Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மெனிக்கே மகே ஹித்தே: பாடல் பிரபலமானதற்கு இந்தியாவின் “றோ” உளவுப் பிரிவே காரணம்- நளின் டி சில்வா கருத்து October 23, 2021 இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தையும், சிங்கள மக்களையும் வென்றெடுப்பதற்காக இந்தியா மிகவும் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறதாக சிங்கள தேசியவாதியான பேராசிரியர் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார். இளம் சிங்கள பாடகி யோஹானி டி சில்வாவின் “மெனிக்கே மகே ஹித்தே” என்ற பாடல் உலகம் முழுவதும் பிரபலமானதற்கு இந்தியாவின் “றோ” உளவுப் பிரிவின் சூழ்ச்சியான வேலையாக இருக்கலாம் எனவும் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை மக்களுக்கு இந்தியா மீதுள்ள அதிருப்தியை போக்கு வதற்காக இந்தியா, யோஹானி டி சில்வாவை தெரிவு செய்துள்ளது. இலங்கைய…

  2. விலைவாசி பற்றி பேச நான் பதவிக்கு வரவில்லை என்றுகூறி ஜனாதிபதி மக்களை துன்பத்திலும் சிரிக்க வைக்கிறார் - இடுக்கண் வருங்கால் நகுக! என்கிறார்மனோ விலைவாசி துன்பத்தில் சிக்கி விழி பிதுங்கும் நிலைமையில் நிற்கும் இந்நாட்டு மக்களிடம், “அரிசி-பருப்பு, விலைவாசிகளை பற்றி பேச நான் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்படவில்லை” என்று கூறி, ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச சிரிப்பு காட்டியுள்ளார். கி.மு 31ல் பிறந்து, உலகை அளந்த, எங்கள் அய்யன் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சொல்லிச்சென்ற “இடுக்கண் வருங்கால் நகுக” என்ற வாக்கியத்துக்கு இணங்க நாமும் சிரித்து வைப்போம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார். அரிசி, பருப்பு, விலைவாசிகளை பற…

    • 0 replies
    • 317 views
  3. இலங்கையின் வளங்கள் மற்றும் நிலங்கள் பல்வேறு நாடுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டால் இந்த நாட்டில் பிறந்த தமிழ் மக்களுக்கு ஏன் அவர்களின் ஈழத்திற்கான உரிமை வழங்கக் கூடாது என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவிற்கும் திருகோணமலையில் உள்ள எண்ணெய் கஞ்சியங்களை இந்தியாவிற்கும் கெரவலபிட்டி மின் நிலையம் அமெரிக்காவிற்கும் என வளங்களை வழங்கினால் தமிழ் மக்களுக்கு அவர்கள் விரும்பும் ஈழத்தை வழங்குவது மிகவும் நியாயமானதாக இருக்கும் என விக்ரமபாகு கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார். தமது ஈழ மண்ணிற்காக வடக்கில் தமிழ் இளைஞர்களால் தொடங்கப்பட்ட போராட்டம் மேற்கத்திய உலகத்தால் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு ஒ…

    • 2 replies
    • 578 views
  4. அனைத்து விவசாயிகளையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் அனைத்து விவசாயிகளையும் கலந்துகொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.இந்த அரசு உடனடியாக விவசாயிகளுக்கு உரத்தை வழங்குமாறு கோரி நடைபெறவுள்ள இந்த போராட்டத்தில் அனைத்து விவசாயிகளையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.குறித்த போராட்டமானது மன்னார் – உயிலங்குளம் கமநல சேவை திணைக்களத்தின் முன்பாக இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு, தற்போது காலபோக நெற்செய்கை ஆரம்பித்துள்ளதாகவும் அரசின் திட்டமிடாத நடவடிக்கை காரணமாக இந்த நாட்டில் பாரிய உரத் தட்டுப்பாடு…

  5. வல்வெட்டித்துறை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் கைது! October 23, 2021 இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டனர் என வல்வெட்டித்துறையை சேர்ந்த இரண்டு மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியை சேர்ந்த , வீ.நிமலதாஸ் மற்றும் த. கஜீபன் ஆகிய இரு மீனவர்களையும் நேற்றைய தினம் இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர். இரு மீனவர்களும் கடந்த 21ஆம் திகதி மீன் பிடிப்பதற்காக வல்வெட்டித்துறையில் இருந்து சென்ற நிலையில் , இந்திய கோடியக்கரைக்கு கிழக்கே 16.5 கடல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை தாம் கைது செய்ததாக இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.…

  6. 13 ஆவது திருத்தம் குறித்து ஒன்றிணைந்து வலியறுத்த தமிழ்த் தேசியக் கட்சிகள் முயற்சி அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்திய அரசை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் 2 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்றினை யாழில் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக ரெலோவின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். நேற்று இணையவழியில் இடம்பெற்ற கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் சார்பாக பேராசிரியர் சிவநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார். அத்தோடு எதிர்வரும் இரண்டாம் திகதி யாழ…

  7. வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துக !! சமலுக்கு கடிதம் மாகாணம் தாண்டிய எல்லை நிர்ணய மூலம் வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. வவுனியாவில் தமிழ் மக்களின் மரபுரிமையுடைய பூர்வீக கிராமத்துடன் வடமத்திய மாகாண எல்லையில் உள்ள கிராமங்களை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வடக்கு – வட மத்…

  8. ஏறாவூர் பொலிசார் இளைஞர்களை தாக்கிய சம்பவம் -தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம் (திருக்கோவில் நிருபர்) ஏறாவூர் பொலிஸார் பொதுமக்களை தாக்கிய சம்பவத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. நாட்டையும் நாட்டு பொதுமக்களையும் பாதுகாப்பாக வழிநடாத்துகின்ற இந்த பாதுகாப்பு தரப்புக்கள் இவ்வாறு மிருக்கத்தனமாக தாக்குதல் நடாத்தினால் பொதுமக்கள் யாரை நாடி போவது எனவே இத்தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ; தெரிவித்தார். ஏறாவூரில் இரு இளைஞர்களை; மீது பொலிசார் தாக்குதல் நடாத்திய சம்பவத்தை கண்டித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ; ஊடக அறிக்கை ஒன்றை இன்று சனி…

  9. நீர்வேலியில் வாள் வெட்டுக்குழு அட்டகாசம் யாழில் இயங்கும் வாள் வெட்டுக்குழுக்களை அடக்குவேன் என கூறி , முப்படைகள் , காவல்துறையினரை வடமாகாண ஆளுநர் சந்தித்து கலந்துரையாடிய சில மணி நேரங்களில் நீர்வேலியில் உள்ள வீடொன்றுக்குள் வாள் வெட்டுக்குழு ஒன்று புகுந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் நீர்வேலி தெற்கு ஜே 268 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு புகுந்த வாள் வெட்டு குழு ஒன்று வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து விட்டு தப்பி சென்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் , வாளுகள் , கம்பிகள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ஒன்றே தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.https://www.kuriyeedu.com/?p=365713

    • 1 reply
    • 466 views
  10. வெலிக்கடை சிறைச்சாலையில் கலவரம் : பொல்லுகளுடன் குவிக்கப்பட்டுள்ள காவலர்கள் வெலிக்கடை சிறைச்சாலையில் சுமார் 50 கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகின்றது. சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையின் கூரையின் மேல் ஏறி சில கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைதிகள் தற்போது சிறை வளாகத்திற்குள் சொத்துக்களை சேதப்படுத்தி வருவதாகவும் சிறைக் காவலர்கள் பொல்லுகள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துமிந்த சில்வா போன்றவர்கள் 5 வருடங்கள் மட்டுமே சிறைவாசம் அனுபவித்ததாகவும், சில கைதிகள் 15 வருடங்…

    • 1 reply
    • 406 views
  11. காரைநகரில்... கடற்படை படகு மோதியதில், இந்திய மீனவரின் படகு மூழ்கியது – ஒரு மீனவர் மாயம் எல்லை தாண்டி காரைநகர் கோவளம் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்ய முற்பட்ட போது, இலங்கை கடற்படையின் படகு மோதி இந்திய மீனவர்களின் படகு மூழ்கியதில் மீனவர் ஒருவர் காணாமற்போயுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்தில் இருந்து சுமார் 118 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜேஸ்குமார் என்பவருக்கு சொந்தமான படகில் ராஜ்கிரன், சுகந்தன் மற்றும் சேவியர் ஆகிய மூன்று மீனவர்கள் இலங்கை காரைநகர் – கோவளம் கடற்பகுதியில் மீன்பிடித்துக்…

  12. ஐ.நா. ஆணையாளர் அலுவலகத்தின், பொறுப்புக் கூறல் கருத்திட்டம் ஸ்தாபிப்பு மனித உரிமைகள் , நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் ஆட்சேபனைகளை தெரிவித்திருந்த போதிலும் இலங்கையில் பொறுப்புக் கூறல் கருத்திட்டத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் ஸ்தாபித்துள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்து கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இலங்கைக்கு எதிராக 46 கீழ் ஒன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்கு பாரதூரமான மனித உரிமை மீறல்களிற்கான ஆதாரங்களைச் சேகரித்துப் பாதுகாக்கும் பொறுப்பை வழங்கியுள்ளதுடன் அறிக்கையிட வேண்…

  13. சீன கப்பல்... கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை, தடுக்குமாறு அறிவிப்பு சீனாவிடமிருந்து நாட்டிற்கு சேதன பசளையை கொண்டுவரும் கப்பல் துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அறிவித்துள்ளதாக ஹார்பர் மாஸ்டர், கெப்டன் நிர்மால் டி சில்வா தெரிவித்தார். 20 ஆயிரம் மெட்ரிக் தொன் சேதன பசளையுடன் குறித்த கப்பல் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நாட்டை வந்தடையும் என தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையம் கொழும்பு துறைமுகத்திற்கு அறிவித்திருந்தது. நாட்டிற்கு வருகை தரும் கப்பலில் காணப்படும் பசளையில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் காணப்படுவதாகவும் தேசிய தாவரங்கள் தொற்று நீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையம் தெரிவித்திருந்தது. …

  14. துரோகிகள் என குறி வைக்கப்பட்டவர்களும் கூட்டமைப்பில் உள்ளனர் – மனோ விடுதலைப் புலிகளால் துரோகிகள் என குறி வைக்கப்பட்டு தேடியழிக்கப்பட்ட கட்சியியினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யாழில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட விடயம் குறித்து வெளியாகியிருந்த செய்திக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தமிழீழ விடுதலை புலிகளால் கூட்டமைக்கப்பட்ட அமைப்பே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும் அவர் தெரிவித்தார். 2009 ஆம் வருட இறுதிப்போர் வரை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் இருந்தவர்களும், இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்றார்கள் என தெரிவித்தார். க…

    • 0 replies
    • 290 views
  15. இது முடிவல்ல ஆரம்பம் ! அப்புத்தளையில் ஒப்பாரி வைத்து சவப்பெட்டியை ஏந்தி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும், மலையக மக்களின் இருப்பை உறுதி செய்யவும், அவர்களுடைய தொழில் பிணக்குகள் தொடார்பாகவும்,& பெருந்தோட்ட கம்பெனிகளின் அடாவடி நிர்வாகத்திற்கு பதிலடி தரும் நோக்குடனும், உரத் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளை பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் இன்றைய தினம் வடிவேல் சுரேஷ் தலைமையில் அப்புத்தளை நகரில் போராட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தினுடைய தோட்டத் தலைவர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தன…

    • 0 replies
    • 477 views
  16. என்னை ஒரு கொள்ளைக்காரன் போன்று சித்திரிக்க முயற்சி - சபையில் பிள்ளையான் கடந்த காலத்தில் என்னை பழிவாங்கவும், அரசியலில் இருந்து வெளியேற்றவும் சிறையில் அடைத்தனர். என்னினும் இவர்களின் சதித்திட்டத்தில் இருந்து மீண்டு மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்று அதிகூடிய வாக்குகளை பெற்றுள்ளேன் என்பதற்காக அதனை சகித்துக்கொள்ள முடியாது தற்போது என்னை ஒரு கொள்ளைக்காரன் போன்றும், மண்கொள்ளையில் ஈடுபடுகின்றேன் என சித்தரிக்க முயற்சிகின்றனர் என ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) ஆளும் கட்சியினால் கொண்டுவரப்பட்ட 2021.03.10ஆம் திகதி மற்றும் 2021.04.06 ஆகிய திகதிகளில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க பொறுப்பு முயற்சி…

    • 1 reply
    • 337 views
  17. கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு October 23, 2021 வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு சார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் ‘புலி’ வந்ததால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு சார் ஆலோசனைக்குழுக் கூட்டம் அமைச்சர் சி.பி ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இக்கூட்டத்தில் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல்படி விடயங்கள் முன்னெடுக்கப்படாமல் வேறு விடயங்கள் கவனத…

  18. Published by T Yuwaraj on 2021-10-22 17:23:14 கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் உள்ள தர்மபுரம் கிராமத்தில் 7 ஆம் ஒழுங்கை கடந்த வருடம் ஏழாம் மாதம் தார் வீதியாக புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டு ஒரு வருடத்திற்குள் முற்று முழுதாக சேதமடைந்துள்ளது. நிறைந்த கிராமம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கண்டாவளை பிரதேச செயலகததினால் இரண்டு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு கரைச்சி பிரதேச சபையின் தொழிநுட்ப மேற்பார்வையில் பிரதேச சபைக்குச் சொந்தமான வீதி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்திடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. வீதி புனரமைப்புக்கான ஒப்பந்தத்தை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் பெற்றிருந்தாலும் வீதி ப…

    • 5 replies
    • 530 views
  19. ஒற்றையாட்சியைத் தமிழ்க் கட்சிகள் விரும்பாததேன்?-க.வி.விக்னேஸ்வரன் பதில் ஒற்றையாட்சியைத் தமிழ்க் கட்சிகள் விரும்பாததேன்? என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், “ஒற்றையாட்சித் தலைமைத்துவம் பெரும்பான்மையினக் கட்சிகள் வசம் இருக்கும் போது சிறுபான்மையினர் பாகுபாட்டுக்கு உள்ளாவார்கள் என்பதால்” எனக் கூறியுள்ளார். மேலும் ஊடகவியலாளர் கேள்விகளுக்கு தொடர்ந்து அவர் பதில் அளிக்கையில், கேள்வி:- பெரும்பான்மையினக் கட்சிகளில் சிறுபான்மையினர் போதிய அளவு இடம் வகித்தால் இந்த நிலைமை எழாதல்லவா? பதில்:- எழும். இலங்கை போன்ற நாடுகளில் எழும். இலங்கையில் பெரும்பான்மையினத் தலைவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கு உட்பட்ட…

    • 11 replies
    • 676 views
  20. ஈழத்தமிழர் போராட்ட அரசியலை மடைமாற்றம் செய்ய முயலும் கம்சி குணரட்ணம்-அனந்தி சசிதரன் ஈழத்தமிழர் போராட்ட அரசியலை மடைமாற்றம் செய்ய முயலும் கம்சி குணரட்ணம் ஈடுபட்டுள்ளதாக ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கம்சி குணரட்ணம் நோர்வேயில் 2009 க்கு முற்பட்ட காலத்தில் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் உந்துதலோடு நோர்வேயின் அரசியலுக்குள் சேர்க்கப்பட்டவர். அரசியற் தலைவரான மறைந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் தலைமையில் பேச்சுவார்த்தைக்குழு ஐரோப்பா சென்றுவந்த 2002ம் ஆண்டுக்குப் பின்னான காலங்களில், அங்கு அரசியலில் இளம் பு…

    • 8 replies
    • 1.1k views
  21. தமிழ் அரசியல் கைதிகள் சிலர், சிறை மாறுகிறார்கள்! October 22, 2021 சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வளிப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த வருகைதந்த போது அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, பொலிஸ்மா அதிபருக்கு உயர்நீதிமன்றம் நேற்று (21.10.21) கட்டளையிட்டது. அதேபோல அந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்த கைதிகள் எண்மரையும் வேறு சிறைக்கு உடனடியாக மாற்றுமாறும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு, உயர்நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சரான லொஹ…

  22. இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக... யாழ் போதனா வைத்தியசாலையில் நினைவுத்தூபி அமைக்க நடவடிக்கை! இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக விரைவில் நினைவுத்தூபி அமைக்கப்படும் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது இந்த நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”இந்திய ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் உறவுகளால் உயிரிழந்தோரின் நினைவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் ஒரு தூபி அமைப்பதற்கு தமக்கு இடம்…

  23. சிங்கள பெரும்பான்மை மக்களை குடியேற்ற முன்னெடுக்கும் செயற்பாட்டிற்கு எதிராக காராமுனை மக்கள் ஆர்ப்பாட்டம்! மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காராமுனை பகுதியில் சிங்கள பெரும்பான்மை மக்களை குடியேற்ற முன்னெடுக்கும் செயற்பாட்டிற்கு எதிராக அப்பகுதி மக்கள் தமது எதிர்ப்பினை தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று (21) ஈடுபட்டனர். வாகரை பிரதேசத்தின் மாங்கேணி காராமுனை பகுதியில் 1982 ஆம் ஆண்டிற்கு முன்பாக சிங்கள மக்கள் குடியிருந்ததாக கூறி இன்று வியாழக்கிழமை (21) அவர்களுக்கான காணி தொடர்பான நடமாடும் சேவையொன்று புனாணையில் உள்ள வன இலகா திணைக்களத்தில் நடைபெற்றது. இந்த நடமாடும் சேவையினை மத்திய காணி ஆணையாளர் ஜீ.கீர்த்திகமகே மற்றும் கிழக்கு மாக…

  24. நாட்டில் நீதித்துறையினால் நீதி நிலைநாட்டப்படுவதில் பாரிய பின்னடைவு - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் நாட்டில் நீதித்துறையினால் நீதி நிலைநாட்டப்படுவதில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிரான செயற்பாடுகளில் குற்றவாளிகள் பாதுகாக்கப்பட்டுள்ளமை இதற்கு நல்ல உதாரணம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இளந்தவறாளர்கள் (பயிற்சிப்பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தண்டனைச்சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் இதனை கூறினார். அவர்…

  25. பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணரின் நியமனத்தை திட்டமிட்டு தடுக்கும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (எம்.மனோசித்ரா) வட மாகாணத்திற்கு தற்போது ஒரேயொரு பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் மாத்திரமே காணப்படுகிறார். அவர் விடுமுறையில் செல்லும்போது அங்கு சேவை குறைபாடு ஏற்படும். எனவே இதற்கான இரண்டாவது நியமனம் வழங்கப்படுவதை யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திட்டமிட்டு தடுக்கின்றார். இந்த நியமனம் விரைவில் வழங்கப்படாவிட்டால் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பாரிய தொழிற்சங்க போராட்டத்திற்கு தயாராகும் என்று அதன் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.