ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
ஜெனரல் சரத் பொன்சேகாவை பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கைது செய்து, தடுத்து வைத்து சித்திரவதைக்கு உட்படுத்தாமல் உடனடியாக அவரை விடுதலை செய்யவும், ஜனநாயக தியில் போராட்டங்களை ன்னெடுத்து மக்கள்அலமாளிகையை கைப்பற்றுவதற்கு முன்னர் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி. சூளுரைத்தது. ஜெனரல் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோ கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டத்தின் போதே அக்கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு சூளுரைத்தனர். மக்கள் விடுதலை முன்னணி நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் புஞ்சி பொரளை சந்தியில் நேற்று மாலை 3 மணிக்கு ஆரம்பமானது. அவ்விடத்தில் அணிதிரண்ட ஆயிரக்கணக்கா…
-
- 9 replies
- 1.5k views
-
-
ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை... பாரதூரமானது, என்கின்றார் ஜி.எல்.பீரிஸ்! ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலெட்டின் அறிக்கையில் பாரதூரமான முரண்பாடுகளும், பலவீனங்களும் இருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. மூன்று தேர்தல்களில் தொடர்ந்தும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசின் செயற்பாடுகளில் தலையிடுவதைப் போன்று இந்த அறிக்கை அமைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஏனைய உறுப்பு நாடுகளைப் பொறுத்தமட்டில் இதேபோன்ற விசாரணை நடைமுறையில் பாகுபாட்டை காட்டுவது, ஐக்கிய நாடுகள் சபையின் அடித்தளத்தையே தாக்கும் செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன் இது நாடுகளின் இறையாண்மை, சமத்துவம் தொடர்பான கொள்கைகளை மீறுகிறது என்றும் பேர…
-
- 0 replies
- 185 views
-
-
3ம்இணைப்பு ‐ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய காங்கிரஸ் கட்சியின் கைப்பொம்மைகளாக செயற்படுகிறது ‐ ஸ்ரீகாந்தா ‐ சிவாஜிலிங்கத்தின் குரல் இணைக்கப்பட்டுள்ளது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொடுரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையே பொறுப்பென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றுள்ள எம்.பி. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். எதிர் வரும் பொதுத்தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்று புதிய கட்சியொன்றை உருவாக்கிய நிகழ்வின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது தமிழ்த் தேசியக் …
-
- 1 reply
- 528 views
-
-
20 நாடுகளில் இருந்து 205 அமைப்புகள் தமிழ் மக்கள் விடுதலைக்கு ஒன்று சேர்ந்து விடுக்கும் செய்தி. [Wednesday, 2014-01-15 09:22:17] News Service உலகம் எங்கும் வாழும் தமிழர்களாகிய நாம் - தமிழ் மக்களுக்கு விடுதலை, நீதி, சுதந்திரம் கிடைக்கும் வரை தமிழர்களின் குரலாக நாம் இருப்போம் என்றும் அதே போல் விடுதலை தேடி நிற்கும் மக்களுக்கும் குரல் கொடுப்போம் என்றும், தமிழர் திருநாள் - திருவள்ளுவர் ஆண்டு 2045 யில் கூறிக்கொள்ள விரும்புகிறோம். தமிழர்களுக்கு தேசிய அடையாளத்தை வழங்குவதும், சாதி சமய பேதங்களை கடந்து தமிழர்களின் பண்பாட்டுப் பாரம்பரியங்களை வெளிப்படுத்தி நிற்பதுவும், உலகத் தமிழர்களை ஒன்றிணைப்பதுமான தமிழ்ப் புத்தாண்டில், அனைவருடனும் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்…
-
- 26 replies
- 2k views
-
-
ஜனாதிபதியுடனான... கூட்டமைப்பின், கலந்துரையாடல் இரத்து ? உறுதிப் படுத்துவதில் சிக்கல் ! ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்போகும் விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தற்போது கலந்துரையாடி வருகின்றனர். குறித்த கலந்துரையாடல் கொழும்பில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றுவருகின்றது. இருப்பினும் ஒருசில காரணங்களினால் ஜனாதிபதியுடனான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் உண்மைத்தன்மை குறித்து கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கு ஆதவன் செய்திப்பிரிவு தொடர்புகளை மேற்கொண்டது. இருப்பினும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டமைப்பின் பங்காளி கட்சியினர் தொலைபேச…
-
- 2 replies
- 231 views
-
-
புலம்பெயர் தமிழ் மக்களை புரிந்து கொள்ளும் மேற்குலகு புலம்பெயர் தமிழர்கள் பரந்து வாழும் தேசம் எங்கும் ஒரு நடவடிக்கை இப்போது மேற்கொள்ளப்பட்டு வரு கின்றது. இலங்கைத் தமிழர்களின் தனித்துவத்தை எடுத்து ரைக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான வாக் களிப்பே அந்த நடவடிக்கையாகும். இந்த வரிசையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன் னர் டென்மார்க்கில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வாக்களிப்பில் பங்குகொண்ட இலங்கையரில் 98 வீதத் துக்கும் அதிகமானோர், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அங்கீகரித்துத் தமது முடிவை ஒப்புவித்திருக்கின்றார்கள் என்று கூறப்படுகின்றது. 1976 மே 14 ஆம் திகதி வட்டுக்கோட்டைத் தொகு தியில் உள்ள பண்ணாகத்தில் இடம்பெற்ற தமிழர் விடு தலைக் கூட்டணியின் முதலாவது தேசிய மாந…
-
- 3 replies
- 1.1k views
-
-
ரூபாயின் பெறுமதி... மேலும் வீழ்ச்சி: டொலரின் பெறுமதி 282 ரூபாயாக அதிகரிப்பு இலங்கை மத்திய வங்கியினால் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 272 ரூபாயாகவும் விற்பனை விலை 282 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. மேலும் ஸ்டெர்லிங் பவுண்டின் கொள்முதல் விலை 359 ரூபாயாகவும் விற்பனை விலை 372 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. அவுஸ்ரேலிய டொலரின் விற்பனை விலை 210 ரூபாயாகவும் கனேடிய டொலரின் விற்பனை விலை 225 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. https://athavannews.com/2022/1272909
-
- 21 replies
- 1.3k views
- 1 follower
-
-
மகிந்தவுக்கும் தன் மருமகனுக்கும் விசுவாசமாக செயற்படும் பான் கீ மூன்!! போர்க்குற்ற விசாரணைகள் மற்றும் சர்வதேச அழுத்தம் ஆகியவற்றிலிருந்து சிறிலங்காவை காப்பாற்றும் தொடர்ச்சியான முயற்சியில் ஐக்கிய நாடுகள் சபை ஈடுபட்டுவருவதன் பின்னணியில், மிகப்பெரிய குடும்ப அரசியலும் பரஸ்பரம் நட்பு பாராட்டும் நடவடிக்கைகளும் ஒழிந்திருக்கின்றன என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாவது:- சிறிலங்காவுக்கு எந்த நடவடிக்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபை வெளிப்படையாக எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதில்லை என்பது சகல தரப்பினரும் அறிந்த உண்மை. சிறிலங்கா அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்கள…
-
- 0 replies
- 615 views
-
-
மரியாதைக்குரிய சம்பந்தர் ஐயாவுக்கு அன்பு வணக்கம். உங்கள் அரசியல் அனுபவம் என்றும் மதிக்கப்பட வேண்டியது. உங்கள் மீது எமக்கு எந்தக் காழ்ப்புணர்வும் கிடையாது. உங்கள் காலத்தில் தமிழ் மக்களுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற உங்கள் ஆசை நியாயமானதுதான். தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிட வேண்டும் என்று தந்தை செல்வ நாயகம், சட்டமேதை ஜீ.ஜீ.பொன்னம்பலம், தளபதி அமிர்தலிங்கம் ஆகியோரும் ஆசைப் பட்டதுண்டு. என்ன செய்வது அவர்களுடைய ஆசை களும் நிறைவேறாமல் போயிற்று. அதேநிலை தான் உங்கள் ஆசைக்கும் ஏற்பட்டுள்ளது என்பதை என்றோ ஒரு நாள் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். எனினும் உங்கள் மீதும் எமக்கு கோபம் உண்டு. அது தனிப்பட்டதன்று. மாறாக எங்கள் …
-
- 6 replies
- 867 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் சாட்டில், அவரைச் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச. இதுதொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இரா.சம்பந்தன் இன்று 81வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவர் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா சென்றுள்ளார். சிறிலங்கா அதிபர் மகிநத ராஜபக்ச இன்று தொலைபேசி மூலம் இரா.சம்பந்தனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், அவசியம் சந்தித்துப் பேச வேண்டியுள்ளதாகவும் அழைப்பு விடுத்துள்ளார். சம்பந்தன் நாடு திரும்பியதும் சிறிலங்கா அதிபருடன் சந்திப்பு இடம்பெறும் என்றும் கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டம…
-
- 0 replies
- 366 views
-
-
செய்தி யாழ்ப்பாண மாவட்ட தமிழரசுக் கட்சி பாராளுமன்ற வேட்பாளர் பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் அவர்கள் 03.04.2010 சனிக்கிழமை மாலை கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாசாலை முன்றலில் நடைபெற்ற தமிழர் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் கலந்து உரையாற்றும் பொழுது பின்வரும் கருத்துக்களை முன்வைத்தார். எமக்கான அபிவிருத்தியைப் பேணுவதற்கும் எமக்கான அபிவிருத்தியை மேற்கொள்வதற்கும் எமக்குரிய தனித்துவமான தொன்மையான கலை, கலாசாரங்களை வளர்த்தெடுப்பதற்கு எமக்கு சட்டங்களை ஆக்கவல்ல அரசியல் பலம் தேவையாகவுள்ளது. மக்கள் இதனை உணர்ந்து தமிழர் தேசியக் கூட்டமைப்பை பெரும்பான்மை பலத்துடன் பாராளுமன்றம் அனுப்பி எதிர்வரும் ஆறு ஆண்டுகளில் இவற்றை அரசிடம் அடிபணியாது, உறுதியான முறையில்…
-
- 0 replies
- 674 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துகின்றனர்! – கோத்தபாய குற்றச்சாட்டு. [Monday, 2014-02-17 17:55:22] வெளிநாட்டுப் பிரஜைகள் மிக இலகுவாக இலங்கைக்குள் பிரவேசித்து சுதந்திரமாக நடமாடுவதாகவும், இந்த சுதந்திரத்தை புலம்பெயர் தமிழர்கள் தவறாகப் பயன்படுத்திக் கொள்வதாகவும் குற்றம்சுமத்தியுள்ளார் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ. இதுகுறித்து அவர் கருத்து வெளியிடுகையில், வீசா காலம் முடிவடைந்து நாட்டில் தங்கியிருப்பவர்களை கைது செய்ய விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் வீசா காலம் முடிவடைந்த பின்னர் தங்கியிருப்பவர்களுக்கு எதிராக எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படுகின்றதோ அதேவிதமான நடவடிக்கை இலங்கையிலும் எடுக்கப்படும். …
-
- 1 reply
- 628 views
-
-
இலட்சாதிபதியாக கரை திரும்பிய மீனவர்- கடலில் என்ன கிடைத்தது தெரியுமா? மட்டக்களப்பு பேத்தாழை பகுதியைச் சேர்ந்த ஆழ்கடல் மீன்பிடி படகு உரிமையாளர் ஒருவருக்கு 2,500 கிலோகிராமிற்கு அதிக நிறையுள்ள சுறாமீன்கள் பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேத்தாழை பகுதியைச் சேர்ந்த மீன்பிடி படகு உரிமையாளரான எஸ்.அகிலகுமார் என்பவருக்கே இந்த அதிஷ்டம் கிடைத்துள்ளது. கடந்த சில தினங்களாக கடலில் தங்கியிருந்து இன்று கரை திரும்பிய குறித்த மீனவருக்கு இந்த அதிஷ்டம் கிடைத்துள்ளது. இன்றைய நிலையில் குறித்த மீன்களின் முதற்கட்ட விலை பத்து இலட்சத்து முப்பதாயிரத்திற்கும் அதிகளவு பெறுமதியானது என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கடந்த …
-
- 2 replies
- 646 views
-
-
http://www.yarl.com/articles/files/100413_Colombo_reporter.mp3 நன்றி ATBC அவுஸ்திரேலியா
-
- 0 replies
- 610 views
-
-
தனது எதிர்ப்பையும் மீறி மகிந்த ராஜபக்ச அறிவித்த போர்நிறுத்தத்தினால், 2009 ஜனவரி இறுதியில், விடுதலைப் புலிகளுடனான போரில் தோல்வியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டதாக, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜனநாயக கட்சியின் தலைவரான அவர், செசல்வத்தையில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 2009 ஜனவரி 31ம் நாள் அறிவிக்கப்பட்ட இரண்டு நாள் தற்காலிக போர்ஓய்வை அடுத்து, விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் 500 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டனர். சிறிலங்கா அதிபர் 48 மணிநேர போர்ஓய்வை அறிவித்த போது நான் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தேன். இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளால், பின்தள்ளப்பட்ட…
-
- 0 replies
- 180 views
-
-
விலையேற்றத்துக்கு எதிராக மட்டக்களப்பில் சுவரொட்டிகள் Share அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக மட்டக்களப்பு நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்தச் சுவரொட்டிகளுக்கு முன்னிலை சோசலிச கட்சி உரிமை கோரியுள்ளது. ”அரிசி 100 ரூபாய், தேங்காய் 100 ரூபாய்! அப்படி என்றால் நாங்கள் மண்ணையா உண்பது ? சம்பளத்தைக் கூட்டு!” என்ற வாசகங்கள் சுவரொட்டிகளில் ஒட்டப்பட்டுள்ளன. http://newuthayan.com/
-
- 0 replies
- 177 views
-
-
'நேர்மையாகவும் விசுவாசமாகவும் செயற்படக்கூடிய ஒரு குழுவினரையே மனித உரிமை அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்திக்க ஜெனீவாவுக்கு அனுப்புங்கள். ஜெனீவா விஜயத்தின்போது அனுபவமற்றவர்களிடம் கையளியாது நீங்களே அந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும்' என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜெனீவா விடயம் தொடர்பில் இரா.சம்பந்தனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே ஆனந்தசங்கரி மேற்கண்ட கோரிக்கையினை முன்வைத்துள்ளார். அக்கடிதத்தில், சில பிரச்சினைகள் பற்றி நடவடிக்கை எடுக்கும்போது கத்துக்குட்டிகளிடம் விட்டுவிடாது நீங்களே தலையிட்டு நடவடிக்கை எடுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்…
-
- 5 replies
- 484 views
-
-
அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணாது ஜனாதிபதி யாழ்.வரக்கூடாது வித்தியா கொலை வழக்கை கொலை அச்சுறுத்தலுக்கு மத்தி யிலும் யாழ்.மேல் நீதிமன்றில் விசாரணை செய்ய முடியும் என் றால், அரசியல் கைதிகளுடைய வழக்குகளை ஏன் வவுனியா நீதிமன்றில் விசாரணை செய்ய முடியாது? என கேள்வியெழுப்பியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுசெயலாளர் செல்வராஜா கஜேந்திரன், நாளை நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அன்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக அனைத்து தரப்பினரும் ஒன்று கூடவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று மதியம் நட…
-
- 3 replies
- 414 views
-
-
21ஆவது திருத்தச்சட்டத்தை... அறிமுகப்படுத்துவதற்கான. யோசனைக்கு... அமைச்சரவை அனுமதி. புதிய சீர்திருத்தங்களுடன் 20வது மற்றும் 19ஆவது திருத்தச்சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு 21ஆவது திருத்தச்சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், இதற்காக அமைச்சரவை உப குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1278519
-
- 0 replies
- 128 views
-
-
தென் தமிழீழத்தில் போரினால் 49,000 விதவைகள், எதுவித உதவிகளும் கிடைக்கவில்லை. வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, மே 2, 2010 யுத்தம் ஏற்படுத்திய பாதிப்பின் காரணமாகக் கிழக்கு மாகாணத்தில் 49 ஆயிரம் விதவைகள் உள்ளனர் என்றும், அவர்களுள் 25 வயதுக்கும் குறைந்த பெண்கள் சுமார் 25 ஆயிரம் பேர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 25 வயதுக்கும் குறைந்த விதவைப் பெண்களுள் சுமார் 12 ஆயிரம் பேர் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளின் தாய்மார்கள் என்றும், சிறார்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டு அமைச்சகம் கூறியுள்ளது. ஆனால் இவர்களுக்கு உருப்படியான திட்டங்கள் எதுவும் செயற்படுத்தப்படவில்லை. http://www.eelanatham.net/story/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B…
-
- 0 replies
- 368 views
-
-
தாயகம் திரும்பிய இளைஞன் கட்டுநாயக்காவில் கைதுசெய்யப்பட்டுள்ளார் சுவிஸர்லாந்திலிருந்து பல தசாப்தங்களுக்கு பின்னர் தாயகம் திரும்பிய இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒக்ரோபர் 15 ஆம் திகதியான நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சுவிட்ஸர்லாந்திலிருந்து வந்த இவரை விமான நிலையத்திலுள்ள ஸ்ரீலங்கா விஷேட குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்து தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். யுத்தம் காரணமாக ஏழு வயதில் பெற்றோருடன், சுவிடஸர்லாந்து சென்று அங்கு அரசியல் தஞ்சம் கோரியுள்ள யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சொந்த இடமாக கொண்ட தேவன் கமலீசன் 27 வருடங்களுக்கு பின்னரே தெனது பூ…
-
- 0 replies
- 441 views
-
-
உறவினர்கள் தொடர்புகொள்ளவும் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்று தனது நெஞ்சில் பச்சைக்குத்திய நபர் ஒருவர் பக்கவாதத்தால் இறந்துள்ளார். அவரது உடல் தமிழகத்தில் கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரை தெரிந்தவர்கள் தொடர்புகொள்ளவும். அவரது படம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை தமிழகத்தில் தாராபுரத்தில் ஒருவர் பக்கவாதத்தால் மயக்கமடைந்து இருப்பதை அறிந்த பொதுமக்கள் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நெஞ்சில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்றும் ஆதி என்றும் பச்சைக்குத்தப்பட்டுள்ளது. அதிகாலை 3.30 மணியளவில் மருத்துவமனையில் இறந்துள்ளார். அவரது உடலம் கோவை அரசு மருத்துவமனையில் தோழர்கள் அறக்கட்டளை பொறுப்பாளர் சாந்தக்குமாரின் பொறுப்பில் உள்ளது. …
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறுவர் தொழிற்சந்தையின் இரண்டாம் நாள் நிகழ்வு இன்று காலை 10.30 மணி முதல் சாவகச்சேரி டிறீபேர்க் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது. செலான் வங்கியினால் தென்மராட்சி பாடசாலை மாணவர்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் நான்கு பாடசாலைகளில் இந்தத் தொழிற்சந்தை நடத்தப்படுகின்றது. இதில் தரம் 5 க்கு உட்பட்ட மாணவர்களால் அவர்களது வீடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக தென்மராட்சி வலயக்கல்வி பிரதிப் பணிப்பாளர் சி.சிவத்துரையும், சிறப்பு விருந்தினராக செலான் வங்கியின் வடபிராந்திய முகாமையாளர் வி.சிவகரன் மற்றும் கல்லூரி முதல்வர் து.அருந்தவபாலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன்போது இலங்கை மகளிர் க…
-
- 11 replies
- 983 views
-
-
மீன்பிடித்துறையை முன்னேற்ற நோர்வே அரசாங்கம் உதவும் : நோர்வே தூதுவர் இலங்கையின் மீன்பிடித்துறையை நிலையானதாக மாற்றுவதற்கான உதவிகளை நோர்வே தொடர்ந்தும் மேற்கொள்ளும் என்று இலங்கைக்கான நோர்வே தூதுவர் தூர்பியோன் கவுஸச்சேத்த தெரிவித்தார். வலி.வடக்கு, பலாலி கிழக்கில் அமைந்துள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்க கட்டடத்தை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், மீளக்குடியேறிய பகுதிகளில் வாழ்வாதார உட்கட்டுமான மற்றும் பிற துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது. நான் கடந்த…
-
- 0 replies
- 366 views
-
-
சர்வதேச நாணய நிதிய குழு, இலங்கை குழுவுக்கு இடையில்... இணையவழி பேச்சு!! சர்வதேச நாணய நிதிய குழு, இலங்கை குழுவுடன் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதிவரை இணையவழி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இலங்கை தொடர்பான தமது புதுப்பிக்கப்பட்ட அறிவித்தலை வெளியிட்டு, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை பிரதானி மசாயிரோ நொஸாகி இதனை அறிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம், தமது கொள்கை எல்லைக்குள், இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1280596
-
- 0 replies
- 131 views
-