ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143622 topics in this forum
-
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாளை (09) யாழ். மாவட்டத்திற்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். நாமல் ராஜபக்ஷ அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சராக மேலதிக பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசாங்கத்தின் அனுசரணையில் யாழில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களை நேரில் கண்காணித்து அவற்றை துரிதப்படுத்தும் நோக்கிலேயே அவரது யாழ். விஜயம் அமையவுள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில், அமைச்சரின் வருகையை முன்னிட்டு எவ்வித விசேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படமாட்டாது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்று நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாடளாவிய ரீதியிலான அபிவிருத்தி செயற்பாடுகளை…
-
- 3 replies
- 869 views
-
-
அதிகாரத்தை கைப்பற்ற... தற்போதைய அரசிற்கு ஆதரவளிக்கவில்லை – கொழும்பு பேராயர் தற்போதைய பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தையோ அல்லது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையோ ஒருபோதும் ஆதரிக்கவில்லை என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது. அப்போதைய ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தை மட்டுமே விமர்சித்ததாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்களைப் பற்றி அறிந்திருந்தாலும் அதைத் தடுக்கவில்லை என்பதனால் அந்த நேரத்தில் இருந்த அரசாங்கத்தை மட்டுமே தாம் விமர்சித்ததாக அவர் கூறினார். கொழும்பில் உள்ள பேராயர் இல்லத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே பேராயர் இதனைத் தெரிவித்தார். அ…
-
- 0 replies
- 342 views
-
-
கூட்டமைப்பை பிரித்து... தமிழரசுக் கட்சி ஒருபோதும் தனியாகச் செயற்படாது என்கின்றார் சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் தனியாகச் செயற்படவில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வவுனியா தமிழரசுக்கட்சி அலுவலகத்திற்கு நேற்று வருகை தந்திருந்த நிலையில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இருப்பினும் ஏனைய கட்சிகள் வேறாக செயற்பட்டு வருவது தொடர்பாக தாங்கள் அவர்களோடு பேச்சுவார்த்தையை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். அத்தோடு, ஜெனிவா கூட்டத்தொடர் தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சி எந்தவிதமான கடிதமும் அனுப்பவில்லை என்றும் அவர் சுட்டிக்கானார். …
-
- 0 replies
- 331 views
-
-
டெல்டா மாறுபாடே... 95.8% கொரோனா தொற்றுக்கு காரணம் – ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சி தற்போது கிடைக்கும் மாதிரிகளின் அடிப்படையில் இலங்கையில் டெல்டா மாறுபாடே 95.8% கொரோனா தொற்றுக்கு காரணம் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் பல்வேறு மாகாணங்களில் வெவ்வேறு SARS-CoV-2 வகைகளின் பரவலை ஆராய்ந்தமையின் அடிப்படையில் இந்த தகவல் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இலங்கையில் 95.8% தொற்றுகளுக்கு டெல்டா மாறுபாடு காரணமாக இருந்தது என்றும் பல்வேறு மாகாணங்களில் டெல்டா பாதிப்பு 84% முதல் 100% வரை காணப்படுவதாகவும் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்துவது தொ…
-
- 0 replies
- 190 views
-
-
ஒற்றுமைபற்றி கருத்துரைத்துவிட்டு தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் செயற்படுவதே போலித் தமிழ் தேசியவாதிகளின் செயற்பாடு – பிள்ளையான் ஒற்றுமைபற்றி கருத்துரைத்துவிட்டு தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் செயற்படுவதே போலித் தமிழ் தேசியவாதிகளின் செயற்பாடு என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.மேலும் ஐ.நா. சபைக்கு நான்கு பகுதிகளில் இருந்து கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏசுமந்திரன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினை திருப்திப்படுத்தும் வகையில் கடிதத்தினை எழுதியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். …
-
- 1 reply
- 278 views
-
-
Mano Ganesan - 09/09/21 - இந்த நொடியில் என் மனதில் >>> <முஸ்லிம் மக்களுக்கு எதிராக, சிங்கள மக்களை தூண்ட “சம்பவம்” வேண்டும். ஆனால், அதில் சிங்கள பெளத்த மக்கள் பாதிக்கப்பட கூடாது. ஆகவே மெது இலக்கு (Soft Target) நாதியற்ற தமிழர்கள்தான். இந்த "உறங்கும் உண்மை"யை கண்டு பிடிக்க “ரொக்கெட் விஞ்ஞானிகள்” தேவையா என்ன?> கொழும்பு பேராயர் ரஞ்சித் மெல்கம், "ஈஸ்டர் ஞாயிறு 4/21 சஹாரான் கும்பல் தாக்குதல்" தொடர்பில், இரண்டு வருடமாகியும் நியாயம் நிலைநாட்ட படவில்லை என்றும், இதில் ஒளிந்து நிற்கும் உண்மையை அரசு மறைத்து வருகிறது என்று பொருள் படவும் கூறுகிறார். அரசாங்கம் சர்வதேசத்தை நாடுமானால், தாமும் சர்வதேசத்தை நாடுவோம் என்கிறார். சர…
-
- 3 replies
- 724 views
-
-
(இராஜதுரை ஹஷான்) கொவிட் தாக்கத்தினாலும், பொருளாதார பாதிப்பினாலும் நடுத்தர மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். திறமையானவர்களுக்கு உரிய பதவிகள் வழங்கவில்லை. இதுவே அனைத்து பிரச்சினைக்கும் மூலக் காரணம். நாட்டுக்கு சேவையாற்றிய ராஜபக்ஷர்களின் ஆட்சி இத்துடன் நிறைவு பெறும் என அபயராம விகாரையில் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர்தெரிவித்தார். அபயராம விகாரையில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியுமாயின் அதனை ஏற்றுக்கொள்வோம்.ஆட்சியதிகாரத்தை த…
-
- 1 reply
- 637 views
-
-
-வி.ரி.சகாதேவராஜா கிழக்கு மாகாணத்தில், கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 94 சதவீதமானோர் டெல்டா பிறழ்வும் ஊடாகவும், 6 சதவீதமானோர் அல்பா பிறழ்வு ஊடாகவும் தொற்றுக்குள்ளாகியுள்ளமை ஆய்வின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என்று, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார். அதில், 09வயது சிறுவன் ஒருவருக்கும் 81 வயது வயோதிபருக்கும் டெல்டா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அவர் கூறினார். இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கடந்த 4ஆம் திகதியன்று, மட்டக்களப்பில் இருந்து 49 மாதிரிகளும், திருகோணமலையில் இருந்து 18 மாதிரிகளும் கல்முனையில் இருந்து 26 மாதிரிகளும் அம்பாறையில் இருந்து 30 மாதிரிகள் என மொத்தமாக 123 மாதிரிகள் கிழக்…
-
- 0 replies
- 361 views
-
-
வடக்கு மாகாணத்தில் நேற்று (08) புதன்கிழமை 459 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் செப்டம்பர் மாதத்தின் முதல் 8 நாட்களில் வடக்கு மாகாணத்தில் 4 ஆயிரத்து 546 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 121 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதாரத் துறையின் இன்றைய அறிக்கையின் படி, நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 178 தொற்றாளர்களும், வவுனியா மாவட்டத்தில் 121 தொற்றாளர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 77 தொற்றாளர்களும், முல்லைத்தீவில் 57 தொற்றாளர்களும், மன்னாரில் 27 தொற்றாளர்களும், அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 பேரும், மன்னார் மாவட்டத்தில் 2 பேரும், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில…
-
- 0 replies
- 242 views
-
-
(நா.தனுஜா) நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் தீவிரம் இன்னமும் குறைவடையாத நிலையில், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலாப்பயணிகளுக்கான சுகாதாரப்பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறுகோரி இலங்கை சுற்றுலாச்சபையின் தலைவரினால் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதம் பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது. இலங்கை சுற்றுலாச்சபையின் தலைவர் கிமார்லி பெர்னாண்டோவினால் கடந்த 7 ஆம் திகதி செவ்வாய்கிழமை சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியநிபுணர் அசேல குணவர்தனவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதமொன்றை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ நேற்று முன்தினம் அவரது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்ததுடன், அக்கடிதத்…
-
- 0 replies
- 489 views
-
-
முஸ்லிம் மக்களை வடக்கிலே இருந்து வெளியேற்றியது இனசுத்திகரிப்பு என்றே நான் கருதுகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் இனசுத்திகரிப்பையிட்டு வெட்கி தலை குனிகிறேன் என்று சொன்னது ஏன், அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம் மக்களை வடக்கிலே இருந்து வெளியேற்றியது இனசுத்திகரிப்பு என்றே நான் கருதுகிறேன். நான் இப்படி சொன்னதற்கான காரணம் அது இனசுத்திகரிப்பு. விசேடமாக தமிழ் மக்கள் மீது நடந்தது இனப்படுகொலை என்று நாங்கள் சொல்கிறோம். இனப்படுகொலையை சரியான ஆதாரங்களோடு நிரூபிக்க…
-
- 118 replies
- 7.9k views
- 2 followers
-
-
”சர்வதேசத்தை ஏமாற்ற இடமளிக்கமாட்டோம்” பிரதமரின் திட்டத்துக்கு பேராயர் கடும் எதிர்ப்பு! சர்வதேசத்தை ஏமாற்ற இடமளிக்கமாட்டோம் பாப்பரசரை சந்திக்கும் பிரதமரின் திட்டத்துக்கு பேராயர் கடும் எதிர்ப்பு! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உண்மையை வெளிப்படுத்தாமல் அதனை மூடிமறைப்பதற்காக அரசு மேற்கொள்ளும் வேலைத்திட்டத்தின் மற்றோர் அங்கமாகவே பரிசுத்த பாப்பரசரைச் சந்திப்பதற்கான முயற்சி இடம்பெறுகின்றது. இவ்வாறான நடவடிக்கையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் – என்று பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இத்தாலிப் பயணத்தின்போது, பாப்பரசரைச் சந்தித்து, உயிர்த்த ஞாயிறு …
-
- 0 replies
- 340 views
-
-
செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரிடம் பொலிஸார் ஊரடங்கு வழி அனுமதிப்பத்திரத்தினை காண்பிக்குமாறும் சிங்களம் தெரியாமல் ஊடகத்திற்குள் ஏன் இருக்கின்றீர்கள் என்று கேட்ட சம்பவம் ஒன்று இன்றைய தினம் (03) இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த ஊடகவியலாளர் இன்றைய தினம், (03) காரைநகர் பகுதியில் செய்தி சேகரிப்பதற்காக சென்று கொண்டிருந்தார். இதன்போது பொன்னாலை சந்தியில் வைத்து பொலிஸாரும் கடற்படையினரும் அவரை வழிமறித்து “தற்போது ஊரடங்கு அமுலில் உள்ளது. இந்த நிலையில் எங்கே செல்கின்றீர்கள்” என சிங்களத்தில் கேட்டனர். அதற்கு அந்த ஊடவியலாளர் தான் ஊடகவியலாளர் எனக்கூறி தனது ஊடக அடையாளத்தினை உறுதிப்படுத்தினார். ஊடகவியலாளராக…
-
- 165 replies
- 10k views
- 1 follower
-
-
மன்னார் எரிவாயு வளத்தால் நாட்டின் கடனைப் போன்று மூன்று மடங்கு வருமானம்! மன்னார் எரிவாயு வளத்தால் நாட்டின் கடனைப்போன்று மூன்று மடங்கு வருமானம்! மன்னார் கடற்பரப்பிலுள்ள 267 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தினால் நாட்டின் மொத்த கடன் தொகையை போன்று மூன்று மடங்கு வருமானம் ஈட்ட முடியும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார். இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வை மேற்கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு 50 வீதத்தை வழங்கினாலும் 133.5 பில்லியன் டொலர் அரசுக்கு கிடைக்கும் …
-
- 16 replies
- 1k views
- 1 follower
-
-
யாழ், அச்சுவேலி வடக்கில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டதாக பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த விருந்தினர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டு மணமக்கள் உள்ளிட்ட சிலரிடம் கோவிட்-19 தொற்று பரிசோதனையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. “அச்சுவேலி வடக்கில் இன்று திருமண நிகழ்வு இடம்பெற்றது. மணமகன் மிருசுவிலைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து , நிகழ்வு இடம்பெற்ற வீட்டுக்குச் சென்ற பொலிஸார் விருந்தினர்களை அங்கிருந்து செல்ல பணித்தனர். அத்துடன், மணமகன், மணமகள் இருவருக்கும் அவர்களுடன் நெருக்க…
-
- 0 replies
- 518 views
-
-
(நா.தனுஜா) அரசாங்கம் குறுகியகால இலக்குகளுக்கு முக்கியத்துவம் வழங்கியதுடன் நாட்டின் சுகாதார நெருக்கடியைக் கையாள்வதில் தோல்வியேற்பட்டுள்ளமை தெளிவாகப் புலப்பட்ட போதிலும், உரிய தரப்பினரிடம் பொருத்தமான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளத் தவறியமையின் விளைவாக கொவிட் - 19 வைரஸ் பரவலைக் கையாள்வதில் கடந்த 2020 ஆம் ஆண்டில் ஆரம்பத்தில் பெற்ற வெற்றியை தூரமாகத் தூக்கியெறிந்திருக்கின்றது என்று சுகாதாரக்கொள்கைகளுக்கான நிலையத்தின் தலைவர் வைத்தியநிபுணர் ரவி ரன்னன் எலிய சுட்டிக்காட்டியுள்ளார். 'இழப்புக்களை மதிப்பீடு செய்தல் : ஆபத்திலிருக்கும் ஒரு ஜனாதிபதியின் மரபு' என்ற தலைப்பில் தேசிய ஆங்கிலப்பத்திரிகை ஒன்றில் வெளியாகியிருக்கும் கட்டுரையை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத…
-
- 0 replies
- 289 views
-
-
இயற்கை வேளாண்மைக்கு மாறியதால் இலங்கையில் உணவுப் பஞ்சமா - உண்மை என்ன? ரஞ்ஜன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 8 செப்டெம்பர் 2021, 08:13 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அவசரநிலை அறிவிக்கப்பட்டபின் மண்ணெண்ணெய் பெற நீண்ட வரிசையில் நிற்போர் இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தால் அவசரநிலை அறிவிக்கப்பட்டபின், அங்கு உணவுப் பஞ்சம் நிலவி வருவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. செய்கை உரப் பயன்பாட்டிற்கு அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டு, இயற்கை வேளாண்மைக்கு மாறியது, இந்த உணவு பஞ்சத்திற்கான காரணம் …
-
- 0 replies
- 590 views
- 1 follower
-
-
கோத்தாபய ஐ.நா. பொதுச்சபையில் முதல் தடவையாக உரை! லண்டன், அமெரிக்காவுக்கு பயணமாகிறார் கோத்தாபய ஐ.நா. பொதுச்சபையில் முதல் தடவையாக உரை! ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இம்மாதம் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஜனாதிபதி முதலில் இங்கிலாந்து செல்லவுள்ளதுடன், லண்டனில் நடைபெறும் சுற்றுச்சூழல் மாநாட்டிலும் கலந்துகொள்ளவுள்ளார் எனக் கூறப்படுகின்றது. லண்டன் உச்சி மாநாட்டுக்குப் பின்னர் நேரடியாக அமெரிக்கா செல்லவும் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அவர் வொஷிங்டனில் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபை அமர்வுகளில…
-
- 0 replies
- 340 views
-
-
சம்மாந்துறை, ஆற்றுப்படுகையில்... மீண்டும் தீ பரவல்! சம்மாந்துறை -சவளக்கடை பொலிஸ் எல்லை பகுதிகளில் உள்ள நாணல் காடுகள் கடந்த 3 தினங்களாக எரிந்து சாம்பலாவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆற்றுப்படுகையில் மீண்டும் கடந்த காலங்களில் ஏற்பட்டதை போன்று தீ விபத்து ஏற்பட்டதில் நாணல் மூங்கில் சருகு எரிந்து நாசமாகி வருகின்றது. இதனால் குறித்த பகுதியை சூழவுள்ள சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை, மருதமுனை, பெரியநீலாவணை பகுதிகளில் எரிந்த நாணல் கீற்றின் சாம்பல் துகள்கள் விழுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அப்பகுதியில் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், ஏராளமான மூங்கில் தட்டு நாணல் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாகியுள்ளது. மேலும் அருகே எவ்வித குடியிருப்புகளும் இல்லாததால்…
-
- 0 replies
- 291 views
-
-
4 ஆம் நிலையில் இலங்கை : பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்க எச்சரிக்கை. கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் இலங்கை, ஜமைக்கா மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது என அமெரிக்கா எச்சரித்துள்ளது. மேற்கண்ட மூன்று நாடுகளிலும் 4 ஆம் நிலையில் இருப்பதனால் அங்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது. அதேநேரம் நெதர்லாந்து, மால்டா, கினி-பிசாவு குடியரசு மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் மூன்றாம் நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. எனவே தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அமெரிக்கர்கள் அந்த நாடுகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை…
-
- 0 replies
- 271 views
-
-
மற்றொரு திரிபு... நாட்டுக்குள் வருவதற்கு வாய்ப்புள்ளது – சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடுகளின் மூலம் கொரோனா திரிபை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும், மற்றொரு திரிபு நாட்டுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறினார். இந்நிலையில், மக்கள் கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே வலியுறுத்தினார். அத்துடன் இந்த சந்தர்ப்பத்தில் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டுவதை விடுத்து, அரசியல் பேதங்களை மறந்த…
-
- 0 replies
- 289 views
-
-
வவுணதீவில்... ஊரடங்கு உத்தரவை மீறி, பயணித்த சகோதரர்கள் மீது பொலிஸ் தாக்குதல் மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த சகோதரர்கள் மீது வவுணதீவு பொலிசாரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாண்டியடி எரிபொருள் நிலையத்தில் நேற்று இரவு உந்துருளிக்கு எரிபொருள் நிரப்பிவிட்டு வீடு திரும்பிய இரு சகோதரர்கள் மீதே இவ்வாறு தாககுதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் வாகனத்தை நிறுத்தி பொலிஸ் அதிகாரியொருவர் துப்பாக்கியால் அவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. காயமடைந்த இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தபட்டுள்ளதாகவும…
-
- 0 replies
- 322 views
-
-
‘அத்தியாவசிய சேவைகள்’ என பெயரிடப்பட்ட லொறியில் உரம் கடத்திய இருவர் கைது! எம்பலப்பிட்டியில் இருந்து அம்பாறை நிந்தவூர் பிரதேசத்திற்கு 350 உரைப்பை மூடைகள் கொண்ட உரத்தை கடத்திச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை சந்தேகநபர்களை அம்பாறை மாவட்ட குற்ற விசாராணைப் பிரிவு பொலிசார் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர். ‘அத்தியாவசிய சேவைகள்’ என்ற பெயர் பலகை ஒட்டப்பட்ட லொறியிலேயே உர மூடைகள் கடத்தப்பட்டுள்ளன. மேலும் அதில் சட்டவிரோதமாக தலா 50 கிலோ கிராம் கொண்ட 350 உரப்பை மூடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், லொறியையும் அம்பாறை மாவட்ட குற்ற வ…
-
- 0 replies
- 347 views
-
-
தமிழரசுக் கட்சியின் ஜெனிவாவுக்கான கடிதத்தில் சம்பந்தன் மட்டுமே கையொப்பம் September 7, 2021 கடிதத்தில் சம்பந்தன் மட்டுமே கையொப்பம்: ஜெனிவா மனித உரிமைகள் ஆணையாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆவணத்தை அனுப்பாது, இரா. சம்பந்தனின் கையொப்பத்துடன் மட்டுமான ஆவணம் அனுப்பப்படும் என்று தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடர் வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகின்றது. தமிழர் தரப்பின் நிலைப்பாட்டை விளக்கும் விதமாக தமிழ்த் தேசியக் கட்சிகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிற்செல் பச்லெட் அம்மையாருக்கு ஆவணங்களை அனுப்பி வருகின்றன. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூ…
-
- 9 replies
- 720 views
- 1 follower
-
-
(லியோ நிரோஷ தர்ஷன்) ஜெனிவாவின் 46/1 தீர்மானமானது இலங்கையை தனிமைப்படுத்தும் என்பதோடு பொருளாதார அபிவிருத்தி, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றில் எதிர்மாறான விளைவுகளை இந்த சவாலான கொவிட்-19 தொற்று நிலைமைகாலத்தில் ஏற்படுத்தும். ஆனாலும் உள்ளக பொறிமுறைகள் சோர்வின்றி முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் வெளியக தகவல் சேகரிப்பு பொறிமுறைகளை முற்றிலும் நிராகரிப்பதாக இலங்கை குறிப்பிட்டுள்ளது. http://cdn.virakesari.lk/uploads/post/featured_image/79249/thumb_srilanka.jpg இத்தகைய சர்வதேச கவனம் இலங்கை மீது தேவை என்பதை இலங்கை நம்பவில்லை. சர்வதேச சமூகத்திற்கும் குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் வழங்கிய உறுதி மொழிக…
-
- 1 reply
- 314 views
-