Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் கோருகின்றோம்-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி November 13, 2021 ‘மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பையும் கோருவதாக வேண்டுகோள் விடுத்துள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணி, நவம்பர் 21-27 திகதிவரை நினைவிருத்தும்வகையிலும், வடக்குக் கிழக்குத் தழிழர் தாயகமெங்கும் நவம்பர் 27ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு அனைத்து ஆலயங்களிலும் மணியொலி எழுப்பி வரலாற்றைக் கடத்துவதுமே வரவேற்கத்தக்க விடயமாக அமையும் என்பதையும் நாம் வடக்கு கிழக்கு ஆயர் மன்றத்தினரிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்’ எனத் தெரிவித்துள்ளது தமிழ்தேசிய மக்கள் முன்னணி மேலும் தெரிவித்துள்ளதாவது, “மாவீவர் மாதத்தின் புனிதத்…

  2. 2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் விபரம் Ø பட்டதாரிப் பயிலுநர்களுக்கு ஜனவரியில் நிரந்தர நியமனம் Ø அதிபர், ஆசிாியர்களின் சம்பள முரண்பாட்டைச் சீராக்க ரூ.30,000 மில்லியன் Ø காணாமலாக்கப்பட்டோருக்கு ரூ.300 மில்லியன் இழப்பீடு Ø பழிவாங்கப்பட்டோருக்கு ரூ.100 மில்லியன் ஒதுக்கீடு Ø அரச அலுவலர்கள் மோ. சைக்கிள் பெற ரூ.500 மில்லியன் Ø அரச அலுவலர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை 65 ஆக உயர்வு Ø எம்.பிக்களின் ஓய்வூதியத் தகுதிக் காலம் 10 வருடங்கள் Ø நாடு முழுவதும் தடையற்ற 5ஜி வலையமைப்பு Ø அரச அலுவலகங்களில் புதிய கட்டடங்கள் அமைக்க 2 வருடங்கள் தடை Ø அரச அலுவலர்களுக்கான எாிபொருள் 5 லீற்றரால் குறைப்பு Ø அமைச்சர்கள், அதிகாரிகளுக்கான மாதாந்த த…

  3. சோமாலியாவாக மாறும் இலங்கை - எதிர்கட்சித்தலைவர் விசனம்! “எமது நாட்டை சோமாலியா நாடுபோல் ஆக்குவதற்கான வரவு – செலவுத் திட்டமே முன்வைக்கப்பட்டுள்ளது. அதில் தெளிவான திட்டங்கள், தீர்வுகள் என ஒன்றும் இல்லை.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் முன்வைக்கபட்ட வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே சஜித் இவ்வாறு சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “மக்கள் நலத்திட்டங்கள் அடங்கிய வரவு – செலவுத் திட்டமொன்றையே மக்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் தெளிவற்ற வெற்று ஆவணமொன்றே நிதி அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை முகாமை செய்வதற்கான தெளிவான வழிகாட்டல்கள் இல்லை…

  4. வடக்கில் சமூக காவல் குழுக்கள் November 12, 2021 வடமாகாணத்தில் குற்றச் செயல்களைத் தடுக்க சமூக காவல்துறைப் பிரிவுகள் நிறுவப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் குற்றச் செயல்களைத் தடுக்க சமூக காவல்துறைப் பிரிவுகள் நிறுவப்படும் எனவும் வடக்கில் இளைஞர்கள் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் அவர் தெரித்துள்ளார். வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் பூரண மேற்பார்வையின் கீழ், வடமாகாண சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ஜகத் பலிஹக்காரவின் பணிப்புரையின் பேரில், பிரஜா காவற்துறையினர் வடமாகாணத்தில் வேலையற்ற இளைஞர்களை வலப்புறம் வழிநடத்தும் வகையில் விசேட நிகழ்ச்சித் தொடர்களை தயாரித்துள்ளனர். …

  5. ஏ-9 வீதியூடாகப் பயணித்த டிப்பர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து புடைவை வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவம் இன்று மாலை கிளிநொச்சி நகர் பகுதியில் நடந்துள்ளது. விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. கடையில் இருந்த பெறுமதியான பொருள்கள் சேதமடைந்தன. யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாகக் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். https://thamilseithy.com/2021/11/12/அதிவேகத்தால்-வந்த-வினை-ப/

  6. இலங்கை பட்ஜெட் 2022: நீங்கள் அறிய வேண்டிய 10 முக்கிய தகவல்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,PARLIAMENT OF SRI LANKA இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தாக்கல் செய்த 2022ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், மதுபானம், சிகரெட்டுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்தால் மட்டுமே அவர்களுக்கான ஓய்வூதியத்தை பெறலாம் என யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. இலங்கையின் 76ஆம் வரவு செலவு திட்ட அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று (12) தாக்கல் செய்யப்பட்டது. இதையொட்டி 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நிதி அமைச்சர…

  7. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 3 இளம் சட்டத்தரணிகள் நீதிபதிகளாகத் தெரிவு! சி.எல்.சிசில்) எதிர்வரும் 15.11.2021 தொடக்கம் இலங்கை நீதிச் சேவையில் நீதிபதிகளாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் தெரிவாகியுள்ளனர். ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார், தர்மலிங்கம் பிரதீபன், தேஷெபா ராஜ், சுபாஷினி தேவராஜா மற்றும் நிரஞ்சனி முரளிதரன் ஆகியோரே இவ்வாறு தெரிவாகியுள்ளனர். நீதிபதிகளுக்கான பதவி நியமனத்துக்கான திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்ததையடுத்தே இவர்கள் நீதிபதிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். https://thinakkural.lk/article/149406 ஐவரின் பெயர் இருக்கின்றது!

    • 2 replies
    • 512 views
  8. யாழ். போதனா வைத்தியசாலையில் குருதிக்கு தட்டுப்பாடு;குருதி தானம் வழங்குமாறும் கோரிக்கை (சி.எல்.சிசில்) யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களுக்குத் தேவையான குருதியை வழங்க முடியவில்லை என அவ்வைத்தியசாலையின் இரத்த வங்கி அறிவித்துள்ளது. அது தொடர்பில் அவர்கள் குறிப்பிடுகையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இருக்க வேண்டிய ஆகக் குறைந்த குருதியின் அளவு 330 பைந்த் ஆகும். ஆனால் தற்போது இருக்கும் குருதியின் அளவோ 200 பைந்த் ஆகும். இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் இரத்த வங்கி உள்ளது. இருக்கின்ற குருதியும் இன்னும் 5 நாட்களுக்கு மட்டுமே போதும். அதன் பின்பு ஏற்படுகின்ற அனர்த்தங்களுக்கோ அல்லது விபத்துகளுக்கோ, ச…

  9. மட்டக்களப்பில் 46 மில்லியன் ரூபா செலவில் உளுந்து, பயறு, இஞ்சி பயிர்செய்கை - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனால் நிதி ஒதுக்கீடு November 12, 2021 (கல்லடி நிருபர்)மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை பெரும்போக விவசாயத்தில் 46 மில்லியன் ரூபா செலவில் உளுந்து, பயறு மற்றும் இஞ்சி பயிர் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 46 மில்லியன் ரூபா செலவில் உளுந்து, பயறு மற்றும் இஞ்சி பயிர் செய்கைக்காக நிதி ஒதுக்கப்பட்டு பிரதேச செயலக ரீதியாக விதைகள் வழங்கி வைக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று…

  10. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்தனர் சுமந்திரனும், சாணக்கியனும்! November 12, 2021 இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹில்டன் அம்மையாரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.இதன்போது, வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பல பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். http://www.battinews.com/2021/11/blog-post_662.html

  11. 9000 ஏக்கர் காடுகளை அழித்து சிங்கள குடியேற்றம்- பாராளுமன்றத்தில் சிறீதரன் சுட்டிக்காட்டு November 12, 2021 தமிழர்களின் பரம்பரை நிலங்களைப் பறித்து தமிழர்கள் இந்த நாட்டின் பிரஜைகள் அல்லவென்ற திட்டத்தை அரசு கச்சிதமாக முன்னெடுக்கின்றது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், ஒதுக்கீடுகள் என்று கூறி தமிழ் மக்களை விவசாயம் செய்ய விடாது தடுக்கின்றனர். மறுபுறம் 9000 ஏக்கர் காடுகளை அழித்து சிங்களவர்களை குடியேற்றுகின்றனர். இது தான் இந்த நாட்டின் ஒரே நாடு ஒரே சட்டமா? தமிழ் மக்களுக்கு ஒரு சட்டமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று இடம் பெற்ற வேலையாட்களின் குறைந்த பட்ச ஓய்வு பெறும் வயது சட்டமூலம் மற்…

  12. வடக்கு கிழக்கின் திட்டமிட்ட குடிசன வரைபை மாற்றியமைக்கும் சதித்திட்டம் - கஜேந்திரகுமார் வடக்கு கிழக்கில் திட்டமிட்ட காணி அபகரிப்பு இடம்பெற்றுக்கொண்டுள்ள அதே வேளையில் தற்போது எல்லை மீள் நிர்ணயம் என்ற பெயரில் வடக்கு கிழக்கின் திட்டமிட்ட குடிசன வரைபை மாற்றியமைக்கும் சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் சுட்டிக்காட்டினார். வேலையாளர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயது சட்டமூலம், வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், காணி பிறழ்வு(காணி எடுத்தல் சட்டம்) என்பது இன்று மிகப்பெ…

  13. ‘வடக்கு இளைஞர்களுக்கு உதவுவேன்’ முன்னாள் புலிகளிடம், மஹிந்தானந்த உறுதி! November 12, 2021 விவசாயத்தில் ஈடுபடுவதற்கு வடக்கு இளைஞர்கள் அக்கறை காட்டினார்கள் என்றால், விவசாயத்துக்கு தேவையான இடம் மற்றும் உதவிகளைச் செய்ய தான் தயாராக இருப்பதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்ட சிலர், நேற்று முன்தினம் (10.11.21) விவசாயத்துறை அமைச்சரை, அவரது அமைச்சில் சந்தித்த போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், விவசாய ரீதியில் மிளகாய் உற்பத்தியில் ஈடுபட விருப்பமுள்ள வடக்கிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு தேவையான உதவி…

  14. வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சுரேன் ராகவன் 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு November 11, 2021 நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் தமக்கு 2021 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதி 10 மில்லியன் ரூபாவில் இரண்டு மில்லியன் ரூபாவை முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் புனர்நிர்மாண நடவடிக்கைக்களுக்காக ஒதுக்கியுள்ளார். ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 4 மில்லியன் ரூபா ஒதுக்கியிருந்த நிலையில் மேலும் 2 மில்லியன் ரூபாவை ஆலயத்தின் நிர்மாணப் பணிகளுக்காக ஆலய நிர்வாகசபைத் தலைவரின் வேண்டுகோளுக்கு அமைவாக ஒதுக்கியுள்ளார். இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் 14 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் கிடைக்கவுள்ளமை…

  15. இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து பேசியது கூட்டமைப்பு! இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, அரசியல், அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவமிக்க விடயங்கள்குறித்து கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. இந்திய மத்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில், உயர்ஸ்தானிகர் கவனம் செலுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு இடம…

  16. 2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிப்பு! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் 2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், நிதி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ, பிற்பகல் 2 மணிக்கு வரவு – செலவுத் திட்டத்தினை முன்வைத்து உரையாற்றவுள்ளார். பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள், வரிக்கொள்கைகள், மக்கள் நலத்திட்டங்கள் உட்பட வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை தமது உரையின்போது நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெளிவுப்படுத்தவுள்ளார். இதனையடுத்து, நாளை மறுதினம் முதல் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமாகவுள்ள ந…

  17. உரத்தை நிராகரித்தமையால் கொழும்பிற்கு சீனா அழுத்தம் சீன நிறுவனமொன்றிடமிருந்து உரத்தினை பெறும் செயற்பாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்ததை அடுத்து, பீஜிங் கொழும்புக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக உலகளாவிய சிந்தனைக் குழுவான கொள்கை ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. இரசாயன உரத்தினைப் பயன்படுத்துவதை நிறுத்தி இயற்கை விவசாயத்தினை மேற்கொள்ளுதல் வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை அரசாங்கம் தீர்மானம் எடுத்திருந்தது. இதனால் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் முரண்பாடான நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. எனினும், சில இறக்குமதிகளைச் செய்வதாக இருந்தால் உரங்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலையில் இலங்கை அரசாங்கம் கடந்த ஓகஸ்ட் மாதம் 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியது. அத்துடன்…

  18. அமெரிக்க அதிகாரிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைக்கவில்லை, அங்கிருக்கக் கூடிய சட்டவல்லுனர்களை சந்திப்பதற்கான தனிப்பட்ட பயணமாகவே இதனை கருத முடியும் என டெலோ அமைப்பின் உத்தியோகப்பூர்வ பேச்சாளரும் சர்வதேச தொடர்பாளருமான சுரேன் குருசாமி தெரிவித்துள்ளார். இலங்கை அரசியலில் தமிழர்கள் விவகாரம் அண்மைக்காலங்களில் பேசுபொருளாக மாறியிருக்கின்றது. ஆனால் தமிழர்கள் மத்தியில் இருக்கின்ற அடிப்படை சிக்கல்கள் தொடர்பில் தீர்வு நோக்கிய பயணத்தில் தமிழ் தலைமைகள் தடுமாறுகின்றனரா? அல்லது தென்னிலங்கை தலைமைகள் தமிழ் தரப்புக்களை பயன்படுத்துகின்றதா? என்ற கேள்விகள் இருக்கின்றன. இந்த நிலையில் நாளைய தமிழ் சமூகம் எதை நோக்கி பயணிக்கப் போகின்றது என்பது தொடர்பான உண்மைத் தன்மைகளை விமர்சன ரீதியாக ஆர…

  19. (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில், கொழும்பு, ட்ரயல் அட்பார் விஷேட நீதிமன்றில் முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப் பத்திரத்தை வாபஸ் பெற சட்ட மா அதிபர் எடுத்துள்ள தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்காமல் மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. அதன்படி மனுவின் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்பவும் நீதிமன்றம் மறுத்தது. இந்த குற்றப் பத்திரத்தை வாபஸ் பெற சட்ட மா அதிபர் எடுத்துள்ள தீர்மானத்தை சவாலுக்கு …

  20. நாடு மீண்டும் முடக்கப்படும்; பொருளாதாரம் சரிந்து மிகவும் பாதிப்பு ஏற்படலாம்- ஹெகலிய நாட்டில் மக்கள் சுகாதார வழிமுறைகளைச் சரியான முறையில் பின்பற்றத் தவறும் பட்சத்தில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்படும் என சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொரோனாவைக் கட்டுப்படுத்த மக்களின் பங்களிப்பைப் பொறுத்தே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்துத் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா நோயைக் கட்டுப்படுத்துவதற்கு மக்களின் பங்களிப்புடன், இந்தத் துரதிர்ஷ்டமான நிலைமையை நாட்டிலிருந்து துடைத்தெறிய முடியும் எனவும், உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையானது வைரஸைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த நில…

  21. நீதியமைச்சு, நிதியமைச்சு, பிரதமர் அலுவலகம் முன்பாக காணாமல்போனோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் (நா.தனுஜா) அடுத்த ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 6,000 ரூபா இடைக்காலக்கொடுப்பனவை வழங்குவதற்கு அவசியமான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை காணாமல்போனோரின் குடும்ப ஒன்றியத்தினால் பிரதமர் நீதியமைச்சு, நிதியமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றுக்கு முன்பாகக் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் தலா 6,000 ரூபா வீதம் வழங்குவதற்காக 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கான …

  22. புலம்பெயர் தமிழ் அமைப்புகள் நாட்டுக்கு வளமா ? சுமையா ? - பசிலிடம் வினவும் எதிர்க்கட்சி உலகில் உள்ள மிகப்பெரிய புலம்பெயர் அமைப்புகளில் இலங்கையின் தமிழ் புலம்பெயர் அமைப்பும் ஒன்றாகும். இவர்கள் கல்வி, திறமை, நிதி ரீதியில் பலமாகவும் உள்ளனர். இவர்களால் நாட்டிற்கு உதவி செய்ய முடியும். எனவே அவர்கள் குறித்து நிதி அமைச்சர் சிந்திக்க வேண்டும். புலம்பெயர் அமைப்புகள் நாட்டுக்கு வளமா அல்லது சுமையா என்பதை இப்போது தீர்மானிக்க வேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10), ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், நாடாக இ…

  23. கிழக்கு ஆளுநருக்கு எதிராக மட்டு.மாநகர சபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்! கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் பிரதி ஆiணயாளர் ஆகியோருக்கு எதிராக மட்டக்களப்பு மாநகர மேயர் பிரதி மேயர் உட்பட மாநகர சபை உறுப்பினர்களும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். மாநகர மேயர் தியாகராசா சரவணபவன் தலைமையில் நேற்று (புதன்கிழமை) கூடிய மாநகர சபை அமர்வை சில நிமிடங்களில் ஒத்திவைத்த மேயர் சபையிலிருந்து வெளியேறினார். அதன் பின்னர் ரி.எம்.வி.பி ஐ.தே.கட்சி சிறீலங்கா சுதந்திரக் கட்சி சுயேற்சைக்குழு ஈபிடிபி உறுப்பினர்களும் வெளியேறினர். பின்னர் பதாதைகளுடன் ஒன்றுதிரண்ட ஆளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் ஆணையாளர் ஆகியோருக்கு எதிராக பதாதைகள…

  24. கதிர்காமம் கோவிலுக்கு... கிடைத்த, நன்கொடைகள் தொடர்பில் விசாரணை கதிர்காமம் ஸ்ரீ முருகன் ஆலயத்துக்கு வழங்கப்பட்டுள்ள நேர்த்திக்கடன் பொருட்கள் மற்றும் ஆலய அபிவிருத்திக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் தொடர்பிலும் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறித்த கோவிலில் இருந்த ஐம்பது மில்லியன் ரூபாய் பெறுமதியான மாணிக்கக் கல்லொன்றும், தற்போது காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. இரத்தினபுரியைச் சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவர், நேர்த்திக் கடனொன்றை செலுத்து முகமாகவே, இந்த மாணிக்கக்கல்லை, ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு வழங்கியிருந்தார். குறித்த மாணிக்கக்கல் காணாமல் போயிருப்பமை குறித்து, கதிர்காமம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, பொலிசார் தீவிர புலன் விசா…

  25. இலங்கையில்... இறக்குமதி பொருட்கள் சிலவற்றுக்குக் கட்டுப்பாடு! பொருளாதார ஸ்திரத்தன்மையை முன்னெடுத்துச் செல்வதற்காக மரக்கறி, பழவகை போன்று விவசாய உற்பத்திகள் உள்ளிட்ட, 433 பொருட்களை இறக்குமதி செய்வதற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். டயில், கிரனைட், தளபாடங்கள், பிளாஸ்டிக், முகக்கவசம், துவிச்சக்கரவண்டி, சவர்க்காரம், உப்பு ஆகிய பொருட்களை இறக்குமதி செய்ய வரையறுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட பிரதமரிடம் இன்று(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, பிரதமரின் சார்பில் பதலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “இந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.