ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
இன மத வேறுபாடு இன்றி அனைவரும் கொரோனா தொற்றில் இருந்து விடுபட வேண்டியே யாழ்ப்பாணத்தில் சிறப்பு பூசை வழிபாட்டினை மேற்கொண்டதாக கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் நாட்டில் நாடு கொரோனா தொற்றில் இருந்து விடுபட வேண்டி இடம் பெற்ற விசேட பூசை வழிபாடுகளின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் மேலும் தெரிவிக்கையில், இன்றைய தினம் யாழ் மாவட்டத்தில் ஒரு விசேட பூசை வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கின்றோம் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறப்பான விஷ்ணு ஆலயத்தினை தெரிவுசெய்து நயினாதீவு விகாராதிபதி மற்றும் யாழ்ப்பாண நாகவிகாரை விகாராதிபதியுடன் இணைந்து வந்திருக்கின்றேன். நாங்…
-
- 8 replies
- 629 views
- 1 follower
-
-
(ஆர்.யசி) போர் குற்றத்தை நடத்தியதில் முக்கியமான நபராகவும்,குற்றவாளியாகும் இருக்கின்றவரே ஜனாதிபதியாக நாட்டை ஆட்சி செய்கின்ற காலகட்டத்தில் இலங்கை அரசின் பொய்யான வாக்குறுதியை நம்பி இந்த தீர்மானத்தை முழுமையாக முடக்கப்படும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தமிழ் மக்களின் பொறுப்புக்கூறல் முடக்கப்பட்டு இருக்கின்ற வரையில் பொறுப்புக்கூறல் என்ற விடயமே தமிழ் மக்களுக்கு சாத்தியமில்லை எனவும் அவர் கூறினார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அரசாங்கத்தின் வாக்குறுதியை நம்புவது ஆ…
-
- 0 replies
- 194 views
-
-
இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால், இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து, தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். பட்டயக் கணக்காளரான அஜித் நிவாட் கப்ரால், இதற்கு முன்னர் அமைச்சின் செயலாளராகவும் சுமார் 9 மாதக் காலப்பகுதி வரையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் கடமையாற்றியுள்ளார். மேற்படி நியமனக் கடிதம் பெறும் நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/செய்திகள்/நியமனக்-கடிதத்தை-பெற்றார்-கப்ரால்/175-280940 இடி அமீன் படத்தில் இருந்து ஒரு காட்சி, தற்போது இலங்கை நிலைமை…
-
- 1 reply
- 317 views
- 1 follower
-
-
சிவில் விவகாரங்களில்... எந்த இராணுவத்தினரும், ஈடுபடவில்லை – அரசாங்கம் நாட்டில் தற்போது எந்தவொரு பாதுகாப்பு தரப்பினரும் சிவில் விவகாரங்களில் ஈடுபடவில்லை என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது அவசரகாலச் சட்டம் மற்றும் இராணுவமயமாக்கல் நடவடிக்கை குறித்த ஐ.நா.ஆணையாளரின் கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் அண்மையில் போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக கூட அரசாங்கம் படையினரை பயன்படுத்தப்படவில்லை என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார். இவ்வாறு இராணுவமயமாக…
-
- 1 reply
- 451 views
-
-
‘அமெரிக்காவுக்கு அனுப்பிய விக்கிலீஸ் கேபிள்களை நீதி அமைச்சர் பார்க்க வேண்டும்’-காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் September 15, 2021 பிளேக் அவர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பிய, விக்கிலீஸ் கேபிள்களை நீதி அமைச்சர் பார்க்க வேண்டும். என வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் கருத்து தெரிவித்த போது, ‘பிளேக் அவர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பிய, விக்கிலீஸ் கேபிள்களை நீதி அமைச்சர் பார்க்க வேண்டும்.ஆகவே நீதி அமைச்சர் எந்த பொறுப்பற்ற அறிக்கையையும் கூற முடியாது. முன்னாள் அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக்கின் கூற்றுப்படி, துணை ஆயுதக்குழுகள் (ஒட்டுக்குழு) தமிழ் பெண்கள் மற்றும் சிறுவர்களை வெளிநாடுகளுக்கு அடிம…
-
- 0 replies
- 297 views
-
-
46/1 தீர்மானம் தொடர்பாக... இலங்கை தொடர்ந்தும், ஈடுபாட்டுடன் செயற்பட வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானம் தொடர்பாக ஐக்கிய நாடுகளுடன் இலங்கை தொடர்ந்தும் ஈடுபாட்டுடன் செயற்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. 46/1 தீர்மானத்தில் நிறுவப்பட்ட அனைத்து வெளியக முன்மொழிவுகளையும் நிராகரிப்பதாக ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, ஜெனிவா மனித உரிமைகள் அமர்வில் ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளுக்கான தொடர்ச்சியான முயற்சிகளின் தேவை குறித்தும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்த…
-
- 0 replies
- 488 views
-
-
காணி அபகரிப்பு குறித்து ஐ.நா. ஆணையாளருக்கு அறியப்படுத்த வேண்டியது அவசியம் – சி.வி. காணி அபகரிப்பு குறித்து ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் குறிப்பிடாமை மனவருத்தத்தைத் தருவதாக யாழ். மாவட்ட நாடாளமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எனவே, அடுத்த மார்ச் மாதக் கூட்டத்திற்கு முன்னர் இவை பற்றிய முழு விபரங்களை சேகரித்து அனுப்ப வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர், “தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பல விடயங்கள் பற்றி அவர் குறிப்பிடவில்லை என்பது …
-
- 0 replies
- 191 views
-
-
‘கடவுளுக்கே முரண்பாடுகள் உள்ளபோது கட்சிகளுக்கு முரண்பாடு இல்லாமல் போகுமா?’-பா.அரியநேத்திரன் September 14, 2021 முரண்பாடுகள், ஒத்த கருத்துகள், கருத்தொற்றுமை மனிதர்களுக்கு மட்டுமல்ல கடவுள்களிடமும் இருந்ததுதான் கடவுள் இடத்திலே முரண்பாடுகள் உள்ளபோது கட்சிகளிடையே முரண்பாடுகள் இல்லாமல் போகுமா என கூறினார் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்பை தமிழரசு கட்சிதலைவருமான பா.அரியநேத்திரன். ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒற்றுமையாக ஒரு கடிதம் அனுப்பவில்லை. பலரும் வெவ்வேறு விதமாக கடிதங்களை அனுப்பியது உங்களிடம் கருத்தொற்றுமை இல்லை என்பதையே வெளிக்காட்டுகிறதே என ஊ…
-
- 4 replies
- 529 views
-
-
இலங்கைக்கு... தொடர்ச்சியான, அழுத்தங்களை... பிரயோகிக்கத் தயார் – பிரித்தானியா இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையின சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அவசியமான அழுத்தங்களை தொடர்ச்சியாக வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடரில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் கரிசனைகளை ஏற்பதாகவும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் விமர்சகர்கள் உள்ளடங்கலாக இலங்கை தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்த ஆணையாளரின் அதிருப்தியை ஏற்றுக்கொள்வதாகவும் கூறின…
-
- 2 replies
- 500 views
-
-
இலங்கை மனித உரிமைகள்: ஐ.நா ஆணையரின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த ஜீ.எல். பீரிஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,MFA_SRILANK படக்குறிப்பு, ஜி.எல். பீரிஸ், இலங்கை வெளியுறவு விவகாரங்கள் அமைச்சர் இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் வெளியிட்ட வாய்மொழி அறிக்கையை இலங்கை வெளி விவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நிராகரித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 48வது அமர்வு, ஜெனிவாவில் நேற்று (செப்டம்பர் 13) தொடங்கியது. இதில் உரையாற்றிய மீச்செல் பெச்சலட், இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து பேசினார். …
-
- 2 replies
- 448 views
- 1 follower
-
-
மன்னாரில்... அந்தோனியார் சிலையை அகற்றி, பிள்ளையார் சிலையை மீண்டும் வைக்க நடவடிக்கை. மன்னார், மடு – பரப்புக்கடந்தான் வீதியில் அகற்றப்பட்ட பிள்ளையார் சிலையை மீண்டும் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரப்புக்கடந்தான் பகுதியில் இருந்த பிள்ளையார் சிலை ஒரே இரவில் சிதைக்கப்பட்டு, அப்பகுதியில் அந்தோனியார் சிலை வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல், சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தார். அதன்பின்னர், குறித்த பகுதியில் வைக்கப்பட்ட அந்தோனியார் சிலையை அகற்றிய பொலிஸார், மடு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். மடு – பரப்புக்கடந்தான் வீதியில்,…
-
- 14 replies
- 815 views
-
-
(நா.தனுஜா) இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யக் கூடியவகையில் வரையறுக்கப்பட்ட அளவிலான நடவடிக்கைகள் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டிருந்த 2008 - 2009 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் 11 இளைஞர்கள் காணாமலாக்கப்பட்டமை உள்ளிட்ட சில முக்கிய வழக்குகள் தற்போது மேலும் பின்னடைவைச் சந்தித்துள்ளமை பெரிதும் விசனமளிக்கின்றது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/14060/un.jpg அதுமாத்திரமன்றி ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான தொடர்ச்சியான கண்காணிப்புக்கள், அடக்குமுறைகள் உள்ளடங்கலாக இலங்கையின் மனித உரிமை நிலைவரங்கள் கவலையளிப்பதாக பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அறிவித்துள்ளன. இந்நிலையில் இலங்கையி…
-
- 1 reply
- 383 views
-
-
எம்.மனோசித்ரா) ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடாக காணப்படுகின்ற நிலையில், இலங்கை தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற கண்காணிப்புக்களை நாம் புறக்கணிக்கவில்லை. ஆனால் எந்தவொரு விடயத்திலும் அநாவசிய இராணுவ தலையீடு இல்லை என்பதில் உறுதியாகவுள்ளோம் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அண்மையில் நாட்டில் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மக்களின் உரிமைகள் ஜனநாயக ரீதியில் செயற்படுத்தப்பட்டன. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவத்தினரையோ அல்லது பொலிஸாரையோ பயன்படுத்தி அவை கட்டுப்…
-
- 3 replies
- 236 views
-
-
4 வார கால முடக்கம் போதுமானது என்கிறார் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே (ஆர்.யசி) நாட்டில் வேகமாக பரவிக்கொண்டுள்ள டெல்டா வைரஸ் தொற்று காரணமாக எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. சுகாதார, வைத்திய அதிகாரிகளின் ஆலோசனை அறிக்கையும் கொவிட் செயலணிக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது. இந்நிலையில் சுகாதார கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில், நான்கு வாரங்கள் நாடு முடக்கப்பட்டிருந்த நிலையில் …
-
- 1 reply
- 339 views
- 1 follower
-
-
தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களே அதிகளவில் சாவு 30 வயதைக் கடந்த ஒரு லட்சம் பேர் தடுப்பூசி பெறவில்லை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு! வடக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றுக் காரணமாக இதுவரை 578 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில், கடந்த ஓகஸ்ட் மாதம் 228 பேரும், இந்த மாதம் முதல் 12 நாள்களில் 169 பேரும் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்த வர்களில் அநேகமானோர் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர்களே தடுப்பூசி பெற்றுக்கொள்வதன் மூலமாக கொரோனாத் தொற்று ஏற்பட்டாலும் அதன் தாக்கத்தையும், உயிரிழப்பையும் தவிர்க்கவோ, குறைக்கவோ கூடியதாக இருக்கும். எனவே அனைவரும் தடுப்பூசி பெற்…
-
- 0 replies
- 336 views
-
-
தற்போதைய கூட்டத்தில் வாய்மொழி அறிக்கையை வெளியிட்டுள்ள மனித உரிமை ஆணையர், 2022 மார்ச் 49 ஆம் கூட்டத்தில், எழுத்து மூல அறிக்கையை வெளியிடுவார். அதன்பின் 2022 ஜூன் 50 ஆம் கூட்டம் கடந்துபோகும். அதனையடுத்து, 2022 செப்டம்பரில் கூடும் 51 ஆம் கூட்டத்தில், இலங்கை அரசின் அதுவரையிலான “மனித உரிமை நடத்தை” தொடர்பில், ஆய்வு செய்து, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய சிபாரிசுகளை, ஐநா மனித உரிமை ஆணையர் மிச்செல் பச்லெட் வெளியிடுவார். அடுத்த வருட இந்த இரண்டு கூட்டங்களும் முக்கியமானவை. இம்முறை வாய்மொழி அறிக்கையில், “இலங்கை தொடர்ந்து ஐநாவின் கண்காணிப்பு வலயத்தில் இருக்கும் எனவும், இலங்கைக்கு எதிராக இதுவரை ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்…
-
- 0 replies
- 268 views
-
-
(நா.தனுஜா) பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் மீளாய்வு செய்வதுடன் அவர்களில் குற்றச்சாட்டுக்கள் எவையுமின்றித் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாதத்தடைச்சட்டத்தை உடனடியாக மீளாய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல்வேறு சர்வதேசக் கட்டமைப்புக்களினாலும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபையின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்க…
-
- 0 replies
- 214 views
-
-
(ஆர்.யசி) நாட்டை முழுமையாக திறக்கும் ஆரோக்கியமான மட்டத்தை நாம் இன்னமும் அடையவில்லை. இப்போதும் நாட்டில் டெல்டா வைரஸ் தொற்றே வேகமாக பரவிக்கொண்டுள்ளது. இவ்வாறான நிலையில் கட்டுப்பாடுகள் இல்லாது நாட்டை திறந்தால் மிக மோசமான இன்னொரு கொவிட் வைரஸ் அலைக்கு முகங்கொடுக்க நேரிடும் என சுகாதார வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டுவதுடன், பலவீனமான சுகாதார கட்டமைப்பு காரணமாக நாட்டில் தென்னாபிரிக்க வைரஸ் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கின்றனர். இலங்கை வைத்தியர்கள் சங்கக்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன இது குறித்து தெரிவிக்கையில், நாடாக இன்னமும் கொவிட் வைரஸ் பரவல் அச்சுறுத்தலில் இருந்து நாம் விடுபடவில்லை, ஒவ்வொரு நாளும் இரண்டாயிரத்திற்கும…
-
- 0 replies
- 195 views
-
-
(நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானத்தின் ஊடாக நிறுவப்படக்கூடிய எந்தவொரு வெளியகப்பொறிமுறை தொடர்பான முன்மொழிவுகளையும் முழுமையாக நிராகரிப்பதாகவும் அவற்றுக்குப் பதிலாக உள்ளகப்பொறிமுறையின் ஊடாக அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அறிவித்திருக்கின்றார். சம்பந்தப்பட்ட நாட்டின் ஒத்துழைப்பின்றி ஏற்படுத்தப்படக்கூடிய வெளியகப்பொறிமுறைகளால் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்ள முடியாது என்பதுடன் அது அரசியல் மயப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுவதாக சுட்டிக்காட்டியிருக்கும் அவர், கொரோனா வைரஸ் பவல் நெருக்கடிக்கு மத்தியிலும் காணாமல்போனோ…
-
- 0 replies
- 272 views
-
-
மனித உரிமைகள் பேரவையின்... 48 வது கூட்டத் தொடர் இன்று! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 வது கூட்டத் தொடர் இன்று (திங்கட்கிழமை) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இன்றைய முதல்நாள் நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பான விவகாரம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் , இலங்கை தொடர்பான 46 கீழ் 1 தீர்மானத்தின் முன்னேற்றம் தொடர்பிலான வாய்மூல அறிக்கையை சமர்பிக்கவுள்ளார். அத்துடன் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் மற்றும் நிரந்தர அமைப்புகள் கருத்து தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதுடன், பதிலளிப்பதற்கான சந்தர்ப்பமும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இலங்கை சார்பில் வௌிவிவகார அமைச்சர…
-
- 6 replies
- 544 views
-
-
ஜி-20 சர்வமத மாநாடு: இன்று சிறப்புரை ஆற்றுகிறார் பிரதமர் மஹிந்த இத்தாலி- போலோக்னாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் ஜி-20 சர்வமத மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிறப்புரை ஆற்றவுள்ளார். குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினர் இத்தாலி- போலோக்னா குக்லியெல்மோ மார்கோனி விமான நிலையத்தை சென்றடைந்தனர். இதன்போது பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினரை, இத்தாலியின் அரச அதிகாரிகள் மற்றும் இத்தாலிக்கான இலங்கை தூதுவர் அலுவலகத்தின் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர். அதாவது, மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் தலைமை உரை ஆற்றுமாறு பிரதமருக்கு கிடைத்த அழைப்பினை ஏற்றே, அவர் குறித்த விஜயத்தினை …
-
- 4 replies
- 526 views
-
-
கூட்டமைப்பு குழப்பம்: 18 ஆம் திகதி ரெலோவின் மத்திய குழு கூடுகிறது- கோவிந்தன் கருணாகரம் September 14, 2021 தமிழ்த் தேசிய பரப்பில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டப்பின் பிளவு ஏற்படவுள்ளதாக வெளியாகின்ற கருத்துகள் தொடர்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டதாகத் தெரிவித்த ரெலோ செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா), இது தொடர்பில் எதிர்வரும் 18ஆம் திகதியன்று, ரெலோவின் மத்திய குழு கூடி ஆராயவிருப்பதாகவும் கூறினார். தமிழ் மக்கள் மத்தியிலும் அரசியல் பரப்பிலும் ஏற்பட்டுள்ள தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு கருத…
-
- 0 replies
- 242 views
-
-
மன்னார் பிரதேசசபை தவிசாளாின் பதவிநீக்கம் -அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது. September 14, 2021 மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீட் முஹமட் முஜாஹிர் அதிகார வரம்பை மீறிச் செயற்பட்டதாக இன்று 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் அமுலாகும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்ஸினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அது தொடா்பில் அதிவிசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் பாவனையில் இருந்ததாகக் கூறப்படும் ஓர் உழவு இயந்திரம் குற்றச்சாட்டு ஒன்றின் அடிப்படையில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சமயம் மன்னார் பிரதேச சபை தவிசாளர் அது பிரதேச சபைக்க…
-
- 0 replies
- 220 views
-
-
(ஆர்.யசி) நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் நாட்டின் தற்போதைய நிலையில் பொருட்களின் விலை குறையாது. குறைக்கவும் முடியாது. மக்கள் தற்காலிக நெருக்கடி நிலைமைகளை சமாளிக்க பழகிக்கொள்ள வேண்டும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். எந்த நேரத்தில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும், எப்போது மருந்து தட்டுப்பாடு ஏற்படும் என்பதே தெரியாத அச்சுறுத்தல் நிலையில் உள்ளோம் எனவும் அவர் கூறினார். நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு ஏற்படப்போவதாக பொருளாதார நிபுணர்கள், அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே…
-
- 2 replies
- 485 views
- 1 follower
-
-
நல்லாட்சியில்... மலையகத்தில், 52 ஆயிரம் பேருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது- ராமேஷ்வரன் கடந்த நல்லாட்சி காலத்தில் மலையகத்தில் 52 ஆயிரம் பேருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார். மேலும், மலையக மக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய பல விடயங்கள் நல்லாட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் மருதபாண்டி ராமேஷ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “நல்லாட்சியின்போ…
-
- 0 replies
- 543 views
-