப்படையிலான தீர்வை பெற்றுக்கொள்வதற்கும், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பு உட்பட்ட அநீதிகளுக்கு நீதியை பெற்று கொடுப்பதற்கும் ஜேர்மன் உள்ளிட்ட சர்வதேச சமூகம் உதவ வேண்டும் என்ற கோரிக்கையை தூதுவரிடம் முதல்வர் முன்வைத்துள்ளார். மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்ட மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவ…
-
- 0 replies
- 269 views
-
-
யாழ்ப்பாணம் மாதகல் குசுமந்துறை பகுதியில் குவிக்கப்பட்டுள்ள கடற்படையினர் யாழ்ப்பாணம் மாதகல் குசுமந்துறை கிராம சேவையாளர் பிரிவு – 150, பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியாருக்கு சொந்தமான 1 பரப்பு காணியை சுவீகரிப்பதற்கான காணி அளவீட்டு பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெறவுள்ளது.இந்நிலையில் குறித்த காணியை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அரசியல்வாதிகள், அப்பகுதி மக்கள் என பலரும் குறித்த காணிக்கு முன்பாக கூடிய வேளை, கொட்டான்களுடன் கடற்படையினர் அவர்களை சூழ்ந்து கொண்டு, அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் யாழ்ப்பாணம் மாதகல் குசுமந்துறை பகுதியில் கடற்படையின…
-
- 0 replies
- 280 views
-
-
சண்முகம் தவசீலன் - மதம் மாறாவிட்டால் ஆண்டவரின் சாபம் கிடைக்கும் என மிரட்டி மதம் மாற்ற முயன்ற குற்றச்சாட்டில் 3 பேர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் ஒன்று, முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம், கிழவன்குளம் கிராமத்தில், நேற்று (28) இடம்பெற்றுள்ளது. மதம் மாற்றச் சென்ற கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த ஒரு குழுவினர், தன்னை பேசி, அச்சுறுத்தல் விடுத்ததாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, மாங்குளம் பொலிஸாரால் வாகனத்துடன் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிழவன்குளம் பகுதிக்கு, ஹயஸ் ரக வான் மற்றும் மோட்டர் சைக்கிள் என்பவற்றில் சனிக்கிழமை (27) சென்ற ஒரு குழுவினர், அங்குள்ள வ…
-
- 1 reply
- 271 views
-
-
இலங்கைக்கு மீண்டும் சீனாவின் அபாய சங்கு- கடனை செலுத்தாத உகாண்டாவின் சர்வதேச விமான நிலையம் கபளீகரம்.! கம்பாலா: தம்மிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இயலாததால் உகாண்டா நாட்டின் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையத்தையும் சீனா தன்வசமாக்கி இருக்கிறது. சீனாவிடம் பெருந்தொகையிலான பணத்தை கடனாக வாங்கி ஏற்கனவே தமது நாட்டின் நிலப்பரப்புகளை சீனாவிடம் இழந்து இருக்கும் இலங்கைக்கு இது மிகப் பெரிய இன்னொரு எச்சரிக்கை மணி என்கின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள். கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டா, 2015-ம் ஆண்டு சீனாவிடம் இருந்து ரூ1,533 கோடி கடன் பெற்றது. என்டெபே சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக சீனாவிடம் இந்த கடனைப் பெற்றது உகாண்டா. இது தொடர்பான ஒப்பந்தத்தில…
-
- 1 reply
- 478 views
-
-
எமது மக்களுக்கும் சுகந்திரமில்லை ஊடகவியலாளர்களுக்கும் சுதந்திரம் இல்லை – சாணக்கியன் சாடல் November 29, 2021 முல்லைத்தீவில் ஊடகவியலாளர் ஒருவர் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து நீதியானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்ட ஊடகவியலாளர் மீது கடந்த 27ஆம் திகதி இராணுவத்தினர் மிலேச்சத்தனமான முறையில் திட்டமிட்ட வகையில் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதன்போது ஊடகவியலாளர் விஸ்வ…
-
- 0 replies
- 207 views
-
-
வவுனியாவில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்! வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் இன்றைய தினம் ( திங்கட்க்கிழமை ) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டஅது. இலங்கை ரீதியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அரச உத்தியோகத்தர்களால் நாட்டிற்கு சுமை என்ற கருத்தை அரசாங்கம் விலக்கிக்கொள்ள வேண்டும், அரச உத்தியோகத்தர்களின் அடிப்படை சம்பளத்தை பத்தாயிரத்தால் உயர்த்த வேண்டும், அரச ஊழியர்களின் வயதெல்லையை 65 வயதாக உயர்த்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரச ஊழிர்களின் கருத்து சுதந்திரத்தை மறுக்காதே ஆகிய நான்கு விடயங்களை முன்வைத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட செயலகத்த…
-
- 0 replies
- 351 views
-
-
வடக்கில் மேலும் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிக்க தீர்மானம் வடக்கில் மேலும் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் மேய்ச்சல் நிலத்திற்கான பற்றாக்குறை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இன்று சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இந்நிலைமை காரணமாக மாவட்டத்தில் பண்ணையாளர்களுக்கும் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படுவதாகவும் நாடாளுமன்றில் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வடக்கில் மாத்திரமின்றி நாட்டின் பல பகுதிகளில் இந்தப் பிரச்சினை காணப்படுவதாக தெரிவ…
-
- 0 replies
- 377 views
-
-
பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு வருமாறு முன்னாள் அரசியல் கைதியொருவருக்கு அழைப்பு வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரை, பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினரால் இன்று (திங்கட்கிழமை) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. வவுனியா- தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் ஆனந்தவர்ணன் என்பவரையே, எதிர்வரும் 01.12.2021 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு வருகை தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அரசியல் கைதிக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசா…
-
- 0 replies
- 390 views
-
-
மாதகலில் நாளை காணி அளவீடு – போராட்டத்திற்கு அழைப்பு! November 28, 2021 மாதகலில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சிக்காக காணி அளவீட்டு பணிகள் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளது. மாதகல் கிழக்கில் 3 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்புக்காக அளவீட்டு பணிகள் நாளைய தினம் திங்கட்கிழமை 09 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. அதேவேளை மாதகல் மேற்கில் 16 ஏக்கர் காணி அளவீட்டு பணிகள் காலை 11 மணியளவில் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த காணி அளவீட்டு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக நாளை குறித்த காணிகளுக்கு முன்பாக காணி உரிமையாளர்கள் , அரசியல்வாதிகள் , அப்பகுதி மக்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர…
-
- 1 reply
- 299 views
-
-
யாழில்... கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல்- ஒருவர் கைது யாழ்ப்பாணம்- கோட்டைக்கு அண்மையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையத்திற்கு அண்மையிலுள்ள குறித்த தேவாலயத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதையடுத்து, அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணை நடத்தியதோடு குறித்த தாக்குதலை நடாத்திய கொட்டடி பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளார்கள். கைது செய்யப்பட்டவர் மது போதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த தாக்குதலின் பிண்ணனி தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2021/1252881
-
- 3 replies
- 524 views
-
-
அமெரிக்காவினால் நடத்தப்படும் மெய்நிகர் உச்சி மாநாட்டில், இலங்கை புறக்கணிக்கப்பட்டமை ஆச்சரியமில்லை – UNP ஐக்கிய அமெரிக்காவினால் நடத்தப்படும் ஜனநாயகம் தொடர்பான மெய்நிகர் உச்சி மாநாட்டில் இலங்கை புறக்கணிக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை என ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தெரிவித்துள்ளது. ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு கண்டனம் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சி, கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட உயர் நெடுஞ்சாலையை அரசாங்கம் திறந்து வைப்பதாகவும் குற்றம் சாட்டியது. இந்த தாக்குதல்களுக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோ அல்லது அமைச்சரவையின் முன்னாள் அமைச்சர்களோ பொறுப்பென ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு …
-
- 0 replies
- 235 views
-
-
தமிழ் அரசியல் தலைமைகளின், ஒற்றுமை முயற்சிக்கு... சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும்- மாவை தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தமிழீழ மக்கள் கழகத்தின் பொதுச்செயலாளர் சதானந்தனின் நினைவுதின நிகழ்வில் பங்கெடுத்து உரையாற்றும்போதே, இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், தமிழ் மக்களுடைய பிரச்சினை தொடர்பாக சரியான ஒரு கோட்டில், நாங்கள் பயணிக்கவில்லை என்பதை பெரும்பாலானோரின் கருத்துக்கள் தெளிவாக கோடிட்டு காட்டுகின்றன என மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள…
-
- 1 reply
- 424 views
-
-
மாவீரர்களை நினைவுகூறிய பிற்றர் இளஞ்செழியன் அதிரடியாக கைது! சற்றுமுன் திடீர் பரபரப்பு
-
- 0 replies
- 439 views
-
-
இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக அனுமதிக்க பெண் எம்.பி.க்கள் ஆதரவு ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் 'விபசாரம்' என்று அழைக்கப்படும் பாலியல் தொழிலை சட்டமாக்குவது தொடர்பான விவாதம் பரவலாக எழுந்திருக்கிறது. நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர்களில் சிலர் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி வழங்குவதற்கு எதிர்ப்பும் காணப்படுகிறது. சுற்றுலா நாடு என்ற விதத்தில் இலங்கையில் இரவு நேர பொருளாதாரம் அமல்படுத்தப்பட வேண்டியது…
-
- 5 replies
- 684 views
- 1 follower
-
-
நாடு திரும்புகிறது சுமந்திரன் தலைமையிலான குழு : சம்பந்தனுக்கு முதல் விளக்கம் , 18 இல் மத்திய குழு கூட்டம் (ஆர்.ராம்) அமெரிக்கா, கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகளில் அனைத்துச் சந்திப்புக்களையும் நிறைவுசெய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான குழுவினர் அடுத்தவார முற்பகுதியில் நாடு திரும்பவுள்ளனர். இவ்வாறு நாடு திரும்பும் குழுவினர் முதலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்து தாம் சந்தித்த தரப்பினருடனான கருத்துப்பரிமாற்றங்கள் சம்பந்தமாக பூரணமான விளக்கங்களை வழங்கவுள்ளனர். இந்த விளக்கங்களை வழங்கும் சந்திப்பில் சுமந்திரனுடன் பயணங்களில் பங…
-
- 15 replies
- 1.1k views
-